Category: கட்டுரைகள்

காணாமல்போன கடவுள் சக்தி -கோடங்குடி மாரிமுத்து

காணாமல்போன கடவுள் சக்தி -கோடங்குடி மாரிமுத்து

கடவுள் இல்லை; எங்கே கடவுள் சக்தி? என்று நாத்திகர்கள் பேரணி நடத்துகிறார்கள் என்பதற்காக எந்த கடவுளும் கொந்தளிக்கவில்லை. “இதோ அவதாரம் எடுத்து சம்ஹாரம் செய்கிறேன்,பார்!” என்று ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு ஓடி வரவில்லை. சரி, போகட்டும்;கொளத்தூர் கழக மகளிர் கனவில் வந்தாவது மிரட்டி இருக்கலாம் அதற்கும் தயாராக இல்லை உண்மையில் கொந்தளித்தது யார் தெரியுமா? கொளத்தூர் காவல்துறை தான். “அய்யோ கடவுள் எதிர்ப்புக்கு நாங்கள் அனுமதி தர முடியுமா? அது பாவமல்லவா?” என்பதற்காக காவல்துறை கொந்தளிக்கவில்லை. “சங்கிகள் கூச்சல்களை சந்திக்க வேண்டியிருக்குமே என்பதுதான் அவர்களின் பயம். “என்னை எதிர்ப்பவருக்கு பேரணி நடத்த அனுமதிக்காதே! அழித்துவிடுவேன்” என்று ஏதேனும் ஒரு காவல் அதிகாரி கனவில் வந்தாவது கடவுள் மிரட்டி இருக்கலாம் அதுவும் இல்லை” அப்படி எதுவும் நடக்காமலேயே கடவுள் பக்தியோ, பக்தர்களின் மனம் புண்படும் செயல்களையோ நிகழ்த்த மாட்டோம் என்று எழுதிக் கேட்டது காவல்துறை. “எதற்கு நாங்கள் எழுதித் தர வேண்டும்; கடவுளைப்...

எழுச்சியுடன் நடந்த கழக ஆர்ப்பாட்டம் காஞ்சியில் சங்கராச்சாரிகளின்‌ முகமூடி கிழிப்பு!

எழுச்சியுடன் நடந்த கழக ஆர்ப்பாட்டம் காஞ்சியில் சங்கராச்சாரிகளின்‌ முகமூடி கிழிப்பு!

பெரியார் மீது ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசிய பார்ப்பனக் கைக்கூலிகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டங்களை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி, பார்ப்பன சங்கராச்சாரிகளின் பார்ப்பன முகமூடியைக் கிழித்துக் காட்டியது. பெரியார் மீது கைவைத்தால் சங்கரச்சாரிகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம் என்று திராவிடர் விடுதலைக் கழகம் களம் இறங்கியது. குறிப்பாக சங்கரமடம் உள்ள காஞ்சிபுரத்தில் 21.04.2025 மாலை 5 மணியளவில் பேருந்து நிலையம் அருகே எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தனி பேருந்தில் காஞ்சிபுரம் வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். காஞ்சி விஜயேந்திரன் கடந்த ஜனவரி 19 அன்று பெங்களூரில் ‘பிராமணர்கள்’ மாநாட்டில் இந்து சமூகத்தில் சூத்திர, பஞ்சமர்களிடம் இருந்து பிராமணர்கள் விலகி தங்களது மேலாண்மையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற இன ஒதுக்கல் கருத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகப் பேசி இருந்தார். சூத்திர, பஞ்சமர்கள் அடிமைப்பட்டவர்கள் என்ற மனுதர்மம் விதிக்கும் கோட்பாடுகளுக்கு உயிரூட்டுவதே அவரது பேச்சின்...

“இந்து மதத்தை நாசப்படுத்துகிற கொடிய நஞ்சு பார்ப்பனியமே”

“இந்து மதத்தை நாசப்படுத்துகிற கொடிய நஞ்சு பார்ப்பனியமே”

அம்பேத்கரை உரையாற்ற அழைத்திருந்த ஜாத் பட்தோடக் மண்டல் அமைப்பில் 1920-ஆம் ஆண்டுகளில் துணைத் தலைவராக இருந்தவர் பெரியார். அப்போதும் பெரியாரை ‘நாத்திகர்’, ‘இந்து விரோதி’.’பார்ப்பன எதிர்ப்பாளர்’ என்று தென்னாட்டுப் பார்ப்பனர்கள் கூறிய புகாரின் அடிப்படையில் பெரியார் துணைத் தலைவர் பதவியில் நீட்டிக்கப்பட்டவில்லை. அதே அமைப்புதான் 1936-இல் அம்பேத்கரை ஜாதி எதிர்ப்பு மாநாட்டுக்குத் தலைமை ஏற்க அழைத்து, அவரது உரையை மாற்றியமைக்க வற்புறுத்தி அம்பேத்கர் மறுத்த நிலையில் மாநாட்டையே நிறுத்தியது. குடிஅரசில் பதிவுசெய்த அம்பேத்கர் உரையை ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ என்ற தலைப்பில் 4 அணா விலையில் நூலாக வெளியிட்டார் பெரியார். அம்பேத்கரின் உரை குறித்து காந்தியும் தனது ‘அரிஜன்’ நாளேட்டில் விமர்சித்து எழுதினார். அம்பேத்கர் எழுப்பிய வாதங்களுக்கு எந்த பதிலும் கூறாத காந்தி. “ஒரு மதத்தை அதன் மோசமான உதாரணங்களைக் கொண்டு மதிப்பிடக் கூடாது. அது உருவாக்கிய மிகச் சிறந்த உதாரணங்களைக் கொண்டே மதிப்பிட வேண்டும்” என்பதே காந்தியாரின் பதிலாக இருந்தது....

காஞ்சி சீனியரின் “நச்சுக் கருத்துக்கள்”-

காஞ்சி சீனியரின் “நச்சுக் கருத்துக்கள்”-

பார்ப்பனர் என்றால் எல்லோரையும் சமமாகப் பார்ப்பவர்கள் என்று கூறும் பார்ப்பனர்களே! பார்ப்பன அடிமைகளே! இதோ காஞ்சி சீனியர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்துக்களை தொகுத்துத் தந்து இருக்கிறோம் இதற்கு என்ன பதில்…. “நான்கு வர்ணம் தேவையே!” சங்கராச்சாரியார் ‘தெய்வத்தின் குரல்’ என்ற நூலிலே வெளிப்படையாகவே சொல்லு கின்றார். “நம் மதத்தில் (இந்துமதம்) ‘பிராமணர்’, ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த “வர்ணங்களை நாம் “ஜாதி” என்கிறோம். வாஸ்தவத்தில் ஜாதி வேறே, வர்ணம் வேறே: வர்ணங்கள் மேலே சொன்ன நான்குதான். இதற்குள்ளேயே ஒவ்வொன்றிலும் பல ஜாதிகள் இருக்கின்றன. “பிராமண” வர்ணத்திலேயே அய்யர், அய்யங்கார், ராவ் என்று பல சாதிகள் இருக்கின்றன. நான்காம் வர்ணம் ஒன்றிலேயே முதலியார், பிள்ளை, ரெட்டி, நாயக்கர், நாயுடு, கவுண்டர், படையாட்சி என்கிற மாதிரி எத்தனையோ ஜாதிகள் இருக்கின்றன. நான்கு ஜாதிகளுக்கும் (அதாவது வர்ண ங்களுக்கும்) சாஸ்திரங்களில் வெவ்வேறு விதமான கர்மாக்களையும் ஆசாரங்களையும் விதித்திருக்கிறது. இதனால் ஒரே...

மாநாட்டிலிருந்து சில துளிகள்

மாநாட்டிலிருந்து சில துளிகள்

பயணக் குழுவினர் மயிலாடுதுறை கேணிக்கறையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியாக முழக்கங்களுடன் மாநாட்டு மேடைக்கு அணிவகுத்து வந்தனர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனின் திராவிட மாடலா? ஆரிய மாடலா? நூலை (தலையங்கத் தொகுப்பு) கள்ளக்குறிச்சி பயணக்குழு பொறுப்பாளர் இராமர் வெளியிட பயணக்குழுவில் தொடர்ந்து வந்த சென்னை இரண்யா, சேலம் ஆனந்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ரூபாய் 500 மதிப்புள்ள நூல் 400-க்கு விற்கப்பட்டது. அனைத்து பிரதிகளும் மாநாட்டில் விற்றுத் தீர்ந்தன. மயிலாடுதுறை மாவட்டக் கழகம் சார்பில் கழக வளர்ச்சிக்கு ரூ.25,000 கழகப் பொருளார் சு.துரைசாமி அவர்களிடம் வழங்கப்பட்டது. மேடை அருகே அமைக்கப்பட்ட தனித்‌திரையில் பெரியார் பற்றிய குறும்படம் ஒளிப்பரப்பட்டது. குறும்படம் தோழர்கள் இடையே உணர்வலைகளை உருவாக்கியது. .பிரகாஷ் எழுத்தில் கொளத்தூர் கபிலன் ஸ்டுடியோ இந்த குறும்படத்தை உருவாக்கியது. பயணக் குழுவை வழிநடத்திய இரா.உமாபதி, காவை ஈசுவரன்,‌ கள்ளக்குறிச்சி இராமர்,‌‌ கோவை நிர்மல் பயண அனுபவங்களையும்‌, மக்கள் தந்த ஆதரவுகளையும்...

