Category: இயக்கம்

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு; ஈரோடு செயலவைக் கூட்டத்தில் தீர்மானம்

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு; ஈரோடு செயலவைக் கூட்டத்தில் தீர்மானம்

21.03.2024 வியாழன் அன்று ஈரோடு, கே.கே.எஸ்.கே மகாலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். இந்தியாவில் நடப்பது அரசியல் போராட்டம் அல்ல: ஆரிய திராவிடப் போராட்டம் என்றார் பெரியார். நாடு சுதந்திரம் பெற்றது என்று அறிவிக்கப்பட்ட போது இது சுதந்திரம் அல்ல; பார்ப்பன பனியாவுக்கு அதிகாரத்தை மாற்றும் நாள் என்பதே பெரியாரின் நிலைப்பாடு. பெரியார் எச்சரித்த அந்த போராட்டம் தான் எதிர்வரும் தேர்தல் களத்தில் மைய கருத்தியலாக உருப்பெற்று இருக்கிறது. ஆரியம், சனாதனம் என்ற முகமூடியுடன் களத்திற்கு வந்துள்ளது. திராவிடம் தனது உண்மையான அடையாளத்தோடு சனாதனத்தை எதிர்கொண்டு வருகிறது. திராவிட சனாதன (பார்ப்பனியம்) முரண்பாடுகள் கூர்மை அடைந்து வருகின்றன. கோடான கோடி விளிம்பு நிலை இந்து மக்கள் சனாதனம் சுமத்திய சுரண்டல் அநீதிகளுக்கு பலிகடாவாக்கப்பட்டனர். இதை நேர் செய்வதற்கு சமூக நீதி, அதிகார பங்கீடு, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை,...

எழுச்சியோடு முடிந்த 2023 – கழகம் ஆற்றிய பணிகள்

எழுச்சியோடு முடிந்த 2023 – கழகம் ஆற்றிய பணிகள்

ஜனவரி: பொங்கல் விழா அழைப்பிதழில் “தமிழ்நாடு” என குறிப்பிட மறுத்தது, தமிழ்நாடு அரசின் இலச்சினையை பயன்படுத்த மறுத்தது,  பின்னர் எதிர்ப்புகளுக்கு அடிபணிந்தது என ஆளுநரின் அதிகார மீறல்களோடுதான் 2023 தொடங்கியது. சட்டப்பேரவையில் ஜனவரி 9-ஆம் தேதி ஆளுநர் உரையை வாசித்த ஆர்.என்.ரவி, சில முக்கியப் பகுதிகளை வெட்டியும் ஒட்டியும் திரித்தும் வாசித்தார். திராவிட மாடல், சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம், பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர், காமாராசர் ஆகிய வார்த்தைகளை உச்சரிக்க மறுத்துவிட்டார். ஆனால் அரசு தயாரித்த உரைதான் பதிவேட்டில் இடம்பெறும் என முதலமைச்சர் தீர்மானம் கொண்டுவந்ததால், வேறு வழியின்றி சட்டமன்றத்தை விட்டு ஓட்டம்பிடித்தார் ஆர்.என். ரவி. ஆணவம் பிடித்த ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி மேட்டூர், சேலம், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் கழகத்தின் சார்பில் உடனடியாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஜனவரி 13-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் மாவட்டக் கழகம் சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட...

ஏற்காட்டில் கலந்துரையாடல் கூட்டம்

ஏற்காட்டில் கலந்துரையாடல் கூட்டம்

03.01.2024 புதன் அன்று காலை 11 மணியளவில் சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள் இல்லத்தில், ஏற்காடு ஒன்றியக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவபிரகாஷ் தலைமை தாங்கினார், ஏற்காடு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். புதிதாக பரப்புரை வாகனம் வாங்குவது, பயிற்சி வகுப்புகள் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சுமார் 20 தோழர்கள் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 11012024 இதழ்

பாசிச பாஜகவை அதிகாரத்தில் இருந்து வீழ்த்துவோம் தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் சார்பில் பரப்புரை

பாசிச பாஜகவை அதிகாரத்தில் இருந்து வீழ்த்துவோம் தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் சார்பில் பரப்புரை

கழகத் தலைமைக்குழுக் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சேலத்தில் 02.02.2024 அன்று முகில் நகரில் கழகத் தோழர் சீனிவாசன் இல்லத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் இணைய வழியாக (Skype) கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி:- எதிர்வரும் 2024 – நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கழகம் சார்பில் முன்னெடுக்க வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார். தொடர்ந்து தலைமைக் குழு உறுப்பினர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் முன்னெடுக்கவுள்ள பரப்புரைக்கான செயல் வடிவங்கள், முழக்கங்கள், பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட உள்ள துண்டறிக்கையில் இடம் பெற வேண்டிய கருத்துக்களை முன்வைத்தனர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பரப்புரை இயக்கத்துக்கான துண்டறிக்கையில் இடம்பெற வேண்டிய செய்திகளை தலைமைக்குழு முன் சமர்ப்பித்தார். நிறைவாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” எனும் முழக்கத்தோடு பரப்புரை இயக்கங்கள் வழியாக மக்களை...

சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!

சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!

“சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்!" "சமூக ஒற்றுமையைக் காப்போம்!" 1. பத்தாண்டு மோடி ஆட்சியில் என்ன நடந்தது? சட்டங்கள் சீர்குலைக்கப்பட்டன. மதவெறி தூண்டப்பட்டது. மாநில அடையாளங்கள் அழிக்கப்பட்டன. 2. நீட் தேர்வால் நமது அனிதாக்களை இழந்தோம். ஜி.எஸ்.டி-யால் தமிழ்நாட்டின் வருவாயை இழந்தோம். வரலாறு காணாத மழை வெள்ளத்தை நமது மாநிலம் சந்தித்த போதும் ஈவுஇரக்கமின்றி நிவாரண நிதியே இல்லை போ என்று இறுமாப்புடன் பேசியது ஒன்றிய மோடி ஆட்சி. 3. ஆளுநர் ரவி சனாதனப் பெருமை பேசுகிறார். தமிழ்மறை தந்த வள்ளுவருக்கு காவி சாயம் பூசுகிறார். தலித்மக்களுக்கு பூணூல் அணிவிக்கிறார். தீட்சிதர்கள் நடத்தும் குழந்தைத் திருமணங்களை ஆதரிக்கிறார். தேசத்தந்தை காந்தியை அவமதிக்கிறார். சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமறுக்கிறார். அண்ணா சூட்டிய தமிழ்நாடு என்ற பெயரை ஏற்க முடியாது என்கிறார். ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் தலைமையிடமாக மாற்றிவிட்டார். உச்சநீதிமன்றமே தலையில் குட்டிய பிறகும் பாஜக ஆட்சிதரும் இறுமாப்பில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காலில் போட்டு...

அர்ச்சகர் சட்டம்: மதுரை நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

அர்ச்சகர் சட்டம்: மதுரை நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீரங்கம் குமார வயலூர் கோவிலில் அனைத்து சாதி அர்ச்சகர் சட்டத்தின்படி மூன்று அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் ஒருவர் பார்ப்பனர். ஏனைய இரண்டு பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களின் நியமனம் செல்லாது என்றும், இதற்கு முன்பு பணியில் இருந்த பார்ப்பனர்களுக்கே அர்ச்சகர் பணி கொடுக்கப்பட வேண்டும் என்றும், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் அளித்த தீர்ப்பைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு இவ்விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மார்ச் 9, 2023 மாலை 4 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் இரா. உமாபதி முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் தொடக்கமாக கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, காஞ்சிபுரம் ரவிபாரதி உரையாற்றினார். பின், தோழர் நாத்திகன், இரண்யா, ப்ரீத்தி ஆகியோர் ‘தூங்குறியா நடிக்கிறியா ரங்கநாதா?’ பாடல்களைப் பாடினர். அனைத்து சாதியினர் அர்ச்சகர் பயிற்சி மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன், பணி...

மதுரையில் மணிமேகலை – மா.பா.மணி அமுதன் சுயமரியாதை இணையேற்பு விழா

மதுரையில் மணிமேகலை – மா.பா.மணி அமுதன் சுயமரியாதை இணையேற்பு விழா

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை மாவட்டச் செய லாளர் மா.பா மணியமுதன் – மணிமேகலை ஆகியோரின் சுயமரியாதை இணையேற்பு விழா 26.02.23 ஞாயிறு அன்று மதுரை மேலூர் ரஹ்மா திருமண மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் துவங்கி நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். இணையேற்பு விழாவிற்கு ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதியமான் முன்னிலை வகித்தார். விழாவின் துவக்க நிகழ்வாக வானவில் இன உணர்வுப் பாடலைப் பாடினர். மணமக்களை வாழ்த்தி அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் பசும்பொன் பாண்டியன், தமிழ் தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர்கள் வன்னி அரசு, கனியமுதன், தமிழ்மண் தன்னுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன், கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் பேசினர். தோழர்களின் வாழ்த்துரைகளுக்கு பின்பு கழகத் தலைவர்...

