Category: திவிக

அய்யா உணவகம் திறப்பு விழா

அய்யா உணவகம் திறப்பு விழா

30-05-2025 அன்று காஞ்சிபுரம் அண்ணா குடியிருப்பு அருகில் திறக்கப்பட்டது. ரவி பாரதி (காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் திவிக) ஒருங்கிணைத்தார். மக்கள் மன்ற‌ ஒருங்கிணைப்பாளர் மகேசு திறந்து வைத்து உரையாற்றினார். இரா.உமாபதி( சென்னை மாவட்டச் செயலாளர்), பிரவீன் குமார் (ஒருங்கிணைப்பாளர் மே17 இயக்கம்), தமிழ் சாக்ரடீஸ் (பெரியார் உணர்வாளர்), அ.வெ முரளி காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் தி.க), காஞ்சி அமுதன்(தமிழ் உரிமை கூட்டமைப்பு), மு.சங்கர் (50வது மாமன்ற உறுப்பினர் திமுக), ச.மகேஷ் (திமுக), சானகிராமன் (காஞ்சி மாவட்ட மே17 இயக்கம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அய்யா உணவக உரிமையாளர் சுரேஷ் நன்றி கூறினார். பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 2000 வழங்கினார். மேலும் கழக தோழர்கள் சென்னை அருண் (இளைஞரணி), இராவணன் (துணை செயலாளர் தென்சென்னை), கோபி (பகுதி தலைவர் திருவல்லிக்கேணி) மற்றும் காஞ்சிபுரம் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 01062025இதழ்

குற்றவாளிப் பட்டியலிலிருந்து இராம.இளங்கோவன் விடுவிப்பு!

குற்றவாளிப் பட்டியலிலிருந்து இராம.இளங்கோவன் விடுவிப்பு!

கடந்த 20 ஆண்டுகளாக கழக மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் மீது பொய்யாக சரித்திர குற்றவாளி பதிவேட்டை கோபி காவல் துறையினர் பராமரித்து வருகிறார்கள், அதனால் தான் பெரும் அவதிக்கு ஆளாகியிருப்பதாகவும், தன்னுடைய தனி மனித உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்றும், தன் மீது கடுமையான குற்றப் பின்னணி எதுவும் கிடையாது, நான் விடுதலைப் புலிகளை ஆதரித்த காரணத்திற்காகவும், 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்து “இனி என்ன செய்யப் போகிறோம்” என்ற குறுந்தகடு வெளியிட்டதற்காகவும் என் மீது வழக்கு பதியப்பட்டு சுமார் மூன்றரை மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். 2009-ஆம் ஆண்டு ஈரோடு மாநகரில் உள்ள ஒரு கோயில் மேல் மேம்பாலம் கட்டக்கூடாது என்று இந்து முன்னணியினர் உண்ணாவிரதம் இருப்பதை எதிர்த்து, நானும் கழகத்தினருடன் இணைந்து உண்ணும் விரதம் மேற்கொண்டதற்காக ஈரோடு போலீசாரால் வழக்கு பதியப்பட்டு அதற்காக 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். 2006 ஆம்...

புதுவையில் பெரியார் கைத்தடி பேரணி

புதுவையில் பெரியார் கைத்தடி பேரணி

புதுவையில் 10-5-25 அன்று பாசிச பாஜகவை வீழ்த்துவோம்! சமூகநீதியைக் காப்போம்! உழைப்பாளர் நாள், அம்பேத்கர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் பெரியார் கைத்தடி பேரணியும்- பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பாக நடைபெற்றது. அரியாங்குப்பத்தில் கலைஞர், சிங்காரவேலர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, பெரியார் கைத்தடி பேரணியை பா.செ.சக்திவேல் (தலைமை பொதுக்குழு உறுப்பினர் திமுக புதுச்சேரி)‌, மகேசு காஞ்சி மக்கள் மன்றம் இருவரும் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியில்‌ வழிநெடுக கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெரியார் சிலைக்கு கழக மயிலாடுதுறை மகேஷ் மாலை அணிவித்தார். அரியாங்குப்பம் பகுதியில் தொடங்கி சுமார் 3 கிலோமீட்டருக்கு பேரணியாக சென்று பொதுக்கூட்ட மேடைக்கு வந்தனர். காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலைநிகழ்ச்சிகள், பாடல்கள், நாடகங்கள் பொதுமக்கள் மற்றும் தோழர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் தொடர் சொற்பொழிவுகளாக இல்லாமல் பேச்சுக்களுக்கு இடையே பாடல்கள், நாடகங்கள் என‌ கலைத்திருவிழா போல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரா. உமாபதி, (திவிக சார்பாக சென்னை...

திருச்செங்கோடு தோழர்கள் விடுதலை

திருச்செங்கோடு தோழர்கள் விடுதலை

எச்.ராஜா உருவ பொம்மை எரிப்பு வழக்கில் இருந்து கழகத் தோழர்கள் விடுதலை : பெரியார் சிலையை உடைப்பேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பாஜக எச்.ராஜாவைக் கண்டித்து 2018 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி நாமக்கல் மாவட்டக் கழகம் சார்பில் திருச்செங்கோடு பெரியார் சிலை அருகில் எச்.ராஜா உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் நடைபெற்ற போராட்டத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அதிமுக காவல்துறை, போராடிய கழகத் தோழர்கள் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி திறம்பட வாதாடி வழக்கை ரத்து செய்தார். வழக்கில் விடுதலை பெற்றவர்கள் : மு.சாமிநாதன், வைரவேல், தண்டபாணி, சதீசுகுமார், பூபதி, மணி, பிரகாஷ், சுப்பு என்கிற ராஜசேகர், கோபி, தியாகு, மனோஜ், கவுதம். பெரியார் முழக்கம் 01062025இதழ்

நாமக்கல் மாவட்ட கழகம்‌  “முழக்கத்துக்கு”நன்கொடை

நாமக்கல் மாவட்ட கழகம்‌ “முழக்கத்துக்கு”நன்கொடை

நாமக்கல் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் அ முத்துப்பாண்டி, மாவட்டச் செயலாளர் சரவணன், மாவட்டக் காப்பாளர் கேப்டன் அண்ணாதுரை, குமாரபாளையம் நகரத் தலைவர் எம் டி தண்டபாணி ஆகியோர் முயற்சியில் புரட்சி பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக ரூ.10,000 வழங்கப்பட்டது. நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 01062025இதழ்

பாமகவில் நடக்கும் “குடும்ப நீதி” சண்டை – விடுதலை இராசேந்திரன்

பாமகவில் நடக்கும் “குடும்ப நீதி” சண்டை – விடுதலை இராசேந்திரன்

பிறவியின் அடிப்படையில் இலவசமாகக் கிடைத்தது ஜாதி. இந்த ஜாதியால் பயன் அடைந்தவர்கள் அதைக் கொண்டாடினார்கள். பாதிக்கப்பட்டவர்கள் கொடுமைகளை அனுபவித்தார்கள். ஜாதி சமூகத்தை வளர்க்கவில்லை; மாறாக சமூகத்தைப் பிளவுபடுத்தியது; சமூக ஒற்றுமையையும் அது கட்டிக் காக்கவில்லை. இன்றைக்கு அரசியலில், அதிகாரத்திலும், சமூக உறவுகளைப் பகிர்ந்து கொள்வதிலும், முரண்பாடுகளும் மோதல்களும் வெடித்துக் கொண்டு இருக்கின்றன. “பாட்டாளி மக்கள் கட்சியில் இன்று நடக்கும் அதிகார சண்டை என்பது ஜாதி அரசியலில் மோசமான தோல்வி!” சமூக நீதிக்காக உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி ஒரு காலத்தில் முற்போக்கு பாதையில் பயணித்தது உண்மை; பிறகு 35 வயதில் தனது மகனை இராமதாஸ்அமைச்சராக்கிய பிறகு அது திசை மாறியது. மருத்துவர் ராமதாஸ் அது நான் செய்த பெரும் தவறு என்று இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். சமூக நீதி அரசியலை சமூகத்திற்காகப் பயன்படுத்தாமல் பதவிகளுக்காகப் பயன்படுத்தும் நோக்கத்தோடு கூட்டணிகளை மாறி மாறி ஏற்படுத்திக் கொண்டு சுயநலப் பாதையில் அதிகாரத்திற்காக பயணித்தவர்கள், அந்த...

