Category: பெரியார் முழக்கம் 2015

பாலமலை ‘பெரியாரியல் பயிலரங்க’ மாட்சி

பாலமலை ‘பெரியாரியல் பயிலரங்க’ மாட்சி

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பாலமலையில் மே 17, 18 தேதிகளில் நடந்த பயிலரங்கம் மிகச் சிறப்பாகவும் கருத்துச் செறிவாகவும் நடந்தது. மேட்டூரில் மலை அடிவாரத்தில் இருக்கும் காவலாண்டியூர் கழகத் தோழர்கள் மிகச் சிறப்பாக இந்த பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தனர். காவலாண்டியூரிலிருந்து பாலமலை என்ற பழங்குடி மக்கள் வாழும் மலை கிராமத்துக்குச் செல்ல மலைப் பாதைகள் வழியே பயணிக்க வேண்டும். இயற்கை வளம் சூழ்ந்த அந்த அமைதியான கிராமத்தில் கிறிஸ்துவ நிறுவனம் பயிற்சிக்கான இடத்தை அளித்தது. கிராம எல்லையில் ஊர் மக்கள் கழகத் தலைவர் பொதுச் செயலாளருக்கு ஆடைகள் போர்த்தி வரவேற்றனர். பயிற்சியரங்கம் வந்து பஞ்சாயத்து தலைவர் மற்றும் பழங்குடி மக்களின் தலைவர்கள் கழகத் தலைவர் பொதுச் செயலாளருக்கு ஆடைகள் போர்த்தி சிறப்பித்தனர். பயிலரங்கத்தின் முதல் நிகழ்வாக மருத்துவர் எழிலன் காணொலி காட்சிகளைப் பயன்படுத்தி “அறிவியல் சமுதாய உருவாக்கத்தை நோக்கி” என்ற தலைப்பில் 3 மணி நேரம் வகுப்பு...

கழக நாள்காட்டி தயார்!

2016ஆம் ஆண்டுக்கான கழக நாள்காட்டிகள் அழகிய வடிவில் தயாராகி விட்டன. காலண்டர் ஒன்றின் விலை: ரூ.60 தொடர்புக்கு: இராம. இளங்கோ, (வெளியீட்டு செயலாளர்) 9894962333 தபசி. குமரன்,  (தலைமை நிலைய செயலாளர்) 9941759641 பெரியார் முழக்கம் 31122015 இதழ்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (6) மொழி வழி மாநிலப் பிரிவினையை எதிர்த்தவர் ஆச்சாரியார்! வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (6) மொழி வழி மாநிலப் பிரிவினையை எதிர்த்தவர் ஆச்சாரியார்! வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (சென்ற இதழ் தொடர்ச்சி) 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சென்னை மாகாணத்தில் 375 சட்டமன்ற உறுப்பினர்கள் இரு ந்தார்கள். அதில் காங்கிரஸ்கட்சியினர் 152 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். பெரியார் அந்தத் தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சியையும் காங்கிரஸ் அல்லாத வேட்பாளர்களையும் ஆதரித்தார். தி.மு.க திராவிட நாட்டுக்கு ஆதரவாக உறுதி கொடுத்த கட்சியை யும், வேட்பாளர்களையும் ஆதரித்தது. ஆந்திர காங்கிரஸ்தலைவர் டி.பிரகாசம் 1950 இல் காங்கிரசை விட்டு வெளியேறி 1951 இல் ஐதராபாத் பிராஜா பார்டி, என்பதைத் தொடங்கினார். என்.ஜி.ரங்கா அதன் செயலாளராக இருந்தார். 1952 இல் கிருபாளனி தலைமையிலான கிஸான் மஸ்தூர் பிரஜா பார்ட்டி (K.M.P.P) விவசாயிகள் தொழி லாளர்கள் மக்கள் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். 1952 தேர்தலுக்கு...

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் (3) பார்ப்பன சூழ்ச்சியில் வீழ்ந்த சிவாஜி

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் (3) பார்ப்பன சூழ்ச்சியில் வீழ்ந்த சிவாஜி

பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு: (சென்ற இதழ் தொடர்ச்சி) கிருஷ்ண தேவராயர் (கி.பி. 1509 – 1530) 1) தென்னகம் முழுவதையும், தனது ஆட்சிக்கு உட் படுத்திய மன்னர். பார்ப்பன தாசர். வர்ணா°ரமப் பற்றாளர். பார்ப்பனர்களுக்கே முக்கிய பதவிகளைத் தந்தார். பெரும்பாலான பார்ப்பனர்கள் சுகவாசி களாக, உண்டு உறங்கிக் கிடந்தனர். “வேத மார்க்க பிரதிஷ்டாபன சாரியா” என்று பட்டம் சூட்டிக் கொண்டனர். 2) நீண்ட காலத்துக்குப் பிறகு, அவருக்கு குழந்தைப் பிறந்தது. திருமலைராயன் என்று பெயரிட்டு, 6 ஆம் வயதிலேயே முடிசூட்டி வைத்தார். முடிசூட்டிய ஒரு மாதத்திலேயே திம்மாதண்ட நாயகன் எனும் பார்ப்பான், குழந்தைக்கு நஞ்சு ஊட்டிக் கொன்றான். இவன் சாளுவ திம்மன் எனும் பார்ப்பன முதலமைச்சரின் மகன். 3) 3 பார்ப்பனர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். திம்மா தண்டநாயகன் சிறையிலிருந்து தப்பி, தனது பார்ப்பன உறவினரான அதிகாரிகளிடம் தஞ்ச மடைந்து, சதி செய்து நாட்டில் கலகத்தை உருவாக்கினான். 4) படையினால்...

2000 பார்ப்பனர்கள் வேதம் ஓத 20 கோடி செலவில் யாகமாம்! யாக சாலை தீ பிடிக்க தலைதெறிக்க ஓட்டம்!

2000 பார்ப்பனர்கள் வேதம் ஓத 20 கோடி செலவில் யாகமாம்! யாக சாலை தீ பிடிக்க தலைதெறிக்க ஓட்டம்!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பார்ப்பன கொத்தடிமையாகவே தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். முதல்வரானவுடன் வாஸ்து பண்டிதர் ஒருவரை முதல்வரின் ஆலோசகராகவே நியமித்துக் கொண்டார். முதல்வர் அலுவலகத்தை பல கோடி அரசுப் பணத்தைப் பாழடித்து வாஸ்து அடிப்படையில் மாற்றினார். இப்போது தனது சொந்த கிராமமான ஏரவெல்லி கிராமத்தில் 5 நாள் யாகம் நடத்தியிருக்கிறார். பல்வேறு மாநிலங்களிலிருந்து 2000 பார்ப்பனர்கள் ஒன்றுகூடி, இந்த யாகத்தை நடத்தியுள்ளனர். உலக நன்மைக்காகவும் எதிரிகளை வீழ்த்தவும் நடத்தப்படும் இந்த யாகத்தின் பெயர் ‘ஆயுத சண்டி மகாயாகம்’. இதற்கு தனது சொந்தப் பணத்தையே செலவிடுவதாக முதல்வர் கூறுகிறார். யாகத்துக்கான செலவு ரூ.20 கோடி என்று ‘தினமலர்’ பார்ப்பன நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. ‘அக்னி குண்டத்தில்’ ஒவ்வொரு நாளும் பட்டுப் புடவைகள், அய்ம்பொன் ஆபரணங்கள், உணவு தானியங்கள் கொட்டப்பட்டு வருகின்றன. ஆந்திர ஆளுநர் மற்றும் சரத்பவார், சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் எல்லாம் ‘யாக சாலை’க்கு வந்து பார்ப்பனர்களிடம் ‘ஆசி’ பெற்றார்களாம்....

மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 12 சதவீதத்தைக்கூட எட்டவில்லை

மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 12 சதவீதத்தைக்கூட எட்டவில்லை

இடஒதுக்கீடு, இன்னும் எத்தனை ஆண்டு காலத்துக்குத்தான் நீடிப்பது என்று பார்ப்பனர்கள் பேசி வருகிறார்கள். ஆனால், மண்டல் பரிந்துரை அமுலாகி 20 ஆண்டுகள் ஓடிய பிறகும், மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 12 சதவீதத்தைக் கூட எட்ட முடியவில்லை. 27 சதவீத இட ஒதுக்கீட்டை எட்டுவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டுமோ என்ற கேள்விதான் எழுந்து நிற்கிறது. சென்னை அய்.அய்.டி.யில் படித்து வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பல பட்டங்கள் வாங்கிக் குவித்து வைத்திருப்பவர் முரளிதரன் என்ற விஞ்ஞானி, அய்.அய்.டி. பார்ப்பன மேலாதிக்கத்தை கேள்வி கேட்டவர். அதன் காரணமாக சென்னை அய்.அய்.டி.யில் அவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை நிர்வாகம் மறுத்துவிட்டது. அய்.அய்.டி. வளாகத்துக்குள்ளேயே இந்த விஞ்ஞானி நுழையக் கூடாது என்று அய்.அய்.டி. இயக்குனராக இருந்த பார்ப்பன வெறியர் நடராஜன், நீதிமன்றத்தின் வழியாக தடையாணை வாங்கியிருந்தார். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த விஞ்ஞானி, அவ்வப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாக பிற்படுத்தப்பட்டோருக்கான...

ஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கங்கள்… பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள் 2015இல் கழகம் கடந்து வந்த பாதை

ஜாதிய ஒடுக்குமுறைகள், தீண்டாமை வன்கொடுமைகளுக்கு, எதிராக களம் கண்ட திராவிடர் விடுதலைக் கழகம், இவற்றிற்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் ஜாதியை எதிர்த்து, 2015ஆம் ஆண்டு முழுதும் கிராமம் கிராமமாக பரப்புரை இயக்கங்களை நடத்தி முடித்திருக்கிறது. ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்ற முழக்கத்துடன் பரப்புரை இயக்கங்களைத் தொடர்ந்து ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்’ என்ற முழக்கத்தை முன் வைத்து அடுத்தகட்ட பரப்புரை நடத்தியது. பல்லாயிரம் துண்டறிக்கைகள் மக்களிடம் வழங்கப்பட்டன. பார்ப்பன மதவாத சக்திகளுக்கு எதிரான மாநாடுகள்; மதவெறிக்கு எதிரான போராட்டங்கள் என்று திராவிடர் விடுதலைக் கழகம் 2015இல் நிகழ்த்திய களப்பணிகளின் தொகுப்பு. ஜனவரி: ஜன.12இல் சென்னையில் தமிழ்ப் புத்தாண்டு விழாவை கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கழகம் முன்னின்று நடத்தியது. காந்தியை கொலை செய்த கோட்சே பார்ப்பனருக்கு சங்பரிவாரங்கள் சிலை வைத்து பெருமை சேர்க்கக் கிளம்பின. இதை எதிர்த்து கோட்சே சிலை எதிர்ப்பு மாநாட்டை கழகம் ஈரோட்டில் நடத்தியது...

ஊழல் அதிகாரியைக் கைது செய்: புதுவை கழகம் முற்றுகைப் போராட்டம்

ஊழல் அதிகாரியைக் கைது செய்: புதுவை கழகம் முற்றுகைப் போராட்டம்

புதுச்சேரி அரசில் அரசுச் செய லாளராகப் பணியாற்றும் ராக்கேஷ் சந்திரா என்னும் அதிகாரி ஏராளமான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் ஆவார். மருத்துவக் கல்லூரி இடங்களில் 50 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டு அளித்தாக வேண்டும் என்ற விதியை 50 இடங்கள் அளித்தாக வேண்டும் என்று திரித்துக் கூறி இடஒதுக்கீட்டின் பயன் மாணவர்களுக்கு கிடைக்காமல் செய்தவர். ஆசிரியப் பணித் தேர்வில் தகுதி அடிப்படையில் தேர்வு பெற்றோரையும் ஒதுக்கீட்டுக் கணக்கில் வைத்து ஏராளமான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களின் வேலை வாய்ப்பைப் பறித்தவர். மேலும் சம்பள விகிதம் அதிகமாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை கெசட்டட் பதவி எனக் கூறி இடஒதுக்கீட்டில் வராது என்று நியமனங்களில் ஊழல் செய்தவர். புதுவைக் காகித ஆலைக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை, அவ்வாலை இயங்காததால் அரசுக்குத் திருப்பி அளிக்க வேண்டும் என்ற ஒப்பந்த விதிகளுக்கு முரணாக, அரசின் அனுமதியின்றியே தனியாருக்கு விற்றதால் 7.5 கோடி ஊழல் என்று 2014 ஜூலை...

இரண்டு மாதம் மூடப்பட்ட கூடங்குளம் அணுஉலைக்கு 5 இலட்சம் லிட்டர் டீசல் வாங்கியது ஏன்?

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் சுப. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை. கூடங்குளத்தில் இன்னும் கூடுதல் அணுஉலைகள் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்திருக்கிற நிலையில், கூடங்குளம் அணுத்திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்பது, தடுப்பது என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் முடிவு செய்திருக்கிறது. இந்தப் பிரச்சினை தொடர்பான எங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும், அடுத்தக் கட்டத் திட்டங்களையும் இங்கே பதிவு செய்கிறோம். தரமற்ற உபகரணங்களாலும், உதிரிப் பாகங்களாலும் கட்டப்பட்டிருக்கும், மோசடிகள் நிறைந்த கூடங்குளம் அணுஉலை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடிப் போடப்பட்டிருந்தது. அந்தக் காலக்கட்டத்திலும் கூடங்குளம் அணுஉலை நிர்வாகத்தினர் ஐந்து இலட்சம் லிட்டர் டீசல் வாங்கியிருக்கிற தகவல் இப்போது வெளிவந்திருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக கூடங்குளத்தில் திடீரென மின்சார உற்பத்தி துவங்கியது இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பாது காப்பதற்கும், அவரது வருகையை நியாயப்படுத்துவதற்கும் தான். கூடங்குளம் அணுஉலை உண்மையிலேயே அற்புதமாக இயங்குகிறது என்றால், விளாடிமிர் புடினும்,...

தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல்

தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல்

29-11-2015 அன்று தூத்துக்குடி மாவட்ட கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் சோமா விடுதியில் மாவட்ட தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையில் நடைபெற்றது. இயக்க வளர்ச்சியைப் பற்றியும், அடுத்த கட்ட செயல் திட்டங்கள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. தோழர்கள் தங்களது கருத்துகளை கூறினர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 1. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தமிழ் நாடெங்கும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் “பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை” 2016 ஜனவரி மாதத்தில் தூத்துக்குடியில் சிறப்பாக நடத்து வது. 2. தூத்துக்குடி மாவட்ட கழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக மாவட்ட தோழர்கள் அனைவரும் மாதம் ரூ.50ஐ சந்தாவாக கொடுப்பது. 3. புரட்சிப் பெரியார் முழக்க சந்தா வினை இந்த ஆண்டு (2016) அதிக அளவு உறுப்பினர்களை சேர்ப்பது.. 4. 2016ம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் உறுப்பினர் சந்தாவினை விரைவாக கொடுப்பது. என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இந்த கலந்துரை யாடலில் மாவட்ட செயலாளர் ச.ரவிசங்கர், மாவட்ட அமைப்பாளர்...

ஒவ்வொருவரையும் உலுக்க வேண்டும்

ஒவ்வொருவரையும் உலுக்க வேண்டும்

மனிதக் கழிவுகளும் செத்த உயிரினங்களும் நிறைந்த குப்பைகளை அள்ளும் பணியை துப்புரவுப் பணியாளர்கள் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கும் பொது சமூகத்துக்கு மனிதக் கழிவை மனிதர்களே அகற்றுவது சட்டப்படி குற்றம் எனத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லைதான். ஆனால், தமிழ்நாடு அரசுக்குத் தெரியும் தானே! 2013ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மனிதக் கழிவை மனிதர்களே அகற்றுவதைத் தடைசெய்யும் சட்டத்தின்படி, மனிதக் கழிவோடு நேரடித் தொடர்புள்ள எந்த வேலையிலும் மனிதர்களை ஈடுபடுத்துவது குற்றம்தான். ‘இந்தக் குப்பைகள் மனிதக் கழிவு அல்ல’ என அரசு வாதிடலாம். ஆனால், சாக்கடைகள், மலக்குழிகள், கழிவறைகள் எல்லாம் வெள்ள நீரில் கலந்து குப்பைகளில் தேங்கிவிட்ட நிலையில், எல்லாமே மனிதக் கழிவாகத்தான் மாறுகிறது. துப்புரவுப் பணி யாளர்கள் பலரும், மனிதக் கழிவையும் செத்த உயிரினங்களையும் கைகளால் அப்புறப் படுத்தியதாக உறுதியளிக்கிறார்கள் எனும்போது இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதற்காக தமிழ்நாடு அரசு தண்டிக்கப்படுமா? சரி, இப்படி ஒரு பேரிடர் நிகழ்ந்துவிட்டது. யார் இதைச் சுத்தம் செய்வார்கள்?...

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் (2)

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் (2)

பவுத்தத் துறவிகளின் மாநாட்டுப் பந்தலுக்கு தீயிட்ட பார்ப்பனர்கள் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு: (10.12.2015 இதழ் தொடர்ச்சி) 8) அபிமன்யூ என்ற காஷ்மீரை ஆண்ட பார்ப்பன மன்னன் பவுத்தர்களை இனப் படுகொலை செய்துவிட்டு கடும் பனிப் பொழிவினால் இறந்தார்கள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தான். (ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் படுகொலை செய்ததுபோல) இந்தப் படுகொலைகளை குளிர்காலங்களில் நடத்தினான். அந்த 6 மாதங்களிலும் தனது நாட்டை விட்டு வெளியேறி, ஒரு பள்ளத்தாக்குப் பகுதிக்குப் போய்விடுவான். திட்டமிட்டபடி பவுத்தர்கள் படுகொலைகள் நடக்கும். கேட்டால் பனியில் உறைந்து இறந்தார்கள் என்று பொய் சொல்வான். பனிப் பொழிவில் பார்ப்பனர்கள் ஏன் இறப்பதில்லை என்று கேட்டதற்கு, “அவர்களிடம் உள்ள ஆன்மீக சக்தியால் மரணத்தைத் தடுக்கிறார்கள்; அந்த ஆன்மீக சக்தியைப் பயன்படுத்தி, கடவுளுக்கு யாகங்களையும், படையல்களையும் செய் கிறார்கள்” என்று பதில் கூறினான். (ஆதாரம்: கல்கணன்) 9) பவுத்த மதத்தினர் ஒரு பெண்ணைக் கடத்தியதாகக் கூறி ஆயிரக்கணக்கான...

