Category: சேலம் மேற்கு

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

சேலம்: 18/03/2025 வீரகனூர் பேருந்து நிலையம், பெரம்பலூர் வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் பரப்புரை நடைபெற்றது. பறை இசை மற்றும் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. ஆத்தூர் நகர செயலாளர் கணபதி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரைகணபதி, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், பெரம்பலூர் சுதாகர் ஆகியோர் தலைமை வகித்தனர். சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாநகர செயலாளர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், ஆத்தூர் நகர தலைவர் மகேந்திரன், தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், ஆத்தூர் நகர செயலாளர் கணபதி, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை தாமோதரன் ஆகியோர் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரை...

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

விழுப்புரம்: 17/03/2025 (திங்கள்) கீழ்பெண்ணாத்தூர் கலைஞர் பேருந்து நிலையம், கடலாடிகுளம் பேருந்து நிலையம், செஞ்சி பேருந்து நிலையம், அப்பம்பட்டு மசூதி அருகில் நடைபெற்றது. காலை உணவு மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தோழர் பொன்.சுப்ரமணி வழங்கினார். நம் பிரச்சார பயணத்தின் தலைப்பான பெரியார் ஏன் எதிரிகளை பதறவைக்கிறார் என்ற செய்தியை அவர்களின் சிந்தனைப் பலகையில் 17/3/2025 அன்றைய செய்தியாக எழுதி வரவேற்றனர், மேலும் ராமநாதன்,கோதண்டராமன், ஆதிமூலம், தமிழ் மக்கள் கட்சியை சார்ந்த முகிலன் அம்பேத்கர் மக்கள் கட்சி விழுப்புரம் மாவட்ட செயலாளர் சு.மழைமேனி பாண்டியன், பகுத்தறிவு கழகத்தை சார்ந்த துரை.திருநாவுக்கரசு, பேராசிரியர். ஜாக்குலின், வி.சி.க. விழுப்புரம் மாவட்ட செயலாளர் தனஞ்செழியன், திராவிடர் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் கோபண்ணா, பேராசிரியர் நந்தகுமார், தமுமுக அலிஜான் ஆகியோர் கலந்துக் கொண்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் செஞ்சி சட்டமன்ற தொகுதியின் செயலாளர் ராசநாயகம், க.ராமர், பூ.ஆ இளையரசன், தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர்...

பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு

பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு

தமிழர்களின் தன்மான மீட்பர் தலைவர் பெரியார் மீது அவதூறுகளை வீசி, தமிழ்நாட்டில் அவரைத் தனிமைப்படுத்தலாம் என்ற சதித்திட்டத்தை முறியடிக்கவும், அந்தத் துரோகக் கும்பலின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, மக்களிடத்தில் பெரியாரைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடும் திராவிடர் விடுதலைக் கழகம் இந்த பயணத்திற்குத் திட்டமிட்டது. தன்னல மறுப்போடு, பெரியார் லட்சியத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் இந்த பயணத்தில் பங்கேற்றனர். கொளுத்தும் வெயிலில் தங்களை வருத்திக் கொண்டு நாள் ஒன்றுக்கு குறைந்தது நான்கு கூட்டங்கள் வழியாக பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்துப் பரப்புரை, நூல் விற்பனை, நிதி திரட்டல் என்ற பணிகளை ஏற்று ‘பெரியார் பணி செய்வதே என் கடன்’ என்ற லட்சிய வெறியோடு ஒரு வாரகாலம் பயணித்த கழகச் செயல் வீரர்களை இம்மாநாடு பாராட்டுகிறது, மகிழ்கிறது.இந்தப் பயணத்தில் தோழர்கள் செலுத்திய உழைப்பு வீண் போகாது; வரலாற்றில் பதியப்படும் என்று இந்த மாநாடு பெருமை அடைகிறது. பெரியார் முழக்கம் 27032025இதழ்

பரப்புரையில் பல நெகிழ்ச்சி சம்பவங்கள்!!

பரப்புரையில் பல நெகிழ்ச்சி சம்பவங்கள்!!

சென்னை பரப்புரைக் குழு: கிழக்கு தாம்பரம் வால்மீகி நகரில் சங்கராச்சாரியார் படத்தை சட்டைப் பையில் வைத்திருந்த வெங்கடேஷ் என்ற புதிய ஆதரவாளர் பரப்புரை பயணத்தைக் கூர்ந்து கவனித்து கூட்டம் முடிந்ததும் தோழர்களுக்கு தேநீர் வாங்கி கொடுத்தார். மேலும், “நான் ஆன்மிகவாதிதான். ஆனால் பக்தி வேறு அரசியல் வேறு” என்றும், “எனக்குப் பெரியாரை பிடிக்கும். பெரியார் இல்லை என்றால் நான் இன்றைக்கு இந்த டிராவல்ஸ் தொழிலை வைத்திருக்க முடியாது” என உணர்ச்சி பொங்க கூறினார். “இன்றைக்கு சீமான் போன்ற ஆட்கள் பெரியாரைப் பற்றி அவதூறு பேசுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நீங்கள் இந்த மாறி அயோக்கியனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துங்கள். பெரியார் இல்லை என்றால் இன்றைக்கு கல்வி கற்க முடியமா தமிழர்கள்” என்றும் கூறினார். அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பரப்புரை வாகனத்திற்கு பெட்ரோலை கேனில் தர மறுத்தனர். வெங்கடேஷ் அவர்கள் சென்று கழகப் பிரச்சார ஜெனரேட்டர்க்கு 610 ரூபாய்க்கு பெட்ரோல்...

பரப்புரைப் பயணங்கள் தொடங்கின- பெரியாரின் பெரும் தொண்டுகள் மக்களிடையே விளக்கம்! இளைஞர்கள் பெண்கள் பேராதரவு…

பரப்புரைப் பயணங்கள் தொடங்கின- பெரியாரின் பெரும் தொண்டுகள் மக்களிடையே விளக்கம்! இளைஞர்கள் பெண்கள் பேராதரவு…

பெரியார் ஏன் எதிரிகளைப் பதறவைக்கிறார்? பரப்புரைப் பயணம் கடந்த 15-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது 16-ஆம் தேதி ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொடங்கியது. கழக செயல் வீரர்கள் தனி வாகனங்களில் பயணத்தில் பங்கேற்கிறார்கள். கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கழக செயல் வீரர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 4 கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த பரப்புரையில் இளைஞர்களும் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். கழக நூல்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். பெரியாரின் எதிர்நீச்சல் அவர் உருவாக்கிய சமூக மாற்றங்களைக் கழகப் பேச்சாளர்கள் மக்களிடம் எடுத்துக் கூறுகிறார்கள். கலைநிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. பயணங்களின் செய்தித் தொகுப்பு சென்னை: “பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?” எனும் தலைப்பில் சென்னை அணி செல்லும் பரப்புரைப் பயணத்தின் தொடக்க விழா,இராயப்பேட்டையில் 15.03.2025 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் சிறப்புரையாற்றி பரப்புரைப் பயணத்தை துவக்கி வைத்தார். திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.என்.துரை, 119-வது...

