Category: செய்திகள்

தமிழ்நாடு மாடல் வளர்ச்சி மாடல்

தமிழ்நாடு மாடல் வளர்ச்சி மாடல்

தேர்தல் கள ஆய்வுக்காக தமிழ்நாடு வந்திருந்த மூத்த ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் எக்ஸ் தளத்தில் இட்டிருக்கும் பதிவுகள் கவனம் பெற்றுள்ளன. “தமிழ்நாடு அரசியல் எப்போதுமே என்னை ஈர்த்திருக்கிறது. ஏனெனில் தமிழ்நாடு தனக்கென ஒரு தனி வழி அமைத்து, அதில் முன்னேறி வந்திருக்கிறது. இந்தியா கொண்டிருக்கும் பன்மைத்துவமே அதன் வலிமை. தமிழ்நாடு அதற்கு நல்ல உதாரணம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான பரந்த கூட்டணியை வீழ்த்துவது எளிதல்ல. யார் எதிர்க்கட்சி என்பதற்கு இங்கே போட்டி நடக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். மேலும், “ஒன்றிய பாஜக அரசின் ஜிஎஸ்டி, பணமதிப்பழிப்பு நடவடிக்கைகளால் கோவை 30% சிறு, குறு நிறுவனங்கள் மூடுவிழா கண்டுவிட்டன. தொழில் நிறுவனங்கள் வைத்திருந்த சிலர் இப்போது ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் மட்டுமே சிறிய அளவிலான ஆதாயம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டு களத்தை ஆய்வு செய்ததில் நான் புரிந்துகொண்ட விஷயம் இதுதான். குஜராத் மாடலைப் பற்றி பேசும் நாம், சமூகநீதி மற்றும்...

அமலாக்கத்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதா? மோடியின் அண்டப் புளுகு! ஆகாசப் புளுகு!

அமலாக்கத்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதா? மோடியின் அண்டப் புளுகு! ஆகாசப் புளுகு!

எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்கான ஆயுதமாக அமலாக்கத்துறையை மோடி அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு புதிதல்ல. சமீபத்தில் தந்தி தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் நெறியாளர் இதை கேள்வியாக வைத்திருந்தார். அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, அமலாக்கத்துறையை நாங்களா உருவாக்கினோம்? பணமோசடி தடுப்புச் சட்டத்தை (PMLA) நாங்களா கொண்டு வந்தோம்? அமலாக்கத்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு. சுதந்திரமாக அவர்களுடைய பணிகளை மேற்கொள்கிறார்கள். நாங்கள் அமலாக்கத்துறையை நிறுத்தவும் இல்லை, அனுப்பவும் இல்லை. அமலாக்கத்துறை சுமார் 7,000 வழக்குகள் பதிவு செய்திருக்கிறது. அதில் அரசியல் சார்பான வழக்குகள் 3 விழுக்காட்டுக்கும் குறைவுதான். காங்கிரஸ் ஆட்சியில் 35 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் 2,200 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். அமலாக்கத்துறையின் தரவுகள் அடிப்படையில் மோடியின் பேச்சு குறித்து சில கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது. இந்த PMLA சட்டமானது 2002ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில்தான் இயற்றப்பட்டது. சர்வதேச போதைப்பொருள்...

மணமகள் தேவை

மணமகள் தேவை

பெயர் : கார்த்திகேயன் வயது : 40 கல்வித் தகுதி : எம்.எஸ்.சி பணி : வெளிநாட்டில் தனியார் டெக்ஸ்டைல் நிறுவனம் (ஆண்டு வருமானம் ரூ.24-30 லட்சம்) தொடர்புக்கு : 98416 53200 பெரியார் முழக்கம் 28032024 இதழ்

பெரியாரை தாக்குவதா? முதலமைச்சர் கண்டனம்!

பெரியாரை தாக்குவதா? முதலமைச்சர் கண்டனம்!

சிறந்த பாடகர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் The Music Academy-ன் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது. இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள். திரு கிருஷ்ணா அவர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள். டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத...

ட்ரெண்டிங்கில் பெரியார்

ட்ரெண்டிங்கில் பெரியார்

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பன்றி உருவம் போல பெரியாரை சித்தரித்து சமூக வலைத்தளங்களில் ஒரு படம் பரப்பப்பட்டது. அந்த படத்தைப் பார்த்தால் பெரியாரியவாதிகளின் மனம் புண்படும், அதில் ஆனந்தமடையலாம் என்று கருதி எவரோ பரப்பியிருக்கிறார். ஆனால் நடந்ததோ வேறு. “இந்த படம் அழகாக இருக்கிறது, படத்தை வரைந்தவருக்கு பாராட்டுக்கள், பெரியார் இருந்திருந்தால் அவரும் நிச்சயம் பாராட்டியிருப்பார். ஆடு, மாடு, கோழி, சிங்கம், புலி போன்ற மற்ற விலங்குகளைப் போல பன்றியும் ஒரு விலங்கு. அந்த விலங்கைப் போல பெரியாரை சித்தரித்தால் அதில் என்ன அவமானம் இருக்கிறது? அப்படியானால் விஷ்ணுவின் வராக அவதாரமும் இழிவானது தானா?” என பெரியாரியவாதிகள் எழுப்பிய கேள்விகள் சமூக வலைத்தளங்களை 2 நாட்கள் ஆக்கிரமித்துவிட்டன. வாய்ப்பை ஏற்படுத்தியாவது பெரியாரை அவ்வப்போது டிரெண்டிங்கில் வைத்துவிடுகிறார்கள் கொள்கை எதிரிகள். “எனக்கு விளம்பரமே எனது எதிரிகள்தான்” என பெரியார் சொன்னது அவர் மறைந்து அரைநூற்றாண்டுகள் ஆகியும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது....