ஜாதி மத மறுப்புத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா?

ஜாதி மத மறுப்புத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா?

¨  மணமுறிவு பெற்றவர்கள் ¨   துணையை இழந்தவர்கள் ¨  மாற்றுத் திறனாளிகள் – ஆகியோரும் Manitham Matrimony இணையதளத்தில் இலவசமாகப் பதிவு செய்து பயன் பெறலாம். இச்சேவையை Google Play  அலைப்பேசி செயலியாகவும் (Mobile Apps) பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம். மனிதம் திருமண தகவல் நிலையம் எண்.5/9, பாலமுத்துகிருஷ்ணா தெரு தர்மாபுரம், தியாகராய நகர், சென்னை – 600 017. அலைபேசி எண். 7604977781 மின்னஞ்சல் : manithammatrimonial@gmail.com web: http//manithammatrimony.com பெரியார் முழக்கம் 16022023 இதழ்

ஆளுநரைக் கண்டித்து கழகம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள்

ஆளுநரைக் கண்டித்து கழகம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள்

ஆளுநரை கண்டித்து பல்வேறு இடங்களில் நடந்த கழகம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள். மேட்டூர் : ஆளுநரே வெளியேறு! ஒன்றிய அரசே, ஆணவம் பிடித்த ஆளுநரைத் திரும்பப் பெறு என்ற முழக்கத்தோடு மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்பு களுடன் 12.01.2023 வியாழன் மாலை 4.30 மணியளவில் மேட்டூர் சின்ன பார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டம் மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா தலைமையில் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்தில் குமரப்பா, ஆளுநரைக் கண்டித்து கண்டன முழக்கமிட அனைவரும் முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப் புலிகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் சி.சதீஷ், சிபிஐ (எம்) மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.இளங்கோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேட்டூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார், ளுனுஞஐ கட்சியின் மேட்டூர் சட்டமன்ற தொகுதி தலைவர் ஃபைரோஸ், திராவிடர் விடுதலைக்கழகத் தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொளத்தூர் ஒன்றிய செயலாளர் சேட்டு...

வள்ளலார் வரலாறு திரும்புகிறது

வள்ளலார் வரலாறு திரும்புகிறது

சிதம்பரத்துக்கு அருகில் உள்ள மருதூர் கிராமத்தில் 1823 அக்டோபரில்  கருணீகர் (கணக்குப் பிள்ளை) மரபில் பிறந்தவர் இராமலிங்கனார். அவர் முதலில் பாடிய ‘பாமாலை’யில் “பெருநெறி பிடித் தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்று எழுதினார். உருவ வழிபாடு, வேதம், ஆகமங்களைக் கடுமையாக எதிர்த்தார். 1872 ஜன. 25இல் வடலூரில் உருவ வழிபாடு இல்லாமல் ஒளியை மட்டுமே வணங்கும் ‘ஞான சபை’யைத் தொடங்கினார். இது எல்லா மதங்களுக்கும் பொதுவானது என்று அறிவித்தார். தில்லை நடராசன் பக்தராக இருந்தவர் தான்; அங்கே வழிபடச் சென்றபோது தீட்சதர்கள் அனுமதிக்கவில்லை. சினமடைந்த அவர், “இந்தக் கோயிலுக்கு எதிராக ஒரு தலத்தை உண்டாக்கி அங்கே நடராசனை அழைத்துக் கொள்ளப் போகிறேன்” என்று அறிவித்தார். (ஆதாரம்: 1904இல் பு. பாலசுந்தர நாயகர் எழுதிய “இராமலிங்க பிள்ளை பாடல்) 50 ஆண்டுகாலம் வாழ்ந்த வள்ளலார், கடைசி 10 ஆண்டு காலத்தில் தனது சைவம், முருகன், ஆகம பக்திகளைத் துறந்தார்....

பெண்களையும், சூத்திரர்களையும் அவமதிக்கும் மனுசாஸ்திரம்

பெண்களையும், சூத்திரர்களையும் அவமதிக்கும் மனுசாஸ்திரம்

பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது தகப்பனாரின் கட்டுப்பாட்டிலும் திருமணமான பிறகு கணவனின் கட்டுப்பாட்டிலும் கணவன் இறந்த பிறகு, பிள்ளைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டுமே தவிர, பெண்கள், தாங்கள் விரும்புகிறபடி (சுயமாக சிந்தித்து) ஒரு போதும் இருக்கக் கூடாது.” (மனு சாஸ்திரம் அத்தியாயம் 5, சுலோகம் 148.) கணவன் துராசாரமுள்ளவனாக “(ஒழுக்கக்கேடுகள் உள்ளவனாக) இருந்தாலும் அன்னிய ஸ்திரீலோலனாக (வேறு பெண்களோடு உறவு வைத்துக் கொள்ள துடிப்பவன்) இருந்தாலும், பதிவிரதைகளான பெண் என்பவள், அந்தக் கணவனை தெய்வத்தைப்போல் வணங்க வேண்டும்.” (மனு சாஸ்திரம், அத்.5, சுலோகம் 154) பெண்கள் துரோகிகள் ; பெண்களைக் கொல்லுவது பாவமில்லை. படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.   (அத்தியாயம் 9 ; ஸ்லோகம் 17) பெண்களையும், பிராமணர் அல்லாதவரையும் கொல்லுவது பாவமில்லை. (அத்தியாயம் 11; ஸ்லோகம் 65) சூத்திரர்கள் அனைவரும் பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள். சூத்திரர் என்போர் ஏழு...

பெரியார் பிறந்தநாள்; சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம்!

பெரியார் பிறந்தநாள்; சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம்!

அது என்ன ‘சனாதனம்’? வர்ணாஸ்ரம தர்மத்தின் மற்றொரு பெயர் தான் அது! மனு சாஸ்திரம், இறந்து போன மூத்த சங்கராச்சாரி, இந்துக்களின் புனித நூல்கள் எல்லாம் இதைத் தான் கூறுகின்றன. பிறப்பால் ஒருவன் ‘பிராமணன்’ –  அவனுக்கு அடிமை, பெரும்பான்மை உழைக்கும் மக்களான சூத்திரர்கள், பஞ்சமர்கள்  மற்றும்  பெண்கள். இது பிரம்மாவே கூறியது என்று மனுதர்மம் கூறுகிறது. அந்த சனாதனம், இப்போது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி என்று அதிகார பலத்துடன் தமிழர்களாகிய நம்மீது படை எடுத்து வருகிறது. மொழி, இன அடையாளங்களை ஒழிக்க, மாநிலங்களையே இல்லாது ஆக்க நடக்கும் முயற்சி – சனாதனம். நீட் தேர்வைத் திணிப்பது – சனாதனம். காசியை தலைநகராக்கி, மனுதர்மத்தை அரசியல்  சட்டமாக்கி இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களின் வாக்குரிமையைப் பறிப்போம் என்று சாமியார்கள் கூட்டம் வாரணாசியில் கூடி இந்துராஷ்டிரத்துக்கு புதிய அரசியல் சட்டத்தை அறிவித்திருக்கிறதே – அது சனாதனம். தமிழ்நாட்டிடமிருந்து ஒரு ரூபாயை வாங்கி 35...

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் 29-5-22 அன்று நடைபெற்ற செஞ்சட்டைப் பேரணி- வர்க்க வருண ஒழிப்பு மாநாட்டின் தீர்மானங்கள்…

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் 29-5-22 அன்று நடைபெற்ற செஞ்சட்டைப் பேரணி- வர்க்க வருண ஒழிப்பு மாநாட்டின் தீர்மானங்கள்… 1 பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்பல் செய்யும் கருத்தாளர்களாகவும், பொதுவுடைமைக் கட்சித் தோழர்களாகவும் இருந்து களம் கண்டு எதிரிகளால் அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஈகியர்களுக்கு இம் மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. மொழி உரிமைகளுக்காகவும், இந்தி, சமஸ்கிருத, ஆங்கில மொழித் திணிப்புகளை எதிர்த்து வீரச்சாவு எய்தியவர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. சாதிய வன்கொடுமைகளை எதிர்த்தும், பார்ப்பனிய மற்றும் மதவெறிகளை எதிர்த்தும் களமாடி உயிர் ஈந்த எண்ணற்ற ஈகியர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. மேலும், தமிழீழ மண்ணின் உரிமைகளுக்காகப் போராடி உயிர் ஈந்த இலக்கக் கணக்கானவர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. 2 தமிழ்நாட்டிற்குள் செயல்படுகின்ற காப்பீட்டுக்கழகம்( எல் ஐ சி) உள்ளிட்ட பொதுத் நிறுவனங்களையெல்லாம் அம்பானி, அதானி உதுறைள்(உள்ளிட்டத் தனியார்துறை நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துவரும் இந்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.. தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் எல்ஐ சி, தொடர்வண்டித் துறை...