வினா… விடை…!

வினா… விடை…!

நகைகளாக பக்தர்கள் தந்த காணிக்கையை அரசின் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய தங்கக் கட்டியாக உருக்கினால் அது சாமி குத்தமாயிடும். – கோயில் நிர்வாகிகள் அச்சம் ரொம்ப சரி; அதேபோல உண்டியல்ல விழுற கள்ளநோட்டுகளையும் அப்படியே ஏத்துக்கணும்போல. இல்லாட்டி சாமி குத்தமாயிடும். பசுக்களை கொல்ல தடைவிதிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லை. – டெல்லி உயர்நீதிமன்றம் அப்படி ஒரு அதிகாரம் நீதிமன்றத்துக்கு இருக்க வேண்டும் என்றால், பசு மாட்டுக்காக தனி ஆகமங்கள் இருக்க வேண்டும். திருவரங்கம் – ரெங்கநாதர் கோவிலில் ‘சொர்க்க வாசல்’ திறப்புக்குமுன் கதவு வாசலில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். – செய்தி எல்லாம் ஒரு பாதுகாப்புதான். எவராவது உண்மையிலேயே ‘சொர்க்கம்’ போயிட்டா, மீட்கணும்ல! மோடி இரஷ்ய பயணத்தின்போது, கூடங்குளத்தில் 5,6ஆவது அணுஉலைகளை அமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும். – செய்தி அப்படியே கையோடு கையா முதலாவது அணுஉலை இயங்கு வதற்கும் ஒரு ஒப்பந்தம் போடுங்க… மறந்துடாதீங்க… காவல்துறை மீது உள்ளூர் மக்களுக்கு நம்பிக்கை...

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. (5) இராஜாஜி குறித்து ம.பொ.சி. கூறிய பொய்! வாலாசா வல்லவன்

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. (5) இராஜாஜி குறித்து ம.பொ.சி. கூறிய பொய்! வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (சென்ற இதழ் தொடர்ச்சி) ம.பொ.சி. அப்போது சட்ட மேலவையில் உறுப் பினராக இருந்தார். அப்போது அவர் பேசியதாவது – “மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, நம்முடைய முதல் அமைச்சர் அவர்கள் இந்தக் கவுன்சிலின் முன்பு வைத்துள்ள ஆந்திர ராஜ்ய அமைப்பு மசோதாவை நான் மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்… இந்த எல்லைப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் ஒரு நியாயம் நடந்திருக்கவேண்டும். சித்தூர் ஜில்லா தகராறுள்ள பிரதேசமாக இருப்பதால் அதை எஞ்சிய சென்னை ராஜ்யத்தோடு சேர்ந்திருக்க வேண்டும். சித்தூர் ஜில்லா தகராறுள்ள ஜில்லா என்று முத்திரைப்போட்டு எஞ்சிய சென்னை ராஜ்ஜியத்தில் தான் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும். அப்படியில்லாமல் மொழியின் அடிப்படையிலே அமைக்கப்படுகிற ஆந்திர ராஜ்ஜியத்தில் தகராறுள்ள இந்தச் சித்தூர் ஜில்லாவை சேர்த்திருக்கக்கூடாது. எஞ்சிய சென்னை ராஜ்ஜியத் தில் சேர்க்காமல்,...

ஆகமத்துக்குள் பதுங்கும் பார்ப்பனர்களே! இதற்கு என்ன பதில்?

ஆகமத்துக்குள் பதுங்கும் பார்ப்பனர்களே! இதற்கு என்ன பதில்?

இந்து சமூகத்தில் அனைத்துப் பிரிவினருக்கும் அர்ச்சகராகும் உரிமை மீண்டும் மறுக்கப்பட்டுள்ளது. ஆகமங்களைப் பின்பற்றும் கோயில்களின் நடைமுறைகள் அப்படியே தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆகமங்களுக்கு சட்டப்பூர்வ ஏற்பை வழங்கியிருக்கிறது. “பிராமணர்களில்”கூட எல்லோரும் கருவறைக்குள் சென்று பூஜை செய்து விட முடியாது. அதற்குரிய ஆகம தகுதி பெற்றவர்கள்தான் பூஜை செய்ய முடியும் என்று பார்ப்பனர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், அதற்குரிய ஆகமத் தகுதி பெற்ற பார்ப்பன ரல்லாத ‘சூத்திரர்’களுக்கு முற்றிலும் உரிமை கிடையாது. பார்ப்பனர்கள் இப்போது கோயில்களில் வழிபாடுகளில் ‘ஆகம’ விதிகளை அப்படியேதான் பின்பற்றி வருகிறார்களா? அவை மீறப்படாமல் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க ஏதேனும் அமைப்பு இருக்கிறதா? அல்லது இப்போது ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் வேலை பார்க்கும் அய்யர், அய்யங்கார், சாஸ்திரிகள் ஆகமங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதற்கு ஏதேனும் தேர்வுகளோ – அதில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றுகளோ இருக்கிறதா? எதுவும் இல்லை. அவர்கள் பின்பற்றுவதுதான் ஆகமம். அவர்கள் நடத்துவது எல்லாமே முறையான...

சேலம் மாநாட்டின் எழுச்சி!

சேலம் மாநாட்டின் எழுச்சி!

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை” தமிழகமெங்கும் நடத்த திட்டமிடப்பட்டு முதல் மாநாடு ஈரோடு, அடுத்ததாக சென்னையில் நடைபெற்றதைத் தொடர்ந்து சேலத்தில் நடத்த அறிவிக்கப்பட்டு கழகத் தோழர்களால் மாநாட்டு பணிகள் துவங்கப்பட்டன. ”மக்களைப் பிரிக்கும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் 19.12.2015 சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில் துவங்கியது. மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவுப் பாடல்களுடன் மாநாடு ஆரம்ப மானது. குமரப்பா தபேலா வாசிக்க, சீனி தவிலும், காளியப்பன் உறுமியும் வாசித்தனர். கோவிந்தராசு, முத்துகுமார், இசைமதி, அருள்மொழி ஆகியோர் சாதி ஒழிப்பு, பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினர். மாநாட்டின் முதல் அமர்வாக கருத்தரங்கம் நடைபெற்றது.”தொடரும் பார்ப்பன வல்லாதிக்கம்” எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கை தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் நெறிப்படுத்தினார்....

தடை தகர்ந்தது!

தடை தகர்ந்தது!

• வழக்கம்போல் சேலம் காவல்துறை மாநாட்டுக்கு கடைசி நேரத்தில் பிப்.17ஆம் தேதி அனுமதி மறுத்தது. உடனே உயர்நீதிமன்றத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. டேவிட் சார்பில் மாநாட்டுக்கு அனுமதி கேட்டு வழக்கு மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் திருமூர்த்தி, மனுவை தாக்கல் செய்து வாதாடினார். மாநாட்டுக்கு அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றம், இரவு 8 மணிக்குள் மாநாட்டை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. சரியாக 8 மணிக்கு மாநாடு நிறைவடைந்தது. • மாநாட்டு அரங்கில் பெரியார்-அம்பேத்கர் கருத்துகளை தலைவர்களின் படங் களோடு பதாகைகளாக வைக்கப்பட் டிருந்தன. • சமூகம்-அரசியல்-பொருளாதாரத்தில் பார்ப்பன மேலாதிக்கத்தை விளக்கும் பதாகைகள் கண்காட்சியாக வைக்கப்பட் டிருந்தது. • மாநாட்டு அரங்கிற்கு வெளியே பகுதி முழுதும் ஏராளமான கழகக் கொடிகளை தோழர்கள் கட்டியிருந்தனர். • காலை கருத்தரங்கில் நேரு அரங்கம் இளைஞர்களால் நிரம்பி வழிந்தது. “நாங்கள் ஜாதியற்றவர்கள்; ஜாதியை ஒழிக்கக் கூடியவர்கள்” என்ற ‘பாட்ஜை’ சட்டைகளில் குத்தியிருந்தனர். • திறந்தவெளி...

வெள்ளத்தில் மூழ்கியது, மதவெறியும்தான்!

வெள்ளத்தில் மூழ்கியது, மதவெறியும்தான்!