குஜராத் மாடலின் அவலத்தை பாரீர்!

குஜராத் மாடலின் அவலத்தை பாரீர்!

குஜராத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 41,632 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. திமுக எம்.பி.கள் தனுஷ் எம்.குமார், ஜி.செல்வம் ஆகியோர் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது. நாடு முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4.25 லட்சம் பேர், கடந்த 3 ஆண்டுகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குஜராத்தில் மட்டும் 3 ஆண்டுகளில் 41,632 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு குழந்தைகளின் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. கடந்த 2020-21 நிதியாண்டில் 9,606 குழந்தைகளும், 2021-22 நிதியாண்டில் 13,048 குழந்தைகளும், 2022-23 நிதியாண்டில் 18,978 குழந்தைகள் என ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு குஜராத்தில் இரட்டிப்பாகி வருகிறது. குஜராத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12 லட்சம் குழந்தைகள் பிறப்பதாக குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சி அதில் 30,000 குழந்தைகள் இறக்கும் அவலம் தொடர்வதாக குற்றம் சாட்டியுள்ளது. குஜராத்தில்...

உயர்நீதிமன்றங்களில் (2018 முதல் 2023 டிசம்பர் 02 வரை) 650 நீதிபதிகள் நியமனம்

உயர்நீதிமன்றங்களில் (2018 முதல் 2023 டிசம்பர் 02 வரை) 650 நீதிபதிகள் நியமனம்

உயர் ஜாதியினர் 75.69% (492 பேர்) ஓபிசி பிரிவினர் 11.7% (76 பேர்) எஸ்.சி பிரிவினர் 3.54% (23 பேர்) எஸ்.டி பிரிவினர் 1.54% (10 பேர்) சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்கள் – 5.54% (36 பேர்) எந்த பிரிவிலும் வராத நீதிபதிகள் எண்ணிக்கை – 13 (பேர்) உயர்நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் – 14.1% (111 பேர்) உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் – 8.82% (03 பேர்) அதிக பெண் நீதிபதிகளைக் கொண்ட உயர்நீதிமன்றங்கள் பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றம் – 12 பேர் சென்னை உயர்நீதிமன்றம் – 12 பேர் மும்பை உயர்நீதிமன்றம் – 11 பேர் Source : RS/MINISTRY OF LAW (TILL DEC 2023) பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு இராமதாஸ் கண்டனம்

பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு இராமதாஸ் கண்டனம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக அநீதிக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவற்றின் பயனாக ஏற்பட்ட சமூக மாற்றங்கள் ஆகியவற்றை தொகுத்து ‘பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற தலைப்பில் நூல் வெளியிட்டதற்காக இரா.சுப்பிரமணி என்ற பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அவர், இதழியல் துறை இணைப் பேராசிரியராகவும், பெரியார் இருக்கையின் பொறுப்பு இயக்குநராகவும் உள்ளார். மக்கள் நலன் மற்றும் சமத்துவத்தை ஏற்படுத்தவே பெரியாரின் போராட்ட வரலாறுகளை தொகுத்திருக்கிறார். அதை பாராட்டுவதற்கு மாறாக அவரை பழிவாங்க பல்கலைக்கழக நிர்வாகம் துடிப்பது தவறு. இது தந்தை பெரியாருக்கு எதிரானது. பெரியார் பெயரிலான பல்கலை நிர்வாகிகளாக இருந்து கொண்டு, பெரியாருக்கு எதிராக செயல்படும் இவர்கள் யாருடையாக கருவிகளாக இருப்பார்கள் என்ற ஐயம் எழுகிறது. எனவே பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அந்த பல்கலைக்கழகத்திற்கு...

பெரியார் குறித்து நூல் வெளியிட்ட பேராசிரியர் மீது நடவடிக்கையாம்! எல்லை மீறுகிறார் ஆர்.எஸ்.எஸ் துணைவேந்தர்

பெரியார் குறித்து நூல் வெளியிட்ட பேராசிரியர் மீது நடவடிக்கையாம்! எல்லை மீறுகிறார் ஆர்.எஸ்.எஸ் துணைவேந்தர்

‘பெரியாரின் போர்க்களங்கள்’ ‘மெக்காலே பழமைவாதக் கல்வியின் பகைவன்’ என்ற நூல்களை எழுதியதற்காக சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் சுப்பிரமணிக்கு பல்கலை துணைவேந்தர் ‘மெமோ’ அனுப்பியுள்ளார். பெரியார் குறித்து நூல் எழுதியதற்காக, சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியருக்கு மெமோ வழங்கியதற்கு, பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. சேலம் உள்பட 4 மாவட்டங்களைச் சேர்ந்த கலை, அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சமயம் சார்ந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு ஆதரவாகவும் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், பெரியார் குறித்து நூல் எழுதியதற்காக, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம், அங்கு பணிபுரிந்து வரும் பேராசிரியருக்கு மெமோ வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை இணை பேராசிரியரான சுப்பிரமணி, அங்குள்ள பெரியார்,...

