Category: ஊடகங்களில் திவிக

சென்னையில் மார்க்ஸ் சிலை!

சென்னையில் மார்க்ஸ் சிலை!

தமிழ்நாட்டில் காரல் மார்க்ஸ் சிலை திறக்கப்படும் என்று திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார் சோவியத் சோஷலிச ஆட்சிக்கு எதிரான உள்நாட்டு எதிர்ப்பு புரட்சிகளை உறுதியாக அடக்கியவர் ஸ்டாலின், பெரியார் இயக்கம் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ரஷ்யாவை உறுதியாக ஆதரித்தது அதன் நினைவாகத்தான் கலைஞர் தனது மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டினார் சோவியத் பயணம் மேற்கொண்ட பெரியார், ஸ்டாலின் பங்கேற்ற மே தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலகட்டத்தில் தான் ஸ்டாலின் அதிபர் பதவிக்கு வந்தார் எதிர் புரட்சிகளை முறியடித்து சோவியத்தில் சோசியலிசத்தை உறுதிப்படுத்திய ஸ்டாலின் பெயரை த் தாங்கி நிற்கும் உலகின் ஒரே முதல்வர் திராவிட ஆட்சியின் முதல்வர் தான் : காரல் மார்க்சின் சிலையை திறந்து வைக்கும் அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டு இருப்பது மிகச் சிறப்பு; மிகப் பொருத்தம். – விடுதலை இராசேந்திரன் பெரியார் முழக்கம் 10042025இதழ்

மோடி நடத்துவது “உயர்ஜாதி” ஆட்சி –

மோடி நடத்துவது “உயர்ஜாதி” ஆட்சி –

“பார்ப்பன‌ உயர் ஜாதி சுரண்டலுக்கு வழிவகுக்கும் ஜாதி அமைப்பு. இதுகுறித்து நான் ஆழமாக ஆராய்ந்தேன். இந்த நாட்டில் பார்ப்பன உயர் ஜாதியில் பிறக்காத ஏனையோர் இரண்டாம் தர குடிமக்களாகவே இருக்கின்றனர்” என்று ராகுல் காந்தி பேசியுள்ளார். கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி பாட்னாவில் நடந்த ‘அரசியல் சட்டத்தை காப்போம்’ மாநாட்டில் ராகுல் காந்தி பேசினார். மூன்றாவது முறையாக பீகார் வந்துள்ளார் ராகுல் காந்தி, “காந்தியடிகள் உண்மையின் சோதனை நூலை எழுதினார். மோடி பொய்களின் சோதனையை எழுதிக் கொண்டிருக்கிறார்” என்று கூறி ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாகத் தாக்கினார். மேலும் அவர் பேசியதாவது: அரசியல் சட்டம் சாவர்க்கரின் சிந்தனை அல்ல; மாபெரும் தலைவர்களான காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனையைக் கொண்டது. இப்போது நடக்கும் ஆட்சி பார்ப்பன உயர்ஜாதி நலனுக்காகவே நடக்கிறது. தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிறப்படுத்தப்பட்ட மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இந்த நாட்டில் நீங்கள் பார்ப்பனராகவோ,‌‌ உயர் ஜாதியினராகவோ பிறக்காவிட்டால் இரண்டாம்...

எளிதில் கிட்டும் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பு!

எளிதில் கிட்டும் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பு!

தமிழ்நாட்டில் சுமார் 10 ஆண்டுகளாக, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டில் MS / PhD போன்ற மேற்படிப்பு படிப்பதற்கு என்று உதவித்தொகை திட்டம் நடைமுறையில் இருக்கிறது. 2021-ஆம் ஆண்டுவரை இந்த திட்டத்தினால் பயன்பெற்றவர்கள் மொத்தம் 10 பேர்கூட கிடையாது. ஆனால், 2021ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு இப்போது வரை மட்டும் சுமார் 135 பேர் இந்த திட்டத்தினால் பயன்பெற்று வெளிநாட்டில் படிக்கிறார்கள். பல மாணவர்கள் வருடத்திற்கு 30 லட்சம் ரூபாய் வரை இத்திட்டத்தில் நிதியுதவி பெறுகிறார்கள். கடந்த நிதி ஆண்டில் மட்டும் தமிழ்நாடு அரசு சுமார் 30 கோடி ரூபாய் இதற்காக செலவு செய்திருக்கிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் 27032025இதழ்

மும்மொழிக் கொள்கை சீரழிவு!

மும்மொழிக் கொள்கை சீரழிவு!

புதிய கல்விக்கொள்கையை இந்தியாவிலேயே முதன்முதலில் நடைமுறைப்படுத்திய மாநிலம் கர்நாடகா. 2021-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. அரசு, புதிய கல்விக்கொள்கையை அம்மாநிலத்தில் நடைமுறைப்படுத்தியது. 2023-ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசு மீண்டும் அமைந்தவுடன், இந்தப் புதிய கல்விக்கொள்கையைத் திரும்பப் பெறுவது குறித்தும், மாநிலக் கல்விக் கொள்கையை வரையறுப்பது தொடர்பாகவும் 15 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்தக் குழு இதுவரை தங்களது வரைவறிக்கையைச் சமர்பிக்கவில்லை. இதனால், புதிய கல்விக்கொள்கை இன்னும் அம்மாநிலத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி மும்மொழிக் கொள்கையும் கடைபிடிக்கப்படுகிறது. மூன்றாவது மொழியாக எந்த இந்திய மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம் என்று, தமிழ்நாட்டில் பா.ஜ.க. சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், கர்நாடகாவில் மூன்றாவது மொழியாக இந்திதான் கற்பிக்கப்படுகிறது. 6, 7-ஆம் வகுப்புகளில் இந்தி கற்றுக்கொடுக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோதும் முழுமையாக இந்தி ஆசிரியர்களை நியமிக்கவில்லை. இப்படி, கற்றல் குறைபாட்டோடும், அதனால் ஏற்படும் மனச்சுமையோடும் இருக்கும் மாணவர்களுக்குப்...

ஜாதியைத் தூக்கிட்டு வராதீங்க!

ஜாதியைத் தூக்கிட்டு வராதீங்க!

அமெரிக்காவில் வாழும் குஜராத்தைச் சேர்ந்த டயலன் பட்டேல் என்பவர், “டல்லாஸில் எனது சாதிக்கான (லியுவா படிதார் சமாஜ் சாதி) வாலிபால் போட்டி நடைபெறுகிறது. அமெரிக்காவில் 40,000 பேர் எங்கள் சாதியினர். அதில் 8,000 பேர் இங்கு உள்ளனர். குஜராத்தின் ஒரு சில பகுதியைச் சேர்ந்தவர்கள் நாங்கள். நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறோம். நாங்கள் கிராமப்புற அமெரிக்காவில் மோட்டல் அல்லது பெட்ரோல் பம்ப் வைத்து உள்ளோம்” என்று ஜாதிப் பெருமையுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த பதிவுக்கு அமெரிக்காவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஜாதிப் பெருமை பேசிய இந்தியர்களை கடுமையாக விமர்சனம் செய்து அமெரிக்கா அரசியல்வாதிகள் போஸ்ட் செய்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிராண்டன் கில் செய்துள்ள பதிவில், “அமெரிக்கா என்பது தகுதி வாய்ந்தவர்களுக்கான நாடு. இதற்கு காரணம் நம்மிடம் சாதி அமைப்பு இல்லை. இந்தியா போன்ற வெளிநாட்டில் உள்ள வர்க்க வேறுபாட்டை, ஜாதி வேறுபாட்டை இங்கே...

