Category: மாவட்ட செய்திகள்

கழக செயல்வீரர் போரூர் விக்னேஷ் மறைவு

கழக செயல்வீரர் போரூர் விக்னேஷ் மறைவு

சென்னை மாவட்டக் கழக செயல்வீரர் போரூர் ‌‌‍விக்னேஷ் கடந்த ஆண்டு கழகத்தில் இணைந்த நாள் முதலே கழகம் நடத்திய ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். ஐடி ஊழியர், வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் தோழர் விக்னேஷ். அவர் 16.04.2024 அன்று முடிவெய்தினார். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தோழர் விக்னேஷின் உடலுக்கு கழகத்தின் சார்பில் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் தோழர் உமாபதி, எட்வின் பிரபாகரன், இரண்யா, அருண்குமார், அன்னூர் விஷ்ணு, அட்டி அருண், புகழ் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினார்கள். சொந்த ஊரான திண்டிவனத்தில் தோழர் விக்னேஷின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 25.04.2024 இதழ்

எதிர்வரும் நிகழ்வு

எதிர்வரும் நிகழ்வு

இயக்கத்தின் கருப்பு மெழுகுவர்த்தி, கழக செயல்வீரர் தோழர் பத்ரி நாராயணன் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி ஏப்ரல் 30ஆம் தேதி காலை 9 மணியளவில் மயிலாப்பூர் மயானத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து இராயப்பேட்டை பத்ரி நாராயணன் நினைவுப் படிப்பகம் முன்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது எனவே தோழர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இரா.உமாபதி மாவட்டச் செயலாளர் – சென்னை திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 25.04.2024 இதழ்

தோழர் சி.சுப்பிரமணியன் மறைந்தார் சடங்குகளை மறுத்து உடல் அடக்கம்

தோழர் சி.சுப்பிரமணியன் மறைந்தார் சடங்குகளை மறுத்து உடல் அடக்கம்

சேலம் : திராவிடர் விடுதலைக் கழகத் தோழர், கொளத்தூர், அய்யம்புதூர் சி.சுப்பிரமணியன் அவர்கள் 21.04.2024 அன்று முடிவெய்தினார். அவரது உடலை கழகப் பெண் தோழர்கள் சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார்கள். இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், தோழமை இயக்கத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். இறந்தவர்களின் உடலை பெண்கள் சுமக்க கூடாது. சுடுகாடு வரை பெண்கள் வரக்கூடாது என்ற மூடத்தனத்தை மறுத்து, ஜாதி – மத சடங்குகளை மறுத்து பெண்களே முன்னின்று இறுதி நிகழ்வுகளை நடத்தியது அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு மறைந்த சி.சுப்பிரமணியம் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மறைந்த தோழர் சி.சுப்பிரமணியன் படத்தை திறந்துவைத்து நினைவேந்தல் உரையாற்றினார். இந்நிகழ்வில் கழக ஈரோடு வடக்கு...

தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!

தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!

பாஜகவினர் கழகத் தோழர் சங்கீதாவை தாக்கிய வழக்கில் குற்றவாளிகளுக்கு முன் பிணை மறுத்து திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜகவினரிடம் அப்பகுதி மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்போது அங்கிருந்த தோழர் சங்கீதாவும் பாஜகவினரிடம் ஜி.எஸ்.டி. குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் தோழர் சங்கீதாவின் கடையை தேடிச் சென்று, தனியாக இருந்த அவரை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் வசைபாடியதுடன், கொலைவெறித் தாக்குதலும் நடத்தியுள்ளனர். இத் தாக்குதலில் ஈடுபட்ட பாஜக பொறுப்பாளர் சின்னச்சாமி உள்ளிட்ட 5 பேரை கைது செய்த கோரி 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் தங்களுக்கு முன் பிணை தர வேண்டும் என்று கூறி திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கோரிக்கை மனு சமர்ப்பித்திருந்தனர். இந்த...

கொளத்தூரில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

கொளத்தூரில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

கொளத்தூர் : கொளத்தூர் நகரக் கழக சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் 09.04.2024 அன்று கொளத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. பாடகர் கோவன் குழுவின் கலை நிகழ்ச்சி மற்றும் கலகக்காரன் குழுவின் தெருக்கூத்து நாடகத்துடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு கொளத்தூர் நகரத் தலைவர் ராமமூர்த்தி வரவேற்புரையாற்றினார். சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார் தலைமை தாங்கினார். இதில் திராவிடர் முன்னேற்றக் கழக கொளத்தூர் ஒன்றிய செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி கொளத்தூர் ஒன்றிய செயலாளர் சேட்டு குமார், தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் தீனரட்சகன், திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி மாவட்ட து. அமைப்பாளர் முருகேசன், ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட தலைவர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கழக கொளத்தூர் நகரச் செயலாளர் அறிவுச்செல்வன் நன்றி கூற பொதுக்கூட்டம்...

புரட்சியாளர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா! பல்வேறு மாவட்டங்களில் கழகம் மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா! பல்வேறு மாவட்டங்களில் கழகம் மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரியாதை செலுத்தப்பட்டு சமத்துவநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு 14.04.2024 அன்று காலை 9 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன் மற்றும் பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். மடிப்பாக்கம் பகுதிக் கழக சார்பில் ஆதம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கழகத் தோழர்கள் – ஆதரவாளர்கள் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஈரோடு : புரட்சியாளர் அம்பேத்கர் அவரது 134வது பிறந்த நாளை முன்னிட்டு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள அம்பேத்கர்...

சேத்துப்பட்டு இராசேந்திரன் இல்லத் திறப்பு விழா

சேத்துப்பட்டு இராசேந்திரன் இல்லத் திறப்பு விழா

வட சென்னை : வட சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன் – அலமேலு ஆகியோரின் இல்லத் திறப்பு விழா 14.04.2024 காலை 11:30 மணியளவில் அயனாவரம் முனுசாமி தெருவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தபெதிக தலைவர் ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் உமாபதி, இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் மற்றும் தோழர்கள் – குடும்ப உறவுகள் திரளாக கலந்து கொண்டனர்.. நிறைவாக கழகம் சார்பில் நினைவு பரிசாக புத்தர் சிலையை கழகத் தலைவர் வழங்கினார். பெரியார் முழக்கம் 18.04.2024 இதழ்

இந்தியாவா? பாரதமா?

