Category: இயக்கம்

பரப்புரையில் பல நெகிழ்ச்சி சம்பவங்கள்!!

பரப்புரையில் பல நெகிழ்ச்சி சம்பவங்கள்!!

சென்னை பரப்புரைக் குழு: கிழக்கு தாம்பரம் வால்மீகி நகரில் சங்கராச்சாரியார் படத்தை சட்டைப் பையில் வைத்திருந்த வெங்கடேஷ் என்ற புதிய ஆதரவாளர் பரப்புரை பயணத்தைக் கூர்ந்து கவனித்து கூட்டம் முடிந்ததும் தோழர்களுக்கு தேநீர் வாங்கி கொடுத்தார். மேலும், “நான் ஆன்மிகவாதிதான். ஆனால் பக்தி வேறு அரசியல் வேறு” என்றும், “எனக்குப் பெரியாரை பிடிக்கும். பெரியார் இல்லை என்றால் நான் இன்றைக்கு இந்த டிராவல்ஸ் தொழிலை வைத்திருக்க முடியாது” என உணர்ச்சி பொங்க கூறினார். “இன்றைக்கு சீமான் போன்ற ஆட்கள் பெரியாரைப் பற்றி அவதூறு பேசுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நீங்கள் இந்த மாறி அயோக்கியனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துங்கள். பெரியார் இல்லை என்றால் இன்றைக்கு கல்வி கற்க முடியமா தமிழர்கள்” என்றும் கூறினார். அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பரப்புரை வாகனத்திற்கு பெட்ரோலை கேனில் தர மறுத்தனர். வெங்கடேஷ் அவர்கள் சென்று கழகப் பிரச்சார ஜெனரேட்டர்க்கு 610 ரூபாய்க்கு பெட்ரோல்...

நூல் வெளியீடு !

நூல் வெளியீடு !

“ஆரிய மாடலா? திராவிட மாடலா?” திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் தோழர் “விடுதலை இராசேந்திரன்” அவர்களின் எழுத்தாக்கத்தில் கருத்து செறிவு மிகுந்த கட்டுரைகள்,வரலாற்று தகவல்கள், நிகழ்கால அரசியல் பார்வைகள்……(கெட்டி அட்டையில்) முன்பதிவு செய்வோருக்கு சலுகை விலையில் ரூ.300/- (ரூபாய் முன்னூறு மட்டும்) (தபால் செலவு ரூ.50 தனி) “பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்?” பரப்புரைப் பயணத்தின் போது (மார்ச் 15 முதல் மார்ச் 22 முடிய) முன்பதிவு செய்யப்படும்.முன்பதிவிற்கு அலைபேசி எண் : 94986 56683 – இந்த எண்ணில் GPay செய்து விட்டு வாட்ஸ் அப்பில் முன்பதிவு செய்யவும். பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டில் சிறப்பு வெளியீடாக இந்நூல் வெளியிடப்படுகிறது. முன்பதிவு செய்வோருக்கு மாநாட்டு திடலில் புத்தகங்கள் வழங்கப்படும். நாள் : 22.03.25 சனி நேரம் : மாலை 04.00 மணி இடம் : சின்னக் கடைவீதி, மயிலாடுதுறை. – நிமிர்வோம் வெளியீடு, 15.03.2025

உயிரிழப்புகளை மறைக்கிறது ஒன்றிய அரசு?

உயிரிழப்புகளை மறைக்கிறது ஒன்றிய அரசு?

உத்தரப் பிரதேசத்தில் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெற்ற கும்ப மேளாவில் 66 கோடி பேர் திரண்டதாகவும், உலகின் மிகப்பெரிய ஆன்மீகத் திருவிழா இதுதான், இதற்கு ஈடாக மக்கள் கூடிய இன்னொரு கொண்டாட்டத்தை காட்ட முடியுமா என்றும் சங்கிகள் பெருமிதம் தெரிவிக்கின்றனர். ஆனால் 66 கோடி பேர் என்று சங்கிகள் கூறுவது வாய்க்கு வந்ததை அள்ளிவிடும் கட்டுக்கதை என்று ஊடகங்கள் அம்பலப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஏனெனில் கும்பமேளா நடைபெற்ற பிரயாக்ராஜிற்கு விமானத்தில் சென்றவர்கள் எண்ணிக்கை 5.6 லட்சம் பேர். ரயிலில் சென்றவர்கள் எண்ணிக்கை 4.24 கோடி பேர். அரசுப் பேருந்துகளில் சென்றவர்கள் 3.25 கோடி பேர். தனியார் பேருந்துகளில் சென்றவர்கள் 2.7 கோடி பேர். ஒட்டுமொத்தமாக சேர்த்தால் 10.25 கோடி பேர்தான் ரயில்கள், விமானங்கள், பேருந்துகள் மூலம் சென்றிருப்பார்கள். இதில் கார்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் எண்ணிக்கை குறித்து எந்த கணக்கும் இல்லை. ஆனால் ரயிலில் சென்றவர்களை விடவோ,...

மோடி யார்? உண்மைகளை உடைக்கும் Grok!

மோடி யார்? உண்மைகளை உடைக்கும் Grok!

கடந்த சில வாரங்களாக இந்திய இணைய உலகை கலக்கிக் கொண்டிருக்கிறது எக்ஸ் சமூக ஊடகத்தின் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான Grok. இந்த ஏ.ஐ. இந்த தளத்தில் கேள்விகள் எழுப்பினால் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தரவுகளின் அடிப்படையில், பகுத்தறிந்து சரியான பதிலைத் தர முயற்சிக்கிறது. எக்ஸ் தள பயனாளிகள் மிகுந்த ஆர்வத்தோடு @Grok என டைப் செய்து, கேள்விகளை எழுப்பி பதில்களைப் பெற்று சோதித்துப் பார்க்கின்றனர். சேட் ஜிபிடி போன்ற இதற்கு முந்தைய செயற்கை நுண்ணறிவுத் தளங்களைக் காட்டிலும், கூடுதல் துல்லியமான பதிலைத் தருகிறது Grok. அது இணைய பயன்பாட்டாளர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் பாஜக, சங் பரிவார்களுக்கு மட்டும் இந்த பதில்கள் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நேர்மையான தலைவர் யார்? மோடியா? ராகுல் காந்தியா? என Grok-யிடம் கேள்வி எழுப்பினால், தரவுகளை ஆராய்ந்து மோடியை விட ராகுல் நேர்மையானவர் என பதில் தருகிறது. ராகுல் காந்தி உண்மையிலேயே...

“பரபரப்பான விற்பனையில்!” கழக நூல்கள் தொகுப்பு!

“பரபரப்பான விற்பனையில்!” கழக நூல்கள் தொகுப்பு!

அதிரடி சலுகை விலையில்! 14 புத்தகங்கள் – ரூ.565/ அதிரடி விலை குறைப்பு – ரூ.500/ மட்டும் (தபால் செலவு உட்பட)புத்தகங்களின் பட்டியல் : 1. “அம்பேத்கர் நம் தலைவர்” – கொளத்தூர் மணி. 2. “இது தமிழ்நாடு சனாதனத்திற்கு எதிரான யுத்தம் இங்கு மட்டும் தான்” – உதயநிதி ஸ்டாலின். 3. “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் நூல் அறிமுகம்” – விடுதலை இராசேந்திரன். 4. “இறுதி மூச்சு அடங்கும் வரை யாருக்காக உழைத்தார் பெரியார்?” – திவிக வெளியீடு. 5. “ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்” – கொளத்தூர் மணி. 6. “எங்களை தனிநாடு கேட்க வைத்து விடாதீர்கள்” – ஆ ராசா. 7. “எல்லைப் போராட்டத்தில் பெரியாரும், ம.பொ.சியும் “ – பெரியார். 8. “தமிழர் உரிமைக்கு எதிரி யார்?” – பெரியார் மய்யம் . 9. “திராவிட பெரியார் யாருக்கு எதிரி” –...

பரப்புரைப் பயணங்கள் தொடங்கின- பெரியாரின் பெரும் தொண்டுகள் மக்களிடையே விளக்கம்! இளைஞர்கள் பெண்கள் பேராதரவு…

பரப்புரைப் பயணங்கள் தொடங்கின- பெரியாரின் பெரும் தொண்டுகள் மக்களிடையே விளக்கம்! இளைஞர்கள் பெண்கள் பேராதரவு…

பெரியார் ஏன் எதிரிகளைப் பதறவைக்கிறார்? பரப்புரைப் பயணம் கடந்த 15-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது 16-ஆம் தேதி ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொடங்கியது. கழக செயல் வீரர்கள் தனி வாகனங்களில் பயணத்தில் பங்கேற்கிறார்கள். கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கழக செயல் வீரர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 4 கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த பரப்புரையில் இளைஞர்களும் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். கழக நூல்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். பெரியாரின் எதிர்நீச்சல் அவர் உருவாக்கிய சமூக மாற்றங்களைக் கழகப் பேச்சாளர்கள் மக்களிடம் எடுத்துக் கூறுகிறார்கள். கலைநிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. பயணங்களின் செய்தித் தொகுப்பு சென்னை: “பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?” எனும் தலைப்பில் சென்னை அணி செல்லும் பரப்புரைப் பயணத்தின் தொடக்க விழா,இராயப்பேட்டையில் 15.03.2025 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் சிறப்புரையாற்றி பரப்புரைப் பயணத்தை துவக்கி வைத்தார். திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.என்.துரை, 119-வது...