கழகத் தலைமையகத்தில் நடந்த ஜாதி மறுப்பு – புரட்சிகர மணவிழா

கழகத் தலைமையகத்தில் நடந்த ஜாதி மறுப்பு – புரட்சிகர மணவிழா

கணவனை இழந்த இரண்டு குழந்தைகளுடன் வாழும் சித்ராவிற்கும்- ஹரிகிருஷ்ணனுக்கும் 25.04.22 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. இணையர் கழக வார ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு நன்கொடையாக 1000 ரூபாய் வழங்கினர்.   பெரியார் முழக்கம் 05052022 இதழ்

மாநில உரிமைகளைப் பறிக்காதே! கல்வி உரிமைகளைத் தடுக்காதே!  மத வெறியைத் திணிக்காதே!  நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’

மாநில உரிமைகளைப் பறிக்காதே! கல்வி உரிமைகளைத் தடுக்காதே! மத வெறியைத் திணிக்காதே! நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’

இடஒதுக்கீடு, சமூக நலனுக்கான திட்டங்கள், மாநில சுயாட்சி, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பெண்களை அதிகாரப்படுத்தல், மதவெறி யற்ற – மக்களின் ஒற்றுமை, மூட நம்பிக்கையற்ற அறிவியல் சமுதாயம் – இவை திராவிடர் இயக்கம் தமிழ்நாட்டுக்குத் தந்த அடையாளங்கள். அனைத்துப் பிரிவு மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய திட்டங்களை உருவாக்குவது என்பதே நமது தமிழ்நாட்டின் தனித்துவம். இந்த அடையாளங்கள், இப்போது ஒன்றிய ஆட்சியால் அழிக்கப்படுகின்றன; படிப் படியாக மறுக்கப்படுகின்றன; இதை எதிர்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் போராட்டங்களை நடத்திக் கொண்டு வருகிறார். திட்டங்களை வகுத்து செயல் படுத்துகிறார். அதில் வெற்றி களையும் குவித்து வருகிறார். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டு எடுப்பது ஒரு பக்கம், மற்றொரு பக்கம் வலிமையான தமிழகத்தை கட்டமைப்பதற்கான திட்டங் களை உருவாக்குவது என்று, முதலமைச்சர் ஒரு கையில் வாளும், மற்றொரு கையில் கேடயமும் ஏந்தி நிற்கிறார். இதுதான் நாம் கூறும் “திராவிட மாடல்”. என்ன நடக்கிறது ? பெட்ரோல் டீசல் விலை...

திராவிடன் மாடல்: ஆரிய-திராவிடர் போராட்டத்தின் புதிய வடிவம்

திராவிடன் மாடல்: ஆரிய-திராவிடர் போராட்டத்தின் புதிய வடிவம்

இந்த நாட்டின் அரசியல், ஆரிய-திராவிடர் போராட்டமேயாகும் என்று பெரியார் சுட்டிக் காட்டினார். அதுவே ‘திராவிடன் மாடல்’, ஆர்.எஸ்.எஸ். மனுவாதத்துக்குமான போராட்டமாக பரிணமித்து இருக்கிறது என்பதை திராவிடர் விடுதலைக் கழகம் (தி.வி.க.) சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஏப்.2, 3 தேதிகளில் ஈரோட்டில் முறையே தி.வி.க. தலைமைக் குழுவும் செயலவையும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை யிலும் நடந்தது. இரண்டாம் நாள் (ஏப்.3, 2022) ஈரோடு  கே.கே.எஸ்.கே. மண்ட பத்தில் நடை பெற்ற செயலவைக் கூட்டத்தில் தீர்மானங்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்தார். 90 உறுப்பினர்களில் 86 பேர் பங்கேற்றனர். அதில் நிறைவேற்றப்பட்ட ‘திராவிடன் மாடல்’ குறித்த தீர்மானம்: திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினரும், கழகத்தின் செயல்வீரரும் எளிய முறையில் தோழர்களுடன் பழகி கழகக் கொள்கைகளை பரப்புவதில் முன்னின்று செயல்பட்ட மடத்துக்குளம் மோகன் மற்றும் பெரியாரிய அம்பேத்கரிய சிந்தனைகளை தனது புரட்சிகரமான...

குமாரபாளையத்தில் பெரியாரிய – இடதுசாரி அமைப்பினர் இணைந்து நடத்திய மணவிழா

குமாரபாளையத்தில் பெரியாரிய – இடதுசாரி அமைப்பினர் இணைந்து நடத்திய மணவிழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் குமாரபாளையம் கம்பன் நகரில் 05.02.2021 அன்று காலை 11 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக நகரத் தலைவர் மீ.த.தண்டபாணி தலைமையில் தலித்குமார் வரவேற்புரை நிகழ்த்த, மு. கேப்டன் அண்ணாதுரை, வழக்கறிஞர் கார்த்திகேயன், ஏ. தேவி, எழில்சேரன், பி.ஏ., பி.எல்., பி.லிட்., வழக்குரைஞர் முன்னிலை வகிக்க வாழ்த்துரையாக மு.சாமிநாதன், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் வேணுகோபால், அன்பழகன் (இலக்கியத் தளம்), பொன் கதிரவன், மார்க்சிய கம்யூனிஸ்ட் (மார்க்சிய-லெனினிஸ்ட்) வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக மணமக்கள் சரண்யா, பி.ஏ., ச. நந்தக்குமார், பி.ஏ.,  ஆகியோருக்கு உறுதிமொழி கூறி நகரத் தலைவர் வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்தி வைத்தார். குருவை வேல்முருகன், முருகாண்டி, வடிவேல் மற்றும் குமாரபாளையம் கழகத் தோழர்களும், கழகக் குடும்பங்களும், மாவட்டச் செயலாளர் மு.சரவணன், முத்துப்பாண்டி மற்றும் தோழர்களும் கலந்து கொண்டனர். இணையேற்பு விழாவில் அனைவருக்கும் தேநீர் விருந்து வழங்கப்பட்டது. தேவி-மாதேஸ்வரன் நன்றி கூற நிகழ்வு நிறைவடைந்தது. ‘புரட்சிப்...

மா.வேழவேந்தன் இல்ல ஜாதி-மத மறுப்பு மணவிழா

மா.வேழவேந்தன் இல்ல ஜாதி-மத மறுப்பு மணவிழா

சென்னை மாவட்ட கழகத் தலைவர் வேழ வேந்தன்-பேபி இணையரின் மகள் இளவரசி – ஆம்பூர் முபீன் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வு 3.2.2021 அன்று சென்னை இராயப் பேட்டை பகல் 11 மணியளவில் நடந்தது. இது ஜாதி-மத மறுப்பு திருமணமாகும். மண விழாவில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி பங்கேற்று வாழ்த்தினர். சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு நன் கொடையாக ரூ.5,000/- பொதுச்செயலாளரிடம் வேழவேந்தன் வழங்கினார். பெரியார் முழக்கம் 11022021 இதழ்

இணையம் வழியாக கழகத் தோழர்களின் மண விழாக்கள்

இணையம் வழியாக கழகத் தோழர்களின் மண விழாக்கள்

கொரோனா ஊரடங்கில் இணையதளம் வழியாக இரண்டு கழகத் தோழர்களின் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. 01-06-2020, திங்கள் காலை 11:30 மணிக்கு ஹரிஷ்குமார் – ரூபஸ்ரீ ஆகியோரின் இணையேற்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி வரவேற்புரையாற்றினார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமை வகித்தார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். Team Link வாயிலாக இணையேற்பை நடத்தி வைத்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப் புரையாற்றினார். இறுதியாக தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தென்றல் நன்றி கூறினார். 27.08.2020 அன்று காலை 10 மணியளவில், சென்னை தலைமை அலுவலகத் தில் அருண்குமார்-சிவஜோதி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வு நடை பெற்றது. தென் சென்னை மாவட்ட செய லாளர் உமாபதி தலைமை வகித்தார். பேரா சிரியர் சரஸ்வதி இணை யேற்பை நடத்தி வைத்தார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர்...