இந்தியாவா? பாரதமா?

சென்னை : நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 20வது சந்திப்பு “இந்தியாவா? பாரதமா?” என்ற தலைப்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு கழகத் தலைமை அலுவலகத்தில் அன்னூர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஆர்.எஸ்.எஸ்-ம் – ‘பாரதமும்’ என்ற தலைப்பில் ஊடகவியலாளர் பிரகாசும், ‘பாரதத்தில்’ தீண்டத்தகாதவர்களின் நிலை என்ற தலைப்பில் ஆர்த்தியும் சிறப்புரையாற்றினார்கள். அடுத்ததாக ‘பாரதத்தை’ எதிர்க்கும் தெற்கு என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார். இதில் 40க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 18.04.2024 இதழ்

மேட்டூர் ஆர்.எஸ்-இல் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

மேட்டூர் ஆர்.எஸ்-இல் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

மேட்டூர் ஆர்.எஸ் நகரக் கழக சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் 10.04.2024 அன்று மேட்டூர் ஆர்.எஸ் வணிக வளாகம் முன்பு நடைபெற்றது. பாடகர் கோவன் குழுவின் கலை நிகழ்ச்சி மற்றும் கலகக்காரன் குழுவின் தெருக்கூத்து நாடகத்துடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. பொதுக் கூட்டத்திற்கு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அ.சக்திவேல் தலைமை தாங்கினார், RS பகுதித் தலைவர் முரளிதரன் வரவேற்புரையாற்றினார். திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் கவிஞர் வைரமணி, கழக மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு ஆகியோர் உரையாற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நிறைவாக RS பகுதி செயலாளர் கு.விவேக் நன்றி கூற பொதுக் கூட்டம் நிறைவுபெற்றது. பெரியார் முழக்கம் 18.04.2024 இதழ்

திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்! ஜி.எஸ்.டி. குறித்து கேள்வி எழுப்பியதால் வெறிச்செயல்

திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்! ஜி.எஸ்.டி. குறித்து கேள்வி எழுப்பியதால் வெறிச்செயல்

திருப்பூர் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருப்பூர் மாவட்ட அமைப்பாளரான தோழர் சங்கீதா ஆத்துப்பாளையம் பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். கழக நிகழ்வுகளிலும், ஆர்ப்பாட்டங்களிலும் குடும்பத்தோடு பங்கேற்பவர் தோழர் சங்கீதா. கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அன்று திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.பி.முருகானந்தத்திற்கு ஆதரவாக பாஜகவினர் ஆத்துப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்திருந்தனர். அப்போது அங்கு துணிக்கடை நடத்தி வந்த சங்கீதாவிடம் பாஜகவினர் வாக்கு சேகரிக்க சென்ற போது நாப்கின், அரிசி, பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்திற்கும் ஒன்றிய அரசு ஜிஎஸ்டி விதித்தது குறித்து சங்கீதா கேள்வி எழுப்பினார். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாஜகவினர் சங்கீதாவின் கடைக்குள் வந்து “நீ யார் கேள்வி கேட்க?” என்று கேட்டு தகாத வார்த்தைகளில் பேசி கடுமையாக தாக்கினார்கள். அப்போது ‘‘நான் கேள்விதானே கேட்கிறேன். பதில் சொல்ல முடியவில்லை என்றால் தாக்குவீர்களா?’’ என...

கழகத்தின் தேர்தல் பரப்புரைகள் தீவிரம் பாஜகவுக்கு எதிரான பரப்புரைகளுக்கு அமோக ஆதரவு!

கழகத்தின் தேர்தல் பரப்புரைகள் தீவிரம் பாஜகவுக்கு எதிரான பரப்புரைகளுக்கு அமோக ஆதரவு!

சேலம் : மேட்டூர் நகரக் கழக சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” பொதுக்கூட்டம் 06.04.2024 அன்று மேட்டூர் சின்ன பார்க் திடலில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மேட்டூர் நகரத் தலைவர் செ. மார்ட்டின் தலைமை தாங்கினார், கீ.கோ.தேன்மொழி வரவேற்புரையாற்றினார். கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக பாடகர் கோவன் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் செல்வேந்திரனின் இயக்கத்தில் “கலகக்காரன்” நையாண்டி தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராஜ், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, ம.க.இ.க பாடகர் கோவன் ஆகியோர் மோடி ஆட்சி தொடரலாமா? என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மேட்டூர் நகர தி.வி.க.செயலாளர் சு.குமரப்பா நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கழகத்...

தயாநிதி மாறன் பெரியார் சிலைக்கு மரியாதை!

தயாநிதி மாறன் பெரியார் சிலைக்கு மரியாதை!

தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தயாநிதிமாறன் 09.04.2024 அன்று திருவல்லிக்கேணி பகுதியில் வாக்கு சேகரிக்க வருகைதந்தார். அவருக்கு சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கழக படிப்பகம் முன்பு அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரியார் முழக்கம் 11.04.2024 இதழ்

ஈரோடு இரத்தினசாமியின் தாயார் காலமானார்!

ஈரோடு இரத்தினசாமியின் தாயார் காலமானார்!

ஈரோடு : கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமியின் தாயார் மருதாம்பாள் (வயது 90) 08.04.2024 அன்று வயது மூப்பின் காரணமாக முடிவெய்தினார். ஈரோடு முத்தூர் கார்வழி ரைஸ்மில் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி மற்றும் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் 09.04.2024 அன்று அம்மையாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 11.04.2024 இதழ்

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

• பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி அவர்களை ஆதரித்து தெருமுனைக் கூட்டங்கள் ஏப்ரல் 6,7,8,9 ஆகிய 4 நான்கு நாட்கள் நடைபெற உள்ளன. இந்நிகழ்வின் இறுதியில், 7,8 ஆகிய நாட்களில் நடைபெறும் பொது கூட்டங்களில் தலைவர் கொளத்துர் மணி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிகள் திராவிட இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக நடைபெறுகின்றன. • திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” என்ற தலைப்பில் இந்தியா கூட்டணியை ஆதரித்து நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் ஏப்ரல் 06,09 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மேட்டூர், கொளத்தூர், மேட்டூர் ஆர்.எஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் நடைபெறவுள்ளது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதில் பாடகர் கோவன் குழுவினர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெறும். பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்