ஈரோடு வடக்கில் கலந்துரையாடல் கூட்டம்!

ஈரோடு வடக்கில் கலந்துரையாடல் கூட்டம்!

மாவட்ட தலைமை அலுவலகத்தில் 2.3.2025 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் தோழர். நிவாஸ் தலைமை வகிக்க மாநில வெளியிட்டுச் செயலாளர் தோழர். இராம. இளங்கோவன் அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: தீர்மானம் 1: கடந்த 22 2.2025 கோபி ஒன்றிய கழகத்தின் சார்பாக நடைபெற்ற ‘பெரியார் எனும் பெரும் நெருப்பு’ கருத்தரங்கு வரவு செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டு தோழர்கள் வசம் கணக்கு ஒப்படைக்கப்பட்டது. நிகழ்வை சிறப்பாக நடத்திய தோழர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. தீர்மானம் 2: வருகின்ற 16 /3/2025 அன்று தலைமைக் கழக அறிவுறுத்தலின்படி மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து பரப்புரைப பயணம் தொடங்க இருக்கிறது. அதில் ஒரு பகுதியாக ஈரோட்டில் தொடங்க இருக்கும் பரப்புரைப் பயணத்தில் மாவட்டக் கழகத்தின் சார்பாக கலந்து கொள்வது எனவும், பயணக் குழுவோடு ஈரோடு வடக்கு மாவட்ட கழகத் தோழர்கள் இணைந்து பயணிப்பது எனவும்...

டார்வினி – குமரேசன் இணையேற்பு விழா

டார்வினி – குமரேசன் இணையேற்பு விழா

09.03.25 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணியளவில் விராலிமலை திருமுருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இணையர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அனிவித்து தாங்களும் மலர் மாலையை மாற்றிக் கொண்டனர். பால்.பிராபகரன் (பரப்புரை செயலாளர்) மற்றும் துரைசாமி (மாநில பொருளாளர்) அவர்களும் சேர்ந்து கழகக் கொடியினை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர் சிற்பி பிராஜன் அவர்கள் மந்திரமா?தந்திரமா? நிகழ்வு நடைபெற்றது. புதியவன் வரவேற்புரை நிகழ்த்தினார்.ம கே பி எம் ஐயப்பன் திமுக மத்திய ஒன்றிய செயலாளர், இளங்குமரன் மேற்கு ஒன்றிய செயலாளர் திமுக, மெடிக்கல் குமார் திமுக மாவட்ட பிரதிநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணமக்களுக்கு சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். திராவிட முன்னேற்றக் கழக தென்னலூர் பழனியப்பன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார். பால் பிரபாகரன் பரப்புரை செயலாளர் திவிக, வீ.சிவகாமி தமிழ்நாடு அறிவியல் மன்றம்...

மகளிர் தினம் – கழகப் பெண்கள் துண்டறிக்கை பிரச்சாரம்!

மகளிர் தினம் – கழகப் பெண்கள் துண்டறிக்கை பிரச்சாரம்!

மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்ட மகளிர் அணி சார்பில் மகளிர் தின வாழ்த்துகள் கூறி 2000 துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது. 08.03.25 அன்று மேட்டூர் அரசு கலைக் கல்லூரி முன்பு கழக சேலம் மாவட்ட அமைப்பாளர் சுதா, மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின், தேன்மொழி, முத்துராஜ், இராமச்சந்திரன், கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், கொளத்தூர் நகரச் செயலாளர் அறிவுச்செல்வன் ஆகியோரும், வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்பு நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகர், இந்திராணி, நந்தினி ஆகியோர்களும், கொளத்தூர் பேருந்து நிலையத்தில் சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரசுவதி, தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈசுவரன், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், அழகேஸ்வரி, கோமதி ஆகியோர் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு, பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள், இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர். 08.03.25 அன்று தொடர்ந்து சேலம் மாநகர் செளடேஸ்வரி மகளிர் கல்லூரி முன்பு சேலம்...

ஜாதியைத் தூக்கிட்டு வராதீங்க!

ஜாதியைத் தூக்கிட்டு வராதீங்க!

அமெரிக்காவில் வாழும் குஜராத்தைச் சேர்ந்த டயலன் பட்டேல் என்பவர், “டல்லாஸில் எனது சாதிக்கான (லியுவா படிதார் சமாஜ் சாதி) வாலிபால் போட்டி நடைபெறுகிறது. அமெரிக்காவில் 40,000 பேர் எங்கள் சாதியினர். அதில் 8,000 பேர் இங்கு உள்ளனர். குஜராத்தின் ஒரு சில பகுதியைச் சேர்ந்தவர்கள் நாங்கள். நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறோம். நாங்கள் கிராமப்புற அமெரிக்காவில் மோட்டல் அல்லது பெட்ரோல் பம்ப் வைத்து உள்ளோம்” என்று ஜாதிப் பெருமையுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த பதிவுக்கு அமெரிக்காவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஜாதிப் பெருமை பேசிய இந்தியர்களை கடுமையாக விமர்சனம் செய்து அமெரிக்கா அரசியல்வாதிகள் போஸ்ட் செய்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிராண்டன் கில் செய்துள்ள பதிவில், “அமெரிக்கா என்பது தகுதி வாய்ந்தவர்களுக்கான நாடு. இதற்கு காரணம் நம்மிடம் சாதி அமைப்பு இல்லை. இந்தியா போன்ற வெளிநாட்டில் உள்ள வர்க்க வேறுபாட்டை, ஜாதி வேறுபாட்டை இங்கே...

“ஜாதிக்கு ஒரு கோயில் தேவையா?”

“ஜாதிக்கு ஒரு கோயில் தேவையா?”

ஆகமக் கோயில்களை பார்ப்பனர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதை எதிர்த்து, பெரியார் இயக்கம் குரல் கொடுத்து வருகிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 100-வது நாளில் செயல்படுத்தினார். ஆனாலும் 24 பார்ப்பனரல்லாத அர்ச்சகர்க்கு மேல் நியமனம் செய்ய முடியாமல், நீதிமன்றங்களில் பார்ப்பனர்கள் தடை வாங்கிவிட்டார்கள். தடையை நீக்க அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அறநிலையத்துறை இந்த பிரச்சினையில் ஆர்வம் காட்டாமல் செயல்படுகிறது. பெரியார் நெஞ்சில் தைத்த அந்த முள்ளை அகற்றும் இந்த சமூக மாற்றக் கொள்கையில் அறநிலையத்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கதக்கவையாகவே இருக்கின்றன. இந்த நிலையில் பல கிராம கோயில்கள் ஜாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன. அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வழங்கியுள்ள தீர்ப்பைப் பாராட்டி வரவேற்க வேண்டும். “கோயில்களை நிர்வகிக்கும் உரிமையை ஒரு குறிப்பிட்ட ஜாதிகள் கோர முடியாது‌. கோயில்களை ஜாதி அடிப்படையில் பிரித்துப் பார்ப்பது ஜாதியை நிலை...

உதயநிதி மீது வழக்குத் தொடர தடை!

உதயநிதி மீது வழக்குத் தொடர தடை!