மகளிர் தினம் – கழகப் பெண்கள் துண்டறிக்கை பிரச்சாரம்!

மகளிர் தினம் – கழகப் பெண்கள் துண்டறிக்கை பிரச்சாரம்!

மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்ட மகளிர் அணி சார்பில் மகளிர் தின வாழ்த்துகள் கூறி 2000 துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது. 08.03.25 அன்று மேட்டூர் அரசு கலைக் கல்லூரி முன்பு கழக சேலம் மாவட்ட அமைப்பாளர் சுதா, மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின், தேன்மொழி, முத்துராஜ், இராமச்சந்திரன், கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், கொளத்தூர் நகரச் செயலாளர் அறிவுச்செல்வன் ஆகியோரும், வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்பு நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகர், இந்திராணி, நந்தினி ஆகியோர்களும், கொளத்தூர் பேருந்து நிலையத்தில் சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரசுவதி, தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈசுவரன், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், அழகேஸ்வரி, கோமதி ஆகியோர் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு, பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள், இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர். 08.03.25 அன்று தொடர்ந்து சேலம் மாநகர் செளடேஸ்வரி மகளிர் கல்லூரி முன்பு சேலம்...

சடலங்களைை இடுகாடு வளைை சுமந்து செசல்கிறாார்கள்  “மரபுகளைைத் தகர்க்கும் திவிக பெெண்கள்‌

சடலங்களைை இடுகாடு வளைை சுமந்து செசல்கிறாார்கள் “மரபுகளைைத் தகர்க்கும் திவிக பெெண்கள்‌

தமிழ்நாட்டில் பெரியாரியப் பெண்கள் பண்பாட்டு புரட்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இந்து ஆங்கில நாளேடு இதை சுட்டிக்காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் இறந்தவர்களின் சடலங்களை திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த பெண்கள் இடுகாடு வரை சுமந்து சென்று எந்த வித சடங்கு சம்பிரதாயம் இன்றி உடலை அடக்கம் செய்து வருகிறார்கள். பெண்கள் சுடுகாட்டுக்கு போவதே சமூகம் தடைச் செய்து உள்ளது. தடையை தகர்த்து சேலம் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக 100-க்கு மேற்பட்ட சடலங்களை பெண்களே சுமந்து சென்று இறுதி நிகழ்வுகளை செய்துள்ளனர் என்று இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளிட்டுள்ளது. (மார்ச் 10, 2025). பெரும்பாலான மதங்கள் பெண்களை சுடுகாடு செல்வதற்கு அனுமதிப்பதில்லை. தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மரணத்தில் கூட இடுகாடு செல்ல முடியாது. ஆனால் சேலம் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெண்கள் சடலங்களை சுடுகாடு சுமந்து சென்று மத மரபுகளை உடைத்து இருக்கிறார்கள். இந்த...

நரேன் (எ) நரேந்திரன்- சங்கீதா இணையரின் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம்

நரேன் (எ) நரேந்திரன்- சங்கீதா இணையரின் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம்

ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் தோழர்கள் நரேன் (எ) நரேந்திரன்- சங்கீதா இணையரின் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி முன்னிலையில், தலைமைக் குழு உறுப்பினர் ஈசுவரன் தலைமையில் நடைபெற்றது. காவலாண்டியூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த உறுதிமொழி எடுக்கப்பட்டு எளிமையான முறையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் மாலை அணிவித்து மோதிரம் மாற்றிக் கொண்டனர். இந்நிகழ்வில் சேலம் மாவட்டக் கழக ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், வழக்கறிஞர் சரவணன் பரத், காவை.தங்கராசு, மாரி, மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் மேட்டூர் நாகராஜ்,ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் எழில் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.திருமண நிகழ்வின் மகிழ்வாக இணையர்கள் புரட்சிப் பெரியார் முழுக்கத்திற்கு ரூபாய் ₹1000/- வளர்ச்சி நிதியை கழகத் தலைவரிடம் வழங்கினர்.

ஒன்றிய ஆட்சிக்கு எதிராக கழகம் ஆர்பாட்டம் கல்வி உரிமையை பறிக்காதே

ஒன்றிய ஆட்சிக்கு எதிராக கழகம் ஆர்பாட்டம் கல்வி உரிமையை பறிக்காதே

ஒன்றிய அரசு தமிழ்நாட்டின்‌ பள்ளிக்கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி உரிமைகளைப் பறிப்பதை எதிர்த்து தமிழ்நாடு போர்க்கோலம் பூண்டுள்ளது. திமுக சார்பில் டெல்லியில் கண்டன‌ ஆர்ப்பாட்டம்‌ நடந்து முடிந்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம்‌ தமிழ்நாடடின்‌ முக்கிய நகரங்களில் பிப்.13 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. பல்கலைக் கழக பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிகளை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்த புதிய விதிகளில் பல்கலைக்கழகங்கள் ஒன்றிய அரசின்‌ நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆபத்து அடங்கியுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி துண்டறிக்கை அச்சிடப்பட்டு மக்களிடம் வழங்கப்பட்டன. கழகம்‌ ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு… சேலம்: மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் யூஜிசி விதிகளில் திருத்தம் செய்து மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கிற, இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கிற ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து 13.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர்...

மேட்டூரில் கலந்துரையாடல் கூட்டம்; கழகத் தலைவர் பங்கேற்பு

மேட்டூரில் கலந்துரையாடல் கூட்டம்; கழகத் தலைவர் பங்கேற்பு

சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 19.01.2025 அன்று மேட்டூர் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், சேலம் மாவட்டப் பொருளாளர் சம்பத், மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின், மாவட்ட அமைப்பாளர்கள் டைகர் பாலன், நங்கவள்ளி அன்பு, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுதா மற்றும் பொறுப்பாளர்களும், தோழர்களும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். 2025ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும் இயக்க வளர்ச்சி குறித்தும் தோழர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். புரட்சிப் பெரியார் முழக்க சந்தா தொகையை வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் தலைமைக்கு ஒப்படைப்பது குறித்தும், சேலம் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நங்கவள்ளி கிருஷ்ணன், நங்கவள்ளி ஒன்றியச் செயலாளராக இராஜேந்திரன்,...

முடிகொண்டான் சாரங்கபாணி முடிவெய்தினார்.

முடிகொண்டான் சாரங்கபாணி முடிவெய்தினார்.