மனிதர்களின் வாழ்வை சூறையாடி விட்டது வெள்ளம்; இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு; இயற்கையின் இந்த சீற்றம், பல்வேறு உண்மைகளை உணர்த்தி விட்டுச் சென்றிருக்கிறது. இயற்கையின் உலகிலிருந்து பல்வேறு பரிணாமங்கள் பெற்று படிப்படியான உருமாற்றங்களுக்குப் பிறகு உருவாகி யவன் மனிதன். ஆனால் இந்த இயற்கை யின் நியதி மதம், ஜாதி, ஏழை, பணக்காரன் என்ற பேதங்களை உருவாக்கவில்லை. மக்களைப் பிளவுபடுத்தும் இந்த அடை யாளங்களை உருவாக்கியது மனிதன் தான். இயற்கையின் சீற்றம் அனைத்து மத, ஜாதியினரையும் பாதிக்கச் செய்துவிட்டது. எனவே தான் கூறுகிறோம், இயற்கையின் நியதியில் மதம், ஜாதி, கடவுளுக்கு கிஞ்சித்தும் இடம் கிடையாது. நான் யார்? நான் எப்படி வந்தேன்? என்ற கேள்விகளுக்கு விடை தேடத் தொடங்கிய மனிதன், தனக்கு மேலாக ஒரு உலகம், ஒரு சக்தி இருப்பதாகவும், அந்த உலகத்தை அடைவதற்காகவே இந்த பூமியில் நாம் வாழ வேண்டும் என்றும் நம்பினான். இயற்கையின் புதிர்களுக்கு அவனுக்கு விடை கிடைக்கவில்லை. கால...

நன்கொடை

நன்கொடை

சாதி மறுப்பு, தன் விருப்ப (காதல்)த் திருமண இணையர் அ.இரா. தமிழமுதன்-வெ.ரெ. இறையரசி ஆகியோருக்குப் பிறந்த (6.12.2015) ஆண் குழந்தைக்கு ‘இசை’ எனப் பெயரிட்டதன் மகிழ்வாக ரூ.1000/- ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு வழங்கியுள்ளார். அ.இரா. தமிழமுதன், ‘நாளை விடியும்’ இதழ் ஆசிரியர் பி.இரெ. அரசெழிலன்-அனுராதா இணையரின் மகன் ஆவார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 17122015 இதழ்

தொலைக்காட்சியில் சோதிடத்துக்கு தடை: கருநாடக முதல்வர் வலியுறுத்துகிறார்

தொலைக்காட்சியில் சோதிடத்துக்கு தடை: கருநாடக முதல்வர் வலியுறுத்துகிறார்

office 2010 key windows 7 key sale windows 10 home-key windows 10 education windows 10 pro key office 2016 key windows 10 key office 2013 key windows 7 key  Buy Windows 7  |  Sale Windows 7 Ultimate Keys   |  Windows 10 Home Key Sale  |  windows 8.1 key sale  |  Windows 10 Product Key Sale  |  Microsoft Office 2016 Serial Keys  |  Windows 7 Professional Download ISO  |  MS Office 2016 Key For Activation Latest Full Free Download  |  How to download and install the Microsoft Office 2016   |  Windows 10 Product Key [UPDATED]  |  Windows 7 Ultimate ISO download  |  Legit Windows 7 Product Key Online Store, PayPal...

இந்து முன்னணி சலசலப்புகளை முறியடித்து நம்பியூரில் நடந்த பரப்புரைப் பயண நிறைவு விழா

இந்து முன்னணி சலசலப்புகளை முறியடித்து நம்பியூரில் நடந்த பரப்புரைப் பயண நிறைவு விழா

office 2010 key windows 7 key sale windows 10 home-key windows 10 education windows 10 pro key office 2016 key windows 10 key office 2013 key windows 7 key  Buy Windows 7  |  Sale Windows 7 Ultimate Keys   |  Windows 10 Home Key Sale  |  windows 8.1 key sale  |  Windows 10 Product Key Sale  |  Microsoft Office 2016 Serial Keys  |  Windows 7 Professional Download ISO  |  MS Office 2016 Key For Activation Latest Full Free Download  |  How to download and install the Microsoft Office 2016   |  Windows 10 Product Key [UPDATED]  |  Windows 7 Ultimate ISO download  |  Legit Windows 7 Product Key Online Store, PayPal...

பெண்களை இழிவுபடுத்தும் ‘அய்யப்பன் பக்தி’

office 2010 key windows 7 key sale windows 10 home-key windows 10 education windows 10 pro key office 2016 key windows 10 key office 2013 key windows 7 key  Buy Windows 7  |  Sale Windows 7 Ultimate Keys   |  Windows 10 Home Key Sale  |  windows 8.1 key sale  |  Windows 10 Product Key Sale  |  Microsoft Office 2016 Serial Keys  |  Windows 7 Professional Download ISO  |  MS Office 2016 Key For Activation Latest Full Free Download  |  How to download and install the Microsoft Office 2016   |  Windows 10 Product Key [UPDATED]  |  Windows 7 Ultimate ISO download  |  Legit Windows 7 Product Key Online Store, PayPal...

இதுதான் பத்திரிகை நீதியா?

இதுதான் பத்திரிகை நீதியா?

‘தினத்தந்தி’ நாளேடு ‘சேரி’ இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக நியாயப்படுத்துகிறதா? ஒரு காலத்தில் இதே தீண்டாமைக்கு உள்ளாக் கப்பட்டிருந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் நடத்தும் நாளேடு, இப்படி ஒரு செய்தியை வெளியிட லாமா? வன்மையாகக் கண்டிக்கிறோம். பெரியார் முழக்கம் 17122015 இதழ்

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (4) வாலாசா வல்லவன்

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (4) வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (சென்ற இதழ் தொடர்ச்சி.) ஆந்திர மாநில மசோதா விவாதத்தின் போது 15-7-1953 இல் சட்டசபையில் பேசிய விநாயகம் சித்தூர் பகுதியின் வரலாற்றை எடுத்துக் கூறிவிட்டு, “I cannot understand why the Government or the Members interested in the Andhara Bill should take objection. It  narrates  the history of the chittor district. After all it is a history of how the Tamillians were slowly  made to appear as Telugus in my parts.” “என்னுடைய பகுதியின் பிரச்சனையை அரசாங்கமோ, உறுப்பினர்களோ புரிந்து கொள்ள மறுப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. என்னுடைய பகுதியில் தமிழர்கள்...

வினா… விடை…!

வினா… விடை…!

வெள்ளப் பாதிப்புக்குள்ளான இந்துக் கோயிலை இ°லாமியர்கள் துடைப்பத்தால் கூட்டி சுத்தப்படுத்தினார்கள். – செய்தி அதெப்படி சுத்தமாகும்? ‘தர்ப்பை’யுடன் வேத மந்திரம் ஓதி தீட்டுக் கழித்தால்தான் உண்மையான சுத்தம் வரும்! பம்பாயில் அகமதா நகரில் பிளாட்பாரத்தி லிருந்த ஷானி சிலையை ஒரு இளம் பெண் தடையை மீறி வழி பட்டதால் கோயிலில் பூஜை நடத்தி தூய்மைச் சடங்குகள் நடந்தன. – ‘இந்து செய்தி இந்துப் பெண்களை புண்படுத்துறாங்கப்பா… இந்து முன்னணிக்காரங்களே, ஓடி வாங்க…. சீரிரங்கம், நாமக்கல், திருப்பூரில் தீமைகள் நடப்பதற்கு காரணமாக இருந்ததாகக் கூறி இந்துக் கோயில்களை இடித்துத் தள்ள உத்தரவிட்ட தொல்பொருள் துறை ஆய்வாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ். – செய்தி இந்த ஆய்வாளருக்கு ‘பாரத ரத்னா’ விருதே தரலாம்! மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி படுகொலை செய்யப்பட்ட முதியவர் முகம்மது அதிலாக் வாழ்ந்த பிஷாகா கிராமத்தில், கிராமம் தீட்டாகிவிட்டதை சுத்தப்படுத்த மாட்டு மூத்திரத்தைக் கொண்டு வீடுகளைக் கழுவினர். – ‘இந்து’ செய்தி மாட்டு சாணத்தையும்...

ஆகமம்

ஆகமம்

‘ஆகமம்’ என்பதன் பொருள் ‘ஒரு ஏற்பாடு’ என்பதுதானே ஒழிய அதற்கு வேறு பொருளொன்றும் இல்லை. ஏற்பாடு என்பவையெல்லாம் காலத்திற்கு, நிலைமைக்கு ஏற்றவைகளே ஒழிய முக்காலத்திற்கும் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றவையல்ல. மற்றும் எந்த ஏற்பாடும் மனிதனால் செய்யப்படுபவை. ஆகமம் என்னும் சொல்லைப் போலவே ‘அய்தீகம்’ என்னும் தன்மையும் உண்டு. அய்தீகம் என்பதற்குப் பொருள் ஆதார மில்லாமல் தொன்று தொட்டு நடந்துவரும், சொல்லி வரும் விஷயங்களுக்குச் சொல்லும் சொல்லாகும். – பெரியார் (‘விடுதலை’ 29.11.1969; தந்தை பெரியார் 92ஆவது பிறந்த நாள் மலர், 1970)

கர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

கர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

தமிழகக் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி. இரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த நவம்.16, 2015இல் வழங்கிய 54 பக்க தீர்ப்பு, குழப்பங்களையே உருவாக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். வழக்கின் பின்னணி குறித்து சுருக்கமாக இப்படிக் கூறலாம். தமிழ்நாட்டில் ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாவதற்கு பரம்பரை அடிப்படையில் (அப்பா-மகன்-பேரன் என்று அடுத்தடுத்த வாரிசுகளாக) உரிமை உண்டு என்று 1959ஆம் ஆண்டு இந்து அறநிலையத் துறை சட்டம் ஏற்பு வழங்கியது. கோயில் கர்ப்பகிரகத்தில் கடவுளிடம் நெருங்கும் உரிமை பார்ப்பனருக்கு மட்டுமே உண்டு என்று கூறுவதன் வழியாக ஏனைய பார்ப்பனரல்லாத மக்கள் ‘சூத்திரர்’ என்ற இழிவுக் குள்ளாக்கப்படுவதை பெரியார் சுட்டிக்காட்டி, போராட்டங்களைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து அன்றைய கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் ஜாதி வேறுபாடின்றி அனைவரும் அர்ச்சகர் ஆவதற்கும், பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழித்தும், ‘இந்து அற நிலையத்துறை’ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு தமிழக சட்டமன்றத்திலும்,...