4 மாநில தேர்தல் மொத்த வாக்குகள் விபரம்

4 மாநில தேர்தல் மொத்த வாக்குகள் விபரம்

மத்திய பிரதேசம் : காங்கிரஸ் – 1,75,64,353 பாஜக – 2,11,13,278 ராஜஸ்தான் :  காங்கிரஸ் – 1,56,66,731 பாஜக – 1,65,23,568 தெலுங்கானா : காங்கிரஸ் – 92,35,792 பாஜக – 32,57,511 சத்தீஸ்கர் : காங்கிரஸ் – 66,02,586 பாஜக – 72,34,968 வாக்கு சதவீதம் சத்தீஸ்கர் : காங்கிரஸ் 42.23% பாஜக 46.27% மத்திய பிரதேசம் : காங்கிரஸ் 40.40% பாஜக 48.55% ராஜஸ்தான் : காங்கிரஸ் 39.53% பாஜக 41.69% தெலுங்கானா : காங்கிரஸ் 39.40% பாஜக 13.90%. காங்கிரஸ் – 4.91 கோடி வாக்குகள். பாஜக   – 4.8 கோடி வாக்குகள். நாடு காங்கிரசை விரும்புகிறது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது

புலியூரில் ‘மாவீரர் நாள்’

புலியூரில் ‘மாவீரர் நாள்’

சேலம் : கொளத்தூர் ஈழ ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் “மாவீரர் நாள்” நிகழ்ச்சி 27.11.2023 திங்கள் மாலை 5.30 மணியளவில் சேலம் மாவட்டம் கொளத்தூர் புலியூர் பிரிவில் அமைந்துள்ள பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் கடைப்பிடி க்கப்பட்டது. நிகழ்விற்கு தார்க்காடு செ. தர்மலிங்கம் தலைமை தாங்கினார். புலியூரைச் சேர்ந்த தோழர்கள் சரவணன், வாசு, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொளத்தூர் திவிக நகரச் செயலாளர் அறிவுச்செல்வன் வரவேற்புரையாற்றினர். மாலை 6.05 மணிக்கு தமிழீழ விடுதலைக்காக போர்க்களத்தில் வீரச் சாவடைந்த விடுதலைப் புலி மாவீரர்கள் – பொதுமக்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் “மாவீரர் பாடல்” ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாவீரர் பாடல் ஒளிபரப்பிற்கு பிறகு “மாவீரர் உரை” நிகழ்த்தும் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம இளங்கோவன், மூத்த வழக்கறிஞர் இரத்தினம் ஆகியோர் உரையாற்றினார்கள். நிறைவாக கழகத்...

“இஸ்ரேல் முதல் பாலஸ்தீனம்” வரை நூல் வெளியிட்ட கழகத் தலைவர்

“இஸ்ரேல் முதல் பாலஸ்தீனம்” வரை நூல் வெளியிட்ட கழகத் தலைவர்

எழுத்தாளர் விஜயபாஸ்கர் புதிதாக எழுதியுள்ள “பாலஸ்தீனம் முதல் இஸ்ரேல் வரை – ஒரு வரலாற்றுச் சுருக்கம்” நூலை சென்னை புத்தகக் காட்சியில் பெரியார் புக்ஸ்.காம் அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட கருப்புப் பிரதிகள் நீலகண்டன், பத்திரிகையாளர் நீரை.மகேந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். எழுத்தாளர் விஜயபாஸ்கர் “உயர்ஜாதியினருக்கு EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?” என்ற நூலை தொகுத்து  கவனம் ஈர்த்தவர். நிகழ்வில் அற்புதம்மாள், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ர.பிரகாசு, அன்னூர் விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 11012024 இதழ்

RSS-அய் அச்சுறுத்தும் 5M

RSS-அய் அச்சுறுத்தும் 5M

சங் பரிவார் கும்பல்கள் தங்களது கொள்கை எதிரிகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது இந்நூல். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கருத்தரங்கு ஒன்றில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசிய உரையுடன், தகவல்கள் சேர்க்கப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளது. சென்னை புத்தகக் காட்சியில் கருஞ்சட்டை பதிப்பகம் அரங்கு எண் 332-இல் இந்நூல் கிடைக்கும். கழக வெளியீடுகள் கிடைக்குமிடம் சென்னை புத்தகக் காட்சியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீடுகள் அனைத்தும் பெரியார் புக்ஸ்.காம் அரங்கு எண் 88-இல் கிடைக்கும். பெரியார் முழக்கம் 11012024 இதழ்

2014ஆம் ஆண்டில் “முழக்கம்” உமாபதி மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட வழக்கு! குற்றமிழைத்த போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2014ஆம் ஆண்டில் “முழக்கம்” உமாபதி மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட வழக்கு! குற்றமிழைத்த போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு பிராபகரன் அவர்களின் 60-வது பிறந்தநாளையொட்டி, 2014-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் பகுதி கழகத் தோழர்களும், பொதுமக்களும் இணைந்து கொண்டாட்ட நிகழ்வுக்கு தயாராகினர்.  E-4 அபிராமபுர காவல் நிலைய அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மயிலாப்பூர் பகுதி மக்கள் காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனர். தகவல் அறிந்து செய்தி சேகரிக்க அங்கு சென்ற “பெரியார் முழக்கம்” நிருபர் உமாபதி. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் போலீசார் அத்துமீறி நடந்துகொண்டதை தன்னுடைய கைபேசியில் படம் பிடித்துக்கொண்டிருந்தார். காவல் நிலைய அதிகாரிகள் இளையராஜா, வடிவேலு, கலைச்செல்வி ஆகியோர் கைபேசியை பிடுங்க முற்பட்டனர். பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொண்ட போலீசாரின் அராஜகப் போக்கை நிருபர் உமாபதி கேள்வி கேட்டார். அப்போது நிருபர் என்றும் பாராமல் முழக்கம் உமாபதியை போலீசார் லத்தியால் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். ஆபாச வார்த்தைகளால் திட்டியபடி, காவல்நிலையத்திற்கு தூக்கிச்சென்று அடித்துத் துன்புறுத்தி...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம்  மாநாட்டு உரை நூலாக வெளி வந்து விட்டது