பெரியாரின் பெரும் தொண்டரும், தமிழ்நாடு அரசின் ‘நல்லாசிரியர்’ விருது பெற்றவரும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்ததற்காக, தனது மகள், மகனுடனும், கழகத் தலைவர், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் ஆகியோருடன் தடா வழக்கில் சிறை சென்றவருமான முடி கொண்டான் சா.சாரங்கபாணி, தனது 93ஆவது வயதில் 03.01.2025 அன்று தனது இல்லத்தில் முடிவெய்தினார். அவருக்கு நமது புகழ் வணக்கங்கள். பெரியார் முழக்கம் 09012025 இதழ்

ஆளுநருக்கு எதிராகப் போராட்டம்; சேலத்தில் நடந்த இளைஞர் – மாணவர் கூட்டத்தில் முடிவு!

ஆளுநருக்கு எதிராகப் போராட்டம்; சேலத்தில் நடந்த இளைஞர் – மாணவர் கூட்டத்தில் முடிவு!

சேலம்: சேலம் மாவட்டக் கழக இளைஞரணி – தமிழ்நாடு மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 28.09.2024 அன்று சேலம் தாதகாப்பட்டியில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாவட்ட இளைஞரணித் தலைவர் ஏற்காடு தேவபிரகாசு தலைமை தாங்கினார். அமைப்பாளர் வெற்றிமுருகன் முன்னிலை வகித்தார். இதில் வருகிற 16.10.2024 அன்று சேலம் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் ஆளுநர் ரவியைக் கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், பெரியார் நினைவு நாளில் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51A (h) மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு ஆகியவற்றை விளக்கி மாணவர்களிடையே விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துவது எனவும், மாணவர் விடுதிகளில் சந்திப்பு – அறிவியல் கண்காட்சி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மாநகரத் தலைவர் பாலு, நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாநகரச் செயலாளர்...

காவல்துறையைக் கண்டித்துப் பொதுக்கூட்டம்

காவல்துறையைக் கண்டித்துப் பொதுக்கூட்டம்

மேட்டூர் நகரக் கழக சார்பில் மேட்டூர் சரகக் காவல்துறையினரின் போக்கைக் கண்டித்துக் கண்டனப் பொதுக்கூட்டம் 04.09.2024 அன்று மேட்டூர் சதுரங்காடியில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு தலைமை வகித்தார். மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவின் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. இதில் சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் இரா.திருமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மேட்டூர் சரகக் காவல் துறையின் அடாவடிப் போக்கினைக் கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் இருக்கும் காவல் நிலையங்களில் காவல்துறை அதிகாரிகளால் நடைபெறும் விதிமீறல்கள், லஞ்சம், போதை பொருள் விற்பனைக்கு ஆதரவு, எளிய மக்களிடம் மிரட்டி அடித்து பணம் பறித்தல் போன்ற விவரங்களைத் திரட்டி ஆதாரத்துடன் பொதுக்கூட்டத்தில் எடுத்துரைத்தார். மேலும் மேட்டூர் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் முதல் மேட்டூர் சரகச் சாதாரணக் காவலர் வரையில் உள்ளோர் சட்ட விரோதச் செயல்களை மீண்டும்...

தேனி, திண்டுக்கல், திருச்சியிலும் கழகம் ஆர்ப்பாட்டம்!

தேனி, திண்டுக்கல், திருச்சியிலும் கழகம் ஆர்ப்பாட்டம்!

சேலம் : “மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் – கழக இளைஞரணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 10.09.2024 அன்று சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெற்றிமுருகன் வரவேற்புரையாற்றினார். சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் மாவட்ட இளைஞரணித்...

சேலத்தில் தலைவர், சென்னையில் பொதுச்செயலாளர் பங்கேற்பு கல்வி உரிமைகளைப் பறிக்கும் பாஜகவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலத்தில் தலைவர், சென்னையில் பொதுச்செயலாளர் பங்கேற்பு கல்வி உரிமைகளைப் பறிக்கும் பாஜகவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம் : “மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் – கழக இளைஞரணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 10.09.2024 அன்று சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெற்றிமுருகன் வரவேற்புரையாற்றினார். சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் மாவட்ட இளைஞரணித்...

சேலத்தில் இளைஞர் – மகளிர் – மாணவர் அணிகள்  கலந்துரையாடல்

சேலத்தில் இளைஞர் – மகளிர் – மாணவர் அணிகள் கலந்துரையாடல்

சேலம் : சேலம் மாவட்டக் கழக இளைஞரணி – மகளிர் அணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 01.09.2024 இளம்பிள்ளை நேரு,வேடியப்பன் இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. சேலம் (கி) மாவட்டச் செயலாளர் டேவிட் முன்னிலை வகித்தார். கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் (கி) மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் (மே) மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் தமிழரசன் ஆகியோர் இளைஞர்கள் மத்தியில் தங்களது கள அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மேலும் சேலம் மாவட்டக் கழக இளைஞரணி – மகளிர் அணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகக்த்திற்குப் புதியப் பொறுப்பாளர்களை நியமித்தார். அவை பின்வருமாறு:- மாவட்ட இளைஞர் அணித் தலைவராக ஏற்காடு தேவபிரகாஷ்,...

விநாயகர் சதுர்த்தி அத்துமீறலைத் தடுக்க வேண்டும்! கழகம் சார்பில் காவல்துறைக்குக் கோரிக்கை!

விநாயகர் சதுர்த்தி அத்துமீறலைத் தடுக்க வேண்டும்! கழகம் சார்பில் காவல்துறைக்குக் கோரிக்கை!

விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல்களைத் தடுக்கக் கோரி கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மனு அளிக்கப்பட்டுவருகிறது. சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் நடக்கும் அத்துமீறல் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கக் கோரியும், சிலைத் தயாரிப்பு – ஒலிப் பெருக்கி பயன்படுத்துதல் உள்ளிட்டு அரசு வகுத்த வழிகாட்டு நெறிகளைச் சரியான முறையில் பின்பற்ற வேண்டும், அதை அரசு கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 20.08.2024 அன்று சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தில் சென்னை மாவட்டக் கழக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை: விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் இந்துத்துவ அமைப்புகள் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைகளைத் துளியும் பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும்...

ஜாதி – குடி போதைக்கு எதிரானப் பரப்புரைக்குத் தயாராகும் கழகம்! மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் பேரெழுச்சி!

ஜாதி – குடி போதைக்கு எதிரானப் பரப்புரைக்குத் தயாராகும் கழகம்! மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் பேரெழுச்சி!