கழகத் தலைமை அலுவலகத்தில் இட ஒதுக்கீடு அறிமுகவகுப்பு!

கழகத் தலைமை அலுவலகத்தில் இட ஒதுக்கீடு அறிமுகவகுப்பு!

01.06.2025 தமிழ்நாடு மாணவர் கழகம் முன்னெடுத்த புதிய தோழர்களுக்கான “இட ஒதுக்கீடு – அ முதல் ஃ” என்ற தலைப்பில் அறிமுக வகுப்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு குடியரசு தலைமை தாங்கினார், தோழி அனைவரையும் வரவேற்றார், தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரன்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் இளவரசன் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கும் தோழர்களுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் அன்பு தனசேகர் இட ஒதுக்கீடு பற்றி சிறப்பாக அறிமுக வகுப்பெடுத்தார். வகுப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற தோழர் லாவண்யா அவர்களுக்கு தோழர் அன்பு தனசேகர் பரிசுத்தொகை ரூ.1000/- வழங்கினார். நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி.குமரன் உட்பட 40-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். தோழர்களுக்கு மதிய உணவை தி.வி.க மாவட்டச் செயலாளர் உமாபதி வழங்கினார். நிறைவாக தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்...

மதக்கலவரத்தை தூண்டும் ஆதினத்தை கைது செய்-மதுரையில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மதக்கலவரத்தை தூண்டும் ஆதினத்தை கைது செய்-மதுரையில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மதக்கலவரங்களை தூண்டும் விதமாக பேசி வரும் மதுரை ஆதினத்தை கண்டித்து 16-5-2025 அன்று காலை 10:30 அளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மதுரையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன நிகழ்வில் பால் பிரபாகான் (கழக பரப்புரைச் செயலாளர்) கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி (திவிக) தலைமையில் நிகழ்வு தொடங்கி, கனியமுதன்(விசிக), மீ.த பாண்டியன்(மதநல்லிணக்கக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்), பசும்பொன் பாண்டியன் (அ.தி.ம.மு.க), பேரறிவாளன் (பொதுச் செயலாளர் – தமிழ்ப் புலிகள்), கபீர் நகர் கார்த்திக் (ஆதித்தமிழர் பேரவை துணை பொதுச் செயலாளர்), வரதராஜன் (பெரியார் நெறியாளர்), தமிழ்ப்பித்தன் (த.பெ.தி.க), ராமலிங்கம் (ம.க.இ.க மாநில ஒருங்கிணைப்பாளர்), அப்பாஸ் (மனிதநேய மக்கள் கட்சி), குமரன் (பு .இ.மு) ஆகியோர் கலந்து கொண்டு ஆதீனத்தைக் கண்டித்தும், அவரை கைது செய்யவும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தோழமை இயக்கங்களுடன் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக்...

நீதிபதிகளே மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறார்கள் நாத்திகர் விழாவில் தோழர்கள் உரை

நீதிபதிகளே மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறார்கள் நாத்திகர் விழாவில் தோழர்கள் உரை

ஜெசி மூடநம்பிக்கைகளை நீதிபதிகளே பரப்புப்கிறார்கள் என்று காஞ்சி மக்கள் மன்றம் தோழர் ஜெசி கூறிப்பிட்டார். அவரது உரையிலிருந்து… இன்றைக்கு பல்வேறு மூடநம்பிக்கை கருத்துக்களை சாமியார்கள் பேசுவதைவிட நீதிபதிகள், அமைச்சர்கள் இப்போது தீவிரமாக பேசி வருகிறார்கள். ஒரு நீதிபதி பேசுகிறார் “பசு ஆக்சிஜனை உள்ளிழுத்து ஆக்சிஜனையே வெளியேற்றம் செய்கிறது. சாமியார்களிலே வித்தியாசமான சாமியார் நித்தியானந்தா தான். அவர் பேச்சுத் தொணி கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும். நித்தியானந்தா ஒரு (cosmic Airport)பிரபஞ்ச விமான நிலையத்தை உருவாக்கி இருக்கிறார். கருவுறும் பெண்கள் எல்லோரும் வாருங்கள். இந்த பிரபஞ்ச விமான நிலையத்தில் உங்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய இடத்தில் வந்து குழந்தை பெற்றுக் கொண்டால் பிறக்கும் போது ஞானம் பெற்றிருப்பார்கள். நான் அதற்குரிய (DNA) மரபணுக்களை மாற்றிவிடுவேன் ஆகையால் இங்கே வாருங்கள் என்று நித்தியானந்தா அழைக்கிறார். ஒரு ராஜஸ்தான் நீதிபதி பேசியது: ஆண் மயில்கள் பிரம்மச்சாரிகளாம். பெண்மயில்ளோடு உடலுறவு வைத்துக் கொள்வதில்லை. ஆண்மயில்களின் கண்ணீரை குடித்துத்...

கொளத்தூர் குலுங்கியது

கொளத்தூர் குலுங்கியது

சேலம் மாவட்டம் மகளிர்‌ அணி சார்பில் 24.05.2025 அன்று நாத்திகர் விழா அதை ஒட்டி அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம்! மூடநம்பிக்கைகளை ஒழிப்போம் என்கிற முழக்கத்தோடு மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி மற்றும் நாத்திகர் விழா நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து பெண்கள், குழந்தைகள், தோழர்கள் மட்டும் தனி வாகனத்தில் மாநாட்டுக்கு வந்தனர். பெண்கள் மட்டுமே சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கர்ப்பிணிப் பெண்களும், கைக்குழந்தைகளுடனும் பெண்கள் பங்கேற்றனர். குழந்தை பிறந்து 20 நாட்களே ஆன கிருத்திகா அலகு குத்தி பேரணியில் பங்கேற்றார். உக்கம்பருத்திக்காடு சு. கோமதி, காவலாண்டியூர் க.கலைச்செல்வி, கொளத்தூர் அழகேஸ்வரி, உக்கம் பருத்திக்காடு கு.லதா, மாதம்மாள் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்தனர். சேலம் (கொளத்தூர், காவலாண்டியூர், மேட்டூர், மேட்டூர் ஆர்எஸ், மேச்சேரி, நங்கவள்ளி, கொங்கணாபுரம், ஏற்காடு, ஆத்தூர்‌) போன்ற பகுதிகளில் இருந்தும் ஈரோடு வடக்கு, தெற்கு, திருப்பூர், கோவை, நாமக்கல், திருச்சி, பொள்ளாச்சி, மடத்துக்குளம், சென்னை, மதுரை, தஞ்சாவூர், தென்காசி,...

பெண்களின் “நாத்திகப் பேரணி” – கடவுள் இல்லை; மதம் இல்லை; ஜாதி இல்லை!

பெண்களின் “நாத்திகப் பேரணி” – கடவுள் இல்லை; மதம் இல்லை; ஜாதி இல்லை!

கருப்பு உடை தரித்து பெரியாரியப் பெண்கள் தீச்சட்டிகளுடன் அலகுகுத்திக் கொண்டும் கடவுள் இல்லை என்றும் பேரணியாக அணிவகுத்த காட்சியை கொளத்தூர் கண்டது. “நாங்கள் பெரியாரியப் பெண்கள்; எங்களுக்கு கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை, தோழியர்களே! இந்த நம்பிக்கைகள் தான் நம்மை அடிமையில் ஆழ்த்துகின்றன” என்ற செய்தியை மக்களுக்கு கூறினார்கள். மேட்டூர் வட்டத்தின் ஒரு சின்னஞ்சிறு கிராமம் கொளத்தூர். அந்த ஊரைச் சார்ந்த திராவிடர் விடுதலைக் கழக மகளிர் அணியினர் ஒரு புரட்சிகர முடிவை எடுத்தனர். நாத்திகர் விழா நடத்துவது என்று அறிவித்து களம் இறங்கினர். கழகத் தலைமைக்கு அந்த முடிவை தெரிவித்தனர். பெண்களே நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். பெண்களே பொதுமக்களிடம் நிதி திரட்டினார்கள். கடவுள், மதத்தை எதிர்த்து இப்படி பெண்கள் களத்தில் இறங்கி செயல்பட்டு பேரணியையும் விழாவையும் நடத்தி அதை வெற்றியாக்கி சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு முழுதும் இருந்து கழகத் தோழர்கள் பெண்களும் ஆண்களுமாக கொளத்தூர் நோக்கி திரண்டனர்....

