Category: திருப்பூர்

தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!

தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!

பாஜகவினர் கழகத் தோழர் சங்கீதாவை தாக்கிய வழக்கில் குற்றவாளிகளுக்கு முன் பிணை மறுத்து திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜகவினரிடம் அப்பகுதி மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்போது அங்கிருந்த தோழர் சங்கீதாவும் பாஜகவினரிடம் ஜி.எஸ்.டி. குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் தோழர் சங்கீதாவின் கடையை தேடிச் சென்று, தனியாக இருந்த அவரை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் வசைபாடியதுடன், கொலைவெறித் தாக்குதலும் நடத்தியுள்ளனர். இத் தாக்குதலில் ஈடுபட்ட பாஜக பொறுப்பாளர் சின்னச்சாமி உள்ளிட்ட 5 பேரை கைது செய்த கோரி 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் தங்களுக்கு முன் பிணை தர வேண்டும் என்று கூறி திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கோரிக்கை மனு சமர்ப்பித்திருந்தனர். இந்த...

புரட்சியாளர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா! பல்வேறு மாவட்டங்களில் கழகம் மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா! பல்வேறு மாவட்டங்களில் கழகம் மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரியாதை செலுத்தப்பட்டு சமத்துவநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு 14.04.2024 அன்று காலை 9 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன் மற்றும் பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். மடிப்பாக்கம் பகுதிக் கழக சார்பில் ஆதம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கழகத் தோழர்கள் – ஆதரவாளர்கள் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஈரோடு : புரட்சியாளர் அம்பேத்கர் அவரது 134வது பிறந்த நாளை முன்னிட்டு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள அம்பேத்கர்...

திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்! ஜி.எஸ்.டி. குறித்து கேள்வி எழுப்பியதால் வெறிச்செயல்

திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்! ஜி.எஸ்.டி. குறித்து கேள்வி எழுப்பியதால் வெறிச்செயல்

திருப்பூர் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருப்பூர் மாவட்ட அமைப்பாளரான தோழர் சங்கீதா ஆத்துப்பாளையம் பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். கழக நிகழ்வுகளிலும், ஆர்ப்பாட்டங்களிலும் குடும்பத்தோடு பங்கேற்பவர் தோழர் சங்கீதா. கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அன்று திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.பி.முருகானந்தத்திற்கு ஆதரவாக பாஜகவினர் ஆத்துப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்திருந்தனர். அப்போது அங்கு துணிக்கடை நடத்தி வந்த சங்கீதாவிடம் பாஜகவினர் வாக்கு சேகரிக்க சென்ற போது நாப்கின், அரிசி, பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்திற்கும் ஒன்றிய அரசு ஜிஎஸ்டி விதித்தது குறித்து சங்கீதா கேள்வி எழுப்பினார். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாஜகவினர் சங்கீதாவின் கடைக்குள் வந்து “நீ யார் கேள்வி கேட்க?” என்று கேட்டு தகாத வார்த்தைகளில் பேசி கடுமையாக தாக்கினார்கள். அப்போது ‘‘நான் கேள்விதானே கேட்கிறேன். பதில் சொல்ல முடியவில்லை என்றால் தாக்குவீர்களா?’’ என...

திருப்பூர், கடலூர், மதுரையில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” பொதுக்கூட்டம்!

திருப்பூர், கடலூர், மதுரையில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” பொதுக்கூட்டம்!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” எனும் முழக்கத்தோடு 2024 பாராளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் 05.03.2024 அன்று குன்னத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு குன்னத்தூர் பகுதிப் பொறுப்பாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார், குன்னத்தூர் சின்னச்சாமி, திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, தமிழ்நாடு மாணவர் கழக மகிழவன், தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் முகில் ராசு, கழக சமூக வலைதளப் பொறுப்பாளர் பரிமளராசன் ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி சிறப்புரையாற்றினார். 15 வேலம்பாளையம் பொறுப்பாளர் மாரிமுத்து நன்றி கூறினார். இதில் மாநகர அமைப்பாளர் மாதவன், சரஸ்வதி மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கடலூர் : கடலூர் மாவட்டக் கழக சார்பில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!”...

உடுமலையில் கழக சார்பில் பரப்புரை இயக்கம்

உடுமலையில் கழக சார்பில் பரப்புரை இயக்கம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! தெருமுனைக் கூட்டங்கள் 20.02.24 மற்றும் 21.02.24 ஆகிய இரு நாட்கள் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. உடுமலை பேருந்து நிலையம் முன்பு, பெதப்பம்பட்டி, துங்காவி, காரத் தொழுவு, கணியூர், வடதாரை பூளவாடி பிரிவு, ஐந்து முக்கு, பேரறிஞர் அண்ணா சிலை, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதில் மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் கணக்கன், ஒன்றிய செயலாளர் சிவானந்தம், ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், உடுமலை பகுதி பொறுப்பாளர் இயல்,கழகப் பொருளாளர் துரைசாமி, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், கழக திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து, தமிழ்நாடு மாணவர் கழகம் மகிழவன், திவிக தாராபுரம் நகரப் பொறுப்பாளர் செல்வராசு, திருப்பூர் அய்யப்பன், சரசுவதி, விசிக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார், திராவிட இயக்கத் தமிழர் பேரவை தங்கவேல், உடுமலை முற்போக்கு கூட்டமைப்பு...

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழக சார்பில்  இராயப்பேட்டை, சிம்சன், எம்ஜிஆர் நகர், தியாகராயர் நகர், மயிலாப்பூர், கலைஞர் கருணாநிதி நகர், நங்கநல்லூர், பிவி நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கழகம் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.   இந்நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழக பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். கோவை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கோவை மாவட்டக் கழக சார்பில் காந்திபுரம் பெரியார் சிலைக்கு கழகத் தோழர் கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை...

இந்திய அரசியலும் பார்ப்பனியமும் – திருப்பூரில் கருத்தரங்கம்

இந்திய அரசியலும் பார்ப்பனியமும் – திருப்பூரில் கருத்தரங்கம்

திருப்பூர் : திருப்பூர் மாநகர கழக அமைப்பாளர் முத்து – வசந்தி இணையரின் மூத்த மகன் வெற்றிமாறனின்  4 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் இளைய மகன் பெயர் சூட்டும் விழா 07.01.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திருப்பூர் கிருஷ்ணா நகரில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்றது.   முதல் நிகழ்வாக வெற்றிமாறனின் பிறந்தநாள் கழகத் தலைவர் முன்னிலையில் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. அடுத்ததாக வசந்தி – முத்து இணையரின் இரண்டாவது மகனுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் “மகிழ் மாறன்” என்று பெயர் சூட்டினார். பெயர் சூட்டு விழாவைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு முத்துலட்சுமி தலைமை தாங்கினார்,  சக்தி முன்னிலை வகித்தார், வசந்தி வரவேற்புரையாற்றினார். கழகத்தின் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் பா.இராமச்சந்திரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப்...

திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில்  மக்கள்  பேராதராவுடன் தெருமுனைக் கூட்டங்கள்

திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில் மக்கள் பேராதராவுடன் தெருமுனைக் கூட்டங்கள்

திருப்பூர்: ஆகஸ்ட் 7,8 ஆகிய தேதிகளில் மங்கலம் நான்கு வழி சந்திப்பு, சுல்தான் பேட்டை, பெரியாண்டிபாளையம் பிரிவு, குமரன் கல்லூரி, ஊத்துக்குளி ஆர்.எஸ், கூழிபாளையம், மன்னரை, காங்கேயம் பேருந்து நிலையம், நத்தக்காடையூர், படியூர், பொங்கலூர், அருள்புரம், வீரபாண்டி பிரிவு, உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. ஆகஸ்ட் 21,22 ஆகிய தேதிகளில் பல்லடம் பகுதிகளுக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர், வடுகபாளையம், கேத்தனூர், காமநாயக்கன்பாளையம், லட்சுமி மில்ஸ், காரணம்பேட்டை, அனுப்பட்டி, எம்.ஜி.ஆர் சாலை ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஆகஸ்ட் 22 அன்று பல்லடம் லட்சுமி மில்ஸ் பகுதியில் 50வது தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. அதனையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சுப்பிரமணியம், திமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு ஒன்றிய தலைவர் முஜிபுர் ரகுமான், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர...