தர்மபுரி: தர்மபுரி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 07.08.2024 அன்று தர்மபுரி B.அக்ரகாரத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துரையாடல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கழகத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது. நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தர்மபுரி மாவட்டத் தலைவராக வெ.வேணுகோபால், தர்மபுரி மாவட்டச் செயலாளராக கு.நாகராஜ், மாவட்ட அமைப்பாளராக மா.பரமசிவம், பென்னாகரம் ஒன்றிய அமைப்பாளராக இரா.சரவணன் (B.அக்ரஹாரம்), காரிமங்கலம் ஒன்றிய அமைப்பாளராக கோ.செந்தில்குமார், நல்லம்பள்ளி ஒன்றிய அமைப்பாளராக மு.இராமதாஸ், தர்மபுரி ஒன்றிய அமைப்பாளராக பி.முத்துலட்சுமி, அரூர் ஒன்றிய அமைப்பாளராக பெருமாள், ஏரியூர் ஒன்றிய அமைப்பாளராக மா.அசோக்குமார், தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளராக சா.வையாபுரி ஆகியோரை நியமனம் செய்தார். சேலம் கிழக்கு: சேலம் கிழக்கு மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 07.08.2024 அன்று மாலை 6 மணியளவில் கருப்பூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கிய இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில்...

வனவாசியில் கலந்துரையாடல் கூட்டம்

வனவாசியில் கலந்துரையாடல் கூட்டம்

நங்கவள்ளி : வனவாசி கிளைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 01.08.2024 அன்று வனவாசி நகரத் தலைவர் பா.செந்தில்குமாரின் இல்லத்தில் நடைபெற்றது. இதற்கு சேலம் மாவட்டக் கழக அமைப்பாளர் டைகர் பாலன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, மேட்டூர் அண்ணாதுரை, கிட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாதந்தோறும் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது, கிளைக் கழக சந்தாவாக ரூ.100/- வழங்குவது, புதிய தோழர்களைக் கழகத்தில் இணைப்பது எனப் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் இராசேந்திரன், கிருஷ்ணன், வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர், பொருளாளர் பன்னீர்செல்வம், அமைப்பாளர் கதிர்வேல், நங்கவள்ளி பகுதி தோழர்கள் சிவக்குமார், விஸ்வநாதன், தானாவதியூர் பகுதியைச் சேர்ந்த புதிய தோழர்கள் சந்திரசேகரன், விக்னேஷ் ஆகியோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 08.08.2024 இதழ்

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை ஓமலூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை ஓமலூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரியும், தொடர் ஆணவப் படுகொலைகளைக் கண்டித்தும், 04.08.2024 அன்று சேலம் மாவட்டம் ஓமலூர் அண்ணா சிலை அருகில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கழக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல் தலைமை தாங்கினார். நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் பொ.கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், சிந்தாமணியூர் நகரத் தலைவர் ம.ரவிக்குமார், சிந்தாமணியூர் நகரப் பொருளாளர் கோ.ஜெயபிரகாஷ், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் சி.தங்கதுரை, பவளத்தானூர் இரா.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் இரா.டேவிட், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ரமேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர் இரா.தெய்வானை, வி.சி.க ஒழுங்கு நடவடிக்கைக் குழு மாநிலத் துணைச் செயலாளர் சௌ.பாவேந்தன், திராவிடர்...

கொளத்தூரில் கலந்துரையாடல்;  மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்

கொளத்தூரில் கலந்துரையாடல்; மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்

கொளத்தூர்: கொளத்தூர் நகரக் கலந்துரையாடல் கூட்டம் 27-07-2024 அன்று கொளத்தூர் சோதனைச் சாவடி அருகில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமை தாங்கினார். சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் அன்பு, நங்கவள்ளி பொறுப்பாளர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இயக்க வளர்ச்சி மற்றும் புதியத் தோழர்களை அறிமுகப்படுத்துவது தொடர்பான செய்திகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கொளத்தூர் நகரக் கழகத்தின் எதிர்காலப் பணிகள் – புதியத் தோழர்களை அமைப்பாக்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.. மேலும் இந்த கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அது பின்வருமாறு:- 1. மாதம்தோறும் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது. 2. பெரியார் படிப்பகத்தை முறையாக பயன்படுத்தி வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவது. 3. புதிய தோழர்களைச் சந்தித்து அவர்களுடன் கழகம் – பெரியாரியல் குறித்து எடுத்துக்கூறி அமைப்பாக்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. கூட்டத்தின் முடிவில் பெரியார் இயக்கத்தின்...

நங்கவள்ளி நகரக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

நங்கவள்ளி நகரக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

நங்கவள்ளி நகரக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 22.07.2024 அன்று நங்கவள்ளியில் உள்ள அ.செ.சந்திரசேகரன் இல்லத்தில் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமையில் நடைபெற்றது. சேலம் (மே) மாவட்ட அமைப்பாளர் அ.அண்ணாதுரை, சேலம் (மே) மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, மே.கா.கிட்டு, கொளத்தூர் ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் இயக்க வளர்ச்சி குறித்தும், புதிய தோழர்களை இயக்கத்திற்கு சேர்ப்பது, சந்தா சேர்ப்பு மற்றும் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், நங்கவள்ளி நகரச் செயலாளர் பிரபாகரன், அ.செ.சந்திரசேகரன், அருள்குமார், ரமேஷ், ரவிக்குமார், பேரறிவாளன் ஆகியோர் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 25.07.2024 இதழ்

தலைவர் பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள் தாரமங்கலம் பொதுக்கூட்டத்தில் படிவம் வழங்கினர்

தலைவர் பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள் தாரமங்கலம் பொதுக்கூட்டத்தில் படிவம் வழங்கினர்

தாரமங்கலம் நகரக் கழகத்தின் சார்பில் “குடிஅரசு இதழ் மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா” பொதுக்கூட்டம் 20.06.2024 அன்று தாரமங்கலம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பவளத்தனூர் சரவணன் தலைமை தாங்கினார், கே.ஆர்.தோப்பூர் கண்ணன் வரவேற்புரையாற்றினார், தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் தங்கதுரை, குடந்தை பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் முதல் நிகழ்வாக உமாபதி – பொன்ராஜ் குழுவின் அரசியல் நையாண்டி மற்றும் மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவபிரகாஷ் தொடக்கவுரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கே.ஆர்.தோப்பூர் கணேசன் நன்றி கூற கூட்டம் நிறைவு...

