Category: தலையங்கம்

ஆளுநர் அத்துமீறல்களுக்கு துணைபோவதா?

ஆளுநர் அத்துமீறல்களுக்கு துணைபோவதா?

இந்தியாவில் ஒற்றை மதவாத ஆட்சியைத் திணிக்கும் நோக்கத்தோடு செயல்படும் ஒன்றிய ஆட்சியின் அத்துமீறல்களுக்கு எதிராக திராவிட மாடல் ஆட்சி தான்‌ கொள்கைப் போராட்டம் நடத்துகிறது. தொகுதி மறுவரையறை திட்டத்தைப் பயன்படுத்தி தென் மாநிலங்களின் சட்டமன்ற, நாடாளுமன்ற எண்ணிக்கையைக் குறைக்கும் ஆபத்துக்களை முன்கூட்டியே கண்டறிந்து முதலமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர். இப்போது மீண்டும் மாநில முதலமைச்சர்களுக்கு சட்டமன்றஉரிமையை மீட்கும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.ஆளுநரின் அதிகாரப் பிடியில் இருந்து சட்டமன்ற உரிமையை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த உரிமைகளை ஒழிப்பதற்கு குறுக்கு வழியில் குடியரசுத் தலைவருக்கான 143-ஆவது அதிகாரத்தைப் பயன்படுத்த முன் வந்திருக்கிறது ஒன்றிய ஆட்சி. இதில் ஒன்றிய ஆட்சிக்கு என்ன பாதிப்பு வந்துவிட்டது? ஏன் இதை குறுக்கு வழியில் சீர்குலைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்? நாடாளுமன்றம் நிறைவேற்றுகிற மசோதாவுக்கு அடுத்த நாளே குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்து விடுகிறார். பாஜக ஆட்சி செய்யும் மாநில சட்டசபைகள் நிறைவேற்றும் தீர்மானத்திற்கு உடனே...

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்குமா?

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்குமா?

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஒன்றிய‌ அமைச்சரவை ஏன் திடீர் முடிவுக்கு வந்தது? இதற்குப் பின்னால் பீகார் சட்டமன்றத் தேர்தல் எனும் கட்சி அரசியல் அடங்கி இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளைக் குறிவைப்பதே இந்த திடீர் அறிவிப்பின் நோக்கம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் இந்த சமூகநீதி கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடு முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒருமித்த குரலாக இந்த கோரிக்கை உருவாகியுள்ளது. ஒன்றிய‌ பாஜக ஆட்சி இதைக் கடுமையாக எதிர்த்து வந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி கடுமையாக எதிர்த்துப் பேசினார். ஜாதி கணக்கீடு கேட்பவர்கள் பிரிவினைவாதிகள் என்றும் `அர்பன் நக்சல்கள்’ என்றும் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார். நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் நித்தியானந் ராய் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி கணக்கெடுப்புகள் எடுக்கும் திட்டம்...

அமித்ஷாவின் பார்ப்பனியம்

அமித்ஷாவின் பார்ப்பனியம்

இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதமே என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் பேசி இருக்கிறார். ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 சமஸ்கிருத்துக்கு மட்டுமே அழுத்தத்தையும் முன்னுரிமையும் தருகிறது. வணிகம், வானவியல், தத்துவம் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுடன் சமஸ்கிருத தொடர்புகளை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் மும்மொழி திட்டத்தை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜகவினர் இதில் இந்தி இல்லை என்று வாதிட்டனர். தாய்மொழி தான் வலியுறுத்தப்படுகிறது என்றும் இதற்காக மோடி இந்தி குறித்த சொற்றொடர்களை நீக்கி விட்டார் என்றும் பேசினார்கள். நடைமுறையில் மும்மொழி திட்டம் என்பது இந்தி திணிப்புக்கே வழிவகுக்கும் என்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும் அமித்ஷாவின் இந்த பேச்சு மும்மொழி திட்டம் பார்ப்பனியத்தை வலியுறுத்துவதே என்பதை உறுதிப்படுத்துகிறது. அமித்ஷா மொழி அறிஞர் அல்ல. அனைத்து மொழிகளுக்கும் சமஸ்கிருதமே தாய்மொழி என்பதற்கு அவர் எந்த வித சான்றுகளையும் முன்வைக்கவில்லை. உண்மையில் அமித் ஷாவின்...

