Category: தலைமை அறிக்கை

பெரியார் பல்கலை.பேராசிரியர் கதிரவனை பொறுப்பில் இருந்து நீக்குக!

பெரியார் பல்கலை.பேராசிரியர் கதிரவனை பொறுப்பில் இருந்து நீக்குக!

தமிழக அரசுக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கோரிக்கை! இது குறித்து கழகத் தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஆட்சிக் குழு உறுப்பினர் நிர்வாகப் பதவியில் பொறுப்பு வகிப்பதா? துணை வேந்தரின் செயலுக்குக் கண்டனம். ஆட்சிக் குழு பதவிக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார் உளவியல் துறை பேராசிரியர் கதிரவன்” ஆட்சிக் குழு உறுப்பினர் என்பது நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் கொடுக்கும் ஒரு அமைப்பாகும். அவ்வாறான ஆட்சிக்குழுவில் உள்ளவரே கையெழுத்திட்டு பணி இடை நீக்க ஆணையைப் பேராசிரியர் வைத்தியனாதனுக்கு வழங்கி விட்டு இவரே எப்படி ஆட்சிக் குழுவில் ஒப்புதல் தர முடியும்? இந்த முறைகேட்டால் பேராசிரியர் கதிரவன் ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற தகுதியை இழந்து விட்டார். இவரை உடனடியாக ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். மேலும் சேலம் பெரியார் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் வைத்தியநாதன் தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவாலின்...

மே.18 கொண்டாட்ட நிகழ்வு தள்ளிவைப்பு!

மே.18 கொண்டாட்ட நிகழ்வு தள்ளிவைப்பு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மே18 அன்று திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் நட்சத்திர இசை திருவிழா கன்னிகுமரியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி கீழ்க்கண்ட அறிக்கையை விடுத்து இருந்தார். துயர மிகுந்த இந்த நாளில் இவ்வாறான கொண்டாட்டத்தை நடத்துவது இன உணர்வுமிக்க தமிழர்களின் உணர்வுகளைப் பதறவைக்கும் ஒன்றாகும். அந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களை இதனை வேறு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டுமாறு முதற்கட்டமாக கனிவுடன் கோருகிறோம் என்று குறிப்பிட்டுருந்தார். அதனை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர்‌ நாசர்‌ இதில் தலையிட்டு நிகழ்ச்சியை தள்ளி வைக்க முயற்சிகளை எடுத்தார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டது. இத்தகவலை திரு நாசர் கழக தலைவருக்கு கடிதமாக எழுதியுள்ளார். இன‌முரசு சத்தியராஜ் இந்த கடிதத்தை கழக தலைவருக்கு அனுப்பியுள்ளார். இதற்கு நன்றி தெரிந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்ட அறிக்கையில்: ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் கழகத்...

கழகத் தலைவருக்கு சீர் விருது

கழகத் தலைவருக்கு சீர் விருது

சீர் வாசகர் வட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு 2025 ஆண்டுக்கான‌ சமூக போராளி விருது வழங்குகிறது. விருது தொகை ரூ. 1,00,000 இது தொடர்பாக சீர் வாசகர் வட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் போராட்ட களங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாய் முதல் வரிசையில் நிற்கும் முன்கள வீரர் என்று பாராட்டி உள்ளது.வாசகர் வட்டத்தின்‌ அறிக்கை: சாதி ஒழிப்பு, சமூகநீதி, பாலின சமத்துவம், பகுத்தறிவுப் பரப்புரை, சுரண்டல் எதிர்ப்பு என மானுட விடுதலைக்கான அனைத்துத் தளங்களிலும் போராட்டக் களங்களிலும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் முதல் வரிசையில் நிற்கும் முன்கள வீரர். இட ஒதுக்கீட்டு வரலாறு, விடுதலை வேட்கை, தமிழர் பண்பாடு, பெரியாரும் தனித்தமிழ்நாடும், பெரியாருக்கு எதிரான முனை மழுங்கும் வாதங்கள் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தமிழர், தமிழ்நாடு நலன்சார்ந்த போராட்டங்களுக்காக எண்ணற்ற முறை சிறை சென்றவர். சட்டத்தை விட நியாயமே மேலானது என்பதை உரத்துச் சொல்பவர். தன் பேச்சையும் மூச்சையும்...

“சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை வேண்டும்     தமிழ்நாடு முதல்வருக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை !”

“சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை வேண்டும் தமிழ்நாடு முதல்வருக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை !”

இது குறித்து கழகத் தலைவர் “கொளத்தூர் மணி” அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இந்தத் தீர்ப்பின் வழியாக தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் என்பதோடு, ஆளுநரின் அதிகார வரம்புகள் என்ன என்பது குறித்தும், ஒப்புதல் வழங்குவதற்கான கால வரையறை குறித்தும் இந்த தீர்ப்பு தெளிவுபடுத்தி இருக்கிறது. இந்தத் தீர்ப்பினால் மும்மொழிக் கொள்கை ஆனாலும், நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை ஆனாலும் வழிகாட்டி மாநிலமாக திகழும் தமிழ்நாடு, அதன் செயல்திறன் மிக்க முதலமைச்சர் இந்த வகையிலும் இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், குறிப்பாக ஒன்றிய ஆளுங்கட்சி ஆளாத மாநிலங்களுக்கு ஒரு புதிய தெம்பினை ஊட்டி இருக்கிறார். அதற்காக நாம் தமிழ்நாடு முதலமைச்சரை மனம் நெகிழ்ந்து பாராட்டுகிறோம். மேலும் இந்தத் தீர்ப்பு ஒப்புதல் வழங்கிய சட்ட த்தின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் முதல்வரே ஆகிவிடுகிறார்...

பெரியார் முழக்கம் சந்தாக்களை விரைந்து அனுப்புவீர்…

பெரியார் முழக்கம் சந்தாக்களை விரைந்து அனுப்புவீர்…

புரட்சிப் பெரியார் முழக்கம் ஆண்டு சந்தா : ரூ.300/- ஐந்தாண்டு சந்தா : ரூ.1500/- தொடர்புக்கு : 15. தோழமை, வெங்கடேஸ்வரா நகர், பெருங்குடி, சென்னை – 600096. பேச : 63697 76351. பெரியார் முழக்கம் 03042025இதழ்

இன‌ ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடு!

இன‌ ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடு!

காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி பெங்களூருவில் கடந்த ஜனவரி 19-ம் தேதி நடந்த ‘பிராமண’ மாநாட்டில் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்டுள்ள இன ஒதுக்கல் (Apartheid) என்ற சட்ட விரோதக் கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். ‘பிராமணர்கள்’ என்பது வர்ணாசிரமத்தின் அடையாளமாகும். ஜாதி அடையாளம் அல்ல. அய்யர், அய்யங்கார் என்பது ஜாதி. ‘பிராமணர்’ என்ற வர்ணாசிரம அடையாளத்தைப் பேசினால் இந்து மதத்தின் பிற பிரிவினரை சூத்திரர், பஞ்சமர் என்று இழிவுபடுத்துவதாகும். அந்த அடிப்படையில் விளிம்பு நிலை மக்களான சூத்திரர் பஞ்சமர்களோடு பிராமணர்கள் கலந்து வசிக்கக் கூடாது; தனிக் குடியிருப்பு வேண்டுமென்று பேசி இருப்பது சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ள இன ஒதுக்கல் கொள்கையே ஆகும். இது சர்வதேச குற்றம். சமத்துவபுரம் வேண்டுமென்று வலியுறுத்தும் தமிழ்நாட்டில் ‘அக்ரகாரம்’ வேண்டுமென்று சங்கராச்சாரி பேசியிருக்கிறார். இதைக் கண்டித்து சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மயிலாடுதுறையில் கடந்த மார்ச் 22-இல் கூடிய திராவிடர் விடுதலைக் கழக மாநாடு தீர்மானம்...

நூல் வெளியீடு !

நூல் வெளியீடு !