சடலங்களைை இடுகாடு வளைை சுமந்து செசல்கிறாார்கள்  “மரபுகளைைத் தகர்க்கும் திவிக பெெண்கள்‌

சடலங்களைை இடுகாடு வளைை சுமந்து செசல்கிறாார்கள் “மரபுகளைைத் தகர்க்கும் திவிக பெெண்கள்‌

தமிழ்நாட்டில் பெரியாரியப் பெண்கள் பண்பாட்டு புரட்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இந்து ஆங்கில நாளேடு இதை சுட்டிக்காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் இறந்தவர்களின் சடலங்களை திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த பெண்கள் இடுகாடு வரை சுமந்து சென்று எந்த வித சடங்கு சம்பிரதாயம் இன்றி உடலை அடக்கம் செய்து வருகிறார்கள். பெண்கள் சுடுகாட்டுக்கு போவதே சமூகம் தடைச் செய்து உள்ளது. தடையை தகர்த்து சேலம் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக 100-க்கு மேற்பட்ட சடலங்களை பெண்களே சுமந்து சென்று இறுதி நிகழ்வுகளை செய்துள்ளனர் என்று இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளிட்டுள்ளது. (மார்ச் 10, 2025). பெரும்பாலான மதங்கள் பெண்களை சுடுகாடு செல்வதற்கு அனுமதிப்பதில்லை. தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மரணத்தில் கூட இடுகாடு செல்ல முடியாது. ஆனால் சேலம் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெண்கள் சடலங்களை சுடுகாடு சுமந்து சென்று மத மரபுகளை உடைத்து இருக்கிறார்கள். இந்த...

இந்தியாவின் சிறந்த மாடல் திராவிட மாடல்

இந்தியாவின் சிறந்த மாடல் திராவிட மாடல்

கல்வியாக இருக்கட்டும் தனிநபர் வருமானமாக இருக்கட்டும் ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கட்டும் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கையாக இருக்கட்டும் எந்த ஒரு அளவுகோலிலும் தெற்கிற்கும் வடக்கிற்கும் பாரதூர வேறுபாடு இருக்கிறது. கல்வியின் மூலம் சர்வதேச நிறுவனங்களில் பணிபுரியும் வகையில் சிறப்பான மாணவர்களை தமிழ்நாடு உருவாக்கி இருக்கிறது‌ இந்தியாவுக்கு என்று ஒரு மாடல் இருக்க முடியும் என்றால் அது தமிழ்நாடு மாடலாக மட்டுமே இருக்க முடியும். -தி வயர் இணையதள நேர்காணலில் கிங்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசியல் சமூகவியல் பற்றி வகுப்பெடுக்கும் பேராசிரியர் கிறிஸ்டோப் ஜெபர்லோ கருத்து.

தமிழ்தேசிய முப்பாட்டன் பெருமையும்  சிங்கள இனவெறியும் ஒன்றுதான்!-விடுதலை இராசேந்திரன்

தமிழ்தேசிய முப்பாட்டன் பெருமையும் சிங்கள இனவெறியும் ஒன்றுதான்!-விடுதலை இராசேந்திரன்

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் b&w tamil youtube சேனலுக்கு அளித்த நேர்காணலில், மேதகு பிரபாகரன் பெரியார் கொள்கைகளையே ஈழத்தில் செயல்படுத்தினார் என்பதை விரிவாக விளக்கினார் . கடந்த வார தொடர்ச்சி… நெறியாளர்: ஈழத்தில் பிரபாகரன் நடத்திய விடுதலைப் போராட்டத்துக்கும் இங்கே தமிழ்தேசிய போரட்டத்துக்கும்‌ வேறுபாடு இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா? பொதுச்செயலாளர்: அடிப்படையில் ஒரு தேசத்தின் விடுதலை என்பது மக்களின் சமத்துவத்தையும், உரிமையும் அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். இதற்கு நேர்மாறாக மக்களிடையே பிளவுகளையும், பாகுபாடுகளையும் அடையாளப்படுத்தும் கொள்கைகளைக் கொண்ட தேசியம் என்பது விடுதலைக்கு நேர் முறணானது. பிரபாகரன் போராடிய ஈழ விடுதலை என்பது ஐக்கிய‌ நாட்டு சபை அங்கீகரித்த தேசிய‌ சுய‌நிர்ணய உரிமையை வலியுறுத்தி நடத்திய போராட்டமாகும்‌. இந்தியாவை இந்து நாடாக மாற்றி அமைப்பதற்கு இப்போது இங்கே முயற்சிகள் நடைபெற்றுக்‌ கொண்டு இருக்கினறன.இந்தியா என்ற‌ சொல்லுக்கு முசுலிம்களும், கிருத்தவர்களும் உள்ளடக்கிய‌ நாடு என்று பொருள்படுகிறது, எனவே இந்தியா என்ற...

பொதுவுடைமை இயக்கத்திற்கு உதவிய பெரியார் இயக்கம்

பொதுவுடைமை இயக்கத்திற்கு உதவிய பெரியார் இயக்கம்

அடக்குமுறையின் இருண்ட நாட்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒளியேற்றியப் பெருமை திராவிடர் கழகத்தையேச் சாரும். பெரியாரின் ‘விடுதலை’ இதழ் மட்டுமே துணிச்சலுடன் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. 1950 பிப்ரவரி 11-இல் சேலம் சிறையில் 22 கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து ‘விடுதலை’ தீவிரத் தலையங்கம் எழுதியது. “பலிப்பட்ட 22 வீரர்களின் பெயர்கள் கூட வெளியிடப்படவில்லை. மரக்கட்டைகளாகவா கருதுகிறீர்கள்? அவர்களுக்கும் குடும்பம், உறவுகள் உண்டு. விசாரணைக் குழுவில் கம்யூனிஸ்ட் பிரதிநிதி அல்லது தொழிற்சங்கத் தலைவர் சக்கரைச் செட்டியாராவது இருக்க வேண்டும்” என்று துணிச்சலாக எழுதியது. பெரியார் கண்டனக் கூட்டங்கள் நடத்த அறைகூவல் விடுத்தார். 1951-இல் கட்சித் தடை நீக்கப்பட்டபோது, தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது. தலைமறைவில் இருந்த பி.ராமமூர்த்தி பெரியார், குத்தூசி குருசாமியுடன் இரகசியமாக சந்தித்துப் பேசினார். நடிகவேள் எம்.ஆர்.ராதா தமிழ்நாடு முழுவதும் “ரத்தக்கண்ணீர்”, “முருகன்”, “பேப்பர் நியூஸ்” நாடகங்கள் நடத்தி நிதி திரட்டினார். பரமக்குடி, திருப்பூர், பொள்ளாச்சி, மதுரை, சென்னை என...

