Category: பெரியார் முழக்கம் 2021

‘நீட்’ எதிர்ப்பை மக்கள் இயக்கமாக்குவோம்!

‘நீட்’ எதிர்ப்பை மக்கள் இயக்கமாக்குவோம்!

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வுகள் உருவாக்கும் ‘தாக்கம்’ குறித்து ஆராய தி.மு.க. ஆட்சி, முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழுவை அமைத்து ஆராய்ந்து வருகிறது. குழுவின் அறிக்கை இன்னும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் குழுவின் நியமனத்தை இரத்து செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.வின் மாநிலப் பொறுப்பிலுள்ள கரு. நாகராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேசிய மருத்துவ கவுன்சில் என்ற அமைப்பை தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றி 2020இல் ஒன்றிய ஆட்சி சட்டமாக்கி மருத்துவக் கல்வி தொடர்பான உரிமைகளை தன் வசமாக்கிக் கொண்டு விட்டது. மாநில அரசு உருவாக்கிய மருத்துவக் கல்லூரிகளையே தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் மிக்க ஆணையமாக மாற்றியிருக்கிறது. இப்போது தமிழ்நாடு அரசு நியமித்திருக்கும் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவை நியமிப்பதற்குக்கூட இந்த ஆணையத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று இப்போது பா.ஜ.க. பொறுப்பாளர் தாக்கல் செய்த மனு கூறுகிறது. மக்களால்  தேர்ந் தெடுக்கப்பட்ட ஒரு...

300 தோழர்கள் பங்கேற்ற கிருட்டிணகிரி மாவட்டக் கலந்துரையாடல் எழுச்சி

300 தோழர்கள் பங்கேற்ற கிருட்டிணகிரி மாவட்டக் கலந்துரையாடல் எழுச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரத்தில் 15.12.2021 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. கலந்துரையாடலில் 20 உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டமும் நடைபெற்றது. நிகழ்விற்கு முன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர்களும், தளி, கெலமங்கலம், சூளகிரி ஒன்றிய பொறுப்பாளர்களும் வரவேற்றனர். ராயக் கோட்டை வட்டம் காடு செட்டிபட்டி சோதனை சாவடிக்கு வந்தடைந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களை சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுத்து நின்ற மாவட்ட பொறுப்பாளர்கள் வாஞ்சிநாதன், குமார், கிருஷ்ணன், மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் அவரை வரவேற்று ராயக்கோட்டை, கெலமங்கலம், மத்திகிரி கூட்டு ரோடு வழியாக பேரணியாக ஓசூர் இரயில் நிலையம் வந்தடைந்தனர். ஓசூர் ரயில் நிலையத்தில் நகர பொறுப்பாளர்கள் ராஜ்குமார், சரவண குமார், ஜேக்கப் ஜேரிமையா, பிரவீன் ஏற்பாட்டில் சிறப்பான இசை முழக்கமிட்டு கழகத் தலைவரை வரவேற்றனர். பின்பு அருகில் உள்ள...

‘உண்ணாவிரதத்தை’ எதிர்த்து ‘உண்ணும் விருந்து’ பா.ஜ.க. உண்ணாவிரத மிரட்டலுக்கு ஈரோடு (கிழக்கு) மாவட்டக் கழகம் பதிலடி

‘உண்ணாவிரதத்தை’ எதிர்த்து ‘உண்ணும் விருந்து’ பா.ஜ.க. உண்ணாவிரத மிரட்டலுக்கு ஈரோடு (கிழக்கு) மாவட்டக் கழகம் பதிலடி

வாரணாசியில் காசி விசுவநாதன் கோயில் வாசலில் பங்கேற்றுப் பேசிய மோடியின் பேச்சை ஈரோடு கொடுமுடி கோவிலுக்குள் திரையிட்டுக் காட்ட வற்புறுத்திய பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத பிரிவுகளின் கோரிக்கைக்கு இடம் கொடுக்காத அறநிலையத்துறை அதிகாரிகளை தொடர்ச்சியாக பணி செய்ய விடாமல் பா.ஜ.க.வினர் தடுத்து வந்தனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேசுவரர் கோயிலில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதாக செயல் அலுவலர் உள்பட சிலர் மீது பாஜகவினர் புகார் அளித்தனர். இந்நிலையில் செயல்அலுவலர் ரமேஷ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பாஜகவைச் சேர்ந்த சரஸ்வதி உள்பட சிலர் மீது புகார் தெரிவித்து கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதற்கு எதிர்வினையாக பாஜக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், ஆகம விதிகளுக்கு எதிராகச் செயல்பட்ட செயல்அலுவலர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி வரும் 26 ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் எனவும், அதற்குபிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநில தலைவர்...

மாணவர்கள் கவனத்துக்கு : அரசு தேர்வாணையம் அறிவிப்பு

மாணவர்கள் கவனத்துக்கு : அரசு தேர்வாணையம் அறிவிப்பு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் டிஎன்பிஎஸ்சி மூலம் 2022-ம் ஆண்டு 12,263 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் குரூப்-2,குரூப்-2ஏ, குரூப்-4 பதவிகளில் மட்டும் 11,086 காலி இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் பணியாளர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது போட்டித் தேர்வுகளை நடத்தி, தகுதியான நபர்களை தேர்வு செய்துஅரசு துறைகளுக்கு வழங்குகிறது. ஓராண்டில் எந்தெந்த அரசு பணிகளுக்கான தேர்வு அறிவிக்கை எப்போது வெளியிடப்படும், எப்போது தேர்வு நடக்கும், தேர்வு முடிவுகள், நேர்காணல் எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை (ஹnரேயட ஞடயnநேச) டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அரசு பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற்கு தேர்வுக் கால அட்டவணை பெரிதும் உதவுகிறது. தற்போதுதமிழக முதல்வரின் செயலராகபணிபுரியும் த.உதயசந்திரன், டிஎன்பிஎஸ்சி செயலராக...

ஆயுதப் படையினர் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் நீக்கப்பட வேண்டும்

ஆயுதப் படையினர் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் நீக்கப்பட வேண்டும்

ஆயுதப் படையினர் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் கிழித்தெறியப்பட வேண்டும் என்று மக்கள்  ஏன் கருது கிறார்கள்? இந்தச் சட்டம், அரசமைப்புச் சட்டத்தின்கீழ் செல்லுபடியாகக் கூடியதா என 1997இல் உச்சநீதி மன்றத்தில் அரசமைப்புச்சட்ட அமர்வாயம் பரிசீலித்து, இந்தச் சட்டமானது அரசமைப்புச் சட்டத்தின்கீழ் செல்லுபடியாகக் கூடியது என்றும், தன்னிச்சையாக செயல்படும் தன்மையிலிருந்தும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தது. (சூயபய ஞநடியீடந’ள ஆடிஎநஅநவே டிக ழரஅயn சுiபாவள எ. ருniடிn டிக ஐனேயை, 1997). கோட்பாட்டின்படி இது சரியானதாக இருக்கலாம். ஆனால், அந்தச் சட்டம் அமல்படுத்தப்படும் விதத்தைப் பார்த்தால் அப்படிச் சொல்லமுடியாது என சந்தேகமறக் கூற முடியும். ஆயுதப் படையினருக்கு வங்கம், அஸ்ஸாம், கிழக்கு பஞ்சாப், தில்லி, நாடு பிரிவினையடைந்த போது அங்கேயிருந்த ஐக்கிய மாகாணங்கள் ஆகியவற்றில் எழும் நிலைமைகளைக் கையாள் வதற்காக அவசரச் சட்டங்கள் மூலமாக சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. இந்த அவசரச் சட்டங்கள் பின்னர் 1948ஆம் ஆண்டு ஆயுதப் படையினர் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தால்...

நீட் : கிடப்பில் போடும் ஆளுநர்; பா.ஜ.க.-அ.தி.மு.க. இரட்டை வேடம்

நீட் : கிடப்பில் போடும் ஆளுநர்; பா.ஜ.க.-அ.தி.மு.க. இரட்டை வேடம்

தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வை இரத்து செய்யக் கோரும் மசோதாவை நிறைவேற்றி தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி மூன்று மாதங்கள் ஓடிய பிறகும் ஆளுநர் மாளிகை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. முதல்வர் நேரில் சென்றும் அழுத்தம் தந்தும், காதில் போட்டுக் கொள்ளவில்லை. மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் வில்சன், நீட் இரத்து கேட்டு தனி நபர் மசோதாவை அறிமுகப்படுத்தி எதிர்ப்பைப் பதிவு செய்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு நேரிலும் வற்புறுத்தியுள்ளார். நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு நியமித்த ஏ.கே. ராஜன் குழு நியமன ஆணையை இரத்து செய்யக் கோரி தமிழக பா.ஜ.க. சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து விட்டது. அடுத்தகட்டமாக தமிழக அனைத்துக் கட்சி சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளதாக டி.ஆர். பாலு இப்போது அறிவித்திருக்கிறார்....

