நிலம் பாழ், நீர் மறுப்பு ,நீட் திணிப்பு விளக்கப் பொதுக்கூட்டம் – கருவேப்பிலங்குறிச்சி 28052018

நிலம்,நீர் ,நீட் மறுப்பு விளக்கப் பொதுக்கூட்டம் – கடலூர் – 28.05.2018.

கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நிலம்,நீர் ,நீட் மறுப்பு விளக்கப் பொதுக்கூட்டம் 28.05.2018 அன்று கறிவேப்பிலங்குறிச்சியில் நடைபெற்றது .கழக மாவட்டச்செயலாளர் தோழர் நட.பாரதி தாசன் முன்னிலை வகித்தார்.

மாலை 6.00 மணிக்கு பெரம்பலூர் துரை தாமோதரன் அவர்கள் மந்திரமல்ல! தந்திரமே!! என்ற அறிவியல் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார். அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட தலைவர் தோழர் இளையரசன் நிகழ்ச்சியை நெறிப்படுத்த தோழர் முத்துக்கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து ஆசிரியர் அறிவழகன் தலைமை உரை ஆற்றினார்.

பின்பு தோழமை அமைப்புகளை சார்ந்த தோழர்கள் புதுச்சேரி பெ.சி.இ.தலைவர் தீனா,விழுப்புரம் மாவட்ட திவிக வெற்றிவேல்,பெரியார் சாக்ரடீஸ்,வி.சி.க திருமாறன்,த.வா.க சின்னத்துரை, பாலகுருசாமி, மற்றும் திருச்சி பெரியார் சரவணன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

அதனை தொடர்ந்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அரியலூர் மாவட்டத் தோழர்கள் ராவண கோபால் உள்ளிட்ட தோழர்கள் தலைவர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். பின்பு அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு தோழர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடத்த உறுதுணையாய் இருந்த தோழர்கள் தலைமைச் செயலவை உறுப்பினர் தோழர் அய்யனார், கோபால் ராமகிருஷ்ணன், இளையரன், மதன் குமார், அறிவுமதி, சூர்யா முத்து.

You may also like...