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் மாநாட்டு உரை நூலாக வெளி வந்து விட்டது

சேலம் மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்திய உரை; சென்னையில் கழகம் நடத்திய தமிழர் திருநாள் விழாவில் நிகழ்த்திய உரைகளை இணைத்து “இது தமிழ்நாடு!” எனும் தலைப்பில் நூலாக கழகம் வெளியிட்டுள்ளது. கடந்த மே 7ஆம் தேதி திருவல்லிக்கேணி பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி நூலையும் மாநாட்டு செய்திகள் அடங்கிய “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழையும் அமைச்சரிடம் நேரில் வழங்கினார். நூல் விலை : ரூ.30/- நூல் தேவைப்படுவோர் கழக தலைமை நிலையத்தை தொடர்பு கொள்ளவும். தொடர்பு எண் :  + 91 98416 53200 / +91 8973341377 பெரியார் முழக்கம் 11052023 இதழ்

‘நிமிர்வோம்’ புதிய வெளியீடுகள் வாங்குவீர்-படிப்பீர்-பரப்புவீர்

‘நிமிர்வோம்’ புதிய வெளியீடுகள் வாங்குவீர்-படிப்பீர்-பரப்புவீர்

நமக்கான அடையாளம் “திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு கழகம் நடத்தும் 400 தெருமுனைக் கூட்டங்கள், 11 மண்டல மாநாடுகளில் பொது மக்களிடம் பரப்ப கழகத்தின் வெளியீடுகள்…. 1)         பறிக்கப்பட்ட மாநில உரிமைகள்(விடுதலை இராசேந்திரன்) – ரூ. 100 2)         மோடி ஆட்சி ‘இந்து’க்களுக்கு என்ன செய்தது? (ர.பிரகாசு) – ரூ. 30 3)         50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழ்நாடு (ஜெயரஞ்சன்)         – ரூ. 30 4)         மக்களை குழப்பும் ‘போலி அறிவியல்’(எட்வின் பிரபாகரன்) -ரூ. 60 5)         தில்லை தீட்சதர்கள் – முறைகேடுகள்                 – ரூ.  30 6)         பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்(விடுதலை இராசேந்திரன்)       – ரூ. 60 7)         திராவிடர் இயக்கத்தின் சுருக்கமான வரலாறு (1912 முதல் 1973 வரை)      – ரூ. 60 8)         கீழ் வெண்மணியும் பெரியாரும்         – ரூ. 60 9)...

கழகத்தின் புதிய வெளியீடு (1) ‘மோடி ஆட்சி இந்துக்களுக்கு என்ன செய்தது?’

கழகத்தின் புதிய வெளியீடு (1) ‘மோடி ஆட்சி இந்துக்களுக்கு என்ன செய்தது?’

பரப்புரைப் பயணத்துக்கான 15 வெளியீடுகளில் ஒன்று “மோடி ஆட்சி இந்துக்களுக்கு என்ன செய்தது?” பெரியாரியவாதியும் ஊடக வியலாளருமான ர. பிரகாஷ் மிகச் சிறப்பாக ஏராளமான தகவல்கள் தரவுகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மக்களை எப்படி ஏமாற்று கிறார்கள்? ஜி.எஸ்.டி. கொள்கையால் மாநிலங்கள் வருவாய் எப்படி சுரண்டப் படுகின்றன? ஏர் இந்தியா, எல்.அய்.சி. பங்கு விற்பனைக்கு ஒன்றிய ஆட்சி கூறும் மக்களை ஏமாற்றும் போலி வாதங்கள் என்ன? அதில் உண்மை இருக்கிறதா? பொதுத் துறை நிறுவனங்கள் ஏன் தனியாருக்கு தாரை வார்க்கப் படுகிறது? பயனடைவது யார்? எப்படி விதிமீறல்கள் நடக்கின்றன? கார்ப்பரேட்டுகளுக்கு மக்கள் வரிப்பணம் கொட்டி அழப்படுவதோடு வங்கிகள் கடன்களை வாரி வாரிக் கொடுத்து வரும் அதிர்ச்சித் தகவல்கள். கார்ப்பரேட் சேவைகளுக்காக பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் பரிசுகள்; பரிவர்த்தனைகள் என்ன? ஊழல் எதிர்ப்புக் கட்சியாக காட்டிக் கொள்ள விரும்பும் பா.ஜ.க.வின் போலி முகமூடியைக் கிழித்துக் காட்டும் ‘தேர்தல் பத்திரங்களின்’ கதை!...