கழகத்தின் இணையத்தள செயல்பாடுகள்

கழகத்தின் இணையத்தள செயல்பாடுகள்

இனி வரும் காலத்தில் கையடக்கமான தந்தி போன்ற சாதனம் அனைவரிடமும் இருக்கும்” என்று கூறிய சமூக விஞ்ஞானி பெரியாரின்எழுத்துக்களை அடுத்த தலைமுறையிடம் சேர்க்கும் பொருட்டு நமது கழகத்தின் நவீன செய்திதொடர்பு சாதனமாக, கழகத்தின் கொள்கை நிலைப்பாடுகளை, பிரச்சார நோக்கங்களை, போராட்ட முறைகளை, மாவட்ட வாரியான செய்திகளை கழக தோழர்களிடமும், அனைத்து மக்களிடம் சென்று சேர்க்கும் வலுவுள்ள இணையதளமாக (www.dvkperiyar.com) நமது இணையதளம் செயல்பட ஆரம்பித்துள்ளது. இயக்க தோழர்களுக்கு அதைப் பற்றிய ஓர் அறிமுகம் – இயக்கம் : முகப்பு பக்கத்தில் இயக்கம் என்ற Menuவின் கீழ் பெரியார் வாழ்க்கை வரலாறு ஆண்டுவாரியாக தொகுத்துள்ளோம். தலைமை அவ்வப்போது அறிவிக்கும் அறிக்கைகளின் பட்டியல் அடுத்து வரும். கழகத்தின் கொள்கை, பிரகடனம், உறுதிமொழி, மாநில மற்றும் பொறுப்பாளர்களின் பட்டியல், துணை இயக்கங்களின் அறிமுகம் மற்றும் அதனதன் பொறுப்பாளர்கள், கழகத்தில் இணைய விரும்பும் தோழர்களுக்கு படிவம் ஆகிய அனைத்தும் இதன் கீழ் வரும். மாவட்ட செய்திகள் :...

நெகிழ வைத்த நிதி !

திராவிடர் விடுதலைக் கழகம் மேட்டூர் காவலாண்டியூர் கிளை சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் நிதி சேகரிப்பின் போது 08.12.2015 அன்று செட்டியூரில் மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் தனது பங்களிப்பு நிதியாக ரூ.50-ஐ கொளத்தூர் தா.செ.பழனிச்சாமி யிடம் வழங்கியது, அனைவரையும் நெகிழ வைத்தது, அவர் அளித்த ரூ.50, விலை மதிப்பற்ற அவரது உணர்வின் வெளிப்பாடு. பெரியார் முழக்கம் 10122015 இதழ்

ஜாதி ஆணவ வெறிக் கொலைக்கு தமிழகத்தில் மற்றொரு பெண் பலி

ஜாதி ஆணவ வெறிக் கொலைக்கு தமிழகத்தில் மற்றொரு பெண் பலி

‘கவுரவக் கொலை’ என்ற பெயரில் ஜாதி வெறிக்கு குடும்பத்தினரே பெண்களை கொலை செய்யும் அளவுக்கு ஜாதியம் வெறி பிடித்து நிற்கிறது. இந்தக் கொலைகளையும் இந்தக் கொலைகளை தண்டனையாக அறிவிக்கும் ஜாதி பஞ்சாயத்துக்களையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலிமையடைந்து வருகிறது. தமிழ்நாடு அரசே கடுமையான ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு செவிமெடுக்கவில்லை. மோடி ஆட்சி இதற்கு ஒரு தனி சட்டம் இயற்ற முன் வந்து அதற்கான மசோதாவை மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டு அனுப்பியது. ஆந்திரா, கேரளா போன்ற தென் மாநிலங்கள் இந்த மசோதா குறித்து கருத்துகளைத் தெரிவித்து விட்டன. தமிழ்நாடு அரசோ எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அலட்சியம் காட்டுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 98 பேர் – இப்படி ‘கவுரவ’க் கொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இப்போது மீண்டும் இதேபோல் ஒரு கொலை நடந்திருக்கும் அதிர்ச்சியான செய்தி வெளி வந்திருக்கிறது. இராமநாதபுரம் வட்டம் புத்தேந்தல்...

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு:

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு:

நந்தன் : தில்லை நடராசன் கனவில் வந்ததாகக் கூறி, சிவபக்தனாகி, ஆண்டவனை தரிசிக்க வந்தவன் நந்தன். தீண்டப்படாத சமூகத்தைச் சார்ந்தவன். கொள்ளிடம் என்ற சிற்றூரிலிருந்து புறப்பட்டு தில்லைக்கு நடராசனை தரிக்க வந்தபோது தீட்சதப் பார்ப்பனர்கள் தீயில் குளித்து தீட்டைப் போக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். நந்தன் தீயில் குதித்தான். அப்போது தில்லை நடராசன் நேரில் தோன்றி, எதிரே இருந்த நந்தியை விலகச் சொல்லி, நந்தனுக்கு கர்ப்பக்கிரகத்துக்கு வெளியில் வைத்தே ‘தரிசனம்’ தந்ததாக ‘பெரிய புராணத்தில்’ சேக்கிழார் எழுதியுள்ளார். உண்மை என்னவென்றால், நந்தன் தீயில் எரிக்கப்பட்டான் என்பதே. சம்பூகன் : பார்ப்பனர்கள் மட்டுமே கடவுளை நேரடியாக தவம் செய்ய உரிமை பெற்றவர்கள். ராமன் ஆட்சியில் சம்பூகன் என்ற ‘சூத்திரன்’ கடவுளை நோக்கி நேரடியாக தவம் செய்தான். பார்ப்பனர்கள் – இதை அதர்மம் என்று கூறி, சூத்திரன் தவம் செய்ததால், அக்கிரகாரத்தில் பிறக்க வேண்டிய ஒரு குழந்தை, தாயின் கர்ப்பத்திலே இறந்துவிட்டதாக புகார்...

என்றென்றும் நினைவில் நிற்கும் மாநாடு

என்றென்றும் நினைவில் நிற்கும் மாநாடு

சென்னை மாவட்டக் கழக மாநாட்டுப் பணிகள் தொடங்கியது முதல் கடும் மழை கொட்டிக் கொண்டே இருந்தது. திருப்பூர், கோவை, விழுப்புரம், தூத்துக்குடி, நாகை, விருதுநகர், மாவட்டங்களிலிருந்து தோழர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மாநாட்டில் பங்கேற்கும் ஆர்வத்துடன் கடும் இடர்ப்பாடுகளை யும் கடந்து வந்திருந்தனர். கழகப் பொருளாளர் இரத்தினசாமி, முதல் நாளே மாநாட்டுப் பணிகளில் பங்கேற்க சென்னை வந்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நவம்பர் 17ஆம் தேதி சென்னை வந்தவர், 19 நாள்களுக்குப் பிறகு டிசம்பர் 5ஆம் தேதி காலையில் தான் மேட்டூர் புறப்பட்டுச் சென்றார். மலேசியாவில் பினாங்கு துணை முதல்வர் இராமசாமி ஏற்பாடு செய்த ஈழத் தமிழர் உரிமை மாநாட்டில் பங்கேற்க தோழர் கொளத்தூர் மணி, நவம்பர் 19ஆம் தேதி சென்னையிலிருந்து பினாங்கு பயணமானார். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நாடு கடந்த தமிழீழ அரசின் தமிழகப் பிரதிநிதி பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்....

கொட்டிய மழையிலும் நடந்த “பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு”

கொட்டிய மழையிலும் நடந்த “பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு”

திராவிடர் விடுதலைக்கழகம், சென்னை மாவட்டத்தின் சார்பாக மக்களைப் பிரிக்கும் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” 01.12.2015 செவ்வாய்க் கிழமை சென்னை மேற்கு மாம்பலம் சந்திர சேகர் திருமண மண்டபத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை முழு நாள் மாநாடாக நடைபெற்ற இந்த சிறப்பான மாநாட்டில் கலை நிகழ்ச்சி, கருத்தரங்கம், பட்டி மன்றம், கருத்துரை ஆகியன இடம் பெற்றன. சென்னையில் காலத்தின் அவசியம் கருதி பல்வேறு தடங்கல்களை முறியடித்து கழகத் தோழர்களின் பெரு முயற்சியால் இம்மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாநாட்டின் முந்தைய நாள் இரவிலேயே கடும் மழை பெய்தது. கடும் மழைக்குமிடையே தோழர்கள் மாநாட்டு பணிகளை மேற்கொண்டார்கள். காலையிலேயே மாநாடு துவங்கும் நேரத்திலேயே கடும் மழை இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கழக மாநாட்டின் கருத்துரைகளைக் கேட்க தோழர்கள், தோழமை அமைப்புகள், பொது மக்கள் வருகை என 200க்கும் மேற்பட்டோரால் அரங்கம் நிறைந்தது. காலை...

