கடலூரில் கழகக் கலந்துரையாடல்

15.04.2018 அன்று கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பாக  கலந்துரையாடல் கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகில் பேரளையூர் கிராமத்தில் ஆசிரியர் அறிவழகனின் மிகச் சிறப்பான ஒருங்கிணைப்பில் கடலூர் மாவட்ட செயலாளர் நட.பாரதிதாசன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர்  பூ.ஆ.இளையராசன் சிதம்பரம் நகர செயலாளர், மதன்குமார்  ஆகியோர் கலந்து கொண்டு அமைப்பு குறித்தும், பெரியார் அம்பேத்கர் குறித்தும் சிறப்பான கருத்துக்களை முன் வைத்தனர். நேமம், வண்ணான்குடிகாடு, கருவேப்பிலங்குறிச்சி, பேரளையூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 20 புதிய தோழர்கள் அமைப்பில் இணைந்தனர். மாவட்ட, ஒன்றிய கிளைக் கழக, மாணவர் கழகப் பொறுப்புகள் நியமனம் பற்றியும், கழகத் தலைவரை அழைத்து பொதுக் கூட்டம் நடத்துவது பற்றியும், புரட்சிப் பெரியார் முழக்கம் மற்றும் நிமிர்வோம் சந்தா சேர்ப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.  முத்து நன்றியுரை கூறிய பின் கூட்டம் முடிவு பெற்றது.

பெரியார் முழக்கம் 19042018 இதழ்

You may also like...