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

கருஞ்சட்டைப் பதிப்பகம் தொடர்ந்து திராவிடர் இயக்கக் கொள்கைகளைப் பரப்பும் நூல்களை வெளியிட்டு வருகிறது. அண்மையில் வெளி வந்துள்ள புதிய வெளியீடுகள்: ஆதிப் பெண்ணின் அடிதடி – ஓவியா குறளும் கீதையும் –  அருள்மொழி மற்றும் சுப. வீரபாண்டியன் திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு – வெற்றிச் செல்வன் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் – பெரியார் சரவணன் ஏன், பெரியார் மதங்களின் விரோதி? – வெற்றிச் செல்வன் – உதய குமார் இடைவேளை – சுப. வீரபாண்டியன் (நாவல்) ஆளுமைகள் சாரதாதேவி, குண. சந்திரசேகர், இக்லாஸ் உசேன்.   தொடர்புக்கு : 9840336688 பெரியார் முழக்கம் 03022022 இதழ்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்புகள் அய்ந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டது

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்புகள் அய்ந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டது

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏட்டின் ஆசிரியர் விடுதலை இராசேந்திரன் எழுதிய தலையங்களின் நான்கு தொகுப்புகளும் கோடங்குடி மாரிமுத்து என்ற புனைப் பெயரில் அவர் எழுதிய நய்யாண்டி எழுத்துகள் ஒரு தொகுதியாகவும் 5 தொகுதிகளாக வெளி வந்துள்ளது. பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24ஆம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை நிருபர்கள் சங்க அரங்கில் நடந்த நிகழ்வுக்கு தென்சென்னை மாவட்டக் கழக செயலாளர் இரா. உமாபதி வரவேற் புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில கொள்கை வளர்ச்சிக் குழுத் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் நூல்களை வெளியிட தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி பெற்றுக் கொண்டார். தொகுப்புகள் பற்றி மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சித் தோழர் வாலாஜா வல்லவன் அறிமுக உரையாற்றினார். விடுதலை இராசேந்திரன் ஏற்புரை நிகழ்த்தினார். தோழர்கள் மேடைக்கு வந்து தொகுப்புகளை திராவிடர் விடுதலைக் கழகத்...

நூல் வெளியீட்டு விழாவில் ஆ. ராசா முழக்கம் காவிகளின் இந்துத்துவ அரசியலை முறிக்கும் ஒரே மாமருந்து பெரியார் மட்டுமே!

நூல் வெளியீட்டு விழாவில் ஆ. ராசா முழக்கம் காவிகளின் இந்துத்துவ அரசியலை முறிக்கும் ஒரே மாமருந்து பெரியார் மட்டுமே!

கருஞ்சட்டைப் பதிப்பகம் சார்பில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், பெரியார் ஒருவர் மட்டுமே நமக்கு வழி காட்டுகிறார். அவரது தத்துவங் களால் மட்டுமே காவி மயமாக்கும் முயற்சியை முறியடிக்க முடியும் என்று குறிப்பிட்டார். நாட்டையே காவி மயமாக்கிட வேண்டும் என்று தீவிரமாக அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வரும் ஒன்றிய ஆட்சியை வீழ்த்த நம்மிடம் உள்ள ஒரே மாமருந்து பெரியார் மட்டும் தான். அம்பேத்கரை கூறலாம் என்றால் அவரையும் ‘இந்துத்துவா’ தனக்குள் இழுத்துக் கொண்டு ‘இந்துத்துவா அம்பேத்கர்’ என்று பேசி வருகிறது. பெரியார் என்ற நெருப்பை மட்டும் தான் அவர்களால் பொட்டலம் கட்ட முடியவில்லை என்று நாடாளு மன்ற உறுப்பினரும் தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ. ராசா குறிப்பிட்டார். கருஞ்சட்டைப் பதிப்பகம் வெளியிட்டுள்ள மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வு சென்னை இராஜரத்தினம்  முத்தமிழ்ப் பேரவை அரங்கில் டிச.4, 2021 மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. திராவிடர்...

‘ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும்’ – மாவீரர் நாளில் நூல் வெளியீடு

‘ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும்’ – மாவீரர் நாளில் நூல் வெளியீடு

புலியூரில் நடந்த மாவீரர் நாளில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய ‘ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும்’ நூல் வெளி யீட்டு நிகழ்வு நடைபெற்றது. தமிழர் வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி. வேல் முருகன் வெளியிட கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பெற்றுக் கொண்டார். ‘நன்செய் பிரசுரம்’ குறைந்த விலையில் ரூ.10/-க்கு நூலை வெளியிட்டுள்ளது. நிகழ்வுக்கு 800 பிரதிகள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. அனைத்து நூல்களுமே விற்றுத் தீர்ந்து விட்டன. வெளியீட்டாளர் கவிஞர் தம்பி நிகழ்வில் பங்கேற்றார். நூலைப் பெற : 9566331195 / 7373684049 பெரியார் முழக்கம் 02122021 இதழ்

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

சீமான், மணியரசன் நடத்தும் அமைப்புகள், தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் பெரியார் எதிர்ப்பையும் மத அடையாளங்களையும் உயர்த்திப் பிடிப்பதை மறுத்து சென்னையில் தமிழ்த் தேச நடுவம் நடத்திய கருத்தரங்கில் கருத்தாளர்கள் நிகழ்த்திய உரையை கருஞ்சட்டைப் பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறது. திராவிடம் யாருக்கு சொந்தம்? – பேரா. கருணானந்தன், விலை : ரூ.20/- திராவிடத் தமிழ்த் தேசியம் – வாலாஜா வல்லவன், விலை : ரூ.20/- பச்சைத் துரோகம் – ஆழி செந்தில்நாதன், விலை : ரூ.10/- தமிழ்த் தேசிய அரசியலை சிதைக்கும் பார்ப்பன கங்காணிகள் – பொழிலன், விலை : ரூ.20/- இது தவிர மேலும் இரு நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. கருவறை நுழைவும் சாதி ஒழிப்பும் – முனைவர் வெ. சிவப்பிரகாசம், விலை : ரூ.130/- நீங்கள் எந்தப் பக்கம்? – சுப. வீரபாண்டியன், விலை : ரூ.70/- கிடைக்குமிடம் : 120, என்.டி.ஆர். தெரு, ரெங்கராஜன்புரம், கோடம்பாக்கம், சென்னை-24. தொடர்புக்கு...