திவிக தலைமைக் குழு கூட்டம் 30062020

திவிக தலைமைக் குழு கூட்டம் 30062020

*திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு தீர்மானங்கள் :* திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக்குழுக் கூட்டம் 30.06.2020 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் டீம் லிங்க் செயலி வழியாக நடைபெற்றது. தலைமைக் குழுக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தோழர் விடுதலை க.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமைக் குழுக் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி.குமரன், அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி, இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராஜன், அன்பு தனசேகர், சூலூர் பன்னீர்செல்வம், உமாபதி, மடத்துக்குளம் மோகன், அய்யனார், இளையராஜா, காவலாண்டியூர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமைக் குழுக் கூட்டம் காலை 10.30 மணி அளவில் துவங்கி மதியம் 2 30 மணி வரை நடைபெற்றது. கழக அமைப்பின் இணையதள செயல்பாடுகள், கருத்தரங்குகள், கொரோனா பேரிடர் காலத்தில்...

குடியுரிமையைப் பறிக்கும் கணக்கெடுப்புகளை புறக்கணிப்போம்!

குடியுரிமையைப் பறிக்கும் கணக்கெடுப்புகளை புறக்கணிப்போம்!

ரேஷன் கார்டு, ஓட்டுப் போட அட்டை – ஆதார், கார் ஓட்ட உரிமம் – இதுதான் நமக்குத் தெரிந்த நம்மிடம் உள்ள அடையாள அட்டைகள். ஆனால், டில்லியில் மோடி ஆட்சிக்கு இந்த அடையாள அட்டைகள் போதாதாம்; புதுப்புது அடையாளங்களைக் கேட்கிறது. அது என்ன அடையாளம் தெரியுமா? நாம் இந்த நாட்டின் குடிமக்களாக – அதாவது இந்தியாவைச் சார்ந்தவர்கள்தான் என்பதை நாமே நிரூபிக்க வேண்டுமாம்; அப்போதுதான் இந்த நாட்டில் இருக்க முடியுமாம்; இல்லாவிட்டால் நாம் நாடற்ற அனாதைகளாம்! நாம் – இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை நிரூபிக்க புதிய கணக்கெடுப்பு நடத்தப் போகிறார்கள். இது எப்போதும் எடுக்கப்படும் ‘சென்சஸ்’ – அதாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அல்ல. அதில் நாம் சொல்வதைக் கேட்டு எழுதிக் கொண்டு போய் விடுவார்கள். இப்போது எடுக்கப்படும் கணக்கு என்பது வேறு; அது என்ன புது கணக்கெடுப்பு? அதற்குப் பெயர் ‘தேசிய மக்கள் தொகைப் பதிவேடு’. இதற்கு நாம்...

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை அறைகூவல்

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை அறைகூவல்

பா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சிகளை முறியடிக்க மக்களை ஒன்று திரட்டுவோம் பா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சியைத் தடுக்க மக்கள் சக்தியை அணி திரட்டுவோம் என்று திராவிடர் விடுதலைக் கழக செயலவை அறைகூவல் விடுத்துள்ளது. நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் ஆபத்தையும் செயலவை எச்சரித்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவையில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: இந்தியாவின் மதச் சார்பற்ற அடையாளத்தை உருக்குலைத்து ‘இந்து இராஷ்டிரமாக்கும்’ முயற்சிகளை பா.ஜ.க. நடுவண் ஆட்சி தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கான வழிகாட்டும் அதிகாரங்களை ஆர்.எஸ்.எஸ். கையில் எடுத்துக் கொண்டுள்ளது. மெஜாரிட்டி மக்களாக இந்துக்களைக் கொண்ட ஒரு நாடு இந்து நாடாகவே இருக்க வேண்டும் என்று சங்பரிவாரங்கள், பா.ஜ.க. முன் வைக்கும் கருத்துகளின் உள்ளடக்கம் மிக மிக ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ‘மெஜாரிட்டி இந்துக்கள்’ போர்வைக்குள் மைனாரிட்டி பார்ப்பனர்கள் புகுந்து கொண்டு மெஜாரிட்டி இந்துக்களின் பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகளை சிதைத்து, பார்ப்பன சமஸ்கிருதப் பண்பாடே...

கழக ஏடுகளுக்கு நன்கொடை

கழக ஏடுகளுக்கு நன்கொடை

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட வடசென்னை கழக  இணையர்கள் தினகரன்-ஜெயந்தி ஆகியோர் குழந்தைப் பிறந்த மகிழ்வாக கழக ஏடுகளின் வளர்ச்சிக்கு ரூ.10,000/-த்தை பெரியார் பிறந்த நாளான செப். 17 அன்று பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் வழங்கினர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 03102019 இதழ்

பெரியார் யுவராஜ்-லீலாவதி  ஜாதி-தாலி சடங்கு மறுப்பு மணவிழா

பெரியார் யுவராஜ்-லீலாவதி ஜாதி-தாலி சடங்கு மறுப்பு மணவிழா

சென்னை மாவட்ட ‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட அமைப்பாளரும் கழக செயற்பாட்டாளருமான பெரியார் யுவராஜ்-லீலாவதி ஜாதி-சடங்கு-தாலி மறுப்பு மணவிழா, செப். 22, 2019 அன்று மயிலாடுதுறை சோழம்பேட்டை கே.ஜி.ஆர். திருமண மண்டபத்தில் மாலை 7 மணியளவில் நிகழ்ந்தது. நாகை மாவட்ட கழகச் செயலாளர் மகேஷ் வரவேற்புரையாற்றினார். தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று மணவிழாவை நடத்தி வைத்தார். முன்னதாக கோவை கழகத் தோழர் இசைமதி – பெண்ணுரிமைப் பாடல் பாடினார். கோவை கழக செயல்பாட்டாளர் நிர்மல்குமார், கழகத் தோழர் இசைமதி ஆகியோர் ஜாதி மறுப்பு மணவிழாவை பொதுக் கூட்ட மேடையில் நடத்திக் கொண்டனர். தோழர் இசைமதியின் சகோதரியே லீலாவதி என்பது குறிப்பிடத்தக்கது. கொள்கையை உறவாக்கிக் கொள்ளும் பண்பாட்டுப் புரட்சியை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நிகழ்த்தி கழகத்துக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். கோவையிலிருந்து தனி...

லீலாவதி-பெரியார் யுவராஜ் ஜாதி – தாலி – சடங்கு மறுப்பு சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா !

லீலாவதி-பெரியார் யுவராஜ் ஜாதி – தாலி – சடங்கு மறுப்பு சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா !

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாடுதுறை, சோழம்பேட்டை, கே.ஜி.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விணையேற்பு விழாவில் இருவீட்டார், கழகத்தின் முன்னணி நிர்வாக்கிகள், தோழர்கள் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் வழங்கப்பட்டது.

கனிமொழி- பத்மநாதன் திருமணம்

கனிமொழி- பத்மநாதன் திருமணம்

கோவை போத்தனூரில் உள்ள சங்கம் திருமண மண்டபத்தில் 8.9.2019 அன்று மாலை 7 மணிக்கு தோழர்கள் கனிமொழி – பத்மநாதன் ஆகியோருக்கு சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை கழகத் தலைவர் கொளத்தூர்மணி தலைமையேற்று நடத்தி வைத்தார். திமுகவின்  முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, அந்தியூர் செல்வராஜ், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான்,  தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி உரையாற்றினர். திருமணத்தில் கோவை பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 19092019 இதழ்

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை

மண்ணின் மைந்தர்களின்  வேலை வாய்ப்பு உரிமையைப் பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை திணிக்காதே! தமிழ் நாட்டை வட நாடாக்காதே! நாம் மண்ணின் மைந்தர்கள் தலைமுறை தலைமுறையாக இந்த மண்ணில் பிறந்தோம், வாழ்கிறோம், ஆனாலும், பிற வட மாநிலங்களைவிட – நாம் வேறுபட்டுள்ளோம். எவ்வளவு ஒடுக்கப்பட்ட ஜாதியானாலும் சரி; ஏழ்மையும், வறுமையும் நம்மை வாட்டினாலும் சரி; எப்பாடுபட்டாவது – நமது மகளை,  மகனை  படிக்க  வைக்க வேண்டும்; உயர் கல்வியைத் தர வேண்டும் என்ற கொள்கையே நமது பண்பாடு! பெரியார் இட ஒதுக்கீட்டுக்காக 1919 முதலே போராடினார். உரிமையைப் பெற்று தந்தார். காமராசர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்- அந்த  உரிமைகளை படிப்படியாக வளர்த்தார்கள். அம்பேத்கர் சட்டத்தின் வழியாக நமக்கான இட ஒதுக்கீட்டு உரிமைகளை உறுதிப்படுத்தினார். வி.பி.சிங் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தந்தார். போராடிப் பெற்ற சமூக நீதி உரிமைகளை தற்போது பறிகொடுத்து வருகிறோம் . இப்போது...