கழகம் முன்னெடுத்த பெரியார் நினைவு நாள் நிகழ்வுகள்

கழகம் முன்னெடுத்த பெரியார் நினைவு நாள் நிகழ்வுகள்

சென்னை : பெரியாரின் 48ஆவது நினைவு நாள் நிகழ்வு 24.12.2021 அன்று காலை 8:30 மணியளவில் சென்னை இராயப்பேட்டை வி.எம். தெரு பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. முதலாவதாக தோழர்கள் கிருத்திகா, லீலா ஆகியோர் பெரியாரின் சிலைக்கு, தோழர்களின் கொள்கை முழக்கங்களுடன் மாலை அணிவித்தனர். அருகில் அமைத்திருந்த பெரியார் நினைவு மேடையில், களப்பணியில் உயர்நீத்த, கண்ணா – குமார் உருவப் படத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்தார். பின் பெரியார் நினைவு நாள் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து, சிம்சன், தியாகராயர் நகர், எம்.ஜி.ஆர். நகர், கிண்டி, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்வில், தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர்கள் அய்யனார், அன்பு தனசேகர் ஆகியோர் உட்பட சென்னை கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்....

காணவில்லை; கண்டா விட்டுடாதீங்க!

காணவில்லை; கண்டா விட்டுடாதீங்க!

தேடப்படும் நபரின் பெயர் : ராஜேந்திர பாலாஜி அடையாளம் :             நெற்றி முழுதும் விபூதி-குங்குமம்;  கைகளில் கலர் கலராகக் கயிறுகள்; கழுத்தில் பக்தியை பறைசாற்றும் சாமிக் கயிறு உடை : காவி சட்டை தொழில் : முன்னாள்அமைச்சர் சமூக சேவை : வேலை வாங்கித் தருவதாக பல கோடி வசூல் செய்தல் கொள்கை : கோட்சே காந்தியை சுட்டார் என்றெல்லாம் பேசக் கூடாது. கோட்சே தியாகி; கோட்சேவை அவமதிப்பது இந்து மதத்தை அவமதிப்பதாகும் என்று பேசுவார். ‘மோடி – எங்கள் டாடி’ என்று அவ்வப்போது சொந்தம் கொண் டாடுவார். பெரியார் – அண்ணா கொள்கைகள் எனக்குப் பிடிக்காது; நான் ‘இந்து’. ‘இந்து’ கடவுள்களை குறை கூறுகிறவனை விட மாட்டேன் என்பார். உருமாற்றம் : கடைசியாக தனது வெள்ளைச் சட்டையைக் கழற்றிவிட்டு காவிச் சட்டை அணிந்தார். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் வெள்ளை சட்டைக்கு மாறினார். பா.ஜ.க.வின் ‘தீயாக சீலர்’...

தலையங்கம் தமிழக அரசு, இஸ்லாமிய சிறைவாசிகளிடம்  பாகுபாடு காட்டக் கூடாது

தலையங்கம் தமிழக அரசு, இஸ்லாமிய சிறைவாசிகளிடம் பாகுபாடு காட்டக் கூடாது

அண்ணா பிறந்தநாளையொட்டி முன் விடுதலை செய்யப்பட உள்ள சிறைவாசிகளின் பட்டியலில் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுவதாக முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டில் உள்ள நியாயங்களை மறுத்துவிட முடியாது. அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளில் 700 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து, `முன் விடுதலை’ என்ற சலுகையைப் பெறுவதற்குத் தகுதியுள்ள சிறைவாசிகள் குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டது. அந்த ஆணையில், பயங்கரவாதம், மதமோதல், வகுப்பு மோதல், பாலியல் வன்கொடுமை, சாதி மோதல், அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள், சிறைவாசத்தில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள், ஊழல் வழக்கு, குண்டுவெடிப்பு என 17 குற்றங்களை வகைப்படுத்தி, இந்தக் குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் தலைவர்களின் பிறந்தநாளில் முன்விடுதலை...

இஸ்லாமிய இனப்படுகொலைக்கு தூண்டிவிடுகிறது ‘பஜ்ரங்தள்’

இஸ்லாமிய இனப்படுகொலைக்கு தூண்டிவிடுகிறது ‘பஜ்ரங்தள்’

ஹரித்துவாரில் இந்து வெறியர்கள் ஒன்று திரண்டு முஸ்லீம்களை இனப்படுகொலை செய் வேண்டும் என்று பேசிய வீடியோ பதிவுகள் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ன. ‘பஜ்ரங்தள்’ என்ற இந்து பயங்கரவாதிகள் வடக்கு உத்தரகாண்ட் பகுதியில் கடந்த வாரம் ஒன்று கூடி ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய உறுதி எடுங்கள் என்று பேசியுள்ளனர். இதற்காக சிறை செல்லவும் பயப்பட வேண்டாம் என்று ஒரு தலைவர் பேசியுள்ளார். நம்மில் 100 பேர் துப்பாக்கி ஏந்தினால் 2 மில்லியன் இஸ்லாமியர்களை அழித்து விடலாம் என்றும் அப்போதுதான் சனாதன தர்மத்தைக் காப்பதில் நாம் வெற்றி பெறுவோம் என்றும் ஒரு பெண் பயங்கரவாதி பேசினார். பா.ஜ.க.வைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அதில் பங்கேற்றார். காந்தியை  சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு வணக்கம் செலுத்துங்கள் என்றும் இந்துப் பெண் பயங்கரவாதி கூச்சலிட்டுள்ளார். பிரபோதனார்ந்தா கிரி என்பவர், “கொலை செய்யத் தயாராகுங்கள்; வீரச் சாவுக்குத் தயாராகுங்கள்” என்று பேசியிருக்கிறார். பா.ஜ.க. தலைவர்கள்,...

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்புகள் அய்ந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டது

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்புகள் அய்ந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டது

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏட்டின் ஆசிரியர் விடுதலை இராசேந்திரன் எழுதிய தலையங்களின் நான்கு தொகுப்புகளும் கோடங்குடி மாரிமுத்து என்ற புனைப் பெயரில் அவர் எழுதிய நய்யாண்டி எழுத்துகள் ஒரு தொகுதியாகவும் 5 தொகுதிகளாக வெளி வந்துள்ளது. பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24ஆம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை நிருபர்கள் சங்க அரங்கில் நடந்த நிகழ்வுக்கு தென்சென்னை மாவட்டக் கழக செயலாளர் இரா. உமாபதி வரவேற் புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில கொள்கை வளர்ச்சிக் குழுத் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் நூல்களை வெளியிட தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி பெற்றுக் கொண்டார். தொகுப்புகள் பற்றி மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சித் தோழர் வாலாஜா வல்லவன் அறிமுக உரையாற்றினார். விடுதலை இராசேந்திரன் ஏற்புரை நிகழ்த்தினார். தோழர்கள் மேடைக்கு வந்து தொகுப்புகளை திராவிடர் விடுதலைக் கழகத்...

தலைமைக் கழக பொறுப்பாளர்களின் அய்ந்தாம் கட்ட பயணம்

தலைமைக் கழக பொறுப்பாளர்களின் அய்ந்தாம் கட்ட பயணம்

01.01.2022. சனிக்கிழமை மாலை 6.00 மணி – தூத்துக்குடி மாவட்டம் 02.01. 2022 ஞாயிறு காலை 10.00 மணி – குமரி மாவட்டம் 02.01.2022 ஞாயிறு மாலை 06.00 மணி –  பாவூர்சத்திரம். நெல்லை, தென்காசி (ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம்) மாவட்டங்கள் பெரியார் முழக்கம் 23122021 இதழ்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆண்டுக் கட்டணம் ரூ.250 ஆக உயர்வு

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆண்டுக் கட்டணம் ரூ.250 ஆக உயர்வு

காகித விலை, அச்சுக்கான செலவுகள் அதிகரித்து விட்டதால், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆண்டுக் கட்டணம் ரூ.250/- ஆக  தவிர்க்க இயலாத நிலையில் உயர்த்தப்படுகிறது. வாசகர்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குமாறு கேட்டுக்  கொள்கிறோம். தொடர்புக்கு : 7373684049 – நிர்வாகி, ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பெரியார் முழக்கம் 23122021 இதழ்

கரூர் மாவட்டத் தோழர்களின் சந்திப்பு

கரூர் மாவட்டத் தோழர்களின் சந்திப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் கழக பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியான தோழர்கள் சந்திப்பின் நான்காம் கட்டமாக கரூர் மாவட்ட தோழர்கள் உடனான சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் 12.12.2021 மாலை 7.00 மணி அளவில் தெ.வெங்கிட்டாபுரம் முத்தமிழ் அரங்கில் நடைபெற்றது. தலைமைக் கழக பொறுப்பாளர்களின் பயணத்தின் நோக்கம் குறித்து அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி தொடக்கவுரையாற்றினார். தோழர்களை அறிமுகபடுத்தியும் கரூர் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக செயல்பாட்டையும் தொடர்ந்து நடைபெற உள்ள செயல்பாடுகள் குறித்தும் சின்னதாராபுரம் தோழர் சண்முகம் உரையாற்றினார். தொடர்ந்து தோழர்கள் உற்சாகமாக தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி பெரியார் முழக்கம் இதழின் அவசியம் குறித்தும் அதற்கு சந்தா சேகரிப்பது குறித்து விளக்கமளித்துப் பேசினார். நிறைவாக கழக பரப்புரைச்செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பணிகள் குறித்தும் இந்த இயக்கத்தில் தோழர்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்தும் தோழர்கள் ஒவ்வொருவரும்...