திருப்பத்தூரில் இல்ல திறப்பு விழா

திருப்பத்தூரில் இல்ல திறப்பு விழா

திருப்பத்தூர் : வாணியம்பாடியை அடுத்துள்ள புல்லூர் கிராமத்தில் கழக வாணியம்பாடி செயலாளர் சுரேஷ்-இன் இல்லத் திறப்பு விழா மற்றும் கழக கொடியேற்று விழா 17.3.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்வாக ஜெய்கர் – மருது ஆகியோரின் இசை நிகழ்ச்சி அமைந்தது. விழாவை நிலா தொகுத்து வழங்கினார். விழாவிற்கு வேலூர் மாவட்டத் தலைவர் திலிபன், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.ப.சிவா, மாவட்டப் பொருளாளர் த.சதிஷ் சமத்துவன், பேர்ணாம்பட்டு நகரச் செயலாளர் பார்த்திபன், கஜேந்திரன், ஆசிரியர் பாஸ்கரன், செந்தில், வேலூர் சதிசு, ரேனு, பேர்ணாம்பட்டு ஒன்றிய செயலாளர் அரவிந்த் செயசூர்யா, அமல்ராஜ், முரளி தன்மானன், வழக்கறிஞர் பாலகுமாரன், வழக்கறிஞர் திராவிட பாண்டியன், ஆனஸ்ட், செ.ராஜி, செல்வக்குமார், புருசோத்தமன், செல்வக்குமார், செயக்குமார், சிலம்பரசன், பிரவினா, வைரமணி, சுகந்தி யாழினி, கனல்விழி, கயல்விழி, யாழ்வெண்பா, மோகேஷ் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். விசிக மண்டலச் செயலாளர் இரா.சுபாசு சந்திர...

ஈரோடு, ஆத்தூரில் தேர்தல் பரப்புரை

ஈரோடு, ஆத்தூரில் தேர்தல் பரப்புரை

ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனைக்கல் மேடு, மணிக்கூண்டு, உடையம்பட்டி, நரசிங்கபுரம், முல்லைவாடி, ராஜேந்திரா பேக்கரி உள்ளிட்ட ஆறு இடங்களில் பிப்ரவரி 25ஆம் தேதி தொடங்கி மார்ச் 15 வரை நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக பெரியார் விழுதுகள் ரிஷிவிந்தன் – அரவிந்தன் ஆகியோரின் பகுத்தறிவுப் பாடல்கள் மற்றும் மகேந்திரன் – கணபதி குழுவின் அரசியல் நையாண்டி நடைபெற்றது. செல்வராஜ், வெங்கடேஷ், கார்த்திகேயன் ஆகியோர் பரப்புரைக் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஈரோடு : ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியான மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திராவிடர் விடுதலைக் கழகமும் சமூகநீதி கூட்டமைப்பும்...

பாஜகவின் சட்டவிரோத முயற்சி தகர்ப்பு!

பாஜகவின் சட்டவிரோத முயற்சி தகர்ப்பு!

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகம் அருகில் 27.02.2024 அன்று பாஜகவினர் தேர்தல் பணிமனையை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். தகவலறிந்த திருவல்லிக்கேணி பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் நேரில் சென்று உரிய அனுமதியின்றி இங்கு பாஜகவினர் தேர்தல் பணிமனையை திறக்க முயற்சிக்கின்றனர். எனவே காவல்துறை இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த பின்பு பாஜக தேர்தல் பணிமனை அமைக்கும் முயற்சியை கைவிட்டது. பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்

பெரியார் முழக்கத்திற்கு ரூ.5,000 வளர்ச்சி நிதி

பெரியார் முழக்கத்திற்கு ரூ.5,000 வளர்ச்சி நிதி

சென்னை : வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன் குடும்பத்தினரின் இல்லத் திறப்பு விழா 14.04.2024 அன்று அயன்புரம் முனுசாமி தெருவில் நடைபெறுகிறது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று பெரியார் – அம்பேத்கர் – மார்க்ஸ் கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தந்தை பெரியார் இல்ல கல்வெட்டை திறந்து வைக்கிறார். இல்லத் திறப்பு விழாவின் மகிழ்வாக கழக வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு ரூ.5000/- வளர்ச்சி நிதி வழங்கியுள்ளார். தொடர்புக்கு : 9445109323, 7550178401 பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்

கோவை, சேலம், சென்னை வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

கோவை, சேலம், சென்னை வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

ஈரோடு : இந்தியா கூட்டணியின் ஈரோடு நாடாளு மன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கே.இ.பிரகாஷ் 22.03.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கோவை : எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை 26.03.2024 அன்று கோவை மாநகர மாவட்டக் கழக நிர்வாகிகள் சந்தித்து தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். கோவை மாவட்டக் கழகச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பாளர் புரட்சித் தமிழன், மாநகரத் தலைவர் நிர்மல் குமார், மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன், மாதவன், சதீஷ், பொங்கலூர் கார்த்தி, வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர். சேலம் : சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை 27.03.2024 அன்று சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் தலைமையில் கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும்...

ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து கழக செயலவை தீர்மானம்

ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து கழக செயலவை தீர்மானம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவைக் கூட்டம் 21.03.2024 வியாழக்கிழமை அன்று ஈரோடு பவானி சாலையில் உள்ள கே.கே.எஸ்.கே மஹாலில் நடைபெற்றது. செயலவை கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமை தாங்கினார். கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம.இளங்கோவன் அறிமுக உரையாற்றினர். தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் காணொளி வாயிலாக சென்னையில் இருந்து கூடியிருந்த தோழர்கள் மத்தியில் நேரலையில் உரையாற்றினார். அவர் தனது உரையில் கழகம் கடந்து வந்த பாதை, ஆற்றிய பணிகள், நம் முன் இருக்கும் சவால்கள், பரப்புரையில் புதிய யுக்திகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம், சமூக வலைதள பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து விரிவாக உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கழக மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட, மாநகர பொறுப்பாளர்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும் பாஜக அரசை வீழ்த்த வேண்டிய அவசியம் குறித்தும், திமுக கூட்டணியை ஆதரித்து தாங்கள் செய்த பரப்புரைகள் குறித்தும், அதில்...

