Category: துண்டறிக்கை

சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!

சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!

“சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்!" "சமூக ஒற்றுமையைக் காப்போம்!" 1. பத்தாண்டு மோடி ஆட்சியில் என்ன நடந்தது? சட்டங்கள் சீர்குலைக்கப்பட்டன. மதவெறி தூண்டப்பட்டது. மாநில அடையாளங்கள் அழிக்கப்பட்டன. 2. நீட் தேர்வால் நமது அனிதாக்களை இழந்தோம். ஜி.எஸ்.டி-யால் தமிழ்நாட்டின் வருவாயை இழந்தோம். வரலாறு காணாத மழை வெள்ளத்தை நமது மாநிலம் சந்தித்த போதும் ஈவுஇரக்கமின்றி நிவாரண நிதியே இல்லை போ என்று இறுமாப்புடன் பேசியது ஒன்றிய மோடி ஆட்சி. 3. ஆளுநர் ரவி சனாதனப் பெருமை பேசுகிறார். தமிழ்மறை தந்த வள்ளுவருக்கு காவி சாயம் பூசுகிறார். தலித்மக்களுக்கு பூணூல் அணிவிக்கிறார். தீட்சிதர்கள் நடத்தும் குழந்தைத் திருமணங்களை ஆதரிக்கிறார். தேசத்தந்தை காந்தியை அவமதிக்கிறார். சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமறுக்கிறார். அண்ணா சூட்டிய தமிழ்நாடு என்ற பெயரை ஏற்க முடியாது என்கிறார். ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் தலைமையிடமாக மாற்றிவிட்டார். உச்சநீதிமன்றமே தலையில் குட்டிய பிறகும் பாஜக ஆட்சிதரும் இறுமாப்பில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காலில் போட்டு...

வள்ளலார் வரலாறு திரும்புகிறது

வள்ளலார் வரலாறு திரும்புகிறது

சிதம்பரத்துக்கு அருகில் உள்ள மருதூர் கிராமத்தில் 1823 அக்டோபரில்  கருணீகர் (கணக்குப் பிள்ளை) மரபில் பிறந்தவர் இராமலிங்கனார். அவர் முதலில் பாடிய ‘பாமாலை’யில் “பெருநெறி பிடித் தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்று எழுதினார். உருவ வழிபாடு, வேதம், ஆகமங்களைக் கடுமையாக எதிர்த்தார். 1872 ஜன. 25இல் வடலூரில் உருவ வழிபாடு இல்லாமல் ஒளியை மட்டுமே வணங்கும் ‘ஞான சபை’யைத் தொடங்கினார். இது எல்லா மதங்களுக்கும் பொதுவானது என்று அறிவித்தார். தில்லை நடராசன் பக்தராக இருந்தவர் தான்; அங்கே வழிபடச் சென்றபோது தீட்சதர்கள் அனுமதிக்கவில்லை. சினமடைந்த அவர், “இந்தக் கோயிலுக்கு எதிராக ஒரு தலத்தை உண்டாக்கி அங்கே நடராசனை அழைத்துக் கொள்ளப் போகிறேன்” என்று அறிவித்தார். (ஆதாரம்: 1904இல் பு. பாலசுந்தர நாயகர் எழுதிய “இராமலிங்க பிள்ளை பாடல்) 50 ஆண்டுகாலம் வாழ்ந்த வள்ளலார், கடைசி 10 ஆண்டு காலத்தில் தனது சைவம், முருகன், ஆகம பக்திகளைத் துறந்தார்....