புத்தெழுச்சித் தந்த ஈரோடு தெற்கு மாவட்டத் தோழர்கள் சந்திப்பு

புத்தெழுச்சித் தந்த ஈரோடு தெற்கு மாவட்டத் தோழர்கள் சந்திப்பு

12.12.2021 ஞாயிறு அன்று காலை 11.00 மணியளவில் ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தோழர்களுடனான தலைமைக் கழக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் சித்தோடு பகுதியில் உள்ள மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்டச் செயலாளர் எழிலன் சுந்தரம் தலைமை வகித்தார். ஆசிரியர் ப.சிவக்குமார் கடவுள் மறுப்பு கூற நிகழ்வு தொடங்கியது. நிகழ்வின் தொடக்க வுரையாக கழக அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அனைத்து தோழர்களும் தங்கள் கருந்துகளை தெரிவித்தனர். ‘புரட்சி பெரியார் முழக்கம்’ சந்தா சேர்ப்பு, கழக செயல்பாட்டினை வீரியப்படுத்துவது, புதிய தோழர்களை / இளைஞர்களை உருவாக்கி, பெரியாரியல் சித்தாந்தத்தைப் பயிற்றுவித்து களத்தில் செயல்பட வைப்பது போன்றவைக் குறித்து கருந்து தெரிவித்து விவாதித்தனர். அதனைத் தொடர்ந்து கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி கிராமபிரச்சாரம் கொண்டு செல்வது குறித்தும் சிக்கல்கள் வராமல் பிரச்சாரம் செய்திட ஆலோசனை வழங்கினார். நிறைவாக கழக...

‘புதுவைப் பெரியார் சிந்தனையாளர் இயக்கம்’ சார்பில் கழக ஏட்டுக்கு 50 சந்தாக்கள்

‘புதுவைப் பெரியார் சிந்தனையாளர் இயக்கம்’ சார்பில் கழக ஏட்டுக்கு 50 சந்தாக்கள்

பெரியாரின் ஆணையை ஏற்று ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டத்தை 1957 நவம்பர் 26ஆம் தேதி எரித்து சிறைக் கொடுமைக்குள்ளாகி மரணத்தைத் தழுவிய கருஞ்சட்டை மாவீரர்கள் நினைவாகவும் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் கருத்தரங்கமும், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில், 19.12.2021 அன்று மாலை 4 மணியளவில் புதுச்சேரி, அரியாங்குப்பம் ஜோதி கல்வி மய்யத்தில் நடைபெற்றது. நிகழ்வில், ஜோதி கல்வி மய்யத்தின் ஆசிரியர் மா.ச. தமிழரசன் தந்தை அய்யா சங்கரபாணி படம் திறக்கப்பட்டது. பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் இளைஞரணித் தலைவர் சா. இலாரன்ஸ் நிகழ்விற்கு தலைமை வகித்தார். சு.ஆனந்தி, ச.தியாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜோதி கல்வி மய்யத்தின் ஆசிரியர் மா.ச. தமிழரசன் வரவேற்பு கூறினார். திமுக பொதுக்குழு உறுப்பினர் பா.செ.சக்திவேல் தொடக்கவுரை யாற்றினார். திராவிடர் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் – சிவ. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் சு.பாவாணன், தமிழ் மீனவர் விடுதலை வேங்கை...

இளைய தலைமுறை பெரியாரியலை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? (3) புரோகித ஆதிக்கத்தின் மாறாதப் போக்கை உணர்ந்து அஞ்சாது கட்டுடைத்தவர் பெரியார் பூபாலன்

இளைய தலைமுறை பெரியாரியலை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? (3) புரோகித ஆதிக்கத்தின் மாறாதப் போக்கை உணர்ந்து அஞ்சாது கட்டுடைத்தவர் பெரியார் பூபாலன்

பார்ப்பனியம் என்ற அரசியல் சமூகக் கோட்பாட்டை தகர்க்க பெருந்திரளான மக்களிடம் படிந்து நிற்கும் உளவியலுக்கு எதிரான கருத்தியலைக் கட்டமைக்க வேண்டும் என்று பெரியார் சரியாக சிந்தித்தார். புராணப் புரட்டு – பனிப் போரின் பெருமைகளை மக்கள் மொழியில் போட்டுடைத்ததன் விளைவாக பார்ப்பனியம் தனக்காக நிலைநிறுத்திக் கொண்ட உயர்தனிப் பெருமைகள் சிதையத் தொடங்கின. மானுடகுல படிமலர்ச்சியில் வேட்டை சமூக காலம் முதல் எந்திரங்களை சிந்திக்கச்செய்யும் இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்திலும், உலகமெங்கும் ஒரு சமூகமென்பதின் அடிப்படை அலகான தனிமனித மனங்கள் மீதான உண்மையான அதிகாரம் என்பது புரோகித வர்க்கத்திடமே (ஞடிவேகைநஒ ஊடயளள) இன்றும் குவிந்துள்ளது என்பதை எளிதில் உணரமுடியும். இது நவீன அமைப்பியல் கருத்தியல்களான சமூகம், அரசதிகாரம், படைத் துறை, பொருளியல் உற்பத்தி என்பவை தாண்டிய தனிமனிதன அகநிலையை கைக்கொள்ளும் அதிகாரம். இந்த அதிகாரம் செயல்படும் புள்ளி என்பது ஒவ்வொரு தனித்த அகத்தின் ஆதி அச்சம் சார்ந்தது. இது மனித மனங்களுக்கானது மட்டுமானதல்ல...

மிகவும் சிரமமான கேள்வி !

மிகவும் சிரமமான கேள்வி !

பகுத்தறிவுவாதி : கடவுள் எத்தனை உண்டு ? ஆத்திகன் : ஒரே கடவுள் தான் உண்டு. பகுத்தறிவுவாதி : இவ்வளவு மதங்களும் யாருக்காக உருவாக்கப்பட்டது ? ஆத்திகன் : மனித வர்க்கத்திற்காகத்தான். பகுத்தறிவுவாதி : மதத்தால் ஏற்படும் பயன் என்ன ? ஆத்திகன் : மனிதன் கடவுளை அறியவும், கடவுளுக்கும் தனக்கும் சம்மந்தம் ஏற்படுத்திக் கொள்ளவும், ஆத்ம ஞானம் பெறவும், கடவுள் கருணைக்குப் பாத்திரனாகவும் பயன்படுவதாகும். பகுத்தறிவுவாதி : அப்படியானால் ஒரே கடவுள் ஒரே மனித வர்க்கத்துக்கு இத்தனை மதங்களை ஏற்படுத்துவானேன் ? ஆத்திகன் : இது மிகவும் சிரமமான கேள்வியாக இருக்கிறது. பெரியவர்களைக் கண்டு பேசிய பிறகு பதில் சொல்லுகிறேன். – பகுத்தறிவு -1938 (‘சித்திரபுத்திரன்’ என்ற புனைப்பெயரில் பெரியாரால் எழுதப்பட்ட நீண்ட உரையாடலின் சிறு பகுதி)   பெரியார் முழக்கம் 23122021 இதழ்

சீமானின் ‘செருப்பு வீரம்’

சீமானின் ‘செருப்பு வீரம்’

‘செருப்பால் அடிப்பேன்; காலால் உதைப்பேன்’ என்று பேசுவது அவமானமா என்று கேட்டார், ஒரு தோழர்.  அவர் கேள்வியிலும் நியாயம் இருக்கிறது. உடலில் தலையிலிருந்து கால் வரை அனைத்து உறுப்புகளும் சமமானவை தானே? தலை மட்டும் உயர்ந்தது? கால் கீழானதா?  அது எப்படி? உடலையே சுமந்து நிற்பது கால் தான். காலில்  போடும் செருப்பு, அந்தக் காலுக்கு பாதுகாப்பு. பிறகு ஏன் செருப்பால் அடிப்பது என்பது இழி சொல்லாக மாறியது? தலையில் பிறந்தவன் பிராமணன்; காலில் பிறந்தவன் ‘சூத்திரன்’ அடிமை என்று மனுசாஸ்திரம் கூறி வைத்தது தான் இதற்கான காரணம். அப்படித் தான் இருக்க முடியும். ‘பகவானின் பாதார விந்தத்தை’ சரணடைகிறேன் என்று பக்தர்கள் உருகி உருகிப் பாடியிருக்கிறார்கள். பகவான் காலுக்கு அவ்வளவு பெருமை இருக்கும்போது அதே காலிலேயே பிறந்ததாகக் கூறும் சூத்திரனை மட்டும் ஏன் இழி பிறவி என்று கூறுகிறீர்கள் என்று ஒரு கேள்வியை பெரியார் கேட்டார். பழந்தமிழன் பெருமை; பழந்...