சென்னை: புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

சென்னை: புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

சென்னையைச் சேர்ந்த தௌஃபிக் மற்றும் லியோ மார்ஷல் ஆகிய இரு இளைஞர்கள் 02.03.2024 அன்று சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். சென்னை கிண்டியை சேர்ந்த ஐ.டி ஊழியரான அபிநந்தன் கிருஷ்ணன், 17.03.2024 அன்று சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார். உடன் அருண்குமார், அருண்கோமதி, அன்னூர் விஷ்ணு. இந்நிகழ்வு இராயப்பேட்டை வி.எம் தெரு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், நாராயணக் குப்பத்தைச் சேர்ந்த இரா.வீரமணி – ஏ.கார்ஷீலா ஆகியோரின் இணையேற்பு விழா 22.02.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. பெரியார் முழக்கம் 21032024 இதழ்

கோவை ஃபாருக்கின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்

கோவை ஃபாருக்கின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்

கோவை : இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கோவை மாநகர் மாவட்டக் கழக செயல்வீரர் தோழர் ஃபாரூக்கின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் 16.03.2024 அன்று காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய முற்போக்கு கூட்டியக்கத் தலைவர் யூ.கலாநாதன் அவர்களின் படத்தை தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். நிகழ்வை ததிசுக தலைவர் நேருதாசு தலைமை தாங்கினார். இதில் தோழமை இயக்கத்தினர் கலந்து கொண்டு நினைவேந்தல் உரையாற்றினர். ஜின்னா மாச்சு, வழக்கறிஞர் PUCL பாலமுருகன் ஆகியோர் ஃபாரூக் வழக்கு நடைபெறுவது குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் மறைந்த தோழர் ஃபாரூக் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கழக சார்பில் மாநகரத் தலைவர் நிர்மல் குமார், செயலாளர் வெங்கடேசன், அமைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் புரட்சித்தமிழன், சதீஷ், இராஜாமணி, நவீன், அறிவுக்கனல் கலந்து கொண்டனர்‌ பெரியார் முழக்கம் 21032024 இதழ்

கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், ஆத்தூர், மதுரையில் பரப்புரைகள் தீவிரம்

கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், ஆத்தூர், மதுரையில் பரப்புரைகள் தீவிரம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்கட்ட பரப்புரைக் கூட்டமானது மார்ச் 15,16 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. மார்ச் 14ஆம் தேதி மூரார்பாளையம், கள்ளக்குறிச்சி மந்தைவெளி, சின்ன சேலம் பேருந்து நிலையம், நைனார்பாளையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் கா.மதியழகன் தலைமை தாங்கினார். இதில் மக்கள் அதிகாரம் கள்ளக்குறிச்சி மாவட்டப் பொறுப்பாளர் ராமலிங்கம், சின்ன சேலம் விசிக ஒன்றியச் பொருளாளர் மைக்கேல், அஜித், வழக்கறிஞர் ஆனந்த், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் க. ராமர், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ.இளையரசன், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சாக்ரடீசு, விசிக தலித் சந்திரன் தபெதிக மாவட்டச் செயலாளர் செ.பிரபு ஆகியோர் பரப்புரைக் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்கள். இரண்டாவது நாளாக 16.3.2024 அன்று மு.நாகராஜ்...

குருவரெட்டியூர் மகேஸ்வரி காலமானார் பெண்கள் முன்னின்று இறுதி நிகழ்வுகளை செய்தனர்

குருவரெட்டியூர் மகேஸ்வரி காலமானார் பெண்கள் முன்னின்று இறுதி நிகழ்வுகளை செய்தனர்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் குருவரெட்டியூர் தோழர் நாத்திகசோதி அவர்களின் இணையர் தோழர் மகேஸ்வரி அவர்கள் 13.03.2024 காலை மறைவுற்றார். அவரது கண்கள் ஈரோடு அரசன் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக பெண் தோழர்கள் மறைந்த அம்மையாரின் உடலை சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்தினர். இறந்தவர்களின் உடலை பெண்கள் சுமக்க கூடாது, சுடுகாடு வரை பெண்கள் வர கூடாது என்ற மூடத்தனத்தை மறுத்து. மத, ஜாதிய சடங்குகளை மறுத்து பெண்களே முன்னின்று இறுதி நிகழ்வுகளை நடத்தினர். இந்நிகழ்வு குருவரெட்டியூர் பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இறுதி நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் திராவிடர் கழக, திராவிடர் விடுதலைக் கழக, மாநில மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக மறைந்த தோழர் மகேஸ்வரி அவர்களின் பட திறப்பும் நினைவேந்தல்...

பெரியார் பெருந்தொண்டர் இனியன் பத்மநாபன் காலமானார்

பெரியார் பெருந்தொண்டர் இனியன் பத்மநாபன் காலமானார்

திருச்சி : பெரியார் பெருந்தொண்டரும், ஈரோடு மாவட்டக் கழக ஆலோசகருமான அய்யா இனியன் பத்மநாபன் (97) வயது முதிர்வினால் 15.03.2024 அன்று முடிவெய்தினார். அவரது உடல் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது. அய்யாவின் உடலுக்கு ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் எழிலன், கிருட்டிணன், பிரபு, திருப்பூர் சங்கீதா, தனபால், முத்து ஆகியோர் கழகக் கொடியைப் போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார்கள். அவரது உடலை கழகப் பெண் தோழர்களே சுமந்து சென்றனர். பின்னர் எந்தவித மூட சடங்குகளுமின்றி அவரது உடல் எரியூட்டப்பட்டது. இறுதி நிகழ்வில் மணப்பாறை பாலசுப்பிரமணியம், வையம்பட்டி ஒன்றியப் பொறுப்பாளர் – துரை காசிநாதன், திமுக தலைமைக் கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழக நகரச் செயலாளர் சி.எம்.எஸ்.ரமேஷ், விசிக நகரச் செயலாளர் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு அய்யாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். பெரியார் முழக்கம் 21032024 இதழ்

சேலத்தில் மோடிக்கு கருப்புக் கொடி

சேலத்தில் மோடிக்கு கருப்புக் கொடி

இன்று 19.03.2024 சேலத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்காக வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை, சேலம் மாநகர செயலாளர் ஆனந்தி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியார் முழக்கம் 21032024 இதழ்

சென்னையில் எழுச்சியோடு நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சி

சென்னையில் எழுச்சியோடு நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சி

சென்னை : அன்னை மணியம்மையார் 105வது பிறந்தநாள் மற்றும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மகளிர் சந்திப்பு நிகழ்வு 10.03.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. பிரீத்தி வரவேற்புரை யாற்றினார். தொடர்ந்து கழகத் தோழர்கள் இரண்யா, தேன்மொழி, ரம்யா ஆகியோர் பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்துரை வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் தோழர் சிவகாமி, சமூக செயற்பாட்டாளர்கள் அக்னி – மரக்கா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். மதிய உணவிற்கு பிறகு தோழர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிறைவாக யாழினி நன்றி கூறினார். திருப்பூர் : உடுமலையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் 08.03.2024 அன்று நடந்த மகளிர் தின விழாவில் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 15032024...

