Category: புதுச்சேரி

புதுவை மாநில திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் மீதான மற்றொரு கிரிமினல் வழக்கு ரத்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுவை மாநில திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் மீதான மற்றொரு கிரிமினல் வழக்கு ரத்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுவை மாநில திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் மீதான மற்றொரு கிரிமினல் வழக்கு ரத்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. —————————————- கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைப்புலிகள் மற்றும் தமிழீழத்திற்கு ஆதரவாகவும்  காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு  எதிராகவும் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் பகுதியில் பொதுமக்களுக்கு யிடுதலைப்புலிகளுக்கும்,  ஈழத்தமிழர்களுக்கும் காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தை  விளக்கி காங்கிரசுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதை விளக்கும்  துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்ததாக கூறி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் உள்ளிட்ட மூவர் மீது அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் கட்சிகளுக்கிடையே பிளவு ஏற்படுதல் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கினை எதிர்த்து லோகு அய்யப்பன் உட்பட மூவரும் தங்கள் மீதுள்ள குற்ற வழக்கிளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்...

புதுச்சேரி திவிக தலைவர் தோழர் லோகு அய்யப்பன் உள்ளிட்ட 91 பேர் மீதான வழக்கு ரத்து. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

புதுச்சேரி திவிக தலைவர் தோழர் லோகு அய்யப்பன் உள்ளிட்ட 91 பேர் மீதான வழக்கு ரத்து. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

லோகுஅய்யப்பன் உள்ளிட்ட 91 பேர் மீதான வழக்கு ரத்து. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பாண்டிசேரி திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு அய்யப்பன் உ ள்ளிட்ட 91 பேர் மீது தொடரப்பட்ட கொலை முயற்சி வழக்கு, போலீசாரை தாக்கியதான வழக்கினை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த வழக்கு இன்று 22.08.2019 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் வாதாட மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மற்றும் வழக்கறிஞர்கள் வை. இளங்கோவன், ராஜவேலாயுதம் ஆகியோர் ஆஜராயினர். வழக்கறிஞர் துரைசாமியின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவர்கள் லோகு அய்யப்பன் உள்ளிட்ட 92 பேர் மீதான வழக்கினை ரத்து செய்து உத்திரவிட்டார். அப்போது நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

‘நீட்’ உருவாக்கும் குளறுபடிகள் – மோசடிகள்

‘நீட்’ உருவாக்கும் குளறுபடிகள் – மோசடிகள்

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, மத்திய அரசு நிர்வாகத்தில் செயல்படுகிறது. மொத்தமுள்ள 200 மருத்துவக் கல்லூரி இடங்களில் புதுச்சேரியிலேயே வாழ்வோருக்கு 55 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்களும் நீட் தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும். ஆனால் ‘நீட்’ தேர்வு எழுதாமலேயே ‘புதுச்சேரி’யில் குடியிருப்ப தாகப் பொய்யான சான்றிதழ்களைத் தந்து 29 பேர் மாணவர் சேர்க்கைக்கான பூர்வாங்கப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. தமிழ்நாட்டில் வசிக்கும் இவர்கள் இங்கே யும் ‘நீட்’ தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிக்கு மனு போட்டவர்கள். புதுச்சேரி உள்ளூர் மக்களுக்கான கோட்டாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து இடம் பிடிக்க, இந்த மோசடி நடந்திருக்கிறது. நீட் தேர்வு எழுதாமலே குறுக்கு வழியில் மருத்துவக் கல்லூரியில் நுழையும் மோசடியை சில பெற்றோர், ஆசிரியர் அமைப்புகள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, ஜிப்மர் தலைமை மருத்துவர் ஆர்.பி. சாமிநாதன், தவறு நடந்திருந்தால் அதை சரி செய்வோம் என்று கூறியிருக்கிறார்....