உண்மைக்குப் புறம்பாக விமர்சிக்கும் கயவர் கூட்டம்! பெரியார் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி- -கொளத்தூர் மணி

உண்மைக்குப் புறம்பாக விமர்சிக்கும் கயவர் கூட்டம்! பெரியார் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி- -கொளத்தூர் மணி

சென்னையில் நிமிர்வோம் வாசகர் வட்ட கூட்டத்தில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி… அண்ணா ஏராளமான நாடகங்களை எழுதியுள்ளார். முதலில் சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம், இந்து ராஜ்ஜியம் என்றால் எப்படி இருக்கும்? அரசனாக இருந்தாலும் என்பதுதான் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம். சந்திர மோகன் என்பவர் பார்ப்பனர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார் சிவாஜியிடம். ஆனாலும் சிவாஜி அவமானப்படுத்தப்படுவார், என்பதை எல்லாம் எழுதி அது எப்படி இந்த இந்து மத சாஸ்திரங்கள் என்ற பெயரால் அரசனைக் கூட கைப்பாவையாக வைத்திருந்தனர் பார்ப்பனர்கள் என்று சொல்வது தான் அந்த நாடகம். அம்பேத்கர் பாகிஸ்தான் பிரிவினை என்ற நூலில் எழுதியுள்ளார். “எப்படியாவது எந்த வழியிலாவது இந்து இராஜ்ஜியம் அமைந்து விடுமேயானால், அதை விட இந்த நாட்டுக்கு பெரும் கேடு எதுவும் இருக்க முடியாது”. இந்து இராஜ்ஜியம் என்றால் என்ன அது அமைந்தால் என்ன நிலை என்பதை அழகாக எடுத்துச் சொன்ன நாடகம்தான் ‘சிவாஜி கண்ட...

தமிழை அறிவியல் பார்வையில் அணுகினார் பெரியார்!

தமிழை அறிவியல் பார்வையில் அணுகினார் பெரியார்!

(பிப்ரவரி 1-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிமிர்வோம் வாசகர் வட்ட 28-வது சந்திப்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை) பெரியார் தமிழ்மீது ஆர்வம் இல்லாதவராக இருந்தால் திருக்குறள் மீது அக்கறை இல்லாதவராக இருந்தால் ஒரு மாநாடு நடத்தி தீர்மானம் போடுவரா, அந்த தீர்மானத்தைத் ஓட்டி தொண்டர்கள் உரை எழுதுவார்களா… பெரியாரின் தமிழறிவு இப்படிப் பல செய்திகள் சொல்லிக்கொண்டே போகலாம். பெரியார், திராவிடர் இயக்க தொண்டர்கள் தமிழுக்கு செய்த நன்மைகள் ஏராளம். இன்னொரு செய்தி சொற்களைத் தமிழ்ப்படுத்துவதற்கு அரசே ஒரு குழு அமைக்கிறது. கலைச்சொற்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும் என்ற‌ ஒரு முயற்சி நடந்தது. “ஹைட்ரஜன்” என்பதை “ஆப்ஜனகம்” என்று தமிழில் மொழிபெயர்க்கிறார்கள். Disinfectant என்பதற்கு பூதி நாசினி என்று போடுகிறார்கள். இதற்கு பதிலடியாக பெரியார் பேசுகிறார் நான் தமிழ்ச்சங்கம் மொழிப்பெயர்ப்பை படித்திருக்கிறேன் ‘ஹைட்ரஜன்’ என்பதற்கு ‘நீரகம்’ என்றும் ஹைட்ரோலிசிஸ் என்பதற்கு...

பார்ப்பனிய பண்பாட்டை எதிர்த்தவர் மேதகு பிரபாகரன்

பார்ப்பனிய பண்பாட்டை எதிர்த்தவர் மேதகு பிரபாகரன்

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் b&w tamil youtube சேனலுக்கு அளித்த நேர்காணலில், மேதகு பிரபாகரன் பெரியார் கொள்கைகளையே ஈழத்தில் செயல்படுத்தினார் என்பதை விரிவாக விளக்கினார் . கடந்த வார தொடர்ச்சி … போராட்டத்தில் வீரமரணம் எய்திய விடுதலைப்புலிகளின் இறுதி நிகழ்வில் மதச் சடங்குகள் நடப்பதில்லை. பெற்றோர்கள் கூட எந்த வித மதச் சடங்குகள் இல்லாமல் மலர் வளையம் வைத்துத் தான் மரியாதை செய்வார்கள். துயிலும் இடங்களை மக்கள் வாகனங்களில்‌ கடக்கும்‌ போது தலைகுனிந்து ஒரு மரியாதை செலுத்திவிட்டு தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடந்து செல்வார்கள். விடுதலைப்புலிகள் வைப்பகம்(வங்கி) ஒன்றை நடத்தினார்கள்.தமிழேந்தி என்ற போராளி தான் பொறுப்பாளராக இருந்தார். தமிழேந்தி முழுமையான பகுத்தறிவாளர்‌. சித்திரையில் மதவாதிகள் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டு நான் கிளிநொச்சியிஸ் இருந்தேன். சித்திரை மாத தமிழ்ப்புத்தாண்டை விடுதலைப் புலிகள் இயக்கம் ஏற்கவில்லை. தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டு அந்த நாள்...

சோவியத் புரட்சி இங்கேயே நடக்க வேண்டுமென விரும்பினார் பெரியார்! -இனியவன்

சோவியத் புரட்சி இங்கேயே நடக்க வேண்டுமென விரும்பினார் பெரியார்! -இனியவன்

24.12.2024 அன்று கோவையில் நடைபெற்ற புரட்சியாளர்கள் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் தோழர் இனியவன் ஆற்றிய உரை. கடந்த இதழின் தொடர்ச்சி.. சுயமரியாதை முக்கியம்! ஒடுக்கப்பட்டவர்களுக்கு நில உரிமை வேண்டும் என்று போராடிய அம்பேத்கர் அவர்கள் அதே நேரத்தில் மகாராஷ்டிரத்தில் நிலவிய ‘மகர்வர்தான்’ முறையை நீக்க வேண்டி பம்பாய் மாகாணத்தில் கோரிக்கை வைத்தார். மகர்வர்தான் என்பது கிராமங்களில் ஏவல் பணியில் ஈடுபடும் மகர்களுக்கு (ஒடுக்கப்பட்ட ஜாதி) கிராம மக்கள இலவசமாக அளித்திடும் சிறு நிலம் ஆகும். ஆனால் அந்த நிலத்தை பெற்ற காரணத்தாலேயே நேரம் காலம் பார்க்காமல் கிராமத்திற்கான ஏவல் பணிகள் அனைத்தையும் ஓர் மகர் கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும். அந்த மகர் மட்டும் அல்லாமல் அவரின் குடும்ப உறுப்பினர்கள் கூட கிராமத்தினரால் அனைத்து வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டார்கள். உயர்ஜாதியினரின் பணிகளைச் செய்ய ஒரு மகர் மறுத்தால் அவரது நிலம் அவர்களிடமிருந்து பிடுங்கப்படுவதுடன் சமூக விலக்கத்திற்கும் ஆளாக நேரிடும். இத்தகைய...

இந்துமதத்தைக் கருத்தியல் – செயல்ரீதியாகக் கடுமையாகத் தாக்கியவர் அம்பேத்கர்-இனியவன்

இந்துமதத்தைக் கருத்தியல் – செயல்ரீதியாகக் கடுமையாகத் தாக்கியவர் அம்பேத்கர்-இனியவன்

24.12.2024 அன்று கோவையில் நடைபெற்ற புரட்சியாளர்கள் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் தோழர் இனியவன் ஆற்றிய உரை. கடந்த இதழின் தொடர்ச்சி.. இதனைக் கண்டித்து மகத் நகரில் மீண்டும் அமைதியான வழியில் போராட்டம் நடத்துவது என பம்பாய் தாமோதர் கூட்ட அரங்கில் பேசிய அம்பேத்கர் “சட்டம் சாத்தியமான இடங்களில் வன்முறையற்றதாகவும், தேவையான இடங்களில் வன்முறையாகவும் இருக்க வேண்டும்” என அரசின் பாராமுகத்தைக் கடுமையாக சாடினார் (11 செப்டம்பர் 1927). 1919இல் புதிய சட்டங்களை வடிவமைக்க பிரிட்டிஷ் இந்திய அரசால் அமைக்கப்பட்ட சவுத்பரோ குழுவில் அம்பேத்கர் ஓர் தரப்பின் சாட்சியமாக அழைக்கப்பட்டார் (தலித்துகளுக்கு தனித் தொகுதி, இரட்டை வாக்குரிமை ஆகியவை இந்த குழுவில் தான் அம்பேத்கரால் முதன் முதலில் முன் வைக்கப்பட்டது), 1925இல் சைமன் குழுவில் பம்பாய் மாகாண உறுப்பினராக பணியாற்றிய நிலையில் கூட அவர் தீண்டத்தகாதோர் நலனில் அக்கறை அற்ற பிரிட்டிஷ் இந்திய அரசின் போக்கை விமர்சனம் செய்யவும் தயங்கவில்லை...

கும்பமேளாவில் சாமியார்கள் கொட்டம் – இந்தியாவை இந்து நாடாக்க சங்கிகள் முயற்சி

கும்பமேளாவில் சாமியார்கள் கொட்டம் – இந்தியாவை இந்து நாடாக்க சங்கிகள் முயற்சி

உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கப்பட்டு பிப்ரவரி 26-ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. கும்பமேளாவில் கூடும் சாமியார்கள், 2035-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை இந்து நாடாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்து அரசமைப்புச் சட்டம் கும்பமேளா தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள அம்மாநில முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத், “சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம். அதுவே மனிதத்தின் மதம். நமது வழிபாட்டு முறைகளில் வேறுபாடு இருக்கலாம், ஆனால், மதம் ஒன்றுதான். அந்த மதம் சனாதன தர்மம். அந்த சனாதன தர்மத்தின் பிரதிநிதியாக கும்பமேளா விளங்குகிறது. பிரயாக்ராஜில் நடந்து வரும் மாபெரும் மத நிகழ்வான மகா கும்பமேளா, எந்த ஒரு ஜாதி அல்லது மதத்திற்கும் உட்பட்டது அல்ல. இது அனைத்து மதம், கலாசாரம் மற்றும் சமயங்களின் மாபெரும் கலவையாக திகழ்கிறது.’’ என்று கூறியுள்ளார். ஆனால் கும்பமேளாவில் கூடிய சாமியார் கூட்டம் இந்து அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கக் குழு அமைத்துள்ளது....