பெண்களையும், சூத்திரர்களையும் அவமதிக்கும் மனுசாஸ்திரம்

பெண்களையும், சூத்திரர்களையும் அவமதிக்கும் மனுசாஸ்திரம்

பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது தகப்பனாரின் கட்டுப்பாட்டிலும் திருமணமான பிறகு கணவனின் கட்டுப்பாட்டிலும் கணவன் இறந்த பிறகு, பிள்ளைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டுமே தவிர, பெண்கள், தாங்கள் விரும்புகிறபடி (சுயமாக சிந்தித்து) ஒரு போதும் இருக்கக் கூடாது.” (மனு சாஸ்திரம் அத்தியாயம் 5, சுலோகம் 148.) கணவன் துராசாரமுள்ளவனாக “(ஒழுக்கக்கேடுகள் உள்ளவனாக) இருந்தாலும் அன்னிய ஸ்திரீலோலனாக (வேறு பெண்களோடு உறவு வைத்துக் கொள்ள துடிப்பவன்) இருந்தாலும், பதிவிரதைகளான பெண் என்பவள், அந்தக் கணவனை தெய்வத்தைப்போல் வணங்க வேண்டும்.” (மனு சாஸ்திரம், அத்.5, சுலோகம் 154) பெண்கள் துரோகிகள் ; பெண்களைக் கொல்லுவது பாவமில்லை. படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.   (அத்தியாயம் 9 ; ஸ்லோகம் 17) பெண்களையும், பிராமணர் அல்லாதவரையும் கொல்லுவது பாவமில்லை. (அத்தியாயம் 11; ஸ்லோகம் 65) சூத்திரர்கள் அனைவரும் பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள். சூத்திரர் என்போர் ஏழு...

பெரியார் பிறந்தநாள்; சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம்!

பெரியார் பிறந்தநாள்; சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம்!

அது என்ன ‘சனாதனம்’? வர்ணாஸ்ரம தர்மத்தின் மற்றொரு பெயர் தான் அது! மனு சாஸ்திரம், இறந்து போன மூத்த சங்கராச்சாரி, இந்துக்களின் புனித நூல்கள் எல்லாம் இதைத் தான் கூறுகின்றன. பிறப்பால் ஒருவன் ‘பிராமணன்’ –  அவனுக்கு அடிமை, பெரும்பான்மை உழைக்கும் மக்களான சூத்திரர்கள், பஞ்சமர்கள்  மற்றும்  பெண்கள். இது பிரம்மாவே கூறியது என்று மனுதர்மம் கூறுகிறது. அந்த சனாதனம், இப்போது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி என்று அதிகார பலத்துடன் தமிழர்களாகிய நம்மீது படை எடுத்து வருகிறது. மொழி, இன அடையாளங்களை ஒழிக்க, மாநிலங்களையே இல்லாது ஆக்க நடக்கும் முயற்சி – சனாதனம். நீட் தேர்வைத் திணிப்பது – சனாதனம். காசியை தலைநகராக்கி, மனுதர்மத்தை அரசியல்  சட்டமாக்கி இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களின் வாக்குரிமையைப் பறிப்போம் என்று சாமியார்கள் கூட்டம் வாரணாசியில் கூடி இந்துராஷ்டிரத்துக்கு புதிய அரசியல் சட்டத்தை அறிவித்திருக்கிறதே – அது சனாதனம். தமிழ்நாட்டிடமிருந்து ஒரு ரூபாயை வாங்கி 35...

மாநில உரிமைகளைப் பறிக்காதே! கல்வி உரிமைகளைத் தடுக்காதே!  மத வெறியைத் திணிக்காதே!  நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’

மாநில உரிமைகளைப் பறிக்காதே! கல்வி உரிமைகளைத் தடுக்காதே! மத வெறியைத் திணிக்காதே! நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’

இடஒதுக்கீடு, சமூக நலனுக்கான திட்டங்கள், மாநில சுயாட்சி, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பெண்களை அதிகாரப்படுத்தல், மதவெறி யற்ற – மக்களின் ஒற்றுமை, மூட நம்பிக்கையற்ற அறிவியல் சமுதாயம் – இவை திராவிடர் இயக்கம் தமிழ்நாட்டுக்குத் தந்த அடையாளங்கள். அனைத்துப் பிரிவு மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய திட்டங்களை உருவாக்குவது என்பதே நமது தமிழ்நாட்டின் தனித்துவம். இந்த அடையாளங்கள், இப்போது ஒன்றிய ஆட்சியால் அழிக்கப்படுகின்றன; படிப் படியாக மறுக்கப்படுகின்றன; இதை எதிர்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் போராட்டங்களை நடத்திக் கொண்டு வருகிறார். திட்டங்களை வகுத்து செயல் படுத்துகிறார். அதில் வெற்றி களையும் குவித்து வருகிறார். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டு எடுப்பது ஒரு பக்கம், மற்றொரு பக்கம் வலிமையான தமிழகத்தை கட்டமைப்பதற்கான திட்டங் களை உருவாக்குவது என்று, முதலமைச்சர் ஒரு கையில் வாளும், மற்றொரு கையில் கேடயமும் ஏந்தி நிற்கிறார். இதுதான் நாம் கூறும் “திராவிட மாடல்”. என்ன நடக்கிறது ? பெட்ரோல் டீசல் விலை...