“ஆரிய மாடலா? திராவிட மாடலா?” திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் தோழர் “விடுதலை இராசேந்திரன்” அவர்களின் எழுத்தாக்கத்தில் கருத்து செறிவு மிகுந்த கட்டுரைகள்,வரலாற்று தகவல்கள், நிகழ்கால அரசியல் பார்வைகள்……(கெட்டி அட்டையில்) முன்பதிவு செய்வோருக்கு சலுகை விலையில் ரூ.300/- (ரூபாய் முன்னூறு மட்டும்) (தபால் செலவு ரூ.50 தனி) “பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்?” பரப்புரைப் பயணத்தின் போது (மார்ச் 15 முதல் மார்ச் 22 முடிய) முன்பதிவு செய்யப்படும்.முன்பதிவிற்கு அலைபேசி எண் : 94986 56683 – இந்த எண்ணில் GPay செய்து விட்டு வாட்ஸ் அப்பில் முன்பதிவு செய்யவும். பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டில் சிறப்பு வெளியீடாக இந்நூல் வெளியிடப்படுகிறது. முன்பதிவு செய்வோருக்கு மாநாட்டு திடலில் புத்தகங்கள் வழங்கப்படும். நாள் : 22.03.25 சனி நேரம் : மாலை 04.00 மணி இடம் : சின்னக் கடைவீதி, மயிலாடுதுறை. – நிமிர்வோம் வெளியீடு, 15.03.2025

மயிலாடுதுறையில் திரள்வோம்!

மயிலாடுதுறையில் திரள்வோம்!

தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் பார்ப்பனிய மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் இருந்து பெரியாரைக் அகற்றினால் தான் காலூன்ற முடியும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். இதற்காக சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் பெரியாரை எதிர்த்துப் பேசுகிறார், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பெரியார் மீது அவதூறுகளை பேசுகிறார்,‌ தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் சங்கிகள் ஒவ்வொரு நாளும் அவதூறுகளை வீசுகின்றனர். இதற்காக நாம் தமிழர் கட்சியின் சீமான் சங்கிகளின் கைப்பாவையாக களம் இறக்கப்பட்டுள்ளார். பெரியார் எதிர்நீச்சலில் வளர்ந்த தலைவர்; இந்த எதிர்ப்புகள் பெரியார் கருத்துக்களை மேலும் வலிமைப்படுத்தவே செய்யும் அதற்கான களங்களை பெரியாரியத் தொண்டர்களாகிய நாம் உருவாக்க வேண்டும். இந்த வரலாற்றுக் கடமையை முன்னெடுக்கவே இந்த பரப்புரைப் பயணத்தைத் தொடங்கி உள்ளோம். இதன் நிறைவு மாநாடு மயிலாடுதுறையில் மார்ச் 22 -ல் நிகழ இருக்கிறது. எதிரிகளைச் சந்திக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை இந்த மாநாட்டில் நாம் முடிவெடுப்போம். பெரியாரியலுக்கு எதிராக எழுந்துள்ள சவால்களை சந்திக்க...

பெரியார் பல்கலை.யில் விக்சிட் பாரத்-2047 கருத்தரங்கு-திராவிடர் விடுதலைக் கழகம்

பெரியார் பல்கலை.யில் விக்சிட் பாரத்-2047 கருத்தரங்கு-திராவிடர் விடுதலைக் கழகம்

இதுதொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி 06.03.2025 அன்று விடுத்துள்ள அறிக்கை: “மும்மொழிக் கொள்கை, பாராளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு போன்ற பிரச்சனைகளை ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நிலையில் ஒன்றிய அரசின் திட்டமான ‘விக்சிட் பாரத் வளரும் இந்தியா 2047’ தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வரும் மார்ச் 10 மற்றும் 11-ஆம் தேதி கருத்தரங்கு ஏற்பாடு செய்ததை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. பதிவாளர் தேர்வு, அலுவலர் பதவி உயர்வு, புதிய பணி நியமனம், விதிகளுக்கு புறம்பாக நூலகர், உடற்கல்வி இயக்குநர் நியமனம் போன்ற பிரச்சனைகளிலிருந்து, ஒன்றிய அரசு தன்னை காப்பாற்றுவதற்காக இந்த கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர் வரும் மே 19 உடன் பணியிலிருந்து விடுபட உள்ளார். தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவே இந்த கருத்தரங்கை நடத்த முடிவு செய்துள்ளார். ஆர்எஸ்எஸின் கூடாரமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மாறுவதை தமிழ்நாடு...

ஏன் இந்த பரப்புரைப் பயணம்?

ஏன் இந்த பரப்புரைப் பயணம்?

தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி சமுதாய இயக்கமாக தமிழர் நலனுக்காக அரை நூற்றாண்டுக்கு மேலாக ஓயாது உழைத்தவர் பெரியார். ஜாதிய ஏற்றத்தாழ்வு இல்லாத, பாலினப் பாகுபாடு இல்லாத ஒரு சமத்துவ சமூகம் மலர வேண்டும் என்று தன் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டு பாடுபட்டவர் பெரியார். மக்கள் ஆதரிப்பதைப் பேசி, அவர்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு மாறாக மக்கள் பின்பற்றிய மூடத்தனங்களை மிகக் கடுமையாக எதிர்த்தவர் பெரியார். தன் மீது கல், முட்டை, செருப்பு போன்றவை வீசப்பட்டபோது கூட ஓடி ஒளிந்து கொள்ளாமல், தனக்கு சரியெனப்பட்டதை வெளிப்படையாகப் பேசியவர் பெரியார். குடலிறக்க வலியோடும், மூத்திரச் சட்டியோடும் வாழ்நாளின் கடைசிவரை தமிழ் மக்களின் தன்மானத்திற்காகப் பேசியவர் பெரியார். கல்வி எட்டாக்கனியாக இருந்த தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி ஒரு நூற்றாண்டில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு உருவாகக் காரணம் பெரியார். எல்லாவற்றுக்கும் மேலாக சுயமரியாதைச் சிந்தனையைத் தமிழர்களுக்குக் கடத்தியவர் தந்தை பெரியார். ஆனால் இன்றைக்குப் பெரியாரைக்...

பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?-வாங்க வரலாறு பேசுவோம்

பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?-வாங்க வரலாறு பேசுவோம்

வாங்க வரலாறு பேசுவோம்…பரப்புரைப் பயணம் இப்போதைய பேசுபொருளாய் எதிர்மறையாய் உருவாக்கப்பட்டிருக்கிற அரசியல் சூழலை, நேர்மறையாய் எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாட்டின் நான்கு முனைகளில் இருந்து பரப்புரை பயணம் நடத்துகிறது. நிறைவாக மயிலாடுதுறையில் மாநாடு நடைபெறவுள்ளது. ஏனென்றால், பெரியார் மறைந்து அரை நூற்றாண்டுகளைக் கடந்துவிட்டோம். இப்போதும் தமிழ்நாட்டின் விவாதப் பொருள் பெரியாரை சுற்றியே இருக்கிறது. தமிழ்நாட்டின் எல்லா போராட்டக் களங்களிலும் பெரியார் இடம்பெறுகிறார், அவரது கருத்துக்கள் பேசப்படுகின்றன. தமிழ்நாட்டை ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் இந்தித் திணிப்புக்கு எதிராக அரண்போல நிற்கிறார் பெரியார். மதவாத சக்திகள் தமிழ்நாட்டை வன்முறைக்காடாக்க முயற்சிக்கும் களங்களில் சமத்துவ நெருப்பாக அவர்களின் எண்ணத்தை சுட்டுப் பொசுக்குகிறார் பெரியார். பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களைக் கல்வியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று துடிக்கும் வருணாசிரமாவதிகளுக்கு தமிழ்நாட்டில் மரண அடி கொடுத்து எதிர்த்து நிற்கிறது பெரியார் விதைத்துவிட்டுச் சென்ற கல்வி குறித்தான விழிப்புணர்வு சிந்தனைகள். பெரியாரை எப்படி எதிர்கொள்வது என்றே...

புரட்சிப் பெரியார் முழக்கம்

புரட்சிப் பெரியார் முழக்கம்

ஆண்டு சந்தா : ரூ.300/- ஐந்தாண்டு சந்தா : ரூ.1500/- தொடர்புக்கு : 15. தோழமை, வெங்கடேஸ்வரா நகர், பெருங்குடி, சென்னை – 600096. பேச : 63697 76351, முழக்கம் தொடர்பான சந்தேகங்களுக்கு மேற்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல் : newsdvk@gmail.com. பெரியார் முழக்கம் 20022025 இதழ்

புதியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் பெரியார் பல்கலைக்கழகம்

புதியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் பெரியார் பல்கலைக்கழகம்

“ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் அறிமுகமா? திராவிடர் விடுதலைக் கழகம் கேள்வி!” இது குறித்து கழகத் தலைவர் தோழர் “கொளத்தூர் மணி” அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : சேலம் பெரியார் பல்கலைக் கழகம் அண்மையில் வெளியிட்ட முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு கையேட்டில் முனைவர் பட்ட படிப்பில் சேர அடிப்படை கல்வி தகுதியாக 10+2+3+2 அல்லது 12+1+3+2 அல்லது 10+2+4 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைப் படி இளநிலைப் பட்டப் படிப்பு மூன்று ஆண்டுகளுக்கு பதிலாக 4 ஆண்டுகளாக மாற்றம் செய்யப் பட்டுள்ளதை சேலம் பெரியார் பல்கலைக் கழகம் தனது முனைவர் பட்ட சேர்க்கை வழிகாட்டியில் சேர்த்துள்ளது. முதுநிலை பட்டப் படிப்பை முனைவர் பட்டத் தகுதியிலிருந்து நீக்கி உள்ளது. இது பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டலில் உள்ளதாகும். அதாவது முதுநிலைப் பட்டப் படிப்பு இல்லாமலும் முனைவர் பட்டப் படிப்பில்...

