சென்னையில் மார்க்ஸ் சிலை!
தமிழ்நாட்டில் காரல் மார்க்ஸ் சிலை திறக்கப்படும் என்று திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார் சோவியத் சோஷலிச ஆட்சிக்கு எதிரான உள்நாட்டு எதிர்ப்பு புரட்சிகளை உறுதியாக அடக்கியவர் ஸ்டாலின், பெரியார் இயக்கம் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ரஷ்யாவை உறுதியாக ஆதரித்தது அதன் நினைவாகத்தான் கலைஞர் தனது மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டினார் சோவியத் பயணம் மேற்கொண்ட பெரியார், ஸ்டாலின் பங்கேற்ற மே தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலகட்டத்தில் தான் ஸ்டாலின் அதிபர் பதவிக்கு வந்தார் எதிர் புரட்சிகளை முறியடித்து சோவியத்தில் சோசியலிசத்தை உறுதிப்படுத்திய ஸ்டாலின் பெயரை த் தாங்கி நிற்கும் உலகின் ஒரே முதல்வர் திராவிட ஆட்சியின் முதல்வர் தான் : காரல் மார்க்சின் சிலையை திறந்து வைக்கும் அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டு இருப்பது மிகச் சிறப்பு; மிகப் பொருத்தம். – விடுதலை இராசேந்திரன் பெரியார் முழக்கம் 10042025இதழ்