தேன்மொழி – மணிகண்டன் ஜாதி-சடங்கு மறுப்பு மணவிழா

தேன்மொழி – மணிகண்டன் ஜாதி-சடங்கு மறுப்பு மணவிழா

கழகத்தின் மாவட்ட செயலாளர் மேட்டூர் கி.கோவிந்தராஜ்-மு.கீதா இணையரின் மகள் கீ.கோ. தேன்மொழி – திருப்பூர் நா. பரமசிவம்-ப. மாலதி ஆகியோரின் மகன் கழகத் தோழர் ப. மணிகண்டன் ஆகியோர் ஜாதி-சடங்கு மறுப்பு மண விழா ஜன. 3, 2019 பகல் 11 மணியளவில் மேட்டூர் அணை அரசப்பா திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணவிழாவை நடத்தி வைத்தார். மாவட்ட கழகத் தலைவர் ப.கு. சூரிய குமார் வரவேற்புரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அ. தமிழரசு, காவல் உதவி ஆய்வாளர் (ஓய்வு) நா. முனியன் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினர் இசை நிகழ்ச்சியும் பறை இசையும் நடைபெற்றது. தமிழ்நாடு முழுதுமிருந்தும் கழகத் தோழர்கள் மணவிழாவுக்கு வந்திருந்தனர். அனைவரும் ‘தமிழின உரிமைக்கு எதிரி யார்?’ நூல் பரிசாக வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 07022019 இதழ்

பாரி சிவா-ஜெயந்தி ஜாதி மறுப்பு மணவிழா

பாரி சிவா-ஜெயந்தி ஜாதி மறுப்பு மணவிழா

தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவா எனும் சிவக்குமார் – ஜெயந்தி (கழகத் தோழர் முழக்கம் உமாபதியின் சகோதரி) ஜாதி மறுப்பு மணவிழா ஜனவரி 27ஆம் தேதி பெண்ணாடம் வள்ளலார் மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடந்தது. இயக்குனர் கவுதமன் வாழ்த்துரை வழங்கினார்.  கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், பரப்புரைச் செயலாளர் பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் உமாபதி, இளையராஜா, சூலூர் பன்னீர் செல்வம் மற்றும் தலைமைக் கழகப் பொறுப்பாளர்களும், தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தனிப் பேருந்தில் மணவிழாவுக்கு வந்திருந்தனர். மணமக்கள் வரவேற்பு சென்னை இராஜா அண்ணாமலைபுரம் சமூக நலக் கூடத்தில் பிப்ரவரி 3ஆம் தேதி மாலை சிறப்புடன் நிகழ்ந்தது. கழகத் தோழர்கள் உறவினர்கள் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சி நிதிக்கு மணமக்கள்...

சாதியைக் கட்டியழுதால்… நாதியற்றுப் போவோம் நாம்!

சாதியைக் கட்டியழுதால்… நாதியற்றுப் போவோம் நாம்!

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள் முடிவுகட்டுவோம்! முடிவுகட்டுவோம்! சாதி ஆணவக் கொலைகளுக்கு முடிவுகட்டுவோம் முடிவுகட்டுவோம்! உரக்கச் சொல்வோம்! உரக்கச் சொல்வோம்! எல்லோரும் நிகரென்று உரக்கச் சொல்வோம்! தமிழக அரசே! துணை போகாதே! தமிழக அரசே! தமிழக அரசே! சாதி ஆணவக் கொலைக்கு எதிராய் தனிசட்டம் இயற்றிடு! கைதுசெய் கைதுசெய்! கொலை செய்த கூலிப்படையை உடனடியாக கைதுசெய்! அமைச்சர்களே, அமைச்சர்களே ஊர்ப்பணத்தைக் கொள்ளையிட்டு ஊர்வம்புப் பேசிக்கொண்டு ஊர்வலம் போவதற்கா அமைச்சர் பதவி உங்களுக்கு? தமிழர்களே! தமிழர்களே! சாதியைக் கட்டியழுதால் நாதியற்று போவோம் நாம்! பெற்றெடுத்த மகளையும் மணம்முடித்த மருமகனையும் மகள் வயிற்றுப் பிள்ளையையும் கொல்லச் சொல்லும் சாதிவெறி! சாதிவெறி போதையது! தாயுணர்ச்சிக் கொன்றுவிடும் தந்தையுணர்ச்சிக் கொன்றுவிடும் மாந்தநேயம் கொன்றுவிடும்! பழக்கமாம்! வழக்கமாம்! வழக்கறிஞர் வேலையும் மருத்துவப் படிப்பும் எந்த சாதிப் பழக்கமய்யா! பாட்டன் முப்பாட்டன் பட்டப் படிப்பு படிச்சானா? இடஒதுக்கீடு வாங்கிக்கிட்டு அரசு வேலைக்குப் போனானா? எல்லாமே மாறும்போது மணமுறைதான் மாறாதா? மந்திரிப்பதவி வாங்கிகிட்டு...

ஜாதி ஆணவப் படுகொலைகளையும் ஜாதிய சமூகத்தின் வெறுப்பு  உளவியலையும் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது  ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம்.

ஜாதி ஆணவப் படுகொலைகளையும் ஜாதிய சமூகத்தின் வெறுப்பு உளவியலையும் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம்.

அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய ஜாதி வெறி, இப்போது தனது உருவத்தை மாற்றிக் கொண்டு நுட்பமாக செயல்படுவதைப் படம் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டு கிறது. நெல்லை மாவட்டம் புளியங்குளம் கிராமம் கதைக்களம். புளியங்குளத்து மக்கள் என்றாலே,  அவர்கள், ‘தலித் மக்கள் தான்’ என்று ஊரை வைத்தே ஜாதி அடையாளம் போர்த்தப்படுகிறது. அப்பகுதியில் 2005ஆம் ஆண்டு நிலவிய ஜாதியப் படிநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையை இயல்பாகக் கண் முன் கொண்டு வந்து நிறுத்து கிறார்கள், ஒளிப்பதிவாளரும், இயக்குனரும். திரைப்படங்கள் தொடங்குவதற்கு முன்பு அரசு ஆணைப்படி கட்டாயமாகக் காட்டப் படும் காட்சிகளான “புகைப் பிடிப்பது – உயிருக்கு ஆபத்து; புற்று நோயை உருவாக்கும்; மது குடிப்பது – உடலுக்குக் கேடானது” என்ற விளம்பரத்தைத் தொடர்ந்து, “ஜாதியும் மதமும் – மனிதநேயத்தைக் கொல்லும்” என்ற அறிவிப் புடன் படம் தொடங்குகிறது. கதையின் நாயகன், உயிருக்கு உயிராக நேசிக்கும் அவனது வேட்டை நாய் ‘கருப்பியை’ உள்ளூர்...

சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம்

சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம்

திராவிடர் விடுதலைக்கழகத்தின் முன்னணி அமைப்பு ஆகும். திராவிடர் விடுதலைக்கழகத்தின் பிரச்சாரப்பணிகளில் மக்களை ஈர்க்கும் கலை வடிவங்களை தோழர்களுக்கு பயிற்றுவித்து கலைவடிவில் பெரியாரியலை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் செயல்படுகிறது. ஆண்டாண்டு காலமாக நாட்டின் பெரும்பான்மை மக்களை அடக்கி, அடிமைப்படுத்தி வைத்துள்ள வேத, இந்து மதம் உருவாக்கி வைத்துள்ள இன்றளவிலும் நடைமுறையில் உள்ள பிறப்பு முதல் இறப்பு வரையிலான இந்து மதத்தின் அனைத்து வகைச் சடங்குகள், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள் அனைத்தையும் அழித்து ஒழித்து இந்து வேத வாழ்வியலுக்கு எதிரான பெரியாரியல் வாழ்வியலை நடைமுறைப் படுத்தும் பணியிலும்,ஜாதி மறுப்புப் பண்பாட்டைச் செயலாக்கும் நோக்கிலும் செயல்படுகிறது. கலை துறையில் முற்போக்கு கருத்துகளின் மூலம் சமூக விடுதலைக்கு உதவிடும் வகையில் படைப்புகளை அளித்திடும் கலைஞர்களை பாராட்டி ஊக்குவித்து வருகிறது. சுயமரியாதை கலை பண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளர்கள் கொளத்தூர் அ.குமார் தலைமை செயற்குழுஉறுப்பினர் தொடர்பு எண் – 9842757550