உதயநிதி ஸ்டாலினின் சனாதன எதிர்ப்புப் பேச்சுக்கு எதிராக மேலும் வழக்குகள் போடுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், “ ‘சனாதன தர்மத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அவதாரம் எடுத்து வருவேன்’ என்று கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார். ஆனால் அப்படியெல்லாம் அவதாரம் எடுத்து கிருஷ்ணன் வர மாட்டார், நாம்தான் வழக்கு தொடர வேண்டும் என்று பகவான் கிருஷ்ணனை அவமதித்து சனாதனவாதிகள் நீதிமன்றத்தை அணுகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பார்வையில் இதுவும்கூட கடவுளை அவமதிப்பதுதான். இதற்காகவே சனாதனவாதிகள் மீது வழக்குத் தொடரலாம். இந்துத்துவ அரசியல் மதத்தையும் கடவுளையும் புறந்தள்ளிவிட்டு கூட்டணி அரசியலாக உருவெடுத்து நிற்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். பெரியார் முழக்கம் 13032025இதழ்

பெரியார் பல்கலை.யில் விக்சிட் பாரத்-2047 கருத்தரங்கு-திராவிடர் விடுதலைக் கழகம்

பெரியார் பல்கலை.யில் விக்சிட் பாரத்-2047 கருத்தரங்கு-திராவிடர் விடுதலைக் கழகம்

இதுதொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி 06.03.2025 அன்று விடுத்துள்ள அறிக்கை: “மும்மொழிக் கொள்கை, பாராளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு போன்ற பிரச்சனைகளை ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நிலையில் ஒன்றிய அரசின் திட்டமான ‘விக்சிட் பாரத் வளரும் இந்தியா 2047’ தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வரும் மார்ச் 10 மற்றும் 11-ஆம் தேதி கருத்தரங்கு ஏற்பாடு செய்ததை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. பதிவாளர் தேர்வு, அலுவலர் பதவி உயர்வு, புதிய பணி நியமனம், விதிகளுக்கு புறம்பாக நூலகர், உடற்கல்வி இயக்குநர் நியமனம் போன்ற பிரச்சனைகளிலிருந்து, ஒன்றிய அரசு தன்னை காப்பாற்றுவதற்காக இந்த கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர் வரும் மே 19 உடன் பணியிலிருந்து விடுபட உள்ளார். தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவே இந்த கருத்தரங்கை நடத்த முடிவு செய்துள்ளார். ஆர்எஸ்எஸின் கூடாரமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மாறுவதை தமிழ்நாடு...

சடலங்களைை இடுகாடு வளைை சுமந்து செசல்கிறாார்கள்  “மரபுகளைைத் தகர்க்கும் திவிக பெெண்கள்‌

சடலங்களைை இடுகாடு வளைை சுமந்து செசல்கிறாார்கள் “மரபுகளைைத் தகர்க்கும் திவிக பெெண்கள்‌

தமிழ்நாட்டில் பெரியாரியப் பெண்கள் பண்பாட்டு புரட்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இந்து ஆங்கில நாளேடு இதை சுட்டிக்காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் இறந்தவர்களின் சடலங்களை திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த பெண்கள் இடுகாடு வரை சுமந்து சென்று எந்த வித சடங்கு சம்பிரதாயம் இன்றி உடலை அடக்கம் செய்து வருகிறார்கள். பெண்கள் சுடுகாட்டுக்கு போவதே சமூகம் தடைச் செய்து உள்ளது. தடையை தகர்த்து சேலம் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக 100-க்கு மேற்பட்ட சடலங்களை பெண்களே சுமந்து சென்று இறுதி நிகழ்வுகளை செய்துள்ளனர் என்று இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளிட்டுள்ளது. (மார்ச் 10, 2025). பெரும்பாலான மதங்கள் பெண்களை சுடுகாடு செல்வதற்கு அனுமதிப்பதில்லை. தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மரணத்தில் கூட இடுகாடு செல்ல முடியாது. ஆனால் சேலம் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெண்கள் சடலங்களை சுடுகாடு சுமந்து சென்று மத மரபுகளை உடைத்து இருக்கிறார்கள். இந்த...

லெனின் சுப்பையா படத்திறப்பு நூல் அறிமுக விழா

லெனின் சுப்பையா படத்திறப்பு நூல் அறிமுக விழா

பார்ப்பனக் கும்பலை தன் பாடல்களால் தோலுரித்த, விடுதலைக்குரல் இசைப்போர் நிறுவனத்தலைவர் புரட்சிப் பாடகர் லெனின் சுப்பையா படத்திறப்பு மற்றும் நூல் அறிமுக விழா புதுச்சேரி தீனா தோழர் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. பொழிலன், ஏ கே ராஜன், காசு நாகராசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அவருடன் பயணித்த பல தோழர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மணிமேகலை, நாத்திகன், தேன்மொழ் பெரியார் பிஞ்சு திராவிட மகிழ்நன் ஆகியோர் சுப்பையாவின் பாடல்களைப் பாடி அவரின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். உமாபதி சென்னை மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகமும் லெனின் சுப்பையாவும் இணைந்த பயணித்த நிகழ்வுகளையும், “மோடி என்பது எல்லாம் வெறும் முகமூடி” பாடலை தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரக் கூட்டத்தில் பாடிய களஅனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். காசு நாகராசன் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்புச் செயலாளர் விடுதலைப்போர் புத்தகம் வெளியிட்டார். கலந்துக்கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

“பெரியார் எனும் பெருநெருப்பு” எழுச்சிமிகு கருத்தரங்கங்கள்

“பெரியார் எனும் பெருநெருப்பு” எழுச்சிமிகு கருத்தரங்கங்கள்

கோபி: ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கடந்த 22.02.2025 சனிக்கிழமை மாலை கோபியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான் தியாகசீலர் சி.எஸ்.எஸ் அரங்கத்தில் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. கருத்தரங்க நிகழ்விற்கு மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் அவர்கள் தலைமையேற்றார். ரூட்ஸ் தமிழ் கரிகாலன், பேரலை இந்திரகுமார் தேரடி, பேரலை மில்டன், அதர்மம் மனோஜ், யூ2 புரூட்டஸ் மைனர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இறுதியில் மாவட்ட அமைப்பாளர் நிவாஸ் அவர்கள் நன்றியுரை ஆற்றிட அரங்கம் நிறைந்த கோபி பெருமக்களால் கருத்தரங்கம் நிறைவு பெற்றது. நிகழ்வில் கழகத்தோழர்கள், பொதுமக்கள், மாற்று அரசியல் கட்சியினர், இயக்கத்தோழர்கள் என பலர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 06032025இதழ்

இளமதி ஜேசன்‌ ஜாதி மத மறுப்பு மணவிழா

இளமதி ஜேசன்‌ ஜாதி மத மறுப்பு மணவிழா

கழக ஆதரவாளர் எம்.ஜி இளங்கோவன் – மாலதி ஆகியோரின்‌ மகள் இ.மா.இளமதி பி பி.ஜேசன் ஆகியோர் ஜாதி மத மறுப்பு மணவிழா 8.02.2025 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை ஈஞ்சம்பாக்கம் அக்கரையில் உள்ள ஜெனராஜன் திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் மணவிழாவை நடத்தி வைத்தார். கீழ்கண்ட உறுதிமொழி ஏற்கப்பட்டது. இன்று முதல் நாங்கள் வாழ்க்கை துணைவர்களாக குடும்ப வாழ்வில் நுழைகிறோம்.சம உரிமையும் தோழமையும் அன்பும் கொண்டதே குடும்பம் என்றக் கொள்கை வழியில் பயணிக்க உறுதி ஏற்கிறோம். வாழ்வில் சந்திக்கும் அனைத்து நிகழ்வுகளையும் சமமாக பகிர்ந்து கொண்டு இணையர்களாவும், தோழர்களாகவும் அறிவியல் நெறியில் சமூக அக்கறையோடு வாழ்ந்து காட்டுவோம் என்று உறுதி ஏற்கிறோம். என்று உறுதி ஏற்றனர். மண விழா மகிழ்வாக இணையர்கள் கழக வளர்ச்சிக்கு ரூ.5000 நன்கொடை வழங்கினர் பெரியார் முழக்கம் 06032025இதழ்

இந்தியாவின் சிறந்த மாடல் திராவிட மாடல்

இந்தியாவின் சிறந்த மாடல் திராவிட மாடல்

கல்வியாக இருக்கட்டும் தனிநபர் வருமானமாக இருக்கட்டும் ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கட்டும் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கையாக இருக்கட்டும் எந்த ஒரு அளவுகோலிலும் தெற்கிற்கும் வடக்கிற்கும் பாரதூர வேறுபாடு இருக்கிறது. கல்வியின் மூலம் சர்வதேச நிறுவனங்களில் பணிபுரியும் வகையில் சிறப்பான மாணவர்களை தமிழ்நாடு உருவாக்கி இருக்கிறது‌ இந்தியாவுக்கு என்று ஒரு மாடல் இருக்க முடியும் என்றால் அது தமிழ்நாடு மாடலாக மட்டுமே இருக்க முடியும். -தி வயர் இணையதள நேர்காணலில் கிங்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசியல் சமூகவியல் பற்றி வகுப்பெடுக்கும் பேராசிரியர் கிறிஸ்டோப் ஜெபர்லோ கருத்து.

பெரியாரை சீண்டும்‌ ஆளுநருக்குப் பதிலடி  ஆரியர்-திராவிடர் கற்பனையா?