கொலைகார சாமியாரை  கைது செய்யக் கோரி கழகம் புகார் மனு

கொலைகார சாமியாரை கைது செய்யக் கோரி கழகம் புகார் மனு

சென்னை : “டெங்கு, மலேரியா, காலரா போன்று சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று” என்று பேசிய மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி நிர்ணயித்த அயோத்தி சாமியார் பரம்ஹன்ஸ ஆச்சாரியாவை கைது செய்து சிறையில் அடைக்க கோரி கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் இராயப்பேட்டை காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, சனாதன சக்திகளின் கனவு தமிழ்நாட்டில் ஒருபோதும் பலிக்காது, சனாதனத்திற்கு எதிரான கருத்தில் உறுதியாக நிற்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் துணை நிற்கும் என்று கூறினார். கோவை : கோவை மாநகரக் கழக சார்பில் காட்டூர் காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கழக அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் திண்டுக்கல் மாவட்டத் துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது....

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

காலை சிற்றுண்டி வழங்குவதன் காரணமாக பள்ளிக் கழிவறைகள் நிரம்பி வழிகின்றன என்ற வர்ணாசிரம திமிரோடு தலைப்பு செய்தி வெளியிட்ட தினமலம் நாளேட்டை கழகத் தோழர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். சென்னை : பள்ளி மாணவர்களுக்கு “காலை சிற்றுண்டி” திட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட சனாதன வெறி பிடித்த தினமலரை கண்டித்து தினமலம் நாளிதழ் எரிப்பு போராட்டம் இன்று 01.09.2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தினமலம் நாளேடு அலுவலகம் அருகே இராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தினமலம் நாளிதழை தீயிட்டு கொளுத்தி தினமலம் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க வளர்மதி, தமிழ்நாடு மாணவர் கழக இரண்யா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரையாற்றினார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கரு.அண்ணாமலை, சேத்துப்பட்டு இராசேந்திரன், மயிலை...

சனாதனம் தோலுரிப்பு : திராவிட மாடல் சாதனை விளக்கம் தெருமுனைக் கூட்டங்களுக்கு பேராதரவு!

சனாதனம் தோலுரிப்பு : திராவிட மாடல் சாதனை விளக்கம் தெருமுனைக் கூட்டங்களுக்கு பேராதரவு!

எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டங்கள் சென்னை மாவட்டக் கழகம் சார்பாக இரண்டாவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது பின்வருமாறு :- ஜுலை 15-ஆம் தேதியன்று ராயப்பேட்டை இலாயிட்ஸ் காலனி மற்றும் வி.எம்.தெருவிலும், ஜுலை 17-ஆம் தேதியன்று இராயபேட்டை பகுதிகளில் உள்ள கொலைகாரப்பேட்டை மற்றும் ராயப்பேட்டை பெருமாள் கோயில் வீதியிலும், ஜுலை 18-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் NKT பள்ளி அருகில் மற்றும் திருவல்லிக்கேணி பி.வி.நாயக்கன் சாலையிலும், ஜுலை 19-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் இஸ்ஸபா தெரு மற்றும் ஷேக் தாவூத் தெருவிலும் ஜூலை 20-ஆம் தேதியன்று மீசார்பேட்டை மார்கெட் மற்றும் ஜாம் பஜார் சிட்டிபாபு சாலையிலும், ஜுலை 21-ஆம் தேதியன்று திருவல்லிக்கேணி மாணிக்கவாசகம் தெரு மற்றும் தேவராஜ் தெருவிலும் ஜுலை 22-ஆம் தேதியன்று ஆயிரம் விளக்கு மாடர்ன் பள்ளி அருகில் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை அருகிலுள்ள மக்கிஸ் கார்டனிலும் நடைபெற்றது. நாத்திகன் – உமாபதி குழுவின் அரசியல்...

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் கூட்டம்

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் கூட்டம்

01.06.2023 காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாவட்ட திவிக சார்பாக மறைந்த கழக தலைமைக் குழு உறுப்பினர் தோழர் மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் நிகழ்வு மடத்து குளம் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் மடத்து குளம் திவிக ஒன்றியத் தலைவர் த.கணக்கன் தலைமையில் நடைபெற்றது. மோகன் குடும்பத்தினர் ஜோதி  – அறிவுமதி முன்னிலை வகித்தனர்.   பன்னீர்செல்வம், CITU தாலுகா செயலாளர். வீ.சிவகாமி, தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம். முகில் ராசு, மாவட்ட தலைவர் , திவிக. முருகேசன், வழக்கறிஞர் பிரிவு, திராவிட தமிழர் பேரவை. தங்கவேல், மாவட்ட  அமைப்பாளர், திராவிட தமிழர் கட்சி, ஜின்னா ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.   சபரி, சரசுவதி, ஜெயந்தி, சிரிஜா, ரூபா, மாரிமுத்து, தாராபுரம் செல்வம், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் யாழிசை,யாழினி, அறிவுமதி, முத்தமிழ், காரைக்குடி கனல் மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.   நிகழ்வினை மடத்துக்குளம் திவிக ஒன்றியச் செயலாளர் சிவானந்தம்...

பட்டியல் தயாரிப்பு – தெருமுனைக் கூட்டங்கள் ; திருப்பூர் மாவட்டம் தீவிரம்

பட்டியல் தயாரிப்பு – தெருமுனைக் கூட்டங்கள் ; திருப்பூர் மாவட்டம் தீவிரம்

திருப்பூர் மாவட்ட திவிக ஆலோசனைக் கூட்டம் 12.06.2023 திங்கள் மாலை 4.30 மணி அளவில்  மாஸ்கோ நகர் மாதவன் அலுவலகத்தில் நடைபெற்றது ஆலோசனைக் கூட்டம் கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன் தலைமையில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.   கூட்டத்தில் ஏப்ரல் 29,30 நடைபெற்ற மாநாட்டில் திருப்பூர் மாவட்டம் சார்பாக சிறப்பாக கலந்துகொண்டு பேரணியில் இரண்டாம் இடம் பரிசு பெற்றமைக்கு பேரணியில் கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.   இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கழக செயலவையில் அறிவிக்கப்பட்ட படி தீண்டாமை நடக்கும் இடங்கள் கணக்கெடுப்பு மற்றும் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள 1000 தெருமுனை கூட்டங்களில் திருப்பூர் மாவட்டத்தில் 50 கூட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ள இடங்கள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றன.   மேலும் தாராபுரத்தில் நகராட்சி அரசு அலுவலகத்திற்குள் நிர்வாண அகோரி சாமியார்களை அழைத்து வந்து  பூஜை நடத்திய நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி...