கொளத்தூரில் தோழர் செல்லமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி

கொளத்தூரில் தோழர் செல்லமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி

சேலம் : கொளத்தூர் நிர்மலா பள்ளி ஆசிரியரும் கழகத் தோழருமான செல்வேந்திரனின் தந்தை பெ.செல்லமுத்து கடந்த 04.03.2024 அன்று முடிவெய்தினார். அவரது உடலுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பெ. செல்லமுத்துவின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் 10.03.2024 அன்று கொளத்தூர், உக்கம் பருத்திக்காட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. முன்னதாக மறைந்த தோழர் பெ. செல்லமுத்துவின் படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்திற்கு கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் இரா. விஜயகுமார் தலைமை தாங்கினார், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார், உக்கம்பருத்திக்காடு கிளைத் தலைவர் சுப்பிரமணியம், TNEB ஈரோடு பெ.அன்புச்செழியன், மருத்துவர் வ.ப.வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் கண்ணம்மாள், நிர்மலா மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ம.விஜய் அமுல்ராஜ் ஆகியோர் தோழர் செல்லமுத்து அவர்களுடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்....

திருப்பூர், கடலூர், மதுரையில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” பொதுக்கூட்டம்!

திருப்பூர், கடலூர், மதுரையில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” பொதுக்கூட்டம்!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” எனும் முழக்கத்தோடு 2024 பாராளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் 05.03.2024 அன்று குன்னத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு குன்னத்தூர் பகுதிப் பொறுப்பாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார், குன்னத்தூர் சின்னச்சாமி, திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, தமிழ்நாடு மாணவர் கழக மகிழவன், தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் முகில் ராசு, கழக சமூக வலைதளப் பொறுப்பாளர் பரிமளராசன் ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி சிறப்புரையாற்றினார். 15 வேலம்பாளையம் பொறுப்பாளர் மாரிமுத்து நன்றி கூறினார். இதில் மாநகர அமைப்பாளர் மாதவன், சரஸ்வதி மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கடலூர் : கடலூர் மாவட்டக் கழக சார்பில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!”...

காஞ்சி பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர்!

காஞ்சி பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர்!

காஞ்சிபுரம் : பாசிச பாஜகவை வீழ்த்துவோம்! ஜனநாயக இந்தியாவைக் கட்டமைப்போம்! என்ற கொள்கை முழக்கத்தோடு காஞ்சி மக்கள் மன்றத்தின் பேரணி – பொதுக்கூட்டம் – கலை நிகழ்ச்சிகள் 09.03.2024 அன்று காஞ்சி பெரியார் நினைவுத் தூண் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ரவிபாரதி, பெங்களூர் சித்தார்த்தன், அருண்குமார், எட்வின் பிரபாகரன், சூர்யா, மயிலை குமார், அன்னூர் விஷ்ணு, உதயா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 15032024 இதழ்

பெரியார் முழக்கம் இதழுக்கு ரூ.1,000 வளர்ச்சி நிதி

பெரியார் முழக்கம் இதழுக்கு ரூ.1,000 வளர்ச்சி நிதி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், நாராயணக் குப்பத்தைச் சேர்ந்த இரா.வீரமணி – ஏ.கார்ஷீலா ஆகியோரின் இணையேற்பு விழா 22.02.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஈரோடு இரா.வீரமணி, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வை கழக கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் க.இராமர் ஒருங்கிணைத்தார். முன்னதாக விடுதலைக் குரல் குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இணையேற்பு விழாவின் மகிழ்வாக மணமக்கள் கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழ் வளர்ச்சி நிதியாக ரூ.1000/- நன்கொடையாக வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 15032024 இதழ்

தோழர் திலீபன் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து

தோழர் திலீபன் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து

வேலூர் : ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழகத் தலைவர் திலீபன், பெரப்பேரி கிராமத்தில் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை அகற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த எதிர்த்தரப்பு தோழர் திலீபனை கடுமையாகத் தாக்கியது. தோழர் திலீபனை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி 17.04.2023 அன்று ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழக சார்பில் பானாவரம் காவல்நிலையம் முற்றுகையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கழகத் தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 01.03.2024 அன்று தீர்ப்பானது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 40க்கும் மேற்பட்டோர் மீது போடப்பட்ட வழக்குப்பதிவை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி ஆனந்த வெங்கடேசன். இந்த வழக்கில் கழக சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 07032024 இதழ்

வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு கழகம் ஆதரவு

வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு கழகம் ஆதரவு

சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றுவரும் உண்ணா விரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வழக்கறி ஞர்களை கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா‌.உமாபதி ஆகியோர் 02.03.2024 அன்று சந்தித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தங்களது ஆதரவை தெரிவித்தனர். இராஜேஷ், அருண் கோமதி, எட்வின் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 1-இல் ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் திருப்பூர் மகிழவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 07032024 இதழ்

உடுமலையில் கழக சார்பில் பரப்புரை இயக்கம்

உடுமலையில் கழக சார்பில் பரப்புரை இயக்கம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! தெருமுனைக் கூட்டங்கள் 20.02.24 மற்றும் 21.02.24 ஆகிய இரு நாட்கள் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. உடுமலை பேருந்து நிலையம் முன்பு, பெதப்பம்பட்டி, துங்காவி, காரத் தொழுவு, கணியூர், வடதாரை பூளவாடி பிரிவு, ஐந்து முக்கு, பேரறிஞர் அண்ணா சிலை, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதில் மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் கணக்கன், ஒன்றிய செயலாளர் சிவானந்தம், ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், உடுமலை பகுதி பொறுப்பாளர் இயல்,கழகப் பொருளாளர் துரைசாமி, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், கழக திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து, தமிழ்நாடு மாணவர் கழகம் மகிழவன், திவிக தாராபுரம் நகரப் பொறுப்பாளர் செல்வராசு, திருப்பூர் அய்யப்பன், சரசுவதி, விசிக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார், திராவிட இயக்கத் தமிழர் பேரவை தங்கவேல், உடுமலை முற்போக்கு கூட்டமைப்பு...