குடியுரிமையைப் பறிக்கும் கணக்கெடுப்புகளை புறக்கணிப்போம்!

குடியுரிமையைப் பறிக்கும் கணக்கெடுப்புகளை புறக்கணிப்போம்!

ரேஷன் கார்டு, ஓட்டுப் போட அட்டை – ஆதார், கார் ஓட்ட உரிமம் – இதுதான் நமக்குத் தெரிந்த நம்மிடம் உள்ள அடையாள அட்டைகள். ஆனால், டில்லியில் மோடி ஆட்சிக்கு இந்த அடையாள அட்டைகள் போதாதாம்; புதுப்புது அடையாளங்களைக் கேட்கிறது. அது என்ன அடையாளம் தெரியுமா? நாம் இந்த நாட்டின் குடிமக்களாக – அதாவது இந்தியாவைச் சார்ந்தவர்கள்தான் என்பதை நாமே நிரூபிக்க வேண்டுமாம்; அப்போதுதான் இந்த நாட்டில் இருக்க முடியுமாம்; இல்லாவிட்டால் நாம் நாடற்ற அனாதைகளாம்! நாம் – இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை நிரூபிக்க புதிய கணக்கெடுப்பு நடத்தப் போகிறார்கள். இது எப்போதும் எடுக்கப்படும் ‘சென்சஸ்’ – அதாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அல்ல. அதில் நாம் சொல்வதைக் கேட்டு எழுதிக் கொண்டு போய் விடுவார்கள். இப்போது எடுக்கப்படும் கணக்கு என்பது வேறு; அது என்ன புது கணக்கெடுப்பு? அதற்குப் பெயர் ‘தேசிய மக்கள் தொகைப் பதிவேடு’. இதற்கு நாம்...

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை

மண்ணின் மைந்தர்களின்  வேலை வாய்ப்பு உரிமையைப் பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை திணிக்காதே! தமிழ் நாட்டை வட நாடாக்காதே! நாம் மண்ணின் மைந்தர்கள் தலைமுறை தலைமுறையாக இந்த மண்ணில் பிறந்தோம், வாழ்கிறோம், ஆனாலும், பிற வட மாநிலங்களைவிட – நாம் வேறுபட்டுள்ளோம். எவ்வளவு ஒடுக்கப்பட்ட ஜாதியானாலும் சரி; ஏழ்மையும், வறுமையும் நம்மை வாட்டினாலும் சரி; எப்பாடுபட்டாவது – நமது மகளை,  மகனை  படிக்க  வைக்க வேண்டும்; உயர் கல்வியைத் தர வேண்டும் என்ற கொள்கையே நமது பண்பாடு! பெரியார் இட ஒதுக்கீட்டுக்காக 1919 முதலே போராடினார். உரிமையைப் பெற்று தந்தார். காமராசர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்- அந்த  உரிமைகளை படிப்படியாக வளர்த்தார்கள். அம்பேத்கர் சட்டத்தின் வழியாக நமக்கான இட ஒதுக்கீட்டு உரிமைகளை உறுதிப்படுத்தினார். வி.பி.சிங் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தந்தார். போராடிப் பெற்ற சமூக நீதி உரிமைகளை தற்போது பறிகொடுத்து வருகிறோம் . இப்போது...

தூத்துக்குடியில் தமிழ்நாடு மாணவர் கழகம் கல்லூரி மாணவர்களிடம் பரப்புரை !

தூத்துக்குடியில் தமிழ்நாடு மாணவர் கழகம் கல்லூரி மாணவர்களிடம் பரப்புரை !