திருப்பூரில் மகளிர் தின விழா

திருப்பூரில் மகளிர் தின விழா

திருப்பூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 8.3.2023 புதன்கிழமை மாலை 6 மணியளவில் மகளிர் தின விழா திருப்பூர் அம்மாபாளையம் பெரியார் படிப்பகத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்விற்கு சுசிலா அவர்கள் தலைமை ஏற்று பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி முன்னிலை வகித்தார். நஜ்முன்னிசா வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து தோழர்கள் சங்கீதா, வீரலட்சுமி, ஷோபனா ராணி, சகுந்தலா, காயத்ரி ஆகியோர் “பெண்களின் உரிமைகள் பற்றியும் பெரியாரின் பெண் விடுதலை கொள்கைகள்” பற்றியும் கருத்துரை யாற்றினர். நிறைவாக சங்கவி நன்றியுரை ஆற்றினார். நிகழ்வில் முத்துலட்சுமி, கௌசல்யா, மனிஷா, திவ்யா, ரூபா, விஜி, காளியம்மாள் மற்றும் பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, வெற்றிமாறன், வெற்றிகொண்டான், ரித்திசாய், ஃபெர்லின் சோபியா, ஷெர்லின் மரியா, மெர்சி, தழல் சிறகன், இயல் ஆழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கேக் வெட்டப்பட்டது.இரவு உணவாக மாட்டுக் கறி வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 23032023...

காங்கேயத்தில் நிர்வாண சாமியார்கள்: நடவடிக்கை எடுக்கக் கழகம் கோரிக்கை

காங்கேயத்தில் நிர்வாண சாமியார்கள்: நடவடிக்கை எடுக்கக் கழகம் கோரிக்கை

காங்கேயம் நகராட்சி அலுவலகத்திற்குள் நிர்வாண சாமி யார்களை அழைத்து வந்து ஆசி வாங்கியது தொடர்பாக ஆணையர், மாநகராட்சி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகளுடன் இணைந்து கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில் மே 13, சனிக்கிழமை அன்று திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல்துறை ஆணையாளர் அவர்கள் விசாரணையின் அடிப்படையில் புகார் மனுவின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் முகில் ராசு, முகநூல் பொறுப்பாளர் பரிமள ராசன், சங்கீதா, இராமசாமி, மாரிமுத்து, ஆதித்தமிழர் பேரவை அவிநாசி மணி, தமிழ்மாறன், து.தலைவர் கு.ஜானகி, புரட்சிகர இளைஞர் முன்னணி தமிழமுதன், வேலு, மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு கார்மேகம் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 18052023 இதழ்

கழகம் எடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

கழகம் எடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

வேலூர்: புரட்சியாளர் அம்பேத்கர் 132ஆவது பிறந்தநாள் விழா வேலூர் மாவட்டக் கழக சார்பில் மாவட்டச் செயலாளர் சிவா தலைமையில் குடியேற்றம், கொண்டசமுத்திரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர்  விடுதலைக் கழகம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இணைந்து மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்பு அனைவரும் ஜாதி ஒழிப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். நண்பகல் 12 மணிக்கு வேலூர் மாநகரில் விசிக ஒருங்கிணைத்த “ஜனநாயகம் காப்போம்! சனாதனத்தை வேரறுப்போம்!”பேரணியில் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். நண்பகல் 2 மணிக்கு ராமாலையில் திராவிட் மற்றும் பகுதித் தோழர்கள் ஒருங்கிணைப்பில் அம்பேத்கருடைய புகைப்படத்திற்கு மாலை அணிவித்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் சிறப்பு உணவு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு  வேலூர் மாவட்டம் புட்டவாரபள்ளி கிராமத்தில் அமல்ராஜ், ஒருங்கிணைப்பில் பொதுமக்களோடு இணைந்து அம்பேத்கர்  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.   இரவு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது....

கரைபுரளும் உற்சாகம்; விளிம்புநிலை மக்களின் எளிய நன்கொடைகள் முழு வீச்சில் மாநாட்டுப் பணிகள்

கரைபுரளும் உற்சாகம்; விளிம்புநிலை மக்களின் எளிய நன்கொடைகள் முழு வீச்சில் மாநாட்டுப் பணிகள்

ஏப். 29, 30 தேதிகளில் கழக மாநாட்டுப் பணிகளில் கழகச் செயல் வீரர்கள் முழு வீச்சில் களத்தில் இறங்கியுள்ளனர். கோவை : கோவை மாவட்டக் கழகத்தினர் ஏப்ரல் 8-ஆம் தேதி மாலை 5 மணியளவில் வ.உ.சி மைதானத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டலக்குழுத் தலைவர் கதிர்வேல், மாநகராட்சி கல்விக் குழுத் தலைவர் நா.மாலதி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.ஆ.ரவி, வடவள்ளி சண்முகசுந்தரம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கினார்கள். கலந்து கொண்டோர்: தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார், கிருட்டிணன், வெங்கட், மாதவன் சங்கர், துளசி, நிலா. ஏப்ரல் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் துண்டறிக்கை பரப்புரை நடைபெற்றது. பொள்ளாச்சி : கழக மாநாட்டு விளக்க தெருமுனைக்...

திருப்பூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

திருப்பூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 26.1.23 அன்று திருப்பூர் மங்கலம் சாலை கே ஆர் சி மஹாலில் மாலை 5.30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது.  ஆலோசனைக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி அறிமுக உரையாற்றினார். கழக நிர்வாகிகள் உடுமலை மற்றும் பல்லடம் பொறுப்பாளர்கள், மாநகர பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் அனைவரும் கழகத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா வசூல் மற்றும் பரப்புரைக்கான பல்வேறு ஆலோசனைகளை பேசினார்கள். தொடர்ந்து தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் மகிழவன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, இணையதளப் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டத் தலைவர் முகில் ராசு, தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், கழகப் பொருளாளர் துரைசாமி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். நிறைவாக பேசிய கழகத் தலைவர், கழகம் கொள்ளவிருக்கிற அடுத்தகட்ட செயல்பாடுகள்,...

திருப்பூர் மாஸ்கோ நகரில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா

திருப்பூர் மாஸ்கோ நகரில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா

சிறுவர் சிறுமியர் விளையாட்டுப் போட்டிகள் – கலை நிகழ்ச்சி – தமிழிசைப் பாடல்கள் – பொதுக் கூட்டம் என ஒரு நாள் நிகழ்சியாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிகள் அனைத்திலும் அப்பகுதி வாழ் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 13ஆவது ஆண்டு பொங்கல் விழா மற்றும் தமிழ் புத்தாண்டு விழா ஆகியவை 22.01.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு வரை நடைபெற்றது.  விழாவிற்கு மாநகரச் செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக காலை 10.00 மணிக்கு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கும் நிகழ்வை தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி அவர்கள் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கழகப் பொருளாளர் துரைசாமி, மாநகரத் தலைவர் தனபால், மாநகர அமைப்பாளர் முத்து, தெற்கு பகுதி கழகச் செயலாளர் இராமசாமி, சரசு, பகுதி கழகத் தோழர் கோமதி,...

சென்னை – திருப்பூர் – மேட்டூரில் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள்

சென்னை – திருப்பூர் – மேட்டூரில் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள்

சென்னை – திருப்பூர் – மேட்டூரில் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. திருவல்லிக்கேணி : சென்னை திருவல்லிக்கேணி பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், தமிழர் திருநாள், பொங்கல் விழா நிகழ்வு, மக்கள் கலை விழாவாக ஜனவரி 13ஆம் தேதி மாலை 6 மணியளவில், வி.எம்.தெரு பெரியார் படிப்பகம் அருகில் நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசளித்து வாழ்த்துரை வழங்கினார். மேலும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர்  விடுதலை இராசேந்திரன் மற்றும் திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் (திமுக) முனைவர் ஏ. ரியா ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றி பரிசுகளை வழங்கினார்கள். கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். மேலும், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டத் தலைவர் மா.வேழவேந்தன் ஆகியோரும் பரிசுகளை வழங்கினர். பறையிசை, சிலம்பாட்டம், கிராமிய பாடல்கள்,...

