செக்கடிக்குப்பம்-ஓர் பெரியார் மண்!
தமிழ்நாட்டில் பெரியார் கொள்கைகளை முழுமையாக ஏற்ற கிராமங்கள் பற்றிய தொடர் ஒன்று முரசொலி நாளேட்டில் வாரந்தோறும் வெளிவருகிறது. அந்தத் தொடரை பெரியார் முழக்கம் நன்றியுடன் பதிவு செய்கிறது. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, பார்ப்பனர்களை வைத்து, சடங்குகள் செய்து நடைபெற்றால்தான் அது திருமணம் என்று இன்றும் கருதுவோர் பலர் இருக்க, 1925-ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பெரியார், சுயமரியாதைத் திருமண முறையை, தமிழர்களுக்குத் தந்தார். இந்தத் திருமண முறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்மதம் இருந்தால் போதும், பார்ப்பனர்களை அழைக்கத் தேவையில்லை, சடங்குகள் தேவையில்லை, தாலியும் கட்டாயமில்லை. மாலைமாற்றிக் கொண்டு, உறுதிமொழி எடுத்துக்கொண்டால் போதுமானது. பெரியார் அறிமுகப்படுத்திய இந்த எளிமையான திருமணமுறைக்கு, 1967-இல் அண்ணாவின் ஆட்சி அமையும் வரை சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனாலும், பல ஆயிரக்கணக்கானோர் சுயமரியாதைத் திருமணம் புரிந்தனர். அண்ணா இயற்றிய சட்டத்தால் இத்தகைய சுயமரியாதைத் திருமணங்கள் சர்வ சாதாரணமாகிவிட்ட போதிலும், வைதீகத் திருமணங்களே இப்போதும் அதிகம். ஆனால்,...