பேராவூரணியில் பெரியாரியல் பயிலரங்கம்
பேராவூரணி: பெரியாரின் 51ஆவது நினைவுநாளை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் மாணவர்களுக்கான பெரியாரியல் பயிலரங்கம் 25.12.2024 அன்று செங்கை க.கதிர்வேல் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது. முதல் நிகழ்வாக தோழர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் பெரியார் அறிமுகம் என்ற தலைப்பில் உரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் “திராவிட இயக்க வரலாறு” குறித்தும் “பெரியார் கொள்கையின் இன்றைய தேவை” குறித்தும் உரையாற்றினார். மதிய உணவிற்கு பிறகு இட ஒதுக்கீடு வரலாறு குறித்து உரையாற்றினார். நிறைவாக மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 09012025 இதழ்