டிசம்.24 பெரியார் நினைவு நாள் : தோழர்கள் ஊர்வலம்

டிசம்.24 பெரியார் நினைவு நாள் : தோழர்கள் ஊர்வலம்

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் சார்பாக பெரியாரின் 49 ஆவது நினைவு நாளை ஒட்டி, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 9 மணி யளவில் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தியாகராயர் நகர் பெரியார் சிலை, எம்.ஜி.ஆர். நகர், ஆலந்தூர், வன்னியம்பதி, மயிலாப்பூர் சென்மேரிஸ் பாலம், சுப்பராயன் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பெரியார் சிலை, உருவபடங்களுக்கு தோழர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர். ஒவ்வொரு பகுதியிலும் பெரியார் நினைவு மற்றும் கொள்கை முழக் கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்வுகள் மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடை பெற்றது. தலைமைக் கழக பொறுப் பாளர்கள், மாவட்டம், பகுதி கழக பொறுப்பாளர்கள் மற்றும் சென்னை கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். சேலம்: சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் 49ஆவது நினைவு நாள் 24-12-2022 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்டச்...

தமிழ்க் குடில் இல்லத் திறப்புவிழா

தமிழ்க் குடில் இல்லத் திறப்புவிழா

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். தோழர்கள் கிருஷ்ணவேணி – தேவராஜ் ஆகியோரது புதிய இல்லம் பல்லடம் அருகே வரபாளையம் கிராமத்தில் “தமிழ்க் குடில்” எனும் பெயரில் 04.12 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் திறந்து வைக்கப் பட்டது. இல்லத்தை தோழர்களின் பெற்றோர்கள் கிட்டாள்- மாறன், இலட்சுமி – பழனிச்சாமி ஆகியோர் திறந்து வைத்தார்கள். இல்லத் திறப்பு விழாவிற்கு ப.மாறன் தலைமை தாங்கினார்கள் தே. சுப்பிரமணியன் – ராதாமணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கற்பி சமூக கல்வி மையத்தின் இரா.விடுதலைச்செல்வன்  வரவேற்புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெரம்பலூர் டாக்டர் அம்பேத்கர் சமூகக் கல்விப் பொருளாதார அறக்கட்டளையின் இரா.க.கிருஷ்ணசாமி, பாடகர் மா.பா. கண்ணையன், கழகப் பொருளாளர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர்சிவகாமி, தி.வி.க. திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தோழர் மா.தேவராஜ்  நன்றி கூறினார்.   பெரியார்...

சைனி-அபிலாஷ் இணையேற்பு விழா

சைனி-அபிலாஷ் இணையேற்பு விழா

கழகத் தோழர் சைனி – அபிலாஷ் ஆகியோரின் இணையேற்பு விழா 14.12.2022 அன்று காலை 12 மணியளவில் கோவை ஆர்.எஸ்.புரம் புனித அருளானந்தர் தேவாலயத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி தொடக்கமாக நிமிர்வு குழுவினரின் பறை இசை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கழகச் செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தோழர்கள் புரட்சித் தமிழன், மாதவன் சங்கர், வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சபரிகிரி வரவேற்புரையாற்றினார். கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கிருட்டிணன் நன்றியுரை யாற்றினார். நிகழ்ச்சியை சிவராசு தொகுத்து வழங்கினார்.. கழகத் தோழர்கள் சார்பாக மணமக்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டது. தோழர்கள் அய்யப்பன், துளசி, ஆனந்த், விவேக், ரேணுகா, மணிகண்டன், ராஜபாளையம் மு.ராம்குமார் ஆகியோர் இணையேற்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெரியார் முழக்கம் 22122022 இதழ்

திவ்யா – மதன் வாழ்க்கை இணையேற்பு விழா

திவ்யா – மதன் வாழ்க்கை இணையேற்பு விழா

தோழர்கள் திவ்யா – மதன் வாழ்க்கை இணைப்பு விழா  20.11.2022, ஞாயிறு காலை 11.00 மணியளவில் திருப்பூர், திருமுருகன்பூண்டி,டே மூன் பார்டி ஹாலில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் ஆக நடைபெற்ற இத்த திருமண விழாவின் முதல் நிகழ்வாக பகுத்தறிவு பாடல்களை யாழினி யாழ் இசை கோவை இசைமதி ஆகியோர் பாடினார்கள். ஆத்துப்பாளையம் பகுதி கழகத் தோழர் பரந்தாமன்  வரவேற்புரை யாற்றினார்கள். அடுத்து கழகத் தலைவர் தலைமையில் இணையர்கள்  இல்வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியேற்றுக் கொண்டார்கள். தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி மணமகனின் நண்பர் மற்றும் கழகத்தின் மாநில பொறுப்பாளர்களும் நிர்வாகிகளும் தோழர்களும் பேசினார்கள். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆ.சந்தோஷ், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, கோவை மாவட்ட...

கழகம் முன்னெடுத்த சட்ட எரிப்பு நாள் நிகழ்வுகள் சென்னையில் கழகத் தலைவர் தலைமையில் உறுதி ஏற்பு

கழகம் முன்னெடுத்த சட்ட எரிப்பு நாள் நிகழ்வுகள் சென்னையில் கழகத் தலைவர் தலைமையில் உறுதி ஏற்பு

  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் நவம்பர் 26 அன்று நடைபெற்ற சட்ட எரிப்பு நாள் பொதுக் கூட்டங்கள் வீர வணக்க நிகழ்வுகளின் தொகுப்பு. சென்னை : திராவிடர் இயக்கத்தின் மிக முக்கிய போராட்டமான ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை தோழர்கள் கொளுத்தி இந்திய ஒன்றியத்தை திரும்பி பார்க்க வைத்தப் போராட்டம் ‘சட்ட எரிப்புப் போராட்டம்’ ஆகும். இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில், பதாகைகள் சட்ட எரிப்பு போராளிகளை நினைவுகூரும் வகையிலும், வீரவணக்கம் செலுத்தும் வகையிலும் அமைக்கப்பட் டிருந்தது.  26.11.2022 அன்று காலை 8 மணியளவில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பின்பு சட்ட எரிப்பு நாள் குறித்து உரையாற்றினார். முன்னதாக, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி  ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ வாசிக்க கழகத் தோழர்கள் உறுதியெடுத்தனர். ஜலகண்டாபுரம் : 26.11.2022 மாலை 6.00 மணியளவில் ஜலகண்டாபுரம் பேருந்து...

பல்லடம் ஒன்றியத்தில் கழகத்தின் பரப்புரைப் பயணம்

பல்லடம் ஒன்றியத்தில் கழகத்தின் பரப்புரைப் பயணம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள், சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம் என்ற முழக்கத்துடன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்தில் 16.10.2022 ஞாயிறு அன்று காலை 10 மணி அளவில் துவங்கி  தெருமுனை பரப்புரைக் கூட்டங் களாக மாலை வரை நடைபெற்றது. தொடக்கமாக பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் நடந்த  பரப்புரைப் பயணத்திற்கு பல்லடம் நகர அமைப்பாளர்  கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பல்லடம் ஒன்றிய அமைப்பாளர் சண்முகம், செம்பரிதி, பழனிச்சாமி ஆகிய தோழர்கள்  முன்னிலை வகித்தனர் . முதல் நிகழ்வில் ஒன்றிய அமைப் பாளர் சண்முகம் வரவேற்புரை ஆற்றினார்,  திருப்பூர் மாவட்டத் தலைவர்  முகில் ராசு, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், பொருளாளர் சு.துரைசாமி ஆகியோர் உரையாற்றினர்.  ராஜசிங்கம் நன்றி உரையாற்றினார். பரப்புரையின் இரண்டாவது நிகழ்வு 11 மணிக்கு வடுகுபாளையம் பகுதியில், பயணத்திற்கு பல்லடம் ஒன்றிய நகர அமைப்பாளர் கோவிந்த ராஜ்  தலைமை வகித்தார். தி.மு.க...