0

சேஷசமுத்திரம் ஜாதிவெறியர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் மீது நடந்த ஜாதிவெறித் தாக்குதலை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட சார்பில் 24.08.2014 மாலை 3.00 மணிக்கு சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஜாதி வெறியர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும் காவல்துறையை நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. 50க்கும் அதிகமான தோழர்களை காவல்துறை கைது செய்து மாலை விடுவித்தது.

0

சமகால வாழ்வியலும் ஜாதிய வண்கொடுமைகளும் – கருத்தரங்கம்

23.08.2015 மாலை 5.30 மணியளவில் திராவிட விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக “சமகால வாழ்வியலும் ஜாதிய வண்கொடுமைகளும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்களில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். சிறப்புரை தோழர் மதிமாறன் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பல்வேறு கருத்துரைகளை பதிவு செய்தனர். இரவு 9 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தது கருத்தரங்கின் காணொளி விரைவில் பதிவேற்றப்படும்

0

தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல்

20-8-2015 அன்று மாலை 4-00 மணிக்கு, தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. முன்னதாக தோழர் க.மதன் படத்திறப்பு விழா நடைபெற்றது. கழக கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் மற்றும் இயக்க தோழர்கள் கழக பணிகளை மேற்கொண்டு செல்ல ஆலோசனை வழங்கினர்.

0

விருதுநகர் மாவட்டக் கலந்துரையாடல்

20-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு, விருதுநகர் , பாண்டியன் நகரில் உள்ள தோழர் கணேசமூர்த்தியின் இல்லத்தில், மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

0

புதுச்சேரி பெரியாரியல் பயிற்சி வகுப்பு

16-8-2015 அன்று காலை முதல் மாலை வரை புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ‘ பெரியாரியல் பயிற்சி வகுப்பு, அரியாங்குப்பத்தை அடுத்த அலுத்துவேலியில் உள்ள தோழர் பழனிராசா தோட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும்  தென்னந்தோப்பில்  நடந்தது. அறிமுக உரையை ஆற்றிய மாநிலக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் மாநிலக் கழகம் எடுத்த முடிவை ஒட்டி மாதந்தோறும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பெரியாரியல் பயிற்சி வகுப்பின் தொடக்க நிகழ்வே இது என்று குறிப்பிட்டார். கழகத் தோழர்கள் யார் எந்தவகையான கேள்விகளை  கேட்டாலும் உடனே பதிலளிக்கும் அளவுக்கு கொள்கைத் தெளிவு உள்ளவர்களாக வளர்த்தெடுக்கும் முயற்சியே இது என்றார். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “பெரியார் என்றொரு மனிதர்” என்ற தலைப்பில் பெரியாரின் இளமைக் காலம்யற்சி முதற்கொண்டு அவர் பெரும் மானுடநேயராக, ஜாதி ஒழிப்பு, பெண்ணூரிமைப் போராளியாகப் பரிணமித்ததற்கான பின்புலம் போன்றவற்றை விளக்கி 11-00 மணி முதல் நண்பகல் 2-00 மணிவரை விளக்கினார். மதிய...

0

ஜாதி வெறியன் யுவராஜை உடனே கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு 17082015

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் கோகுல்ராஜ். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒத்தகடை பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி. இருவரும் ஒரே கல்லூரியில் படித்து பழகியுள்ளனர். கடந்த 50 நாட்களுக்கு முன்னர் பொறியாளர் கோகுல்ராஜூம், சுவாதியும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு இருவரும் வந்த போது அவர்களை ஜாதியின் பெயரால் பிரிக்கும் நோக்கத்தில் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை என்கிற ஜாதி அமைப்பின் நிறுவனர் யுவராஜ் என்பவர் தலைமையில் 20 க்கு மேற்பட்ட ரவுடிகள் கோகுல்ராஜ் சுவாதி ஆகியோரைப் பிடித்து அவர்களின் ஜாதிகளைப் பற்றி விசாரித்த பின்னர் சுவாதியை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்கிற காரணத்தினால் ஜாதிய வெறியோடு பொறியாளர் கோகுல் ராஜை கடத்தி சென்று அவரை கொலை செய்து தலையை துண்டித்து பள்ளி பாளையம் ரயில் மார்க்கத்தில் தொட்டிபாளையம் என்ற பகுதியில் இரயில்வே தண்டவாளத்தில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றனர். தமிழக முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த...

0

விழுப்புரம் மாவட்டக் கலந்துரையாடல்

விழுப்புரம் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், 14-8-2015 அன்று நண்பகல் 12-00 மணிக்கு, சங்கராபுரம், வாசவி அரங்கில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.  

0

கடலூர் மாவட்டக் கலந்துரையாடல்

13-8-2015 அன்று மாலை 6-00 மணிக்கு, கடலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், கம்மாபுரம், திருச்சிக்காரர் மண்டபத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப்  பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னினையிலும் நடைபெற்றது.