பார்ப்பனிய புனித பிம்பங்களை உடைத்த அண்ணல் அம்பேத்கரின் புரட்சிகர எழுத்துக்கள்

பார்ப்பனிய புனித பிம்பங்களை உடைத்த அண்ணல் அம்பேத்கரின் புரட்சிகர எழுத்துக்கள்

24.12.2024 அன்று கோவையில் நடைபெற்ற புரட்சியாளர்கள் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் தோழர் இனியவன் ஆற்றிய உரை. கடந்த இதழின் தொடர்ச்சி.. இந்திய அரசியல் களத்தில் ஜாதி குறித்தான விவாதங்கள் அண்ணல் அம்பேத்கருக்கு முன்பாகவே வெகுவாக தொடங்கிவிட்டது. 1917இல் மாண்டேகு – செம்ஸ்போர்ட் குழு உருவாக்கப்பட்டது. முதல் உலகப்போர் முடிவில் பிரிட்டிஷ் இந்தியாவின் அரசு அதிகாரத்துவத்தில் இந்தியர்களுக்கு குறைந்தபட்ச பிரதிநிதித்துவமாவது வழங்கப்பட்ட வேண்டும் என்கிற அடிப்படையில் உருவாக்கப்பட்ட இக்குழுவினை பல்வேறு தரப்பினர் சென்று சந்தித்து தங்கள் கருத்தை முன் வைத்தனர். அதில் மதராஸ் மாகாணத்தின் ‘பஞ்சமர் கல்வி அபிவிருத்தி அபிமான சங்கம்’, ‘மதராஸ் ஆதி திராவிட சங்கம்’, வங்காள மாகாணத்திலிருந்து குரு சந்த் தாக்கூர் உருவாக்கிய அமைப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்த அமைப்புகள் “சமூகத்தில் நீடித்து வரும் ஜாதி அமைப்பு முறையை ஒழிக்காமல் உயர் ஜாதி இந்துக்கள் கையில் அளிக்கப்படும் எவ்விதமான அதிகார பகிர்வு அல்லது அதிகார மாற்றம் மிகவும்...

சீமான் வீட்டை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள்-பெரியார் கொள்கைகள் வேகமாகப் பரவுகிறது!

சீமான் வீட்டை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள்-பெரியார் கொள்கைகள் வேகமாகப் பரவுகிறது!

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வருகிறார். பெரியார் குறித்து அவர் வைக்கும் விமர்சனங்களுக்கு ஆதாரம் கேட்டால், அவரின் சங்கி நண்பர்களான அண்ணாமலையும், ஹெச்.ராஜாவும், தமிழிசை செளந்தரராஜனும், துக்ளக் குருமூர்த்தி போன்ற ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களும் ஆதாரத்தைத் தருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் இதுவரை சீமானும் ஆதாரத்தைத் தரவில்லை, அவருடைய சங்கி நண்பர்களும் ஆதாரத்தைத் தரவில்லை. சீமானின் இத்தகைய அவதூறுப் பேச்சு பெரியாரிய உணர்வாளர்கள் மத்தியிலும், பொதுமக்களிடத்திலும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அவதூறுப் பேச்சுக்களை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று பல்வேறு தரப்பில் இருந்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சீமானோ மீண்டும் மீண்டும் சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதனால் சனவரி 22-ஆம் தேதி பனையூரில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடப்போவதாக ‘பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு’ அறிவித்திருந்தது. சீமானின் அருவருப்புப் பேச்சுகளால் ஆத்திரமடைந்த பெரியாரியத் தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதிலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து தலைநகர்...

ஜாதி அமைப்பு முறையைத் தகர்க்காமல் உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடாது!

ஜாதி அமைப்பு முறையைத் தகர்க்காமல் உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடாது!

தற்போது இந்தியாவில் நிலவுகிற பாசிச காவி கார்ப்ரேட் இந்துத்துவ அரசியல் சூழலில் கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த அரசியல் மாநாட்டிற்கு (24.12.2024) நான் சார்ந்திருக்கும் சிபிஐ (மா லெ) ரெட் ஸ்டார் சார்பாக புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மார்க்சிய பார்வையில் பெரியார், அம்பேத்கார் என்கிற தலைப்பு எனக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கரை மார்க்சிய பார்வையில் அணுகுவது என்னளவில் சற்று கடினமான பணி என்பதால் தோழர்களின் ஒப்புதலோடு அதனை சற்று மாற்றத்திற்கு உட்படுத்தி “கம்யூனிஸ்ட் பார்வையில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்” என்கிற தலைப்பினில் எனது உரையை முன்வைக்கிறேன். ஏனென்றால், மார்க்சியம் என்பது சமூக அரசியல் பொருளாதாரக் கோட்பாட்டு அடிப்படையிலான தத்துவம். பொதுவாக கோட்பாட்டளவில் ஓர் மார்க்சிஸ்ட்டாக வாழ்வது என்பது மிகவும் கடினமான காரியம். ஆனால் கம்யூனிஸ்ட் என்பது மார்க்சிய அடிப்படையிலான கட்சி, கொள்கை அரசியல் முன்னெடுப்பு சார்ந்தது என்பதனால்...

வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர் பெரியார்

வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர் பெரியார்

பெரியார் பற்றி அண்ணா இவ்வாறு கூறினார்; “ஒரு சகாப்தம்; ஒரு திருப்புமுனை; ஒரு காலகட்டம்; நூற்றாண்டு வரலாற்றை ஒரு குடுவைக்குள் அடக்கியவர்.” (Putting Centuries In Capsules) சமூகவியல் பார்வையில் வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர் பெரியார். இந்தியாவில் பார்ப்பனியத்தை எதிர்த்த முதல் புரட்சிக்காரர் புத்தர். வேதம் – யாகம் – சமூகக் கொடுமைகளை எதிர்த்து புத்தர் மக்களைச் சந்தித்து உரையாடினார். அவரின் கொள்கைகளைப் பரப்ப அவரது சீடர்கள் மக்களைச் சந்தித்து புத்தரின் கருத்தியலைப் பரப்பினார்கள். அதே புத்தர் இயக்கத்தை அவரது மறைவுக்குப் பிறகு பார்ப்பனியம் ஊடுருவிச் சிதைத்தது. பார்ப்பனியத்தை எதிர்த்து சார்வாகர்கள், சித்தர்கள், சமணர்கள், வள்ளலார் என்ற சீர்திருத்தவாதிகள் வந்தார்கள். பார்ப்பனியம் அவர்களை ஜீரணித்துவிட்டது. வரலாற்றில் இருந்து பாடம் பெற்ற பெரியார் எந்த இயக்கமும் எந்தப் புரட்சியாளரும் பின்பற்றாத புதிய நடைமுறைகளையும், கருத்துகளையும் தனது இயக்கத்துக்காகக் கட்டமைத்தார். 1. தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி சமுதாய இயக்கமாக்கினார். 2. எதைச் சொன்னால்...

ஜெயலலிதா –- ஆளுநர் சென்னா ரெட்டி மோதல்

ஜெயலலிதா –- ஆளுநர் சென்னா ரெட்டி மோதல்

ஆளுநர் ரவிக்கு உரிய மரியாதையை தமிழ்நாடு அரசு அளித்தும் ஆளுநர் சட்டமன்றத்தை அவமானப்படுத்துகிறார். எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை நியாயப்படுத்துகிறார். ஆனால் ஜெயலலிதா முதல்வராக இருந்த 1994இல் ஆளுநரை எப்படி நடத்தினார்? மோதலில் பின்னணி குறித்த ஒரு மீள் பார்வை. 1994ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும் ஆளுநர் சென்னா ரெட்டிக்கும் இடையே முரன்பாடு வந்தது. தனது அரசைக் கவிழ்ப்பதற்கு அன்றைய காங்கிரஸ் ஆட்சியால் அனுப்பிவைக்கப்பட்டவர் தான் சென்னா ரெட்டி என்று உறுதியாக நம்பினார் ஜெயலலிதா. இருவரும் பத்திரிக்கை அறிக்கைகள் வழியாக தங்கள் எதிர்ப்புகளை வெளியிடத் தொடங்கினர். ஆளுநரிடமிருந்து அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சியில் ஜெயலலிதா செயல்படத் தொடங்கினார். புத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்கும். ( இப்போது ஆர்.என்.ரவி அந்த உரையைத் தான் வாசிக்க மறுத்து வெளியேறினார்.) அப்போது பேரவைத் தலைவராக இருந்த சேடப்பட்டி முத்தய்யா ஆளுநர் உரையே தேவையில்லை என்று கருதி ஆளுநருக்கு அழைப்பு விடுக்காமலேயே சட்டசபையைக் கூட்டினார்....

தீபாவளி வாழ்த்து கிடையாது போயா! – கோடங்குடி மாரிமுத்து

தீபாவளி வாழ்த்து கிடையாது போயா! – கோடங்குடி மாரிமுத்து

விஜயதசமி நாளில் இராவணன் படத்தைத் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். இராவணன் எரிவதைப் பார்த்து கைத்தட்டி கும்மாளம் அடிக்கிறார்கள். இராவணன் மீது அம்புகள் ஏவப்படுகின்றன. தொலைக்காட்சிகள் இதை ஒளிபரப்புகின்றன. மோடியும், அதன் பரிவாரங்களும் மட்டுமல்ல, ராகுல், சோனியாவும் இதில் பங்கேற்கிறார்கள். ஏன் இந்த எரிப்புகள் நடக்கின்றன? தொலைக்காட்சியில் பார்த்த இருவர் இதுகுறித்து உரையாடுகிறார்கள். (விவாதம் தொடங்குகிறது) கேள்வி : தசரா என்பது இந்துப் பண்டிகை. இதுல எதுக்கு இராவணனை எரிக்கனும்? இராமனைக் கொண்டாடனும்? இராமாயணக் காலத்துலயே இந்துமதம் வந்துடுச்சா? பதில் : அப்படியெல்லாம் ஒன்னுமில்ல… இந்து என்ற பெயரே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்துல தான் வந்துச்சு. ஆனால் பிராமணர் தெய்வம், அவர் பேச்சை மீறுவது குற்றம், மற்றவர்கள் சூத்திரர்கள், பிராமணர்களுக்கு அடிமை என்ற கருத்து இராமாயணக் காலத்துலேயே வந்துருச்சு. அதனால் தான் இராமன், சூத்திரன் சம்பூகனின் தலையை வெட்டி வீசினான். இந்துமதம் அப்போது வரல, ஆனால் வர்ணாசிரம தர்மம் வந்துருச்சு. கேள்வி : இந்துமதம்...