மனிதக்கழிவை மனிதன் அகற்றும் அவல நிலையை போக்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மனிதக்கழிவை மனிதன் அகற்றும் அவல நிலையை போக்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மனிதக்கழிவை மனிதன் அகற்றும் அவல நிலையை போக்கக் கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம்! _____________________ விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் விஞ்ஞான யுகத்திலே மலக்குழி கழிவுகளை மனிதன் அள்ளுவது அவமானம்! ஆலயத்தில் மணி அடிக்க எந்திரம் உள்ள நாட்டிலே அடைப்பை நீக்க கருவியில்லை ஆளும் அரசுகளுக்கு வெக்கமில்லை! வெக்கக்கேடு மானக்கேடு காரித் துப்புது உலகநாடு. __________________ தூய்மை இந்தியா நாடகங்கள் தொலைகாட்சி விளம்பரங்கள் தெருவைப் கூட்டும் புகைப்படங்கள்! தேடிக்கொள்ளும் விளம்பரங்கள் மோடி அரசின் மோசடிகள் காலியாகுது வரிப்பணங்கள் ஏமாற்றாதே! ஏமாற்றாதே! எளியவர்களை ஏமாற்றாதே! வஞ்சிக்காதே வஞ்சிக்காதே தூய்மைத் தொழிலாளரை வஞ்சிக்காதே! ___________________ தமிழக அரசே! தமிழக அரசே! அருந்ததியர்களின் வாக்குகளால் ஆட்சியை பிடித்த அதிமுக அரசே! அண்டை மாநிலம் கேரள அரசு அறிமுகம் செய்து உள்ள கழிவகற்றும் எந்திரமாம் பேண்டிக்கூட் ரோபோவை தமிழகத்தில் கொண்டுவர தயக்கம் ஏன்? தயக்கம் ஏன்? கொண்டு வா!...

கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்

கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்

வீரவணக்கம் வீரவணக்கம் எங்கள் தோழர் கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்…. வீரவணக்கம் வீரவணக்கம்! பெரியாரின் மாணவன் அண்ணாவின் ஆசைத்தம்பி! தலைவர் கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! அனைத்து சாதியினரும் அர்ச்சகர் அக்கி அழகு பார்த்த தலைவனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! மனிதனை மனிதன் இழுக்கும் கைரிக்ஷா முறையை ஒழித்த தலைவனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! இறந்தும் போராடிய போராடி வெற்றிகண்ட போராளி தலைவனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! 69சதவீத இடஒதுக்கீட்டை பெற்று தந்த சமூகநீதி நாயகனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! திராவிடத்தின் அடையாளம் அரக்கர் கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! சமத்துவபுர நாயகனுக்கு சமூகநீதி காவலனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! மானமிகு சுயமரியாதைகாரர் டாக்டர் கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! ஹிந்தியை அடித்துவிரட்டிய ஹிந்து எதிர்ப்பு போராளி தமிழின தலைவர் கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்….. பெண்களுக்கு சொத்துரிமை பெற்று தந்த தலைவனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! எங்கள் தோழர் கலைஞருக்கு அசுரர் குல தலைவனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! ராமன் என்ன இஞ்சினியரா என்று கேட்ட தலைவனுக்கு...

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் – பெரியார் சிலையில் கைவைப்பானா ?

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் – பெரியார் சிலையில் கைவைப்பானா ?

வாழ்க! வாழ்க! வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே! வாழ்வைத் தந்தார் நம்பெரியார்! வழியைத் தொடர்ந்தார் நம்அண்ணா! இழிவைத் தடுத்த தலைவர்களை இழிவு செய்ய விடமாட்டோம்! எங்கள் தலைவர் பெரியாரை இழிவு செய்தால் மிதிபடுவாய்! எங்கள் தந்தை சிலைமீது எச்சில் துப்ப தெருநாயா? எச்சில் துப்பும் தெருநாய்கள் இனத்தைக் கெடுக்க விடமாட்டோம்! கைது செய் கைது செய் எச்ச ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய் விடமாட்டோம் விடமாட்டோம் வடமொழி திணிக்க விடமாட்டோம் வாலை ஆட்ட விடமாட்டோம் தமிழைத் தாழ்த்த விடமாட்டோம்! தந்தையைப் பழிக்க விடமாட்டோம்! மதவெறி பரப்ப விடமாட்டோம்! மடமையைத் திணிக்க விடமாட்டோம்! பெரியார் நாடு தமிழ்நாடு! பிளவை வளர்ப்பது வடநாடு! இந்தி திணிக்கத் துடிக்கின்றார் இளைய தமிழரை அழிக்கின்றார் ‘நீட்’டால் இறந்த அனிதாவை நினைத்தால் பெரியார் வழிதெரியும்! தமிழர் தந்தை நம்பெரியார் தடியைக் காப்போம் இனம்காப்போம்! பொறுமை காக்க வழியில்லை பொங்கி எழாமல் விடிவில்லை பறிபோ கிறது தமிழ்நாடு பாதை...

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் – திருப்பூரில் கல்வியில் மதத்தை திணிப்பதை எதிர்த்து

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் – திருப்பூரில் கல்வியில் மதத்தை திணிப்பதை எதிர்த்து

ஆர்ப்பாட்டம் – கைது – 25.10.2018 – திருப்பூர். மதவாதிகளுக்கு சட்டவிரோதமாக துணைபோகும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தோழம்மை அமைப்புகளுடன் இணைந்து 25.10.2018 அன்று கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் காவல்துறையின் தடையையும் மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி தோழர்கள் 63 பேர் கைதாகினர். அப்போது எழுப்பப்பட்ட முழக்கங்கள் : * திணிக்காதே திணிக்காதே பள்ளிக்கூட பாடத்திலே மூடநம்பிக்கை திணிக்காதே விதைக்காதே விதைக்காதே பிஞ்சுகளின் நெஞ்சிலே காவி நஞ்சை விதைக்காதே ஊரூராய் பறக்குற நாடு நாடாய் சுத்துற அதானி விமானத்துல ஏர் இந்தியா விமானத்துல எங்க போச்சி எங்க போச்சி புஷ்பக விமானம் எங்க போச்சி எங்க போச்சி நாகாஸ்திரம் இருக்குதாம் பிரம்மாஸ்திரம் இருக்குதாம் வஜ்ராயுதம் இருக்குதாம் இன்னும் பல ஆயுதம் இருக்குதாம் வேதத்துல கதைகதையா புராணத்துல இருக்குதாம் இருக்குதாம் எதுக்கு...

சங்கர் மரணத்துக்கு செயலவை இரங்கல்

சங்கர் மரணத்துக்கு செயலவை இரங்கல்

900 மாணவர்களை அகில இந்திய தேர்வில் வெற்றி பெற வைத்து சாதனை படைத்தவரும் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு அகில இந்திய தேர்வுப் போட்டிகளுக்கு பயிற்சி அளித்தவரும் சமூக நீதி உணர்வோடு சமூக நீதிக்கான திறவுகோலாக தனது சங்கர் அய்.ஏ.எஸ். அகாடமியை உருவாக்கிக் கட்டி வளர்த்தவருமான சங்கர், தனது இளம் வயதில் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பது பெரும் துயரத்தைத் தருகிறது. அவரது மறைவுக்கு இந்த செயலவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றிய திருப்பூரில் கூடிய கழக செயலவை, 2 நிமிடம் மவுனம் காத்து மரியாதை செலுத்தியது. பெரியார் முழக்கம் 18102018 இதழ்

பெண்ணுரிமைப் போற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு வரவேற்பு; ஹைடிரோ கார்பன் திட்டங்களை நிறுத்துக;  ஆளுநர் பதவியே தேவை இல்லை 7 பேர் விடுதலையை ஆளுநர் தாமதப்படுத்தக் கூடாது திருப்பூர் செயலவையின் தீர்மானங்கள்

பெண்ணுரிமைப் போற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு வரவேற்பு; ஹைடிரோ கார்பன் திட்டங்களை நிறுத்துக; ஆளுநர் பதவியே தேவை இல்லை 7 பேர் விடுதலையை ஆளுநர் தாமதப்படுத்தக் கூடாது திருப்பூர் செயலவையின் தீர்மானங்கள்

திருப்பூரில் அக்.13ஆம் தேதி கழக தலைமைக் குழு ஆலோசனையைத் தொடர்ந்து அடுத்த நாள் அக்.14ஆம் தேதி கழக செயலவை திருப்பூர் வாலிப்பாளையம் ‘டைய்யர்ஸ் அசோசியேஷன்’ அரங்கில் பகல் 11 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் தொடங்கி யது. தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி  கடவுள் ஆத்மா மறுப்பு கூறினார். திருப்பூர் மாவட்ட செயலாளர் நீதிராசன் வரவேற்புரை யாற்றினார். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி செயலவையின் நோக்கங்களை விளக்கி அறிமுக உரையாற்றினார். 40 செயலவை உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். மாலை 6 மணி வரை செயலவை நீடித்தது. பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். செயலவை தீர்மானங்களை முன்மொழிந்து கழகத் தலைவர் நிறைவுரை யாற்றினார். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: பெண்களின் உரிமைகளுக்கும் விடுதலைக்கும் வழிவகுக்கும் உச்சநீதிமன்றம் வழங்கிய மூன்று தீர்ப்பு களை இந்த செயலவை பாராட்டி வரவேற்கிறது....