மாற்றங்களுக்கு முகம் கொடுத்த ‘போப் பிரான்சிஸ்’!

மாற்றங்களுக்கு முகம் கொடுத்த ‘போப் பிரான்சிஸ்’!

கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் தனது 88-வது வயதில் நீண்ட மருத்துவப் போராட்டத்திற்கு பிறகு விடைபெற்றுக்கொண்டார். நம்மை பொறுத்தவரை மதங்கள் மனித சமூகத்துக்கு கேடு விளைவிப்பவைதான். மனித சமூகத்தில் சுரண்டலுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் கலவரங்களுக்கும் ஊற்றுக் கண்களாகவே மதங்கள் இருக்கின்றன. கடவுளை விட மதங்கள்தான்‌ ஆபத்தானவை என்று பெரியார் கூறினார். அனைத்துக் கடவுளும் ஒன்றுதான்‌ என்பதை மதவாதிகள் ஏற்றுக்கொள்ளவார்கள். அனைத்து மதங்களும் ஒன்றுதான் என்பதை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். மதத்தின் பெயரால் சிந்தப்பட்ட குருதிகளை வரலாறுகள் உணர்த்திக்கொண்டு இருக்கின்றன. ஆனாலும் மதங்களின் நாடுகள் உலக வரைபடத்தில் இருக்கவே செய்கின்றன. காலத்தின் மாற்றங்களை கருத்தில்கொள்ள மறுத்து பிடிவாதம் காட்டும் மதக் கருத்தியல்வாதிகள் நிறைந்த உலகில் போப் பிரான்சிஸ் சீர்த்திருத்தங்களுக்கு முகம் கொடுத்து இருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். 2019-ல் ஐக்கிய அரபு அமீரகம் சென்று, கத்தோலிக்க-இஸ்லாமிய உறவுகளை வலுப்படுத்தினார். ‘திருச்சபை ஏழைகளுக்கானது’ என்ற கொள்கையை வலியுறுத்தி, உலகளாவிய ஏழ்மை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்....

“குரியன் ஜோசப்” குழு காலத்தின் தேவை!

“குரியன் ஜோசப்” குழு காலத்தின் தேவை!

ஒன்றிய பாஜக ஆட்சி இந்திய அரசியல் அமைப்புக்குள் செயல்படும் மாநிலங்களின் அடையாளங்களை சிதைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. உரிமைகளை பறிப்பதற்கான முறைகேடான வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது ஒன்றிய பாஜக ஆட்சி. இந்து ராஷ்டிரம் உருவாக்க மாநிலங்களின் மொழி மற்றும் கலாச்சாரங்கள் அவர்களுக்கு பெரும் தடையாக வந்து நிற்கின்றன. தமிழ்நாடு அரசு குறிவைத்து நசுக்கப்படுகிறது. இந்து ராஷ்டிராவை திராவிட மாடல் முற்றாக எதிர்த்து நிற்பதே இதற்குக் காரணம். ஆளுநர் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு தந்த நெருக்கடிகளை சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார் தமிழ்நாடு முதல்வர். இது மாநிலங்களின் வரலாற்றில் நிலைப்பெற்று நிற்கும் சாதனை. இதைத் தொடர்ந்து ஒன்றிய ஆட்சியின் உரிமை பறிப்பு அடாவடிகளை எதிர்கொள்ள முன்னாள் உச்சநீதிமன்றம் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஒன்றிய ஆட்சி சட்டத்தை எப்படி முறைகேடாகப் பயன்படுத்துகிறது என்பது குறித்தும் மாநில உரிமைகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளையும் இந்தக்...