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (3) வாலாசா வல்லவன்

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (3) வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. 2ம் பாகம் படிக்க வழக்குரைஞர் பா.குப்பன் பெரியார் மீது சுமத்தும் மற்றொரு குற்றச்சாட்டு “தமிழ்ப் பார்ப்பனர்களிடம் சினப் பாய்ச்சல்; தெலுங்குப் பிராமணர்களிடம் இனப்பாசம்!” (பக் 53) என்று எழுதியுள்ளார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பா.குப்பன் தமிழ்ப் பார்ப்பனர் தெலுங்குப் பார்ப்பனர் என்று வரையறை செய்தார் என்பது அவருக்கே வெளிச்சம். பழந்தமிழகத்தில் பார்ப்பனர் என்ற சாதியே கிடையாது. தொல்காப்பியர் காலக் கட்டத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியப் பார்ப் பனர்கள் தமிழகத்தில் வந்துள்ளனர். தொல்காப்பி யத்திலேயே வடமொழிச் சொற்களைச் சேர்ப் பதற்கான விதிகளை அவர் உருவாக்கியதிலிருந்தே இதனை நாம் உணர முடிகிறது. பெரியாரியல் வாதிகளும், மார்க்சிய வாதிகளும், உண்மையான தேசிய இன விடுதலையில் அக்கறை உள்ளவர்களும் தலைவர்களின் அரசியல்...

கழகம் – ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ நீட்டிய உதவிக் கரம்

உதவிக்கரம் நீட்டியோர் திராவிடர் விடுதலைக் கழகம், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இணைந்து நடத்திய நிவாரணப் பணிகளுக்கு உதவிட முன்வந்தோர் பட்டியல்: திருப்பூர் வணங்காமண் ஆடையகம் சார்பில் ஊமை அழகிரி 150 புதிய சட்டைகள், 150 வேட்டிகள்; மேட்டூர் கழகம் சார்பில் அரிசி மூட்டைகள், தண்ணீர் பாக்கெட், பருப்பு, ரொட்டி, மருந்துகள், தனி வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னை ஆனந்தன் 225 பெட்சீட்டுகள் வழங்கினார். திருப்பூர் மாவட்டக் கழகத் தோழர்கள் ஏராளமாக அரிசி மூட்டைகள், ரொட்டி, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அனுப்பினர். குவைத்திலிருந்து செந்தில் ரூ.50,000; தஞ்சையிலிருந்து மணி வண்ணன் ரூ.25,000; சூலூர் பனிமலர் ரூ.10,000; சென்னை பாண்டியன் ரூ.4000; அமெரிக்காவிலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் ரூ.44,000. குறிஞ்சி நாடன் ரூ.3,000; வளர் தங்கம் குடும்பத்தார் ரூ.2000. செந்தில் (எப்.டி.எல்.) வழியாக உதவியோர் ரூ.8,600. தேனி ஆசிரியர் மணிமேகலை ரூ.5000. சுவீட்சர்லாந்து இளம் இராயல் விளையாட்டுக் கழக சார்பில்...

ஏழ்மையும்-சுனாமியில் இறப்பதும் முன்வினைப் பயனாம் – எச். ராஜாவின் பார்ப்பனத் திமிருக்கு பதிலடி!

ஏழ்மையும்-சுனாமியில் இறப்பதும் முன்வினைப் பயனாம் – எச். ராஜாவின் பார்ப்பனத் திமிருக்கு பதிலடி!

ஆட்சி அதிகாரம் வந்துவிட்டது என்ற திமிரில் எச். ராஜா போன்ற பார்ப்பனர்கள் எல்லை மீறி தூற்றுகிறார்கள். வாய்க்கொழுப்பு பூணூல் திமிருடன் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். நடிகர் கமல்ஹாசன், தனது 61ஆவது பிறந்த நாளில் வெளியிட்ட சில கருத்துகளுக்காக ‘துக்ளக்’ பத்திரிகையில் எச். ராஜா ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். கமல்ஹாசன் பேசும் பகுத்தறிவு கருத்துகள் குழப்பம் மற்றும் பார்ப்பனியத்தின் கலவையாகவே இருக்கிறது என்பது வேறு சேதி. ஆனால், இந்த கடிதத்தில் எச்.ராஜா தன்னை அசல் பார்ப்பனராக அடையாளம் காட்டியிருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும். ஒருவர் ஏழையாகவும் தீண்டப்படாத ஜாதியிலும் பிறப்பதற்கு முன் ஜென்மத்தின் பலன்தான் காரணம் என்று பார்ப்பனர்கள் கூறி, இந்த ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தி வந்தார்கள். பெரியாரி யக்கம், பார்ப்பனரின் இந்த பிறவித் திமிரைத்தான் கேள்விக்கு உட்படுத்தியது. கடவுளையும் ‘கடவுள்’ பெயரால் அதிகாரங்களையும் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கப் பிடிக்குள் பறித்துக் கொண்டதை பெரியார் இயக்கம் கிழித்துக் காட்டியவுடன் பார்ப்பனர்கள் ஏற்றத்தாழ்வுகளை தாங்கள் ஏற்கவில்லை என்றும், ஜாதி...

மாட்டிறைச்சி தடை: சில தகவல்கள்

மாட்டிறைச்சி தடை: சில தகவல்கள்

இந்தியாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்ட மற்றும் தடை விதிக்கப் படாத மாநிலங்களின் விவரம் வருமாறு: பஞ்சாப் மற்றும் அரியானா: இரு அண்டை மாநிலங்களிலும் பசுவதை தடை செய்யப்பட்டு உள்ளது. பஞ்சாப் அரசு மாட்டிறைச்சி விற்பனைக்கும் தடை விதித் துள்ளது. எனினும் இந்த மாநிலங்களில் மாட்டிறைச்சி உண்போருக்கான தண்டனை நடைமுறைகள் எதுவும் இல்லை. ராஜஸ்தான்: எத்தகைய கால்நடை வதையும் தடை செய்யப்பட்டு உள்ளது. மீறுவோருக்கு 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதம். இமாச்சல பிரதேசம்: பசுக்கள் மட்டு மின்றி காளைகள், எருமைகள், கன்றுகள் போன்ற விலங்குகளை கொல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறுவோருக்கு 1 ஆண்டு சிறை. குஜராத்: பசுக்களை கொல்வது, மாட்டிறைச்சிகளை விற்பது, வாங்குவது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லுதல் அனைத்துக்கும் தடை. மீறுவோருக்கு 7 ஆண்டு வரை சிறை. உத்தரபிரதேசம்: பசுவதை தடை செய்யப்பட்டு உள்ளது. மீறுவோருக்கு 7 ஆண்டு வரை சிறை. எனினும் டப்பாக்களில்...

பகுத்தறிவுக்கு எதிரான மதவெறி சக்திகள் – டாக்டர் பார்கவா கட்டுரை

பகுத்தறிவுக்கு எதிரான மதவெறி சக்திகள் – டாக்டர் பார்கவா கட்டுரை

உயிரியல் துறை விஞ்ஞானியும், தேசிய அரசு ஆணையத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் பார்கவா, ‘இந்து’ நாளேட்டில் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள். நாம் எதனை உண்ண வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எதனைப் படிக்க வேண்டும், பார்க்க வேண்டும், யாரை நேசிக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் முடிவெடுக்க விரும்புகின்ற தற்போதைய அரசின் செயல்பாட்டில் கலாச்சார சகிப்பின்மை என்பது ஆதிக்கம் செலுத்திடும் அம்சமாக உள்ளது. இந்துத்துவா கொள்கையின் மூலாதாரமாக ஆர்.எஸ்.எஸ். எனும் ராஷ்டிரியஸ்வயம் சேவக் அமைப்பு இருக்கிறது. பாஜக அரசில் இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் செல்வாக்கு ஓங்கியுள்ள நிலையில், “பகுத்தறிவு கோட்பாடு, காரணத்தைத் தேடி விவாதித்து கேள்விக்குள்ளாக்கும் நெறி ஆகியவற்றிலிருந்து இந்திய தேசத்தை விலகச் செய்து, அதன் வாயிலாக ஜனநாயகத்திலிருந்தும் தேசத்தை விலகச் செய்கின்ற இந்து மதவாத எதேச்சாதிகாரத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோமா?”  என்ற கேள்வியை நாம் எழுப்பிடலாம். அவ்வாறு நாம் நகர்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. வன்முறைத் தாக்குதல்களோடு மட்டுமின்றி,...

