‘சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்’ புவனகிரியில் பொதுக்கூட்டம்

சனாதனத்தை வேரறுக்க உறுதியேற் போம், என்ற முழக்கத் தோடு பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம், புவனகிரி யில் 15.10.2022 அன்று மாலை 5 மணியளவில் தொடங்கி நடை பெற்றது.

பொதுக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக ‘விடுதலைக் குரல்’ கலைக் குழுவின் பகுத்தறிவு, சாதியொழிப்பு பாடல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவர் செ.பிரகாஷ்  வரவேற்பு கூறினார். அ. சதிசு இந்நிகழ்விற்கு தலைமையேற்றார். மாவட்ட தலைவர் அ.மதன்குமார், மாவட்ட செயலாளர் சிவகுமார், அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் அறிவழகன், மங்களூர் ஒன்றிய செயலாளர் ந.கொளஞ்சி, த.முத்துகிருஷ்ணன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து சதானந்தம் (மு.ஒ.செயலாளர், சி.பி.எம்.), கணபதி (ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்), தயாநிதி (மா.தலைவர், மக்கள் தமிழகம்), ஆசிரியர் பழனிவேல், காரல் மார்க்ஸ் (பாலா பேரவை), ஆகிய தோழமை இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர். தொடர்ந்து சிறப்புரையாற்ற வருகை தந்த சௌந்திரபாண்டியன் (காங்கிரஸ்), திருமார்பன் (மாநில அமைப்புச் செயலாளர், விசிக) ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியாக சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம் என்ற முழக்கத்தை வலியுறுத்தி கழகத் தலைவர் கொளத்தூர்  மணி  சிறப்புரையாற்றினார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் பூ.ஆ.இளையரசன் உள்ளிட்ட  கழகத் தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். இந்நிகழ்வை மா.தலைவர், அ.ம தன்குமார் ஒருங்கிணைத்தார். பிரேம் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 20102022 இதழ்

 

 

You may also like...