தூத்துக்குடியில் தமிழ்நாடு மாணவர் கழகம் கல்லூரி மாணவர்களிடம் பரப்புரை ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட மாணவர் கழகம் சார்பாக 21.02.2018 அன்று “மாணவர்களே! இருள் சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்” எனும் தலைப்பில் தமிழக மாணவர்கள் எவ்வாறு இந்த இந்துத்துவ மோடி அரசால் பாதிக்கப்படுகிறார்கள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாமான அரசுப் பணிகள் எவ்வாறு பிறருக்கு தாரைவார்க்கப்படுகின்றன, 60% இட ஒதுக்கீடு வைத்திருக்கிற தமிழ்நாட்டில் நமக்கான வேலை வாய்ப்பு தேர்வுகளில் வெளி மாநில மாணவர்கள் பெரும்பான்மையாக பங்கெடுக்கும் அளவிற்கு கதவை திறந்து விட்டுருக்கிற பா.ஜ.க. எடுபிடி அரசான தமிழக அரசின் நயவஞ்சகத்தை ஒரு துண்டறிக்கையாக தயார் செய்து அதை தூத்துக்குடியில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களிடம் பரப்பி விழிப்புணர்வை உண்டாக்கும் முயற்சியில் துண்டறிக்கை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.. இதற்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. பல...

‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி” ஏன் ? விளக்கமளிக்கும் துண்டறிக்கை !

‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி” ஏன் ? விளக்கமளிக்கும் துண்டறிக்கை !

”தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி” ஏன் ? விளக்கமளிக்கும் துண்டறிக்கை ! தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் 02.03.2018 வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணியளவில் கொளத்தூர் பேருந்து நிலையம் அருகில் தோழர்களால் ”தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி” நடத்தப்பட்டது. நம் தாய்மொழி தமிழை இழிவுபடுத்தும் ஆரிய பார்ப்பனர்களின் போக்கை கண்டித்தும்,தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்து இம்மண்ணிற்கு தொடர்பே இல்லாத செத்துப்போன சமஸ்கிருத மொழியில் வாழ்த்துப்பாடலை பாடியிருக்கும் இந்து சனாதனவாதிகளுக்கு எதிராக தமிழ்மொழி வாழ்த்துப்பாடலை தோழர்கள் பொதுவெளியில் பாடி மக்களிடம் இதுகுறித்த பரப்புரைகளை மிக சிறப்பாக முன்னெடுத்தனர்.

இந்த உண்மைகளைப் படியுங்கள்; பரப்புங்கள்; பகிருங்கள்! மாணவர்களே! இருள்சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்!

இந்த உண்மைகளைப் படியுங்கள்; பரப்புங்கள்; பகிருங்கள்! மாணவர்களே! இருள்சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்!

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட – முற்போக்குச் சிந்தனை கொண்ட மாணவர்களே! நமது எதிர்காலம் இருள்மயமாகி வருவதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இந்தத் துண்டறிக்கையைப் படியுங்கள்! மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் வேலை இல்லாத் திண்டாட்டத்தில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களிலேயே தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்துவிட்டது என்ற அதிர்ச்சியான தகவல் தரப் பட்டிருக்கிறது. இந்தியாவில் வேலை கிடைக்காத இளைஞர்களின் தேசிய சராசரியைவிட (3.6) தமிழ்நாடு கீழாக நிற்கிறது (3.7). 2.45 இலட்சம் பொறியாளர்களும், 4307 டாக்டர் பட்டம் பெற்ற மாணவர்களும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக் கிறார்கள். 2017 மார்ச் 30 வரை வேலை வாய்ப்புக்காகப் பதிவு செய்து காத்திருக்கும் நமது இளைஞர்கள் 81.30 இலட்சம் பேர். பதிவு செய்யாமலே வேலை தேடி அலைவோர் இதைவிடப் பன்மடங்கு என்பதை சொல்லத் தேவை இல்லை. மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு...