பெரியார் பிறந்த நாள் எழுச்சி; பரப்புரைக் கூட்டங்கள்

பெரியார் பிறந்த நாள் எழுச்சி; பரப்புரைக் கூட்டங்கள்

  பெரியார் பிறந்த நாளான செப்.17 அன்று கொடி ஏற்றம்; தெருமுனைப் பரப்புரை; பொதுக் கூட்டங்களை கழகம் நடத்தியது. தூத்துக்குடியில் பால் பிரபாகரன் உரை : ஆரிய விசம் முறிக்கும் அருமருந்து தந்தை  பெரியாரின் 144வது பிறந்த நாளில் சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்பீர் என்று தி.வி.க பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அறைகூவல் விடுத்தார். தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் 17.09.2022 தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சனாதன எதிர்ப்பு விளக்கப் பொதுக் கூட்டமாக தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு தருவைகுளம் முதன்மை சாலையில் நடைபெற்றது. நிகழ்விற்கு தி.வி.க.மாவட்ட துணைத் தலைவர் ச.கா.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வே.பால்ராசு, ச.ரவிசங்கர், ம.அசோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சா.த.பிரபாகரன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழக பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அவர் தனது உரையில் “தந்தை பெரியாரின் உழைப்பால் சமத்துவ சமூக மாற்றம் ஏற்பட்டு...

பெரியார் பிறந்த நாள்: திருப்பூர் தயாராகிறது

பெரியார் பிறந்த நாள்: திருப்பூர் தயாராகிறது

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திருப்பூர் மாநகரில் பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்   30.08.2022 செவ்வாய் மாலை மாஸ்கோ நகரில் உள்ள மாதவன் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, கழக நிர்வாகிகள் மாதவன், முத்து,  அய்யப்பன், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வரும் செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று கழகத்தின் சார்பில் அய்யா சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்வுக்கு தோழர்கள் திரளாக கலந்து கொள்வது எனவும் செப்டம்பர் 18 ஞாயிற்றுகிழமை அன்று கீழ்கண்ட இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 1) ராயபுரம், 2) மாஸ்கோ நகர், 3) ரங்கநாதபுரம், 4) பெரியார் காலனி, 5) அம்மாபாளையம், 6) ஆத்துப்பாளையம், 7)அனுப்பர்பாளையம், 8) சந்தைப்பேட்டை, 9) குளத்துப்பாளையம், 10) வீரபாண்டி பிரிவு.   பெரியார் முழக்கம்...

விநாயகன் அரசியல் ஊர்வலத்தில் விதிமீறல்களைக் கண்காணிக்கக் கோரிக்கை

விநாயகன் அரசியல் ஊர்வலத்தில் விதிமீறல்களைக் கண்காணிக்கக் கோரிக்கை

திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடைபெறும் ஊர்வலங்கள், சிலை கரைப்பு நிகழ்ச்சிகளில் அரசு ஆணை, நீதிமன்ற உத்தரவுகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை சரியாக கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 24.08.22 புதன்கிழமை மாலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்ட தலைவர் முகில்ராசு,கழக நிர்வாகிகள் தனபால், ராமசாமி மாணவர் கழகத்தின் மகிழவன், கழகத் தோழர்கள் அய்யப்பன் திலகவதி, மாரிமுத்து ஆகிய தோழர்கள் பங்கேற்றனர். ஈரோடு வடக்கு மாவட்டம்: திராவிடர் விடுதலைக் கழகம் ண ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக, பிள்ளையார் சிலையை வைப்பதற்கும், கரைப்பதற்கும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்,  தமிழ் நாட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படியும், சிலை வைப்பவர்கள் அரசின் விதி முறைகளை கடைபிடிக்கிறார்களா என்றும்  விதி மீறல்கள் இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை...

மேட்டூர் – சேலம் – சென்னை – கோவை – திருப்பூரில் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா தெருமுனைக் கூட்டங்கள்

மேட்டூர் – சேலம் – சென்னை – கோவை – திருப்பூரில் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா தெருமுனைக் கூட்டங்கள்

சேலம் மேற்கு மாவட்ட திவிகவின் சார்பில் கழகத்தின் 11ம் ஆண்டு துவக்க நாளில் தெருமுனைக் கூட்டங்கள் 12.08.2022 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையத்தில் பறை முழக்கம்,மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் கொள்கைப் பாடல்களுடன் துவங்கியது. முதலாவதாக வழக்கறிஞர் கண்ணகி “பெரியாரின் தேவை, பெண்ணுரிமை” ஆகியவை குறித்து உரை நிகழ்த்தினார். அடுத்து கழகத்தின் பரப்புரைச் செய லாளர் பால்.பிரபாகரன்,  “திராவிடர் விடுதலைக் கழகம் கடந்து வந்த பாதைகளையும், தமிழக உரிமை களுக்காக கழகம் செய்த போராட்டங்கள், பரப்புரைகள் மற்றும் ஒன்றிய பிஜேபி அரசினால் நாம் எவ்வாரெல்லாம் வஞ்சிக்கப்படுகிறோம்” என்பதை பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினார். கொளத்தூர் பேருந்து நிலையத்தில் திரளான பொதுமக்கள் உரையை கேட்டனர். பொது மக்களுக்கு திராவிடர் விடுதலைக்கத்தின் கடந்த 10 ஆண்டு கால பரப்புரை, போராட்டங்கள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை விளக்கி துண்டறிக்கை வழங்கப்பட்டது. நிறைவாக கொளத்தூர் நகர செயலாளர்  அறிவுச்செல்வன் நன்றியுரை கூற தெருமுனைக் கூட்டம் 11...

பாஜக நிர்வாகிகள் மீது கழகம் புகார் மனு

பாஜக நிர்வாகிகள் மீது கழகம் புகார் மனு

திருப்பூரில் 15.07.22 அன்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முறையான அனுமதி ஏதும் இல்லாமல் செல்ஃபி வித் அண்ணாமலை என்று விளம்பரம் செய்து, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கல்லூரி முதல்வருக்கு மிரட்டல் விடுத்தும், கல்லூரி மாணவிகள், மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளின் மீது தக்க பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளும்படி திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 16.07 22 திருப்பூர் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு தலைமை யில் திருப்பூர் மாநகரச் செயலாளர்  மாதவன், 15 வேலம்பாளையம் பொறுப்பாளர் மாரிமுத்து, தோழர்கள் திலகவதி, பிரசாந்த் ஆகியோர் உடன் சென்றனர். பெரியார் முழக்கம் 21072022 இதழ்

திருப்பூர் கழகம் பதிலடி மலிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர்!

திருப்பூர் கழகம் பதிலடி மலிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர்!

திருப்பூரில் பா.ஜ.க.வினர் அரசு கல்லூரிகளின்  பெயர்களை முறைகேடாக பயன்படுத்தி துண்டறிக்கைகளை அச்சிட்டு “செல்பி வித் அண்ணாமலை” என்று விளம்பரப்படுத்தி கல்லூரி களுக்குள் அத்து மீறி நுழைய திட்டமிட்டு இருந்தார்கள். அண்ணாமலையைக் கூட்டி வந்து சாலைகளில் கூட்டமாக கூட காவல்துறையிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமலும், அனுமதியும் பெறாமலும் சட்டம் ஒழுங்கை மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வினர் பேசினால் பரப்புரையில் ஈடுபட்டால் என்ன பேசுவார்கள் என்பதை பொதுமக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக மத வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவது, கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் குளிர் காய்வது போன்ற  பொது அமைதியை குலைக்கும் வகையில் தான் இவர்களின் பேச்சுக்கள் இருக்கும். இச்செய்தி பரவிய உடன் திராவிடர் விடுதலை கழகத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் முகில் ராசு, திருப்பூர் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு இந் நிகழ்விற்கு கழகத்தின் கடும் கண்டனத்தை பதிவு...