முஸ்லிம்கள் மீது பழிபோடும் பார்ப்பனியம்  ஈரோடு மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் முழக்கம்

முஸ்லிம்கள் மீது பழிபோடும் பார்ப்பனியம் ஈரோடு மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் முழக்கம்

ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்து பார்ப்பன-பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில், ‘எங்கள் பார்வையில் மக்களைப் பிளவுப் படுத்தும் பார்ப்பனீய மதவாதம்’ என்ற பொதுத் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ‘இசுலாமியர் பார்வையில்’ என்கிற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசினார். அவரது உரையின் தொடர்ச்சி – முஸ்லீம்கள் வீடுகட்டினால் யார் வேண்டு மானால் வாடகைக்கு வரலாம். ஆனால், பார்ப் பனர்கள் வீட்டில் வேறுயாரும் வசிக்க முடியாது. இந்த நாட்டில் அனைத்து பயங்கரவாத செயல்களையும் செய்வது பார்ப்பனீயம். ஆனால், பழியை சுமப்பது முஸ்லீம்கள்.  இந்த சூழ்ச்சி அரசியலை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அடுத்த குற்றச்சாட்டு,  முஸ்லீம்கள் தீவிர மதநம்பிக்கை உடையவர்கள் அவர்களது குரானில் நான்கு பெண்டாட்டிகளைத் திருமணம் செய்ய சொல்லியிருக்கிறது. எவ்வளவு வேண்டுமானலும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என சொல்லியிருக்கிறது. அதனால் அவர்கள் அந்த மதக் கருத்தை பின்பற்றி நிறைய திருமணம்...

உலக நாடுகளில் மோடிக்கு நடக்கும் வரவேற்புகள் பின்னணியில் பார்ப்பன-பனியாக்கள்

உலக நாடுகளில் மோடிக்கு நடக்கும் வரவேற்புகள் பின்னணியில் பார்ப்பன-பனியாக்கள்

வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கிறார் மோடி. அவ்வப்போது இந்தியாவுக்கும் வந்து போகிறார். மோடி பறக்கும் நாடுகளில் எல்லாம் அங்கே வாழும் ‘இந்தியர்’கள் நடத்தும் விழாக்கள் மிகப் பெரிய அளவில் நடத்தப்படுகிறது. அமெரிக்காவின் மெய்டன் மைதான சதுக்கம், இலண்டன் வெம்பில்டன் அரங்கம் என்று நடக்கும் இந்த மாபெரும் வரவேற்பு விழாக்கள் திட்டமிடப் பட்டு நடத்தப்படுகின்றன. பெருமளவில் கூட்டம் திரட்டப்படுகிறது. இந்த வேலைகளை செய்வது எல்லாம் அந்நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிற ‘இந்துத்துவ’ பார்ப்பன சக்திகள்தான். இலண்டனில் வெம்பில்டன் மைதானத்தில் 60,000 பேர் திரண்டதாக செய்திகள கூறுகின்றன. இதை முன்னின்று நடத்தியது ‘தேசிய இந்து மாணவர் கழகம்’ என்ற அமைப்பு. 29 வயதுடைய மயூரி பார்மர் என்ற செல்வாக்கு மிக்க பார்ப்பன குடும்பத்தின் இளைஞர், இதற்கான பொறுப்பாளராக செயல்பட்டார். இந்த ஏற்பாடுகள் எல்லாம் பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராக உள்ள ராம் மாதவ் என்பவரால் திட்டமிடப்படுகின்றன. உலகம் முழுதும் பரவிக் கிடக்கும் பார்ப்பன-பனியா தொழிலதிபர்களை ஒருங்கிணைத்து மோடிக்கு ஆதரவாக...

சுழலும் வரலாற்றுச் சக்கரம் – மேதகு பிரபாகரன் மாவீரர் நாள் உரை

சுழலும் வரலாற்றுச் சக்கரம் – மேதகு பிரபாகரன் மாவீரர் நாள் உரை

மனிதனை மனிதன் அடிமை கொள்கிறான்; அழிக்க முயல்கிறான்; மனிதனை மனிதன் சுரண்டி வாழ்கிறான். அன்று தொட்டு இன்றுவரை மனிதனே மனிதனின் முதன்மையான எதிரியாக விளங்கி வருகிறான். ஒருவனது சுதந்திரத்தை இன்னொருவன் விழுங்கிவிட எத்தனிக்கும்போது, தர்மம் செத்து விடுகிறது; உலகில் அதர்மமும் அநீதியும் பிறக்கிறது. சாதி என்றும், வர்க்கம் என்றும், இனம் என்றும் பிளவுகள் எழுந்து மனிதரிடையே முரண்பாடு தோன்றுகிறது; மோதல்கள் வெடிக்கின்றன. இந்த உலகில் அநீதியும் அடிமைத்தனமும் இருக்கும் வரை, சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை, விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி. ஏனெனில், சுதந்திர எழுச்சியின் உந்துதலால்தான் மனித வரலாற்றுச் சக்கரமும் சுழல்கிறது. ஒடுக்கப்படும் உலக மக்களில் ஒரு பிரிவினராக நாமும் சுதந்திரம் வேண்டிப் போராடி வருகிறோம். எல்லா விடுதலைப் போராட்டங்களையும்விட எமது போர்க்குரல், இன்று உலக அரங்கில் மிகப் பெரிதாக ஒலிக்கிறது. எமது சுதந்தரப் போர் ஏனைய விடுதலைப் போராட்டங்களைவிட...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

அரைகுறை ஆடைகளுடன் வரும் பக்தர்களை இந்து கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. – மதுரை உயர்நீதிமன்றம்ஆணை ஆனால், அர்ச்சகர்கள் மட்டும் மேலாடை இல்லாமலேயே வரலாம்! அதுல நீதிமன்றம் தலையிட முடியாது. கூடங்குளம் முதலாவது அணு உலையில் அடுத்த மாதம் மின் உற்பத்தி தொடங்க வாய்ப்பு. – இயக்குனர் ஆர்.எஸ். சுந்தர் அமைச்சர் நாராயணசாமி போயிட்டாரேன்னு கவலைப் பட வேண்டாம்; இதோ ஆர்.எஸ்.சுந்தர் வந்துட்டாருல்ல… பாரிசில் நடந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த அரியானாவில் வேதம் ஓதி ‘மகாயாகம்’. – செய்தி இனிமே சிரியாவுல நடக்குற தாக்குதலுக்கும் யாகம் நடத்து வீங்க போலிருக்கு. பீகார் தோல்வி: பா.ஜ.க.வை குறைகூறும் அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். – அமைச்சர் கட்காரி தாராளமா எடுங்க… ஆனா அதிருப்தி தெரிவித்த பீகார் மக்களை ஒன்றும் செஞ்சுடா தீங்கய்யா. மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தகம் செய்வோரில் 95 சதவீதம் பேர் இந்துக்கள். – முன்னாள் நீதிபதி சச்சார் உள்நாட்டுல எவரும்...

பெரியாரும் தமிழ்த் தேசியமும்

பெரியாரும் தமிழ்த் தேசியமும்

பெரியாரின் 136ஆவது பிறந்த நாளையொட்டி ‘இளந்தமிழகம்’ இயக்கம், ‘பெரியாரும் தமிழ்த் தேசியமும்’ என்ற தலைப்பில் சென்னையில் நடத்திய கருத்தரங்கில் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு ‘பெரியாரும் தமிழ்த் தேசியமும்’ என்ற தலைப்பில் நூலாக வெளி வந்திருக்கிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழேந்தி, தியாகு, செந்தில் ஆகியோர் கருத்தாழமிக்க உரைகளும், அவையில் எழுப்பிய வினாக்களுக்கு அளிக்கப்பட்ட விடைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. பெரியார் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு தெளிவான பதில்களை முன் வைக்கும் கருத்துப் பெட்டகமாக நூல் வெளி வந்திருக்கிறது. நூலின் நோக்கத்தை இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் செந்தில் கீழ்க்கண்டவாறு சரியாகவே விளக்குகிறார். “தமிழ்த் தேசியம் என்பது சாதி நாயகத்திற்கு எதிராக சனநாயகத்தை முன்னிறுத்துவ தாகும். சாதிய ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரானப் போராட்டமே நேர்வகைத் தமிழ்த் தேசியம் ஆகும். பெரியாரின் வாழ்வின் சாரமாகப் பெறப்படுவது சாதி ஒழிப்பு. எனவே, பெரியாரும் தமிழ்த் தேசியமும் ஒன்றுபடும் புள்ளி சாதி ஒழிப்பு அரசியலாகும். தமிழ்த்...

மதவெறிக்கு எதிராக வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

மதவெறிக்கு எதிராக வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 06.11.2015 வெள்ளிகிழமை காலை வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோரியும், மாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால். பிரபாகரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். மாவட்ட அமைப்பாளர் ப.திலீபன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் சிவா, கௌதமன், மன்னார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக தலைமைக் குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார், விடுதலை சிறுத்தைகள் மாநகர் மாவட்ட செயலாளர் சந்திரகுமார், எஸ்.டி.பி.அய். மாவட்ட தலைவர் முகமது ஆசாத், ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் செந்தில், தமிழ்நாடு அம்பேத்கர் மன்றம் மேயர் சுந்தர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை சிங்கராயர், மா.பெ.பொ.க.யின் குப்பன், ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கழக...

