காணாமல்போன கடவுள் சக்தி -கோடங்குடி மாரிமுத்து
கடவுள் இல்லை; எங்கே கடவுள் சக்தி? என்று நாத்திகர்கள் பேரணி நடத்துகிறார்கள் என்பதற்காக எந்த கடவுளும் கொந்தளிக்கவில்லை. “இதோ அவதாரம் எடுத்து சம்ஹாரம் செய்கிறேன்,பார்!” என்று ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு ஓடி வரவில்லை. சரி, போகட்டும்;கொளத்தூர் கழக மகளிர் கனவில் வந்தாவது மிரட்டி இருக்கலாம் அதற்கும் தயாராக இல்லை உண்மையில் கொந்தளித்தது யார் தெரியுமா? கொளத்தூர் காவல்துறை தான். “அய்யோ கடவுள் எதிர்ப்புக்கு நாங்கள் அனுமதி தர முடியுமா? அது பாவமல்லவா?” என்பதற்காக காவல்துறை கொந்தளிக்கவில்லை. “சங்கிகள் கூச்சல்களை சந்திக்க வேண்டியிருக்குமே என்பதுதான் அவர்களின் பயம். “என்னை எதிர்ப்பவருக்கு பேரணி நடத்த அனுமதிக்காதே! அழித்துவிடுவேன்” என்று ஏதேனும் ஒரு காவல் அதிகாரி கனவில் வந்தாவது கடவுள் மிரட்டி இருக்கலாம் அதுவும் இல்லை” அப்படி எதுவும் நடக்காமலேயே கடவுள் பக்தியோ, பக்தர்களின் மனம் புண்படும் செயல்களையோ நிகழ்த்த மாட்டோம் என்று எழுதிக் கேட்டது காவல்துறை. “எதற்கு நாங்கள் எழுதித் தர வேண்டும்; கடவுளைப்...