உயர்கல்வி படிக்கச் சென்றால் மரணம்தான் பரிசா? – தமிழ்நாடு மாணவர் கழக துண்டறிக்கை

தமிழக மாணவர்களே! தமிழ்நாட்டிலிருந்து உயர்கல்வி படிக்கச் செல்லும் நமது மாணவர்கள், அந்தக் கல்வி நிறுவனங்கள்காட்டும் ‘பாகுபாடு’களாலும், ‘அவமதிப்பு’களாலும், ‘அழுத்தங்’களாலும் மரணத்துக்கு தள்ளப்படுகிறார்கள். தில்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் ‘எம்.டி.’ மேல் பட்டப் படிப்பு படிக்கச் சென்ற திருப்பூர் மாணவர் சரத் பிரபு, தனது அறையில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார் என்ற செய்தி நமது நெஞ்சை பிளக்கிறது. உயர் கல்வி பெற்ற ஒரு மருத்துவர் வரப் போகிறார் என்று அந்தக் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக் கனவு சிதைந்து போய் நிற்கிறது. இதேபோல்தான் புதுடில்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ உயர் மருத்துவக் கல்வி நிறுவனத்துக்கான தேர்வை 2016இல் எழுதி, தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவரான திருப்பூர் சரவணன், கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே விஷ ஊசி செலுத்திக் கொல்லப்பட்டார். நிர்வாகம் முதலில் தற்கொலை என சாதித்தது. விசாரணையில் கொலை என்பது உறுதியானது. மகனின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பெற்றோர்கள் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள்...

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை கிடையாதாம்!

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை கிடையாதாம்!

டிசம்பர் 1ஆம் தேதி நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டங்களில் தோழர்கள் மக்களிடம் விளக்கிப் பேசுவதற்கான சில குறிப்புகள். தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் 85 இலட்சத்துக்கும் அதிகம். ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் குறைந்த ஊதியத்தில் பணி நிரந்தரமின்றி எந்த நேரத்திலும் வேலை இழக்கும் ஆபத்துகளை தலை மேல் சுமந்து நிற்கும் இளைஞர்கள் பல இலட்சம். வளர்ச்சி நோக்கிய திட்டங்கள், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கும் தொழில் திட்டங்கள் குறித்து தமிழக ஆட்சி யாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. தமிழ்நாட்டில் நடக்கும் ‘கொத்தடிமை ஆட்சியை’, மத்திய பா.ஜ.க. ஆட்சி மிரட்டி, தமிழகத்தில் தேர்தலை சந்திக்காமலேயே பினாமி ஆட்சியை நடத்தி வருகிறது. மத்திய அரசில் பிரதமர் அலுவலகத்திலிருந்தும் ஏனைய துறைகளிலிருந்தும் பா.ஜ.க.வின் நம்பிக்கைப் பெற்ற உயர் அதிகாரிகள் தமிழகத்தின் மிக முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அண்மையில் மத்திய அரசின் ‘ஆயுஷ்’ அமைச்சக அதிகாரியாக பணியாற்றிய ஓடெம்டே என்பவர், தமிழக அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு,...

இந்தி எதிர்ப்பு இயக்க பரப்புரை துண்டறிக்கை

திராவிடர் விடுதலைக் கழகத்தலைமை அறிவித்துள்ள ’இந்தி எதிர்ப்பு இயக்க பரப்புரைக்கான துண்டறிக்கை அச்சிட கழகத்தோழர்கள் கீழ் காணும் மாதிரியை பயன்படுத்திக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம் : இந்தித் திணிப்பை எதிர்ப்போம்! இழந்து வரும் உரிமைகளை மீட்போம்! இந்தியாவின் எத்தனையோ மாநிலங்களில் நமது தமிழ்நாட்டுக்குத் தனித்த சிறப்புகள் பல உண்டு. நம்மை வழிநடத்திய தலைவர்கள் நமக்காக போராடிப் பெற்றுத் தந்த உரிமைகள்தான் அதற்குக் காரணம்.ஒரு காலத்தில் நமது நாட்டுக்குப் பெயர் ‘சென்னை மாகாணம்’ என்பதுதான். அண்ணா முதலமைச்சராக வந்த பிறகு நாம் நமது நாட்டை ‘தமிழ்நாடு’ என்று அறிவித்துக் கொண்டோம். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனாலும் நமது தமிழ்நாட்டின் எல்லைக்குள் இந்திக்கு இடமில்லை என்று அறிவித்து, தமிழும் ஆங்கிலமும் எமக்குப் போதும் என்ற இரு மொழிக் கொள்கையை உருவாக்கிக் கொண்டோம். பார்ப்பனிய ஜாதி அமைப்பு, ஒருவனை மேல் ஜாதி; ஒருவனைக் கீழ் ஜாதி என்று பாகுபடுத்தியது. படிக்கவும்,...