தலையங்கம் மூவருக்கும் நன்றி

தலையங்கம் மூவருக்கும் நன்றி

மூன்று பேருக்கு நன்றி தெரிவிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். ஒருவர் காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரர். மற்றொருவர் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். மூன்றாமவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த மூவருடைய முயற்சியின் காரணமாக இப்போது நல்ல பயன் ஒன்று கிடைத்திருக்கிறது. காஞ்சி சங்கராச்சாரி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறபோது எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்தார். சுவாமி தியான நிலையில் இருந்தார் என்று அப்போது காரணம் கூறப்பட்டது. இதை எதிர்த்து தமிழ் உணர்வாளர்கள் தொடர்ந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தமிழ்த்தாய் வாழ்த்து என்பது இறை வணக்கப் பாடல் தான். அது தேசியகீதம் போல நாட்டு வணக்கப் பாடல் அல்ல. சங்கராச்சாரி போன்ற மிகப் பெரிய மகான்கள் அமர்ந்த நிலையில் இறை வாழ்த்து பாடுகிறபோது தியானத்தில் இறைவனைத் தேடிக் கொண்டிருக்கலாம். அதற்கு அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும்...

திருமண வயது 21ஆக உயர்வதை வரவேற்கிறோம் சமுதாய விழிப்புணர்வின் மூலமே சட்டத்தைச் செயல்படுத்த முடியும்

திருமண வயது 21ஆக உயர்வதை வரவேற்கிறோம் சமுதாய விழிப்புணர்வின் மூலமே சட்டத்தைச் செயல்படுத்த முடியும்

பெண்களின் திருமண வயதை ஆண்களுக்குச் சமமாக உயர்த்திட ஒன்றிய  அமைச்சரவை எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. அதற்கான உள்நோக்கம் எது என்று ஆராய்வiதைவிட சட்டத்தின் நோக்கங்கள் உருவாக்கிடும் தாக்கங்கள் குறித்தே நாம் சிந்திக்க வேண்டும் என்பதே நமது கருத்து. குறிப்பாக, மதச் சிறுபான்மையினராகிய இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் மதம் விதிக்கும் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று வாதாடு கிறார்கள். பெண்களுக்கான சமத்துவத்தை சம உரிமைகளை மறுப்பதில் அனைத்து மதங்களுமே ஒன்றுபட்டு நிற்கின்றன. காரணம், மதங்களை உருவாக்கியதும் அதற்கான விதிகளை நிர்ணயித்தவர் களும் ஆண்களாகவே இருப்பது தான். எப்படி, இலக்கியங்கள் எழுதிய ஆண்கள் பெண்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளையும் அடங்கிப் போவதையும் ‘சமூக ஒழுங்காக’ நிர்ணயித்தார்களோ, அதுபோலவே தான் மதங்களும்.  நாம் வலியுறுத்த விரும்புவதெல்லாம் சட்டங்கள் இயற்றுவது மட்டுமே முழுமையான சட்டத்தின் நோக்கத்தை வெற்றி பெற வைத்து விடாது. சமூகத்தில் அதற்கான விழிப்புணர்வை உருவாக்கி, மக்களிடையே கருத்துருவாக்கத்தை விதைப்பதன் வழியாகவே சட்டங்களின் நோக்கம் இலக்கை அடையும். தீண்டாமையை...

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ : ஓர் அறிவிப்பு

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ : ஓர் அறிவிப்பு

கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக, கடந்த ஆண்டு 6 மாதம் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ் அனுப்பப்படாமல் இருந்தது. அதற்குப் பிறகு இதழ் அனுப்ப தொடங்கியவுடன், 2020ஆம் ஆண்டு கொடுத்த சந்தாக்களுக்கும் 2021 வரை இதழ் அனுப்பப்பட்டு வந்தது. அதேபோன்று 2021 வரை இதழ் கட்டணம் ஏதும் பெறாமலேயே அனுப்பப்பட்டது என்பதை நினைவுபடுத்துகிறோம். இந்த நிலையில் நிதிச் சுமையை கருத்தில் கொண்டு, வரும் 2022 ஆண்டிற்கான சந்தாவை பழைய சந்தாதாரர்கள் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். புதிய சந்தாதாரர்களுக்கு மட்டுமே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ் அனுப்பப்படும்.             – நிர்வாகி தொடர்புக்கு : 7373684049   பெரியார் முழக்கம் 16122021 இதழ்  

ஜே.என்.யூ. பல்கலையில் விளிம்பு நிலை மாணவர்கள் முனைவர் பாடத் தேர்வுக்கு தேர்வு பெறவிடாமல் தடுக்கும் சதி

ஜே.என்.யூ. பல்கலையில் விளிம்பு நிலை மாணவர்கள் முனைவர் பாடத் தேர்வுக்கு தேர்வு பெறவிடாமல் தடுக்கும் சதி

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் பிஎச்.டி. கல்விப் படிப்பில், எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர், நேர்முகத் தேர்வில் மிகக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், பிஎச்.டி  நேர்முகத் தேர்வில் ஒரு தலைபட்சமாக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பி.எச்.டி போன்ற ஆய்வு படிப்புகளில் சாதி மற்றும் மத  அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக ஜே.என்.யு. பிர்சா அம்பேத்கர் புலே மாணவர் அமைப்பு (Birsa Ambedkar Phule Students Association – BAPSA) குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, இந்த அமைப்பு  ஜேஎன்யு துணைவேந்தர்,ஜேஎன்யு ஆசிரியர் சங்கம் (ஜேஎன்யுடிஏ) கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில், பிஎச்.டி மாணவர் சேர்க்கை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் (viva voce) அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர், நேர்முகத் தேர்வில் மிகக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.மொத்த மதிப்பெண்ணில் சிலர் ஒரே ஒரு...

சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

சென்னை மாவட்டத்தின் கலந்துரையாடல் கூட்டம், 11.12.2021 அன்று மாலை 6 மணியளவில், திவிக தலைமையகத்தில், மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலில் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு கூடுதல் சந்தா சேர்ப்பது, கழகத்தின் அடுத்தக் கட்ட பணிகள், வரும் டிசம். 24இல் தந்தை பெரியார் நினைவு நாளில் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தின் தலையங்கத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வை நடத்துவது போன்றவை குறித்து விரிவாகப் பேசப்பட்டது. கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். நிகழ்வில், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், அன்பு தனசேகர் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியாக கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தோழர்களின் சில கேள்விகளுக்கு பதில் கூறியும், கழகத்தின் செயல்பாடுகள், திராவிடர் இயக்கத்தின் தேவை குறித்தும் விரிவாக உரையாற்றினார். பெரியார் முழக்கம் 16122021 இதழ்

கழக ஏட்டுக்கு சந்தா: கழகக் கிளைகள் தீவிரப் பணி

கழக ஏட்டுக்கு சந்தா: கழகக் கிளைகள் தீவிரப் பணி

கொளத்தூர் : 04.12.2021 சனி மாலை 5.30 மணியளவில், கொளத்தூர் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமையிலும், மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்களாகக் கீழ்க்கண்ட தோழர்கள் நியமிக்கப்பட்டனர். கொளத்தூர் நகரம்: நகரத் தலைவர் -இராமமூர்த்தி, நகரச் செயலாளர் – பா.அறிவுச்செல்வன், பொருளாளர் – சூ. இனியன், காவலாண்டியூர் கிளைக் கழகத் தலைவர் – இராசேந்திரன், துணைத் தலைவர் – சேகர், செயலாளர் – தங்கராசு, இணைச் செயலாளர் – சந்தோஷ், பொருளாளர் – சின்ராசு, உக்கம்பருத்திக்காடு செயலாளர் – செல்வம், ஒருங்கிணைப்பாளர்கள் – கோமதி, சித்ரா, ஒன்றிய குழு ஒருங்கிணைப்பாளர்கள் – சித்துசாமி, விஜயகுமார், ஒருங்கிணைப்பு குழு தோழர்கள் – சுதா, இளவரசன், சுரேஷ், சக்தி குமார், இளைஞர் குழு ஒருங்கிணைப்பாளர் – செல்வேந்திரன், இளைஞர் குழு தோழர்கள் – சூ. இனியன், பா.அறிவுச்செல்வன், சந்தோஷ், இராமன்,...