மாநிலத்தில் 4-வது இடம்பெற்ற கழக மாணவர்

மாநிலத்தில் 4-வது இடம்பெற்ற கழக மாணவர்

கழகத் தோழர்கள் கொளத்தூர் சுதா – ராஜா இணையரின் மகன் இரா.சு. கதிரவன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 496/500 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். மாணவர் கதிரவன் கோவிலுக்கு போனதில்லை, வேண்டுதல் வைத்ததில்லை, பாதபூஜை நடத்தவில்லை, சிறப்பு யாக பூஜையில் பங்கேற்கவில்லை ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு, தன்னம்பிக்கையோடு படித்து பத்தாம் வகுப்பில் 496 மதிப்பெண்களை பெற்று மாநிலத்தில் நான்காவது இடம் பிடித்திருக்கிறார். தேர்வில் வென்றதை அடுத்து கழகத் தலைவர் கொளத்தூர் மணியை தனது பெற்றோர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். பெரியார் முழக்கம் 16.05.2024 இதழ்

கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கழகக் கலந்துரையாடல் கூட்டம்

சேலம் : தாரமங்கலம் நகர கழக கலந்துரையாடல் கூட்டம் 11.05.2024 அன்று பவளத்தானூர் சரவணன் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சரவணன் தலைமை தாங்கினார். பவளத்தானூர் தனசேகர் முன்னிலை வகித்தார். இதில் தாராமங்கலம் நகர கழக சார்பில் மே மாத இறுதிக்குள் “குடிஅரசு இதழ்” மற்றும் “சுயமரியாதை இயக்க” நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பவளத்தானூர் சரவணன், தனசேகர், கே.ஆர்.தோப்பூர் கண்ணன், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை, இளம்பிள்ளை சேகர், நங்கவள்ளி நகர செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 16.05.2024 இதழ்

மேட்டூர் ஆர்.எஸ். மாதையன் காலமானார்

மேட்டூர் ஆர்.எஸ். மாதையன் காலமானார்

சேலம் மாவட்டம் மேட்டூர் RS பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் சௌந்தர்ராஜனின் தந்தை மாதையன் (74) 07.05.2024 அன்று உடல் நலக்குறைவின் காரணமாக முடிவெய்தினார். மறைந்த தோழர் மாதையன் அவர்களின் இறுதி நிகழ்வு மேட்டூர் RS,தேங்கல்வாரை,NSK நகரில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினார்கள். பெரியார் முழக்கம் 09.05.2024 இதழ்

மேட்டூர் பசரியா மறைவு

மேட்டூர் பசரியா மறைவு

மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் அம்ஜத் கானின் தாயார் பசரியா 27.04.2024 அன்று முடிவெய்தினார். மறைந்த அம்மையாரின் இறுதி நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழக சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் திரளாகப் பங்கேற்று மரியாதை செலுத்தினார்கள். பெரியார் முழக்கம் 09.05.2024 இதழ்

தோழர் சி.சுப்பிரமணியன் மறைந்தார் சடங்குகளை மறுத்து உடல் அடக்கம்

தோழர் சி.சுப்பிரமணியன் மறைந்தார் சடங்குகளை மறுத்து உடல் அடக்கம்

சேலம் : திராவிடர் விடுதலைக் கழகத் தோழர், கொளத்தூர், அய்யம்புதூர் சி.சுப்பிரமணியன் அவர்கள் 21.04.2024 அன்று முடிவெய்தினார். அவரது உடலை கழகப் பெண் தோழர்கள் சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார்கள். இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், தோழமை இயக்கத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். இறந்தவர்களின் உடலை பெண்கள் சுமக்க கூடாது. சுடுகாடு வரை பெண்கள் வரக்கூடாது என்ற மூடத்தனத்தை மறுத்து, ஜாதி – மத சடங்குகளை மறுத்து பெண்களே முன்னின்று இறுதி நிகழ்வுகளை நடத்தியது அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு மறைந்த சி.சுப்பிரமணியம் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மறைந்த தோழர் சி.சுப்பிரமணியன் படத்தை திறந்துவைத்து நினைவேந்தல் உரையாற்றினார். இந்நிகழ்வில் கழக ஈரோடு வடக்கு...

சென்னை, மதுரை, கோவையில் கழகம் பரப்புரை

சென்னை, மதுரை, கோவையில் கழகம் பரப்புரை

சென்னை : இந்தியா கூட்டணியின் தென் சென்னை மக்களவைத் தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. இதில் உமாபதி – கார்மேகம் – பொன்ராஜ் குழுவின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சி நடைபெற்றது. கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், எட்வின் பிரபாகரன், அன்னூர் விஷ்ணு ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். மதுரை : இந்தியா கூட்டணியின் மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை மாவட்டக் கழக சார்பாக 16.04.2024 அன்று அழகர் கோவில், கிடாரிப்பட்டி, வள்ளாலபட்டி, சாணிப்பட்டி, கருங்காலக்குடி, கொட்டாம்பட்டி, தும்பைப்பட்டி, சந்தைப் பேட்டை, நொண்டிகோவில் பட்டி, மேலூர் உள்ளிட்ட கிராமப்புறங்களில் பரப்புரை செய்தனர். இதில் மாவட்டச் செயலாளர் மா.பா.மணிஅமுதன், மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி, மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி, முருகேசன், ஆசிரியர் நடராசன், பிரகாஷ், சந்துரு உள்ளிட்ட கழகத் தோழர்களும், பவானி,...

கொளத்தூரில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

கொளத்தூரில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

கொளத்தூர் : கொளத்தூர் நகரக் கழக சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் 09.04.2024 அன்று கொளத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. பாடகர் கோவன் குழுவின் கலை நிகழ்ச்சி மற்றும் கலகக்காரன் குழுவின் தெருக்கூத்து நாடகத்துடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு கொளத்தூர் நகரத் தலைவர் ராமமூர்த்தி வரவேற்புரையாற்றினார். சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார் தலைமை தாங்கினார். இதில் திராவிடர் முன்னேற்றக் கழக கொளத்தூர் ஒன்றிய செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி கொளத்தூர் ஒன்றிய செயலாளர் சேட்டு குமார், தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் தீனரட்சகன், திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி மாவட்ட து. அமைப்பாளர் முருகேசன், ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட தலைவர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கழக கொளத்தூர் நகரச் செயலாளர் அறிவுச்செல்வன் நன்றி கூற பொதுக்கூட்டம்...

புரட்சியாளர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா! பல்வேறு மாவட்டங்களில் கழகம் மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா! பல்வேறு மாவட்டங்களில் கழகம் மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரியாதை செலுத்தப்பட்டு சமத்துவநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு 14.04.2024 அன்று காலை 9 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன் மற்றும் பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். மடிப்பாக்கம் பகுதிக் கழக சார்பில் ஆதம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கழகத் தோழர்கள் – ஆதரவாளர்கள் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஈரோடு : புரட்சியாளர் அம்பேத்கர் அவரது 134வது பிறந்த நாளை முன்னிட்டு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள அம்பேத்கர்...