0

மூத்த பெரியாரியர் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் சந்திப்பு

13-8-2015 அன்று நண்பகல் 2-00 மணிக்கு, மூத்த பெரியாரியரும், கீழ்வெண்மணி கோபாலகிருஷ்ண நாயுடு கொலை வழக்கில் கைதான 11 திராவிடர்க் கழகத் தோழர்களுக்கான வழக்கை முன்னின்று நடத்தியவரும், குடிதாங்கி நிகழ்வில் மையப் புள்ளியாய் நின்று இயங்கியவரும் ஆன ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் உடல் நலிவுற்றிருக்கிற செய்தி அறிந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழக முன்னணித் தோழரும்,  எழுத்தாளருமான தஞ்சை பசு. கவுதமன் ஆகியோர் கும்பகோனத்தில், அம்பேத்கர் வளாகம், தந்தை பெரியார் இல்லத்தில்  சந்தித்தனர். அவரிடம் கீழ்வெண்மணி கொலை, குடிதாங்கி நிகழ்வு போன்றவற்றில் உள்ள அய்யங்களைக் கேட்டறிந்ததோடு, நிகழ்கால அரசியல் குறித்தும் இரண்டு மணி நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றனர்.

0

நாகை மாவட்டக் கலந்துரையாடல்

கழகத்தின் நாகை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், 13-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு,  மயிலாடுதுறை, ROA அரங்கத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.

0

திருவாரூர் மாவட்டக் கலந்துரையாடல்

12-8-2015 அன்று மாலை 6-00 மணிக்கு கழகத்தின் திருவாரூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், மன்னார்குடி  மதர்சா அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

0

தஞ்சை மாவட்டக் கலந்துரையாடல்

கழகத்தின் தஞ்சை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 12-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு பட்டுக்கோட்டை, அரசு பிளாசா அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

0

தமிழக காவிரி விவசாயிகள் சங்க கொடியை கழக தலைவர் அறிமுகம் செய்தார்

தஞ்சையில் 11.08.2015 திகதி நடைபெற்ற விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்ற திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர், தோழர் கொளத்தூர் மணி,தி.மு.கவின் செய்தி தொடர்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கேஎ.எஸ். இலங்கோவன், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எஸ்.திநாவுகரசர்,தமிழ் மாநில காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர். ரெங்கராஜன், தே.மு.தி.கவின் மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் பால அருட்செல்வன் ஆகியோரும், பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்களும் உரையாற்றினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்களை ஆதரித்தும், விளக்கியும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து, அந்த மாநாட்டின் நெறியாளரும், அந்த இயக்கத்தின் தலைவருமான தோழர் பி.ஆர்.பாண்டியன், அந்த இயக்கத்தின் கொடியினை அறிமுகப்படுத்துகின்ற பொறுப்பினை தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடம் வழங்கினார். அப்போது தோழர் பி.ஆர்.பாண்டியன் , ” விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டிற்கு எல்லா கட்சிகளுடைய தலைவர்களையும் அழைத்திருந்தேன். அவர்களில் பெரும்பாலோர் வந்திருந்தனர். வர இயலாதவர்கள் தங்களின் பிரதிநிதிகளை அனுப்பி பங்கேற்றனர். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு...

0

தொடரும் இனப்படுகொலைக்கு… தமிழீழம் ஒன்றே தீர்வு – இன எழுச்சிக் கருத்தரங்கம்

9-8-2015 ஞாயிறு, மாலை 5-30 மணிக்கு, தமிழீழ விடுதலைக்கான மாணவர்-இளைஞர் கூட்டியக்கத்தின் சார்பாக ” தொடரும் இனப்படுகொலைக்கு …… தமிழீழம் ஒன்றே தீர்வு” எனும் முழக்கத்தை முன்வைத்து, இன எழுச்சிக் கருத்தரங்கம்,சேலம் விஜயராகவாச்சாரி நினைவு அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் இளைஞர் இயக்கத்தின் தலைவர் ஜெகதீஷ் தலைமை ஏற்றார். தமிழ் இளைஞர் மற்றும் மாணவர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வீர.பிரபாகரன் முன்னிலை வகித்தார். நிகழ்வில் பல்வேறு மாணவர் இயக்கங்களின் பிரதிநிதிகள் உரையாற்றினர். சேலம் வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபன், கோவை வழக்கறிஞர் ப.சு. சிவசாமித் தமிழன், நோர்வே முனைவர் விஜய் அசோகன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை. கு. இராமகிருட்டிணன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் ஏராளமான மாணவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

0

சேலம் (கிழக்கு) மாவட்டக் கலந்துரையாடல்

சேலத்தை அடுத்த கருப்பூரில் உள்ள மாவட்டத் தலைவர் தோழர் க. சக்திவேல் அவர்களின் பண்ணை இல்லத்தில் 5-8-2015 பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெற்றது

0

பெரம்பலூர் மாவட்டக் கலந்துரையாடல்

7-8-2015 அன்று, பெரம்பலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் அக்ரி ஆறுமுகம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது

0

நாமக்கல் மாவட்டக் கலந்துரையாடல்

திருச்செங்கோடு, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனக் கட்டிடத்தில் நாமக்கல் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 6-8-15 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது

0

திருச்சி மாவட்டக் கலந்துரையாடல்

திருச்சி, உறையூரில் உள்ள “ Innovators Group of Community College “-இன் கூட்ட அரங்கில் 7-8-2015 அன்று பிற்பகல் 4-00 மணிக்கு நடைபெற்றது.