மதுரையில் சிறப்புடன் நடந்த சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம்

மதுரையில் சிறப்புடன் நடந்த சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம்

மதுரை மாவட்ட திவிக சார்பில் ஜாதியை பாதுகாக்கும் சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம்  29.11.2021 அன்று மாலை 5 மணியளவில் காஸ்மோபாலிட்டன் உணவகத்தில் மடத்துக்குளம் மோகன் நினைவு அரங்கில் நடைபெற்றது. வில்லாபுரம் பகுதி செயலாளர் செந்தில்நாதன் வரவேற்புரை யாற்றினார். மாவட்ட கழகக் காப்பாளர் தளபதி,  மாவட்ட தலைவர் காமாட்சி பாண்டி, மாநகர் தலைவர் திலீபன் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மா.பா. மணி அமுதன் தலைமை தாங்கினார். ‘பிற்படுத்தப்பட்டோர் உரிமையும் திராவிடர் இயக்கமும்’ என்ற தலைப்பில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் பசும்பொன். பாண்டியன் உரையாற்றினார். ‘தமிழ் தேசிய இலக்கும் தடுமாற்றங்களும்’ என்ற தலைப்பில் தமிழ்மண் தன்னுரிமை இயக்கத்தின் நெறியாளர் பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவு எரிப்பு போராட்டங்களையும் பெரியார் தொண்டர்களின் தியாகத்தையும் விளக்கி கழக தலைவர் கொளத்தூர் மணி விரிவாக கருத்துரையாற்றினார். புலிப்பட்டி பொறுப்பாளர்...

இளைய தலைமுறை பெரியாரியலை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? (2) ஜெர்மனியின் நாசிச எதிர்ப்பும் பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்பும் ஒன்றே! பூபாலன்

இளைய தலைமுறை பெரியாரியலை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? (2) ஜெர்மனியின் நாசிச எதிர்ப்பும் பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்பும் ஒன்றே! பூபாலன்

பார்ப்பனியம் என்ற அரசியல் சமூகக் கோட்பாட்டை தகர்க்க பெருந்திரளான மக்களிடம் படிந்து நிற்கும் உளவியலுக்கு எதிரான கருத்தியலைக் கட்டமைக்க வேண்டும் என்று பெரியார் சரியாக சிந்தித்தார். புராணப் புரட்டு – பனிப் போரின் பெருமைகளை மக்கள் மொழியில் போட்டுடைத்ததன் விளைவாக பார்ப்பனியம் தனக்காக நிலைநிறுத்திக் கொண்ட உயர்தனிப் பெருமைகள் சிதையத் தொடங்கின. மானுடச் சமூகப் பரிணாமத்தில், ‘அடிமைச் சமூகம்’ (Slavery) என்ற பண்புக்கூறு உலகம் முழுவதும் தோன்றிய ஒரு ‘உழைப்புச் சுரண்டல்’ ஏற்பாடு. அது ஒரு விதத்தில் உழைப்பிலிருந்து ஒரு சிறு மக்கள் திரளை விலக்கி அமர வைத்ததிலேயே, மனித சமூகம் கலை இலக்கிய உருவாக்கம் நோக்கி நகரமுடிந்தது. ஆனால், உலக நிலப் பரப்பெங்கும் இந்த அடிமை சமூக முறையில்; உழைப்பைச் சுரண்டி பயன் படுத்தும், அனுபவிக்கும் சமூகப் படிநிலைகளில் மாற்றங்கள், ஏற்றத் தாழ்வுக் கட்டமைப்புத் திருப்பங்கள் என்பவை வரலாறு நெடுகிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இந்த வகையில், ஒரு எளிய புரிதலிலே;...

தமிழ்நாட்டில் தமிழ் தெரிந்தவர்களுக்கே வேலை!

தமிழ்நாட்டில் தமிழ் தெரிந்தவர்களுக்கே வேலை!

தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத மலையாளிகளையும், கன்னடியர் (மங்களூர்காரர்)களையும் தமிழ் நாட்டிலே மாகாணத் தலைமை உத்தியோகம், ஜில்லாத் தலைமை உத்தியோகம், மற்றும் கெஜட் பதிவு அதிகாரிகள் கமிஷ்னர்கள் முதலிய உத்தியோகங்களில் நியமிப்பது என்பது சர்வசாதாரணமான காரியமாக இருந்து வருகிறது. ஜனநாயக நாடு, சுதந்திர நாடு, மக்களாட்சி நடைபெறுகிற நாடு என்ற அலங்காரப் பெயர்களைச் சொல்லிக் கொண்டு நடைபெறுகிற ஆட்சியில் 100 க்கு 80 பேர்களுக்கு மேற்பட்டுக் கல்வியறிவில்லாத பாமர மக்கள் நிறைந்திருக்கும் நாடு என்பதை உணராமல், மேற்கண்ட மாதிரியான நாட்டு மொழித் தெரியாத அன்னிய மொழியாளர்களை அதிகாரிகளாக நியமிப்பதென்றால் குடிமக்கள் அதிகாரிகளிடம் எப்படி பேச முடியும் ? அதிகாரிகளுக்குக் குடிமக்கள் எந்த மொழியில் விண்ணப்பங்களையும் வேண்டு கோள்களையும் எழுத முடியும் ? ‘விடுதலை’ 22.4.1955 பெரியார் முழக்கம் 16122021 இதழ்

ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கிளர்ச்சி: கழகத் தலைவர் உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கு இரத்தானது

ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கிளர்ச்சி: கழகத் தலைவர் உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கு இரத்தானது

கடந்த 2018ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடந்திய காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட 5 பேர் மீது பதிவான வழக்கை இரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு கொடுத்துள்ளது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி வாதாடினார். பெரியார் முழக்கம் 16122021 இதழ்

சட்ட அங்கீகாரம் ஏதுமற்ற அமைப்பு சிபிஅய்

சட்ட அங்கீகாரம் ஏதுமற்ற அமைப்பு சிபிஅய்

நீதித்துறை தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த மசோதா மீது உரையாற்றிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நீதித்துறையில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் ஆதிக்கமே மேலோங்கி இருப்பதை சுட்டிக் காட்டி இருக்கிறார். அவர் கூறும் அந்த குறிப்பிட்ட ஜாதி எது என்பது அனைவருக்கும் தெரியும் பழங்குடியின சமூகத்தினர், பட்டியலின பிரிவினர் மற்றும் பெண்களுக்கு உச்சநீதி மன்றத்தில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதோடு உச்சநீதிமன்ற வரலாற்றில் பட்டியலின பிரிவைச் சேர்ந்த 5 பேர் மட்டுமே இதுவரை நீதிபதியாக வர முடிந்திருக்கிறது என்பதை பற்றியும் அவர் சுட்டிக் காட்டி யிருக்கிறார். இது ஒரு புறமிருக்க உச்ச நீதிமன்றம் நாட்டின் அரசியல் சட்டம் கூட்டாட்சி மாநில உரிமைகள் தொடர்பான பல முக்கிய வழக்குகளை மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. இதனால் ஏற்கனவே ஒன்றிய ஆட்சி எடுத்த முடிவுகளை அப்படியே பின்பற்றி நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் கட்டுரை ஒன்று நீதிமன்றத்தின்...

தலையங்கம் பாரதிதாசனும், பாரதியும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றனரா?

தலையங்கம் பாரதிதாசனும், பாரதியும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றனரா?

பாரதியும் பாரதிதாசனும் ஏற்றுக்கொண்டதே புதிய கல்வி கொள்கை என்று திருச்சியில் பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பேசியிருக்கிறார். அதே மேடையில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அதற்கு மறுப்பையும் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு அரசின் கொள்கை இரு மொழிக் கொள்கை. விருப்பமுள்ளவர்கள் வேறு எந்த மொழியையும் தனிப்பட்ட முறையில் கற்றுக் கொள்ள எந்த தடையும் கிடையாது என்று விளக்கம் அளித்திருக்கிறார். தொடர்ந்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு அரசின் தனியான கல்விக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் அதற்கான நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அடுத்த நாளே அறிவித்திருக்கிறார். பாரதி, பாரதிதாசன் காலங்களில் பட்டப்படிப்பை நான்கு ஆண்டுகளாகவும் 3,  5, 8, 10, 12ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தும் முறை எங்கே இருந்தது? ஆளுநருக்கு உரை எழுதித் தரும் அதிமேதாவிகள் பாரதிதாசன் ஏற்றுக் கொண்டதுதான் புதிய கல்விக் கொள்கை என்று எழுதித் தருகிறார்கள்....