ஈழத்தில் பிரபாகரன் நடத்திய பெரியார் ஆட்சி!

ஈழத்தில் பிரபாகரன் நடத்திய பெரியார் ஆட்சி!

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் b&w tamil youtube சேனலுக்கு அளித்த நேர்காணலில், மேதகு பிரபாகரன் பெரியார் கொள்கைகளையே ஈழத்தில் செயல்படுத்தினார் என்பதை விரிவாக விளக்கினார் . நெறியாளர் : 2006-இல் ஈழத்துக்கு ஒரு மாதம்‌ சென்று வந்தீர்களே, அந்த நட்பு எப்படி உருவானது‌? பொதுச்செயலாளர்: 2006-க்கு முன்பு தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு இணைந்து பல்வேறு களப்பணிகள், அரசியல் பணிகள் செய்திருக்கிறோம். அதன்காரணமாக அவர்களோடு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. குறிப்பாக 1982,1983 ஆண்டுகாலத்தில் ‘விடுதலை’ பத்திரிகையில் நான் பொறுப்பில் இருந்தேன். தமிழீழ விடுதலைப்புலிகள் ஆதரவு தேடி தமிழ்நாடு வந்த காலகட்டம் அது. அப்போது அவர்கள் எங்களோடு நெருக்கமாக இருந்தார்கள். பல்வேறு குழுக்கள் தமிழ்நாட்டிற்கு வந்தார்கள். அதில் விடுதலைப் புலிகள் இயக்கம் தான்‌ சரியான‌ இயக்கம் என்று நாங்கள் தேர்ந்தெடுத்து அந்த இயக்கத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, அப்போது திராவிடர் கழகத்தில் இருந்த தோழர்கள் கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன், நான்...

முதலமைச்சரின் தகுதியுரை

முதலமைச்சரின் தகுதியுரை

தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்பிவரும் பத்திரிக்கையாளரும் எழுத்தாள ருமான திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள், 1969ல் மயிலாடுதுறையில் திராவிடர் கழகத்தின் இளைஞரணியில் இணைந்து பெரியாரியம் தொடர்பாக பொதுக்கூட்டங்கள் மற்றும் பல பகுத்தறிவு நிகழ்ச்சிகளை நடத்தி பெரியாரின் கொள்கைகளைப் பேசவும் எழுதவும் தொடங்கியவர். தந்தை பெரியாரை அழைத்து மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடத்தியவர். பெரியாரின் இயக்க ஏடுகளில் 25 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றியதோடு பெரியார் பேசிய கூட்டங்களில் அவரது உரையைக் குறிப்பெடுத்து பதிவு செய்தவர். இவர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தந்தை பெரியாரின் சமூகநீதி, ஜாதி ஒழிப்பு மற்றும் பெண்ணுரிமைத் தளங்களில் கடந்த 58 வருடங்களாகத் தொண்டாற்றி வருகிறார். பெரியார் கண்ட கனவான ஜாதி மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும், விளிம்புநிலை மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகவும் மக்களை அணிதிரட்டிப் போராடி வருபவர். மக்களை விழிப்படையச் செய்யும் வகையில்...

கொள்கைகளைப் பரப்ப உற்சாகம் அதிகரித்துவிட்டது!

கொள்கைகளைப் பரப்ப உற்சாகம் அதிகரித்துவிட்டது!

பெரியார் பேசுபொருளாக மாறியிருக்கிற காலச்சூழலில் திராவிட மாடல் அரசு எனக்கு பெரியார் விருது வழங்கி கவுரவித்திருப்பதை ஒரு மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன். பெரியார் கருத்துக்கள் நாட்டிற்கு மிக மிகத் தேவையான கருத்துக்களாக இருக்கிறது என்பதைச் சமகால சமூக – அரசியல் சூழல்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சனைகள் எல்லாம் பெரியாரியலை மேலும் வலுவாகக் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்புகளாக உள்ளன. இந்த வாய்ப்புகளைப் பெரியாரியத்தின் எதிரிகளே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் காலத்தில் இருந்து அவருடைய கொள்கைகள் வேகமாகப் பரவியது அவருடைய எதிரிகளால் தான் என்று பெரியாரே திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார். எனவே இந்த ஒரு சூழ்நிலையில் பெரியார் விருதை வழங்கி கவுரவித்திருப்பது, பெரியாரியத் தொண்டை மேலும் உற்சாகமாகச் செய்ய வேண்டும் என்று ஊக்கப்படுத்துகிற விருதாகவே நாங்கள் கருதுகிறோம். அதற்காக முதலமைச்சருக்கு எங்களுடைய நன்றி. பெரியாரியலுக்கு எதிராக பரப்பப்படும் தவறான திசைதிருப்பும் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும் என்ற உந்துசக்தியும் அதிகரித்திருக்கிறது. பெரியாரியலை இன்னும் வேகமாக முன்னெடுக்க...

இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தும் பெண்கள்! மரபை உடைக்கும் கழகப் பெண்களுக்கு பாராட்டு

இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தும் பெண்கள்! மரபை உடைக்கும் கழகப் பெண்களுக்கு பாராட்டு

ஆரம்பத்தில், பெண் தோழர்கள் யாரேனும் இறக்கும் சூழலில், பெண் தோழர்களே அந்தச் சடலத்தை தூக்கிச் செல்வது என்று செயல்படுத்தினோம். இறந்தவருக்கு பெண் பிள்ளை இருந்தால், அவரைக் கொள்ளி வைக்கச் செய்தோம் ‘ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் சம உரிமை பெற, கல்வியே அடிப்படை’ என்று முழங்கிய பெரியார், பாலின பேதம் கடக்க வலியுறுத்திய கொள்கைகள், முன்னெடுப்புகள் பற்பல. அதையடுத்து, ஆணுக்கு இணையாக அனைத்திலும் தங்களின் உரிமைகளைத் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றனர், பெண்கள். என்றாலும், இன்றளவும் அவர்களால் அதிகம் பங்கு இயலாத ஒன்றாக இருந்து வருவது… வாழ்வின் வழியனுப்பலுக்கான இறுதி மரியாதை நிகழ்வுகள்தான். இன்றும் ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் அதில் புழங்குகிறார்கள். பெண்கள் தரப்பிலிருந்து, ‘நாங்களும் செய்தால் என்ன?’ என்ற கேள்வியே உரக்க எழுப்பப்படவில்லை. இத்தகைய சமூகச் சூழலில்தான் அதி முக்கியத்துவம் பெறுகிறது, கொளத்தூரில் பெண்கள் குழு ஒன்று செய்து வரும் இறுதி மரியாதை நிகழ்வுகள் நடைமுறை. சேலம் மாவட்டம், கொளத்தூர் கிராமத்தில், பெரியாரின்...

இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தும் பெண்கள்! மரபை உடைக்கும் கழகப் பெண்களுக்கு பாராட்டு

இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தும் பெண்கள்! மரபை உடைக்கும் கழகப் பெண்களுக்கு பாராட்டு

ஆரம்பத்தில், பெண் தோழர்கள் யாரேனும் இறக்கும் சூழலில், பெண் தோழர்களே அந்தச் சடலத்தை தூக்கிச் செல்வது என்று செயல்படுத்தினோம். இறந்தவருக்கு பெண் பிள்ளை இருந்தால், அவரைக் கொள்ளி வைக்கச் செய்தோம் ‘ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் சம உரிமை பெற, கல்வியே அடிப்படை’ என்று முழங்கிய பெரியார், பாலின பேதம் கடக்க வலியுறுத்திய கொள்கைகள், முன்னெடுப்புகள் பற்பல. அதையடுத்து, ஆணுக்கு இணையாக அனைத்திலும் தங்களின் உரிமைகளைத் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றனர், பெண்கள். என்றாலும், இன்றளவும் அவர்களால் அதிகம் பங்கு இயலாத ஒன்றாக இருந்து வருவது… வாழ்வின் வழியனுப்பலுக்கான இறுதி மரியாதை நிகழ்வுகள்தான். இன்றும் ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் அதில் புழங்குகிறார்கள். பெண்கள் தரப்பிலிருந்து, ‘நாங்களும் செய்தால் என்ன?’ என்ற கேள்வியே உரக்க எழுப்பப்படவில்லை. இத்தகைய சமூகச் சூழலில்தான் அதி முக்கியத்துவம் பெறுகிறது, கொளத்தூரில் பெண்கள் குழு ஒன்று செய்து வரும் இறுதி மரியாதை நிகழ்வுகள் நடைமுறை. சேலம் மாவட்டம், கொளத்தூர் கிராமத்தில், பெரியாரின்...

செல்போன் எதற்கு?

செல்போன் எதற்கு?

¨        அம்பேத்கர் சிலைக்கு விபூதி அடிக்கும் இந்து முன்னணி கும்பல் தைரியம் இருந்தால் தங்கள் சொந்த மதமான இந்து மதத்தைச் சார்ந்த பெருமாள் சிலைகளுக்கு விபூதி அடிக்குமா? அய்யங்கார்கள் கூட்டம் வாலை ஒட்ட நறுக்கி விடும்! ¨        கோயில்களில் செல்போன் கொண்டுவர உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதுகூட ஒரு வகையில் நியாயம்தான் சமஸ்கிருத மந்திரங்களை கருவறையில் உள்ள கடவுள்கள் நெட்வொர்க் இல்லாமலே புரிந்து கொள்ளும் போது வீணாக எதற்கு செல்போன்? ¨        ஆகமக் கோயில்களைக் கணக்கெடுக்க அறநிலையத் துறைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது நீதிமன்றம். ஓய்வுபெற்ற நீதிபதி குழுதான் கணக்கெடுக்க வேண்டும் என்று  ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டதை மீறக்கூடாதாம். சரி, ஆகமக்கோயில் சிலை திருட்டையும். ஓய்வு பெற்ற நீதிபதிதான் கண்டு பிடிக்க வேண்டுமா ? – விடுதலை இராசேந்திரன் டுவிட்டரிலிருந்து பெரியார் முழக்கம் 15122022 இதழ்

நடராசன் முதல்வர் கனவில் வருவாரா?

நடராசன் முதல்வர் கனவில் வருவாரா?

¨        தில்லை நடராசன் கோயிலில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்கிறார் சுப்பிரமணியசாமி. நந்தன் கனவில் நடராஜன் வந்து சொன்னது போல் தமிழக முதல்வரிடம் கனவில் வந்து சொன்னால் பரிசீலிக்கலாம். ¨        புதுச்சேரி கோயில் யானை மாரடைப்பால் மடிந்தது பக்தர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் சோகம் தான். காடுகளில் இயற்கையாக வாழும் விலங்குகளை கோயிலுக்குள் கொண்டு வந்து மதச்சாயம் பூசி மாரடைப்பால் மரணிக்க வைப்பது கொடுமை அல்லவா? எந்த ஆகமத்தில் யானையைக் கோவிலுக்குள் பயன்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறது. விலங்குகளை இயற்கையாக மதம் இன்றி வாழ விடுங்கள். ¨        கோயில்களில் செல்போன் கொண்டு வர உயர்நீதிமன்றம் தடை விதித் திருப்பது நியாயம்தான். சமஸ்கிருத மந்திரங்களை கருவறைக் கடவுள்கள் நெட் வொர்க் இல்லாமலே புரிந்து கொள்ளும் போது வீணாக எதற்கு செல்போன்? ¨        உறுப்புகளோடும் உயிரோடும் பிறக்கும் குழந்தைகள், மத அடையாளங்களை சுமந்து வரவில்லை. அவர்களை மதத்துக்குள் இழுப்பதே கட்டாய மதமாற்றம் தான்!...

நடுகாட்டில் பிரபாகரனுடன் சில நாட்கள் தங்கியிருந்தேன் – தோழர் கொளத்தூர் மணி நேர்காணல் ஜுனியர் விகடன் 31.01.90

நடுகாட்டில் பிரபாகரனுடன் சில நாட்கள் தங்கியிருந்தேன் – தோழர் கொளத்தூர் மணி நேர்காணல் ஜுனியர் விகடன் 31.01.90

திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர்களில் ஒருவர் டி.எஸ். மணி. இவர் சேலம் குளத்தூரைச் சேர்ந்தவர்.  இவரது நிலத்தில்தான் 1984-ல் எல்.டி.டி.ஈ யினருக்குப் போர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மலைப்பகுதியும் – பச்சைப்பாளி காட்டுப்பகுதியும் கலந்த அந்த இடத்தில் விடுதலைப் புலிகள் ரகசியமாகப் பயிற்சி பெற்ற நாட்களை பிரபாகரன் மறந்ததில்லை . பிற்பாடு மரணமடைந்த லெப். கர்னல் பொன்னம்மான், புலேந்திரன் மற்றும்  அருணா இந்த முகாமில் பயிற்சியாளர்களாக இருந்தனர். டி.எஸ். மணிக்குச் சொந்தமான இந்த இடத்தை அன்று தேர்ந்தெடுத்து, பயிற்சியை முறைப்படி செயல்படுத்திக் கண்காணித்தவர் மாத்தையா! இந்த முறையில் டி.எஸ். மணி எப்போதும் பிரபாகரனுக்கு நெருங்கியவர். பிரபாகரனின் அழைப்பின் பேரில், டி.எஸ். மணி சமீபத்தில் ஈழம் சென்றார். பிரபாகரனுடன் நடுக்காட்டில் சில நாட்கள் தங்கிவிட்டு மகிழ்ச்சி பொங்கத் திரும்பியிருக்கிறார். டி.எஸ். மணி தன் அனுபவத்தைக் கூறுகிறார்; “1989 டிசம்பர் பத்தாம் தேதி நான் புறப்பட்டு, பதினோராம் தேதி ஈழம் அடைந்தேன். பன்னிரண்டாம் தேதி...

கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் நேர்காணல் – ஆனந்த விகடன் 

கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் நேர்காணல் – ஆனந்த விகடன் 

துக்ளக் விழாவில், ரஜினிகாந்த் பேசியது பொய் என்று சொல்லி மறுக்கும் நீங்கள், 1971-ல், ‘நடந்த விஷயங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்’ என்று அன்றைய முதல்வர் கருணாநிதி பேட்டியளித்திருப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?’’ “புராணங்களில் உள்ள ஆபாசக் கதைகள் பற்றி மக்களிடையே எடுத்துச்சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் ‘மூட நம்பிக்கை ஒழிப்புப்பேரணி’யே அன்றைக்கு நடத்தப்பட்டது. இரண்டு ஆண்களுக்குப் பிறந்ததாகச் சொல்லப்படும் ஐயப்பன் பிறப்பு மற்றும் முனிவரின் மனைவியான அனுசுயாவை கடவுளர்களே நிர்வாணமாக வரச்சொல்லிய வக்கிரங்கள் ஆகியவற்றைத்தான் சித்திரங்களாக வரைந்து ‘இந்த ஆபாசக் கடவுளர்களை நீங்கள் வணங்கலாமா…’ என்று தலைப்பிட்டுப் பேரணியில் எடுத்துச் சென்றோம். வடஇந்தியாவில், ‘ராம லீலா’ என்ற பெயரில் ராவணனைத் தீயிலிட்டுக் கொளுத்துவதை எதிர்த்து, இங்கே ராமர் பொம்மையை எரிக்கத் திட்டமிட்டுத்தான் பேரணி சென்றோம். இதுதான் நடந்த உண்மை! ஆனால், துக்ளக் விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி – சீதை உருவங்கள் உடையில்லாத நிலையில் செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது’...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி சீமான் கைதட்டலுக்காகப் பேசுகிறார்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி சீமான் கைதட்டலுக்காகப் பேசுகிறார்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இராஜீவ் காந்தி கொலை குறித்து பேசியது, பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து, ஜூனியர் விகடனுக்கு 19.10.2019 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி. “ஆமாம், நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். இந்திய இராணுவத்தை அமைதிப் படை என்ற பெயரில் அனுப்பி, தமிழின மக்களை அழித்தொழித்த தமிழின துரோகி ராஜீவ் காந்தியை, தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்” – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இந்தக் கடும் சர்ச்சைப் பேச்சுதான் தமிழக… ஏன் இந்திய அரசியலில் ஹாட் டாபிக். தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வரும், சீமானின் அரசியல் முகம் அறியாத கால கட்டத்திலேயே தனது இயக்கத்தின் கூட்டங் களில் மேடையேற்றிப் பேச வைத்தவருமான திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் இது தொடர்பாக சில கேள்விகளை முன் வைத்தோம்....

சீமான், விளம்பர விரும்பி… கைத்தட்டலுக்காகப் பேசுகிறார்!”  – கொளத்தூர் மணி

சீமான், விளம்பர விரும்பி… கைத்தட்டலுக்காகப் பேசுகிறார்!” – கொளத்தூர் மணி

  நன்றி:- ஜூனியர் விகடன் `ஆமாம், நாங்க தான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். இந்திய ராணுவத்தை அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பி, தமிழின மக்களை அழித்தொழித்த தமிழின துரோகி ராஜீவ் காந்தியை, தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்’ – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இந்தக் கடும் சர்ச்சைப் பேச்சு தான் தமிழக, ஏன் இந்திய அரசியலில் ஹாட் டாபிக். தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவரும், சீமானின் அரசியல் முகம் அறியாத கால கட்டத்திலேயே தனது இயக்கத்தின் கூட்டங்களில் மேடையேற்றிப் பேச வைத்தவருமான திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் இது தொடர்பாக சில கேள்விகளை முன் வைத்தோம். “உங்களுக்கும் சீமானுக்குமான தொடர்பு எப்படி உருவானது?” “திரைப்பட வாய்ப்பு தேடி கிராமங்களிலிருந்து புறப்பட்டு வரும் பலருக்கும் அடைக்கலம் கொடுப்பார் கவிஞர் அறிவுமதி. அப்படி வந்தவர் தான் சீமான். 2001 ஆம் ஆண்டு, தந்தை...

போர்க்கலை வல்லுநர்களின் கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் – கழகத் தலைவர் பேட்டி

போர்க்கலை வல்லுநர்களின் கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் – கழகத் தலைவர் பேட்டி

05.05.2019 தேதியிட்ட ஈழத்தமிழர்களால் அமெரிக்காவிலிருந்து நடத்தப்படும் ”இலக்கு” வாராந்திர மின்னிதழுக்கு ‘தாயகக் களம்’ பகுதியில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் குறித்தும், தற்போதைய ஈழச்சூழல், தமிழீழம் குறித்தும் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அளித்துள்ள பேட்டி : ”போர்க்கலை வல்லுநர்களின் கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்” ‘வன்னிக்காட்டில் அவருடன் இருந்த நாட்கள் மறக்க முடியாதவை’ – ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் தா.செ.மணி. முள்ளிவாய்க்காலுக்கு முன் எமது மண்ணின் விடுதலைப் போராட்டத்திற்கு ஈக வரலாறு இருப்பது போல் அதற்கு தோள் கொடுத்து நின்ற தாய்த்தமிழகத்திற்கும் ஓர் ஈக வரலாறு உண்டு. கடலினும் பெரிதான ஈக நெஞ்சங்களின் ஒரு துளி சாட்சி தான் திராவிடர் விடுதலைக்கழகத்தின் தலைவரும் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கொளத்தூர் தா.செ.மணி. 1984 சனவரி 05 முதல் 1986 நவம்பர் இறுதிவரையான மூன்று ஆண்டுகளுக்கு புலிகள் பயிற்சி எடுப்பதற்காக தன்னுடைய...

உயர்ஜாதியினருக்கு 10% பொருளாதார இட ஒதுக்கீடு குறித்த விவாதம்

உயர்ஜாதியினருக்கு 10% பொருளாதார இட ஒதுக்கீடு குறித்த விவாதம்

https://youtu.be/xW8MYVXKubY “உயர்ஜாதியினருக்கு 10% பொருளாதார இட ஒதுக்கீடு” குறித்த விவாதம். கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்களும், பா.ஜ.க.வின் ராகவன் அவர்களும் நேருக்கு நேர் விவாதிக்கும் அரங்கம். சூடான பதிலடிகள், அறிவார்ந்த விளக்கங்கள். Moon TV – 17.02.2019.

“சாதிச் சமூகமே சிறைதான்!” – ஆனந்த விகடன் பேட்டி

“சாதிச் சமூகமே சிறைதான்!” – ஆனந்த விகடன் பேட்டி

`இதுவரை என்மீது எத்தனை வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை, எனக்குத் தெரிந்து 18 வழக்குகள் இருக்கலாம். அனைத்தும் மக்களுக்கான போராட்டங்களை நடத்தியதற்காகப் போடப்பட்ட வழக்குகள்தான்’’ என்று சொல்லும் மணி அமுதன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை மாவட்டச் செயலாளர். வயது 31 தான். கடந்த சில வருடங்களாக ஆணவப்படுகொலை, நீட், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருபவர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்களைத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டி, கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி  கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. 78 நாள்கள் சிறைவாசத்திற்குப் பிறகு பிணையில் வந்திருந்தார். ‘`சாதிப்பாகுபாடு கெட்டி தட்டிப்போன மதுரை மாவட்டத்தில் மேலூர்தான் எனக்கு சொந்த ஊர். விவசாயக் குடும்பம். குடும்பத்தினருக்கு விவசாய வேலைகளைத் தவிர எந்த அரசியலும் தெரியாது.  இப்போதுதான் அவர்களுக்கு அரசியலைக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். சிறுவயதில் எல்லா இளைஞரையும்போல எந்தவொரு பிடிப்பும் இல்லாமல் சராசரியாக  வளர்ந்த எனக்கு,  போகப்போக கண்ணுக்கு...