கொள்கைகளைக் கொண்டு செல்வதற்கு அடக்குமுறைகளை வரவேற்றார் பெரியார்! ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு (2)

கொள்கைகளைக் கொண்டு செல்வதற்கு அடக்குமுறைகளை வரவேற்றார் பெரியார்! ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு (2)

குடிஅரசு சமூகத்தில் உருவாக்கிய தாக்கத்தையும், மதவாதிகள் மிரண்டு போய் அரசிடம் பாதுகாப்பு கேட்ட வரலாறுகளையும் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சுட்டிக்காட்டினார். சென்னைக் கழகத் தலைமையகத்தில் ஆகஸ்டு 12ஆம் தேதி நடந்த குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகத் திறப்பு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம்.. வள்ளலார் விழா ஒன்றில் பேசிய கலைஞர், வள்ளலார் சாமிகளைப் போல மென்மையானக் கருத்துகளை எல்லாம் சொல்லி இந்த மக்களைத் திருத்த முடியாது. இந்தத் தமிழன் கும்பகர்ணனாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். தூங்கிக் கொண்டிருக்கிற இந்தக் கும்பகர்ணன் விழிப்பதற்குப் பெரியார் என்ற யானை மிதித்தால் தான் நடக்கும் என்று பேசினார். சுயமரியாதைக்காரர்கள் தேவஸ்தானக் கமிட்டியில் இருக்கலாமா? என்ற கேள்விக்குப் பெரியார் இப்படி பதிலளித்தார். சுயமரியாதைக்காரர்கள் தேவஸ்தானக் கமிட்டியில் தாராளமாக இருக்கலாம். கோயில் சொத்துக்களை மக்களுக்கு பயன்படுத்துகிற முயற்சியில் நீங்கள் பங்களிக்கலாம். ஆனால் வெறும் மூடநம்பிக்கைகளையும், வர்ணாசிரமத்தை மட்டும் பரப்புவதற்காக மட்டும் அந்தக் கமிட்டி இருக்கிறது என்று சொன்னால் அதில் இருப்பதற்கான...

முடிவெய்தினார் மக்கள் உரிமைப் போராளி ஜி.என்.சாய்பாபா

முடிவெய்தினார் மக்கள் உரிமைப் போராளி ஜி.என்.சாய்பாபா

மக்கள் உரிமைப் போராளி ஜி.என்.சாய்பாபா முடிவெய்தினார். அவரது உடலில் 90 சதவீத உறுப்புகள் செயலிழந்தவை. சக்கர நாற்காலியிலேயே அவரது வாழ்க்கை நகர்ந்தது. மாவோயிஸ்ட் நூல்களை தனது வீட்டில் வைத்திருந்தார் என்பதற்காக ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா காவல்துறை இணைந்து அவரை உஃபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. 3592 நாட்கள் சிறையில் கழித்தார். அவர் செய்த குற்றமே மாவோயிசம் சம்பந்தப்பட்ட நூல்களை தனது அறையில் வைத்திருந்தார் என்பது தான். அந்த நூல்களை ரகசியமாக சுற்றுக்கு அனுப்பி நாட்டை உடைப்பதற்கு சதி செய்தார் என்று கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 3592 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு அவரிடம் அப்படி நூல்கள் கைப்பற்றுவதற்கான ஆதாரமே இல்லை என கூறி உச்சநீதிமன்றம் அவரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்தது. சிறைக்கு சென்ற பின் கடுமையான நோய் உபாதைகளுக்கு உள்ளானார். எந்தவித மருத்துவ வசதிகளும் இல்லாத நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கழிவறைக்கு...

நவராத்திரி கொலுவில் இப்படி ஓர் கலகம்

நவராத்திரி கொலுவில் இப்படி ஓர் கலகம்

நவராத்திரி கொலுவில் சரசுவதி, லட்சுமி, கிருஷ்ணன், இராமன், சீதை, பிள்ளையார் உள்ளிட்ட கடவுள் பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. தனது வீட்டுக்கு வந்த நவராத்திரி விருந்தினருக்கு சுண்டல், தயிர் சாதம் வழங்கினார், கோபால அய்யர். இரவு ஓ.டி.டி-யில் நடிகர்கள், கடவுள் வேடமிட்டு நடித்த பக்திப் படம் ஒன்றைப் பார்த்து உறங்கச் சென்றார். கனவில் கொலுவில் இருந்த கடவுள் பொம்மைகளும், உருவங்களாகப் பேசத் தொடங்கின…. கிருஷ்ணன் கீழே இறங்கி வந்து அய்யர் ‘ஆத்து’ சமையலறைக்குப் போகிறான். பாத்திரங்களை உருட்டுகிறான். சத்தம் கேட்ட விநாயகன், கிருஷ்ணனைப் பின் தொடருகிறான். கிருஷ்ணன் : டேய், யானைத் தலையா! இங்கே, ஏண்டா வந்தே? விநாயகன் : நிறுத்துடா, வெண்ணெய் திருடா; நீ எதையெதை எல்லாம் உருட்டப் போகிறாய், திருடப் போகிறாய் என்பதைப் பார்க்கத்தான் வந்தேன். கிருஷ்ணன் : நான் திருடினாலும் சரி; குளிக்கும் பெண்களின் ஆடைகளை உருவி மரத்தில் போய் உட்கார்ந்து கொண்டாலும்; நான் எப் போதுமே பக்தர்களுக்கு...

ஆர்.எஸ்.எஸ் நடத்திய ‘ஆண்கள் பேரணி’

ஆர்.எஸ்.எஸ் நடத்திய ‘ஆண்கள் பேரணி’

‘அது என்னப்பா! ஆர்.எஸ்.எஸ் பேரணியில அமைச்சர் முருகன் சீருடையுடன் போஸ் குடுக்குறாரு. தமிழிசையும், வானதியும் காணோமே என்றார் ஒரு நண்பர். ஆமாம் அப்படித்தான். ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை ஊடகங்கள் ஒளிபரப்பின. காக்கி பேண்ட் – குல்லாவுடன் நடந்தார்கள். ஒரு பெண்ணை மருந்துக்குக் கூட காணவில்லை . அது ‘ஆர்.எஸ்.எஸ் ஆண்கள்’ மட்டும் பேரணி. ஏதோ ஒரு சுயம் சேவக்கைப் பிடித்து அவருக்கு பெண் வேடம் போட்டுக்கூட அழைத்து வந்திருக்கலாம். அதற்கும் தயாராக இல்லை. பெண்கள் விண்வெளிக்குப் போகிறார்கள். பல மாதங்கள் சந்திர மண்டலத்தில் எங்களால் வாழ முடியும் என்று சாதனை படைக்கிறார்கள். இராணுவக் கமாண்டர்களாக வருகிறார்கள். குடியரசுத் தலைவராகக் கூட வரலாம், ஆனால் அதே பெண் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக மட்டும் முடியாது. சனாதன தர்மம் அப்படி ஒரு இரும்புக் கோட்டை. ‘என்னப்பா இது; தமிழிசையும் வானதியும் ஒவ்வொரு நாளும் இந்து தர்மத்துக்காக முழங்குறாங்க, ஆனா அவங்க தாய் அமைப்பு பேரணிக்குள் வராதே என்று...

‘அய்யங்கார்’ புடிச்ச லட்டு

‘அய்யங்கார்’ புடிச்ச லட்டு

“பாவம்! பாவம்! அனாச்சாரம் பகவான் பிரசாதத்துலேயே மாமிசம் கலந்துடுச்சு! இது அடுக்குமா? எதுல கலப்படம்னு ஒரு விவஸ்தை வேண்டாமோ? இதுக்கெல்லாம் என்ன பரிகாரம் செய்யுறது? நேக்கு எதுவுமே பிடிக்கல” என்று பதறுகின்றன வைஷ்ணவ ஆன்மீக வட்டாரங்கள். “ஆபத்து வந்துடுச்சு, நாட்டுக்கே ஆபத்து, சங்கராச்சாரிகளே, வேதப் பண்டிதர்களே, முன்னாள், இன்னாள் ஏழுமலையான் அர்ச்சகர்களே! இதற்கு ஒரு பரிகாரம் காணுங்கள், ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்த போது தான் இந்த பாவம் நடந்திருக்கு. அவரை சிறையில் தள்ள ஆகமத்தில் ஏதேனும் விதி இருக்கிறதா? என்று பார்த்து சொல்லுங்க” என்கிறார் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு. “ஆமாம்! அவா ஆட்சிக்காலத்திலே தான் இந்த அநியாயம் நடந்துடுச்சு, அப்பவே சொன்னேன்” என்கிறார் ரிட்டையர்டு தலைமை அர்ச்சகர். “ஓய் ஒன்றும் குடி முழுகிப் போயிடல நம்ம வைஷ்ணவ ஆகம ஆராய்ச்சிக்காரர்களெல்லாம் இதற்கு தீர்வு கண்டுட்டுடோம். அண்மையில் தான் சாமிக்கு மலையில் ‘பவித்ரோட்சவம்’ செய்து முடுச்சுருக்கோம். இது ஒன்றே போதும்....

“யாருடைய தயவுக்கோ, சுயநல வாழ்வுக்கோ ‘குடிஅரசு’ இல்லை” பெரியாரின் உருக்கமான கட்டுரை

“யாருடைய தயவுக்கோ, சுயநல வாழ்வுக்கோ ‘குடிஅரசு’ இல்லை” பெரியாரின் உருக்கமான கட்டுரை

சகோதர வாசகர்களே ! நமது “குடி அரசு” ஆரம்பமாகி இரண்டு வருஷம் முடிந்து மூன்றா வது வருஷத்தின் முதல் இதழ் இன்று வெளியாகிறது. “குடி அரசு” ஆரம்ப இதழில் “குடி அரசு” என்று ஒரு தலையங்கமும், ஆறு மாதம் கழிந்து “நமது பத்திரிகை” என்று ஒரு தலையங்கமும் ஒரு வருஷம் முடிந்து இரண்டாவது வருஷ ஆரம்பத்தில் “நமது பத்திரிகை” என்று ஒரு தலையங்கமும் எழுதி இருக்கிறோம். இப்போது இரண்டு வருஷம் முடிந்து மூன்றாவது வருஷ ஆரம்ப முதல் இதழிலும் அவ்வாறே “நமது பத்திரிகை” என்று தலையங்கமிட்டு ஒரு குறிப்பு எழுத ஆசைப்படுகிறோம். நமது நாட்டு மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்டாக்கக் “குடி அரசு” என்னும் ஒரு பத்திரிகை யை ஆரம்பிக்க வேண்டும் என்பதாக முதல் முதல் நானும் எனது நண்பர் ஸ்ரீமான் தங்கப்பெருமாள் பிள்ளையும் 1922ல் கோயமுத்தூர் ஜெயிலில் சிறைவாசம் செய்யும் போதே நினைத்தோம். அதுபோலவே வெளியில் வந்த கொஞ்ச...