‘தமிழ்நாடு மாணவர் கழக’ பயிற்சி முகாம் காஞ்சியில் கருத்துச் செறிவுடன் நடந்தது

‘தமிழ்நாடு மாணவர் கழக’ பயிற்சி முகாம் காஞ்சியில் கருத்துச் செறிவுடன் நடந்தது

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கான பயிற்சி ஜூன் 30, ஜூலை 1, 2018 தேதிகளில் காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தில் சிறப்புடன் நடைபெற்றது. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக ஒத்துழைப்புடன் தமிழ் நாடு மாணவர் கழகம் நடத்திய இந்தப் பயிற்சி வகுப்பை மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவகுமார் ஒருங்கிணைத்தார். பயிற்சியில் 45 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 20 பேர் மாணவிகள். முதல் நாள் காலை 10 மணியளவில் மக்கள் மன்றத் தோழர்களின் புரட்சிகரப் பாடல்களுடன் வகுப்புகள் தொடங்கின. தோழர்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மாணவர் பயிற்சியின் நோக்கங்களை விளக்கினார். தொடர்ந்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ‘கல்வி – நம்முன் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் பேசினார். ‘உயிரினம் சிந்திக்கத் தொடங்கியபோதே உருவாகிவிட்டது கற்றல் செயல்பாடு. மூளையின் புரிதல் சக்தியோடு கற்பது வழியாக செயல்படக் கூடிய கல்வி செயல்பாட்டை பள்ளியில் அடைத்த தால் பள்ளிக்...

தமிழ்நாடு மாணவர் கழகம் – மாணவர்களுக்கு நடத்தும் பயிற்சி முகாம்

தமிழ்நாடு மாணவர் கழகம் – மாணவர்களுக்கு நடத்தும் பயிற்சி முகாம்

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடாகி வருகின்றன. ஜூன் 23, 24 நாட்களில் பயிற்சி நடக்கும். (இடம் – பின்னர் அறிவிக்கப்படும்) சமூக நீதி – வரலாறு  – கல்வித் துறை சந்திக்கும் ஆபத்துகள் குறித்து கல்வியாளர்கள், வகுப்புகளை நடத்துவார்கள். நுழைவுக் கட்டணம் : ஒருவருக்கு இருநூறு ரூபாய். (ரூ.200) முன் பதிவுக்கு : 9688310621 பெரியார் முழக்கம் 24052018 இதழ்

குழந்தைகள் பழகு முகாம் தள்ளி வைப்பு

குழந்தைகள் பழகு முகாம் தள்ளி வைப்பு

மே மாதம் தொடங்க இருந்த குழந்தைகள் பழகு முகாம் தவிர்க்க இயலாத காரணங்களால் செப்டம்பர் மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாள், இடம் பின்னர் அறிவிக்கப்படும். – ஆசிரியர் சிவகாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் பெரியார் முழக்கம் 17052018 இதழ்

தியாகி இம்மானுவேல் பேரவைச் செயலாளர் சந்திரபோசு இல்ல ஜாதி மறுப்பு மண விழாக்கள்

தியாகி இம்மானுவேல் பேரவைச் செயலாளர் சந்திரபோசு இல்ல ஜாதி மறுப்பு மண விழாக்கள்

21-4-2018 சனிக்கிழமை அன்று காலை 10-00 மணிக்கு, இராமநாதபுரம் மாவட்டம், பரமக் குடி, லேனா மகாலில், தியாகி இமானுவேல் பேரவைப் பொதுச் செயலாளர் சந்திர போசு-சரசுவதி இணையரின் மகன் களான ச.ச.அனீசு குமார், அம்பேத்ராஜ் ஆகியோருக்கு, ஜாதி, சடங்கு, தாலி மறுப்பு சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.  கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழிகளைக் கூறிட, ஆணவக் கொலையில் தனது இணையர் சங்கரைப் பறிகொடுத்த உடுமலை கவுசல்யா மாலைகளை எடுத்துக் கொடுக்க நடந்தேறியது. விழாவின் சிறப்பாக – திருமண முறை, பெண்ணுரிமை, ஜாதியொழிப்பு குறித்த கட்டுரைகள் அடங்கிய  ‘தமிழ்த்தேசிய விடுதலைக்கான வாழ்வியல் பண்பாடு’ எனும் நூல் வெளியிடப்பட்டது. தமிழ்த் தேசிய முன்னணி பொழிலன், தமிழ்த்தேச விடுதலை முன்னணி மீ.த.பாண்டியன், கிருஷ்ணஜோதி ஆகியோர்  இணையேற்பு விழா விளக்கவுரையாற்றினர். விழாவினை தியாகி இமானுவேல் பேரவையின் இளைஞரணிச் செயலாளர் புலி.பாண்டியன் தொகுத்து...

தோழர் சந்திரபோசு குடும்ப இணையேற்பு விழா ! பரமக்குடி 21042018

தோழர் சந்திரபோசு குடும்ப இணையேற்பு விழா ! பரமக்குடி 21042018

தோழர் சந்திரபோசு குடும்ப இணையேற்பு விழா ! 21-4-2018 அன்று காலை 10-00 மணிக்கு, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, லேனா மகாலில், தியாகி இமானுவேல் பேரவைப் பொதுச்செய்லாளர் சந்திர போசு-சரசுவதி இணையரின் மகன்களான ச.ச.அனீசுகுமார், அம்பேத்ராஜ் ஆகியோருக்கு, ஜாதி,சடங்கு,தாலி மறுப்பு சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா கழகத் தலைவர் கொளத்துர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகத்தலைவர் கொளத்தூர் மணி வாழ்க்கைத்துணைநல ஒப்பந்த உறுதிமொழிகளைக் கூறிட, ஆணவக்கொலையில் தனது இணையர் சங்கரைப் பறிகொடுத்த தோழர் உடுமலை கவுசல்யா மாலைகளை எடுத்துக் கொடுக்க இணையேற்பு விழா நடந்தேறியது. விழா சிறப்பாக திருமண முறை, பெண்ணுரிமை, ஜாதியொழிப்பு குறித்த கட்டுரைகள் அடங்கிய ‘தமிழ்த்தேசிய விடுதலைக்கான வாழ்வியல் பண்பாடு’ எனும் நூல் வெளியிடப்பட்டது. தமிழ்த் தேசிய முன்னணியின் தோழர் பொழிலன், தமிழ்த்தேச விடுதலை முன்னணியின் தோழர் மீ.த.பாண்டியன்,தோழர் கிருஷ்ணஜோதி ஆகியோர் இணையேற்பு விழா விளக்கவுரையாற்றினர். விழாவினை தியாகி இமானுவேல் பேரவையின் இளைஞரணிச் செயலாளர் புலி.பாண்டியன் தொகுத்தார் பல்வேறு அரசியல்,...