0

சேலம் (மேற்கு) மாவட்ட கலந்துரையாடல்

சேலம் ( மேற்கு ) மாவட்டக் கலந்துரையாடல், மேட்டூர் தாய்த்தமிழ்ப் பள்ளியில் 05-08-2015 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடை பெற்றது.

0

சிறப்புக் கட்டுரை – அடக்குமுறை சட்டங்களை முறியடிப்போம்!

அடக்குமுறை சட்டங்களை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தினார். அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்புச் சார்பில் இந்துத்துவ மக்கள் விரோத அரசின் அடக்குமுறைக்கு எதிராகக் கண்டனக் கருத்தரங்கம் கோவை அண்ணா மலை அரங்கில் 30.7.2015. அரங்க. குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகம்) தலைமையில் நடந்தது. கருத்தரங்கில், தமிழகத்தில் காவல் துறை புதிதாகப் பயன்படுத்தத் தொடங்கி யிருக்கும் மற்றொரு அடக்குமுறை சட்டமான ‘சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்துக்கு (Unlaw – ful Activities( Prevention ) Act – UPPA) கடும் எதிர்ப்பு தெரிவித்து தோழர்கள் பலரும் உரையாற்றினர். ‘தடா’, ‘பொடா’ சட்டங்களைப்போல் இதுவும் ஒரு கொடூரமான அடக்குமுறை சட்டமாகும். இந்த சட்டங்கள் முறைகேடாகவே பயன் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பொடா சட்டத்தை நீக்கிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, இந்தச் சட்டத்தில் இடம் பெற்றிருந்த...

0

மாண்டொழிக மரணதண்டனை – பொதுக்கூட்டத்திற்கு திடீர் அனுமதி மறுப்பு

திராவிடர் விடுதலைக்கழக பிரச்சாரப் பொதுக்கூட்டத்திற்கு தடை மன்னார்குடியில் திராவிடர் விடுதலைக் கழக பிரச்சாரப்பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்திய தண்டனை சட்டத்திலிருந்து மரண தண்டனை பிரிவை நீக்க வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடியில் இன்று மாலை பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூடத்தில் திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் காளிதாசு, மதிமுக தலைமை கழக பேச்சாளர் விடுதலை வேந்தன் ஆகியோர் பேசுவதாக இருந்தது. இந்த கூட்டத்திற்கு ஏற்கனவே காவல்துறையில் முறையாக அனுமதி பெற்றதன் அடிப்படையில் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிலையில் திடீரென மன்னார்குடி காவல்துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும் இக்கூட்டம் நடைபெற்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கூறி நேற்று (2ம் தேதி) நள்ளிரவு 11 மணிக்கு அனுமதி மறுத்து கடிதம் கொடுத்தனர். இதுபற்றி திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் காளிதாசு கூறுகையில் மன்னார்குடியில்...

0

தாரமங்கலத்தில் ” உஷாரய்யா, உஷாரு .. “ என்னும் மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் குறுந்தகடு வெளியீடு

1-8-2015 சனிக்கிழமை மாலை 5-00 மணியளவில், சேலம் மாவட்டம், தாரமங்கலம் அங்காள பரமேஸ்வரி சமுதாயக் கூடத்தில், ” உஷாரய்யா, உஷாரு .. “ என்னும் மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் குறும்படத் திரையிடலும், குறுந்தகடு வெளியீடும் நடந்தது. தோழர் கோகுலக்கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். குறும்படத்தை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, தாரமங்கலம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சின்னாமி பெற்றுக் கொண்டார்.கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கவிஞர் அ. முத்துசாமி, மேட்டூர் முல்லைவேந்தன் மற்றும் பல்துறை சான்றோர் பாராட்டுரைக்குப் பின்னர், திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பாராட்டுரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும், கழகத் தோழர்களும் கலந்துகொண்டனர்.

0

தந்தை பெரியார் சிலையை மறைத்து ஜாதிக்கட்சியின் கொடி நட முயற்சி; கழக செயல்வீரர்கள் பதிலடி

  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலையை இழிவுபடுத்தும் நோக்கோடு சிலைக்கு முன்பாக கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி சார்பில் அவர்களின் கொடிமரம் நடுவதற்கு முயற்சிகள் நடந்தது. செய்தியறிந்த நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக செயலாளர் வைரம் தடுக்க முயன்றார். காவல்துறை தலையிட்டு இருதரப்பினரையும் கலைத்தனர். மீண்டும் கழகம் சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட அதை காவல்துறை வாங்க மறுத்தது. பின்பு திவிக தோழர்கள் சதீசு, பிரகாசு, கார்த்தி, நித்தியானந்தம், மாணிக்கம் மற்றும் ஆதித்தமிழர் பேரவையின் மாநில கொள்கைபரப்பு துணைச்செயலாளர் செல்வவிள்ளாலன் அவர்களும், மாவட்ட செயலாளரோடு மதியம் 2.00 மணிக்கு பெரியார் சிலைக்கு முன் திரண்டு ஜாதிவெறியர்களின் கொடிமரத்திற்கான பீடத்தை இடித்து நொறுக்கினார்கள். இச்சம்பவத்தை தொடர்ந்து தோழர்கள் மீது வழக்கு பதிவுசெய்ய வலியுறுத்தி காவல்நிலையம் விரைந்தனர் கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியினர்.