கல்வி உரிமையைப் பறிக்காதே! யு.ஜி.சி.யைக் கண்டித்துக் கழகம் ஆர்ப்பாட்டம்

கல்வி உரிமையைப் பறிக்காதே! யு.ஜி.சி.யைக் கண்டித்துக் கழகம் ஆர்ப்பாட்டம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவிப்பு! ஒன்றிய அரசே ! கல்வி உரிமையைப் பறிக்காதே ! இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்காதே! ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து நம் மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள், விதிகளில் திருத்தங்களை செய்து அறிவித்து வருகிறது.சமீபத்தில் UGC விதிகளில் திருத்தம் செய்து புதிய விதிகளை ஒன்றிய பாஜக அரசு வெளியிட்டுள்ளது. அது மாநிலக் கல்வி உரிமைகளைப் பறிக்கும் வண்ணம் குறிப்பாக தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பைச் சிதைக்கும் வகையில் உள்ளது. மேலும் இந்த புதிய விதிகளில் உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழிக்கும் திட்டத்துடன் திருத்தங்களை செய்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. “எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே” எனும் சனாதன தர்மத்தை சட்டப்படியே நிறைவேற்ற துடிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் எதிர்வரும் பிப்.13ஆம் தேதி வியாழக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒத்த கருத்துள்ள...

விடுதலை இராசேந்திரனுக்கு அரசின் ‘தந்தை பெரியார்’ விருது!

விடுதலை இராசேந்திரனுக்கு அரசின் ‘தந்தை பெரியார்’ விருது!

தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் விருது – படிக்கராமு பேரறிஞர் அண்ணா விருது – எல்.கணேசன் பாவேந்தர் பாரதிதாசன் விருது – பொ.செல்வராஜ் பாரதியார் விருது – கவிஞர் கபிலன் திரு.வி.க. விருது – டாக்டர் ஜி.ஆர்.ரவிந்திரநாத் அண்ணல் அம்பேத்கர் விருது – துரை.ரவிக்குமார் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது – பொதியவெற்பன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது – முத்து வாவாசி பொதுச்செயலாளருக்கு விருது வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கழக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

“பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார் ?”

“பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார் ?”

As “மாநாட்டுத் தீர்மானங்கள் !” திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார் ?” “வாருங்கள் வரலாறு பேசுவோம்!!” பரப்புரை பயணத்தின் நிறைவு மாநாடு மயிலாடுதுறை – 22.03.2025 . மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : தீர்மானம் எண் 1 : “தமிழர்களின் தன்மான மீட்பர் தலைவர் பெரியார் மீது அவதூறுகளை வீசி, தமிழ்நாட்டில் அவரைத் தனிமைப்படுத்தலாம் என்ற சதித்திட்டத்தை முறியடிக்கவும்.அந்தத் துரோகக் கும்பலின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, மக்களிடத்தில் பெரியாரைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழகம் இந்த பயணத்திற்குத் திட்டமிட்டது. தன்னல மறுப்போடு, பெரியார் லட்சியத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் இந்த பயணத்தில் பங்கேற்றனர். கொளுத்தும் வெயிலில் தங்களை வருத்திக் கொண்டு நாள் ஒன்றுக்கு குறைந்தது நான்கு கூட்டங்கள் வழியாக பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்துப் பரப்புரை, நூல் விற்பனை, நிதி திரட்டல் என்ற பணிகளை ஏற்று பெரியார் பணி...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.12.2024 அன்று மேட்டூரில் நடந்த செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.12.2024 அன்று மேட்டூரில் நடந்த செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.12.2024 அன்று மேட்டூரில் நடந்த செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தீர்மானம் 1 பெரியார் அடையாளப்படுத்திய ஆரிய திராவிட போராட்டம் இப்போது மனு நீதி எதிர் சமூக நீதி, ஹிந்து இராஷ்ட்ரம் எதிர் அரசியல் சட்டம் என்று வடிவெடுத்து இருக்கிறது. ஒன்றிய பாஜக ஆட்சி பெரும்பான்மை அற்ற நிலையிலும் பார்ப்பனிய மனுவாத சீரழிவுக் கொள்கையை நோக்கி நாட்டை இழுத்து செல்கிறது. இதற்கு எதிரான தத்துவார்த்த போராட்டம் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது, திராவிட மாடல் ஆட்சி தான் இதைத் தடுத்து நிறுத்தும் வலிமைபெற்ற அரணாக நிற்கிறது. அதை சீர்குலைக்க எந்தவித முறைகேடுகளையும் பயன்படுத்தி அகற்றுவதற்கு தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. திராவிட மாடல் ஆட்சியின் இருத்தல் என்பது பார்ப்பனிய ஹிந்து இராஷ்டர முறியடிப்புக்கான தேவையாகவும் அவசியமானதாகவும் வரலாறு கோரி நிற்கிறது. இந்த அடிப்படை கருத்தை கவனத்தில் கொண்டு அரசுக்கு வலிமை சேர்க்க வேண்டிய அவசியத்தை இந்த செயலவை வலியுறுத்துகிறது. இந்த...

தமிழ்நாட்டின் கல்வி உரிமையைப் பாதுகாத்திட மாவட்டத் தலைநகரங்களில் கழகம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டின் கல்வி உரிமையைப் பாதுகாத்திட மாவட்டத் தலைநகரங்களில் கழகம் ஆர்ப்பாட்டம்

மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்! எனும் முழக்கத்தோடு தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்! கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை! அன்பு தோழர்களுக்கு, வணக்கம். அண்மைக் காலமாக ஒன்றிய அரசும் ஒன்றிய அரசின் முகவராக தமிழ்நாட்டில் செயல்படும் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். ரவியும் கல்வியில் முன்னேறி உள்ள தமிழ்நாட்டின் கல்வி நிலையைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒன்றிய அரசின் கல்வித் துறை இந்த ஆண்டு கல்வி நிலையங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் சிறந்த பல்கலைக் கழகங்கள் 100இல் 22 தமிழ்நாட்டில் இருப்பதையும், சிறந்த கல்லூரிகள் 100இல் 37உம், சிறந்த பொதுப் பல்கலைக் கழகங்கள் 50இல் 10உம், சிறந்த 100 பொறியியல் கல்லூரிகளில் 13உம், சிறந்த ஆய்வு நிறுவனங்கள் 50இல் 9உம் தமிழ்நாட்டில் இருப்பதை...

கழகத் தலைவரின் சுற்றுப்பயணம் தொடங்கியது போதைக்கு எதிரான பரப்புரைக்குத் தயாராக அறிவுரை

கழகத் தலைவரின் சுற்றுப்பயணம் தொடங்கியது போதைக்கு எதிரான பரப்புரைக்குத் தயாராக அறிவுரை

19.07.2024 அன்று தலைமைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கழகத் தலைவரின் மாவட்ட வாரியான சுற்றுப்பயணம் சென்னையில் தொடங்கியது. சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 04.08.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. முதல் நிகழ்வாக அண்மையில் மறைந்த கழகச் செயல்வீரர் மதிவாணன் அவர்களின் படத்தைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். பின்னர் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவரது மகன் தமிழரசன் மாவட்டக் கழக வளர்ச்சி நிதியாக ரூ.5000/- வழங்கினார். மேலும் தற்போது போதைப்பொருள் கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் சூழலில் அதற்கு எதிரான பரப்புரைகளைக் கழகத் தோழர்கள் திவிரமாக மேற்கொள்ள வேண்டும் எனக் கழகத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார். கழகப் பொதுச்செயலாளர் பேசுகையில் ஊடகங்களும், பத்திரிகைகளும்...

அமைச்சர் ரகுபதியின் பேச்சுக்கு கழகம் கண்டனம்!

அமைச்சர் ரகுபதியின் பேச்சுக்கு கழகம் கண்டனம்!