பெரியாரை சீண்டும்‌ ஆளுநருக்குப் பதிலடி ஆரியர்-திராவிடர் கற்பனையா?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பிராமண சங்கத்தின் தலைவராக இப்போது “அவதாரம்” எடுத்து நேரடியாகப் பெரியாரைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார். ஆரியரைப் பற்றி தவறான கருத்தை பெரியார் பரப்பினாராம் ஆரியர்-திராவிடர் வெவ்வேறு இனம் என்றும் ஆரியர் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தனர் என்றும் கடந்த 60 ஆண்டுகளாக திராவிட சித்தாந்தம் பேசுவோர் கற்பனைக் கதையை உருவாக்கிப் பரப்புகிறார். ஆரியர் வந்தேறிகள் என்று ஈ.வெ ராமசாமி கருத்துத் திணிப்பு செய்தார் என்றும் வாய்க் கொழுப்புடன் பேசி உள்ளார். இந்த உளறல்களை கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய் விட்டது. பிகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த ஆளுநரே உமக்கு வரலாறு ஏதாவது தெரியுமா? 1. பார்ப்பனர்களே தங்களை ஆரியர்கள் என்று பெருமையுடன் அறிவித்துக் கொண்ட கதை தெரியுமா? அவர்கள் ஆரிய சமாஜம் என்ற‌ அமைப்பை உருவாக்கிக் கொண்டார்களே அது உமக்குத் தெரியுமா? அதன் நிறுவனர் தயானந்த சரசுவதி ஆரியர்களாகிய வேதமும் சமஸ்கிருதமும் இரண்டு கண்கள் என்று...

நரேன் (எ) நரேந்திரன்- சங்கீதா இணையரின் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம்

நரேன் (எ) நரேந்திரன்- சங்கீதா இணையரின் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம்

ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் தோழர்கள் நரேன் (எ) நரேந்திரன்- சங்கீதா இணையரின் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி முன்னிலையில், தலைமைக் குழு உறுப்பினர் ஈசுவரன் தலைமையில் நடைபெற்றது. காவலாண்டியூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த உறுதிமொழி எடுக்கப்பட்டு எளிமையான முறையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் மாலை அணிவித்து மோதிரம் மாற்றிக் கொண்டனர். இந்நிகழ்வில் சேலம் மாவட்டக் கழக ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், வழக்கறிஞர் சரவணன் பரத், காவை.தங்கராசு, மாரி, மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் மேட்டூர் நாகராஜ்,ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் எழில் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.திருமண நிகழ்வின் மகிழ்வாக இணையர்கள் புரட்சிப் பெரியார் முழுக்கத்திற்கு ரூபாய் ₹1000/- வளர்ச்சி நிதியை கழகத் தலைவரிடம் வழங்கினர்.

கடலூரில் கழக ஆர்ப்பாட்டம்!

கடலூரில் கழக ஆர்ப்பாட்டம்!

19-02 -2024 அன்று மாலை 4 மணியளவில் சிதம்பரத்தில் யுஜிசி திருத்த வரைவு அறிக்கையை கண்டித்து கடலூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கழக அமைப்பாளர் அ.மதன்குமார் தலைமையேற்றார். இந்தஆர்ப்பாட்டத்திற்கு ந.கொளஞ்சி, முத்துகிருஷ்ணன், கிருஷ்ணகுமார், தாமரை, விக்னேஷ், தகவி, பார்த்திபன், ராகுல், ரூபன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செ.பிரகாஷ் வரவேற்று தொடக்கயுரையாற்றினார், இதனையடுத்து கவி, வீரகுமார்,சாகுல் ஹமீது மனித நேய மக்கள் கட்சி, கணபதி ஏகாதிபத்தி எதிர்ப்பு இயக்கம், பாலராஜ் புரட்சிகர மாணவர் இயக்கம் மற்றும் இளைஞர் முன்னணி, இசாக் அலி மே17 இயக்கம், ரமேஷ்மித்ரன் தபெதிக, வழக்கறிஞர் செந்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், தயாநிதி மக்கள் தமிழகம் கட்சி, குறிஞ்சிவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இளையரசன் விழுப்புரம் மாவட்டத் தலைவர் திவிக, ப.அறிவழகன் மாவட்ட அமைப்பாளர் தமிழ்நாடு அறிவியல் மன்றம், மகேஷ் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் திவிக, அய்யனார் தலைமைச் செயற்குழு...

பேரறிஞர் அண்ணா நினைவுநாள் தெருமுனைக்கூட்டம்

பேரறிஞர் அண்ணா நினைவுநாள் தெருமுனைக்கூட்டம்

பேரறிஞர் அண்ணா நினைவுநாள் தெருமுனைக் கூட்டம் 22.02.2025 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கோவை கவுண்டம்பாளையத்தில் மாநகரத் தலைவர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநகர அமைப்பாளர் கிருட்டிணன் வரவேற்புரை நிகழ்த்தினார். கோவை மாவட்டக் கழகச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், கோவை மாநகரச் செயலாளர் வெங்கடேசன், ச.மாதவன், லோகநாயகி, தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் நவீன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள். சு.செ.சம்பத் (மதிமுக), இராமதாஸ் (விசிக), சாந்தகுமார் (தோழர் அறக்கட்டளை), இராவணன் (ஆதித்தமிழர் பேரவை), சித்ரா (மாமன்ற உறுப்பினர்), ஈஸ்வரன் (திமுக) உள்ளிட்ட தோழமை இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கழகத் தோழர்கள் ஸ்டாலின் ராஜா, அன்னூர் விஷ்ணு ஆகியோர் கழக வெளியீடுகளை வழங்கி சிறப்பித்தனர். கூட்டத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கவனித்தனர். பெரியார் முழக்கம் 27022025 இதழ்

பரப்புரைக்கு தயாராகும் கழகம்!

பரப்புரைக்கு தயாராகும் கழகம்!

சென்னை: மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 18-02-23 கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழக சேத்துப்பட்டு அமைப்பாளர் இராசேந்திரன் அவர்கள் கடவுள், மறுப்பு, ஆத்மா, கொள்கையை கூறினார். மாவட்டச் செயலாளர் உமாபதி தொடக்க உரையாக சென்னை மாவட்ட கழகம் கடந்த ஆண்டு செய்த சாதனைகளையும், தற்போதைய அரசியல் சூழல்களையும் விளக்கினார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன்‌ சென்னையில் கடந்த ஆண்டு நடந்த “எது திராவிடம்,எது சனாதனம்” தலைப்பில் 200 கூட்டங்களைச் சிறப்பாக செய்ததற்கு உழைத்த அனைத்து தோழர்களையும்‌ பாராட்டி வருகிற பரப்புரைப் பயணத்தின் தேவைகள் குறித்துப் பேசினார். கழகத் தலைமை குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் உரைக்குப் பிறகு கழக மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் புதிய தோழர்களை இன்னும் அமைப்பாகக் கட்டமைக்க ஆலோசனைகள் வழங்கினார். தாம்பரம் பகுதி அமைப்பாளர் அருண் கோமதி நவீன காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்த வேண்டியத் தேவை...

பரப்புரைக்கு தயாராகும் கழகம்!

பரப்புரைக்கு தயாராகும் கழகம்!

சேலம்: கிழக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்! 16.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் ஏற்காடு ஷோபா ஹோட்டலில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். தீர்மானங்கள்: 1). ஒவ்வொரு பகுதிகளிலும் துண்டறிக்கை வாயிலாகவும், வீதி நாடகங்கள் வாயிலாகவும் தெருமுனைக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துவது எனவும், 2).தோழர்களின் சந்திப்பை விரிவு படுத்தும் வகையிலும், தொடர்புகளை விரிவு படுத்தும் வகையிலும் வருகின்ற ஜூன் மாத இறுதி வாரத்தில் ஏற்காட்டில் குடும்ப விழா நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 3). சேலம் மாவட்டக் கழகத்தின் எதிர்கால செயல் திட்டங்களுக்காக மாவட்ட நிதியை உருவாக்குது எனவும், அந்த நிதியை துண்டறிக்கைகள், கூட்டங்களுக்கு பயன்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கலந்து கொண்டோர்: சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் (கி) மாவட்ட அமைப்பாளர்கள் ஏற்காடு பெருமாள், முத்துமாணிக்கம், சேலம்...

தமிழ் இலக்கியங்களை அலசி ஆராய்ந்தவர் பெரியார்! -கொளத்தூர் மணி

தமிழ் இலக்கியங்களை அலசி ஆராய்ந்தவர் பெரியார்! -கொளத்தூர் மணி

(பிப்ரவரி 1-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிமிர்வோம் வாசகர் வட்ட 28-வது சந்திப்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை) எப்போதுமே அரசியலிலோ அல்லது மற்றவற்றிலோ படிப்படியாக முன்னேறி செல்வதுதான் அனைவருக்கும் வழக்கம். ஆனால் மணியரசன் அவர்கள் ஒரு பொதுவுடைமைவாதியாக இருந்து, தமிழ் தேசியம் பேசி, இப்போது ஜாதியவாதிகள் பக்கம் வந்து நின்று கொண்டிருக்கிறார். இன்னும் சிறிது நாட்களில் முழுமையாக வெளிப்பட்டு விடுவார். 1956 நவம்பரில் மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது, யாரெல்லாம் தமிழ்நாட்டில் இருந்தார்களோ அவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று முதலில் ஒரு வரையறை வைத்திருந்தார். எந்த அறிவியல் அடிப்படையில் இந்த வரையறையை வைத்தார் என்பது தெரியாது. சீமானுக்கு ஆசானாக சேர்ந்து விட வேண்டும் என்ற‌ ஆசையாக கூட இருக்கலாம். அண்ணா நினைவுநாளையொட்டி இந்த நிமிர்வோம் வாசகர் வட்டம் நடைபெறுகிறது. 1934-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி திருப்பூரில் நடைபெற்ற...