வீழ்த்தப்பட்டது ரவி அல்ல, அமித்ஷா!

வீழ்த்தப்பட்டது ரவி அல்ல, அமித்ஷா!

மாநில அரசை விருப்பம் போல கலைத்து விளையாடிய ஒன்றிய அரசுக்கு, 1994-இல் `எஸ்.ஆர்.பொம்மை வழக்கு’ கடிவாளம் போட்டதைப் போல, ஆளுநர்களின் எதேச்சிகாரப் போக்குக்குக் கடிவாளம் போடும் தீர்ப்பை தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு போராடி வென்றிருக்கிறது. பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பு தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய ஆர்.என்.ரவிக்கு எதிராக தி.மு.க. அரசு தொடர்ந்த வழக்கில், “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை, மாநில அரசைப் பின்பற்றித்தான் ஆளுநர் செயல்பட முடியும். தன்னிச்சையாகச் செயல்படக்கூடாது. ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளார்” என்று தீர்ப்பிலேயே கண்டித்துள்ளது. மேலும், “அரசியலமைப்பில் ஆளுநருக்கு வீட்டோ (Veto) அதிகாரம் கிடையாது. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் கூடாது. இரண்டாவது முறையாக மசோதா அனுப்பப்படும்போது அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது”...

காஞ்சி விஜயேந்திரனின் ‘இன ஒதுக்கல்’ APARTHEID!

காஞ்சி விஜயேந்திரனின் ‘இன ஒதுக்கல்’ APARTHEID!

பெங்களூரில் மூவாயிரம் பார்ப்பனர்கள் திரண்ட ‘கர்நாடக பிராமண மகா சபாவில்’ (19/01/2025) பேசிய காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி ‘பிராமண வெறியை’ தூண்டி விட்டு இருக்கிறார். அவர் இந்து மதம் பற்றிப் பேசவில்லை; வேதமதம் பற்றி பேசியிருக்கிறார். வேத மதம்தான்‌ சனாதனம் என்றும் ‘பிரமாணிசம்’ மட்டுமே வேத மதத்தைக் காப்பாற்றும் என்பதால் ‘பிராமணர்கள்’ ஒன்றுபட வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். ‘பிராமணர்கள்’ தங்கள் பிறவி அடையாளங்களை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறைகளையும் பட்டியலிட்டுள்ளார். “1. ஒவ்வொரு நாளும் தங்களுக்கு உரிய வேத சடங்குகளை வீட்டில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிட வேண்டும். 2. பிராமணர்கள் வெளிநாடு போகக்கூடாது. (கடல் தாண்டுவது குற்றம் என்று சாஸ்திரம் கூறுகிறது). இங்கேயே தங்கி சனாதன கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும். 3. ‘பிராமணர்கள்’ மட்டுமே குடியிருக்கும் ‘அக்கிரகாரங்களை’ உருவாக்க வேண்டும். சுமார் 100 பிராமணர்கள் வசிக்கக் கூடிய தனிக் குடியிருப்புகள்(gated communities)...

சங்கராச்சாரிகளை அம்பலப்படுத்துவோம்!

சங்கராச்சாரிகளை அம்பலப்படுத்துவோம்!