புதுவையில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு – பொதுக் கூட்டம்

புதுவையில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு – பொதுக் கூட்டம்

திராவிடர் இயக்க தமிழர் உரிமை மீட்பு விளக்கப் பொதுக் கூட்டம், புதுச்சேரியில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு நாளுடன் இணைத்து நடத்தப்பட்டது. ஜூன் 15, 2019 அன்று மாலை அரியாங்குப்பம் பிரம்மா சிலை அருகே நடந்த கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இரா. சிவா, அன்னை மணியம்மையார் படத்தைத் திறந்து வைத்தார். பெரியார் தொண்டர் சக்கினாமா படத்தை தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி திறந்து வைத்துப் பேசினார். யாழ் திலீபன் (தி.க.), பேராசிரியர் சுந்தரவள்ளி சிறப்புரையற்றினர். பெரியார் சிந்தனையாளர் இயக்க சார்பில் நடந்த இந்தப் பொதுக் கூட்டத்தை தோழர் தீனா ஒருங்கிணைத்தார். பெருமளவில் மக்கள் திரண்டு இறுதிவரை கருத்துகளைக் கேட்டனர். பெரியார் முழக்கம் 20062019 இதழ்

திருமுருகன் காந்தியின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- மறியல் புதுச்சேரி 13082018

திருமுருகன் காந்தியின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- மறியல் புதுச்சேரி 13082018

திருமுருகன் காந்தியின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- மறியல் கடந்த 2017-ஆம் ஆண்டு ஊர்வலமாகச் சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தியை தமிழக அரசு தேசத் துரோக வழக்கில் கைது செய்ததைக் கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்யக் கோரியும் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்- மறியல். நாள்: 13.08.2018, காலை 10 மணி. இடம்: ராஜா திரையரங்கு (நேரு வீதி சந்திப்பு), புதுச்சேரி. தமிழின உணர்வாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறோம். இவண் லோகு.அய்யப்பன் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம், புதுச்சேரி.

காரைக்காலில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! 17042018

காரைக்காலில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! 17042018

காரைக்காலில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி சார்பில்…… கழகத்தலைவர் கலந்து கொண்டு கருத்துரையாற்றுகிறார். தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். நாள் : 17.04.2018 செவ்வாய்க்கிழமை. நேரம் : மாலை 4.00 மணி இடம் : இரயிலடி,புதிய பேருந்து நிலையம் அருகில், காரைக்கால்.

என் எல் சி முற்றுகைப் போராட்டம் 10042018 நெய்வேலி

என் எல் சி முற்றுகைப் போராட்டம் 10042018 நெய்வேலி

அண்ணன் பண்ருட்டி வேல்முருகன் அவர்கள் தமிழக வாழ்வுரிமை  கூட்டமைப்பின் சார்பாக எண்ணற்ற பல அமைப்பு சார்ந்த தலைவர்களும், தமிழர் நலம் சார்ந்த பல தலைவர்களும் சிறப்பு மிக்க பல ஆளுமைகளும், காவிரி மேலாண்மை வாரியம் வேண்டி மிகச்சிறப்பான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!!! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்கள் தலைமையில் கடலூர் மாவட்டம் நட.பாரதிதாசன் தலைமையிலும் விழுப்புரம் மாவட்டம் தோழர் ராமர் தலைமையிலும் நாகப்பட்டினம் மாவட்டம் தோழர் விஜி மற்றும்  தோழர் மகேஷ் இவர்கள் தலைமையிலும், மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இளையராஜா அவர்களும் புதுச்சேரி மாநிலம் தோழர் லோகு அய்யப்பன் அவர்கள் தலைமையிலும், புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் தோழர் தீனா மற்றும் தோழர் பரத் அவர்கள் தலைமையிலும், அரியலூர் மாவட்ட செயலாளர் தோழர் கோபால் இராமகிருட்டினன் அவர்களும் தோழர் அறிவழகன் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சில தோழர்களும் மற்றும் சில பொது நல தோழர்களுடன் நெய்வேலி முற்றுகையில் பெருந்திரளாக தலைவர் தலைமையில் திவிக சார்பாக கலந்து கொண்டனர் புகைப்படங்களுக்கு