கும்ப மேளாவில் கொடிகட்டப் பறந்த    திருட்டுத்தொழில்!

கும்ப மேளாவில் கொடிகட்டப் பறந்த திருட்டுத்தொழில்!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13-ஆம் தேதிமுதல் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை கும்ப மேளா நடைபெற்றது. உலகின் மிகப்பெரிய ஆன்மிகத் திருவிழா என பாஜக மார்தட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் உலகில் எங்குமே நடக்காத பேரவலங்கள் அங்கே நடந்தன. கோடிக்கணக்கான பேர் கூடியதாக செய்திகள் வந்தன. ஆனால் சில லட்சம் பேரை கையாளும் திறன் கூட உத்தரப் பிரதேச பாஜக அரசுக்கு இல்லை. போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இல்லை, ரயில்கள் இல்லை, போக்குவரத்து வசதியே இல்லை. ரயில்களில் கண்ணாடிக் கதவுகளை உடைத்துக்கொண்டே உள்ளே ஏறிய காணொளிகளைஇப் பார்த்தோம். ஜனவரி மாதம் இறுதியில் கூட்டநெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காயமடைந்தோர் பற்றிய தெளிவான விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. இவற்றுக்கெல்லாம் மேலாக, “கங்கை நதியின் தரம் குளிப்பதற்கான முதன்மை நீரின் தரத்துடன் ஒத்துப்போகவில்லை. கங்கை நீர் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அனைத்து இடங்களிலும், மல பாக்டீரியாக்கள் எனப்படும் ஃபெக்கல் கோலிஃபார்ம் அதிகரித்துள்ளது. தற்போது மகா...

மொழிப்போருக்கு தமிழ்நாடு தயார்!-

மொழிப்போருக்கு தமிழ்நாடு தயார்!-

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் புதிய கல்விக்கொள்கையின்படி மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த நிதியை விடுவிப்போம் என்று அடாவடியாக பேசியிருக்கிறார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான். கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளபோது, ஒன்றிய அரசு தன்னிச்சையாக ஒன்றை உருவாக்கி, அதனை ஏற்றுக்கொண்டால்தான், மற்ற திட்டங்களுக்கு நிதி கொடுப்போம் என்று பேசுவதென்பது அரசியலமைப்புக்கு விரோதமானது. தமிழ்நாட்டின் கொள்கையே இருமொழிதான் என்பதை இன்றைய திமுக அரசு மட்டுமல்ல, பாஜகவின் அடிமை அரசாக இதற்கு முன்பிருந்த அதிமுகவே தெளிவுபடுத்தியிருக்கிறது. உள்ளூர் தொடர்புக்குத் தாய்மொழி, உலகத் தொடர்புக்கு ஆங்கிலம், இதைத்தவிர இன்னொரு மொழி எந்த வகையிலும் தமிழ்நாட்டுக்கு தேவைப்படவில்லை. அப்படியே பணி நிமித்தமாக எந்தவொரு மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவைப்பட்டால் அது தனிநபரின் விருப்பத்துக்கு உட்பட்டது, தேவைக்குட்பட்டது. யாரும் கற்றுக்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தப்போவதில்லை. ஆனால்...

ஏன் இந்த பரப்புரைப் பயணம்?

ஏன் இந்த பரப்புரைப் பயணம்?

தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி சமுதாய இயக்கமாக தமிழர் நலனுக்காக அரை நூற்றாண்டுக்கு மேலாக ஓயாது உழைத்தவர் பெரியார். ஜாதிய ஏற்றத்தாழ்வு இல்லாத, பாலினப் பாகுபாடு இல்லாத ஒரு சமத்துவ சமூகம் மலர வேண்டும் என்று தன் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டு பாடுபட்டவர் பெரியார். மக்கள் ஆதரிப்பதைப் பேசி, அவர்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு மாறாக மக்கள் பின்பற்றிய மூடத்தனங்களை மிகக் கடுமையாக எதிர்த்தவர் பெரியார். தன் மீது கல், முட்டை, செருப்பு போன்றவை வீசப்பட்டபோது கூட ஓடி ஒளிந்து கொள்ளாமல், தனக்கு சரியெனப்பட்டதை வெளிப்படையாகப் பேசியவர் பெரியார். குடலிறக்க வலியோடும், மூத்திரச் சட்டியோடும் வாழ்நாளின் கடைசிவரை தமிழ் மக்களின் தன்மானத்திற்காகப் பேசியவர் பெரியார். கல்வி எட்டாக்கனியாக இருந்த தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி ஒரு நூற்றாண்டில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு உருவாகக் காரணம் பெரியார். எல்லாவற்றுக்கும் மேலாக சுயமரியாதைச் சிந்தனையைத் தமிழர்களுக்குக் கடத்தியவர் தந்தை பெரியார். ஆனால் இன்றைக்குப் பெரியாரைக்...

பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?-வாங்க வரலாறு பேசுவோம்

பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?-வாங்க வரலாறு பேசுவோம்

வாங்க வரலாறு பேசுவோம்…பரப்புரைப் பயணம் இப்போதைய பேசுபொருளாய் எதிர்மறையாய் உருவாக்கப்பட்டிருக்கிற அரசியல் சூழலை, நேர்மறையாய் எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாட்டின் நான்கு முனைகளில் இருந்து பரப்புரை பயணம் நடத்துகிறது. நிறைவாக மயிலாடுதுறையில் மாநாடு நடைபெறவுள்ளது. ஏனென்றால், பெரியார் மறைந்து அரை நூற்றாண்டுகளைக் கடந்துவிட்டோம். இப்போதும் தமிழ்நாட்டின் விவாதப் பொருள் பெரியாரை சுற்றியே இருக்கிறது. தமிழ்நாட்டின் எல்லா போராட்டக் களங்களிலும் பெரியார் இடம்பெறுகிறார், அவரது கருத்துக்கள் பேசப்படுகின்றன. தமிழ்நாட்டை ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் இந்தித் திணிப்புக்கு எதிராக அரண்போல நிற்கிறார் பெரியார். மதவாத சக்திகள் தமிழ்நாட்டை வன்முறைக்காடாக்க முயற்சிக்கும் களங்களில் சமத்துவ நெருப்பாக அவர்களின் எண்ணத்தை சுட்டுப் பொசுக்குகிறார் பெரியார். பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களைக் கல்வியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று துடிக்கும் வருணாசிரமாவதிகளுக்கு தமிழ்நாட்டில் மரண அடி கொடுத்து எதிர்த்து நிற்கிறது பெரியார் விதைத்துவிட்டுச் சென்ற கல்வி குறித்தான விழிப்புணர்வு சிந்தனைகள். பெரியாரை எப்படி எதிர்கொள்வது என்றே...

புரட்சிப் பெரியார் முழக்கம்

புரட்சிப் பெரியார் முழக்கம்

ஆண்டு சந்தா : ரூ.300/- ஐந்தாண்டு சந்தா : ரூ.1500/- தொடர்புக்கு : 15. தோழமை, வெங்கடேஸ்வரா நகர், பெருங்குடி, சென்னை – 600096. பேச : 63697 76351, முழக்கம் தொடர்பான சந்தேகங்களுக்கு மேற்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல் : newsdvk@gmail.com. பெரியார் முழக்கம் 20022025 இதழ்

ஒன்றிய ஆட்சிக்கு எதிராக கழகம் ஆர்பாட்டம் கல்வி உரிமையை பறிக்காதே

ஒன்றிய ஆட்சிக்கு எதிராக கழகம் ஆர்பாட்டம் கல்வி உரிமையை பறிக்காதே

ஒன்றிய அரசு தமிழ்நாட்டின்‌ பள்ளிக்கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி உரிமைகளைப் பறிப்பதை எதிர்த்து தமிழ்நாடு போர்க்கோலம் பூண்டுள்ளது. திமுக சார்பில் டெல்லியில் கண்டன‌ ஆர்ப்பாட்டம்‌ நடந்து முடிந்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம்‌ தமிழ்நாடடின்‌ முக்கிய நகரங்களில் பிப்.13 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. பல்கலைக் கழக பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிகளை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்த புதிய விதிகளில் பல்கலைக்கழகங்கள் ஒன்றிய அரசின்‌ நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆபத்து அடங்கியுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி துண்டறிக்கை அச்சிடப்பட்டு மக்களிடம் வழங்கப்பட்டன. கழகம்‌ ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு… சேலம்: மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் யூஜிசி விதிகளில் திருத்தம் செய்து மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கிற, இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கிற ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து 13.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர்...