மேட்டூர் ஆர்.எஸ்-இல் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

மேட்டூர் ஆர்.எஸ்-இல் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

மேட்டூர் ஆர்.எஸ் நகரக் கழக சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் 10.04.2024 அன்று மேட்டூர் ஆர்.எஸ் வணிக வளாகம் முன்பு நடைபெற்றது. பாடகர் கோவன் குழுவின் கலை நிகழ்ச்சி மற்றும் கலகக்காரன் குழுவின் தெருக்கூத்து நாடகத்துடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. பொதுக் கூட்டத்திற்கு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அ.சக்திவேல் தலைமை தாங்கினார், RS பகுதித் தலைவர் முரளிதரன் வரவேற்புரையாற்றினார். திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் கவிஞர் வைரமணி, கழக மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு ஆகியோர் உரையாற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நிறைவாக RS பகுதி செயலாளர் கு.விவேக் நன்றி கூற பொதுக் கூட்டம் நிறைவுபெற்றது. பெரியார் முழக்கம் 18.04.2024 இதழ்

கழகத்தின் தேர்தல் பரப்புரைகள் தீவிரம் பாஜகவுக்கு எதிரான பரப்புரைகளுக்கு அமோக ஆதரவு!

கழகத்தின் தேர்தல் பரப்புரைகள் தீவிரம் பாஜகவுக்கு எதிரான பரப்புரைகளுக்கு அமோக ஆதரவு!

சேலம் : மேட்டூர் நகரக் கழக சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” பொதுக்கூட்டம் 06.04.2024 அன்று மேட்டூர் சின்ன பார்க் திடலில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மேட்டூர் நகரத் தலைவர் செ. மார்ட்டின் தலைமை தாங்கினார், கீ.கோ.தேன்மொழி வரவேற்புரையாற்றினார். கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக பாடகர் கோவன் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் செல்வேந்திரனின் இயக்கத்தில் “கலகக்காரன்” நையாண்டி தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராஜ், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, ம.க.இ.க பாடகர் கோவன் ஆகியோர் மோடி ஆட்சி தொடரலாமா? என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மேட்டூர் நகர தி.வி.க.செயலாளர் சு.குமரப்பா நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கழகத்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

• பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி அவர்களை ஆதரித்து தெருமுனைக் கூட்டங்கள் ஏப்ரல் 6,7,8,9 ஆகிய 4 நான்கு நாட்கள் நடைபெற உள்ளன. இந்நிகழ்வின் இறுதியில், 7,8 ஆகிய நாட்களில் நடைபெறும் பொது கூட்டங்களில் தலைவர் கொளத்துர் மணி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிகள் திராவிட இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக நடைபெறுகின்றன. • திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” என்ற தலைப்பில் இந்தியா கூட்டணியை ஆதரித்து நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் ஏப்ரல் 06,09 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மேட்டூர், கொளத்தூர், மேட்டூர் ஆர்.எஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் நடைபெறவுள்ளது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதில் பாடகர் கோவன் குழுவினர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெறும். பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்

கொளத்தூரில் தோழர் செல்லமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி

கொளத்தூரில் தோழர் செல்லமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி

சேலம் : கொளத்தூர் நிர்மலா பள்ளி ஆசிரியரும் கழகத் தோழருமான செல்வேந்திரனின் தந்தை பெ.செல்லமுத்து கடந்த 04.03.2024 அன்று முடிவெய்தினார். அவரது உடலுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பெ. செல்லமுத்துவின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் 10.03.2024 அன்று கொளத்தூர், உக்கம் பருத்திக்காட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. முன்னதாக மறைந்த தோழர் பெ. செல்லமுத்துவின் படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்திற்கு கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் இரா. விஜயகுமார் தலைமை தாங்கினார், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார், உக்கம்பருத்திக்காடு கிளைத் தலைவர் சுப்பிரமணியம், TNEB ஈரோடு பெ.அன்புச்செழியன், மருத்துவர் வ.ப.வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் கண்ணம்மாள், நிர்மலா மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ம.விஜய் அமுல்ராஜ் ஆகியோர் தோழர் செல்லமுத்து அவர்களுடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்....

நங்கவள்ளியில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் பொதுக்கூட்டம்

நங்கவள்ளியில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் பொதுக்கூட்டம்

சேலம் : சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் தானாபதியூரில் இந்து முன்னணியின் தடையைத் தகர்த்து சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! 2024 தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் 03.03.2024 அன்று தானாபதியூர் பகுதியில் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் சர்வாதிகார BJP அரசின் அவலங்களை விளக்கி பாடல்கள் பாடப்பட்டது. தொடர்ந்து கார்ப்பரேட் சாமியார்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் காவை இளவரசன் அவர்களின் மந்திரமல்ல – தந்திரமே என்கின்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. வனவாசி நகர செயலாளர் பழ.உமாசங்கர் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு தலைமையுரையாற்றினார். தொடர்ந்து கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சக்திவேல், தானாபதியூர் தி.மு.க.இளைஞரணி சந்திரசேகரன், இளம்பிள்ளை திவ்யா, நங்கவள்ளி CPI ஒன்றியச் செயலாளர் பழ. ஜீவானந்தம், தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் திருமதி வழக்கறிஞர் முத்து...

கழகத்தின் தெருமுனைக் கூட்டங்களுக்கு மக்களிடம் வரவேற்பு! சேலம், திண்டுக்கல், சென்னையில் முழுவீச்சில் பரப்புரை!

கழகத்தின் தெருமுனைக் கூட்டங்களுக்கு மக்களிடம் வரவேற்பு! சேலம், திண்டுக்கல், சென்னையில் முழுவீச்சில் பரப்புரை!

சென்னை : சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரைக் கூட்டங்கள் வட சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை, சைதாப்பேட்டை கங்கையம்மன் கோயில் தெரு, சேத்துப்பட்டு அம்பேத்கர் திடல், மங்களாபுரம், ஓட்டேரி அஞ்சு லைட், ஜாயின்ட் அலுவலகம், அயன்புரம் உள்ளிட்ட இடங்களில் பிப்ரவரி 20 முதல் பிப்ரவரி 24 வரை நடைபெற்றது. உமாபதி – பொன்ராஜ் குழுவின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சி மற்றும் ஈரோடு பேரன்புவின் ராப் இசை பாடல்களுடன் ஒவ்வொரு கூட்டமும் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், எட்வின் பிரபாகரன், அருண் கோமதி, பெரியார் நம்பி, மக்கள் அதிகாரம் காமராஜ், துணைவேந்தன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். மேற்கண்ட கூட்டங்களை வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தட்சிணாமூர்த்தி, ஏசு குமார், ராஜன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். திண்டுக்கல் : சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!...

சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளித்து காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். சென்னை : நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ‘சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்’ என்ற தலைப்பில் சேலம் மேட்டூரில் உள்ள தானாபதியூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் பிப்ரவரி 24ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்தத் திராவிடர் விடுதலைக் கழகம் திட்டமிட்டிருந்தது. இந்தக் கூட்டத்தை நடத்த சேலம் ஜலகண்டபுரம் காவல்நிலையத்தில் அனுமதி கேட்டுக் கடந்த பிப்.10ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. ஆனால், சட்ட ஒழுங்கைச் சுட்டிக்காட்டியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கூறியும் கூட்டம் நடத்த அனுமதி மறுத்து சேலம் ஜலகண்டபுரம் காவல்துறை அந்த மனுவை நிராகரித்தது. இதை எதிர்த்தும், சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த...