புதிய கல்விக்கொள்கை – பாஜக பதில் சொல்லுமா? – ர.பிரகாசு

புதிய கல்விக்கொள்கை – பாஜக பதில் சொல்லுமா? – ர.பிரகாசு

கல்வித் தரத்தில் இந்தியாவில் உயர்ந்து நிற்கும் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய 5 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி தர மறுப்பதாக தி இந்து பத்திரிகையில் செப்டம்பர் 9ஆம் தேதி ஆதாரத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. அந்த செய்தியை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புதிய கல்விக்கொள்கையை ஏற்க மறுப்பதால் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் தண்டனை. ஒன்றிய பாஜக அரசு தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை ஊக்குவிப்பது இப்படித்தானா? இதை முடிவு செய்ய நம் தேசம் மற்றும் நம் மக்களின் அறிவுக்கே விட்டுவிடுகிறேன்” என்று காட்டமாகப் பதிவிட்டிருந்தார். ஒன்றிய அரசு நியாயமாக நடந்துகொள்வதென்றால் நிலுவை நிதியை விடுவித்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானோ, முதலமைச்சரின் பதிவைப் பகிர்ந்து சில அபத்தமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்ப தென்றால், 1. தமிழ் உள்ளிட்ட தாய்மொழிக் கல்வியை எதிர்க்கிறீர்களா?...

காவிமயத்தில் கரையும் கல்வித்துறை! – ர.பிரகாசு

காவிமயத்தில் கரையும் கல்வித்துறை! – ர.பிரகாசு

ஒன்றிய அரசின் புதியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு நிராகரித்ததால் கட்டாயக் கல்வி (சர்வ சிக்சா அபியான்) சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இத்திட்டத்திற்கான நிதியில் 60 விழுக்காடு ஒன்றிய அரசும், 40 விழுக்காடு மாநில அரசும் பங்களிப்புச் செய்கின்றன. அதன்படி பார்த்தால் 2024-25 கல்வி ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய அரசு 4 தவணைகளில் ரூ.2,152 கோடி வழங்க வேண்டும். கடந்த ஜூன் மாதமே ஒன்றிய அரசு முதல் தவணையாக ரூ.573 கோடியை வழங்கியிருக்க வேண்டும். இதை வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு பல முறை கடிதம் எழுதியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை, என்றும் கடந்த சில மாதங்களாக மாநில அரசின் முழுமையான நிதியில்தான் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றச்சாட்டை வைத்துள்ளார். கைவிரிக்கும் பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி...

முருகனை சு-பிராமணனிடம் இருந்து உலக மாநாடு மீட்டெடுக்குமா? – விடுதலை இராசேந்திரன்

முருகனை சு-பிராமணனிடம் இருந்து உலக மாநாடு மீட்டெடுக்குமா? – விடுதலை இராசேந்திரன்

தமிழ்நாடு முதல்வர் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி தமிழகத்தின் தொழில் கட்டமைப்புகளை வளர்க்கத் துடிக்கிறார். ஆனால் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முருகனுக்கு ‘உலக மாநாடு’ நடத்த முனைப்புக் காட்டுகிறார். கோயில் நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டிய அறநிலையத்துறை முருக பக்தியை மக்களிடம் பரப்புவதில் ஏன் இப்படி முனைப்புக் காட்ட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ‘திராவிட மாடல்’ ஆட்சி இந்து விரோதமானது என்ற பார்ப்பனியப் பரப்புரைகளை முறியடித்து அமைச்சர் சேகர்பாபு நடத்திவரும் கோயில் திருப்பணிகளே இதற்கு சரியான பதிலாக இருக்கும் போது இப்போது ஏன் இந்த மாநாடு? என்ற கேள்வியுடன் இந்த மாநாட்டை பரிசீலிப்போம். தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகன் ஆகமப் பிடிக்குள் தான் சிக்கியிருக்கிறான். அன்றாடம் வேத மந்திரங்கள், அபிஷேகம், அர்ச்சனை, கும்பாபிஷேகம் என்று வேத சடங்குகள் நடத்தப்படுகின்றன. ஆகமப் பிடிக்குள் இருந்து ஆராய்ச்சிக் கருத்தரங்கிற்குள் முருகன் கொண்டுவரப்பட்டிருப்பதைக்கூட ஒரு வகையில் ஆகம எதிர்ப்பு தான் என்று...

மோடியின் போலித் தமிழ்ப்பாசம்; அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ.!

மோடியின் போலித் தமிழ்ப்பாசம்; அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ.!

ஒன்றிய பாஜ அரசு தொடர்ச்சியாக தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.. ரயில்வே நிதி, வெள்ள நிவாரண நிதி, வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதி என எதற்கும் தமிழ்நாட்டுக்கு நிதியை ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. தேவையான நிதிகளைகூட வழங்காமல் ஏதோ தமிழ்நாட்டினர் அந்நியர்கள் என்ற அளவில்தான் ஒன்றிய அரசு வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டு மக்கள் பாஜவைப் புறந்தள்ளி வைத்திருப்பதால்தான். எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலமாக இருப்பதால் தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யக்கூடாது என்ற மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து தமிழர்கள் மீது பாசம் கொண்டவர்போல பிரதமர் காட்டிக்கொண்டார். ஆனால் அவர்கள் நினைத்தது எதுவும் நடக்காததால் தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் திட்டப்பணிகளுக்கு ஒதுக்கிய நிதியைக்கூட குறைத்திருப்பது தெரியவந்துள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் அடிக்கடி வந்து ஒரு திருக்குறளைச் சொல்லியும், உலகின் மூத்த மொழி தமிழ் என்று பெருமை...

ஹிந்துஸ்தானில் கரையும் காஷ்மீர்! – அபூர்வானந்த்

ஹிந்துஸ்தானில் கரையும் காஷ்மீர்! – அபூர்வானந்த்

(நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 2019ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்தைப் பறித்தது. 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர், 5 ஆண்டுகளில் காஷ்மீர் மிகப்பெரிய வளர்ச்சிக் கண்டிருப்பதாகப் பாஜகவும், சங்கிகளும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் காஷ்மீரத்து அமைதியின் பின்னால் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அரச வன்முறைகளை விவரித்து டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் அபூர்வானந்த் தி வயரில் எழுதிவரும் தொடரின் ஒரு பாகம் தமிழில்) அவமானம், அநீதி மற்றும் அடக்குமுறையின் மற்றொரு ஆண்டு கடந்துவிட்டது. காலண்டர் ஆண்டில் ஏற்படும் மாற்றம் இந்தச் சூழ்நிலைகளில் மாற்றத்தைக் கொண்டு வருமா? நான் ஒரு காஷ்மீரியாக இருந்திருந்தால், ஆகஸ்ட் 5 தேதியைக் காலண்டரில் பார்த்ததும் இதுதான் என் நினைவுக்கு வந்திருக்கும். இந்த அவமானத்தையும், அநீதியையும், அடக்குமுறையையும் என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணம் என் பார்வையிலேயே என்னைச் சிறுமைப்படுத்துகிறது. இத்தகைய அவமானம் மற்றும் அடக்குமுறையை எனக்கு நினைவூட்டும் தேதி இந்தியாவின் பிற பகுதிகளுக்கு...

பகவத்கீதை பெண்களைத் துப்பாக்கி ஏந்த அனுமதிக்கிறதா?

பகவத்கீதை பெண்களைத் துப்பாக்கி ஏந்த அனுமதிக்கிறதா?

பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். பெண் ஒருவர் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்றிருப்பது நாட்டிற்கும் பெண் இனத்திற்கும் பெருமை சேர்க்கக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. இதை நாம் பாராட்டி வரவேற்கிறோம். ஆனால், தனது வெற்றிக்கு காரணம் பகவத் கீதை தான், நான் பகவத்கீதையை ஆழமாகப் படித்தேன். பலனை எதிர்பார்க்காதே கடமையை செய்! உன்னுடைய தலைவிதி உன் கையில் இல்லை. இலக்கு நோக்கி முன்னேறிச் செல் என்ற இந்த மூன்று கருத்துக்களும் தான் என்னை ஊக்கப்படுத்தியது. எனவே பகவத்கீதை தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறியிருக்கிறார். ஒலிம்பிக்கில் பகவத்கீதைக்கு தங்கப் பதக்கம் கிடைத்ததை போல ஊடகங்கள் இதை கொண்டாடி வருகின்றனர். இந்த கருத்து நியாயம் தானா என்பது குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பகவத் கீதை எப்போது உருவானது. புத்த மதம் செல்வாக்குமிக்கதாக திகழ்ந்த காலத்தில் அதனுடைய சாக்கிய தத்துவம் மக்களால்...

பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் ஒன்றிய அரசு!

பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் ஒன்றிய அரசு!

பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணையாத மாநிலங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்துக்கு அனுப்பப்படும் நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வருகிறது. இதனால் பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 5ல் பிரதமர் மோடியால் பி.எம். ஸ்ரீ பள்ளிகள் (வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாடு முழுவதிலும் பள்ளிகள் மேம்பாட்டுக்கு ரூ.27,360 கோடி செலவிடப்பட உள்ளது. இதற்கு 60% நிதிச்சுமையை ஒன்றிய அரசும், 40% மாநில அரசுகளும் ஏற்க வேண்டும். ஒன்றிய அரசின் பங்காக ரூ.18,128 கோடி உள்ளது. இதன்மூலம் 14,500 பள்ளிகளில் சுமார் 1.87 கோடி குழந்தைகள் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பி.எம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தயக்கம் காட்டுவதால், டெல்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்திற்கு சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை ஒன்றிய கல்வி அமைச்சகம் நிறுத்தியுள்ளதாக...