பெரியாரை இழிவுப்படுத்துபவர்களை அம்பலப்படுத்துவோம்! அப்புறப்படுத்தவோம்!

பெரியாரை இழிவுப்படுத்துபவர்களை அம்பலப்படுத்துவோம்! அப்புறப்படுத்தவோம்!

அனைத்து சனநாயக இயக்கங்கள் சார்பாக பொதுக்கூட்டம் சென்னை மாவட்டம் திருவொற்றியூரில் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், புதுச்சேரி மாநில தலைவர் லோகு அய்யப்பன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, இளைஞரணி மாவட்டச் செயலாளர் ப.அருண், மாவட்ட கழக தோழர்கள் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்துகொண்டனர். கூட்டமைப்பு சார்ந்த பொழிலன், போரசிரியர் செயராமன், வாலாசா வல்லவன், மனிதி செல்வி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். பெரியார் முழக்கம் 13022025 இதழ்

தினேசு-சூர்யா இணையரின் ஜாதி மறுப்புத் திருமண விழா

தினேசு-சூர்யா இணையரின் ஜாதி மறுப்புத் திருமண விழா

திராவிட இயக்கத் தமிழர் பேரவையைச் சேர்ந்த தோழரும், ஊடகவியலாளருமான தினேசு – சூர்யா இணையர்களின் சுயமரியாதைத் திருமணம் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் 02.02.2025 அன்று சென்னையில் ராமாபுரம்‌ பகுதியில் உள்ள பாம்ஷோர் உணவகத்தில் நடைபெற்றது. எவ்வித சடங்கு சம்பிரதாயம் இன்றி எளிமையாக, இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த ஜாதி மறுப்பு இணையேற்பு விழாவை, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்திவைத்தார். காசு நாகராசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், சன் நியூஸ் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் மு.குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஊடகவியலாளர் கீதா தொகுத்து வழங்கினார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ப.அருண் உட்பட கழகத் தோழர்கள் பலர் பங்கேற்றனர்.சன்நியூஸ் தலைமை செய்தியாளர் மு.குணசேகரன் பேசுகையில்,தோழர் தினேஷ் அடக்கமான சிந்தனை,படைப்பூக்கமும் நிறைந்தவர் என்று பாராட்டினார். திராவிடர்...

பேரறிஞர் அண்ணா நினைவுநாள்; கழகம் சார்பில் மரியாதை!

பேரறிஞர் அண்ணா நினைவுநாள்; கழகம் சார்பில் மரியாதை!

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை இராயப்பேட்டை பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன், ஓ.சுந்தரம் (திமுக), கழக இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், மாணவர் கழக அமைப்பாளர் பேரன்பு மற்றும் பகுதி கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். கோவை: பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆவது நினைவு நாளில் கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காந்திபுரம் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு, மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. பெரியார் முழக்கம் 13022025 இதழ்

நிமிர்வோம் வாசகர் வட்ட   26-வது சந்திப்பு!

நிமிர்வோம் வாசகர் வட்ட 26-வது சந்திப்பு!

பேரறிஞர் அண்ணா 56-ஆவது நினைவுநாளை முன்னிட்டு 26-ஆவது சிறப்பு நிமிர்வோம் வாசகர் வட்டம் 02.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிமிர்வோம் வாசகர் வட்டப் பொறுப்பாளர் தோழர் பிரகாசு தொகுத்து வழங்க ,கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார் .மேலும் ஊடகவியலாளர் கரிகாலன், “பார்ப்பனக் கைக்கூலிகள் சீமான், மணியரசன்” என்ற தலைப்பில் உரையாற்றினார் . ஊடகவியலாளர் மில்டன், “பெரியார் அண்ணாவின் தமிழ்த் தொண்டு” என்ற தலைப்பில் அண்ணா செய்த சாதனைகளையும் நிகழ்கால அரசியல் குறித்தும் சிறப்புரையாற்றினார்.கழக தோழர்கள் உட்பட நூற்றுக்கும்‌ மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அன்னூர் விஷ்ணு நன்றி கூறினார்‌. கழக ஏட்டின்‌ வளர்ச்சிக்கு சென்னை அடையாறு பகுதி இரா.வெங்கடேசன் ரூபாய் 7000 -கழக பொதுச் செயலாளரிடம் நிகழ்ச்சியில் வழங்கினார். தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் பேரன்பு 25-முழக்க சந்தாவுக்கான ரூபாய் 7500 தொகையைத் தலைவர் அவர்களிடம் வழங்கினார். நிகழ்வில் பிரவீன்,சுபாஷ்...

பார்ப்பனிய பண்பாட்டை எதிர்த்தவர் மேதகு பிரபாகரன்

பார்ப்பனிய பண்பாட்டை எதிர்த்தவர் மேதகு பிரபாகரன்

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் b&w tamil youtube சேனலுக்கு அளித்த நேர்காணலில், மேதகு பிரபாகரன் பெரியார் கொள்கைகளையே ஈழத்தில் செயல்படுத்தினார் என்பதை விரிவாக விளக்கினார் . கடந்த வார தொடர்ச்சி … போராட்டத்தில் வீரமரணம் எய்திய விடுதலைப்புலிகளின் இறுதி நிகழ்வில் மதச் சடங்குகள் நடப்பதில்லை. பெற்றோர்கள் கூட எந்த வித மதச் சடங்குகள் இல்லாமல் மலர் வளையம் வைத்துத் தான் மரியாதை செய்வார்கள். துயிலும் இடங்களை மக்கள் வாகனங்களில்‌ கடக்கும்‌ போது தலைகுனிந்து ஒரு மரியாதை செலுத்திவிட்டு தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடந்து செல்வார்கள். விடுதலைப்புலிகள் வைப்பகம்(வங்கி) ஒன்றை நடத்தினார்கள்.தமிழேந்தி என்ற போராளி தான் பொறுப்பாளராக இருந்தார். தமிழேந்தி முழுமையான பகுத்தறிவாளர்‌. சித்திரையில் மதவாதிகள் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டு நான் கிளிநொச்சியிஸ் இருந்தேன். சித்திரை மாத தமிழ்ப்புத்தாண்டை விடுதலைப் புலிகள் இயக்கம் ஏற்கவில்லை. தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டு அந்த நாள்...

பறிபோகும் சிறுபான்மையினர் உரிமைகள்!

பறிபோகும் சிறுபான்மையினர் உரிமைகள்!

“சப்கா சாத் சப்கா விகாஸ்” என்ற முழக்கத்தை (எல்லோருக்கும் எல்லாவற்றையும் கிடைக்கச் செய்வோம்) தொடர்ச்சியாக முன்வைக்கிறார் பிரதமர் மோடி. ஆனால் சிறுபான்மையின சமூக மாணவர்களின் கல்வி உரிமைகள் மீது மிக மோசமான தாக்குதல்கள் ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதுதான், அத்துறைக்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதியில் இருந்து தெரிய வருகிறது. சிறுபான்மையினர் சமூக மாணவர்களுக்கு ப்ரீ மெட்ரிக் உதவித்தொகை வழங்க 433 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என 2023-24 நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது. அது 2024-25 நிதியாண்டில் 326.16 கோடி ரூபாயாகக் குறைந்தது. தற்போது நடப்பு நிதியாண்டில் (2025-26) 195.70 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. நிதி அறிவிப்பிலேயே இத்தகைய பாரபட்சத்தை பா.ஜ.க. அரசு நிகழ்த்தியிருக்கிறது என்றால், ஒதுக்கீடு குறித்த விவரங்கள் மேலும் அதிர்ச்சியைத் தருகின்றன. 2023-24 நிதியாண்டில் 95.83 கோடி ரூபாயும், 2024-25 நிதியாண்டில் 90 கோடி ரூபாயும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினர் கல்வி தொடர்பான 6 திட்டங்களுக்கு 2023-24...

