கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ! 15042018

கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் !

15.04.2018 அன்று கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகில் பேரளையூர் கிராமத்தில் ஆசிரியர் அறிவழகன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

நேமம்,வண்ணான்குடிகாடு,கருவேப்பிலங்குறிச்சி,பேரளைர், ஆகிய கிராமங்களை சேர்ந்த 20 புதிய தோழர்கள் அமைப்பில் இணைந்தனர்.

மாவட்ட, ஒன்றிய,கிளைகழக,மாணவர் கழக பொறுப்புக்கள் புதியதாக நியமிப்பது பற்றியும்,கழகத் தலைவர் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்துவது பற்றியும்,புரட்சி பெரியார் முழக்கம்,மற்றும் நிமிர்வோம் சந்தா சேர்ப்பது பற்றியும் , விவாதிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடல் கூட்டத்தில் கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் நட.பாரதிதாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் அய்யனார்,விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் பூ.ஆ.இளையரசன், சிதம்பரம் நகர செயலாளர்,தோழர் மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அமைப்பை பற்றியும்,பெரியார் அம்பேத்கர் குறித்து கருத்துக்களையும் முன் வைத்தனர்.

தோழர் முத்து நன்றியுரை கூறிய பின் கூட்டம் நிறைவுற்றது.

Image may contain: 1 person, sitting

You may also like...