பரப்புரையில் பம்பரமாய்ச் சுழலும் திண்டுக்கல் – சென்னை மாவட்டங்கள்

பரப்புரையில் பம்பரமாய்ச் சுழலும் திண்டுக்கல் – சென்னை மாவட்டங்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் 2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரை இயக்கம் 11.02.2024 அன்று நெய்காரபட்டி, காவலப்பட்டி, வேலாயுதம்பாளையம் புதூர், பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், வயலூர், மிடாப்பாடி, குமாரபாளையம், குருவன்வலசு, தாழையூத்து, சின்னக்கலையம்புத்தூர், மானூர், நரிக்கல்பட்டி, மேல்கரைப்பட்டி, கீரனூர், தொப்பம்பட்டி, வாகரை, புளியம்பட்டி, அமரபூண்டி, விருப்பாச்சி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, மாட்டுப்பாதை, கணக்கன்பட்டி, பொருளூர், கள்ளிமந்தயம், கொ.கீரனூர், I.வாடிப்பட்டி, சக்கம்பட்டி, சிந்தலப்பட்டி, அம்பிளிக்கை, இடையகோட்டை, மார்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, வெரியப்பூர், கேதையறும்பு, லெக்கயன்கோட்டை, அத்திக்கோம்பை, தும்பிச்சம்பட்டி, ஒட்டன்சத்திரம் இரயில் நிலையம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம், மூலச்சத்திரம், ஸ்ரீராமபுரம், கன்னிவாடி, தருமத்துப்பட்டி, ஆத்தூர், சித்தயன்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் பத்து நாட்களாக தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. புளியம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தை கவனித்த பெரியார் தொண்டர் ஒருவர் மாலை ஒன்றை வாங்கி பெரியார் படத்திற்கு மாலை அணிவித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது....

சேலம் மாவட்டக் கழகம் சார்பில் 525 சந்தாக்களை ஒப்படைப்பு

சேலம் மாவட்டக் கழகம் சார்பில் 525 சந்தாக்களை ஒப்படைப்பு

சேலம் கிழக்கு – மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்  10.02.2024 அன்று சேலம் கருப்பூர் சக்தி இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு பெரியார் முழக்க சந்தா தொகை ஒப்படைப்பு மற்றும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையாக  “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் ;சமூக ஒற்றுமையைக் காப்போம்” என்ற தலைப்பில் தெரு முனைக் கூட்டங்கள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. 11.02.2024 ஞாயிறு அன்று நங்கவள்ளியில் பொதுக் கூட்டத்துடன் பரப்புரையை தொடங்கி, சேலம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு பெரியார் முழக்க சந்தா முதல் தவணையாக சேலம் மாவட்டத்தின் சார்பாக (கிழக்கு – மேற்கு) 525 சந்தாவிற்கு தொகையினை கழகத் தலைவரின் முன்னிலையில் தோழர்கள் ஒப்படைத்தனர். வருகின்ற 18.2. 2024 ஞாயிற்றுகிழமை எஞ்சிய பெரியார் முழக்க சந்தாக்களையும் மாவட்ட தலைமையிடம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மாவட்டத்திற்கான...

நாடாளுமன்றத் தேர்தலில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் எழுச்சியோடு தொடங்கியது கழகத்தின் பரப்புரை

நாடாளுமன்றத் தேர்தலில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் எழுச்சியோடு தொடங்கியது கழகத்தின் பரப்புரை

பிப்ரவரி 2-ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற கழகத் தலைமைக் குழுவில், “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” என்ற முழக்கத்தோடு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் கழகத்தின் பரப்புரைக் கூட்டங்கள் பொதுமக்களின் வரவேற்போடு எழுச்சியோடு தொடங்கி நடைபெற்று வருகின்றன. சென்னை: சென்னை மாவட்டத்தின் முதல் பரப்புரைக் கூட்டம் 10.02.2024 அன்று வேளச்சேரி காந்தி சாலையில் பொதுக்கூட்டமாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் எட்வின் பிரபாகரன் தலைமை தாங்கினார். இரண்யா வரவேற்புரையாற்றினார். பாடகர் கோவன் பங்கேற்ற ம.க.இ.க கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகளுடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. கழகத் தோழர் பேரன்பு ராப் பாடல்கள் பாடினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் இரா.உமா, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் ஆகியோர் 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் பேராபத்துக்களை மக்களிடம் விளக்கிப் பேசினர். திராவிட முன்னேற்றக்...

கொளத்தூரில் “எது திராவிடம்? எது சனாதனம்?” பொதுக்கூட்டம்

கொளத்தூரில் “எது திராவிடம்? எது சனாதனம்?” பொதுக்கூட்டம்

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாள் பொதுக்கூட்டம் கொளத்தூர் நகர கழக சார்பில் 23.12.2023 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள கழக செயல்வீரர் இளஞ்செழியன் நினைவரங்கில் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியோடு பொதுக்கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார் தலைமை தாங்க, கொளத்தூர் நகர தலைவர் சி. ராமமூர்த்தி வரவேற்புரையாற்றினார். திமுக கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் ம. மிதுன் சக்கரவர்த்தி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன், மேற்கு மாவட்டச் செயலாளர் சி. கோவிந்தராசு கிழக்கு மாவட்டத் தலைவர் க. சக்திவேல், நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் தங்கதுரை, மேட்டூர் நகரச் செயலாளர் சு குமாரப்பா, தி.மு.க. கொளத்தூர் நகரச் செயலாளர் பெ. நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் சதாசிவம், கழக தலைமைக்குழு...

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழக சார்பில்  இராயப்பேட்டை, சிம்சன், எம்ஜிஆர் நகர், தியாகராயர் நகர், மயிலாப்பூர், கலைஞர் கருணாநிதி நகர், நங்கநல்லூர், பிவி நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கழகம் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.   இந்நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழக பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். கோவை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கோவை மாவட்டக் கழக சார்பில் காந்திபுரம் பெரியார் சிலைக்கு கழகத் தோழர் கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை...

பெரியார் நினைவுநாள் : கழகம் முன்னெடுக்கும் நிகழ்ச்சிகள்

பெரியார் நினைவுநாள் : கழகம் முன்னெடுக்கும் நிகழ்ச்சிகள்

ஈரோடு வடக்கு : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்ட நிறைவுப் பொதுக்கூட்டம் 24.12.2023, ஞாயிறு மாலை 6 மணியளவில் குருவரெட்டியூர் பிரகலாதன் நினைவரங்கத்தில் நடைபெறுகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். சேலம் : சேலம் மாவட்டக் கழகம் சார்பில் 119 தெருமுனைக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்தி முடித்துள்ளது. 120வது கூட்டம் பொதுக்கூட்டமாக 23.12.2023 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறுகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். நிகழ்வில் டி.கே.ஆர் இசைக் குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெறும். தஞ்சாவூர் : பேராவூரணி கழகம் சார்பில் பெரியார் 50வது நினைவு நாள் – வைக்கம் நூற்றாண்டு – அம்பேத்கரின் 67வது நினைவுநாள் – எது திராவிடம்? எது சனாதனம்? கொள்கை...