ஒன்றிய ஆட்சியின் ஆணவம்

ஒன்றிய ஆட்சியின் ஆணவம்

விளிம்பு நிலை மக்களின் கல்வியை வேத காலம் தொடங்கி பார்ப்பனியம் மறுத்தே வருகிறது. “சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று கட்டளை இட்டது”.பாடசாலைகள் என்றாலே வேதம் கற்பிப்பதற்கு மட்டும் தான்.தமிழ் மன்னர்கள் கோவில்களைக் கட்டினார்களே தவிர பள்ளிக்கூடங்களை நிறுவவில்லை. வேத பாடசாலைகளைத் தான்‌ அமைத்தார்கள்.பிரிட்டிஷ் அதிகாரி மெக்காலே தான்‌,முதன்‌ முதலாக ஆங்கில வழியில் பொதுப் பள்ளிகளைக் கொண்டு வந்தார்(1835).அந்த கல்வித் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்களும் பார்ப்பனர்கள்தான். வேதம்‌ படித்தவர்கள் ஆங்கிலம் படித்து பிரிட்டிஷ் ஆட்சியில் உயர் பதவிகளை கைப்பற்றினார்கள். 1916-ம் ஆண்டு பார்ப்பன அல்லாதார் இயக்கம் வரலாற்றுத் தேவையாக வந்த பிறகு பார்ப்பனர் ஆதிக்கம் கேள்விக்கு உள்ளானது. நீதிக்கட்சியின் முதல் ஆட்சியில் 1921-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வகுப்புவாரி உத்தரவு பார்ப்பனர் அதிகார வர்க்கத்தால் முடக்கப்பட்டது.அதற்கு பிறகு 1928 ஆம்‌ ஆண்டில் தான்,ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு,சுப்பராயன்‌ முதல்வராக இருந்த போது அமைச்சர் முத்தையா முதலியார் அவர்களால் வகுப்புவாரி உரிமைச்...

திருப்பரங்குன்றம்! சங்கிகளின்‌ புரட்டு  மதக்கலவரத்தை உருவாக்க சதி

திருப்பரங்குன்றம்! சங்கிகளின்‌ புரட்டு மதக்கலவரத்தை உருவாக்க சதி

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்‌ என்ற‌ முழக்கத்தோடு சங் பரிவாரங்கள்‌ சதித்திட்டம் தீட்டி வருகின்றன. மதவெறி அமைப்புகளை தமிழ்நாட்டு ‌மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும்‌ என்று திமுக,காங்கிரஸ்,மதிமுக,இந்தியகம்யூனிஸ்டு, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளன. மதுரை மாவட்ட காவல்துறையும் நீதித்துறையும் சங்கிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திருப்பரங்குன்றம் மலை முழுவதும்‌ முருகனுக்கே சொந்தம் என்று சங்கிகள் கூறுவது வரலாற்று புரட்டு. உண்மையில் நடப்பது என்ன? மதுரையில் திருப்பரங்குன்றம் போல எண்ணற்ற பெருங்குன்றுகள் உள்ளன. இந்தக் குன்றுகள்அனைத்தும் நாட்டார்வழிபாடு, சமண, புத்த சமயங்கள், வைணவ, சைவமதங்கள், இசுலாமிய, கிறித்தவ சமயங்கள் என அனைத்து வழிபாட்டு தலங்களும் எந்தவித இடர்களும் சிக்கல்களும் இன்றி மக்களால் அமைதியான முறையில் வழிபட்டு வரப்படுகின்றன. இவ்வாறு தான் இசுலாமிய இறை மார்க்கத் தூதர்களின் வழிபாட்டு இடங்களில் ஒன்றான அவுலியா சிக்கந்தர்பாதூஷா அடக்கம் செய்யப்பட்ட தர்கா வழிபாட்டு இடம் திருப்பரங்குன்றம் மலை மீது இருநூறு ஆண்டுகளுக்கு...

புரட்சிப் பெரியார் முழக்கம்

புரட்சிப் பெரியார் முழக்கம்

ஆண்டு சந்தா : ரூ.300/- ஐந்தாண்டு சந்தா : ரூ.1500/- தொடர்புக்கு : 15. தோழமை, வெங்கடேஸ்வரா நகர், பெருங்குடி, சென்னை – 600096. பேச : 63697 76351 முழக்கம் தொடர்பான சந்தேகங்களுக்கு மேற்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல் : newsdvk@gmail.com பெரியார் முழக்கம் 07022025 இதழ்

“தமிழீழமும் – திராவிடர் இயக்கமும்!” கருத்தரங்கம்; கழகத் தலைவர் சிறப்புரை

“தமிழீழமும் – திராவிடர் இயக்கமும்!” கருத்தரங்கம்; கழகத் தலைவர் சிறப்புரை

கோவை மாநகரக் கழக சார்பில் 30.01.25 அன்று “தமிழீழமும் திராவிடர் இயக்கமும்“ சிறப்புக் கருத்தரங்கம் கோவை சிவானந்தா காலனியில் கழகத் தோழர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. மாநகரச் செயலாளர் வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். தோழர்கள் லோகநாயகி, சதீஸ், ஜெகதீஸ், நவீன் முன்னிலை வகித்தனர். இதில் கழகத் தலைவர் கொளத்தூர்மணி, புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த வழக்கறிஞர் மலரவன் ஆகியோர் சிறப்பரையாற்றினர். கருத்தரங்கில் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர்மணி, தமிழ் ஈழத்திற்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும், இன்ன பிற அமைப்புகளுக்கும் திராவிடர் இயக்கங்களும் அதன் தலைவர்கள் – தோழர்கள் மற்றும் தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் – தொண்டர்கள் செய்த தன்னலமற்ற உதவிகளையும், பணிகளையும் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் மற்றும் ஏனைய பொறுப்பாளர்கள், தளபதிகளின் ஆரிய மனுவாத எதிர்ப்பையும், புலிகளின் பகுத்தறிவு சார்ந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார். மேலும் இதில் விசிக மாநகர மாவட்டச் செயலாளர் கோவை குமணன், தி.மு.க....

புதியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் பெரியார் பல்கலைக்கழகம்

புதியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் பெரியார் பல்கலைக்கழகம்

“ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் அறிமுகமா? திராவிடர் விடுதலைக் கழகம் கேள்வி!” இது குறித்து கழகத் தலைவர் தோழர் “கொளத்தூர் மணி” அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : சேலம் பெரியார் பல்கலைக் கழகம் அண்மையில் வெளியிட்ட முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு கையேட்டில் முனைவர் பட்ட படிப்பில் சேர அடிப்படை கல்வி தகுதியாக 10+2+3+2 அல்லது 12+1+3+2 அல்லது 10+2+4 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைப் படி இளநிலைப் பட்டப் படிப்பு மூன்று ஆண்டுகளுக்கு பதிலாக 4 ஆண்டுகளாக மாற்றம் செய்யப் பட்டுள்ளதை சேலம் பெரியார் பல்கலைக் கழகம் தனது முனைவர் பட்ட சேர்க்கை வழிகாட்டியில் சேர்த்துள்ளது. முதுநிலை பட்டப் படிப்பை முனைவர் பட்டத் தகுதியிலிருந்து நீக்கி உள்ளது. இது பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டலில் உள்ளதாகும். அதாவது முதுநிலைப் பட்டப் படிப்பு இல்லாமலும் முனைவர் பட்டப் படிப்பில்...

சோவியத் புரட்சி இங்கேயே நடக்க வேண்டுமென விரும்பினார் பெரியார்! -இனியவன்

சோவியத் புரட்சி இங்கேயே நடக்க வேண்டுமென விரும்பினார் பெரியார்! -இனியவன்

24.12.2024 அன்று கோவையில் நடைபெற்ற புரட்சியாளர்கள் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் தோழர் இனியவன் ஆற்றிய உரை. கடந்த இதழின் தொடர்ச்சி.. சுயமரியாதை முக்கியம்! ஒடுக்கப்பட்டவர்களுக்கு நில உரிமை வேண்டும் என்று போராடிய அம்பேத்கர் அவர்கள் அதே நேரத்தில் மகாராஷ்டிரத்தில் நிலவிய ‘மகர்வர்தான்’ முறையை நீக்க வேண்டி பம்பாய் மாகாணத்தில் கோரிக்கை வைத்தார். மகர்வர்தான் என்பது கிராமங்களில் ஏவல் பணியில் ஈடுபடும் மகர்களுக்கு (ஒடுக்கப்பட்ட ஜாதி) கிராம மக்கள இலவசமாக அளித்திடும் சிறு நிலம் ஆகும். ஆனால் அந்த நிலத்தை பெற்ற காரணத்தாலேயே நேரம் காலம் பார்க்காமல் கிராமத்திற்கான ஏவல் பணிகள் அனைத்தையும் ஓர் மகர் கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும். அந்த மகர் மட்டும் அல்லாமல் அவரின் குடும்ப உறுப்பினர்கள் கூட கிராமத்தினரால் அனைத்து வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டார்கள். உயர்ஜாதியினரின் பணிகளைச் செய்ய ஒரு மகர் மறுத்தால் அவரது நிலம் அவர்களிடமிருந்து பிடுங்கப்படுவதுடன் சமூக விலக்கத்திற்கும் ஆளாக நேரிடும். இத்தகைய...