வருவாய்த் துறை அலுவலகம் முற்றுகை ! கைது ! புதுச்சேரி 02042018

வருவாய்த் துறை அலுவலகம் முற்றுகை ! கைது ! புதுச்சேரி 02042018

வருவாய்த் துறை அலுவலகம் முற்றுகை ! கைது ! புதுச்சேரி திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் .. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி அரசின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்தும் உடனடியாக காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட வற்புறுத்தியும் புதுச்சேரி மகாத்மா காந்தி சாலையில் (சின்ன வாய்க்காலுக்கு அருகில்) உள்ள இந்திய வருவாய்த் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் (02.04.2018, திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்றது முற்றுகைப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தமிழ் இன உணர்வாளர்கள் கைது திராவிடர் விடுதலைக் கழகம் புதுச்சேரி. காணொளிக்கு

புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம்  கழக ஏட்டுக்கு 50 சந்தாக்களை வழங்கியது

புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம் கழக ஏட்டுக்கு 50 சந்தாக்களை வழங்கியது

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் அதன் அமைப்பாளர் தீனதயாளன், 50 புரட்சிப் பெரியார் முழக்கத்துக்கான சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளரிடம் இயக்கம் சார்பில் அளித்தார். 24.2.2018 அன்று பெரியார்-அம்பேத்கர்-சிங்காரவேலனார் நினைவு நாள் பொதுக் கூட்டம், பேரணி புதுச்சேரியில் எழுச்சியுடன் நடந்தது. பேரணி முடிந்து ‘சதேசி மில் வாயில்’ (பேருந்து நிலையம் அருகே) பொதுக் கூட்டம், லெனின் சுப்பையா மற்றும் மக்கள் மன்ற கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் உரையாற்றினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

புதுச்சேரியில் திவிக நடத்திய ‘’மாவீரர் நாள்’’

புதுச்சேரியில் திவிக நடத்திய ‘’மாவீரர் நாள்’’ தமிழீழத் தாயக விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த விடுதலைப் புலிகளுக்கான மாவீரர் நாள் புதுச்சேரி அரியாங்குப்பத்திலுள்ள கேப்டன் மில்லர் அரங்கத்தில் 27.11.2017 திங்கட்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர். கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் தந்தை பெரியார் சதுக்கத்திலிருந்து சுடர் ஏந்தி மில்லர் அரங்கத்திற்கு திவிக தோழர்களும் தமிழ் இன உணர்வாளர்களும் பேரணியாக வந்தடைந்தனர். மாலை 6.05 மணிக்கு தியாகச் சுடரையும் அதன்பின் தமிழீழ தேசியக் கொடியையும் தோழர். கொளத்தூர் மணி அவர்கள் ஏற்றினார்கள். தோழர்கள் அனைவரும் விளக்கேற்றி மாவீரர்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர்.லோகு.அய்யப்பன் அவர்கள் வீரவணக்க உரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் வீரவணக்க உரையாற்றினார். அதில் ”தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதற்காக விடுதலைப் புலிகள் செய்த அளப்பரிய...

சங்கராச்சாரி வழக்கை மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி, புதுவை மாநில ஆர்ப்பாட்டம் 06062017

புதுச்சேரி – சங்கராச்சாரி வழக்கை மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி, புதுவை மாநில திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 06062017 அன்று காலை 11 மணியளவில் மாநிலக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். நிறைவுரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி விசாரணையில் சாட்சியம் அளித்துவிட்டு பிறழ்சாட்சிகளாக மாறியவர்கள் மீது புதுவை அரசு ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும், சங்கராச்சாரியின் ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ பதிவாக உள்ளநிலையிலும், அவரது வாக்குமூலத்தின் வழியாக தெரியவந்து கைது செய்யப்பட்ட காண்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியமும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தும் ஏன் மேல்முறையீட்டுக்கு செல்லவில்லை என்றும், தற்போது சென்னை உயர்நீதிமன்றம் இக்கேள்விகளை எழுப்பியுள்ளநிலையிலேனும் மேல்முறையீட்டுக்கோ, மீள்விசாரணைக்கோ உடனே நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்தில் ஏறத்தாழ 200 பேர் கலந்துகொண்டனர்.