“சமூக மாற்றத்திற்கு வாழ்நாள் முழுதும் போராடியவர் பெரியார். சமூகத்தை அடிமைப்படுத்திய சக்திகளை சரியாக அடையாளம் கண்டார். ”ஜாதி வர்ணாசிரம” கட்டமைப்பே தமிழர்களின் எதிரி என்ற முடிவுக்கு வந்தார். அதற்கான கருத்தியல்களை வழங்கிய பார்ப்பனியத்தையும், அதன் தலைமை பீடமான சங்கராச்சாரிகளையும் கடுமையாக எதிர்த்தார். பெரியார் ஜாதி ஒழிய வேண்டும் என்றார். சங்கராச்சாரிகள் பிறவியின் அடிப்படையில் பிராமண, சூத்திர பேதத்தை நியாயப்படுத்தும் வர்ணாசிரமமே நமக்கான தர்மம் என்றனர். பெரியார் தீண்டாமைக்கு எதிராகக் களமாடினார். வைக்கத்தில் போராடினார். சங்கராச்சாரிகள் தீண்டாமை தேவை அது ஷேமகரமானது என்றார்கள். பெரியார் பெண்ணடிமை ஒழிய வேண்டும் என்றார். சங்கராச்சாரிகள் பெண்கள், ஆண்களுக்கு அடிமைப்படுவதே நமக்கான தர்மம் என்றனர். வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள், கணவனை இழந்த பெண்கள் தரிசு நிலம். அவர்கள் பார்க்கக்கூடாதவர்கள், தீண்டப்படாதவர்கள் இதுவே நமது தர்மம் என்றார்கள். பெரியார் தமிழை அறிவியல் மொழியாக்க விரும்பினார். இன்னும் தமிழ் காட்டுமிராண்டி மொழியாகவே இருக்கலாமா என்று கவலைப்பட்டார். திருக்குறள்...

வளர்ச்சி பாதையில் தமிழ்நாடு!

வளர்ச்சி பாதையில் தமிழ்நாடு!

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களைக் கவரக்கூடிய அம்சங்களை உள்ளடக்கியதாக தமிழ்நாடு நிதிநிலை இருக்கும் என்று ஊடகங்கள் பேசின. ஆனால் தமிழ்நாட்டின்‌ கட்டமைப்பு வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். வாக்குகளை விட தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிதான் முக்கியம் என்ற கவலையோடு தமிழ்நாடு அரசு செயல்படுகிறது என்பதையே இந்த நிதி நிலை அறிக்கை உணர்த்துகிறது. தலைசிறந்த பொருளாதார நிபுணர்களையும் விளிம்புநிலை மக்களையும் கலந்து ஆலோசித்து சர்வதேச அளவில் வெற்றியடைந்த திட்டங்களைக் கண்டறிந்து அவற்றை தமிழ்நாட்டுச் சூழலுக்கு ஏற்ப வடிவமைத்து பல மாதங்கள் தீவிர ஆலோசனைக்கு பிறகு இந்த பட்ஜெட் உருவாக்கபட்டு இருக்கிறது என்று தமிழ்நாடு முதல்வர் விளக்கம் தந்துள்ளார். நிதி நிலை அறிக்கையில் கல்விக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் பெரியார் கவலையோடு கவனிப்பார். திராவிட இயக்கத்தின் அந்த கொள்கையின் பார்வையில் நின்று கல்விக்கு மட்டும் ரூ.55,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்‌...

“ஜாதிக்கு ஒரு கோயில் தேவையா?”

“ஜாதிக்கு ஒரு கோயில் தேவையா?”

ஆகமக் கோயில்களை பார்ப்பனர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதை எதிர்த்து, பெரியார் இயக்கம் குரல் கொடுத்து வருகிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 100-வது நாளில் செயல்படுத்தினார். ஆனாலும் 24 பார்ப்பனரல்லாத அர்ச்சகர்க்கு மேல் நியமனம் செய்ய முடியாமல், நீதிமன்றங்களில் பார்ப்பனர்கள் தடை வாங்கிவிட்டார்கள். தடையை நீக்க அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அறநிலையத்துறை இந்த பிரச்சினையில் ஆர்வம் காட்டாமல் செயல்படுகிறது. பெரியார் நெஞ்சில் தைத்த அந்த முள்ளை அகற்றும் இந்த சமூக மாற்றக் கொள்கையில் அறநிலையத்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கதக்கவையாகவே இருக்கின்றன. இந்த நிலையில் பல கிராம கோயில்கள் ஜாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன. அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வழங்கியுள்ள தீர்ப்பைப் பாராட்டி வரவேற்க வேண்டும். “கோயில்களை நிர்வகிக்கும் உரிமையை ஒரு குறிப்பிட்ட ஜாதிகள் கோர முடியாது‌. கோயில்களை ஜாதி அடிப்படையில் பிரித்துப் பார்ப்பது ஜாதியை நிலை...