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது ! 02.04.2018 – புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி. திராவிடர் விடுதலைக்கழகம் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகளுடன் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்காத மத்திய பா.ஜ.க மோடி அரசைக் கண்டித்து . Pause -5:25 Additional visual settings Enter Watch and ScrollClick to enlarge Unmute

ஹெச்.ராஜாவைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும் – விடுதலை இராஜேந்திரன்

ஹெச்.ராஜாவைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும் – விடுதலை இராஜேந்திரன்

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப் பட்டதைத் தொடர்ந்து, தமிழ் நாட்டில் பெரியார் சிலைகள் உடைக் கப்படும்’ என்று பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிடப் பட்டது. அது, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு, தனக்குத் தெரியாமல் தன் அட்மின் அந்தக் கருத்தை வெளியிட்டுவிட்டதாக ஹெச்.ராஜா சொல்லி, அதற்கு வருத்தமும் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரனிடம் கேட்டோம். அவர், நம்மிடம் தெரிவித்த கருத்து: “ஹெச்.ராஜாவின் முகநூலில் வெளியான கருத்து தமிழகத்தில் எவ்வளவு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, பாதிப்புகளை உண்டாக்கியுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். திருப்பத்தூரில் பெரியார் சிலையை உடைத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தின் மனதையும் அந்தக் கருத்து புண்படுத்தியிருக்கிறது. ஹெச்.ராஜாவைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உடனடியாக கைது செய்திருக்க வேண்டும். ஆனால், கோழைத்தனமான, தொடைநடுங்கி அரசாக தமிழக அரசு இருப்பதால், அது, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை....

பெரியாருக்கு முதல் பெருமை சேர்த்த தாம்பரம்

பெரியாருக்கு முதல் பெருமை சேர்த்த தாம்பரம்

பெரியாருக்கு முதலில் பெருமை சேர்த்த நகரம் என்ற பெருமையைக் கொண்டது தாம்பரம். சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலையம் எதிரில் அரசு ஊழியர்களுக்கு புதிய குடியிருப்புகளை 39 ஏக்கர் 51 சென்ட் பரப்பளவில் அரசு உருவாக்கியது. அப்போது அந்த குடியிருப்பு பகுதிக்கு பெரியார் பெயர் சூட்ட அப்போதைய உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முடிவு செய்தனர். 1946ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டக் குழு தலைவர் டி. சண்முகம் தலைமையில் தாம்பரத்தில் நடந்த விழாவில் பெரியார் நகர் என்ற பெயரில் நகரம் உருவாக்கப்பட்டது. அத்துடன் பெரியார் பெயர் கொண்ட வளைவும் திறக்கப்பட்டது. இதை அன்றைக்கு சென்னை மேயராக இருந்த திவான் பகதூர் என்.சிவராஜ் திறந்து வைத்தார். இந்த விழாவில் ஒரு பார்வை யாளராக அண்ணா பங்கேற்றார். பெரியார் பெயர் கொண்ட வளைவு திறக்கப்பட்ட தால் தாம்பரம் நகரத்தின் பெயர் பட்டி தொட்டி எங்கும் தெரியவந்தது. தாம்பரம் தேசிய நெடுஞ்சாலை, முடிச்சூர் சாலை,...

தோழர் ஃபாரூக் படுகொலை விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

தோழர் ஃபாரூக் படுகொலை வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை ! அதனால் கொலைக்கு “காரணமானவர்களை” கண்டறிய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. காவல் துறையின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். தோழர் ஃபாரூக்கை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த முஸ்லீம்கள், இசுலாமிய மதவெறி ஏற்றப்பட்ட வெறும் கருவிகளே. ஆக விரைவில், * ஃபாரூக் படுகொலைக்கு திட்டமிட்டு பின்னிருந்து இயக்கிய இசுலாமிய மத அடிப்படைவாத இயக்கம் கண்டறியப்பட வேண்டும். * அந்த இசுலாமிய மதவெறி அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப் பட வேண்டும். * ஃபாரூக் கொலையை பின்னிருந்து செய்த இசுலாமிய மத அடிப்படைவாத அமைப்பு “இசுலாமிய மத பயங்கரவாத அமைப்பாக” அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட வேண்டும். செய்தி பரிமளராசன்

பிராமணியத்தைக் கைவிடாதவர்களை எப்படி உள்ளிழக்க முடியும்?

திராவிடர் கழகத்தை பெரியார் உருவக்கினார், இது ஓர் இயக்கம், திமுகவை அண்ணா உருவக்கினார் அது இயக்கமல்ல ; அரசியல் கட்சி, அதிமுகவை எம் ஜி ஆர் உருவாக்கினார், மதிமுகவை வைகோ உருவாக்கினார்.இவை எல்லாமுமே அரசியல் கட்சிகள். அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை நோக்கிச் செயல்பகின்றன, பெரியார் இயந்திரங்களோ சாதி ஒழிப்பு சமூக நீதி பெண்ணுரிமைக்காகப் போராடுகின்றன.பெரியாப்பாதையை விட்டு விலகிப்போய் விட்டகட்சிகள் செயல்பாட்டை முன்வைத்து பெரியாரியத்தை விமர்சிக்க கூடாது? பார்ப்பணியத்தால் உரிமை மறுக்கப்பட்டவர்களான இஸ்லாமிர், கிருஸ்தவர்களையும் ஒரே கீழ் கொண்டு வருவதற்கும் பெரியார் தேர்வு செய்த பெயர் திராவிடர் இந்தப் பெயர் அடையாளத்தைத் தாங்கி நிற்கும் இயக்கமானாலும், கட்சிகளான லும், அதன் கொள்கை அறிக்கைகளிலோ, நடைமுறையிலோ தமிழக உரிமைகள் அல்லாது அண்டை ‘திராவிட” மாநிலங்களின் உரிமைகளைப் பேசி இருக்கிறது அல்லது தமிழ் மேலாதிக்கத்தைத் திணித்திருக்கிறது என்று சொல்ல முடியுமா ? நிச்சயமாக இல்லை பெயரில் அடையாலச் சொல்லாக ‘திராவிடம் ‘ இருப்பது என்பது...