பெரியாரின் நாத்திகம் தமிழர் நலன் சார்ந்தது அய்யாவுடன் கைகோர்த்த குன்றக்குடி அடிகளார்!

பெரியாரின் நாத்திகம் தமிழர் நலன் சார்ந்தது அய்யாவுடன் கைகோர்த்த குன்றக்குடி அடிகளார்!

பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்திற்கு என்றென்றும் துணைநின்ற தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு ஜூலை 11-ஆம் தேதி தொடங்கியுள்ளது. திராவிட மாடலின் அடித்தளமான ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமத்துவக் கோட்பாட்டில் உறுதியோடு இருந்த குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டை நினைவுகூர்ந்து அவருடைய மானுடப் பணிகளை போற்ற வேண்டியது திராவிட இயக்கத்தின் கடமை. குன்றக்குடி அடிகளார் குறித்து 2018ஆம் ஆண்டு நிமிர்வோம் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையை அவருடைய நூற்றாண்டின் தொடக்கதில் பகிர்கிறது புரட்சிப் பெரியார் பெரியார் முழக்கம். கடவுள் – மத மறுப்புகளைக் கடுமையாகப் பேசிய பெரியார், போராட்ட வடிவங்களிலும் கடுமையான அணுகுமுறைகளையே பின்பற்றினார். பார்ப்பனியத்தில் ஊறிப் போய் நிற்கும் மக்களுக்கு இத்தகைய ‘அறுவை சிகிச்சை’ முறையே தேவை என்று கருதினார் பெரியார். ஆனால், தமிழ்நாட்டில் கொள்கை முரண் பாடுகளுக்கிடையே உரையாடல்களைத் தொடங்கி விவாதங்களுக்கு வழி திறந்து விட்டதுதான் பெரியார் இயக்கம், மாற்றுக் கருத்தாளர்களை எதிரிகளாக்கி வன்முறைக்கு தூபம் போட்டது இல்லை. இன்று எச். ராஜாக்களும்,...

கடத்தூரில் குடிஅரசு நூற்றாண்டு விழா

கடத்தூரில் குடிஅரசு நூற்றாண்டு விழா

கடத்தூர் புதூரில் குடிஅரசு நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் – கொடியேற்றம் – இல்லத் திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியம் கடத்தூர் புதூரில் குடி அரசு நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் 06.07.2024 சனிக் கிழமை மாலை 6.00 மணிக்கு மடத்துகுளம் ஒன்றியக் கழகத் தோழர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. தொடக்கமாக காவை இளவரசனின் மந்திரமா தந்திரமா எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பகுதி வாழ் பொதுமக்கள் திரளாக பங்கேற்று ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியை கவனித்தனர். பொதுக்கூட்டத்திற்கு மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் கணக்கன் தலைமை தாங்கினார். ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன் வரவேற்புரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் சிவானந்தம், கழகத் தோழர்கள் சரவணன், இலக்கியா, சங்கீதா, செல்வி, ஆரியமாலா, சிந்தனை செல்வி, தாரணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். நிகழ்வில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, விசிக மாவட்ட செயலாளர் சதீசு, திராவிடத் தமிழர் கட்சி கொள்கை பரப்புச்...

வீரப்பனிடம் இருந்து ராஜ்குமாரை மீட்டதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் பங்கு – மூத்த பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியம் விவரிக்கிறார் (2)

வீரப்பனிடம் இருந்து ராஜ்குமாரை மீட்டதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் பங்கு – மூத்த பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியம் விவரிக்கிறார் (2)

23.06.2024 அன்று கொளத்தூரில் நடைபெற்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் 77வது பிறந்தநாள் விழாவில் மூத்த பத்திரிகையாளர் சிவசுப்ரமணியம் ஆற்றிய வாழ்த்துரை. கடந்த இதழின் தொடர்ச்சி… காலை 7:30 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணி வரைக்கும் இருவரும் பேசினார்கள். அந்த பேச்சில் ராஜ்குமார் கடத்தப்பட்டது தொடர்பாக எதுவும் இல்லை. முழுக்க முழுக்க உக்கம்பருத்திக்காடு, செங்கப்பாடி என சுற்றுவட்டார ஊர்களைப் பற்றியே பேசினார்கள். கடைசியாக மணி அண்ணன், ராஜ்குமாரை எப்போது வெளியில் விடுவீர்கள் என்று வீரப்பனை பார்த்து கேட்டார். நீங்கள் வேண்டுமானால் இப்போதே கூட்டிச் செல்லுங்கள் என்றார் வீரப்பன். அப்போது அண்ணன், வேண்டாம் நான் வந்ததே யாருக்கும் தெரியாது. தமிழ் (சிவசுப்பிரமணியம்) வரச் சொன்னார் என்று வந்தேன். நாம் சந்திச்சதுக்கு அடையாளமாக ஆடியோ கேசட் மட்டும் பேசி பதிவு செய்து கொடுங்கள் என்று மணி அண்ணன் கேட்டுக்கொண்டார். கேசட்டை வாங்கிக் கொண்டு அண்ணன் புறப்பட்டார். கொளத்தூர் மணியின் அணுகுமுறை வீரப்பனின் இந்த...

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க! – மருத்துவர் எஸ்.காசி

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க! – மருத்துவர் எஸ்.காசி

நீட் 2024 தேர்வு முடிவுகள், இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. கடந்த வரு டங்களில் ஒன்று அல்லது இரண்டு மாணவர்கள் மட்டுமே 720/720 மதிப்பெண் பெற்று வந்த நிலை யில், இந்த வருடம் 67 பேர் 720/720 மதிப்பெண் பெற்றுள் ளனர். தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்ட ‘இறுதி விடைகளுடன்’ மாணவர்கள் தனது OMR (Optical Mark Recognition Sheet) நகலை ஒப்பிட்டுப் பார்த்த போது கிடைத்த மதிப்பெண்ணுக்கும், அறிவிக்கப்பட்ட மதிப்பெண்ணுக்கும் இடையே பெரிய வேறுபாடு இருந்ததால், முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. இதனையடுத்து உச்சநீதி மன்றத்திலும், பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்க ளிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. குஜராத் மற்றும் பீகார் மாநிலங்களில், ‘நீட் தேர்வு மைய’ அதிகாரிகளே பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்று கேள்வித்தாளைக் கசியவிட்டது, ஹரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் தொடர்ச்சியான தேர்வு எண் கொண்ட 6 பேர் 720/720 பெற்றது, 1563...

வர்ணமும் வர்க்கமும் பின்னிப்பிணைந்தது! – ர.பிரகாசு

வர்ணமும் வர்க்கமும் பின்னிப்பிணைந்தது! – ர.பிரகாசு

டிசம்பர் 16-ஆம் தேதி கோவை அண்ணாமலை அரங்கத்தில் நடந்த அனைத்திந்திய சாதி ஒழிப்பு இயக்கத்தின் 5-வது அகில இந்திய மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “வர்க்கமும் ஜாதியும் ஒருங்கிணைந்தது, இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஜாதியால் அடக்கப்பட்டவர்கள்தான் வர்க்க சுரண்டலுக்கும் ஆளானவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் பெரு முதலாளிகளில் உயர் ஜாதிக்காரர்களே இருக்கிறார்கள். பாம்பே டையிங் நுஸ்லி வாடியா, அசிம் பிரேம்ஜி என 2 இசுலாமியர்கள் மட்டும் தவறிப்போய் வந்துவிட்டார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் கூட சொல்லிக்கொள்ள ஆள் இல்லை. வர்க்கத்துக்கும் வர்ணத்துக்கும் இடையிலான உறவு என்னவென்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.” என்று வர்க்கத்துக்கும் வருணத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்து நீண்ட உரையாற்றினார். அந்த உரையின் கருத்துக்களுக்கு வலுசேர்க்கும் விதமான ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. “இந்தியாவில் வரி நீதி மற்றும் செல்வ மறுபகிர்வு: சமீபத்திய சமத்துவமின்மை மதிப்பீடுகளின் அடிப்படையில் முன்மொழிவுகள்” என்ற தலைப்பில் World Inequality Lab...

ஜி.ஆர்.சாமிநாதனின் சித்தாந்தப் பின்புலம் – கொளத்தூர் மணி

ஜி.ஆர்.சாமிநாதனின் சித்தாந்தப் பின்புலம் – கொளத்தூர் மணி

பிறர் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருள விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் தீர்ப்பை கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக Voice of South யூடியூப் சேனலுக்கு கழகத் தலைவர் அளித்த நேர்காணலின் தொடர்ச்சி. இந்த வழக்கு மட்டுமல்ல, பல வழக்குகளில் ஜி.ஆர்.சாமிநாதன் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. அண்மையில் சவுக்கு சங்கர் என்பவரின் வழக்கில் கூட, 15 வழக்குகளை தள்ளிவைத்துவிட்டு அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். 2 செல்வாக்கு உள்ள நபர்கள் அவருடைய அறைக்குச் சென்று, சவுக்கு சங்கர் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று வற்புறுத்தினார்கள் என்றும், அது நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிரானது என்பதால் உடனடியாக விசாரித்தேன் என்றும் ஜி.ஆர்.சாமிநாதன் கூறியிருக்கிறார். அது ஒருவேளை உண்மை என்றால், தானாகவே (suo moto) அவர்கள் மீது விசாரணை நடத்தலாம் அல்லது நடவடிக்கை...