களப்பணிகளில் கழகத் தோழர்கள்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த கழகத்தின் களப்பணிகள் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்ற நிகழ்வுகளின் தொகுப்பு. ஈரோட்டில் ‘கனி ராவுத்தர்’ குளம் மீட்பு இயக்கத்தின் தொடர் போராட்டம் ஈரோடு நகருக்கு அருகே உள்ளது கனிராவுத்தர் குளம். 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளம் அரசு அதிகாரிகளின் துணையோடு பணமுதலை களால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது வெறும்14 ஏக்கராக சுருங்கியுள்ளது. குளத்தை மீட்டெடுப் பதற்காக ‘கனிராவுத்தர் குள மீட்பு இயக்கம்’ என்ற பெயரால் தமிழத் தேசிய நடுவம் தோழர் நிலவன் ஒருங்கிணைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் கண.குறிஞ்சி, திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி போன்றோர் இணைந்து மக்கள் திரள் போராட்டங்கள், நீதிமன்ற வழக்கு என்ற வழிமுறைகளில் போராடிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குளத்தை சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடந்தேறிவருகின்றன. 23-4-2017 அன்று ஈரோட்டுக்கு ஒரு நூல் வெளியீட்டுக்காக சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர்...

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா புதுச்சேரி 26042017

26042017 அன்று மாலை புதுச்சேரி, தவளக்குப்பத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படையின் சார்பாகக் கொண்டாடப்பட்டது. மாலை 6-00 மணியளவில் ஏம்பலம் அடவு கலைக் குழுவினரின் பறையிசை முழக்கத்தோடு நிகழ்வு தொடங்கியது. நிகழ்வுக்கு அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் பாவாடைராயன் தலைமை வகித்தார்.த.பெ.தி.க. அமைப்பாளர் வீர மோகன், கிராமப்புற மக்கள் மேம்பாட்டு இயக்கத் தலைவர் சந்திரசேகரன், மக்கள் உரிமை இயக்கத் தலைவர் செகநாதன், வழக்கறிஞர் இராமலிங்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் சிரீதர் ஆகியோர் உரையாற்றியதை தொடர்ந்து ஆதி தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் வினோத், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் புதுச்சேரி 26042017

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 125 ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை சார்பில்.. நாள் : 26.04.2017. புதன் கிழமை. நேரம் : மாலை 6.00 மணி. இடம் : கடலூர் சாலை,தவளகுப்பம், நல்லவாடு சாலை சந்திப்பு,புதுவை. தலைமை : தோழர் ஆ.பாவாடை ராயன், மாநில தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை. கருத்துரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். மற்றும் தோழமை இயக்கத்தலைவர்கள்.

தோழர் ஃபாரூக் நிதியளிப்பு புதுச்சேரி 08042017

08042017 அன்று புதுவை, அரியாங்குப்பம், கரும்புலி மில்லர் அரங்கத்தில், புதுவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தோழர் ஃபாரூக் குடும்பநிதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு தோழர் லோகு அய்யப்பன் தலைமை வகித்தார். தோழர்கள் தந்தைபிரியன், வீராச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் முன்னரே நிதி அளித்தவர்கள் அல்லாமல் ஏராளமான பேர் நேரில் நிதி வழங்கினர். நிதியினைப் பெற்றுக் கொண்ட கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஃபாரூக் படுகொலை, இசுலாமிய அமைப்புகளின் தொடர்வினை, வழக்கின் தன்மை போன்றவற்றை விளக்கிப் பேசினார். அந்நிகழ்வில் ரூ.1,84,100-00 வழங்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் ரூ.15,900-00 அனுப்பி மொத்த நிதியை ரூ.2,00,000-00மாக முழுமைப் படுத்தினர்.