தமிழ்நாட்டின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுச்சேரியில் நடைபெற்ற கம்பன் விழாவில் கலந்துகொண்டு திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடியே இராமன் தான் என்று பேசியுள்ளார். பெரியார், அண்ணா, கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசுகிற சமத்துவம் – சமூகநீதிக் கொள்கையை அன்றைக்கே பேசியவர் இராமன். எனவே இராமன் தான் திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடியாக திகழ்கிறார் என்று பேசியுள்ளார். இந்த பேச்சு மிகவும் அதிர்ச்சிகரமான, திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்தங்களையே சீர்குலைக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. மிகவும் அபத்தமான மனுவாத சிந்தனைகளை விதைக்கக் கூடிய ஒரு பார்ப்பன உரை என்றுதான் இவரது பேச்சைக் குறிப்பிட வேண்டும். திராவிட மாடல் ஆட்சிக்கும் இராமாயணத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஆரியத்தை எதிர்த்து தான் திராவிடமே வந்தது. ஆரியம் கொண்டாடுகிற காவியங்களில் ஒன்று இராமாயணம். அதனால் தான் இந்துத்துவா சக்திகள் இராமனை தேசிய நாயகனாக மாற்றத் துடிக்கிறார்கள். இந்துத்துவா, பார்ப்பனிய சக்திகளுக்கு இராமன் தேசிய நாயகன். ஆனால் திராவிட...

பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு கண்டனம்

பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு கண்டனம்

சேலம் பெரியார் பல்கலைக் கழக தொழிலாளர்கள் 77 பேருக்கு கருத்துக்கேட்பாணை‌ வழங்கிய துணைவேந்தர் மற்றும் பதிவாளர் (பொ) விஸ்வநாதமூர்த்திக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்! உத்தரவை உடனே திரும்பப் பெற வலியுறுத்தல்! இதுகுறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள அறிக்கை : சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தரின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்தும், அரசு இருமுறை அறிவுறுத்தியும் பதிவாளர் மீது பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்காதத் துணைவேந்தரைக் கண்டித்து ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் இணைந்து தொடர் போராட்டங்களைப் பணி நேரத்திற்கு முன்பும் பின்பும் மாணவர்களின் கல்வியைப் பாதிக்காத வண்ணம் அறவழியில் நடத்தின. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத துணை வேந்தர் போராட்டம் நடத்திய 77 பேரையும் மிரட்டும் வகையில் காரணக் கேட்பு கடிதம் அனுப்பி உள்ளார். இது போராட்டங்கள் நடத்துவதை ஒடுக்கும் செயலாகும். காரணக் கேட்புக் கடிதம் கொடுத்த பதிவாளர் யார் எனில், பதிவாளர் பதவிக்குத்...

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுக! சென்னையில் கூடிய தலைமைக்குழுவில் முடிவு

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுக! சென்னையில் கூடிய தலைமைக்குழுவில் முடிவு

கழகத் தலைமைக்குழு கூட்டம் 19.07.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இத்தலைமைக்குழு கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தலைமைக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கழகத்தின் அடுத்த கட்ட செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கழகத் தலைவர், கழகப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் கருத்துக்களை, ஆலோசனைகளை குழுவின் முன்பு வைத்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. • ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு தமிழ்நாட்டு அரசு தனியாக “ஜாதி ஆணவப் படுகொலைத் தடுப்புச் சட்டம்” ஒன்றை நிறைவேற்றுவது அவசியம் என்று தலைமைக்குழு கருதுகிறது. இதனை தமிழ்நாட்டு அரசிற்கு கோரிக்கையாக வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. • பள்ளி கல்லூரிகளில் ஜாதி, மதப் பாகுபாடுகளைக் களையவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும் அரசுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க...

‘அறிவுஜீவி ஆம்ஸ்ட்ராங்’

‘அறிவுஜீவி ஆம்ஸ்ட்ராங்’

பெரும் மதிப்பிற்குரிய பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தோழர் ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதக் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் வளர்ந்து வரும் இளம் தலைவர் ஆவார். நம்முடைய பார்வையில் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் ஒரு ‘அறிவு ஜீவி’ அவர் பவுத்தத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும், அம்பேத்கரியத்தை முழுமையாக கற்றறிந்து அதில் கரைதேர்ந்தவர் ஆவார். அம்பேத்கர் எந்த அத்தியாயத்தில் என்ன பேசியிருக்கிறார் என்பதை நினைவில் வைத்து பேசக்கூடிய அளவுக்கு ஆற்றல் வாய்ந்தவர் தோழர் ஆம்ஸ்ட்ராங். அவர் ஒரு அரசியல் கட்சியில் இருந்தாலும், ஒரு போதும் அரசியல் முரண்களில் சிக்கிக்கொள்ளவில்லை. தன்னுடைய கட்சித் தோழர்களை அம்பேத்கரிய சிந்தனையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் முழு ஈடுபாடுக் கொண்டு பணியாற்றியவர் தோழர் ஆம்ஸ்ட்ராங். அவர் பொதுக்கூட்டங்களை விட அதிகளவில் பயிற்சி வகுப்புகளைத் தான் நடத்துவார். மேலும் தோழர் ஆம்ஸ்ட்ராங், திராவிடர் விடுதலைக் கழகத்திற்கு மிகவும் நெருக்கமானவராகத்தான்...

ஆம்ஸ்ட்ராங் மறைவு சமூகத்திற்கான பேரிழப்பு கழகத் தலைவர் கொளத்தூர் மணி இரங்கல் செய்தி!

ஆம்ஸ்ட்ராங் மறைவு சமூகத்திற்கான பேரிழப்பு கழகத் தலைவர் கொளத்தூர் மணி இரங்கல் செய்தி!

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவருமான தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் 05.07.24 அன்று இரவு கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்கின்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையையும் அளிக்கிறது. தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் இட ஒதுக்கீட்டு உரிமை குறித்து தெளிவான பார்வைக் கொண்டவர். அவரிடம் நெருங்கி பழகும் பொழுது தான் அவருடைய ஆழ்ந்த சிந்தனைகளை அறிய முடிந்தது. சமூகம் குறித்தான பெரிய அக்கறையையும் இந்த சமூகத்தில் உள்ள சிக்கல்கள் குறித்த தெளிவும் சமூக சிக்கல்களை தீர்க்கும் பேரார்வம் கொண்டவராகவும் அவர் இருந்தார். தோழரின் இழப்பு அவரது கட்சிக்கான இழப்பாக மட்டுமல்லாமல் சமூகத்திற்கான ஒரு இழப்பாகவே நாம் பார்க்கிறோம். கடந்த பல ஆண்டுகளாக முழுமையாக தன்னை ஜாதி ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றிய தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சித் தோழர்கள், நண்பர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த...

பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது!

பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது!

பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது! ஊழலில் சிக்கி கைது நடவடிக்கைக்கு ஆளானவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவதா? கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்! தமிழ்நாட்டு அரசு இத்துணைவேந்தர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை! சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தரின் பதவிக் காலம் ஜூன் மாதம் 30 தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவர் தனக்கு மீண்டும் பணி நீடிப்பு‌ பெற தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார். இத்துணைவேந்தர் மீது தனியார் நிறுவனத்தை‌ பல்கலைக்கழகத்தில் துவங்கியது‌, பட்டியலின‌‌ மக்களுக்கான இட ஒதுக்கீடு முறையை‌ பின்பற்றாதது‌, தமிழ்நாடு அரசு பதிவாளரைப் பணி இடை நீக்கம் செய்யுமாறு அனுப்பிய கடிதத்திற்கு‌ மதிப்பு அளிக்காமல்‌ பதிவாளரைப் பணியில் இருந்து விடுவித்தது‌, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது‌‌ போன்ற‌ குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் ஊழல்‌ தொடர்பாக‌ கைது நடவடிக்கையையும் எடுத்து உள்ள நிலையில் அவருக்கு‌ பணி நீட்டிப்பு வழங்க முடிவு...

ஜாதிச் சங்க ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை தேவை! – கழகத் தலைவர் அறிக்கை

ஜாதிச் சங்க ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை தேவை! – கழகத் தலைவர் அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை ஜாதிவெறி கும்பல் தாக்கிய சம்பவத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்! தாக்குதல் நடத்திய அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க தமிழ்நாட்டு அரசிற்கு கோரிக்கை! இது குறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டையில் ஜாதி மறுப்பு காதல் இணைய ர்களுக்கு பாதுகாப்பு அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஜாதி அமைப்பு நடத்திவரும் பந்தல் ராஜா என்பவரின் தலைமையில் வந்த ஜாதி வெறி பிடித்த 25 பேர் கொண்ட கும்பல் காவல்துறை முன்பே அலுவலக கண்ணாடிகள் கதவுகள் பிரிட்ஜ் உள்ளிட்ட உள்ளே உள்ள பொருட்களை எல்லாம் அடித்து உடைத்து நொறுக்கி உள்ளார்கள். திருநெல்வெலி மாநகரம் பாளையங்கோட்டை நம்பிக்கை நகரில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மதன் குமார் (28) என்பவரும்,பெருமாள் புரத்தில் வசிக்கும்...

சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்! மாநில உரிமைகளுக்கு பச்சைக் கொடி!

சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்! மாநில உரிமைகளுக்கு பச்சைக் கொடி!

தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன? சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்! மாநில உரிமைகளுக்கு பச்சைக் கொடி! தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன? இந்தியாவை ஒற்றை சர்வாதிகார மதவெறி ஆட்சியை நோக்கி இழுத்துசென்ற பாசிச சக்திகளுக்கு கடிவாளம் போட்டிருக்கிறது இந்த தேர்தல் முடிவுகள். மாநிலங்கள் இல்லாமல் இந்தியா என்ற நாடு இல்லை என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் உறுதியாக்கியிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தல் உணர்த்தும் பாடங்கள் என்ன? 1. ஒரே நாடு, ஒரே பண்பாடு, ஒரே வரி, ஒரே மோடி என்ற ஆணவத்திற்கு மக்கள் சம்மட்டி அடிக் கொடுத்திருக்கிறார்கள். இந்தமுறை நானூறு இடங்கள் என்று முழங்கிவந்த பாஜக, கடந்தமுறை பெற்ற இடங்களை விட 59 இடங்களை இழந்திருக்கிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் மற்றும் பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணியமைத்து ஆட்சியமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது பாஜக. 2. தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தேர்தல்...

நீதிமன்ற தீர்ப்புகளை சீரழிக்கும் ஜி.ஆர்.சாமிநாதன் நீதிபதியாக நீடிக்கக்கூடாது! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகத் தலைவர் கடிதம்

நீதிமன்ற தீர்ப்புகளை சீரழிக்கும் ஜி.ஆர்.சாமிநாதன் நீதிபதியாக நீடிக்கக்கூடாது! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகத் தலைவர் கடிதம்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் அரசியல் சாசன பணிகள் மற்றும் நீதிபதி பணியின் செயல்பாடுகள் தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, கழகத் தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார். பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது மற்ற சமூகத்தினர் உருள விதிக்கப்பட்ட தடையை ஜி.ஆர்.சாமிநாதன் நீக்கியதை ஒட்டி, அவர்மீது நடவடிக்கைகோரி அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை. உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அரசியலமைப்பு தனக்கு தந்துள்ள அதிகாரங்களை பயன்படுத்தி வழங்கிய தீர்ப்பு என்பது நீதித் துறையின் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நோக்கங்களுடன் பொருந்திப் போகவில்லை. தலித் பாண்டியன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், எஸ்.வேலுமணி அடங்கிய அமர்வு 28.04.2015ஆம் ஆண்டு ( வழக்கு எண் 7068/2015) தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதாவது, மற்றவர்கள் சாப்பிட்ட எச்சில் வாழை இலைகள் மீது பக்தர்கள் உருளுவது என்பது மனித மாண்புக்கும், நாகரீக சமூகத்திற்கும் எதிரானது என்பதால் அதற்கு தடை...

ஜாதி வன்கொடுமை காரணமாக மாணவர் அஜித் குமார் மரணம் !”  “உரிய விசாரணை நடத்தி மாணவர் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் !”  *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் அறிக்கை !*

ஜாதி வன்கொடுமை காரணமாக மாணவர் அஜித் குமார் மரணம் !” “உரிய விசாரணை நடத்தி மாணவர் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் !” *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் அறிக்கை !*

“ஜாதி வன்கொடுமை காரணமாக மாணவர் அஜித் குமார் மரணம் !” “உரிய விசாரணை நடத்தி மாணவர் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் !” *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் அறிக்கை !* ஜாதிய வன்கொடுமை காரணமாக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் நிகழ்ந்துள்ள கல்வி நிறுவனக் கொலை என்று சந்தேகிக்கப்படும் ஒரு மாணவரின் மரணம் குறித்து அனைவரின் கவனத்தை ஈர்க்கவும், உரிய தீர்வு கிடைக்கவும் இவ்வறிக்கையை முன்வைக்கிறேன். கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பாபு குளம் என்ற ஊரைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ஏ.அஜித்குமார். இவர் பத்தாம் வகுப்பில் மாவட்டத்தின் முதல் மாணவராக தேறியவர். அதுபோலவே பன்னிரண்டாம் வகுப்பிலும் பள்ளியின் முதல் மாணவர். மருத்துவக் கல்வி அனுமதிக்கான கட் ஆப் மதிப்பெண் 97.75 பெற்றவர். 2014 ஆம் ஆண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்து வந்த அவர் நான்காம் ஆண்டு படிக்கும் போது அப்போது நடந்த...

ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து கழக செயலவை தீர்மானம்

ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து கழக செயலவை தீர்மானம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவைக் கூட்டம் 21.03.2024 வியாழக்கிழமை அன்று ஈரோடு பவானி சாலையில் உள்ள கே.கே.எஸ்.கே மஹாலில் நடைபெற்றது. செயலவை கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமை தாங்கினார். கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம.இளங்கோவன் அறிமுக உரையாற்றினர். தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் காணொளி வாயிலாக சென்னையில் இருந்து கூடியிருந்த தோழர்கள் மத்தியில் நேரலையில் உரையாற்றினார். அவர் தனது உரையில் கழகம் கடந்து வந்த பாதை, ஆற்றிய பணிகள், நம் முன் இருக்கும் சவால்கள், பரப்புரையில் புதிய யுக்திகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம், சமூக வலைதள பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து விரிவாக உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கழக மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட, மாநகர பொறுப்பாளர்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும் பாஜக அரசை வீழ்த்த வேண்டிய அவசியம் குறித்தும், திமுக கூட்டணியை ஆதரித்து தாங்கள் செய்த பரப்புரைகள் குறித்தும், அதில்...

மார்ச் 22-இல் கழக செயலவை கூடுகிறது!

மார்ச் 22-இல் கழக செயலவை கூடுகிறது!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில செயலவைக் கூட்டம் ஈரோட்டில் மார்ச் 21 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடைபெற உள்ளது. நாள் : 21.03.24 வியாழன் நேரம் : காலை 9.30 மணி முதல் இடம் : கே.கே.எஸ்.கே மகால், பவானி சாலை, ஈரோடு. பொருள் : • 2024 பாராளுமன்றத் தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு. • கழகத்தின் எதிர்கால செயல் திட்டங்கள். • நடைபெற்று வரும் பரப்புரை பயண அனுபவங்கள். கழகத்தின் செயலவை உறுப்பினர்கள் (மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள்) இந்த செயலவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். – தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். 11.03.2024 பெரியார் முழக்கம் 15032024 இதழ்

சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!

சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!

“சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்!" "சமூக ஒற்றுமையைக் காப்போம்!" 1. பத்தாண்டு மோடி ஆட்சியில் என்ன நடந்தது? சட்டங்கள் சீர்குலைக்கப்பட்டன. மதவெறி தூண்டப்பட்டது. மாநில அடையாளங்கள் அழிக்கப்பட்டன. 2. நீட் தேர்வால் நமது அனிதாக்களை இழந்தோம். ஜி.எஸ்.டி-யால் தமிழ்நாட்டின் வருவாயை இழந்தோம். வரலாறு காணாத மழை வெள்ளத்தை நமது மாநிலம் சந்தித்த போதும் ஈவுஇரக்கமின்றி நிவாரண நிதியே இல்லை போ என்று இறுமாப்புடன் பேசியது ஒன்றிய மோடி ஆட்சி. 3. ஆளுநர் ரவி சனாதனப் பெருமை பேசுகிறார். தமிழ்மறை தந்த வள்ளுவருக்கு காவி சாயம் பூசுகிறார். தலித்மக்களுக்கு பூணூல் அணிவிக்கிறார். தீட்சிதர்கள் நடத்தும் குழந்தைத் திருமணங்களை ஆதரிக்கிறார். தேசத்தந்தை காந்தியை அவமதிக்கிறார். சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமறுக்கிறார். அண்ணா சூட்டிய தமிழ்நாடு என்ற பெயரை ஏற்க முடியாது என்கிறார். ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் தலைமையிடமாக மாற்றிவிட்டார். உச்சநீதிமன்றமே தலையில் குட்டிய பிறகும் பாஜக ஆட்சிதரும் இறுமாப்பில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காலில் போட்டு...