கழகத் தலைவருக்கு கடவுச்சீட்டு புதுப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

கழகத் தலைவருக்கு கடவுச்சீட்டு புதுப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களுக்கு புதிய கடவுச்சீட்டு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளைக் காரணம்காட்டி கடவுச்சீட்டு கோரிக்கையை நிராகரிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி,சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என்னுடைய கடவுச்சீட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலாவதியாகி விட்டதால், அதை புதுப்பிக்க வேண்டும். ஆனால், என் விண்ணப்பத்தை பரிசீலித்த மண்டல கடவுச்சீட்டு அதிகாரி, என் மீது தடா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறி நிராகரித்துவிட்டார்” என முறையிட்டார். இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. கொளத்தூர் மணி தரப்பில் வழக்குரைஞர் வி.இளங்கோவன் ஆஜராகி, ‘‘குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாலேயே கடவுச்சீட்டை புதுப்பிக்காமல் இருப்பது தவறு என்று உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும், ஏற்கெனவே பல வழக்குகளில் தீர்ப்புகளைப் பிறப்பித்துள்ளன’’ என்று வாதிட்டார். ஒன்றிய அரசுத் தரப்பில், மனுதாரர்...

மாணவர்களுக்கு ஆலோசனை மய்யம்,மாணவர் கழகம் முடிவு

மாணவர்களுக்கு ஆலோசனை மய்யம்,மாணவர் கழகம் முடிவு

சென்னை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகத்தின் (04/05/25) சந்திப்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு குறளரசி தலைமை தாங்கினார், இளவரசன் முன்னிலை வகித்தார். சூர்யா, ஷர்மிளா, தோழி, பிரசாந்த், பேரன்பு ஆகியோர் கலந்துகொண்டனர். எடுக்கப்பட்ட முடிவுகள்: 1)கல்லூரி சேர இருக்கும் மாணவ மாணவியருக்கான வழிகாட்டுதல் தருவது. 2)இட ஒதுக்கீடு பற்றிய அறிமுக வகுப்பு இந்த மாதத்தில் நடத்துவது. 3) புதிய இசைக்குழுவை தொடங்குவது. தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக 2025-2026 ஆண்டு பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள். தனியார் பள்ளிகளில் 25% பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு RTE முலமும், சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித் திட்டத்தில் விண்ணப்பித்து தரப்படும். தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கல்லூரி சேரும் மாணவ மாணவியருக்கான ஆலோசனை மையம். தொடர்புக்கு: பேரன்பு(சென்னை): 89731-19313, இளவரசன்(சென்னை): 88382-77257 நாகராஜன்(சேலம்): 90929-04626, ஷர்மிளா(ஈரோடு)-75987-04581 நவீன்(கோவை)-63698-18361, ஷியாம் (தஞ்சாவூர்)-90808-18987 பெரியார் முழக்கம் 22052025இதழ்

சென்னையில் சிறப்பாக நடந்த குழந்தைகள் பழகு முகாம்

சென்னையில் சிறப்பாக நடந்த குழந்தைகள் பழகு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றம் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் இணைந்து சென்னையில் 17.05.2025 அன்று ‘திராவிட வாரிசுகள்’ ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாமை நடத்தியது. இந்த பழகு முகாமில் குழந்தைகளுக்கு தலைமைப் பண்பு வளர்த்தல், பாலின சமத்துவம், கலைகள் கற்றல் இது போன்ற தலைப்பில் கலை வடிவத்திலும் விளையாட்டு, பாடல் மூலமாகவும் வகுப்புகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, முத்துராணி, விரட்டு கலைக்குழு ஆனந்த் ஆகியோர் பயிற்சி வழங்கினர். தோழர் சிற்பி ராஜனின் மந்திரமா? தந்திரமா? என்று அறிவியல் விளக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. கழகக் குடும்பங்களைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த பழகு முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கலந்துகொண்ட குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர்...

பெரியார் பல்கலை.பேராசிரியர் கதிரவனை பொறுப்பில் இருந்து நீக்குக!

பெரியார் பல்கலை.பேராசிரியர் கதிரவனை பொறுப்பில் இருந்து நீக்குக!

தமிழக அரசுக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கோரிக்கை! இது குறித்து கழகத் தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஆட்சிக் குழு உறுப்பினர் நிர்வாகப் பதவியில் பொறுப்பு வகிப்பதா? துணை வேந்தரின் செயலுக்குக் கண்டனம். ஆட்சிக் குழு பதவிக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார் உளவியல் துறை பேராசிரியர் கதிரவன்” ஆட்சிக் குழு உறுப்பினர் என்பது நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் கொடுக்கும் ஒரு அமைப்பாகும். அவ்வாறான ஆட்சிக்குழுவில் உள்ளவரே கையெழுத்திட்டு பணி இடை நீக்க ஆணையைப் பேராசிரியர் வைத்தியனாதனுக்கு வழங்கி விட்டு இவரே எப்படி ஆட்சிக் குழுவில் ஒப்புதல் தர முடியும்? இந்த முறைகேட்டால் பேராசிரியர் கதிரவன் ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற தகுதியை இழந்து விட்டார். இவரை உடனடியாக ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். மேலும் சேலம் பெரியார் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் வைத்தியநாதன் தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவாலின்...

நாத்திகர் விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

நாத்திகர் விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

வரும் மே 24 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சேலம் மாவட்டம் கொளத்தூரில் நடைபெற உள்ள நாத்திகர் விழா – மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணி – பொதுக்கூட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டம் நடத்த அனுமதி கேட்டும் இதுவரை போலீசார் தரப்பில் எந்த உத்தரவும் தராததால் சேலம் மாவட்ட தி.வி.க. மகளிர் அணி அமைப்பாளர் சுதா அவர்கள் கூட்டத்திற்கு அனுமதிகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீது நீதிமன்றம் உத்தரவு. வழக்குரைஞர் திருமூர்த்தி கழக சார்பில் வாதாடினார். பெரியார் முழக்கம் 22052025இதழ்

மேச்சேரியில் பொதுக்கூட்டம்

மேச்சேரியில் பொதுக்கூட்டம்

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்! இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மேச்சேரியில் 20.04.2025 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேட்டூர் டி.கே.ஆர்.இசைக் குழுவின் பறை இசை மற்றும் பகுத்தறிவுப் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை.தாமோதரன் அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்வு மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவ சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், திருப்பூர் மகிழவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். நிறைவுரையாக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி அவர்கள் கருத்துரையாற்றினார். இறுதியாக சேலம்...

சங்கராபுரத்தில் தீர்மான விளக்கக் பொதுக்கூட்டம்!

சங்கராபுரத்தில் தீர்மான விளக்கக் பொதுக்கூட்டம்!

28/04/2025 திங்கள் மாலை 5 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் செம்பராம்பட்டு ஊரில் கழக மு.சரத்குமார் தலைமையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாள் மற்றும் மயிலாடுதுறை மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்ட நிகழ்வை கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் க.இராமர் ஒருங்கிணைத்தார். மு.நாகராஜ், வீ.முருகன், தே.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை.தாமோதரன் மந்திரமல்ல தந்திரமே என்ற சாமியார்களின் மோசடியையும், சோதிடம் போன்ற புரட்டுகளையும், மூடநம்பிக்கையால் மக்கள் எவ்வளவு ஏமாறுகிறார்கள் என்று தன்னுடைய அறிவியல் விளக்க கலைநிகழ்ச்சி மூலம் விளக்கினார். தொடக்க உரை செ.வே.ராஜேஷ் நிகழ்த்தினார். கழக மாவட்ட தலைவர் க.மதியழகன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ. இளையரசன், தபெதிக கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் செ. பிரபு, மக்கள் அதிகார கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ஆ.இராமலிங்கம், CPI இவிதொச, கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் க.முருகேசன், அறிவியல் மன்ற தலைவர்...