திருப்பூர் பெரியார் படிப்பகத்தில் ஜாதி மறுப்பு மண விழா

திருப்பூர் பெரியார் படிப்பகத்தில் ஜாதி மறுப்பு மண விழா

கிறிஸ்டினா – மகாதேவன் சாதி மறுப்பு  இணையேற்பு நிகழ்வு, திருப்பூர் அம்மாபாளையம்  தந்தை பெரியார் படிப்பகத்தில்  28.06.2022 அன்று  மாலை 6.00 அளவில் நடைபெற்றது . திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் இராசு தலைமை வகித்தார். திருப்பூர் மாநகரத் தலைவர் தனபால்  வரவேற்பு கூறினார். மாநகர அமைப்பாளர் முத்து,வேலம்பாளையம் பகுதி பொறுப்பாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் மன்றம் தலைவர் சிவகாமி, ஆதித் தமிழர் பேரவை வழக்கறிஞர் அணி  கனகசபை,  தமிழ்நாடு மாணவர் கழகம் திருப்பூர் மகிழவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க,  யாழினி தமிழ்நாடு மாணவர் கழகம், மாதவன் நகர செயலாளர் திவிக, திலகவதி அம்மாபாளையம், மணிகண்டன், ஸ்ரீஜா, சண்முகம், சூப்பர் ஸ்டார் மக்கள் முன்னேற்ற கழகம் திருப்பூர் ஆகியோர் உட்பட தோழர்கள் மற்றும் மணமகன் உறவினர்கள் வாழ்த்தினார்கள். இணையர், கிறிஸ்டினா – சகாதேவன் நன்றி கூறினர். இறுதியாக இணையர், கழக வளர்ச்சி நிதியாக ரூபாய் இரண்டாயிரம் மாவட்டத்...

திருப்பூரில் ‘பிரியாணிபாளையம்’ உணவகம் திறப்பு

திருப்பூரில் ‘பிரியாணிபாளையம்’ உணவகம் திறப்பு

திருப்பூரில் பிரியாணிபாளையம் ரெஸ்ட்டாரெண்ட் அண்ட் கேட்டரிங் திறப்பு விழா பல்லடம் ரோடு, ஹோட்டல் டி.ஆர்.ஜி. பில்டிங்கில் 17.06.2022 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உணவகத்தை திறந்து வைத்தார். உணவகத்தின் முதல் விற்பனையைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி துவங்கி வைத்தார். முதல் விற்பனையை திருப்பூர் மாநகர மேயர் தினேஷ் குமார் பெற்றுக் கொண்டார். அடுத்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கிட்ஸ் கிளப்குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ் சேர்மன் மோகன் கார்த்திக், கழகப் பொருளாளர் துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பிரபாகரன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, திருப்பூர் மாவட்ட திவிக தலைவர் முகில் ராசு, கூநுமுஞஹ தலைவர் ஸ்ரீகாந்த் மற்றும் செயலவை உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள்....

திருப்பூர் கழகம் பதிலடி மலிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர்!

திருப்பூர் கழகம் பதிலடி மலிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர்!

திருப்பூரில் பா.ஜ.க.வினர் அரசு கல்லூரிகளின்  பெயர்களை முறைகேடாக பயன்படுத்தி துண்டறிக்கைகளை அச்சிட்டு “செல்பி வித் அண்ணாமலை” என்று விளம்பரப்படுத்தி கல்லூரி களுக்குள் அத்து மீறி நுழைய திட்டமிட்டு இருந்தார்கள். அண்ணாமலையைக் கூட்டி வந்து சாலைகளில் கூட்டமாக கூட காவல்துறையிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமலும், அனுமதியும் பெறாமலும் சட்டம் ஒழுங்கை மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வினர் பேசினால் பரப்புரையில் ஈடுபட்டால் என்ன பேசுவார்கள் என்பதை பொதுமக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக மத வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவது, கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் குளிர் காய்வது போன்ற  பொது அமைதியை குலைக்கும் வகையில் தான் இவர்களின் பேச்சுக்கள் இருக்கும். இச்செய்தி பரவிய உடன் திராவிடர் விடுதலை கழகத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் முகில் ராசு, திருப்பூர் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு இந் நிகழ்விற்கு கழகத்தின் கடும் கண்டனத்தை பதிவு...

28 தெருமுனைக் கூட்டங்கள்; கோவையில் மண்டல மாநாடு : ‘திராவிட மாடலின்’ சமூகநீதி – சுயமரியாதை கொள்கைகளுக்கு மக்கள் பேராதரவு

28 தெருமுனைக் கூட்டங்கள்; கோவையில் மண்டல மாநாடு : ‘திராவிட மாடலின்’ சமூகநீதி – சுயமரியாதை கொள்கைகளுக்கு மக்கள் பேராதரவு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “நமக்கான அடையாளம் – திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு கோவை டாடாபாத் ஆறுமுக்கு சாலையில் 11.5.2022 புதன் மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. முன்னதாக 23.04.2022 அன்று கோவை மேட்டுப் பாளையத்தில் துவங்கி கோவை திருப்பூர் உடுமலை பொள்ளாச்சி என பல்வேறு பகுதிகளில் 07.05.2022 வரை 28 தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்து நமக்கான அடையாளம் திராவிட மாடல் எனும் பரப்புரையை கோவை திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தியது. நிறைவாக மண்டல மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் துவக்க நிகழ்வாக திராவிட மாடல் குறித்தப் பாடல்களை மேட்டூர் டி.கே. ஆர் இசைக் குழு வினர் பாடினர். இதில் கழகத் தோழர்கள் மேட்டூர் கோவிந்த ராஜ், கோவை கிருஷ்ணன், புரட்சித் தமிழன், பொள்ளாச்சி வினோதினி ஆகியோர் பாடல்களை பாடினர். பின்பு திராவிட மாடல் மண்டல மாநாடு துவங்கியது. மாநாட்டிற்கு கோவை மாநகர கழகச்...

திருப்பூர்-ஈரோடு மாவட்டங்களில் திராவிட மாடல் விளக்கம்

திருப்பூர்-ஈரோடு மாவட்டங்களில் திராவிட மாடல் விளக்கம்

திருப்பூரில் தெருமுனை கூட்டங்கள் :  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “நமக்கான அடையாளம் – திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு திருப்பூரில் தெருமுனைக் கூட்டங்கள் 01.05.22 அன்று காலை 11 மணியளவில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு உள்ள பெரியார் சிலை அருகிலிருந்து துவங்கியது. நிகழ்வு பெரியார் பிஞ்சு யாழினி மற்றும் து.சோ.பிரபாகர் ஆகியோரின் பகுத்தறிவு பாடல்களுடன் துவங்கியது. மாவட்டக் கழகத் தலைவர் முகில்ராசு தெருமுனை கூட்டத்தில் துவக்க நிகழ்விற்கு தலைமை தாங்கினார். மதிப்பிற்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், தெருமுனைக் கூட்டங்களை துவக்கி வைத்து தமிழ் நாட்டில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சி குறித்தும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத ஆட்சி குறித்தும் சிறப்பானதொரு கருத்துரையை வழங்கினார். கழகப் பொருளாளர் துரைசாமி, தெருமுனை கூட்டங்களின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தலைவர் ஆசிரியர் சிவகாமி, மாவட்டக் கழகச் செயலாளர்...