காசி ஆன்மீக சின்னமா? பார்ப்பனர்களின் கொலைக் களமா?

காசி ஆன்மீக சின்னமா? பார்ப்பனர்களின் கொலைக் களமா?

காசி விசுவநாதர்  கோயில் வெறும் கட்டிடம் அல்ல; இந்திய ஆன்மீக ஆன்மாவின் சின்னம் என்று மோடி, பூரித்துப் பேசியிருக்கிறார். அந்த ஆன்மீக ஆன்மா அப்பாவிகளின் கொலைக்களமாக பார்ப்பனர்களால் மாற்றப்பட்டது என்பது தான் உண்மையான வரலாறு. சுவாமி சிவானந்த சரசுவதி எழுதி, வஉ.சி. முன்னுரை யுடன் பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சாரம், 1928இல் வெளியிட்ட ‘ஞான சூரியன்’ நூல் இந்த உண்மையை அம்பலப்படுத்துகிறது. சுவாமி சிவானந்தர், தமிழ், வடமொழி இரண்டிலும் கற்றுத் தேர்ந்தவர். ஆழ்ந்த இறை பக்தி கொண்ட பார்ப்பன எதிர்ப்பாளர். காசிக்குப் போய் இறந்தால் மோட்சம் போகலாம் என்ற செய்தியை பார்ப்பன புரோகிதர்கள் பரப்பி மக்களை நம்ப வைத்தனர். இதனால் காசிக்கு பெரும் பணக்காரர்கள்கூட குடும்பத்துடன் நடந்தே போனார்கள். வழியில் வழிப்பறி – திருடர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கோயிலின் ஒரு பகுதியில் பரமசிவன் பார்வதியுடன் காட்சி தந்து பக்தர்களை நேரடியாக மோட்சத்துக்கு அழைத்துச் செல்லும் இடம் என்று ஒரு இடத்தைத் தேர்வு செய்தார்கள்....

மோசடி ‘யூடியுபர்’ விடுதலை; விஜயேந்திரர்  – தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க தேவையில்லை என்கிறார், உயர்நீதிமன்ற நீதிபதி காசியில் ஆர்.எஸ்.எஸ். குரலை ஒலிக்கிறார் மோடி

மோசடி ‘யூடியுபர்’ விடுதலை; விஜயேந்திரர் – தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க தேவையில்லை என்கிறார், உயர்நீதிமன்ற நீதிபதி காசியில் ஆர்.எஸ்.எஸ். குரலை ஒலிக்கிறார் மோடி

கடந்த வாரம் நிகழ்ந்த செய்திகள் குறித்து நமது பார்வை. ‘தினமலரின்’ திமிர் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, திருச்சி பாரதிதாசன் பல்கலைப் பட்டமளிப்பு விழாவில் பேசும்போது, ‘பெண்கள் தமிழ்நாட்டில் உயர்கல்வி படித்து பட்டம் பெறு வதற்கு பெரியார் பெண்கள் விடுதலைக்குக் குரல் கொடுத்ததே காரணம்’ என்று பேசி இருந்தார். ‘தினமலர்’ பார்ப்பன ஏடு, “எல்லாத்துக்கும் ஈ.வெ,ரா. தான் காரணமா?” என்று அமைச்சர் மீது ஆவேசமாகப் பாய்ந்து, ஆசிரியருக்குக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. பெரியாருக்கு முன்பே பாரதி பாடவில்லையா என்று கேட்கிறது. பாரதி பாடியிருக்கலாம், ஆனால், சமூகத்தில் பெண்கள் வளர்ச்சிக்கு அவர் இயக்கம் நடத்தினாரா? ‘பேராசைக் காரனடா பார்ப்பான்’ என்றுகூட பாரதி பாடியிருக்கிறார். அதை ‘தினமலர்’ ஏற்கிறதா? அவ்வையார், காக்கைப் பாடினியார் என்ற புலவர்கள் பெரியாருக்கு முன்பே இருந்துள்ளனர் என்கிறது ‘தினமலர்’. அவர்களின் தொடர்ச்சி யாக ஏன் பெண் புலவர்கள் உருவாகாமல் போனார்கள்? கணவன் இறந்தவுடன், மனைவியை கணவன் இறந்த...

2022 – நாட்காட்டி விற்பனைக்குத் தயார்

2022 – நாட்காட்டி விற்பனைக்குத் தயார்

சமூக நீதித் தலைவர்களின் படங்கள் நாட்காட்டியை அலங்கரிக்கின்றன. நாட்காட்டி ஒன்றின் விலை : ரூ.50/- முன் பதிவு செய்பவர்களுக்கு  மட்டுமே நாட்காட்டி கிடைக்கும். தொடர்புக்கு: தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர். : (9941759641) பெரியார் முழக்கம் 09122021 இதழ்

கழகப் பொறுப்பாளர்கள் மூன்றாம் கட்ட பயணம்: கழக ஏட்டுக்கு  சந்தா சேர்ப்பதில் தோழர்கள் ஆர்வம்

கழகப் பொறுப்பாளர்கள் மூன்றாம் கட்ட பயணம்: கழக ஏட்டுக்கு சந்தா சேர்ப்பதில் தோழர்கள் ஆர்வம்

மூன்றாம் கட்ட பயணமாக 1, 2, 3.12.2021 ஆகிய தேதிகளில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி பரப்புரைச் செயலாளர் பிரபாகரன் தலைமைக் குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார் ஆகியோர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களிடத்தில் கலந்துரையாடினர். தர்மபுரியில் 1.12.2021 அன்று காலை 11 மணி அளவில் பி அக்கரகாரம் நஞ்சப்பன் இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் வேணுகோபால், சந்தோஷ்,பரமசிவம் உள்பட பல பகுதிகளில் இருந்து தோழர்கள் பங்கேற்றனர் கழக செயல்பாடுகள் மற்றும் அரசு செயல்பாடுகள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள புரட்சிப்பெரியார் முழக்கம் பெரும் உதவியாக இருந்தது என்றும், இந்த ஆண்டு கூடுதல் சந்தா சேர்ப்போம் என்றும் தோழர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் சிகர்ந்தப்பள்ளி மாவட்டச் செயலாளர் குமார் இல்லத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர்கள் ப.வாஞ்சிநாதன், குமார், கிருஷ்ணன் உள்பட 35 தோழர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர் மாவட்ட கழக...

முன் பதிவுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம்

முன் பதிவுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம்

20 ஆண்டு ‘புரட்சிப் பெரியார் முழக்க’த் தலையங்கங்கள், 5 தொகுப்புகளாக வெளி வருகிறது 2001லிருந்து 2020 வரை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டில் வந்த தலையங்கங்கள்; கோடங்குடி மாரிமுத்து என்ற புனைப் பெயரில் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘நய்யாண்டி எழுத்துகள்’ அடங்கிய 5 தொகுப்புகள் விரைவில் வெளிவர இருக்கின்றன. மொத்தம் ரூ.800/- விலையுள்ள இத்தொகுப்புகள் முன் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.600/-க்கு கிடைக்கும். முன்பதிவுக்கு தொடர்பு எண் : மனோஜ் : 73736 84049 விஜயகுமார் : 98416 53200 பெரியார் முழக்கம் 09122021 இதழ்

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவிப்பு

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவிப்பு

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், 06.12.2021 அன்று காலை 9 மணியளவில் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், அம்பேத்கர் மணிமண்டபத்தில் மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மயிலாப்பூர் சுண்ணாம்பு கால்வாயில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அடுத்து, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் படத்திற்கு தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார் மாலை அணிவித்தார். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட செயலாளர் உமாபதி, வட சென்னை யேசுகுமார், மயிலை சுகுமார், இராவணன், மனோகர் ஆகியோர் உட்பட சென்னை கழக தோழர்கள் கலந்து கொண்டனர். திருப்பூரில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 65ஆவது நினைவு நாள் நிகழ்வு திருப்பூர் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. 06.12.2021 அன்று காலை 10.00 மணியளவில் திருப்பூரில் அமைந்துள்ள புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கழகத் தோழர்கள்...