“எங்கள் கழகத்தில் இணைவதைவிட அவருடைய பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்”

“எங்கள் கழகத்தில் இணைவதைவிட அவருடைய பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்”

இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு பலியான கழகத் தோழர் பாரூக்கின் தந்தை, திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயல்பட  விருப்பம் தெரிவித்தாலும் அவர் கழகத்தில் இணைவதைவிட அவரது பாதுகாப்பையே நாங்கள் முக்கியமாகக் கருதுகிறோம்” என்று கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர். இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வெளியிட்டுள்ள செய்தி: “பாரூக்கின் தந்தை திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைத்துக் கொள்ள முன் வந்தாலும் கோவை மாவட்ட கழகத்தின் தோழர்கள் பாரூக்கின் தந்தை பாதுகாப்பே முக்கியம். அது பற்றித் தான் நாங்கள் கவலைப்படுகிறோம் என்று கூறினார்கள். இப்போது எங்கள் கவலை எல்லாம் பாரூக்கின் இரண்டு குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் கல்வி வழங்க வேண்டும் என்பதுதான். வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது ஒரு குழந்தையின் விருப்பம். அது குறித்தே நாங்கள் சிந்தித்து வருகிறோம். மற்றபடி பாரூக்கின் தந்தை எங்களது கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எங்கள்...

பாரூக்கின் தந்தை ஹமீது உருக்கமான  பேட்டி “திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைய விரும்புகிறேன்”

பாரூக்கின் தந்தை ஹமீது உருக்கமான பேட்டி “திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைய விரும்புகிறேன்”

 ‘கொள்கைக்காகவே பலியான மகனுக்காகப் பெருமை அடைகிறேன்’ “பெரியார் என்ற தலைவர் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; அவரது கொள்கைகள் பற்றி தெரியாது. ஆனால் அவரின் பகுத்தறிவுக் கொள்கைகள்தான் இன்றைய தேவையாக இருக்கிறது என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டுக்கு (மார்ச் 31) அளித்த பேட்டியில் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் தந்தை ஆர் ஹமீது (54) கூறியிருக்கிறார். “தந்தை பெரியாரின் கொள்கைகளை நான் படிக்கத் தொடங்கி விட்டேன்” என்றும் அவர் கூறினார். கோவை உக்கடம் பகுதியில் மக்கள் நெருக்கடி மிகுந்த பிலால் எஸ்டேட் எனும் குறுகிய வீதியில் அவரது சிறிய வீட்டில் அமர்ந்து பேசிய அவர், “நான் திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைவது என்று முடிவு செய்துள்ளேன்” என்றார். “மூட நம்பிக்கை களுக்கு எதிராக நான் போராடப் போகிறேன். ஆனால் மதங்களுக்கு எதிராகப் பேசுவதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. நம்முடைய ‘ஆன்மா’தான் கடவுள் என்று நம்புகிறேன்” என்றார்...

டெலிகிராப் இதழ் தோழர் ஃபாரூக் படுகொலை செய்தி

டெலிகிராப் இதழ் (Telegraph India) இசுலாமிய அடிப்படைவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்ட தோழர் பரூக் குறித்து எழுதியுள்ள கட்டுரை : https://www.telegraphindia.com/117…/…/7days/story_143977.jsp

“தமிழகத்தின் தாராளச் சூழலை நாம் இழந்திடலாகாது!”

“தமிழகத்தின் தாராளச் சூழலை நாம் இழந்திடலாகாது!”

“தமிழகத்தின் தாராளச் சூழலை நாம் இழந்திடலாகாது!” (நன்றி : தமிழ் இந்து நாளிதழ், தலையங்கம். 24.03.2017) கோவையில் நடந்திருக்கும் இளைஞர் ஃபாருக் கொலை அதிர்ச்சியைத் தருகிறது. இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் மோசமான சூழலின் வெளிப்பாடு என்பது அதிர்ச்சியைத் தாண்டி ஆழ்ந்த கவலையை உருவாக்குகிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயலாற்றிவந்த ஃபாருக், சமூகத்தின் சாதி, மதப் பாகுபாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் சாடிவந்தவர். தொடர்ந்து இறைமறுப்புக் கொள்கைகளைப் பேசிவந்தவர். அவருடைய செயல்பாட்டின் காரணமாகவே நடந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு. தமிழகத்துக்கு நாத்திகப் பிரச்சாரம் புதிதல்ல. அதற்கென்று நீண்ட நெடிய மரபு இங்கு இருக்கிறது. குறிப்பாக, நவீன அரசியல் வரலாற்றில் சாதிக்கு எதிராக இங்கு பெரியார் தொடங்கிய கலகம் அதன் மையத்திலேயே கடவுளுக்கும் மதத்துக்கும் எதிரான குரலைத் தாங்கியது. ஆத்திகர்கள் இதற்குக் காலம் முழுவதும் கடுமையாக எதிர்வினையாற்றி வந்திருக்கிறார்கள். ஆனால், அது ஆகப் பெருமளவில் கருத்துத் தளத்திலேயே...

தோழர் ஃபரூக் குறித்தும், அவரின் இறுதி நிமிடங்கள் குறித்தும் ஃபரூக்கின் துணைவியார், தந்தை பேட்டி – தி இந்து 25032017

‘கடவுள் மன்னிக்கக் கூடியவர்; தண்டிக்கச் சொல்பவர் அல்ல’: கொலை செய்யப்பட்ட ஃபாரூக் குடும்பத்தினர் வேதனை கோவை உக்கடம் லாரிப்பேட் டைக்கு அருகில் உள்ள பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ளது, கடவுள் மறுப்பில் தீவிரம் காட்டிய தால் கொல்லப்பட்ட ஃபாரூக்கின் சிறிய வீடு. ஃபாரூக்கின் மனைவி ரஷீதா(31) குர்ஆன் துவா செய்து கொண்டு இருந்தார். அவரைச் சுற் றிலும் கண்ணீருடன் உறவினர்கள். ‘‘நாங்கள் யாரும் எம் மார்க் கத்துக்கு விரோதிகள் அல்ல. தின மும் 5 வேளை நமாஸ் செய்பவர் கள். தவறாது நோன்பு மேற்கொள் பவர்கள். ஃபாரூக்கின் பிள்ளைகள் அப்ரீத்(13), ஹனபா(8) ஆகியோர் இஸ்லாமிக் அராபிக் பள்ளியில்தான் 1, 6-ம் வகுப்பு படிக்கிறார்கள். எந்த நிலையிலும் மார்க்கத்தைத் தாண்டி நடக்குமாறு ஃபாரூக் எங்க ளிடம் கூறியதில்லை. அதனால், அவரின் கடவுள் மறுப்புக் கொள் கைக்கும் நாங்கள் எதிராக நிற்க வில்லை. அதற்காக கொலைகூட செய்வார்களா? வேதத்தை முழுமை யாகப் படித்து, புரிந்துகொள்ளாத...

கடவுள் இல்லை என்று சொன்னால்… கோவை கொடூரம்

கடவுள் மறுப்பு, மத – சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளைத் தீவிரமாகப் பேசிவந்த காரணத்தால், கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மத அடிப்படைவாதிகள் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். கோவையில் உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர், ஃபாரூக். இவர், திராவிடர் விடுதலைக் கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். கடவுள் மறுப்பாளராக இயங்கி வந்த ஃபாரூக், முற்போக்குச் சிந்தனையுடன், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசிவந்தார். மார்ச் 16-ம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது அவரது செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. பேசி முடித்தவுடன், ‘என் நண்பன் கூப்பிடறான். என்னன்னு கேட்டுட்டு வந்திடறேன்’ எனக் குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு, மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் சென்றுள்ளார். உக்கடம் பகுதியில் மாநகராட்சிக் கழிவுநீர் பண்ணை அருகே சென்றபோது, அங்கு காத்திருந்த சிலர் திடீரென ஃபாரூக்கை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த ஃபாரூக், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் இஸ்லாமியர் என்பதால், கொலையாளிகள் இந்துக்களாக இருக்கலாம் என்ற...