சேலத்தில் கழகச் செயலவைக் கூடுகிறது!

சேலத்தில் கழகச் செயலவைக் கூடுகிறது!

சேலத்தில் எதிர்வரும் மே 21, 2023 காலை 10 மணியளவில் கழகச் செயலவைக் கூடுகிறது. பொருள் : மாநாடு பற்றிய ஆய்வு, எதிர்காலச் செயல் திட்டங்கள் மற்றும் மாநாடு வரவு செலவுகள் ஒப்படைத்தல். செயலவை உறுப்பினர்கள் தவறாது கலந்துக் கொள்ள வேண்டுகிறோம். இடம் : ஜி.பி. ஹால், 52ஊ/1, பென்சன் லைன் ரோடு, குகை ஆண்கள் உயர்நிலைப் பள்ளி அருகில், சேலம், கொளத்தூர் மணி, தலைவர் விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர் பெரியார் முழக்கம் 18052023 இதழ்  

பொதுச் செயலாளர் விடுதலை  இராசேந்திரன் உரை மாநாட்டின் வெற்றிக்கு அடித்தளம் நமது தோழர்களின் உழைப்பு – அர்ப்பணிப்பு

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை மாநாட்டின் வெற்றிக்கு அடித்தளம் நமது தோழர்களின் உழைப்பு – அர்ப்பணிப்பு

மாநாட்டில் நிறைவாக உறுதிமொழியைப் படிப்பதற்கு முன், கழகப் பொதுச் செயலாளர் நிகழ்த்திய சுருக்கமான உரை: இந்த மாநாட்டைப் பொறுத்த வரை மாநாடு அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து தமிழ்நாடு முழுவதும் இருக்கிற நமது தோழர்கள் ஆற்றிய பணி மிகப் பெரிய அளவிடற்கரியது; மதிப்புக்குரியது. குறிப்பாக கடைவீதிகளில் சாதாரண மக்களை சந்தித்து கடைவீதி வசூல் என்ற ஒரு இயக்கத்தைத் தொடங்கி இரண்டு மூன்று வாரங்களாக தோழர்கள் இதே பணியை செய்து மாநாட்டிற்கு நிதி திரட்டினார்கள். சுவர் எழுத்து விளம்பரங்களை செய்தனர், மாநாட்டுப் பணிகளில் தங்களை முழுமையாக மூழ்கடித்து, அர்ப்பணித்து  செயல்பட்டனர். இந்த மாநாடு மிகப் பெரிய வெற்றியடைவதற்கு அடித்தளமிட்டது, கழகச் செயல் வீரர்களின் கடுமையான உழைப்பு ஒன்று மட்டும்தான் என்பதை இந்த மாநாட்டின் வழியாக நாம் சொல்லியாக வேண்டும். சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் அந்த மாவட்ட கழகத் தோழர்கள் கடைவீதி வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திக் காட்டினார்கள். தொடர்ச்சியாக மக்களை சந்தித்து சாதாரண மக்களிடம்,...

சேலத்தில் கழகச் செயலவைக் கூடுகிறது!

சேலத்தில் கழகச் செயலவைக் கூடுகிறது!

சேலத்தில் எதிர்வரும் மே 21, 2023 காலை 10 மணியளவில் கழகச் செயலவைக் கூடுகிறது. பொருள் : மாநாடு பற்றிய ஆய்வு, எதிர்காலச் செயல் திட்டங்கள் மற்றும் மாநாடு வரவு செலவுகள் ஒப்படைத்தல். செயலவை உறுப்பினர்கள் தவறாது கலந்துக் கொள்ள வேண்டுகிறோம். இடம் பின்னர் அறிவிக்கப்படும். கொளத்தூர் மணி, தலைவர் விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர்   பெரியார் முழக்கம் 11052023 இதழ்

மதவாத ஆட்சி அமைக்க மன்னராட்சி உருவாகும் ஆபத்து பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த உறுதி ஏற்போம்! ஜனநாயக சக்திகளுக்கு சேலம் மாநாடு அறைகூவல்

மதவாத ஆட்சி அமைக்க மன்னராட்சி உருவாகும் ஆபத்து பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த உறுதி ஏற்போம்! ஜனநாயக சக்திகளுக்கு சேலம் மாநாடு அறைகூவல்

இந்து இராஷ்டிரம் அமைக்க மன்னராட்சியை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் ஆபத்துகள் எதிர்நோக்கியுள்ள நிலையில் பா.ஜ.க. அணியை வீழ்த்த மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டும் என்று சேலத்தில் கூடிய (ஏப்.29, 30, 2023) திராவிடர் விடுதலைக் கழக மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. இது தமிழ்நாடு; இளம் தலைமுறை எச்சரிக்கை மாநாட்டுத் தீர்மானங்கள்: வேத மத ஆட்சியின் ஆபத்து : 1) தமிழ்நாட்டில்  நீண்டநெடுங்காலமாக பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதை, சமூகநீதி, பெண்ணுரிமைக் கொள்கைகளை சீர்குலைத்து வேத பார்ப்பனிய ஆட்சியை இந்துத்துவம் என்ற பெயரில் கொண்டுவர ஒன்றிய பாஜக ஆட்சி திட்டமிட்டு செயல்பட்டு வரும் நிலையில் அந்த ஆபத்தை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் வேத பார்ப்பனியம் ஆட்சிக்கு வந்தால் நாம் அடிமையாகி படுகுழியில் தள்ளப்படுவோம் என்றும் நமது முன்னோர்கள் பெற்று தந்த தன்மான உணர்வை இழந்து கீழ் மக்கள் ஆகிவிடும் ஆபத்து உருவாகிவிடும் என்பதையும் இம்மாநாடு தமிழர்களுக்குச்...

புத்தகங்கள் வெளியீடு! புதிய தலைப்புகள்! 42 புத்தகங்கள்!

புத்தகங்கள் வெளியீடு! புதிய தலைப்புகள்! 42 புத்தகங்கள்!

ரூ.4000/- மதிப்புள்ள நூல்கள் ரூ.3000/-க்கு சலுகை விலையில் சேலத்தில் ஏப்.29.30 ல் நடைபெறும் “இது தமிழ்நாடு,இளைய தலைமுறையின் எச்சரிக்கை” மாநாட்டை முன்னிட்டு நிமிர்வோம் வெளியீட்டில் புத்தகங்கள் வெளியிடப் படுகின்றன. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் எழுதி 2022 டிசம்பர் மாதம் நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 37 தலைப்புகளும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி, உரைகள் ஆகியவை 3 புத்தகங்களாகவும், திமுக துணைப் பொதுச்செயலாளர் மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ இராசா கருத்தரங்க உரை நூல் வடிவில் “எங்களை தனிநாடு கேட்க வைத்து விடாதீர்கள்” எனும் நூலும் ஆகியவற்றோடு “நான் பார்ப்பனர்களுக்கு அல்ல, பார்ப்பனீயத்துக்கே எதிரானவன்” (எனும் அம்பேத்கரின்  மேற்கோள் குறித்து) வெளியான ஆங்கில புத்தகத்தின் தமிழ் வடிவம். எட்வின் பிரபாகரன் மொழிப் பெயர்ப்பில். இவை அனைத்தும் சேர்த்து மொத்தமாக 42 புத்தகங்களாய் வெளியிடப்பட உள்ளது.இவற்றின் மொத்த பக்கங்கள் 4211 இதன் விலை ரூ. 4000/- மாநாட்டு திடலில் அனைத்து...