சனாதன எதிர்ப்புக்கு அடித்தளம் அமைத்தது சுயமரியாதை இயக்கமே!

சனாதன எதிர்ப்புக்கு அடித்தளம் அமைத்தது சுயமரியாதை இயக்கமே!

பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் பேச்சு தென்காசி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 03.05.2025 சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு திராவிடம் – பெரியார் யாருக்கு எதிரி? என்ற தலைப்பில் கீழப்பாவூர் சென்ட்ரல் பேங்க் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள சுயமரியாதைச் சுடரொளி கூ.சு.ரா திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் குறும்பை. அரு. மாசிலாமணி தலைமை வகித்தார். கீழப்பாவூர் ஒன்றிய தி.வி.க. செயலாளர் செட்டியூர் சேர்மத்துரை திப்பணம்பட்டி தங்கத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட தி.வி.க. செயலாளர் பொ.பெ.சு.அன்பரசு வரவேற்புரையாற்றினார். இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் விடுதலைக்கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினர். அவர் தனது உரையில் இந்தியா எனும் மதச் சார்ப்பற்ற நாட்டை ஆளும் ஒன்றிய பா.ஜ.க. அரசு RSS ன் கொள்கையான சனாதனக் கொள்கையை இந்தியாவின் சட்டமாக்கிட இந்தியாவை வேத காலத்திற்கு கொண்டு சென்று வேறுபாடு நிறைந்த ஜாதி வேற்றுமை கூடிய நாடாக மாற்றத் துடிக்கிறார்கள்....

கருத்துச் செறிவுடன் நடந்த சென்னை பயிலரங்கம்!

கருத்துச் செறிவுடன் நடந்த சென்னை பயிலரங்கம்!

தோழர்‌ பத்ரி நாராயணன் நினைவு நாளில்”கற்போம்! களம் காண்போம்!” என்ற தலைப்பில் 30/04/25 அன்று சென்னை இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில், கழக இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர் ப.அருண் தலைமையில் பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்க ஏற்பாடுகளை கழக இளைஞரணி தோழர்கள் நேர்த்தியாக செய்திருந்தனர். பயிற்சி பெற்ற 55 பேரில் 15 க்கு மேற்பட்டவர்கள்‌ பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட இயக்க வரலாற்றில் இடம்பெற்ற தலைவர்களின் படங்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. கழகத்தலைவர் தனது தொடக்க உரையில் சுயமரியாதை இயக்கத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் உள்ள பண்பு ரீதியான வேறுபாடுகளை சுட்டிக்காட்டி இயக்க வரலாறுகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டிய தேவையை வற்புறுத்தினார். நிறைவுரை ஆற்றிய விடுதலை இராசேந்திரன் கழகத் தோழர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கமான விடையளித்தார். கருத்துரையாற்றிய அனைவருக்கும் கழக வெளியீடுகள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. “கொள்கை தரும் இன்ப வாழ்வு!” எனும் தலைப்பில் மாவட்டச்...

நீட் தேர்வில் தொடரும் ‘கெடுபிடிகள்’-ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைகிறது

நீட் தேர்வில் தொடரும் ‘கெடுபிடிகள்’-ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைகிறது

ஒன்றிய ஆட்சியின் தேர்வு நிறுவனம் நடத்தும் கெடுபிடிகளால் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது 2021-க்குப் பிறகு 2025 இல் முதல் முறையாக மிக மோசமான அளவுக்கு தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன இந்த ஆண்டு தேர்வு எழுத விண்ணப்பித்த 25 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுத முன் வந்துள்ளனர். ● நீட் நுழைவுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்ய, தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 42 பேர், மூன்று ஆண்டு தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. ● எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்தாண்டு நடந்த நீட் தேர்வில், வினாத்தாள் கசிந்ததாகப் புகார் எழுந்தது. ● இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரித்து...

நாத்திகர் விழா! கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நாத்திகர் விழா! கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

தோழர்களுக்கு வணக்கம்,வருகிற நாள் 24.05.25 சனிக்கிழமை சேலம் மாவட்டம் கொளத்தூரில் திராவிடர் விடுதலைக் கழக பெண்களே தலைமையேற்று முழுமையாக நடத்தும் “நாத்திகர் விழா “நடைபெற உள்ளது. “நாத்திகர் விழா”வின் முதல் நிகழ்வாக முக்கிய நிகழ்வாக மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற உள்ளது. மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில், 1. முதுகில் அலகு குத்தி கார் இழுப்பது 2. முதுகில் அலகு குத்தி தொங்கும் பறவைக் காவடி 3. தீச்சட்டி ஏந்துதல் 4. ஆணிப் படுக்கையில் படுத்து வருவது 5. அரிவாளின் மீது ஏறி நிற்பது 6. கன்னத்தில் அலகு குத்துவது 7. கன்னத்தில் முதுகில் எலுமிச்சம்பழம் குத்துவது 8. நாக்கில் சூடத்தை எரிய விடுவது 9. நெருப்பை கக்குவது 10. சுருள் வீச்சு 11. தீப்பந்தம் சுற்றுதல் 12. சிலம்பம் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் தங்கள் பெயர்களை கீழ்காணும் அலைபேசி எண்ணில் முன்கூட்டியே பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். “மூடநம்பிக்கைகளை...

மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் இல்லம்‌ சென்று ஆ.ராசா நலம்‌ விசாரித்தார்.

மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் இல்லம்‌ சென்று ஆ.ராசா நலம்‌ விசாரித்தார்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் அவர்கள் இல்லத்துக்கு சென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் நலம் விசாரித்தார். உடன் திமுக பொறுப்பாளர்கள் ரோட்ஜ், முனுசாமி தொண்டாமுத்தூர் ரவி, சி.ஆர் இராமச்சந்திரன், அருண், அறிவரசு மற்றும் கழக தோழர்கள் பலர் உடன் இருந்தனர். பெரியார் முழக்கம் 08052025இதழ்

இணையதள பிரிவின் மின்னூல்

இணையதள பிரிவின் மின்னூல்

கழக இணையதள பிரிவு சார்பாக‌ கடந்த ஏப்ரல் 21 தேதி மயிலாடுதுறை மாநாட்டின் தீர்மானத்தை ஒட்டி கழகம்‌ சங்கரச்சாரிக்கு எதிராக பெரியார் முழக்கத்தில் எழுதிய செய்திகளை இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் தொகுத்து “இன‌ ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி” என்ற‌‌ தலைப்பில் மின்னூல் வெளியிடப்பட்டது. அட்டைப்பட‌ வடிவமைப்பு: அருண் இளைஞரணி, நூல் வடிவமைப்பு: பரிதி. மேலும் இந்த மின்னூல் கழக இணையதள பக்கத்தில் இலவசமாக படிக்கலாம். பெரியார் முழக்கம் 15052025இதழ்

தூத்துக்குடியில் பொதுக்கூட்டம்!

தூத்துக்குடியில் பொதுக்கூட்டம்!

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் மற்றும் இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு தருவைகுளம் மெயின் ரோட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக பொருளாளர் கே.சந்திர சேகர் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக அமைப்பாளர் பால். அறிவழகன், ஆழ்வை ஒன்றிய தி.வி.க. செயலாளர் இரா.உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ச.ரவி சங்கர் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு திராவிடர் விடுதலைக்கழக மாநில பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் இன ஒதுக்கல் பேசும் சங்கராச் சாரி மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்வில் திராவிடர் தமிழர் கட்சியின் மாநில நிதிச் செயலாளர் சு.க. சங்கர், மனித நேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கா.மை....

கழக தலைவர் பங்கேற்ற கோவை பொதுக்கூட்டம்!