நங்கவள்ளியில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் பொதுக்கூட்டம்

நங்கவள்ளியில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் பொதுக்கூட்டம்

சேலம் : சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் தானாபதியூரில் இந்து முன்னணியின் தடையைத் தகர்த்து சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! 2024 தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் 03.03.2024 அன்று தானாபதியூர் பகுதியில் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் சர்வாதிகார BJP அரசின் அவலங்களை விளக்கி பாடல்கள் பாடப்பட்டது. தொடர்ந்து கார்ப்பரேட் சாமியார்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் காவை இளவரசன் அவர்களின் மந்திரமல்ல – தந்திரமே என்கின்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. வனவாசி நகர செயலாளர் பழ.உமாசங்கர் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு தலைமையுரையாற்றினார். தொடர்ந்து கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சக்திவேல், தானாபதியூர் தி.மு.க.இளைஞரணி சந்திரசேகரன், இளம்பிள்ளை திவ்யா, நங்கவள்ளி CPI ஒன்றியச் செயலாளர் பழ. ஜீவானந்தம், தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் திருமதி வழக்கறிஞர் முத்து...

கோவையில் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கம்; கழக ஏட்டுக்கு 75,000 நன்கொடை

கோவையில் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கம்; கழக ஏட்டுக்கு 75,000 நன்கொடை

திராவிட இயக்கத் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் 55ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டக் கழக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கம் 02.03.2024 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்றது. எம்.ஆர்.இராதா கலைக்குழுவின் பகுத்தறிவுப் பாடல்களுடன் கருத்தரங்கம் தொடங்கியது. சூலூர் தமிழ்செல்வி கருத்தரங்கை தொகுத்து வழங்கினார். மாவட்ட அமைப்பாளர் புரட்சித் தமிழன் தலைமை தாங்கினார், மாதவன் சங்கர் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து “கோயில்களும் சமூகநீதியும்” என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழக தேசிய செயலாளர் வழக்கறிஞர் ச.பாலமுருகன், திராவிட முன்னேற்றக் கழக கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அன்புச் செழியன், திராவிட இயக்க செயல்பாட்டாளர் லோகநாயகி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “அறிஞர் அண்ணாவும் தமிழ்நாடும்” என்ற தலைப்பில் நிறைவுரையாற்றினார். கருத்தரங்கின் முடிவில் ஜெகதீசன், கார்த்திக் ஆகியோர் கழகத் தலைவர் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கழகத்...

கொளத்தூரில் “எது திராவிடம்? எது சனாதனம்?” பொதுக்கூட்டம்

கொளத்தூரில் “எது திராவிடம்? எது சனாதனம்?” பொதுக்கூட்டம்

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாள் பொதுக்கூட்டம் கொளத்தூர் நகர கழக சார்பில் 23.12.2023 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள கழக செயல்வீரர் இளஞ்செழியன் நினைவரங்கில் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியோடு பொதுக்கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார் தலைமை தாங்க, கொளத்தூர் நகர தலைவர் சி. ராமமூர்த்தி வரவேற்புரையாற்றினார். திமுக கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் ம. மிதுன் சக்கரவர்த்தி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன், மேற்கு மாவட்டச் செயலாளர் சி. கோவிந்தராசு கிழக்கு மாவட்டத் தலைவர் க. சக்திவேல், நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் தங்கதுரை, மேட்டூர் நகரச் செயலாளர் சு குமாரப்பா, தி.மு.க. கொளத்தூர் நகரச் செயலாளர் பெ. நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் சதாசிவம், கழக தலைமைக்குழு...

பேராவூரணியில் பெரியார் நினைவுநாள் கருத்தரங்கம் ; பெரியார் முழக்கத்திற்கு ரூ.15,000 நன்கொடை

பேராவூரணியில் பெரியார் நினைவுநாள் கருத்தரங்கம் ; பெரியார் முழக்கத்திற்கு ரூ.15,000 நன்கொடை

தஞ்சாவூர் : பேராவூரணி சேதுபாவாசத்திரம் கழக சார்பில் தந்தை பெரியார் 50வது நினைவு நாள் – புரட்சியாளர் அம்பேத்கர் 67வது நினைவு நாள் – வைக்கம் போராட்ட நூற்றாண்டு எது திராவிடம்? எது சனாதனம்?  கருத்தரங்கம்  பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம் தலைமை வகிக்க,  பேராவூரணி ஒன்றிய செயலாளர் உதயகுமார் வரவேற்புரையாற்றினார். பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் பகுத்தறிவு பாடல்களுடன் கருத்தரங்கம் தொடங்கியது.   தமிழக மக்கள் புரட்சிக் கழக ஆறு நீலகண்டன், காங்கிரஸ் சேக் இப்ராம்சா,  சிபிஐ பன்னீர்செல்வம், மதிமுக பாலசுப்பிரமணியன், விசிக ஆத்ம ஆனந்தகுமார், அறநெறி மக்கள் கட்சி ஆயர் த.ஜேம்ஸ் மற்றும் பேராசிரியர் சண்முகப்பிரியா, கழக நகரச் செயலாளர் தா. கலைச்செல்வன், கழக மாவட்டச் செயலாளர் பாரி, தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார் ஆகியோர் கருத்துரையாற்றினர். தொடர்ந்து “பெரியாரும் திருக்குறளும்” என்ற தலைப்பில் தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் தலைவர் சின்னப்பத்தமிழரும், “எது...

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழக சார்பில்  இராயப்பேட்டை, சிம்சன், எம்ஜிஆர் நகர், தியாகராயர் நகர், மயிலாப்பூர், கலைஞர் கருணாநிதி நகர், நங்கநல்லூர், பிவி நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கழகம் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.   இந்நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழக பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். கோவை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கோவை மாவட்டக் கழக சார்பில் காந்திபுரம் பெரியார் சிலைக்கு கழகத் தோழர் கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை...