தமிழ்நாடு அரசுக்குத் துணைநிற்போம்!

தமிழ்நாடு அரசுக்குத் துணைநிற்போம்!

2026-ஆம் ஆண்டில் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. வழக்கம்போல தமிழ்நாடுதான் இதன் ஆபத்துகளையும் முதலில் உணர்ந்து அதுகுறித்த ஓர் எச்சரிக்கையை எழுப்பியிருக்கிறது. குறிப்பாகத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென்னிந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஏற்படப்போகும் இழப்புகள் என்ன என்பதை சுட்டிக்காட்டி, மிகுந்த விழிப்புணர்வோடு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டியது தமிழ்நாடு அரசு. ஆனால் தொகுதி மறுவரையறை தொடர்பாக இதுவரை ஒன்றிய அரசு எந்த அறிவிப்பும் செய்யவில்லையே! திமுக அரசு வேண்டுமென்றே அரசியல் நோக்கங்களுக்கு இவ்விவகாரத்தை கையிலெடுத்திருப்பதாக பாஜக குற்றம்சாட்டுகிறது. ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறையும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு பிறகு, அதற்கேற்பத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும். இதற்காக 1952-ஆம் ஆண்டில் தொகுதி மறுவரையறை சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி அமைக்கப்பட்ட ஆணையங்கள் 1971 வரை 3 முறை மக்களவைத் தொகுதிகளை சீரமைத்துள்ளன. தற்போதிருக்கும் 543 மக்களவைத் தொகுதிகள் என்பது அப்போது இறுதி செய்யப்பட்டதுதான். ஆனால் அதன்பிறகு நெருக்கடி நிலை காலத்தில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திவிட்டு,...

மொழிப்போருக்கு தமிழ்நாடு தயார்!-

மொழிப்போருக்கு தமிழ்நாடு தயார்!-

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் புதிய கல்விக்கொள்கையின்படி மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த நிதியை விடுவிப்போம் என்று அடாவடியாக பேசியிருக்கிறார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான். கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளபோது, ஒன்றிய அரசு தன்னிச்சையாக ஒன்றை உருவாக்கி, அதனை ஏற்றுக்கொண்டால்தான், மற்ற திட்டங்களுக்கு நிதி கொடுப்போம் என்று பேசுவதென்பது அரசியலமைப்புக்கு விரோதமானது. தமிழ்நாட்டின் கொள்கையே இருமொழிதான் என்பதை இன்றைய திமுக அரசு மட்டுமல்ல, பாஜகவின் அடிமை அரசாக இதற்கு முன்பிருந்த அதிமுகவே தெளிவுபடுத்தியிருக்கிறது. உள்ளூர் தொடர்புக்குத் தாய்மொழி, உலகத் தொடர்புக்கு ஆங்கிலம், இதைத்தவிர இன்னொரு மொழி எந்த வகையிலும் தமிழ்நாட்டுக்கு தேவைப்படவில்லை. அப்படியே பணி நிமித்தமாக எந்தவொரு மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவைப்பட்டால் அது தனிநபரின் விருப்பத்துக்கு உட்பட்டது, தேவைக்குட்பட்டது. யாரும் கற்றுக்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தப்போவதில்லை. ஆனால்...

நீதிமன்றத்தின் ஜாதி எதிர்ப்பு குரல்.

நீதிமன்றத்தின் ஜாதி எதிர்ப்பு குரல்.