கழக தலைவர் பங்கேற்ற கோவை பொதுக்கூட்டம்!

03.05.2025 அன்று கோவை சின்னியம்பாளையத்தில் பெரியார் உணர்வார்கள் ஏன் வேண்டும் திராவிட மாடல் ஆட்சி! என்ற தலைப்பில் பொதுக்கூட்டத்தை நடத்தினர். கூட்டத்திற்கு சிவா மொபைல்ஸ் சிவா தலைமை தாங்கினார். சூலூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் அன்பரசு முன்னிலை வகித்தார். கழக மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார். நிறைவாக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சிபிஐ(எம்) மாவட்டக் குழு உறுப்பினர் ஸ்டாலின் குமார், தி.மு.க. மருத்துவரணி பெரியார் செல்வி, அ.பா.சிவா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, தி.மு.க. மகளிரணி ஜெயலலிதா, திருப்பூர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் விஷ்ணு நன்றி கூறினார். இப்பொதுக்கூட்டத்தில் கோவை திருப்பூர் மாவட்டக் கழகத் தோழர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுக்கூட்டம் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வை வழக்கறிஞர் சரவணக்குமார் ஒருங்கிணைத்தார். இனியன் கழக தலைவர் முன்னிலையில் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்....

மயிலாடுதுறை, கடலூரில் சங்கராச்சாரி கண்டித்து ஆர்ப்பாடங்கள்

மயிலாடுதுறை, கடலூரில் சங்கராச்சாரி கண்டித்து ஆர்ப்பாடங்கள்

மயிலாடுதுறை: திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 26.04.25 சனி மாலை கிட்டப்பா அங்காடி அருகில் “இன ஒதுக்கல்” பேசும் சங்கராச்சாரியை கண்டித்து மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரையாற்றியோர்: பேராசிரியர் ஜெயராமன் தமிழ்மண் தன்னுரிமை இயக்கம், ராஜசேகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, சுப்பு.மகேஷ் தமிழர் உரிமை இயக்கம், இளையராஜா,திராவிடர் விடுதலைக் கழகம். நன்றியுரை: வீரமணி கடலூர்: 21.4.2025 மாலை 6 மணி அளவில் காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கடலூரில் மஞ்சகுப்பம் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திவிக அருணாச்சலம் வழக்கறிஞர் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில தேர்தல் பணி குழு செயலாளர் வழக்கறிஞர், இள புகழேந்தி, தமிழ் மீனவர் விடுதலை வேங்கையின் நிறுவனத் தலைவர் தமங்கையர் செல்வன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் தி ச திருமார்பன்,...

மே.18 கொண்டாட்ட நிகழ்வு தள்ளிவைப்பு!

மே.18 கொண்டாட்ட நிகழ்வு தள்ளிவைப்பு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மே18 அன்று திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் நட்சத்திர இசை திருவிழா கன்னிகுமரியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி கீழ்க்கண்ட அறிக்கையை விடுத்து இருந்தார். துயர மிகுந்த இந்த நாளில் இவ்வாறான கொண்டாட்டத்தை நடத்துவது இன உணர்வுமிக்க தமிழர்களின் உணர்வுகளைப் பதறவைக்கும் ஒன்றாகும். அந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களை இதனை வேறு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டுமாறு முதற்கட்டமாக கனிவுடன் கோருகிறோம் என்று குறிப்பிட்டுருந்தார். அதனை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர்‌ நாசர்‌ இதில் தலையிட்டு நிகழ்ச்சியை தள்ளி வைக்க முயற்சிகளை எடுத்தார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டது. இத்தகவலை திரு நாசர் கழக தலைவருக்கு கடிதமாக எழுதியுள்ளார். இன‌முரசு சத்தியராஜ் இந்த கடிதத்தை கழக தலைவருக்கு அனுப்பியுள்ளார். இதற்கு நன்றி தெரிந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்ட அறிக்கையில்: ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் கழகத்...

கழகத் தலைவருக்கு சீர் விருது

கழகத் தலைவருக்கு சீர் விருது

சீர் வாசகர் வட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு 2025 ஆண்டுக்கான‌ சமூக போராளி விருது வழங்குகிறது. விருது தொகை ரூ. 1,00,000 இது தொடர்பாக சீர் வாசகர் வட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் போராட்ட களங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாய் முதல் வரிசையில் நிற்கும் முன்கள வீரர் என்று பாராட்டி உள்ளது.வாசகர் வட்டத்தின்‌ அறிக்கை: சாதி ஒழிப்பு, சமூகநீதி, பாலின சமத்துவம், பகுத்தறிவுப் பரப்புரை, சுரண்டல் எதிர்ப்பு என மானுட விடுதலைக்கான அனைத்துத் தளங்களிலும் போராட்டக் களங்களிலும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் முதல் வரிசையில் நிற்கும் முன்கள வீரர். இட ஒதுக்கீட்டு வரலாறு, விடுதலை வேட்கை, தமிழர் பண்பாடு, பெரியாரும் தனித்தமிழ்நாடும், பெரியாருக்கு எதிரான முனை மழுங்கும் வாதங்கள் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தமிழர், தமிழ்நாடு நலன்சார்ந்த போராட்டங்களுக்காக எண்ணற்ற முறை சிறை சென்றவர். சட்டத்தை விட நியாயமே மேலானது என்பதை உரத்துச் சொல்பவர். தன் பேச்சையும் மூச்சையும்...

வடகாட்டில் கொடூரமான ஜாதி வெறித் தாக்குதல்!-கழகத் தோழர்கள் கள ஆய்வு

வடகாட்டில் கொடூரமான ஜாதி வெறித் தாக்குதல்!-கழகத் தோழர்கள் கள ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம், வடகாடு கிராமத்தில் அடைக்கலங் காத்தார் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் ‘அண்ணா கைப்பந்துக் கழகம்’ என்ற பெயரில் விளையாட்டுத் திடல் அமைத்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி இளைஞர்கள் விளையாடி வந்துள்ளனர். இந்நிலையில், மேற்படி இடத்தில் தலித் மக்கள் பொங்கல் விழா நடத்துவதற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முயற்சித்த போது, இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, மேற்படி இடம் பட்டியல் இன மக்களுக்குச் சொந்தமானது என்ற தீர்ப்பைப் பெற்றுள்ளனர். அண்ணா கைப்பந்து கழகத்தினர் மேல்முறையீடு செய்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட் களுக்கு முன்பாக மேற்படி அடைக்கலங் காத்தார் அய்யனார் கோவிலில் பொங்கல் வைப்பதற்காக தலித் மக்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். அப்போது பிற சமூகத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். இதில், எந்தக் குற்றமும் செய்யாத பட்டியலின...

அம்பேத்கர் சிலைக்கு கழகம் மரியாதை!

அம்பேத்கர் சிலைக்கு கழகம் மரியாதை!

கோவை: சிவானந்தா காலனியில் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் 135-வது பிறந்தநாளில் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் நவீன் அவர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துகொண்டனர். பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சமத்துவ நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், கோவை மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் டெம்போ சிவா, திவிக கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமார், திவிக கோவை மாநகரச் செயலாளர் வெங்கட், திவிக கோவை மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன், முன்னாள் கோவை மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் மதிவாணன், தமிழ்ப்புலிகள் தோழர்கள் தம்பி செந்தில், கோவை குமார், ராமகிருஷ்ணன், திவிக தோழர்கள் ஸ்டாலின், மாதவன், நிலவழகன், ராமகிருஷ்ணன், கீர்த்தீகா, அபிலேஸ் பாண்டியன் மற்றும் மாவட்ட, மாநகர பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இறுதியாக ரத்தினபுரி பகுதி திவிக பொறுப்பாளர்...

