பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்? தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்று பரப்புரை!
சென்னை: 18/3/25 செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம், உத்திரமேரூர் பேருந்து நிலையம், வந்தவாசி பழைய பேருந்து நிலையம், செய்யாறு – ஆரணி கூட்டுச் சாலை ஆகிய இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. கருத்துரையாற்றிய தோழர்கள்: இரா. உமாபதி, ரவிபாரதி, சுகுமார், ம.கி. எட்வின் பிரபாகரன், காஞ்சி அமுதன் (தமிழ் உரிமை கூட்டமைப்பு), அருண் கோமதி, திலகவதி (மக்கள் அதிகாரம்) ஆகியோர். பொன்ராஜ் – வீரமணி – கார்மேகம் கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அமீன் (தமுமுக), அ.வெ.முரளி (திக), ஆதித்ய கரிகாலன் ஆகியோர் உணவு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆதித்ய கரிகாலன் தங்கும் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார். சுகுமாறன், குமார், சூர்யா, கோபி, இரண்யா, வீரா, அசோக், முரளி, அருண் கோமதி, அருண் (இளைஞரணி) ஆகியோர் கலந்து கொண்டனர். 19/3/25 மதுராந்தகம் பேருந்து நிலையம், சோத்துப்பாக்கம் சந்திப்பு, திண்டிவனம் காந்தி சிலை, மயிலம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சென்னை அணியின் தெருமுனைக்...