நன்கொடை

நன்கொடை

திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா – திருப்பூர் மாநகர அமைப்பாளர் தனபால் இணையரின் மகள் பெரியார் பிஞ்சு யாழினி தனது சேமிப்புத் தொகையான ரூ.550-அய் தனது பிறந்தநாளையொட்டி 10.4.2022 அன்று ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு வளர்ச்சி நிதியாக வழங்கினார். பெரியார் முழக்கம் 05052022 இதழ்

திருப்பூரில் இல்லத் திறப்பு நிகழ்வு

திருப்பூரில் இல்லத் திறப்பு நிகழ்வு

திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில்  கழகத் தோழர் மதன் இல்லத் திறப்பு விழா  20.01.2022 வியாழன் காலை 11.00 மணி அளவில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு முன்னிலையில்  நடைபெற்ற இத்திறப்பு விழா எந்தவிதமான பார்ப்பனப் பண்பாட்டுச் சடங்குகள், மூட நம்பிக்கைகள் சார்ந்த நிகழ்வுகளும் இன்றி மிக எளிமையாக நடைபெற்றது. குடும்பத்தின் குழந்தைகள் பெரியார் பிஞ்சுகள் மேகன் பிரபு, அஸ்வின் ஆகியோர் இல்லத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இல்லத் திறப்பின் மகிழ்வாக  மதன் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ1000/= (ரூபாய் ஆயிரம் மட்டும்) மாவட்டத் தலைவர் முகில்ராசுவிடம் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர அமைப்பாளர் முத்து , பரந்தாமன், விசய் – வீரலட்சுமி, மாரிமுத்து, அய்யப்பன், சந்தோஷ், சிரீசா, பிரபு-சுபாஷினி, கிஷோர், ஜெகன்-காயத்ரி, ராஜா, துரை, கௌரிசங்கர், திருமூர்த்தி, வினோத், யாழினி, யாழிசை ஆகியோர் கலந்து கொண்டனர்.  ...

சுயமரியாதை இணையேற்பு நிகழ்வு

சுயமரியாதை இணையேற்பு நிகழ்வு

கோமதி -ஆனந் பாபு ஆகியோரின் இணையேற்பு விழா 10.01.2022 அன்று  திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் முகில் ராசு தலைமையில் நடைபெற்றது. கழக மாநகர தலைவர் தனபால். மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாரிமுத்து, திலகவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  திவிக சார்பில் கழகத் தோழர்கள்  நிகழ்வில் கலந்துகொண்டனர். இணையர்கள் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 3000/- வழங்கினர். மதியம் மாட்டுக்கறி உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பெண் வீட்டார் சார்பாக அம்மா கர்ப்பகவள்ளி, தாத்தா முருகன், மாமா நல்லமுத்து, தம்பி லிங்கேசுவரன் நண்பர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 20012022 இதழ்

திருப்பூரில்  பயிலரங்கம்: பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் சிறப்புரை

திருப்பூரில் பயிலரங்கம்: பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் சிறப்புரை

திருப்பூர் மாநகர திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர் முத்து – வசந்தி இணையரின் மகன் வெற்றிமாறனின் இரண்டாமாண்டு பிறந்த நாள் விழா 07.01.2021 வெள்ளிக்கிழமை திருப்பூர் பொங்கு பாளையம் முத்துவின் இல்லமான  பெரியார் இல்லத்தில் நடைபெற்றது. காலை 11.00 மணியளவில் பிறந்த நாள் வாழ்த்து பாடல் ஒலிக்க வெற்றிமாறன் தனது பெற்றோர் உறவினர்களுடன் கேக் வெட்டினார். வெற்றிமாறனுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கேக் ஊட்டி தனது வாழ்த்தை மகிழ்வை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வெற்றிமாறனின் பிறந்த நாளில் தோழர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொள்கையை கொண்டு சேர்க்கும் வகையில்  ‘விடுதலை’யின் குறியீடுகள் ‘பெரியார் – அம்பேத்கர்’ எனும் தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் முகில்ராசு தலைமை வகித்தார். வருகை தந்தோரை முத்து வரவேற்று உரையாற்றினார். திருப்பூர் ராமசாமி மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரைக்கு பின் கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் பயிலரங்கை நடத்தினார். நிறைவாக...

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவிப்பு

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவிப்பு

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், 06.12.2021 அன்று காலை 9 மணியளவில் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், அம்பேத்கர் மணிமண்டபத்தில் மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மயிலாப்பூர் சுண்ணாம்பு கால்வாயில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அடுத்து, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் படத்திற்கு தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார் மாலை அணிவித்தார். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட செயலாளர் உமாபதி, வட சென்னை யேசுகுமார், மயிலை சுகுமார், இராவணன், மனோகர் ஆகியோர் உட்பட சென்னை கழக தோழர்கள் கலந்து கொண்டனர். திருப்பூரில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 65ஆவது நினைவு நாள் நிகழ்வு திருப்பூர் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. 06.12.2021 அன்று காலை 10.00 மணியளவில் திருப்பூரில் அமைந்துள்ள புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கழகத் தோழர்கள்...

கழகப் பொறுப்பாளர்கள் இரண்டாம் கட்டப் பயணம்:  தோழர்களுடன் சந்திப்பு

கழகப் பொறுப்பாளர்கள் இரண்டாம் கட்டப் பயணம்: தோழர்களுடன் சந்திப்பு

இரண்டாம் கட்டப் பயணமாக, 23,24, 25.11.2021 ஆகிய தேதிகளில், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், திருப்பூர் அய்யப்பன் ஆகியோர், மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களிடத்தில் கலந்துரையாடினர். திண்டுக்கல் : 23.11.2021 காலை 11 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகில் உள்ள வேலன் விடுதியில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி, பெரியார் செல்வம் உள்ளிட்ட மாவட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். நிகழ்கால அரசியல் செயல்பாடுகள், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், எதிர்வரும் காலங்களில் இயக்க செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. மதிய உணவு பழனி கழக தோழர்களால் வழங்கப்பட்டது. மடத்துக்குளம் : மாலை 4 மணியளவில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மோகன் இல்லத்தில் தோழர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்பகுதியைச் சார்ந்த சிவானந்தம், இராசேந்திரன், கணக்கன் மற்றும் மடத்துக்குளம் மோகன் இணையர் ஜோதி ஆகியோர்...

சட்ட எரிப்புப் போராட்டம் நடத்திய நவம்பர் 26இல் தோழர்கள் – ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு

சட்ட எரிப்புப் போராட்டம் நடத்திய நவம்பர் 26இல் தோழர்கள் – ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு

1957 நவம்பர் 26ஆம் நாள் அரசியல் சட்டத்தை அரசியல் நிர்ணயசபை ஏற்ற நாளாகும். அதே சட்டம் மதத்தை அடிப்படை உரிமையாக்கி, அதன் வழியாக ஜாதி இழிவுகளைக் காப்பாற்றுவதற்குப் பாதுகாப்பான பிரிவுகளை உள்ளடக்கியிருந்தது. ஜாதி ஒழிப்புக்குத் தடையாக இருந்த சட்டத்தின் உட்பிரிவுகளான 13(2), 25(1), 26(1), 26(2) மற்றும் 368 பிரிவுகளை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்துக்கு பெரியார் ‘நவம்பர் 27’அய் தான் தேர்வு செய்தார். ஒரு நாட்டின் அரசியல் சட்டப் பிரிவுகளையே 10,000 பேர் தீயிட்டுக் கொளுத்திய போராட்ட வரலாறு பெரியார் இயக்கத் துக்கு மட்டுமே உண்டு. சரியாக போராட்டத்திற்கு 24 நாட்களுக்கு முன் தஞ்சையில் நடந்த சிறப்பு மாநாட் டில் போராட்ட அறிவிப்பை பெரியார் அறிவித்தார். 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தோழர்கள் தண்டிக் கப்பட்டனர். தோழர்கள் எவரும் எதிர் வழக்காட வில்லை. ‘சட்டத்தை எரித்தேன்; தண்டனை ஏற்கத் தயாராக உள்ளேன்’ என்று நீதிமன்றத்தில் வாக்கு மூலம் தந்தனர்....

‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலுக்கு எதிர்ப்பா? சங்கிகள் அடாவடியை எதிர்த்து – அனைத்துக் கட்சிகளும் திருப்பூரில் ஒன்று திரண்டன

‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலுக்கு எதிர்ப்பா? சங்கிகள் அடாவடியை எதிர்த்து – அனைத்துக் கட்சிகளும் திருப்பூரில் ஒன்று திரண்டன

பா.ஜ.க.-இந்து முன்னணி அடா வடியை எதிர்த்து அனைத்துக் கட்சி களும் களத்தில் இறங்கும் நடவடிக்கை திருப்பூரில் தொடங்கி இருக்கிறது. திருப்பூர் மாநகராட்சி பள்ளி நூலகத் திற்கு தன்னார்வலர் பெரியார் புத்தகங்களை கொடையாக வழங்கியதை எதிர்த்து பள்ளிக்கு அத்துமீறி நுழைந்து ஆசிரியர் களை மிரட்டிய பாஜகவினர் ! திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் பெரியார் புத்தகம் மொத்தமாக விநியோகம் செய்ததாகக் கூறி, பள்ளியை பாஜகவினர் முற்றுகையிட்டனர். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நூலகத்துக்கு தன்னார்வலர்கள் புத்தகங்கள் வழங்கி வந்தனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பெரியார் எழுதிய, ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற புத்தகம் சுமார் 2 ஆயிரம் பிரதிகளை தன்னார்வலர் ஒருவர் வழங்கினார். இதனை அறிந்த திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை யில் பாஜகவினர் சுமார் 10 பேர் பள்ளி வளாகத்துக்கு வந்து, புத்தகங்களை யாருக்கும் தரக் கூடாது...

பெரியார் சிலையை மூடி நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்

பெரியார் சிலையை மூடி நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்

பெரியார் சிலையை மூடி நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் அறிவிப்பு ! 06.03.2021 அன்று திருப்பூரில் பெரியார் சிலை அரசு அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். அரசு அதிகாரிகளுக்கு இது தெரியாததல்ல. தொடர்ந்து தெரிந்தே இத்தவறை செய்து வருகிறார்கள். தேர்தல் நடைத்தை விதிகள் என்று கூறிக்கொண்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இவ்வாறு பெரியார் சிலைகளை அரசு அதிகாரிகள் மூடுவதும், தோழர்கள் நீதிமன்ற தீர்ப்பை காட்டியபின் திரையை நீக்குவதும் என அரசு அதிகாரிகள் விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசு அதிகாரிகள் யாருக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தெரிந்தே இந்த வேலையை தொடர்ந்து செய்கிறார்கள் என்றால் இவர்கள் யாருக்காக வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள் ? மக்கள் பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு காவி தீவிரவாதிகளின் கைக்கூலிகளாக செயல்படும் இந்த அதிகாரிகள் அறியாமல்...

‘தந்தை பெரியார் மளிகை அங்காடி’ திறப்பு

‘தந்தை பெரியார் மளிகை அங்காடி’ திறப்பு

திருப்பூர் மாவட்டம் ஆத்துப் பாளையம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மதனின் ‘தந்தை பெரியார் மளிகை அங்காடி’ திறப்பு விழா 18.02.2021, வியாழன் காலை 11.30 மணியளவில் நடை பெற்றது. விழாவிற்கு திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் முகில்ராசு தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக பகுத்தறிவுப் பாடல்களை து. சோ. பிரபாகர், பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, அமுதினி ஆகியோர் பாடினர். கழகப் பொருளாளர் துரைசாமி அங்காடியை திறந்து வைத்து உரையாற்றினார்.  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்முன்னாள் வார்டு கவுன்சிலர் செந்தில்குமார்  விற்பனையை தொடங்கி வைத்தார்.  கழக அமைப்புச் செயலாளர் இரத்தின சாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, இயற்கை ஆர்வலர் பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்திகழ்வில், திவிக கோவை மாவட்டத் தலைவர் இராமச்சந்திரன், திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் அகிலன், சங்கீதா, திருப்பூர் தெற்குப் பகுதிச் செயலாளர் ராமசாமி, மாநகரத் தலைவர் தனபால், திராவிடர் இயக்கத்...

திருப்பூரில் தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா

திருப்பூரில் தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா

திருப்பூர் மாநகர திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 24.01.2021 அன்று தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா திருப்பூர் மாஸ்கோ நகர், பெரியார் திடலில் 12 ஆவது ஆண்டாக சிறப்பாக நடைபெற்றது. காலை முதல் இரவு வரை நடைபெற்ற இந்த விழாவில் பறை இசை நிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டிகள், மந்திரமா தந்திரமா அறிவியல் விளக்க நிகழ்ச்சி, சிறுவர் பாடல்கள், தமிழிசைக்கு நடனங்கள் ஆகியவை சிறப்புடன் நடைபெற்றன. அப்பகுதி வாழ் பொதுமக்கள் குழந்தைகள் பெண்கள் என ஆர்வமுடன் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இரவு வரை பங்கேற்றனர். நிகழ்வுகள் காலை 9 மணி முதல் நிகர் பறை இசைக் குழுவின் பறை இசை நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது. முதலில் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. பின்பு அதனைத் தொடர்ந்து 10.00 மணியளவில் குழந்தைகள் பெண்களுக்கான பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் துவங்கி மாலை வரை நடைபெற்றது. மேடை நிகழ்வுகள் மாலை 6 மணி...

பெரியார் அண்ணா சிலைகளின் கூண்டை அகற்ற திருப்பூர் கழகம் அரசுக்கு தொடர் அழுத்தம்

பெரியார் அண்ணா சிலைகளின் கூண்டை அகற்ற திருப்பூர் கழகம் அரசுக்கு தொடர் அழுத்தம்

  திருப்பூரில் தற்போது பெரியார், அண்ணா சிலைகளை அதிமுக அரசு கூண்டமைத்து மறைத்துள்ளது. பெரியாரும்  அண்ணாவும் முதன் முதலாக சந்தித்துக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு திருப்பூரில் நடந்தது என்பதனை நினைவூட்டும் வகையில் பெரியாரும் அண்ணாவும் ஒன்றாக இருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக் கும் இந்த சிலைகளை அதிமுக எடப்பாடி அரசு கூண்டு போட்டு மறைத்துள்ளது. எனவேதான் கூண்டு அமைக்கும் பணிகள் ஆரம்பித்த பொழுதே திராவிடர் விடுதலைக் கழகம் தன்னுடைய கடுமை யான கண்டனத்தைப் பதிவு செய்தது. காவல் துறை, வருவாய் துறையிடம் தங்களுடைய கண்டனத்தையும், கூண்டு அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கழகத்தின் கோரிக்கையும் பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி பெரியார், அண்ணா சிலைகளைப் பார்க்க முடியாமல் மறைத்து தமிழக அரசு கூண்டை முழுமையாக அமைத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் துரைசாமி, கழக...

இணையம் வழியாக கழகத் தோழர்களின் மண விழாக்கள்

இணையம் வழியாக கழகத் தோழர்களின் மண விழாக்கள்

கொரோனா ஊரடங்கில் இணையதளம் வழியாக இரண்டு கழகத் தோழர்களின் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. 01-06-2020, திங்கள் காலை 11:30 மணிக்கு ஹரிஷ்குமார் – ரூபஸ்ரீ ஆகியோரின் இணையேற்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி வரவேற்புரையாற்றினார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமை வகித்தார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். Team Link வாயிலாக இணையேற்பை நடத்தி வைத்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப் புரையாற்றினார். இறுதியாக தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தென்றல் நன்றி கூறினார். 27.08.2020 அன்று காலை 10 மணியளவில், சென்னை தலைமை அலுவலகத் தில் அருண்குமார்-சிவஜோதி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வு நடை பெற்றது. தென் சென்னை மாவட்ட செய லாளர் உமாபதி தலைமை வகித்தார். பேரா சிரியர் சரஸ்வதி இணை யேற்பை நடத்தி வைத்தார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர்...