பாலின குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி: தமிழ்நாடு மாணவர் கழகம் முடிவு

பாலின குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி: தமிழ்நாடு மாணவர் கழகம் முடிவு

சென்னை, தமிழ்நாடு மாணவர் கழக ஆலோசனை கூட்டம், கழகத் தோழர் இரண்யா தலைமையில்  05.12.2021 அன்று மதியம் திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் தொடரும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக விசாகா கமிட்டி பாலியல் கல்வி மற்றும் பாலின சமத்துவக் கல்வியை நடைமுறைப்படுத்த அனைத்து மாணவர் அமைப்பு மற்றும் முற்போக்கு அமைப்புகளை இணைத்து விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான நடைபயணம் மேற்கொள்வது எனவும், பெருகி வரும் போதை மற்றும் மதுப்பழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாவதிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தச் செய்வது, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தோழர்களையும் மாணவர்களையும் சந்தித்து மாணவர் கழக கட்டமைப்பை வலுப்படுத்துவது என்னும் முடிவு செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 09122021 இதழ்

இளைய தலைமுறை – பெரியாரை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? பூபாலன்

இளைய தலைமுறை – பெரியாரை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? பூபாலன்

ஜாதி ஒரு மன நோயாக பவுதீக உருவமின்றி இருக்கும்போது அந்த மனச்சூழலை எப்படித் தகர்க்க முடியும் என்ற கவலை அம்பேத்கருக்கு இருந்தது. பெரியார், ‘மனநோய்க்கு’ அடித்தளமான பவுதீகக் காரணிகளாக இருந்த கடவுள், மதம், சாஸ்திரம், புனிதங்களைக் கட்டுடைத்து, மக்களிடம் அதைக் கொண்டு செல்ல முடியும் என்று துணிவோடு களமிறங்கி தனது புரட்சியைத் தொடர்ந்தார் என்பதை சமூக அறிவியல் பார்வையில் விளக்குகிறது – இந்தக் கட்டுரை. ‘பெரியார்’ என்ற ஒரு மனிதர் நம்மிடமிருந்து பௌதீகமாய் மறைந்துபோய் நாற்பத்தியாறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்; ‘தந்தை பெரியார்’ என்ற இந்தச் சொல் அளவிற்கு இந்த நூற்றாண்டின் தமிழ்நில அரசியல்தளத்தில் அதிகம் வசையிடப்பட்ட, கொண்டாடப்பட்ட ஒன்று இருக்க முடியாது. ‘பெரியார்’ என்று அரசியல் மிகைப்படுத்தும் ஈ.வெ.ராமசாமியின் பேச்சுக்களும் எழுத்துக்களும் வெற்றுக் கூப்பாடுகள் எந்தவொரு சிந்தனையுமற்ற அற்பங்கள். பார்ப்பனர், பார்ப்பனியம் என குறிப்பிட்டு, வெறுப்பரசியலை உருவாக்கி வெறும் பரப்புரையாகவே வீணாகிப் போனது அவரது வாழ்வு என்ற ஒரு தரப்பின்...

தமிழில் இருந்து பிரி!

தமிழில் இருந்து பிரி!

தமிழ் மன்னர்கள் ஆரிய மதத்தை ஏற்றுக் கொண் டதால் அம்மதக் கருத்துக் களை விளக்கத் தமிழில் சொற்கள் இல்லாது போகவே அதிகமாக வடமொழிச் சொற்களை கையாள ஆரம்பித்தனர். “தமிழிலிருந்து சைவத் தையும், ஆரியத்தையும் போக்கி விட்டால் தம்மை அறியாமலேயே நமக்கு பழந்தமிழ் கிடைத்து விடும். மதத்திற்கு ஆதாரமா யிருந்து வருவனவெல்லாம் வட மொழி நூல்களே ஒழிய, தமிழ்மொழி நூல்களில் தற்சமயம் நம் நாட்டில் இருந்து வரும் மதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென்பது இங்கு கவனிக்கத் தக்கது” மொழி எழுத்து நூலிலிருந்து பெரியார் முழக்கம் 09122021 இதழ்

தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்களுக்கு இனி வேலை வாய்ப்பு கிடையாது: தி.மு.க. அரசின் பாராட்டத்தக்க உத்தரவு

தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்களுக்கு இனி வேலை வாய்ப்பு கிடையாது: தி.மு.க. அரசின் பாராட்டத்தக்க உத்தரவு

தமிழ்நாடு அரசின் அரசாணை ஒன்று 03.12.202 அன்று பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணையை அனைவரும் பாராட்டி வரவேற்கிறார்கள். இனி தமிழ்நாட்டில் அனைத்து போட்டித் தேர்வுகளிலும், அரசு நடத்துகிற தேர்வுகளிலும், தமிழ் மொழித் தாளில் ஒருவர் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதில் 40ரூ மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு அடிப்படையில் இந்தத் தேர்வுத் தாள் இருக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. தமிழ் வழிக் கல்வி அல்லது தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலைகளில் தமிழ் தெரிந்தவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற உத்தரவின் வழியாக வேலை வாய்ப்புகள் 100ரூ இனி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே கிடைக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் பணி செய்வோர் தமிழில் பேச எழுத தெரிந்திருப்பது அவசியமாகிறது என்ற அடிப்படையில் இந்தத் தகுதித் தேர்வு வேலை வாய்ப்புக்கு முன் நிபந்தனையாக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே அரசு பள்ளிகளில் படிப்பவர் களுக்கு முன்னுரிமை, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்...

எது தமிழ்ப் புத்தாண்டு? நாரதனும்-கிருஷ்ணனும் கூடிப் பெற்ற 60 சமஸ்கிருத ஆண்டுகளா? அல்லது திருவள்ளுவரைக் கொண்டாடும் ஆண்டுகளா?

எது தமிழ்ப் புத்தாண்டு? நாரதனும்-கிருஷ்ணனும் கூடிப் பெற்ற 60 சமஸ்கிருத ஆண்டுகளா? அல்லது திருவள்ளுவரைக் கொண்டாடும் ஆண்டுகளா?

தமிழர் திருநாளையொட்டி தமிழக அரசு வழங்கும் உணவுப் பொருள்களுக்கான பைகளில் பொங்கல் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. உடனே பா.ஜ.க. தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்றுவதா என்று ஆர்ப்பரிக்கிறது. அ.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு மாற்றக் கூடாது என்கிறார். அரசியலுக்குள் கால் பதிக்கத் துடிக்கும் சசிகலாவும் இதே குரலை ஒலித்திருக்கிறார்.  2008ஆம் ஆண்டு கலைஞர் தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தார். அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா – கலைஞர் ஆட்சி பிறப்பித்த ஆணையை நீக்கம் செய்து சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு சார்பில் உத்தரவிட்டார். உண்மையில் தமிழ்ப் புத்தாண்டு தமிழர்களை தை முதல் நாள் தான் கடைபிடிக்கப்பட்டு வந்தது. பிறகு எப்படி சித்திரைக்கு மாறியது என்பதற்கு வரலாறு இருக்கிறது. முன் காலத்தில் வருடப் பிறப்புச்...

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆண்டுக் கட்டணம் ரூ.250 ஆக உயர்வு

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆண்டுக் கட்டணம் ரூ.250 ஆக உயர்வு

காகித விலை, அச்சுக்கான செலவுகள் அதிகரித்து விட்டதால், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆண்டுக் கட்டணம் ரூ.250/- ஆக  தவிர்க்க இயலாத நிலையில் உயர்த்தப்படுகிறது. வாசகர்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குமாறு கேட்டுக்  கொள்கிறோம். – நிர்வாகி, ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’   பெரியார் முழக்கம் 09122021 இதழ்

நூல் வெளியீட்டு விழாவில் ஆ. ராசா முழக்கம் காவிகளின் இந்துத்துவ அரசியலை முறிக்கும் ஒரே மாமருந்து பெரியார் மட்டுமே!

நூல் வெளியீட்டு விழாவில் ஆ. ராசா முழக்கம் காவிகளின் இந்துத்துவ அரசியலை முறிக்கும் ஒரே மாமருந்து பெரியார் மட்டுமே!

கருஞ்சட்டைப் பதிப்பகம் சார்பில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், பெரியார் ஒருவர் மட்டுமே நமக்கு வழி காட்டுகிறார். அவரது தத்துவங் களால் மட்டுமே காவி மயமாக்கும் முயற்சியை முறியடிக்க முடியும் என்று குறிப்பிட்டார். நாட்டையே காவி மயமாக்கிட வேண்டும் என்று தீவிரமாக அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வரும் ஒன்றிய ஆட்சியை வீழ்த்த நம்மிடம் உள்ள ஒரே மாமருந்து பெரியார் மட்டும் தான். அம்பேத்கரை கூறலாம் என்றால் அவரையும் ‘இந்துத்துவா’ தனக்குள் இழுத்துக் கொண்டு ‘இந்துத்துவா அம்பேத்கர்’ என்று பேசி வருகிறது. பெரியார் என்ற நெருப்பை மட்டும் தான் அவர்களால் பொட்டலம் கட்ட முடியவில்லை என்று நாடாளு மன்ற உறுப்பினரும் தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ. ராசா குறிப்பிட்டார். கருஞ்சட்டைப் பதிப்பகம் வெளியிட்டுள்ள மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வு சென்னை இராஜரத்தினம்  முத்தமிழ்ப் பேரவை அரங்கில் டிச.4, 2021 மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. திராவிடர்...