பெரியார் : இன்றும் என்றும் நூல்அறிமுக விழா புதுச்சேரி 11022017

கோவை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘பெரியார்:இன்றும் என்றும்’ நூலறிமுக விழா புதுச்சேரி வணிக அவையில் 11-2-2017 அன்று மாலை 6-00 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வுக்கு வந்திருந்தோரை புதுவை லோகு.அய்யப்பன் வரவேற்றார். விடியல் பதிப்பகத்தின் சார்பாக விஜயகுமார் நூல் வெளியீடும் அவசியம், முயற்சி குறித்து  எடுத்துரைத்தார். அடுத்து சூலூர்பாவேந்தர் பேரவை புலவர் செந்தலை கவுதமன் நூலை அறிமுகப்படுத்தி தெளிவான நீண்டதொரு சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே நூலுக்கு முன்பதிவு செய்திருந்தவர்களும் பிறரும் நூலின் படிகளைப் பெற்றுகளைப் பெற்றுக் கொண்டனர். இறுதியாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாறினார். விழாவில் ஏறத்தாழ 200 படிகள் விற்பனையாகின.

புதுவை – வீதி நாடகக் கலைஞர்கள் மதிவதணன் – அஸ்வினி வாழ்க்கை இணையேற்பு

26062016 ஞாயிறு அன்று பகல் 11-00 மணிக்கு புதுச்சேரி, முத்தியாலுபேட்டை, அம்பாள் திருமண மண்டபத்தில், விரட்டு வீதி நாடகக் குழு கலைஞர்களும், கல்லூரிகளில் துணைப் பேராசிரியர்களாகப் பணீயாற்றுவோருமான, தோழர்கள் சி.அ.அஸ்வினி – மதிவதணன் ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஏற்புவிழா, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மருத்துவர் எழிலன், தலித் சுப்பையா, யாழன் ஆதி, சேலம் வி.சி.க.தலைவர் நாவரசன், கோகுல் காந்திநாத் ஆகியோரின் விழாவிளக்கவுரைகளைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒப்பந்த உறுதிமொழிகளை கூறச் செய்து வாழ்க்கைத்துணைநல ஒப்பந்த்தந்தத்தை நிறைவேற்றிவைத்தார். தாலி தவிர்க்கப்பட்ட இவ்விழாவில் மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தங்க சங்கிலிகளை அணிவித்தனர். வாழ்க்கை ஒப்பந்தவிழாவுக்கு முன்னதாக பறையிசை, கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கிராமப்புற பாடல்கள் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் எறத்தாழ ஒன்றரை மணி நேரம் நிகழ்ந்தது. மணமக்கள் இருவரும் பறைமுழக்கத்தில் பங்கேற்று பரை அடித்தது குறிப்பிடத் தக்கது. விழாவை விரட்டு வீதிநாடகக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்த்...

புதுச்சேரியில் முற்றுகைப் போராட்டம் 16122015

புதுச்சேரி அரசில் அரசுச் செயலாளராகப் பணியாற்றும் ராக்கேஷ் சந்திரா என்னும் அதிகாரி ஏராளமான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் ஆவார். மருத்துவக் கல்லூரி இடங்களில் 50% இடங்கள் அரசு ஒதுக்கீட்டு அளித்தாக வேண்டும் என்ற விதியை 50 இடங்கள் அளித்தாக வேண்டும் என்று திரித்துக் கூறி இடஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கிடைக்காமல் செய்தவர். ஆசிரியப் பணித் தேர்வில் தகுதி அடிப்படையில் தேர்வு பெற்றோரையும் ஒதுக்கீட்டுக் கணக்கில் வைத்து ஏராளமான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வேலை வாய்ப்பைப் பறித்தவர். மேலும் சம்பள விகிதம் அதிகமாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை கெசட்டட் பதவி எனக் கூறி இடஒதுக்கீட்டில் வராது என்று நியமனங்களில் ஊழல் செய்தவர். புதுவைக் காகித ஆலைக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை, அவ்வாலை இயங்காததால் அர்டசுக்குத் திருப்பி அளிக்கவேண்டும் என்ற ஒப்பந்த விதிகளுக்கு முரணாக, அரசின் அனுமதியின்றியே தனியாருக்கு விற்றதால் 7.5 கோடி ஊழல் என்று 2014 ஜூலை மாதமே ஏமாற்றுதல் (420), அதிகார துஷ்பிரயோகம்...