சென்னையில் டிச.1இல் “மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு”

ஈரோட்டில் இந்து பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை, ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம், கடந்த நவம்பர் 8ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தி முடித்தது. தொடர்ச்சியாக சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் டிசம்பர் முதல் தேதி சென்னையில் ‘மக்களைப் பிளவு படுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு’ மாநாட்டை நடத்த திட்டமிட்டு, தோழர்கள் களப்பணிகளில் இறங்கியுள்ளனர். சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள சந்திரசேகர் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. மாலை மண்டபத்துக்கு அருகே உள்ள முத்துரங்கன் சாலையில் திறந்தவெளி மாநாடு நடைபெறுகிறது. தந்தை பெரியார் தனது இறுதி பேருரையை நிகழ்த்திய இடமும் இதுவேயாகும். சம்பூகன் கலைக் குழுவின் எழுச்சி இசை நிகழ்ச்சியோடு காலை 10 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. பார்ப்பன மதவெறி கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட தபோல்கர்-பன்சாய்-கல்புர்கி நினைவரங்கில், ‘பார்ப்பனியம் பதித்த இரத்தச் சுவடுகள்’ என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில், ‘பெண்ணியத்தில்’ என்ற தலைப்பில் பேராசிரியர் சரசுவதி, ‘புராணங்களில்’...

கல்பாத்தி : அன்றும் இன்றும்!

கல்பாத்தி : அன்றும் இன்றும்!

இன்றைய கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு, மொழி வழி மாநிலப் பிரிவினைக்கு முன்பு சென்னை மாகாணத்தின் ஒரு பகுதி. பாலக்காட்டுக்கு அருகே உள்ள கல்பாத்தி, பார்ப்பன வைதீகத் திமிரை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. கல்பாத்தி, ‘அக்ரகாரங்களில்’ குடியிருந்த தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள், ஈழவர்கள் நடக்கவும், அவர்கள் ‘தேர் ரதம்’ வருவதற்கும் தடை விதித்திருந்தனர். இந்தத் தடை அரசாங்கத்தின் தடையாகவே இருந்தது என்பது இதில் குறிப்பிடப்பட வேண்டியதாகும். இந்தத் தடையைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வரதராஜூலு நாயுடு – அவர் ஆசிரியராக இருந்த ‘தமிழ்நாடு’ நாளேட்டில் தலையங்கம் தீட்டினார். அப்போது சென்னை மாகாணத்தை நிர்வாகம் செய்த பிரிட்டிஷ் ஆளுநரின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்த சர். சி.பி. இராமசாமி அய்யர், இந்தத் தடையை நியாயப்படுத்தினார். தீண்டப்படாத சமூகத்தினரான ஈழவர்களும் அவர்களின் கோயில் தேரும் அக்ரகாரத்தில் வந்தால் கலவரம் வரும் என்றும், அதைத் தடுப்பதற்காகவே தடை போட்டுள்ளதாகவும் கூறினார். இதை எதிர்த்து அன்றைய சென்னை சட்டமன்றத்தில் நீதிக்கட்சி,...

பெரியார் அம்பேத்கர் கருத்துக்களை முன்னெடுப்பதே சிறுபான்மை மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு  ஈரோடு மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் முழக்கம்

பெரியார் அம்பேத்கர் கருத்துக்களை முன்னெடுப்பதே சிறுபான்மை மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு ஈரோடு மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் முழக்கம்

ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்து பார்ப்பன-பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில், ‘எங்கள் பார்வையில் மக்களைப் பிளவுப் படுத்தும் பார்ப்பனீய மதவாதம்’ என்ற பொதுத் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ‘இசுலாமியர் பார்வையில்’ என்கிற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசினார். அவரது உரையிலிருந்து – “பகுத்தறிவாளர் பார்வையில் பெரியார், பெண்கள் பார்வையில் பெரியார், தலித்துகள் பார்வையில் பெரியார், இசுலாமியர் பார்வையில் பெரியார் – என தலை சிறந்த தலைப்புகளில் பலர் பேசியிருக்கிறார்கள். இது திட்டமிட்டு நடந்ததல்ல இயல்பாகவே அமைந்துவிட்டது. ஏனென்றால், பெரியார் ஒரு இசுலாமியர் அல்ல; ஆனால், இசுலாமியர்களின் தலைவர். பெரியார் பெண் அல்ல; ஆனால், பெண்களின் தலைவர். பெரியார் ஒரு தலித் அல்ல; ஆனால், தலித்துகளின் தலைவர் என்பதை உணர்த்துகின்ற மேடையாக இந்த மேடை அமைந்திருக் கின்றது. இதை வேறு எதனுடனும் பொருத்திப் பார்க்க முடியாது. பெரியார்தான் ஒடுக்கப்பட்ட,...

அடாது மழை அடித்தாலும் விடாது ‘அவாள்’ கொட்டம்

அடாது மழை அடித்தாலும் விடாது ‘அவாள்’ கொட்டம்

கடும் மழையில் தமிழகம் தத்தளிக்கிறது; வெள்ளப் பாதிப்புகள், ஏழை எளிய மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது; அரசு நிவாரணப் பணிகள் படுமோசமாகி விட்டதால், தங்குமிடம் உணவு இன்றி மக்கள் பரிதவிக்கின்றார்கள். ஆனால், மக்கள் துயரங்களைப் பற்றிக் கவலைப்படாமல், ஸ்ரீரங்கம் கோயிலில் ‘கும்பாபிஷேக’ வேலைகளும், யாக சாலை பூஜைகளும் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஊரே வெள்ளத்தில் தவிக்கும்போது, பூணூல் மேனியுடன் வைதிகப் பார்ப்பனர்கள் 28 வெள்ளிக் குடங்களில் ‘புனித நீர்’ கொண்டு வருவதையும், யாக சாலைகளில் பார்ப்பனர்கள் பல்வேறு யாக குண்டங்களில் உணவுப் பொருள்களை தீயில் போட்டு பொசுக்கி தொடர்ந்து பல நாள் யாகங்கள் நடத்துவதையும் ‘தினமணி’, ‘தினமலர்’ போன்ற பார்ப்பன ஏடுகள் படங்களுடன் செய்தி வெளியிட்டு குதூகலிக்கின்றன. பெரியார் முழக்கம் 19112015 இதழ்

மணக்குப்பம் கிராமத்தில் கழகம் உதயம்

மணக்குப்பம் கிராமத்தில் கழகம் உதயம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள கிராமம் மணக்குப்பம். இக்கிராமத்தின் இளைஞர்கள் தாங்களாகவே ‘பெரியார் மாணவர் பேரவை’ என்ற அமைப்பைத் தொடங்கி, இளைஞர்களைத் திரட்டி, பெரியார் பிறந்த நாள் விழாக்களை நடத்தி வந்தனர். பின்னர், ‘இளம் திராவிடர்’ என்ற பெயரில் இயங்கும் இணையதளக் குழுவில் இடம் பெற்றுள்ள கழகத் தோழர் செந்தில் வழியாக பேரவையை வழி நடத்திய ஆனந்த் பெரியார், சென்னை மாவட்டக் கழகத் தோழர்களுடன் தொடர்பு கொண்டார். மணக்குப்பம் கிராமத்தில் இளைஞர் களைத் திரட்டி, ஒரு பொதுக் கூட்டம் நடத்தி, ‘திராவிடர் விடுதலைக் கழக’த்தைத் தொடங்க முடிவு செய்தனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளுக்கு உதவிட விழுப்புரம் அய்யனார், சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் கரு. அசுரன், முழக்கம் உமாபதி, எப்.டி.எல். செந்தில் ஆகியோர் முன்கூட்டியே மணக்குப்பம் சென்றனர். கடும் மழை காரணமாக நிகழ்ச்சி சமுதாயக் கூடத்துக்கு மாற்றப்பட்டது. மணக்குப்பம் தோழர்கள் கிராமத்திலும், சுற்றுப் பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று கூட்டத்தின்...

‘எவிடென்சு’ அமைப்பு வெளியிடும் அதிர்ச்சி உண்மைகள் தமிழகப் பள்ளிகளில் தீண்டாமைக் கொடுமைகள்

‘எவிடென்சு’ அமைப்பு வெளியிடும் அதிர்ச்சி உண்மைகள் தமிழகப் பள்ளிகளில் தீண்டாமைக் கொடுமைகள்

2ஆவது வகுப்பு படிக்கும் ஒரு தலித் சிறுவனை, மலம் எடுக்கச் சொன்ன விஜயலட்சுமி என்ற ஆசிரியை கைது செய்யப்பட்டிருக்கிறார். இது நாமக்கல் மாவட்டத்தில் இராமபுரம் நகராட்சிப் பள்ளியில் நடந்த சம்பவம். இது வெளியே தெரிய வந்த நிகழ்வு, அவ்வளவுதான். மதுரையில் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கூறையூர். இங்கே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 1970ஆம் ஆண்டிலிருந்து 40 ஆண்டுகளாக ஒரு தலித் மாணவர்கூட சேர்க்கப்பட்ட தில்லை. 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்தப் பள்ளி. ஒவ்வொரு ஆண்டும் எத்தனை மாணவர்கள் எந்தெந்த ஜாதிப் பிரிவுகளிலிருந்து சேர்க்கப்பட்டனர் என்ற தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றுள்ளது ‘எவிடென்சு அரசு சாரா நிறுவனம்’. குறிப்பாக இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தலித் மாணவர்களை தலித் அல்லாத ஆசிரியர்கள் தங்களுக்குத் தேவையான எடுபிடி வேலைகளுக்கும் துப்புரவுப் பணி களுக்கும் பயன்படுத்துவது நடைமுறையாகிவிட்டது. நெல்லை மாவட்டம் வேடம்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில்...