கழகத் தலைவரிடம் வாழ்த்து

கழகத் தலைவரிடம் வாழ்த்து

தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கும் தோழர் லாவண்யா 21.12.2023 வியாழனன்று கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதன் மகிழ்வாக கழக ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழ் வளர்ச்சி நிதியாக ரூ.2000/- வழங்கினார். பெரியார் முழக்கம் 28.12.2023 இதழ்

கழக வெளியீடுகளுக்கு ரூ.3 லட்சம் நன்கொடை ; கோபி இராம.இளங்கோவன் வழங்கினார்

கழக வெளியீடுகளுக்கு ரூ.3 லட்சம் நன்கொடை ; கோபி இராம.இளங்கோவன் வழங்கினார்

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் பெரியாரின் 50-வது நினைவு நாள் பொதுக்கூட்டம், 24.12.2023 அன்று மாலை 6.00 மணிக்கு குருவரெட்டியூர் பெரியார் திடல், தோழர் பிரகலாதன் நினைவரங்கில் சிறப்பாக நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகசோதி கூட்டத்திற்கு தலைமை வகிக்க, வேல்முருகன் வரவேற்புரையாற்றினார். மறைந்த தோழர் பிரகலாதன் படத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார். நிகழ்வின் தொடக்கத்தில் கோபி யாழ் திலீபன், அறிவுக்கனல் ஆகியோர் பாடல்கள் பாடினர். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமிக்கு அடுத்ததாகப் பேசிய, கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், திராவிடம் – சனாதனம் குறித்து உரையாற்றினார். அப்போது, தோழர்கள் கழக வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொண்ட இராம. இளங்கோவன், அதற்கு முன்னுதாரணமாக கழக நூல் வெளியீட்டு திட்டங்களுக்காக தனது தனிப்பட்ட நிதியாக ரூ. 3,00,000. (மூன்று இலட்சம் ) வழங்குவதாக அறிவித்து, தலைவர் கொளத்தூர்...

இராசிபுரம் – கொளத்தூரில் திராவிட இயக்க சாதனை விளக்கக் கூட்டங்கள்

இராசிபுரம் – கொளத்தூரில் திராவிட இயக்க சாதனை விளக்கக் கூட்டங்கள்

கழகம் சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகிறது. கொளத்தூர் : கொளத்தூர் ஒன்றியக் கழக சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டம் 11-12-2023 அன்று மாலை 5மணிக்கு 9வது தெருமுனைக் கூட்டம் கோவிந்தப்பாடியிலும், 10வது தெருமுனைக் கூட்டம் கத்திரிப்பட்டி மலையாள தெருவிலும் நடைபெற்றது. டி.கே.ஆர் இசைக் குழுவின் பகுத்தறிவுப் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. திமுக கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார், மாணவர் அணி துணை அமைப்பாளர் சதாசிவம், முன்னாள் தலைவர் முனுசாமி, கிளைச் செயலாளர் கணேசன், செட்டிப்பட்டி கிளைச் செயலாளர் பழனிச்சாமி, குள்ளவீரன்பட்டி ஈஸ்வரன், கண்ணன் நெசவாளர் அணி, சுப்பிரமணி, தேவராஜ், பரத், இளங்கோ, கார்த்தி, குமார், கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொளத்தூர் நகரத் தலைவர் இராமமூர்த்தி, தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், வழக்கறிஞர் கண்ணகி,...

மதுரையில் சட்ட எரிப்பு நாள் – கழகத் தலைவர் பங்கேற்பு

மதுரையில் சட்ட எரிப்பு நாள் – கழகத் தலைவர் பங்கேற்பு

1957ல் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகள் எரித்து சிறை சென்ற – உயிர்நீத்த பெரியார் தொண்டர்களின் வீரஞ்செறிந்த வரலாற்றை நினைவுகூறும் சிறப்புக் கருத்தரங்கம் 10.12.2023 ஞாயிறு அன்று மாலை 5 மணிக்கு மதுரை மணியம்மை பள்ளியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாவட்டக் கழக காப்பாளர் தளபதி தலைமை தாங்கினார், வாசுகி முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி வரவேற்புரையாற்றினார்.புரட்சிக் கவிஞர் பேரவை நாகபாலன், புரட்சிக் கவிஞர் மன்றம் பொறுப்பாளரும், மணியம்மை பள்ளி தாளாளருமான வரதராசன் ஆகியோர் தொடக்கவுரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவு எரிப்பு போராட்டத்திற்கான காரணங்களையும், பெரியார் தொண்டர்களின் வீரஞ் செறிந்த போராட்ட வரலாற்றையும் நினைவு கூர்ந்து சிறப்புரையாற்றினார். முன்னதாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய “அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு” நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் திருவெறும்பூர் அரசெழிலன்...

நம்பியூரில் சனாதன மோசடிகள் விளக்கம்

நம்பியூரில் சனாதன மோசடிகள் விளக்கம்

ஈரோடு வடக்கு : ஈரோடு வடக்கு மாவட்டக் கழக சார்பாக  03.12.2023  ஞாயிறு மாலை 04.30 மணியளவில் நம்பியூர் அஞ்சானூர் சமத்துவபுரத்தில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூடக்கரை கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டக் கழக அமைப்பாளர் கோபி நிவாசு, நம்பியூர் ரமேசு ஆகியோர் தொடக்க  உரையாற்றினார். தொடர்ந்து தலைமைக் கழக பேச்சாளர் கா.சு.வேலுச்சாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். அடுத்தக் கூட்டம் கூடக்கரையில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூடக்கரை பகுதி திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்பு (எ) சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தொடர்ந்து கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் நிறைவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எலத்தூர் செல்வக்குமார், கோபி அருளானந்தம், சத்தி முத்து, சித்தா பழனிச்சாமி, சின்னதம்பி, நம்பியூர் ஒன்றியச் செயலாளர் இரமேஷ், சிவராஜ், கூடக்கரை செல்வன், வழக்குரைஞர் தமிழரசன், பன்னீர் செல்வம், இராவணன், ராஜன் பாபு, குட்டி, புலவன்சிறை நடராஜன்,...