அ.பி. அறிவுமதி ரூ.10,000/- நன்கொடை, நாத்திக ஜோதி மகேசுவரி ரூ.5,000/- நன்கொடை

அ.பி. அறிவுமதி ரூ.10,000/- நன்கொடை, நாத்திக ஜோதி மகேசுவரி ரூ.5,000/- நன்கொடை

அ.பி. அறிவுமதி ரூ.10,000/- நன்கொடை ஈரோடு கொங்கம்பாளையம் பிரகாஷ் -அமுதா இணையரின் மகன் அ.பி. அறிவுமதி, தனது முதல் மாத சம்பளமான ரூ.10,000/-ஐ கழக வளர்ச்சி நிதியாக 26.11.2021 அன்று மாலை சித்தோட்டில் அரசியல் சட்ட எரிப்பு போராட்ட நாள் கருத்தரங்கில் கழகத் தலைவரிடம் வழங்கினார். நாத்திக ஜோதி மகேசுவரி ரூ.5,000/- நன்கொடை ஈரோடு வடக்கு மாவட்ட தி.வி.க. தலைவர் ஜோதி முருகன் என்கிற க. நாத்திகஜோதி மகேசுவரி, 39ஆவது திருமண நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.5000/- நன்கொடை வழங்கினார். (நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்) பெரியார் முழக்கம் 02122021 இதழ்

ஈரோடு சித்தோட்டில் கழகம் எடுத்த ஜாதி மறுப்பு இணையர் சந்திப்பு; கருத்தரங்கு

ஈரோடு சித்தோட்டில் கழகம் எடுத்த ஜாதி மறுப்பு இணையர் சந்திப்பு; கருத்தரங்கு

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக நவம்பர் 26 அன்று சட்ட எரிப்புப் போராட்டம் -ஜாதி ஒழிப்பு ஈகியர் கருத்தரங்கு, ஜாதி மறுப்பு இணையர்கள் சந்திப்பு மற்றும் மாவட்ட கழக அலுவலகம் திறப்பு ஆகிய மூன்று நிகழ்வுகள் சித்தோட்டில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வுக்கு கழகத்தின்  அமைப்புச் செயலாளர்  ப. இரத்தினசாமி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் பெ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரைக்குப்பின் மாநில பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் உரையைத் தொடர்ந்து,  மூத்த வழக்கறிஞர் ப பா. மோகன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), திராவிடர் விடுதலைக் கழகத்துக்கான மாவட்ட அலுவலகத்தைத் திறந்து வைத்து, அறிவியல், பொதுவுடைமைச் சித்தாந்தம், பெரியாரியம் ஆகியவனப் பற்றிய செய்திகளை முன் வைத்து உரையாற்றினார். இறுதியாக கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, வரலாற்றுச் செய்திகளை நினைவுகூர்ந்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் யாழ். எழிலன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல், திருப்பூர்,...

‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு சேலம் மாவட்டக் கழகங்கள் சார்பாக 1500 சந்தாக்கள் வழங்க முடிவு

‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு சேலம் மாவட்டக் கழகங்கள் சார்பாக 1500 சந்தாக்கள் வழங்க முடிவு

26.11.2021 சனிக்கிழமை மதியம் 02.00 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக ஒருங்கிணைந்த சேலம் கிழக்கு – மேற்கு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மேட்டூர் தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளியில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராசு வரவேற்பு மற்றும் கடவுள் மறுப்பு கூற கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் அனைத்துக் கிளைக் கழகப் பகுதிப் பொறுப்பாளர்களும், இயக்க வளர்ச்சி குறித்தும், 2022ஆம் ஆண்டு சந்தா சேர்ப்பு குறித்தும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 09.11.2021 அன்று இயற்கை எய்திய திராவிடர் கழக மண்டல தலைவர் தோழர் பிரகலாதன் அவர்களின் மறைவிற்கு சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. 2022ஆம் ஆண்டிற்கான புரட்சி பெரியார் முழக்க சந்தாக்கலாக சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக 500...

கழகப் பொறுப்பாளர்கள் இரண்டாம் கட்டப் பயணம்:  தோழர்களுடன் சந்திப்பு

கழகப் பொறுப்பாளர்கள் இரண்டாம் கட்டப் பயணம்: தோழர்களுடன் சந்திப்பு

இரண்டாம் கட்டப் பயணமாக, 23,24, 25.11.2021 ஆகிய தேதிகளில், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், திருப்பூர் அய்யப்பன் ஆகியோர், மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களிடத்தில் கலந்துரையாடினர். திண்டுக்கல் : 23.11.2021 காலை 11 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகில் உள்ள வேலன் விடுதியில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி, பெரியார் செல்வம் உள்ளிட்ட மாவட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். நிகழ்கால அரசியல் செயல்பாடுகள், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், எதிர்வரும் காலங்களில் இயக்க செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. மதிய உணவு பழனி கழக தோழர்களால் வழங்கப்பட்டது. மடத்துக்குளம் : மாலை 4 மணியளவில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மோகன் இல்லத்தில் தோழர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்பகுதியைச் சார்ந்த சிவானந்தம், இராசேந்திரன், கணக்கன் மற்றும் மடத்துக்குளம் மோகன் இணையர் ஜோதி ஆகியோர்...

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (18) கார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்றச் சட்டங்கள் விடுதலை இராசேந்திரன்

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (18) கார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்றச் சட்டங்கள் விடுதலை இராசேந்திரன்

பிரிட்டிஷ் ஆட்சி – காங்கிரஸ் ஆட்சி காலங்களில் தமிழர் உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாறு களைத் தொடர்ந்து இத்தொடரில் – அதைவிட மோசமாக பா.ஜ.க. ஆட்சியின் ‘இருண்டகால’ வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம். 2017 பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் ஏற்பு வாங்கப்பட்டபோது, கடைசி நேரத்தில் 40 திருத்தங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றி விட்டார்கள். இந்த திருத்தங்களை மாநிலங் களவைக்கே கொண்டு செல்லவில்லை. நிதி தொடர்பான மசோதாக் களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் மட்டுமே போதுமானது என்ற சட்டம் தந்துள்ள வாய்ப்பை இப்படி குறுக்கு வழியில் முறை கேடாகப் பயன்படுத்தியிருக்கிறது மோடி ஆட்சி. இந்த திருத்தங்களில் ஒன்று – வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எல்லை மீறிய அதிகாரங்களாகும். நடுவண் ஆட்சி, அரசியல் எதிரிகளை ஒழிப்பதற்குப் பயன்படுத்தும் வலிமையான அதிகார அமைப்புகளில் ஒன்று வருமான வரித் துறை. புதிய திருத்தத்தின்படி, இனி வருமான வரித்...

தமிழ்ப் பண்டிதர்களுக்கு சில வார்த்தைகள்

தமிழ்ப் பண்டிதர்களுக்கு சில வார்த்தைகள்

தமிழ்ப் பண்டிதர்களுக்கும் தமிழபிமானிகளுக்கும் சில வார்த்தைகளை கூற விரும்புகிறோம். சுயமரியாதைத் தோழர்கள், தமிழ் மொழி வளர்ச்சி விஷயத்தில் எந்த வகையிலும் மற்ற பண்டிதர்களுக்கும் தமிழ் அபிமானிகளுக்கும் பிற்பட்டவர் அல்லர் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு சுயமரியாதைத் தோழர்கள் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டதும், தமிழ் வளர்ச்சிக்கான தீர்மானங்களிலும் முக்கியப் பங்கு எடுத்துக் கொண்டதுமே உதாரணமாகும். உண்மையில் ஹிந்தி மொழியைக் கண்டிப்பதாக மாநாட்டில் மெஜாரிட்டியினரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சுயமரியாதைத் தோழர்கள் இல்லாவிட்டால் தோற்றே போயிருக்கும். ஹிந்தி கண்டன தீர்மானத்தைச் சிலர் எதிர்த்த பொழுது, அவ்வெதிர்ப்புக்குச் சரியான பதில் கூறினர். ஹிந்தி கூடாது என்பதைப் பெரிய மெஜாரிட்டியாரை ஒப்புக்கொள்ளச் செய்தவர்கள் சுயமரியாதைத் தோழர்களே யாவார்கள் என்பதை நாம் கூற வேண்டியதில்லை. ஆனால் மற்ற பண்டிதர்களில் மற்றவர்கள் விரும்புவது போல் புராணங்களை எழுதுவதும், அவைகளைப் பற்றி பேசுவதும், தேவார திருவாசங்களைப் பாடுவதும் தான் தமிழ் வளர்ச்சி என்று சுயமரியாதைத் தோழர்கள் கருதுவதில்லை. மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதும்,...