நீதிபதிகளே மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறார்கள் நாத்திகர் விழாவில் தோழர்கள் உரை
ஜெசி மூடநம்பிக்கைகளை நீதிபதிகளே பரப்புப்கிறார்கள் என்று காஞ்சி மக்கள் மன்றம் தோழர் ஜெசி கூறிப்பிட்டார். அவரது உரையிலிருந்து… இன்றைக்கு பல்வேறு மூடநம்பிக்கை கருத்துக்களை சாமியார்கள் பேசுவதைவிட நீதிபதிகள், அமைச்சர்கள் இப்போது தீவிரமாக பேசி வருகிறார்கள். ஒரு நீதிபதி பேசுகிறார் “பசு ஆக்சிஜனை உள்ளிழுத்து ஆக்சிஜனையே வெளியேற்றம் செய்கிறது. சாமியார்களிலே வித்தியாசமான சாமியார் நித்தியானந்தா தான். அவர் பேச்சுத் தொணி கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும். நித்தியானந்தா ஒரு (cosmic Airport)பிரபஞ்ச விமான நிலையத்தை உருவாக்கி இருக்கிறார். கருவுறும் பெண்கள் எல்லோரும் வாருங்கள். இந்த பிரபஞ்ச விமான நிலையத்தில் உங்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய இடத்தில் வந்து குழந்தை பெற்றுக் கொண்டால் பிறக்கும் போது ஞானம் பெற்றிருப்பார்கள். நான் அதற்குரிய (DNA) மரபணுக்களை மாற்றிவிடுவேன் ஆகையால் இங்கே வாருங்கள் என்று நித்தியானந்தா அழைக்கிறார். ஒரு ராஜஸ்தான் நீதிபதி பேசியது: ஆண் மயில்கள் பிரம்மச்சாரிகளாம். பெண்மயில்ளோடு உடலுறவு வைத்துக் கொள்வதில்லை. ஆண்மயில்களின் கண்ணீரை குடித்துத்...