பேரணி ; ஓர் அறிவிப்பு

பேரணி ; ஓர் அறிவிப்பு

எச்சரிக்கைப் பேரணியில் சிறப்பாக – மிடுக்காக அணிவகுத்து வரும் மாவட்டத்திற்கு பரிசுகள் வழங்கி மாநாட்டில் கவுரவிக்கப்படும். தோழர்களே! பரிசுகளைத் தட்டிச் செல்ல தயாராகுவீர்! எந்த மாவட்டம் முந்துகிறது என்று பார்க்கலாம். – திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 27042023 இதழ்

இளைய தலைமுறையின் எச்சரிக்கை மணி – சேலத்தில் ஒலிக்கப் போகிறது

இளைய தலைமுறையின் எச்சரிக்கை மணி – சேலத்தில் ஒலிக்கப் போகிறது

திராவிட இயக்க வரலாற்றுப் பக்கங்களில் சேலம் பல முத்திரைகளைப் பதித்து நிற்கிறது. 1944இல் நீதிக் கட்சி – திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெற்றது சேலத்தில் தான். 1971இல் சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், இந்தியா முழுதும் பேசும் பொருளாகியது. இராமன் உள்ளிட்ட வேத மதக் கடவுள்களை ஊர்வலத்தில் அவமதித்ததாகக் குற்றச்சாட்டு; பெரியார் அஞ்சவில்லை. ஆம்; அப்படித்தான் செய்தேன்; சூத்திரனாக இருக்க மாட்டேன் என்ற உணர்ச்சியுள்ள ஒவ்வொருவரும் இதைத் தான் செய்வார்கள் என்றார் பெரியார். அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் இப்பிரச்சினையை முன்வைத்து காங்கிரசாரும் பார்ப்பனர்களும் தி.மு.க.வை தோற்கடிக்க தீவிரமாக செயல்பட்டனர். ஆனால் 184 இடங்களில் தி.மு.க. வெற்றி வாகை சூடியது. “நீங்கள் உலகப் புகழ் பெற்று விட்டீர்கள்; என் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கியது” என்று பெரியார், கலைஞருக்கு தந்தி மூலம் பாராட்டினார். தமிழர் வழிபாட்டு உரிமை மாநாடு; வேத மரபு எதிர்ப்பு மாநாடுகளை திராவிடர் விடுதலைக்...

மாநாட்டு நன்கொடையை அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம்

மாநாட்டு நன்கொடையை அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம்

வங்கிக் கணக்கு PURATCHI PERIYAR MUZHAKAM Karur Vysya Bank, Adyar Branch Current Acct No.: 1257115000002041 IFSC : KVBL0001257 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கரூர் வைஸ்யா வங்கி, அடையாறு கிளை ‘கரண்ட்’ அக்கவுண்ட் எண் :: 1257115000002041 IFSC : KVBL0001257 கூகுள் பே எண் : 9444115133   பெரியார் முழக்கம் 20042023 இதழ்

சந்திரபோஸ் முடிவெய்தினார்

சந்திரபோஸ் முடிவெய்தினார்

தியாகி இமானுவேல் சேகரன் பேரவையின் பொதுச் செயலாளரும், ஐந்திணை மக்கள் கட்சியின் அரசியல் ஆலோசகருமாகிய அருமைத் தோழர் சந்திரபோஸ் 21.01.2023 அன்று சனிக்கிழமை உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் எனும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தோழரின் மரணம், ஜாதி ஒழிப்புக் களத்தில் நிகழ்ந்துள்ள ஒரு பேரிழப்பாகும். ஜாதியப் பெருமைகளைப் பற்றி எந்த நிலையிலும் சிந்திக்காமல், ஜாதிய இழிவுகள், புறக்கணிப்புகள், வஞ்சனைகள், உரிமைப் பறிப்புகள் பற்றி தொடர்ச்சியாக எடுத்துரைத்து அவற்றுக்குத் தீர்வு காண பெரும் போராட்டங்களையும் முன்னெடுப்புகளையும் நடத்தி வந்த ஒரு முற்போக்கு சிந்தனைவாதியாகத் திகழ்ந்தவர். பட்டியல் இன மக்களுக்குள்ளேயே ஏற்றத் தாழ்வினையும் பிரிவினையையும் பலரும் பேசி வருகிற சூழலில், சந்திரபோஸ், தியாகி இமானுவேல்சேகரனைப் போலவே அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு செயலாற்ற விரும்பியவர். தன் குடும்பத்து திருமண உறவுகளில் கூட அந்தப் பிரிவினைப் போக்கினை உடைத்துக் காட்டியவர் அவர்.  பல ஆண்டுகளாக தனது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவருடைய பணிகளை அவர்...

2022 : கழகம் கடந்து வந்த பாதை தொகுப்பு: க. இராசேந்திரன்

2022 : கழகம் கடந்து வந்த பாதை தொகுப்பு: க. இராசேந்திரன்

2022இல் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முக்கிய செயல்பாடுகள் குறித்து ஒரு சுருக்கமான தொகுப்பு. ஜனவரி : டெல்லி குடியரசு தின அணி வகுப்பில் தமிழக அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்ட தமிழக ‘சுதந்திரப் போராட்டக்காரர்களான’ வ.உ.சி., பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்களின் அலங்கார ஊர்தியை கடைசி நேரத்தில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி அனுமதிக்க மறுத்தது. தமிழ்நாட்டின் குடியரசு தின அணி வகுப்பில் இந்த ஊர்திகள் பங்கேற்கும் என்று அறிவித்தார் தமிழக முதல்வர். இந்தத் தலைவர்களோடு பெரியார் சிலையையும் சேர்த்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தமிழக அரசு மக்கள் பார்வைக்கு வைத்ததோடு குடியரசு நாள் அணி வகுப்பிலும் பங்கேற்கச் செய்தது, தமிழக அரசு. மருத்துவ உயர் மட்டப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத ஒதுக்கீடு வழங்க முடியாது என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு எடுத்த நிலைப்பாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றது. தமிழக அரசு தமிழ்நாட்டுக்கு...

கழகத் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களின் மூன்றாம் கட்ட சுற்றுப் பயணம்

கழகத் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களின் மூன்றாம் கட்ட சுற்றுப் பயணம்

கழகத் தலைவர் மற்றும் தலைமைக் குழுப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களின் மூன்றாம் கட்டப் பயணம் கீழ்கண்டவாறு திட்டமிடப்பட்டுள்ளது. 05.01.2023 காலை 10.00 மணி – சேலம் மேற்கு மாவட்டம் 05.01.2023 மாலை 4.00 மணி – தர்மபுரி மாவட்டம் (இரவு தங்கல் கிருட்டிணகிரி) 06.01.2023 காலை 10.00 மணி – கிருட்டிணகிரி  மாவட்டம் 06.01.2023 மாலை 4.00 மணி – கள்ளக்குறிச்சி மாவட்டம் (இரவு தங்கல் சேலம்) 07.01.2023 காலை 10.00 மணி – சேலம் கிழக்குமாவட்டம் 07 01.2023 மாலை 4.00 மணி – ஈரோடு தெற்கு மாவட்டம் (இரவு தங்கல் ஈரோடு) 08.01.2023 காலை 10.00 மணி –  ஈரோடு வடக்கு மாவட்டம் மேற்கண்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் ஊர் மற்றும் இடத்தை முடிவு செய்து தலைமைக் கழகத்திற்கு  தகவல் தரக் கேட்டு கொள்ள படுகிறார்கள்.   பெரியார் முழக்கம் 22122022 இதழ்

தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம்

தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம்

அனைத்து மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுடன் கலந்துரை யாடி மாவட்ட அமைப்புகளைப் புதுப்பிக்க / மாற்றியமைக்க, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்,  மாநிலப் பொறுப்பாளர்கள் கீழ்க்கண்டவாறு பயணத்துக்குத் திட்டமிடப்பட் டுள்ளது. முதற்கட்டப் பயணம்: 16.12.2022 காலை 10.30 மணி மூ கள்ளக்குறிச்சி மாவட்டம் 16.12.2022 மாலை 4.00 மணி- விழுப்புரம் மாவட்டம். 17.12.2022- மாலை 06.00 மணி – வேலூர் மாவட்டம் (இரவு தங்கல் வேலூர் மாவட்டம்) 18.12.2022 காலை 10.00 மணி கிருட்டிணகிரி மாவட்டம் 18.12.2022 மாலை 04.00 மணி தர்மபுரி மாவட்டம் இரண்டாம் கட்டப் பயணப் பட்டியல்: 26.12.2022 காலை 10.00 மதுரை மாவட்டம் 26.12.2022 மாலை 4.00 சிவகங்கை மாவட்டம் 26.12.2022 இரவு 07.00 மணி தஞ்சை மாவட்டம் (இரவு தங்கல் தஞ்சை மாவட்டம் ) 27.12.2022 காலை 11.00 மணி மயிலாடுதுறை மாவட்டம் 27.12.2022 மாலை 04.00 மணி கடலூர் மாவட்டம் (இரவு தங்கல் பெரம்பலூர் மாவட்டம்...