நங்கவள்ளியில் அம்பேத்கர் நினைவுநாள் கூட்டம்

நங்கவள்ளியில் அம்பேத்கர் நினைவுநாள் கூட்டம்

சேலம் : நங்கவள்ளி ஒன்றியக் கழக சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவு நாளை ஒட்டி எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டம் 06.12.2023 அன்று புதன் மாலை 4 மணியளவில் வனவாசி மேல் ரோடில் நடைபெற்றது. டி.கே.ஆர் குழுவின் இசை நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் பொ.கிருஷ்ணன் தலைமை வகித்தார், ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், வனவாசி நகர தலைவர் செந்தில்குமார், நங்கவள்ளி அ.செ. சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நங்கவள்ளி நகரச் செயலாளர் சு.பிரபாகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், தலைமைக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சக்திவேல், சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவபிரகாஷ், CPI நங்கவள்ளி ஒன்றியக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், திராவிடத் தமிழர் கட்சி மாநில அமைப்பு செயலாளர் சீ.செல்வமுருகேசன், வனவாசி நகர செயலாளர் பழ.உமாசங்கர் ஆகியோர்...

அம்பேத்கர் மணி மண்டபத்தில் – கழகம் வீரவணக்கம்

அம்பேத்கர் மணி மண்டபத்தில் – கழகம் வீரவணக்கம்

சென்னை : புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்டத் துணைத் தலைவர் சுகுமார், இராஜேசு, அசோக் ஆகியோர் கலந்துகொண்டனர். மயிலாப்பூர் : புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவு நாளை ஒட்டி மயிலைப் பகுதிக் கழகம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மயிலைப் பகுதித் தலைவர் இராவணன், அய்யா உணவகம் சுரேஷ், பிரவீன், உதயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேத்துப்பட்டில் ராஜேந்திரன் தலைமையில் கழகத் தோழர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சேலம் மேற்கு : புரட்சியாளர் அம்பேத்கர் 67வது நினைவுநாளை ஒட்டி 06.12.23 காலை 10 மணியளவில் சேலம் மேற்கு...

புலியூரில் ‘மாவீரர் நாள்’

புலியூரில் ‘மாவீரர் நாள்’

சேலம் : கொளத்தூர் ஈழ ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் “மாவீரர் நாள்” நிகழ்ச்சி 27.11.2023 திங்கள் மாலை 5.30 மணியளவில் சேலம் மாவட்டம் கொளத்தூர் புலியூர் பிரிவில் அமைந்துள்ள பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் கடைப்பிடி க்கப்பட்டது. நிகழ்விற்கு தார்க்காடு செ. தர்மலிங்கம் தலைமை தாங்கினார். புலியூரைச் சேர்ந்த தோழர்கள் சரவணன், வாசு, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொளத்தூர் திவிக நகரச் செயலாளர் அறிவுச்செல்வன் வரவேற்புரையாற்றினர். மாலை 6.05 மணிக்கு தமிழீழ விடுதலைக்காக போர்க்களத்தில் வீரச் சாவடைந்த விடுதலைப் புலி மாவீரர்கள் – பொதுமக்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் “மாவீரர் பாடல்” ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாவீரர் பாடல் ஒளிபரப்பிற்கு பிறகு “மாவீரர் உரை” நிகழ்த்தும் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம இளங்கோவன், மூத்த வழக்கறிஞர் இரத்தினம் ஆகியோர் உரையாற்றினார்கள். நிறைவாக கழகத்...

கழகத் தோழர் உடலுக்கு அரசு மரியாதை!

கழகத் தோழர் உடலுக்கு அரசு மரியாதை!

சேலம் : கோவில் வெள்ளாரை சேர்ந்த கழகத் தோழர் K. நாகராஜ் 22.01.2024 அன்று சாலை விபத்தில் முடிவெய்தினார். அவரது உடல் உறுப்புகள் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் தானமாக வழங்கப்பட்டது.  உடலுறுப்பு தானம் செய்வோரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி தோழர் நாகராஜின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தோழரின் உடலுக்கு கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் சேலம் மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜி, நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை, தங்கமாபுரிப்பட்டினம் ராமச்சந்திரன், நங்கவள்ளி நகர செயலாளர் பிரபாகரன், மூலப்பாதை கவியரசு, கோகுல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். வெள்ளார் சுற்றுவட்டாரப் பகுதியில் உடல் உறுப்பு தானம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கொலைகார சாமியாரை  கைது செய்யக் கோரி கழகம் புகார் மனு

கொலைகார சாமியாரை கைது செய்யக் கோரி கழகம் புகார் மனு

சென்னை : “டெங்கு, மலேரியா, காலரா போன்று சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று” என்று பேசிய மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி நிர்ணயித்த அயோத்தி சாமியார் பரம்ஹன்ஸ ஆச்சாரியாவை கைது செய்து சிறையில் அடைக்க கோரி கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் இராயப்பேட்டை காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, சனாதன சக்திகளின் கனவு தமிழ்நாட்டில் ஒருபோதும் பலிக்காது, சனாதனத்திற்கு எதிரான கருத்தில் உறுதியாக நிற்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் துணை நிற்கும் என்று கூறினார். கோவை : கோவை மாநகரக் கழக சார்பில் காட்டூர் காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கழக அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் திண்டுக்கல் மாவட்டத் துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது....

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

காலை சிற்றுண்டி வழங்குவதன் காரணமாக பள்ளிக் கழிவறைகள் நிரம்பி வழிகின்றன என்ற வர்ணாசிரம திமிரோடு தலைப்பு செய்தி வெளியிட்ட தினமலம் நாளேட்டை கழகத் தோழர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். சென்னை : பள்ளி மாணவர்களுக்கு “காலை சிற்றுண்டி” திட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட சனாதன வெறி பிடித்த தினமலரை கண்டித்து தினமலம் நாளிதழ் எரிப்பு போராட்டம் இன்று 01.09.2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தினமலம் நாளேடு அலுவலகம் அருகே இராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தினமலம் நாளிதழை தீயிட்டு கொளுத்தி தினமலம் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க வளர்மதி, தமிழ்நாடு மாணவர் கழக இரண்யா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரையாற்றினார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கரு.அண்ணாமலை, சேத்துப்பட்டு இராசேந்திரன், மயிலை...