மக்கள் பொது விசாரணை மதுரை 04022017

Passing various resolutions at the end of the public hearing organised by Evidence, an NGO, here on Saturday, the members led by its Executive Director A. Kadir said that with rising crimes against women and children, it was all the more essential to expedite the cases and render justice to the victims. The recent amendments to the SC/ST Prevention of Atrocities Act mentioned the need for establishing courts and appointing judicial officers for this purpose. By doing so, the crimes may decline and law violators would get punishment. The meeting pointed out how some officers in the police department “failed”...

மதுரையில் நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் ! 31012017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 31.1.2017 அன்று காலை 11 மணியளவில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாவட்ட கழகச்செயலாளர் தோழர் மா.பா.மணிகண்டன் தலைமை தாங்கினார்

தேசியக் கொடியை எரித்தால் கூட அது தேச விரோதச் செயல் அல்ல.. கொளத்தூர் மணி

தேசியக் கொடியை எரித்தால் கூட அது தேச விரோதச் செயல் அல்ல என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானப் போராட்டத்தில் தேசியக் கொடியை அவமதித்து விட்டார்கள் தேச துரோகிகள் என்று பாஜக அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். தேசியக் கொடி எதிர்ப்பு போராட்டம், அரசியல் சட்டம் எரிப்புப் போராட்டம் என்று பெரியாரால் அறிவிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. தேசியக் கொடி எரிப்பு போராட்டத்திற்கான அடிப்படை இங்கே இருக்கிறது. தேசியக் கொடியை எரிப்பது அவ்வளவு பெரிய குற்றமா.. மோடியை பற்றி விமர்சித்தாலே தேச விரோதமா என்பது குறித்து ஒன்இந்தியா கேட்ட கேள்விகளுக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பதில்கள் இதோ… ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது தேசியக் கொடி அவமதித்த தேசத் துரோகிகள் என்று நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். தேசியக் கொடி எதிர்ப்பு போராட்டம் நடந்த மண்...

மீண்டும் தனித் தமிழ்நாடு கோருவதற்கான சூழ்நிலை இப்போதுதான் உருவாகியுள்ளது- கொளத்தூர் மணி எச்சரிக்கை

தமிழர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதால் தனித் தமிழ்நாடு கோரிக்கையை மீண்டும் முன்வைக்கும் சூழல் உருவாகியுள்ளது என்று திவிக தலைவர் கொளத்தூர் தா.செ. மணி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழர்களுக்கான உரிமை மறுக்கப்படும் இப்போதுதான் தனித் தமிழ்நாடு கோரிக்கையை மீண்டும் முன்வைப்பதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது என்று திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1956-ம் ஆண்டு வரை சென்னை மாகாணமாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிஷாவின் பகுதிகள் இணைந்து இருந்தன. ஆனால் மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால் 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி சென்னை மாகாணம் தனித்தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. அப்போது தமிழகத்தின் திருப்பதி, திருத்தணி, உள்ளிட்ட பல பகுதிகள் ஆந்திராவோடு சேர்க்கப்பட்டன. கன்னியாகுமரி, இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு கேரளாவுடன் இணைக்கப்பட்டது. கொள்ளேகால், காவிரி பிறக்கும் குடகு, கோலார் தங்கவயல் உள்ளிட்டவை கர்நாடகாவோடு இணைந்தன. உயிர்த்தியாகங்கள்.. திருத்தணியும் கன்னியாகுமரியும் உயிர்த் தியாகங்களுக்குப்...

பொள்ளாச்சியில் பிஎஸ்என்எல் அலுவலக முற்றுகை 05102016

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலும் காவிரி சிக்கலிலும் தொடர்ந்து இரட்டை வேடம் போடும் மத்திய பிஜேபி மோ(ச)டி அரசைக் கண்டித்து 5.10.2016 பொள்ளாச்சியில் நடந்த BSNL அலுவலகம் முற்றுகை போராட்ட நாளிதழ் செய்தி ….

கோவை திவிக சார்பில் மனு

விநாயகர் சிலை கரைப்பது தொடர்பாக சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காமல் தடுக்க கோரி 25-08-2016 (வியாழக்கிழமை ) காலை 11:00 மணியளவில் கோவை மாநகர காவல்துறை ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிபாளர், இந்து சமய அறநிலையத்துறை, மசுகட்டுபாட்டு வாரியம், கோவை மாநகராட்சி, ஆகியோருக்கு கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மனுவாக வழங்க பட்டது. தோழர்நேருதாஸ் தலைமையில் , நிர்மல்குமார் செயலாளர், இராமச்சந்திரன் புறநகர் மாவட்ட தலைவர், சூலூர்பன்னீர்செல்வம் சூலூர் ஒன்றியம் , மாநகர அமைப்பாளர்ஜெயந்த், பொருளாளர் கிருஷ்ணன், வடவள்ளி ஸ்டாலின், விக்னேஷ், சித்தன், சங்கர்,  அன்ட்ரோஸ், கணேஷ், வெங்கட், விஜயபாரதி, கனி ஆகிய மாவட்டகழக பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர் திராவிடர் விடுதலைக் கழகம் கோவை மாவட்டம் பேச: 9677404315

மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் – கொளத்தூர் மணி வேண்டுகோள்

//ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப்பகுதி கடம்பூரில் நடைபெற்ற, பெரியாரியல் பயிற்சி வகுப்பு குறித்தும், தோழர்.கொளத்தூர்மணி அவர்களின் உரை குறித்தும் இன்றைய “தமிழ் இந்து” நாளிதழில் வந்துள்ள செய்தி//

தவறவிடக் கூடாத ஆய்வு நூல்கள் – தோழர் பழ.அதியமான்

”தவறவிடக் கூடாத ஆய்வு நூல்கள்” எனும் தலைப்பில் தோழர் பழ.அதியமான் அவர்கள் 30.05.2016 தமிழ் இந்து நாளிதழில் சிந்தனைக் களம் பகுதியில் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் புத்தாயிரத்தில் வந்த சில முக்கிய நூல்கள் என குறிப்பிட்டுச் சொல்லியுள்ள புத்தகங்களில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை வெளியீட்டாளராக கொண்ட பெரியார் திராவிடர் கழக பதிப்பகம் சார்பில் வெளியிட்ட ”குடி அரசு 1925-1938 பெரியாரின் எழுத்தும் பேச்சும்” தொகுதிகள் குறித்து பதிவு செய்துள்ளார்.இவை இணையத்திலும் கிடைக்கின்றன என கூறியும் உள்ளார். இணையத்தில் இத்தொகுதிகளை படிக்க விரும்புவோர் கீழ்காணும் இணைப்பில் உள்ள கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று கழக வெளியீடுகள் எனும் தலைப்பின் கீழ் சென்று படிக்கலாம். http://dvkperiyar.com/?cat=76