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’  விலை மாற்றம் குறித்த அறிவிப்பு

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ விலை மாற்றம் குறித்த அறிவிப்பு

கொரோனா காலத்திற்குப் பின் அச்சுத்தாள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தாள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக் காரணமாக வேறு வழியின்றி நமது ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தின் சந்தா தொகை உயர்த்தப்படுகிறது. ஆண்டு சந்தா ரூ. 300/- ஆகவும் 5 ஆண்டு சந்தா ரூ. 1500/- ஆகவும் –  உயர்த்தப்பட்டுள்ளது. தோழர்கள், வாசகர்கள் வழக்கம் போல் தங்கள் ஆதரவினைத் தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். “புரட்சிப் பெரியார்  முழக்கம்” ஆண்டுக்கட்டணம் ரூ.300 தொடர்புக்கு : ஆசிரியர்,  29, பத்திரிகையாளர் குடியிருப்பு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை-41. & 7373684049   பெரியார் முழக்கம் 03112022 இதழ்  

பெரியார் பல்கலைக்கழகத்தின் இந்துத்துவா போக்கு: கொளத்தூர் மணி கண்டனம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை:

பெரியார் பல்கலைக்கழகத்தின் இந்துத்துவா போக்கு: கொளத்தூர் மணி கண்டனம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை:

பெரியார் பல்கலைக்கழகத்தின் தொடர் இந்துத்துவப் போக்கினை இன்னொரு நிகழ்வு வழியாகவும் வெளிக்காட்டி இருப்பதை சுட்டிக்காட்டுவதும், அதற்கான எதிர்வினைகளைப் பற்றி சிந்திக்கக் கோருவதும் தான் இந்த அறிக்கையின் நோக்கமாகும். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பாக 14.9.2022 அன்று ‘பெரியாரை வாசிப்போம்’ என்ற நிகழ்வு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளதாகவும் அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் பல்கலைக்கழகப் பதிவாளர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார். அந்த அறிக்கையில் அன்று அனைவரும் வாசிக்க வேண்டிய செய்திகளையும் கொடுத்திருக்கிறார். அந்த அறிக்கை தொடங்குகிற போது திருமூலரின் ஒரு பாடலோடு தொடங்குகிறது. அந்தப் பாடலில் உள்ள பொருளைச் சொல்லி இருந்தாலும் பெரியாரின் தத்துவ பார்வையும், அறிவுக்கான தேடலும், சமூக விடுதலைக்கான அணுகுமுறையும் போர்க்குணம் மிக்க அறிவுத் தேடல் ஆகும் – என்ற செய்திகளுடன் முடிகிறது  முதல் பத்தி. ஏதேனும் ஒரு மேற்கோள் காட்டியாக வேண்டும் என்று விரும்பி...

களப்பணியாளர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம்: முக்கிய அறிவிப்பு

களப்பணியாளர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம்: முக்கிய அறிவிப்பு

திராவிடர் விடுதலைக் கழகக் களப்பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் ஜூலை 23, 24, 25 தேதிகளில் திருச்சி ‘டி.எம்.எஸ்.எஸ்.’ பயிற்சி மய்யத்தில் (தொடர் வண்டி நிலையம் அருகில்) நடைபெறுகிறது. சமூக நீதி – மதவாதம் – பெண்ணுரிமை – மாநில சுயாட்சி, சமூகம், உளவியல் எனும் பல்வேறு தலைப்புகளில் பயிற்சியளிக்கப் படும். தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்டோருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். பயிற்சியாளர்கள் ஜூலை 22 இரவே மய்யத்திற்கு வந்து சேர வேண்டும். – கொளத்தூர் மணி (தலைவர்) விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர்) பெரியார் முழக்கம் 07072022 இதழ்

களப்பணியாளர் பயிலரங்கம்: ஒரு வேண்டுகோள்

களப்பணியாளர் பயிலரங்கம்: ஒரு வேண்டுகோள்

2022 ஜூலை 23, 24, 25 ஆகிய மூன்று தினங்கள் கழகக் களப்பணி யாளர்களுக்கான பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் களப்பணியாற்றும் தோழர்கள் பங்கு பெறலாம். தோழர்கள் மாவட்ட பொறுப்பாளர்களின் ஒப்புதலுடன் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மாவட்டப் பொறுப்பாளர்கள் 07.07.2022 தேதிக்குள் தங்கள் மாவட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கும் தோழர்கள் பட்டியலை 97894 56485 என்ற எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்புங்கள். குறைந்த அளவில் தோழர்களை வைத்து விரிவாக இப் பயிலரங்கம் நடத்திட தலைவர்,பொதுச் செயலாளர் இருவரும் திட்டமிட்டுள்ளதால் விரைவாக பெயர் பட்டியல் அனுப்பவும். அதிக தோழர்கள் இருப்பின் தலைமைக் குழு தேர்வு செய்யும் தோழர்கள் பயிலரங்கத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். பயிலரங்கம் திருச்சியில் ‘டி.எம்.எஸ்.எஸ்.’ நிறுவனத்துக்கான பயிற்சி அரங்கில் நடைபெறும். – பால்.பிரபாகரன்,  பரப்புரைச் செயலாளர்,  திராவிடர் விடுதலைக்கழகம்   பெரியார் முழக்கம் 30062022 இதழ்

செஞ்சட்டைப் பேரணி மாநாட்டில் கொளத்தூர் மணி உரை கொள்கை எதிரியை அடையாளம் கண்டு விட்டோம்; கொள்கை அணியை உருவாக்குவோம்!

செஞ்சட்டைப் பேரணி மாநாட்டில் கொளத்தூர் மணி உரை கொள்கை எதிரியை அடையாளம் கண்டு விட்டோம்; கொள்கை அணியை உருவாக்குவோம்!

தி.க. கொடியை உருவக்கிய பெரியார், நடுவில் உள்ள சிவப்பு வட்டம் பெரிதாகி, சிவப்புக் கொடியாக மாறும் என்று கூறியதை நினைவு கூர்ந்தார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.  மதுரை செஞ்சட்டை பேரணிக்குத் தலைமை யேற்ற கழகத் தலைவர் மாநாட்டில் ஆற்றிய உரை: பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் நோக்கத்தை ஒருங்கிணைப்பாளர் பொழிலன் விளக்கியிருக்கிறார். இந்த மூன்று பேரணிகள் நடந்ததும் இதன் முதன்மை மாந்தர்களாக காட்டப்படுகிற பெரியாரும், அம்பேத்கரும், மார்க்சும் எளிய வஞ்சிக்கப்பட்ட மக்களை இலக்காக கொண்டு தத்துவங்களை உருவாக்கிப் போராடியவர்கள். இந்த மண்ணில், சுரண்டப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்கள் இன்னும் இருக்கிறார்கள். அந்த சூத்திரர்களும், பஞ்சமர்களும் தான் உழைப்புச் சுரண்டல்களுக்கு உள்ளானவர்களாக இருக் கிறார்கள். இந்த மூன்று பேரின் நோக்கமும் ஒன்று தான். ஆனால், தனித்தனியாக இயங்கி வந்திருக் கிறோம். இது இயங்கக் கூடாது என்ற கருத்து 30’களில் தோன்றியிருந்தாலும், இடையில் பிரிவு, உறவு இரண்டும் நடந்திருக்கின்றன. ஆனால், இந்த வேளையில், இந்த நாட்டில்...

மே 29 – மதுரை செங்கடலாகட்டும்; கழகத் தோழர்களே திரண்டு வாரீர்!

மே 29 – மதுரை செங்கடலாகட்டும்; கழகத் தோழர்களே திரண்டு வாரீர்!

வர்க்க-வர்ண ஆதிக்க ஒழிப்பு மாநாடும் செஞ்சட்டைப் பேரணியும் மதுரையில் மே 29 அன்று நிகழ இருக்கிறது. மதுரை காளவாசல் பகுதியிலிருந்து செஞ்சட்டைப் பேரணி பிற்பகல் 3 மணியளவில் தொடங்குகிறது. பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு ஒருங் கிணைக்கும் இந்தப் பேரணியில் பல்லாயிரக் கணக்கில் இளைஞர்கள், பெண்களும் ஆண் களுமாய் செஞ்சட்டை அணிந்து தமிழ் நாட்டின் தனித்துவத்தை வர்க்க-வர்ண ஆதிக்க சக்திகளுக்கு உணர்த்தப் போகிறார்கள். ஏற்கனவே கருஞ்சட்டைப் பேரணி, நீலச்சட்டைப் பேரணியை நடத்தி முடித்து இப்போது நிறைவாக செஞ்சட்டைப் பேரணி புறப்படுகிறது. பொதுத் துறை நிறுவனங்களை சீர்குலைத்து, பங்குகளைத் தனியாருக்கு வேகம் வேகமாக விற்கிறது ஒன்றிய ஆட்சி. பொன் முட்டையிடும் வாத்து, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளை அடி மாட்டு விலையில் விற்கிறது. காப்பீடு என்றால் அது பணக்காரர்களுக்கு மட்டுமே என்ற கருத்தை உடைத்து,வெறும் 5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்.அய்.சி., சந்தை மதிப்பில் 32 இலட்சம் கோடி ரூபாயையும் காப்பீட்டு சந்தையில் 70...