நங்கவள்ளியில் அம்பேத்கர் நினைவுநாள் கூட்டம்

நங்கவள்ளியில் அம்பேத்கர் நினைவுநாள் கூட்டம்

சேலம் : நங்கவள்ளி ஒன்றியக் கழக சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவு நாளை ஒட்டி எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டம் 06.12.2023 அன்று புதன் மாலை 4 மணியளவில் வனவாசி மேல் ரோடில் நடைபெற்றது. டி.கே.ஆர் குழுவின் இசை நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் பொ.கிருஷ்ணன் தலைமை வகித்தார், ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், வனவாசி நகர தலைவர் செந்தில்குமார், நங்கவள்ளி அ.செ. சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நங்கவள்ளி நகரச் செயலாளர் சு.பிரபாகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், தலைமைக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சக்திவேல், சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவபிரகாஷ், CPI நங்கவள்ளி ஒன்றியக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், திராவிடத் தமிழர் கட்சி மாநில அமைப்பு செயலாளர் சீ.செல்வமுருகேசன், வனவாசி நகர செயலாளர் பழ.உமாசங்கர் ஆகியோர்...

கழக ஏட்டுக்கு சந்தா சேர்க்க திருவல்லிக்கேணி பகுதித் தோழர்கள் முடிவு

கழக ஏட்டுக்கு சந்தா சேர்க்க திருவல்லிக்கேணி பகுதித் தோழர்கள் முடிவு

திருவல்லிக்கேணி : திருவல்லிக்கேணி பகுதிக் கழக கலந்துரையாடல் கூட்டம் 30.11.2023 வியாழன் மாலை 6 மணிக்கு வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் தோழர் இராஜேசு தலைமையில் நடைபெற்றது.. கூட்டத்தில் கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழுக்கு 500 சந்தா திரட்டுவது எனவும், வருகிற 2024ம் ஆண்டிற்கான பொங்கல் விழா சிறப்பாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதில் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, பகுதிச் செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட பகுதிக் கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

கழகப் பொறுப்பாளர் விஜயகுமார் தந்தை முடிவெய்தினார்.

கழகப் பொறுப்பாளர் விஜயகுமார் தந்தை முடிவெய்தினார்.

கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமாரின் தந்தை இராம. கண்ணதாசன் (வயது 68) 09.12.2023 அதிகாலை 4 மணியளவில் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் உள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். அவரது உடலுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார். பேராசிரியர் சரஸ்வதி, கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன் மற்றும் கடலூர், சேலம், சென்னை மாவட்டத் தோழர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினார்கள். பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

சென்னை வெள்ளம் : கழகத் தோழர்கள் உணவு வழங்கினர்

சென்னை வெள்ளம் : கழகத் தோழர்கள் உணவு வழங்கினர்

திருவல்லிக்கேணி பகுதிக் கழக சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மயிலாப்பூர் கணேசபுரம்,  ரூதர்புரம், சைவ முத்தையா தெரு, செல்லம்மாள் தோட்டம் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப் பட்டது. திருவல்லிக்கேணி பகுதிக் கழகத் தோழர்கள் இதற்கான பணிகளை காலை முதலே தொடங்கி இரவு வரை செய்தனர். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் ரூ.5000, கவிப்பிரியா ரூ.2000, பாலாஜி ரூ.500, திண்டுக்கல் மாக்சிம் கார்கி ரூ.600 வழங்கினார்கள். மயிலைப் பகுதிக் கழக சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சத்தியவாணி முத்து நகர், சுப்புராயன் சாலை, விசாலாட்சி தோட்டம், கணேசபுரம், முண்டக்கன்னியம்மன் கோவில் அருகிலுள்ள ஆகிய பகுதியில் உணவு வழங்கப்பட்டது. மயிலைப் பகுதித் தலைவர் இராவணன், பிரவின், பார்த்திபன், சிவா, கார்த்திக், பாஸ்கர், வினோத், மனோகர், சுகுமார், சபரி, சுரேஷ், மாரிமுத்து, மணிகண்டன் இப்பணிகளை மேற்கொண்டனர். பெரியார் முழக்கம் 07122023 இதழ்

அம்பேத்கர் மணி மண்டபத்தில் – கழகம் வீரவணக்கம்

அம்பேத்கர் மணி மண்டபத்தில் – கழகம் வீரவணக்கம்

சென்னை : புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்டத் துணைத் தலைவர் சுகுமார், இராஜேசு, அசோக் ஆகியோர் கலந்துகொண்டனர். மயிலாப்பூர் : புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவு நாளை ஒட்டி மயிலைப் பகுதிக் கழகம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மயிலைப் பகுதித் தலைவர் இராவணன், அய்யா உணவகம் சுரேஷ், பிரவீன், உதயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேத்துப்பட்டில் ராஜேந்திரன் தலைமையில் கழகத் தோழர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சேலம் மேற்கு : புரட்சியாளர் அம்பேத்கர் 67வது நினைவுநாளை ஒட்டி 06.12.23 காலை 10 மணியளவில் சேலம் மேற்கு...

புலியூரில் ‘மாவீரர் நாள்’

புலியூரில் ‘மாவீரர் நாள்’

சேலம் : கொளத்தூர் ஈழ ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் “மாவீரர் நாள்” நிகழ்ச்சி 27.11.2023 திங்கள் மாலை 5.30 மணியளவில் சேலம் மாவட்டம் கொளத்தூர் புலியூர் பிரிவில் அமைந்துள்ள பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் கடைப்பிடி க்கப்பட்டது. நிகழ்விற்கு தார்க்காடு செ. தர்மலிங்கம் தலைமை தாங்கினார். புலியூரைச் சேர்ந்த தோழர்கள் சரவணன், வாசு, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொளத்தூர் திவிக நகரச் செயலாளர் அறிவுச்செல்வன் வரவேற்புரையாற்றினர். மாலை 6.05 மணிக்கு தமிழீழ விடுதலைக்காக போர்க்களத்தில் வீரச் சாவடைந்த விடுதலைப் புலி மாவீரர்கள் – பொதுமக்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் “மாவீரர் பாடல்” ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாவீரர் பாடல் ஒளிபரப்பிற்கு பிறகு “மாவீரர் உரை” நிகழ்த்தும் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம இளங்கோவன், மூத்த வழக்கறிஞர் இரத்தினம் ஆகியோர் உரையாற்றினார்கள். நிறைவாக கழகத்...