புதுச்சேரியில் பிரிகேடியர் பால்ராஜ்- “சமர்க்கள நாயகன்” நூல் வெளியீட்டு விழா 0

புதுச்சேரியில் பிரிகேடியர் பால்ராஜ்- “சமர்க்கள நாயகன்” நூல் வெளியீட்டு விழா

தமிழீழத்தை மீட்டெடுக்க தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலில் போராடி, சிங்கள இராணுவத்தாலும் இந்திய இராணுவத் தாலும் வெல்லமுடியாத தளபதியாகத் திகழ்ந்த பிரிகேடியர். பால்ராஜ் அவர்களைப்பற்றிய ”பிரிகேடியர் பால்ராஜ்- சமர்க்கள நாயகன்” (இராவணன் பதிப்பகம் பதிப்பித்த) நூல் வெளியீட்டு விழாப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் பெரியார் திடலில் 13.12.2014 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநிலத் திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடுசெய்திருந்தது. விழாவில் புதுச்சேரி மாநிலக் கழகத் தலைவர் தோழர். லோகு.அய்யப்பன் தலைமை உரையாற்றினார். அவ் வுரையில், ”ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கியது சிங்களர்கள் அல்ல! இந்திய ஆட்சியாளர்கள்!!” என்பதைக் குறிப்பிட்டார். தோழர் இர.தந்தைப் பிரியன் வரவேற்புரையாற்றினார்.நூலினைத் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர். கொளத்தூர் மணி வெளியிட, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர். தி.வேல்முருகன் பெற்றுக்கொண்டார். நூலின் முதல்படியினைத் தோழமை இயக்கங்களின் தலைவர்கள் பெற்றுக்கொண்டனர். கொளத்தூர் மணி ஈழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்ககால நிலையினை...

0

புதுச்சேரி பெரியாரியல் பயிற்சி வகுப்பு

16-8-2015 அன்று காலை முதல் மாலை வரை புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ‘ பெரியாரியல் பயிற்சி வகுப்பு, அரியாங்குப்பத்தை அடுத்த அலுத்துவேலியில் உள்ள தோழர் பழனிராசா தோட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும்  தென்னந்தோப்பில்  நடந்தது. அறிமுக உரையை ஆற்றிய மாநிலக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் மாநிலக் கழகம் எடுத்த முடிவை ஒட்டி மாதந்தோறும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பெரியாரியல் பயிற்சி வகுப்பின் தொடக்க நிகழ்வே இது என்று குறிப்பிட்டார். கழகத் தோழர்கள் யார் எந்தவகையான கேள்விகளை  கேட்டாலும் உடனே பதிலளிக்கும் அளவுக்கு கொள்கைத் தெளிவு உள்ளவர்களாக வளர்த்தெடுக்கும் முயற்சியே இது என்றார். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “பெரியார் என்றொரு மனிதர்” என்ற தலைப்பில் பெரியாரின் இளமைக் காலம்யற்சி முதற்கொண்டு அவர் பெரும் மானுடநேயராக, ஜாதி ஒழிப்பு, பெண்ணூரிமைப் போராளியாகப் பரிணமித்ததற்கான பின்புலம் போன்றவற்றை விளக்கி 11-00 மணி முதல் நண்பகல் 2-00 மணிவரை விளக்கினார். மதிய...