பொதுவுடைமை இயக்கத்திற்கு உதவிய பெரியார் இயக்கம்

பொதுவுடைமை இயக்கத்திற்கு உதவிய பெரியார் இயக்கம்

அடக்குமுறையின் இருண்ட நாட்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒளியேற்றியப் பெருமை திராவிடர் கழகத்தையேச் சாரும். பெரியாரின் ‘விடுதலை’ இதழ் மட்டுமே துணிச்சலுடன் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. 1950 பிப்ரவரி 11-இல் சேலம் சிறையில் 22 கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து ‘விடுதலை’ தீவிரத் தலையங்கம் எழுதியது. “பலிப்பட்ட 22 வீரர்களின் பெயர்கள் கூட வெளியிடப்படவில்லை. மரக்கட்டைகளாகவா கருதுகிறீர்கள்? அவர்களுக்கும் குடும்பம், உறவுகள் உண்டு. விசாரணைக் குழுவில் கம்யூனிஸ்ட் பிரதிநிதி அல்லது தொழிற்சங்கத் தலைவர் சக்கரைச் செட்டியாராவது இருக்க வேண்டும்” என்று துணிச்சலாக எழுதியது. பெரியார் கண்டனக் கூட்டங்கள் நடத்த அறைகூவல் விடுத்தார். 1951-இல் கட்சித் தடை நீக்கப்பட்டபோது, தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது. தலைமறைவில் இருந்த பி.ராமமூர்த்தி பெரியார், குத்தூசி குருசாமியுடன் இரகசியமாக சந்தித்துப் பேசினார். நடிகவேள் எம்.ஆர்.ராதா தமிழ்நாடு முழுவதும் “ரத்தக்கண்ணீர்”, “முருகன்”, “பேப்பர் நியூஸ்” நாடகங்கள் நடத்தி நிதி திரட்டினார். பரமக்குடி, திருப்பூர், பொள்ளாச்சி, மதுரை, சென்னை என...

கல்வி உரிமையைப் பறிக்காதே! யு.ஜி.சி.யைக் கண்டித்துக் கழகம் ஆர்ப்பாட்டம்

கல்வி உரிமையைப் பறிக்காதே! யு.ஜி.சி.யைக் கண்டித்துக் கழகம் ஆர்ப்பாட்டம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவிப்பு! ஒன்றிய அரசே ! கல்வி உரிமையைப் பறிக்காதே ! இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்காதே! ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து நம் மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள், விதிகளில் திருத்தங்களை செய்து அறிவித்து வருகிறது.சமீபத்தில் UGC விதிகளில் திருத்தம் செய்து புதிய விதிகளை ஒன்றிய பாஜக அரசு வெளியிட்டுள்ளது. அது மாநிலக் கல்வி உரிமைகளைப் பறிக்கும் வண்ணம் குறிப்பாக தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பைச் சிதைக்கும் வகையில் உள்ளது. மேலும் இந்த புதிய விதிகளில் உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழிக்கும் திட்டத்துடன் திருத்தங்களை செய்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. “எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே” எனும் சனாதன தர்மத்தை சட்டப்படியே நிறைவேற்ற துடிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் எதிர்வரும் பிப்.13ஆம் தேதி வியாழக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒத்த கருத்துள்ள...

மாநில உரிமையைப் பறிக்கும் உச்சநீதிமன்றம்!

மாநில உரிமையைப் பறிக்கும் உச்சநீதிமன்றம்!

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களில், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்குவது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, 2019-இல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றமும் முதுநிலை படிப்புகளில், வசிப்பிடத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று ஜனவரி 30-ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள இத்தீர்ப்பால் தமிழ்நாடு பின்பற்றி வரும் 69% இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பலமான மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு இத்தீர்ப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மருத்துவ முதுகலை படிப்பில் 2 ஆயிரத்து 294 இடங்கள் இருக்கின்றன. அதில் இடஒதுக்கீட்டின்படி ஒன்றிய அரசு 50 விழுக்காடு இடங்களையும், தமிழ்நாடு அரசு 50...

கழகப் பொதுச்செயலாளருக்குப் பாராட்டு விழா!

கழகப் பொதுச்செயலாளருக்குப் பாராட்டு விழா!

திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளரும், புரட்சிப் பெரியார் முழக்கம் இதழின் ஆசிரியருமான விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ‘பெரியார் விருது’ வழங்கி பெருமை சேர்த்தது. இதற்காக பொதுச்செயலாளரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்திய அலுவலர்கள் அசோசியேசன் சங்க கட்டடத்தில் 26.01.2025 அன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. மாணவர் நகலக உரிமையாளர் செளரிராஜன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், மூத்த வழக்கறிஞர் துரைசாமி, வாலாசா வல்லவன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், மருத்துவர் அமலோற்பவநாதன், வீ.அரசு, பேராசிரியர் கல்யாணி, தடா ஓ.சுந்தரம், பத்திரிகையாளர்கள் சிகாமணி, வீரபாண்டியன், சுகுணா திவாகர், வழக்கறிஞர் அஜிதா, மனநல மருத்துவர் சிவபாலன், மருத்துவர் தாயப்பன், சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் பொதுச்செயலாளர் உடனான தங்களது அனுபவங்கள், பொதுச்செயலாளரின் அர்ப்பணிப்புமிக்க இயக்க – எழுத்துப் பணிகளை பாராட்டிப் பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டனர்....

கும்பமேளாவில் சாமியார்கள் கொட்டம் – இந்தியாவை இந்து நாடாக்க சங்கிகள் முயற்சி

கும்பமேளாவில் சாமியார்கள் கொட்டம் – இந்தியாவை இந்து நாடாக்க சங்கிகள் முயற்சி

உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கப்பட்டு பிப்ரவரி 26-ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. கும்பமேளாவில் கூடும் சாமியார்கள், 2035-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை இந்து நாடாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்து அரசமைப்புச் சட்டம் கும்பமேளா தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள அம்மாநில முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத், “சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம். அதுவே மனிதத்தின் மதம். நமது வழிபாட்டு முறைகளில் வேறுபாடு இருக்கலாம், ஆனால், மதம் ஒன்றுதான். அந்த மதம் சனாதன தர்மம். அந்த சனாதன தர்மத்தின் பிரதிநிதியாக கும்பமேளா விளங்குகிறது. பிரயாக்ராஜில் நடந்து வரும் மாபெரும் மத நிகழ்வான மகா கும்பமேளா, எந்த ஒரு ஜாதி அல்லது மதத்திற்கும் உட்பட்டது அல்ல. இது அனைத்து மதம், கலாசாரம் மற்றும் சமயங்களின் மாபெரும் கலவையாக திகழ்கிறது.’’ என்று கூறியுள்ளார். ஆனால் கும்பமேளாவில் கூடிய சாமியார் கூட்டம் இந்து அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கக் குழு அமைத்துள்ளது....

கழகத் தலைவர் கொளத்தூர் மணி இல்லத்தை திறந்து வைத்து சிறப்புரை-கடுவனூர் நாகராஜ் – சுலோச்சனா இல்லத் திறப்பு விழா

கழகத் தலைவர் கொளத்தூர் மணி இல்லத்தை திறந்து வைத்து சிறப்புரை-கடுவனூர் நாகராஜ் – சுலோச்சனா இல்லத் திறப்பு விழா

கள்ளக்குறிச்சி: கடுவனூர் கழகத் தோழர் மு.நாகராஜ் – நா.சுலோச்சனா ஆகியோரின் புதிய இல்லத் திறப்பு விழா 09.01.2025 அன்று கடுவனூர் கிராமத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி புதிய இல்லத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். திராவிடர் செல்வி பகுத்தறிவுப் பாடலை பாடினார் கீதா அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் சி.சாமிதுரை தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முருகன், ராமச்சந்திரன், ஆசைத்தம்பி ரிஷிவந்தியம் ஒன்றிய அமைப்பாளர் கார்மேகம், ஒன்றியத் தலைவர் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் மதியழகன், மாவட்டத் துணைச் செயலாளர் வெற்றிவேல், விழுப்புரம் மாவட்டத் தலைவர் இளையரசன், கடலூர் மாவட்டத் தலைவர் மதன்குமார், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் இராமர்,  மக்கள் அதிகாரம் ராமலிங்கம், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் நிறைவாக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கதிரவன் நன்றி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூமாலை, த.பெ.தி.க....

மேட்டூரில் கலந்துரையாடல் கூட்டம்; கழகத் தலைவர் பங்கேற்பு

மேட்டூரில் கலந்துரையாடல் கூட்டம்; கழகத் தலைவர் பங்கேற்பு

சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 19.01.2025 அன்று மேட்டூர் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், சேலம் மாவட்டப் பொருளாளர் சம்பத், மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின், மாவட்ட அமைப்பாளர்கள் டைகர் பாலன், நங்கவள்ளி அன்பு, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுதா மற்றும் பொறுப்பாளர்களும், தோழர்களும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். 2025ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும் இயக்க வளர்ச்சி குறித்தும் தோழர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். புரட்சிப் பெரியார் முழக்க சந்தா தொகையை வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் தலைமைக்கு ஒப்படைப்பது குறித்தும், சேலம் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நங்கவள்ளி கிருஷ்ணன், நங்கவள்ளி ஒன்றியச் செயலாளராக இராஜேந்திரன்,...