திருமணம் தனிநபரின் உரிமை

திருமணம் தனிநபரின் உரிமை

“திருமணம் என்பதில் சம்மந்தபட்ட ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ தவிர, மற்ற எவருக்கும் அதில் முடிவெடுக்க உரிமையில்லை. கட்டாயத் திருமணங்கள் ஒழிக்கப்பட்டு, மேலை நாடுகளைப் போல நம் நாட்டிலும் அவரவர் வாழ்க்கைத் துணையை அவரவரே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்” என்று ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பேசியவர் பெரியார். பேசியதோடு மட்டுமில்லாமல் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நம்மை அடிமைப்படுத்தும் பார்ப்பன மதச் சடங்குகளில் இருந்து விடுவித்துக் கொண்டு, சுயமரியாதை உணர்வோடு இணையர்களாய் கரம் கோர்ப்பதற்கான சுயமரியாதைத் திருமண முறையையும் பெரியார் அறிமுகப்படுத்தினார். முதல் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது 1928ஆம் ஆண்டில். இன்னும் 4 ஆண்டுகளில் சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்து ஒரு நூற்றாண்டு ஆகப்போகிறது. பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரமும் கிடைத்துவிட்டது. ஆனால் இன்றைக்கும் தமிழ்நாட்டைத் தவிர மற்ற எந்த மாநிலங்களிலும் இத்தகைய சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் இல்லை. அதனாலேயே காதல் திருமணங்களோ அல்லது ஜாதி கடந்த திருமணங்களோ...

தரத்தைக் கெடுக்கும் தேர்வு ‘நீட்’

தரத்தைக் கெடுக்கும் தேர்வு ‘நீட்’

தகுதிவாய்ந்த மருத்துவர்களை உருவாக்கு வதற்காக நீட் தேர்வை கொண்டு வருவதாகக் கூறினார்கள். ஆனால் நீட் எத்தகைய தரங்கெட்ட தேர்வு என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி தான் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4 ஆம் தேதி அவசர அவசரமாக தேர்வு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது தேசியத் தேர்வு முகமை. இத்தேர்வில் நடைபெற்றிருக்கிற மோசடிகள் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே, தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் அரசியல் களேபரங்களுக்கு மத்தியில் தேர்வு முடிவுகளும் வெளியிடப் பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வரவைக்கும் அளவுக்கு எக்கச்சக்கமான குளறுபடிகள் நடந்திருக்கின்றன. தேர்வு நடைபெற்ற 4750 மையங்களில், ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஆறு பேர் 720க்கு 720 மதிப்பெண் எடுத்துள்ளார்கள். இந்த ஆறு பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து உள்ளன. எனவே இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று எவராலும்...

புதிய பாய்ச்சலுக்கு தயாராகும் பள்ளிக்கல்வித்துறை

புதிய பாய்ச்சலுக்கு தயாராகும் பள்ளிக்கல்வித்துறை

பிரிட்டன் கூட்டமைப்பின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான ஸ்காட்லாந்து தேசிய நூலகத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அங்கு அமர்ந்து ஒரு நூலினை வாசித்தபோது… குழந்தைகளை மையப்படுத்திய கொண்டாட்டமான கல்வி அளிப்பதில் சிறந்து விளங்கும் சுவீடன், நார்வே, டென்மார்க், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளின் கல்வி அமைப்பைப் பார்வையிட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த வாரம் சென்றிருந்தார். அந்நாடுகளின் பள்ளிக்கூட வகுப்பறை செயல்பாடுகள், நூலகங்கள் உள்ளிட்டவற்றை ஒவ்வொன்றாகக் கவனித்தவர் அது தொடர்பான தகவல்களை சமூக ஊடக பக்கங்களில் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதில், 75 மொழிகள் பேசக்கூடிய மக்கள் வசிக்கும் சுவீடன் நாட்டில் அனைவரின் தாய்மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருவதை வியப்புடன் பகிர்ந்திருந்தார். தமிழ்நாடு அரசு பள்ளிகளை அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது. படிப்புக்குப் பசி ஒருபோதும் தடைக்கல்லாக இருத்தலாகாது என்று அரசு பள்ளிக்கூடத்தில் மதிய உணவுத்திட்டத்தை அறிமுகம் செய்து...

நீதித்துறை ஒழுங்கைக் கெடுக்கும் ஜி.ஆர்.சாமிநாதன்! உள்நோக்கத்தோடு வழங்கப்படும் தீர்ப்புகள்

நீதித்துறை ஒழுங்கைக் கெடுக்கும் ஜி.ஆர்.சாமிநாதன்! உள்நோக்கத்தோடு வழங்கப்படும் தீர்ப்புகள்

பிறர் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருள விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் தீர்ப்பை கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக Voice of South யூடியூப் சேனலுக்கு கழகத் தலைவர் அளித்த நேர்காணல். நெறியாளர்: ஜி.ஆர்.சாமிநாதனின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் புகார் மனு அளித்து உள்ளீர்களே! எதனால்? கொளத்தூர் மணி : கரூர் மாவட்டம் நெரூரில் ஒரு துறவியின் சமாதிக்கு வருகிறவர்கள் உண்ணும் எச்சில் இலைகளில் பக்தர்கள் உருளுவதை ஒரு பழக்கமாக வைத்திருந்துள்ளார்கள். அதை நீண்டகாலமான பழக்கம் என்றுசொல்லி, மனித மாண்புக்கு எதிரான ஒரு செயலை செய்துகொண்டிருந்தார்கள். இதைத் தடை செய்ய வேண்டுமென்று தலித் பாண்டியன் என்பவர் 2015ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி திரு மணிக்குமார், நீதிபதி திரு வேலுமணி ஆகிய இருவர் அடங்கிய...

தப்பிவிடுகிறார்களா சூத்ரதாரிகள்?

தப்பிவிடுகிறார்களா சூத்ரதாரிகள்?

சமூகச் செயல்பாட்டாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை தொடர்பாகப் பத்தாண்டுகளாக நடைபெற்ற வழக்கில், இருவருக்கு (மட்டும்!) ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம். தீர்ப்பு எழுதிய நீதிபதி பிரபாகர் ஜாதவ், “இந்த இருவர் தங்களுக்கு இடப்பட்ட வேலையைச் செய்து முடித்தவர்கள். ஆனால், அந்தத் திட்டத்தைத் தீட்டியது வேறு யாரோ(வாக இருக்கும்)” என்று குறிப்பிட்டிருந்தார். கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா என்ன? மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வைப் பரப்பிவந்தவர் தபோல்கர். மூடநம்பிக்கைகள், கட்டுக்கதைகள் போன்றவற்றில் இருந்தெல்லாம் சமூகம் விடுபட்டுவிடக் கூடாது என்று நினைப்பவர்கள்தானே தபோல்கரைக் குறிவைத்திருக்க வேண்டும்? அந்தச் சூத்ரதாரிகளுக்கு ஏன் தண்டனை கிடைக்கவில்லை? அடுத்தடுத்துப் படுகொலைகள்: தபோல்கரைத் தனது விரோதி என்று வெளிப்படையாக எச்சரித்தவர், வீரேந்திரசிங் சரத்சந்திர தவாதே. இந்நிலையில்தான் 2013 ஆகஸ்ட் 20 அன்று புணே நகரில் காலை நடைப்பயிற்சியின்போது மிகவும் குறுகிய இடைவெளியில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார் தபோல்கர். ஆனால், தவாதே உள்ளிட்ட மூவர் போதுமான சாட்சியங்கள் இல்லை...

எச்சில் இலை தீர்ப்பு

எச்சில் இலை தீர்ப்பு

எச்சில் இலையில் அங்கபிரதிஷ்டம் செய்வது குற்றமல்ல, அது 500 ஆண்டுகால சடங்கு, மகாபாரதத்திலேயே இதுகுறித்து சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இதை யாரும் தடைசெய்யமுடியாது என்று புரட்சிகரமான தீர்ப்பை வழ்ங்கியிருக்கிறார் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன். நாம் வணங்கும் கடவுள் கூட பிராமண எச்சில் இலை என்று சொன்னால் அதை உடனே ஏற்றுக்கொண்டு பக்தனின் கோரிக்கையை உடனடியாக தீர்த்துவைத்துவிடுவார்கள். ஆனால் சூத்திரன் எச்சில் இலை என்றால் மட்டும் அது தெய்வ குத்தம் ஆகிவிடும். இப்படி பிராமணர்களே ஒரு சடங்கை உருவாக்கிவிட்டார்கள். அதற்கு இப்போது சட்டமும் துணையாக வந்துநிற்கிறது. பிராமணர்களுக்கும் போஜனத்திற்கும் உள்ள தொடர்புக்கு ஏராளமான வரலாறுகள் இருக்கின்றன. பிராமண போஜன விருந்து போட்டால் அடுத்த ஜென்மத்தில் புண்ணியம் கிடைக்கும் என்று அந்த காலத்தில் பிராமண போஜனங்கள் நடந்தன. பெரியாரின் தந்தை கூட அப்படி பிராமண போஜனம் நடத்தியவர் தான். அந்த போஜன விருந்திற்கு ஒரு மோசடி பார்ப்பான் வந்தான். ஊரை ஏமாற்றிய அந்த...

அமலாக்கத்துறைக்கு கடும் கட்டுப்பாடு

அமலாக்கத்துறைக்கு கடும் கட்டுப்பாடு

கடந்த 10 ஆண்டுகளில் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பல்வேறு திருத்தங்களை செய்திருக்கிறது. பணமோசடியின் வரையறை மாற்றப்பட்டது. பிரிவு 19-இன் கீழ் அமலாக்கத்துறைக்கு கைது செய்வதற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்துக்கு பிறகு சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடை சட்டம் ஆளும் கட்சிக்கு வேண்டாத எதிர்க்கட்சியினர், தொழிலதிபர்கள் மீது அதிகம் பாய்ந்திருக்கிறது. இந்த நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், அந்த சட்டத்தின் பிரிவு 45ன் கீழ் ஜாமீன் பெறுவதற்கான இரட்டை நிபந்தனைகள் என்பது பொருந்தக் கூடியதா என்று தெரிவிக்க வேண்டும் என்று ஜலந்தரை சேர்ந்த தர்சம் லால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. “ஜாமீன்...