களப்பணியில் கழகத் தோழர்கள்

களப்பணியில் கழகத் தோழர்கள்

18.03.25: புலியூர், தரங்கம்பட்டியில் “பெரியார் இன்னும் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்?” பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன. பரப்புரையின் போது கரூர் மாவட்ட எல்லையில் நொய்யல் பகுதியில் கரூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் குடியரசு கிருஷ்ணராயபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், பரப்புரைப் பயணத் தோழர்களுக்கு குடிநீர், பிஸ்கட் வழங்கி வழியனுப்பி வைத்தனர். கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி மற்றும் பயணத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் பயனாடை அணிவித்து வரவேற்றனர். 19.03.25: மணப்பாறை காமராஜர் சிலை, இலுப்பூர், அன்னவாசல் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பரப்புரைக் கூட்டங்கள் எழுச்சியோடு நடைபெற்றன. 20.03.25: புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் 4-ரோடு, ஆலங்குடி, விராலிமலை, வடகாடு, கைகாட்டி பகுதிகளில் மக்கள் பேராதரவோடு பரப்புரைக் கூட்டங்கள் சிறப்புடன் நடைபெற்றன. இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சொர்ண குமார், விசிக வழக்கறிஞர் அம்பேத்கர் வளவன், சிபிஜ முருகன் கலந்து கொண்டு உரையாற்றினர்....

வழக்குரைஞர்கள் திருமூர்த்தி, ஜான் இளமாறனுக்கு பாராட்டு!

வழக்குரைஞர்கள் திருமூர்த்தி, ஜான் இளமாறனுக்கு பாராட்டு!

கர்நாடக தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ராஜ் பவன், வெல்கம் ஹோட்டல்களை முற்றுகையிட்டதாக தொடரப்பட்ட வழக்கு, எஸ்.வி.சேகர் வீட்டை முற்றுகையிட்ட வழக்கு, பெரியார் சிலையை உடைப்போம் என ஹெச்.ராஜா கூறியதற்காக சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் எதிர்வினையாற்றியதாக தொடரப்பட்ட வழக்கு, இலங்கை தமிழர் விவகாரத்தில் புத்த மட முற்றுகை வழக்கு என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த பல முக்கிய வழக்குகளில் இருந்து கழகத் தோழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் கழகத் தோழர்கள் சார்பாக ஆஜராகி விடுதலை பெற்றுத் தந்த வழக்குரைஞர்கள் திருமூர்த்தி, இளமாறன், ஜான் ஆகியோருக்கு பாராட்டு விழா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த பாராட்டு நிகழ்வில், கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கழகத்தினர் மீதான வழக்குகளை திறம்பட நடத்திய வழக்கறிஞர்களை பாராட்டிப் புத்தகங்களை வழங்கினார்....

ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் ஒட்டிய ஸ்டிக்கர்-விடுதலை இராசேந்திரன்

ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் ஒட்டிய ஸ்டிக்கர்-விடுதலை இராசேந்திரன்

ஆளுநர் ஆர்.என் ரவி பதவி விலக வேண்டும் என்ற முழக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது என் கருத்து. நீதிமன்ற அவமதிப்புச் சின்னமாக இங்கேயே இருக்கட்டும். உச்ச நீதிமன்றம் ஆளுநரின் மீது இரண்டு ஸ்டிக்கர்களை ஒட்டி உள்ளது. சட்ட விரோதமாக முறைகேடாக செயல்பட்டுள்ளார் என்பது ஒன்று anti constitunal and erroneous, நல்ல எண்ணம் கொண்டவராக நடந்து கொள்ளவில்லை என்பது இரண்டு. The conduct exhibited on part of the Governor, as it clearly appears from the events that have transpired even during the course of the present litigation, has been lacking in bonafides. There have been clear instances where the Governor has failed in showing due deference and respect to the judgments and directions of this Court. In...

ஆளுநருக்கு எதிர்ப்பு வலுக்கிறது!-சேலத்தில் ரயில் மறியல்! கோவையில் கருப்புக்கொடி! சென்னை மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டங்கள்…

ஆளுநருக்கு எதிர்ப்பு வலுக்கிறது!-சேலத்தில் ரயில் மறியல்! கோவையில் கருப்புக்கொடி! சென்னை மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டங்கள்…

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆளுநர் ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு எனும் முழக்கத்தோடு.. 25.04.2025 வெள்ளி மாலை 4.00 மணியளவில் சேலம் ரயில் நிலையத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு கழக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமை வகித்தார். கழக மாநில வெளியீட்டுச் செயலாளர் கோபி.இராம.இளங்கோவன் முன்னிலை வகித்தார். தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் ராவண பிரபு, CPML மக்கள் விடுதலை ப.செல்வகுமார், உழைப்போர் இயக்கம் கண்ணன், புரட்சிகர இளைஞர் முன்னணி வின்சென்ட் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கலந்து கொண்டவர்கள்: அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், தலைமைக் குழு...

சங்கராச்சாரிக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்!

சங்கராச்சாரிக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்!

கோவை: காஞ்சி விஜயேந்திர சங்கராச்சாரி அரசியல் சட்டத்திற்கு எதிராக இன ஒதுக்கல் பேசியதைக் கண்டித்து கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு, கழகத்தின் கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் இரவிக்குமார், தமிழ்ப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் இளவேனில், புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், Cpi ml ரெட் ஸ்டார் இனியவன், மக்கள் அதிகாரம் கணேஷ், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிக்குமார் மற்றும் தோழமை அமைப்பினரும், திராவிடர் விடுதலைக் கழக மாநகரச் செயலாளர் வெங்கட், மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், மாதவன், சதீஷ், ஸ்டாலின் ராஜா, மாணவர் கழகப் பொறுப்பாளர் நவீன், கௌதம், கதிரவன் கலந்து கொண்டனர். நாமக்கல்: குமாரபாளையம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாலை...

போலித் தமிழ்தேசியர்களுக்கு மறுப்பு! புரட்சிக் கவிஞர் ‘திராவிட’ எதிர்ப்பாளரா?

போலித் தமிழ்தேசியர்களுக்கு மறுப்பு! புரட்சிக் கவிஞர் ‘திராவிட’ எதிர்ப்பாளரா?

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெரியார் மறுத்து திராவிடம் பேசினார் என்று “விலை போகும் தமிழ்த்தேசியங்கள்” பிதற்றி வருகின்றன. அந்த புரட்டுக்களை மறுத்து மறைந்த திராவிட இயக்கப் பெருங்கவி தமிழேந்தி ‘பாசறை முரசு’ இதழுக்கு எழுதிய கட்டுரை புரட்சிக் கவிஞர் நினைவு நாளையொட்டி வெளியிடப்படுகிறது. “திராவிடர்’ என்ற சொல் இந்தியர் என்ற சொல்லுக்கு எதிரான பொருளிலும் அமைந்தது. மேலும் “பார்ப்பனர் அல்லாதார்’ என்ற சொல்லைப் புறந்தள்ளிய பெரியார், “நம்மைக் குறிக்கப் பார்ப்பனர் அல்லாதோர் என்கிறோம். அல்லாதார் என்பதைச் சேர்த்துக் கொள்ள நாம் என்ன நாடோடிகளா? நாம் ஏன் அல்லதோர் ஆக வேண்டும்?” என்று விளக்கம் தந்தார். பின் நாட்களில் “திராவிடம்’ என்பதும் “தமிழகம்’ என்பதும் ஒன்றே என்று பெரியார் அரசியல் நிலைப்பாடு எடுத்தார். பெரியாரின் கருத்துக்கு இசைவாகவே ‘திராவிடம்’ என்பதும் ‘தமிழகம்’ என்பதும் ஒன்றே எனப் பாவேந்தர் பாட்டிசைத்தார். மன்னும் தமிழே திராவிடம் என்று திரிந்த தென்றால் மறுப்பவர் இல்லை திருத்தமிழம் எனும்...

சந்துரு பரிந்துரைகளை நிறைவேற்றுக!

சந்துரு பரிந்துரைகளை நிறைவேற்றுக!

“அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சாதி அடையாளங்களைக் குறிக்கும் கயிறுகள், டீ-சர்ட்டுகளை அணிய தடைவிதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது பாராட்டி வரவேற்கத்தக்க ஒன்றாகும். கிருஷ்ணகிரி மாவட்டம் சொப்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் மாணவர்கள் வீரப்பன் உருவம் மற்றும் ஒரு அரசியல் கட்சியை அடையாளப்படுத்தும் டீ-சர்ட்டுகளையும் அணிந்து திரைப்படப் பாடலுக்கு நடனமாடி உள்ளனர். பெற்றோர்களிடமிருந்து இதற்கு எதிர்ப்புகள் வந்தன. இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தரவை மீறிச் செயல்படும் தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவு கூறுகிறது. அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவதற்கு அரசு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறது. அந்த விழாக்கள் இலக்கியம் மற்றும் பண்பாடுகளைப் போற்றும் விதமாக இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அதற்கு மாறாக சாதியைப் பெருமைப்படுத்தும் நிகழ்வுகள் இடம் பெறக்கூடாது...

ஆட்சிக்கு மதச்சாயம் பூசலாமா? அமைச்சரே?

ஆட்சிக்கு மதச்சாயம் பூசலாமா? அமைச்சரே?

தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படுமா? என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு சட்ட அமைச்சர் ரகுபதி பதிலளிக்கையில், மூடநம்பிக்கை மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறது. எனவே, சட்டம் கொண்டு வர முடியாது என்று பதில் அளித்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதல்வர் பகுத்தறிவும் அறிவியலும் பாடத்திட்டத்தில் முதன்மையாக இருக்க வேண்டும் என்று பேசி உள்ளார்.இந்திய அரசியல் சட்டம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது. மகாராஷ்டிரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் அமலில் இருக்கிறது. கலைஞர் முதல்வராக இருந்தபோது பேராசிரியர் நன்னன் தலைமையில் ‘மூடநம்பிக்கை ஒழிப்புக் குழு’ ஒன்றை உருவாக்கினார். ‘பகுத்தறிவு கலை இலக்கிய மன்றம்’ திமுகவின் ஒரு அணியாக செயல்பட்டு வருகிறது. இவை எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு ஏற்கெனவே ராமன் சமூக நீதியின் சின்னம் என்று பேசிய அமைச்சர் ரகுபதி இப்போது மூடநம்பிக்கைகளை...

உண்மைக்கு அஞ்சும் கோழைகள்!

உண்மைக்கு அஞ்சும் கோழைகள்!

சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிராவ் புலே மற்றும் சாவித்திரிபாய் புலே வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் புலே. இந்தத் திரைப்படத்தை ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தது படக்குழு. இந்த நிலையில், திரைப்படத் தணிக்கை வாரியம், படத்தின் பல காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து உரையாடல்களை நீக்க வலியுறுத்தியுள்ளது. இதனால் திரைப்படம் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குத் திரையிடத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மையமாக, படத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்டார்கள், ‘மஹர், மாங், பேஷ்வா என சாதிப் பெயர்களைக் குறிப்பிடக்கூடாது. மூன்றாயிரம் ஆண்டுகள் அடிமைத்தனம் என்றெல்லாம் குறிப்பிடக்கூடாது’ எனப் பல இடங்களில் உரையாடல்களை நீக்கச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறார்கள். படத்தின், முன்னோட்டக் காட்சிகளில் பார்ப்பன ஒடுக்குமுறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், திரைப்பட வாரியத்தின் இந்தப் போக்கு குறித்து இயக்குநர் அனுராக் காஷ்யப் “இந்த சாதிய, இன வெறி அரசாங்கம் கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்க்க வெட்கப்படுகிறது” என்று விமர்சனம் செய்துள்ளார். “எது அவர்களைத் தொந்தரவு...

எழுச்சியுடன் நடந்த கழக ஆர்ப்பாட்டம் காஞ்சியில் சங்கராச்சாரிகளின்‌ முகமூடி கிழிப்பு!

எழுச்சியுடன் நடந்த கழக ஆர்ப்பாட்டம் காஞ்சியில் சங்கராச்சாரிகளின்‌ முகமூடி கிழிப்பு!

பெரியார் மீது ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசிய பார்ப்பனக் கைக்கூலிகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டங்களை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி, பார்ப்பன சங்கராச்சாரிகளின் பார்ப்பன முகமூடியைக் கிழித்துக் காட்டியது. பெரியார் மீது கைவைத்தால் சங்கரச்சாரிகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம் என்று திராவிடர் விடுதலைக் கழகம் களம் இறங்கியது. குறிப்பாக சங்கரமடம் உள்ள காஞ்சிபுரத்தில் 21.04.2025 மாலை 5 மணியளவில் பேருந்து நிலையம் அருகே எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தனி பேருந்தில் காஞ்சிபுரம் வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். காஞ்சி விஜயேந்திரன் கடந்த ஜனவரி 19 அன்று பெங்களூரில் ‘பிராமணர்கள்’ மாநாட்டில் இந்து சமூகத்தில் சூத்திர, பஞ்சமர்களிடம் இருந்து பிராமணர்கள் விலகி தங்களது மேலாண்மையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற இன ஒதுக்கல் கருத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகப் பேசி இருந்தார். சூத்திர, பஞ்சமர்கள் அடிமைப்பட்டவர்கள் என்ற மனுதர்மம் விதிக்கும் கோட்பாடுகளுக்கு உயிரூட்டுவதே அவரது பேச்சின்...

மகளிர் ஒன்று கூடல்!

மகளிர் ஒன்று கூடல்!

திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்ட மகளிர் அணி கலந்துரையாடல் கூட்டம் 30.03.2025 ஞாயிறு காலை 11.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை ஏற்காடு JP ரெசிடென்சில் சிறப்பாக நடைபெற்றது. கடவுள் மறுப்பு வாசகம் திருப்பூர் யாழினி கூற கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தோழர் சுதா தலைமை வகித்தார். சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தோழர் திவ்யா வரவேற்புரை நிகழ்த்தினார். கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும், தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர் தோழர் சிவகாமி அவர்களும் தோழர்களிடையே கருத்துரையாற்றினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு குடும்பங்களில் கடைபிடிக்கப்படும் மூடநம்பிக்கையால் பெண்ணடிமைத்தனம் எவ்வாறு வளர்கிறது, பெண்கல்வியால் தமிழ் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் தோழர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இறுதியாக சேலம்...

பள்ளிபாளையம் தோழர்கள் மீதான வழக்குகளும் ரத்து!

பள்ளிபாளையம் தோழர்கள் மீதான வழக்குகளும் ரத்து!

அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் நடந்த மனிதத் தன்மையற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்றைய அதிமுக அரசு தோழர்கள் மீது பொய் வழக்குகளை போட்டது. அதேபோல் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி விஜேந்திரனை கண்டித்து கொடும்பாவி எரிப்புப் போராட்டம் பள்ளிபாளையத்தில் நடத்தப்பட்டது. திருச்செங்கோடு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இரண்டு வழக்குகளிலும் கழகத் தோழர்கள் சரவணன், முத்துப்பாண்டி, கோபி, தியாகு, அஜ்மீர் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர் குமாரபாளையம் வழக்கறிஞர் கார்த்தி அவர்கள் சிறப்பாக வாதாடி தோழர்களை விடுவித்தார். பெரியார் முழக்கம் 17042025இதழ்

பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்?  தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்று பரப்புரை!

பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்? தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்று பரப்புரை!

சென்னை: 18/3/25 செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம், உத்திரமேரூர் பேருந்து நிலையம், வந்தவாசி பழைய பேருந்து நிலையம், செய்யாறு – ஆரணி கூட்டுச் சாலை ஆகிய இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. கருத்துரையாற்றிய தோழர்கள்: இரா. உமாபதி, ரவிபாரதி, சுகுமார், ம.கி. எட்வின் பிரபாகரன், காஞ்சி அமுதன் (தமிழ் உரிமை கூட்டமைப்பு), அருண் கோமதி, திலகவதி (மக்கள் அதிகாரம்) ஆகியோர். பொன்ராஜ் – வீரமணி – கார்மேகம் கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அமீன் (தமுமுக), அ.வெ.முரளி (திக), ஆதித்ய கரிகாலன் ஆகியோர் உணவு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆதித்ய கரிகாலன் தங்கும் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார். சுகுமாறன், குமார், சூர்யா, கோபி, இரண்யா, வீரா, அசோக், முரளி, அருண் கோமதி, அருண் (இளைஞரணி) ஆகியோர் கலந்து கொண்டனர். 19/3/25 மதுராந்தகம் பேருந்து நிலையம், சோத்துப்பாக்கம் சந்திப்பு, திண்டிவனம் காந்தி சிலை, மயிலம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சென்னை அணியின் தெருமுனைக்...