குழந்தைகள் பழகு முகாம் – 2018 : 5 நாட்கள்

குழந்தைகள் பழகு முகாம் – 2018 : 5 நாட்கள்

முன் பதிவு ஆரம்பம் வரும் 2018 மே மாதம் கோடைக்கால பள்ளி விடுமுறையில் தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் ‘குழந்தைகள் பழகு முகாம்’ (5 நாட்கள்) நடைபெற உள்ளது. குழந்தைகள் பழகு முகாமில் – கற்பனைத் திறன் வளர்த்தல், படைப்பாற்றல் பெருக்குதல், குழு உரையாடல், கதை உருவாக்கல், ஓவியப் பயிற்சி, கவிதை புனைதல், கட்டுரை வரைதல், அறிவியல் சார்ந்த விளையாட்டுகள் – உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். தேதி, இடம், கட்டணம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும். கோடையில் கொண்டாடுவோம்! பள்ளி விடுமுறையை பயனுள்ள தாக்குவோம் ! 10 வயது முதல் 15 வயது முடிய உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். முன் பதிவு அவசியம். பதிவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள : ஆசிரியர் சிவகாமி தலைவர் தமிழ்நாடு அறிவியல் மன்றம் அலைபேசி எண் : 87785 43882 வாட்ஸ் அப் எண் : 99437 48175 பெரியார் முழக்கம் 12042018 இதழ்

மாநாட்டு மேடையில் சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற  ”ஜாதி மறுப்புத்திருமணங்கள்’

மாநாட்டு மேடையில் சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற ”ஜாதி மறுப்புத்திருமணங்கள்’

மாநாட்டு மேடையில் சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற ”ஜாதி மறுப்புத்திருமணங்கள்” 12-3-2018 திருப்பூரில் நடைபெற்ற மகளிர் தின மாநாட்டில் இரண்டு ஜாதிமறுப்புத் திருமணங்கள் நடைபெற்றன. வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்தத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவேற்றிவைத்தார். சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், ஆவணியூர், வி.என்.பாளையம் தங்கம்மாள்-அண்ணாமலை ஆகியோரின் மகன் செல்வகுமார் – எடப்பாடி வட்டம்,ஜலகண்டபுரம் சாலை காவலர் குடியிருப்பில் வசிக்கும் சின்னராசு-மயில் ஆகியோரின் மகள் ஸ்வாதிப்பிரியா ஆகியோருக்கும், சேலம்,உடையாப்பட்டி, சாந்தி-கிருஷ்ணன் ஆகியோரின் மகன் பிரபு – பழனியில் வசிக்கும் செல்வி-வடிவேல் ஆகியோரின் மகள் பிரியதர்ஷினி ஆகியோருக்கும் மாநாட்டு மேடையில் வாழ்க்கை இணையேற்பு நிகழ்ந்தது. இரண்டு இணையேற்பும் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் இடையே நிகழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தூத்துக்குடியில் தமிழ்நாடு மாணவர் கழகம் கல்லூரி மாணவர்களிடம் பரப்புரை !

தூத்துக்குடியில் தமிழ்நாடு மாணவர் கழகம் கல்லூரி மாணவர்களிடம் பரப்புரை !

தூத்துக்குடியில் தமிழ்நாடு மாணவர் கழகம் கல்லூரி மாணவர்களிடம் பரப்புரை ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட மாணவர் கழகம் சார்பாக 21.02.2018 அன்று “மாணவர்களே! இருள் சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்” எனும் தலைப்பில் தமிழக மாணவர்கள் எவ்வாறு இந்த இந்துத்துவ மோடி அரசால் பாதிக்கப்படுகிறார்கள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாமான அரசுப் பணிகள் எவ்வாறு பிறருக்கு தாரைவார்க்கப்படுகின்றன, 60% இட ஒதுக்கீடு வைத்திருக்கிற தமிழ்நாட்டில் நமக்கான வேலை வாய்ப்பு தேர்வுகளில் வெளி மாநில மாணவர்கள் பெரும்பான்மையாக பங்கெடுக்கும் அளவிற்கு கதவை திறந்து விட்டுருக்கிற பா.ஜ.க. எடுபிடி அரசான தமிழக அரசின் நயவஞ்சகத்தை ஒரு துண்டறிக்கையாக தயார் செய்து அதை தூத்துக்குடியில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களிடம் பரப்பி விழிப்புணர்வை உண்டாக்கும் முயற்சியில் துண்டறிக்கை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.. இதற்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. பல...

‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி” ஏன் ? விளக்கமளிக்கும் துண்டறிக்கை !

‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி” ஏன் ? விளக்கமளிக்கும் துண்டறிக்கை !

”தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி” ஏன் ? விளக்கமளிக்கும் துண்டறிக்கை ! தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் 02.03.2018 வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணியளவில் கொளத்தூர் பேருந்து நிலையம் அருகில் தோழர்களால் ”தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி” நடத்தப்பட்டது. நம் தாய்மொழி தமிழை இழிவுபடுத்தும் ஆரிய பார்ப்பனர்களின் போக்கை கண்டித்தும்,தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்து இம்மண்ணிற்கு தொடர்பே இல்லாத செத்துப்போன சமஸ்கிருத மொழியில் வாழ்த்துப்பாடலை பாடியிருக்கும் இந்து சனாதனவாதிகளுக்கு எதிராக தமிழ்மொழி வாழ்த்துப்பாடலை தோழர்கள் பொதுவெளியில் பாடி மக்களிடம் இதுகுறித்த பரப்புரைகளை மிக சிறப்பாக முன்னெடுத்தனர்.

தலைமைக் கழகத்தில்  ஜாதி – தாலி மறுப்பு மணவிழா

தலைமைக் கழகத்தில் ஜாதி – தாலி மறுப்பு மணவிழா

சென்னை திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலையத்தில் 26.2.2018 பகல் 12 மணியளவில் ஜாதி-தாலி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த விழா சிறப்புடன் நடைபெற்றது. சென்னை எம்.கணேசன்-மீனாட்சி ஆகியோரின் மகன் ஜி. இராமகிருஷ்ணன், சென்னை சைதாப்பேட்டை ஜே.ஏ.பார்த்திபன்-ஜூலி ஆகியோரின் மகள் பி.நிவேதா ஆகியோரின் மணவிழாவை உறுதி ஏற்புக் கூறி பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நடத்தி வைத்தார். தென்சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வேழவேந்தன், செயலாளர் இரா. உமாபதி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார், வடசென்னை மாவட்டச் செயலாளர் செந்தில், உள்ளிட்ட தோழர்களும் நண்பர்களும் திரண்டிருந்தனர். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 01032018 இதழ்

இந்த உண்மைகளைப் படியுங்கள்; பரப்புங்கள்; பகிருங்கள்! மாணவர்களே! இருள்சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்!

இந்த உண்மைகளைப் படியுங்கள்; பரப்புங்கள்; பகிருங்கள்! மாணவர்களே! இருள்சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்!

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட – முற்போக்குச் சிந்தனை கொண்ட மாணவர்களே! நமது எதிர்காலம் இருள்மயமாகி வருவதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இந்தத் துண்டறிக்கையைப் படியுங்கள்! மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் வேலை இல்லாத் திண்டாட்டத்தில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களிலேயே தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்துவிட்டது என்ற அதிர்ச்சியான தகவல் தரப் பட்டிருக்கிறது. இந்தியாவில் வேலை கிடைக்காத இளைஞர்களின் தேசிய சராசரியைவிட (3.6) தமிழ்நாடு கீழாக நிற்கிறது (3.7). 2.45 இலட்சம் பொறியாளர்களும், 4307 டாக்டர் பட்டம் பெற்ற மாணவர்களும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக் கிறார்கள். 2017 மார்ச் 30 வரை வேலை வாய்ப்புக்காகப் பதிவு செய்து காத்திருக்கும் நமது இளைஞர்கள் 81.30 இலட்சம் பேர். பதிவு செய்யாமலே வேலை தேடி அலைவோர் இதைவிடப் பன்மடங்கு என்பதை சொல்லத் தேவை இல்லை. மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு...

உயர்கல்வி படிக்கச் சென்றால் மரணம்தான் பரிசா? – தமிழ்நாடு மாணவர் கழக துண்டறிக்கை

தமிழக மாணவர்களே! தமிழ்நாட்டிலிருந்து உயர்கல்வி படிக்கச் செல்லும் நமது மாணவர்கள், அந்தக் கல்வி நிறுவனங்கள்காட்டும் ‘பாகுபாடு’களாலும், ‘அவமதிப்பு’களாலும், ‘அழுத்தங்’களாலும் மரணத்துக்கு தள்ளப்படுகிறார்கள். தில்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் ‘எம்.டி.’ மேல் பட்டப் படிப்பு படிக்கச் சென்ற திருப்பூர் மாணவர் சரத் பிரபு, தனது அறையில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார் என்ற செய்தி நமது நெஞ்சை பிளக்கிறது. உயர் கல்வி பெற்ற ஒரு மருத்துவர் வரப் போகிறார் என்று அந்தக் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக் கனவு சிதைந்து போய் நிற்கிறது. இதேபோல்தான் புதுடில்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ உயர் மருத்துவக் கல்வி நிறுவனத்துக்கான தேர்வை 2016இல் எழுதி, தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவரான திருப்பூர் சரவணன், கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே விஷ ஊசி செலுத்திக் கொல்லப்பட்டார். நிர்வாகம் முதலில் தற்கொலை என சாதித்தது. விசாரணையில் கொலை என்பது உறுதியானது. மகனின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பெற்றோர்கள் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள்...