Category: சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம்

ஜாதி ஆணவப் படுகொலைகளையும் ஜாதிய சமூகத்தின் வெறுப்பு  உளவியலையும் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது  ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம்.

ஜாதி ஆணவப் படுகொலைகளையும் ஜாதிய சமூகத்தின் வெறுப்பு உளவியலையும் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம்.

அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய ஜாதி வெறி, இப்போது தனது உருவத்தை மாற்றிக் கொண்டு நுட்பமாக செயல்படுவதைப் படம் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டு கிறது. நெல்லை மாவட்டம் புளியங்குளம் கிராமம் கதைக்களம். புளியங்குளத்து மக்கள் என்றாலே,  அவர்கள், ‘தலித் மக்கள் தான்’ என்று ஊரை வைத்தே ஜாதி அடையாளம் போர்த்தப்படுகிறது. அப்பகுதியில் 2005ஆம் ஆண்டு நிலவிய ஜாதியப் படிநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையை இயல்பாகக் கண் முன் கொண்டு வந்து நிறுத்து கிறார்கள், ஒளிப்பதிவாளரும், இயக்குனரும். திரைப்படங்கள் தொடங்குவதற்கு முன்பு அரசு ஆணைப்படி கட்டாயமாகக் காட்டப் படும் காட்சிகளான “புகைப் பிடிப்பது – உயிருக்கு ஆபத்து; புற்று நோயை உருவாக்கும்; மது குடிப்பது – உடலுக்குக் கேடானது” என்ற விளம்பரத்தைத் தொடர்ந்து, “ஜாதியும் மதமும் – மனிதநேயத்தைக் கொல்லும்” என்ற அறிவிப் புடன் படம் தொடங்குகிறது. கதையின் நாயகன், உயிருக்கு உயிராக நேசிக்கும் அவனது வேட்டை நாய் ‘கருப்பியை’ உள்ளூர்...

சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம்

சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம்

திராவிடர் விடுதலைக்கழகத்தின் முன்னணி அமைப்பு ஆகும். திராவிடர் விடுதலைக்கழகத்தின் பிரச்சாரப்பணிகளில் மக்களை ஈர்க்கும் கலை வடிவங்களை தோழர்களுக்கு பயிற்றுவித்து கலைவடிவில் பெரியாரியலை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் செயல்படுகிறது. ஆண்டாண்டு காலமாக நாட்டின் பெரும்பான்மை மக்களை அடக்கி, அடிமைப்படுத்தி வைத்துள்ள வேத, இந்து மதம் உருவாக்கி வைத்துள்ள இன்றளவிலும் நடைமுறையில் உள்ள பிறப்பு முதல் இறப்பு வரையிலான இந்து மதத்தின் அனைத்து வகைச் சடங்குகள், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள் அனைத்தையும் அழித்து ஒழித்து இந்து வேத வாழ்வியலுக்கு எதிரான பெரியாரியல் வாழ்வியலை நடைமுறைப் படுத்தும் பணியிலும்,ஜாதி மறுப்புப் பண்பாட்டைச் செயலாக்கும் நோக்கிலும் செயல்படுகிறது. கலை துறையில் முற்போக்கு கருத்துகளின் மூலம் சமூக விடுதலைக்கு உதவிடும் வகையில் படைப்புகளை அளித்திடும் கலைஞர்களை பாராட்டி ஊக்குவித்து வருகிறது. சுயமரியாதை கலை பண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளர்கள் கொளத்தூர் அ.குமார் தலைமை செயற்குழுஉறுப்பினர் தொடர்பு எண் – 9842757550