சனாதன-ஜாதி எதிர்ப்புக் கூட்டங்களுடன்  கழகம் எடுத்த அம்பேத்கர் விழாக்கள்!

சனாதன-ஜாதி எதிர்ப்புக் கூட்டங்களுடன் கழகம் எடுத்த அம்பேத்கர் விழாக்கள்!

சென்னை புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி, 14-04-25 காலை 9:30 மணியளவில், அடையார் அம்பேத்கர் மணி மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 10:30 மணியளவில் மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் மயிலாப்பூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது… மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு ராஜேந்திரன், கழக இளைஞரணி அமைப்பாளர் ப.அருண ஆகியோர் உட்பட சென்னை கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். தென்சென்னை காலை 8 மணிக்கு, சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலைக்கு, தோழர்கள் மாலை அணிவித்து, கொள்கை முழக்கமிட்டு மரியாதை செலுத்தினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய “அம்பேத்கருக்கு இந்துமதச் சாயம் பூசும் அவதூறுகளுக்கு மறுப்பு” நூல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வை திவிக தென்சென்னை மாவட்ட...

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

சேலம்: 18/03/2025 வீரகனூர் பேருந்து நிலையம், பெரம்பலூர் வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் பரப்புரை நடைபெற்றது. பறை இசை மற்றும் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. ஆத்தூர் நகர செயலாளர் கணபதி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரைகணபதி, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், பெரம்பலூர் சுதாகர் ஆகியோர் தலைமை வகித்தனர். சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாநகர செயலாளர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், ஆத்தூர் நகர தலைவர் மகேந்திரன், தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், ஆத்தூர் நகர செயலாளர் கணபதி, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை தாமோதரன் ஆகியோர் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரை...

வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம்!

வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம்!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்யும் தருவாயில் உள்ளது. இந்த 4 ஆண்டுகளில் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திட்டங்கள் பலவற்றை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது. அவற்றினால் எட்டப்பட்ட பலன்கள் என்னவென்பதை ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களே அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மாநில மொத்த உற்பத்தி வளர்ச்சி, 9.69% என அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட 8% வளர்ச்சி, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆய்வறிக்கையில் உத்தேசிக்கப்பட்ட 9.3% வளர்ச்சி ஆகியவற்றை விடவும் அதிகமான வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு எட்டியிராத அதிகபட்ச வளர்ச்சி என்பது மட்டுமல்ல, இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை இந்த ஆண்டு பதிவு செய்திருப்பது தமிழ்நாடுதான். குறிப்பாக சேவைகள் துறை 12.7%, இரண்டாம் நிலை துறைகள் 9% வளர்ச்சி கண்டுள்ளன. ஒன்றியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க...

ம.பி.யில்  பார்ப்பனரின் ‘இன ஒதுக்கல்’ சனாதன இந்துக்களுக்கு மட்டும் தனிக் கிராமாம்!

ம.பி.யில் பார்ப்பனரின் ‘இன ஒதுக்கல்’ சனாதன இந்துக்களுக்கு மட்டும் தனிக் கிராமாம்!

சனாதன இந்துக்களுக்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனி கிராமம் ஒன்றை உருவாக்கி வருகிறார். அனுமார் கோயில் பார்ப்பன அர்ச்சகர். 1000 சனாதன இந்துக்கள் இந்த கிராமத்தில் குடியேறுகிறார்கள். சனாதனத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த கிராமத்தில் நுழைய தடை விதிக்கப்படும். அரசியல் சட்டத்திற்கு எதிரான இந்த தனிக் குடியிருப்புக்கு மாநில பாஜக ஆட்சி பச்சைக்கொடி காட்டியுள்ளது. இந்துக்கள் மட்டும் வாழும் முதல் கிராமம் ம.பி. பாகேஷ்வர் அனுமர் கோயில் சார்பில் அமைகிறது. பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் கன்ஞ் மாவட்டத்தின் சத்தர்பூரில் உள்ளது கதா கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற ‘பாகேஷ்வர் தாம்’ எனும் அனுமர் கோயில் உள்ளது. இதன் தலைமை அர்ச்சகர் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, பாகேஷ்வர் தாம் ஜன் சேவா சமிதி என்ற சமூக நல அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்பின் சார்பில் கோயிலுக்கு அருகில் உள்ள பரந்த பகுதியில் ஒரு இந்து கிராமத்தை உருவாக்க இதற்காக...

மோடி நடத்துவது “உயர்ஜாதி” ஆட்சி –

மோடி நடத்துவது “உயர்ஜாதி” ஆட்சி –

“பார்ப்பன‌ உயர் ஜாதி சுரண்டலுக்கு வழிவகுக்கும் ஜாதி அமைப்பு. இதுகுறித்து நான் ஆழமாக ஆராய்ந்தேன். இந்த நாட்டில் பார்ப்பன உயர் ஜாதியில் பிறக்காத ஏனையோர் இரண்டாம் தர குடிமக்களாகவே இருக்கின்றனர்” என்று ராகுல் காந்தி பேசியுள்ளார். கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி பாட்னாவில் நடந்த ‘அரசியல் சட்டத்தை காப்போம்’ மாநாட்டில் ராகுல் காந்தி பேசினார். மூன்றாவது முறையாக பீகார் வந்துள்ளார் ராகுல் காந்தி, “காந்தியடிகள் உண்மையின் சோதனை நூலை எழுதினார். மோடி பொய்களின் சோதனையை எழுதிக் கொண்டிருக்கிறார்” என்று கூறி ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாகத் தாக்கினார். மேலும் அவர் பேசியதாவது: அரசியல் சட்டம் சாவர்க்கரின் சிந்தனை அல்ல; மாபெரும் தலைவர்களான காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனையைக் கொண்டது. இப்போது நடக்கும் ஆட்சி பார்ப்பன உயர்ஜாதி நலனுக்காகவே நடக்கிறது. தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிறப்படுத்தப்பட்ட மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இந்த நாட்டில் நீங்கள் பார்ப்பனராகவோ,‌‌ உயர் ஜாதியினராகவோ பிறக்காவிட்டால் இரண்டாம்...

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

விழுப்புரம்: 17/03/2025 (திங்கள்) கீழ்பெண்ணாத்தூர் கலைஞர் பேருந்து நிலையம், கடலாடிகுளம் பேருந்து நிலையம், செஞ்சி பேருந்து நிலையம், அப்பம்பட்டு மசூதி அருகில் நடைபெற்றது. காலை உணவு மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தோழர் பொன்.சுப்ரமணி வழங்கினார். நம் பிரச்சார பயணத்தின் தலைப்பான பெரியார் ஏன் எதிரிகளை பதறவைக்கிறார் என்ற செய்தியை அவர்களின் சிந்தனைப் பலகையில் 17/3/2025 அன்றைய செய்தியாக எழுதி வரவேற்றனர், மேலும் ராமநாதன்,கோதண்டராமன், ஆதிமூலம், தமிழ் மக்கள் கட்சியை சார்ந்த முகிலன் அம்பேத்கர் மக்கள் கட்சி விழுப்புரம் மாவட்ட செயலாளர் சு.மழைமேனி பாண்டியன், பகுத்தறிவு கழகத்தை சார்ந்த துரை.திருநாவுக்கரசு, பேராசிரியர். ஜாக்குலின், வி.சி.க. விழுப்புரம் மாவட்ட செயலாளர் தனஞ்செழியன், திராவிடர் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் கோபண்ணா, பேராசிரியர் நந்தகுமார், தமுமுக அலிஜான் ஆகியோர் கலந்துக் கொண்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் செஞ்சி சட்டமன்ற தொகுதியின் செயலாளர் ராசநாயகம், க.ராமர், பூ.ஆ இளையரசன், தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர்...