யானையின் மதம்

யானையின் மதம்

தெருவில் யானை வருகிறது என்றால் அவ்வளவுதான் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். ஆண், பெண் அனைவரும் வீதிக்கு ஓடிவந்துவிடுவார்கள். யானை மணியோசையுடன் நடந்து செல்லும் அழகே அழகு. அந்த கம்பீரமான யானைகள் இப்போது வாழ்வுரிமைக்கு போராடுகிறதே சார் என்றார் நண்பர் ஒருவர்… உண்மைதான், போர்க்களத்தில் நின்ற யானைகள் இப்போது வாழ்விடங்களை பறிகொடுத்து நிற்கின்றன. கூட்டம் கூட்டமாக சென்று இனப்பெருக்கம் செய்ய வேண்டிய யானைகள் ஏன் பாதைத் தடுமாறுகின்றன. அதற்கு மனிதர்களின் ஆக்கிரமிப்புகள் தான் காரணம். இந்தியா முழுவதும் 150 யானை வழிப்பாதைகள் இருப்பதாகவும், அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 26 வழிப்பாதைகள் இருப்பதாகவும் கடந்த ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது. ஆனால் தமிழ்நாடு அரசின் வனத்துறை தமிழ்நாட்டில் மொத்தம் 42 வழிப்பாதைகள் இருப்பதைக் கண்டறிந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாதிக்கும் மேற்பட்ட யானை வழிப்பாதைகளை கண்டறியாமல் போய்விட்டதா? என்று தெரியவில்லை. யானைகள் இயற்கையோடு இணைந்தே வாழ்கின்றன. இரத்த அழுத்தம், மன அழுத்தம், கொரோனா, டைபாய்டு,...

ராகுல்– – மோடி நேரடி விவாதம்

ராகுல்– – மோடி நேரடி விவாதம்

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுர், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அஜித் பி ஷா மற்றும் பத்திரிகையாளர் என்.ராம் ஆகிய மூவரும் இணைந்து ராகுல்காந்திக்கும் நரேந்திர மோடிக்கும் நேரடி விவாதத்தை ஏற்பாடு செய்தனர். அந்த அழைப்பை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார். ஆனால் மோடி தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. இவர்கள் இருவரும் சந்தித்து உரையாடினால் எப்படி இருக்கும். ஒரு கற்பனை… ராகுல் : நமஸ்தே.. விவாதத்திற்கு வந்துட்டிங்களே.! சபாஷ்!! மோடி : விவாதமா? அதுக்கெல்லாம் நான் வரல, அப்படினா எனக்கு என்னென்னே தெரியாது. பத்து வருட நாடாளுமன்ற அனுபவத்தில சொல்றேன். நான் எந்த விவாதத்திலாவது பேசிருக்கேனா? சொல்லுங்க பாப்போம். வாய்ப்பில்லை ராஜா, சாரி இளவரசரே..! ராகுல் : அப்போ இங்க எதுக்கு வந்துருக்கீங்க, ஷோ நடத்தவா? மோடி : பயந்துக்கிட்டேனு நெனைச்சு மக்கள் உண்மையை புரிஞ்சுகிட்டாங்கன்னா, நான் விவாதத்துக்கு அஞ்சாத சிங்கம் என்று ஷோ காட்ட வந்துருக்கேன்.. ராகுல் :...

தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ! சிசிடிவி ஆதாரங்கள் கூட சேகரிக்கப்படாத அவலம்!

தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ! சிசிடிவி ஆதாரங்கள் கூட சேகரிக்கப்படாத அவலம்!

சமூக செயற்பாட்டாளரும், மகாராஷ்டிரா மூடநம்பிக்கை ஒழிப்புக் குழுவின் தலைவருமான நரேந்திர தபோல்கர் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி காலை நேரத்தில் புனேவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவருடைய மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகளுக்கு இந்துத்துவ அமைப்பான சனாதன் சன்ஸ்தா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இக்கொலை நடந்தது. தபோல்கர் கொலை வழக்கை முதலில் புனே போலீசார் விசாரித்தனர். பின்னர் பம்பாய் உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, 2014-ல் சிபிஐ விசாரணையை மேற்கொண்டது. இந்த வழக்கில் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் வீரேந்திரசிங் தவாடேவை 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிபிஐ கைது செய்தது. மேலும், சச்சின் அன்டுரே, ஷரத் கலாஸ்கர் ஆகியோர் தபோல்கரை சுட்டுக் கொன்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது. நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட அதே பாணியில் கோவிந்த் பன்சாரே (2015), கல்புர்கி (2015), கவுரி லங்கேஷ் (2017) என முற்போக்காளர்கள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்து மதத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்கு, மூட நம்பிக்கைகளுக்கு...

உடைந்து தொங்கும் மோடி பிம்பம்

உடைந்து தொங்கும் மோடி பிம்பம்

10 ஆண்டுகால மோடி ஆட்சியில் உலக நாடுகள் கண்டு அஞ்சுகிற அளவுக்கு மிகப்பெரிய வல்லாதிக்க சக்தியாக இந்தியாவை வளர்த்துவிட்டார் என பார்ப்பனக் கூட்டம் தங்களுக்கு தாங்களே குதூகலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் உலக நாடுகளின் புள்ளி விவரங்கள் அனைத்தும் மோடி ஆட்சி இந்தியாவின் இருண்ட காலம் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டிக்கொண்டிருக்கின்றன. • உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்த ஆண்டு இந்தியா 159வது இடத்துக்கு பின்தங்கிவிட்டதாக உலகளாவிய ஊடக கண்காணிப்பு நிருபர்கள் ஆய்வறிக்கை கூறுகிறது. தரவரிசையில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கையே 176-தான். இந்த பட்டியலில் 2022ஆம் ஆண்டில் 150-வது இடத்தில் இந்தியா இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. • 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச வறுமைக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 111-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. மொத்த நாடுகளின் எண்ணிக்கை 125. இந்த பட்டியலிலும் முந்தைய ஆண்டில் இந்தியா 107-வது இடத்தில் இருந்தது. • 2022ஆம் ஆண்டு...

நஞ்சு விதைக்கும் மாதவி!

நஞ்சு விதைக்கும் மாதவி!

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் ஐதராபாத் தொகுதியில் போட்டியிடுபவர் மாதவி. இவர், தேர்தல் பிரசாரத்தின் போது மசூதியை நோக்கி அம்பு விடுவது போல செய்கை செய்து வெறுப்பு அரசியலை தூண்டியதுடன், அது சர்ச்சையானதும் ‘’நான் மசூதியை பார்த்து அம்பு விடவில்லை’ என்று பின்வாங்கினார். இவரை சமீபத்தில் ஊடகர் பர்கா தத், ஒரு பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில் இடஒதுக்கீடுக்கு எதிரான வன்மத்தையும், இட ஒதுக்கீட்டில் பாஜக அரசியல் நிலையையும் தெளிவுபடுத்துகிறார் மாதவி. அரசியலுக்கு எப்படி வந்தீர்கள் என்கிற கேள்விக்கு, “தான் ஏழ்மையான சூழலில் வளர்ந்தேன். ஆனால், எஸ்.சி, எஸ்.டி இல்லை. கல்லூரியில் எனக்கு எந்த உதவித்தொகையும் கிடைக்கவில்லை. நான் படித்துக்கொண்டே பல்வேறு வேலைகளை செய்து என்னுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொண்டேன். அதேநேரத்தில், பொருளாதாரத்தில் வசதியான தாழ்த்தப்பட்ட மாணவனுக்கு கல்வி உதவித்தொகை கிடைத்தது. அதை அறிந்த நேரத்தில்தான் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் வலுவாக தோன்றியது’’ என்று கூறுகிறார் மாதவி. வசதி...

இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது! பெரியாரியலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது! பெரியாரியலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒருபோதும் எதிர்த்ததில்லை. பாகுபாடுகள் அகற்றப்படாத வரையில், இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்க வேண்டும். தேவை இருக்கும் வரை இடஒதுக்கீட்டை தொடர வேண்டும்” என்று பேசியிருக்கிறார். இடஒதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டுமென்று மோகன் பகவத் ஏற்கெனவே பேசிய காணொளி ஒன்று, தற்போது தேர்தல் சமயத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து இக்கருத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடே இருக்காது என்ற காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்துக்கு அசாம் மாநிலம் கவுகாத்தியில் பதிலளித்திருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “எஸ்.சி.,, எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினரின் இடஒதுக்கீட்டை பாஜக என்றைக்கும் ஆதரிக்கும். அவர்களின் உரிமையை என்றைக்கும் பாதுகாப்போம்” எனக் கூறியுள்ளார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்., பாஜக இரண்டுமே கடந்த காலங்களில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உறுதியாகச் செயல்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் 2015ஆம் ஆண்டில் ‘தி இந்து’ ஊடகத்திற்கு பேட்டி அளித்த...

ரூ.12,000 கோடிக்கு மேல் சுருட்டிய பாஜக அடுத்தடுத்து அம்பலமாகும் மெகா ஊழல்கள்!

ரூ.12,000 கோடிக்கு மேல் சுருட்டிய பாஜக அடுத்தடுத்து அம்பலமாகும் மெகா ஊழல்கள்!

அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை மூலம் நிறுவனங்களை மிரட்டி தேர்தல் பத்திர திட்டம் மூலம் ரூ.12,000 கோடிக்கு மேல் ஒன்றிய பாஜ சுருட்டிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து, ‘பிஎம் கேர்ஸ்’ நிதித் திட்டம் மூலம் பாஜ செய்த முறைகேடுகளை முழுமையாக வெளிக் கொணர வேண்டும் என எதிர்க்கட்சிகள் சட்டப்போராட்டத்தைத் துவக்கியுள்ளன. தேர்தல் பத்திர திட்டம் மூலம் திரட்டிய நிதி விவரத்தை மறைக்க ஒன்றிய பாஜ அரசும், பாரத ஸ்டேட் வங்கியும் சேர்ந்து எந்த அளவுக்கு முட்டுக்கட்டை போட்டனவோ, அதைவிட தீவிரமாக பிஎம் கேர்ஸ் திட்ட நிதி விவரத்தை மறைக்க முயற்சி செய்து வருகிறது பாஜ. இது தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்கள் நோட்டீஸ் அனுப்பியும் ஒன்றிய அரசு வாய் திறப்பதாக இல்லை. நீதித்துறையையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதை போல, எந்த நோட்டீசுக்கும் முறையான பதில் தராமல் அலட்சியம் காட்டி வருகிறது. கொரோனா தொற்று இந்தியாவில் பரவியது 2020 ஜனவரி 30ம் தேதி...