ஜாதி சமூகத்தை பிளவுப்படுத்துகிறது! வளர்ச்சியை தடுக்கிறது. “ஜாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதே அரசியல் சட்டத்தை வடிவமைத்த தலைவர்களின் கனவு. 75 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜாதி என்ற தேவை இல்லாத சுமையை சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழே இறக்கி வைக்கவில்லை.” -இந்த வரலாற்று தீர்ப்பை உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி வழங்கி உள்ளார். தீர்ப்பின் ஒவ்வொரு வரியும் “கல்வெட்டுப்” பதிவுகளாகும்.பொள்ளாச்சி வட்டம் ஆவல்பட்டிக் கிராமத்தில் உள்ள இரண்டு பெருமாள் கோவில்களில் அறங்காவலர்களாக ஒரு குறிப்பிட்ட ஜாதியின் உட்ஜாதிப் பிரிவினரையே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, ஜாதி எதிர்ப்புக் கருத்துக்களை தீர்ப்பாகவே பதிவு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோயில்கள் குறிப்பிட்ட ஜாதிகளின் கட்டுப்பாட்டில் தான்‌ இயங்க வேண்டும் என்றும் அப்போதுதான் அவை காப்பாற்றப்படும் என்றும் பேசி இருக்கிறார். சமூக ஊடகங்களில் அவர் பேச்சு வலம் வருகிறது. பாஜக...

ஒன்றிய ஆட்சியின் ஆணவம்

ஒன்றிய ஆட்சியின் ஆணவம்

விளிம்பு நிலை மக்களின் கல்வியை வேத காலம் தொடங்கி பார்ப்பனியம் மறுத்தே வருகிறது. “சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று கட்டளை இட்டது”.பாடசாலைகள் என்றாலே வேதம் கற்பிப்பதற்கு மட்டும் தான்.தமிழ் மன்னர்கள் கோவில்களைக் கட்டினார்களே தவிர பள்ளிக்கூடங்களை நிறுவவில்லை. வேத பாடசாலைகளைத் தான்‌ அமைத்தார்கள்.பிரிட்டிஷ் அதிகாரி மெக்காலே தான்‌,முதன்‌ முதலாக ஆங்கில வழியில் பொதுப் பள்ளிகளைக் கொண்டு வந்தார்(1835).அந்த கல்வித் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்களும் பார்ப்பனர்கள்தான். வேதம்‌ படித்தவர்கள் ஆங்கிலம் படித்து பிரிட்டிஷ் ஆட்சியில் உயர் பதவிகளை கைப்பற்றினார்கள். 1916-ம் ஆண்டு பார்ப்பன அல்லாதார் இயக்கம் வரலாற்றுத் தேவையாக வந்த பிறகு பார்ப்பனர் ஆதிக்கம் கேள்விக்கு உள்ளானது. நீதிக்கட்சியின் முதல் ஆட்சியில் 1921-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வகுப்புவாரி உத்தரவு பார்ப்பனர் அதிகார வர்க்கத்தால் முடக்கப்பட்டது.அதற்கு பிறகு 1928 ஆம்‌ ஆண்டில் தான்,ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு,சுப்பராயன்‌ முதல்வராக இருந்த போது அமைச்சர் முத்தையா முதலியார் அவர்களால் வகுப்புவாரி உரிமைச்...

மாநில உரிமையைப் பறிக்கும் உச்சநீதிமன்றம்!

மாநில உரிமையைப் பறிக்கும் உச்சநீதிமன்றம்!

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களில், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்குவது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, 2019-இல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றமும் முதுநிலை படிப்புகளில், வசிப்பிடத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று ஜனவரி 30-ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள இத்தீர்ப்பால் தமிழ்நாடு பின்பற்றி வரும் 69% இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பலமான மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு இத்தீர்ப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மருத்துவ முதுகலை படிப்பில் 2 ஆயிரத்து 294 இடங்கள் இருக்கின்றன. அதில் இடஒதுக்கீட்டின்படி ஒன்றிய அரசு 50 விழுக்காடு இடங்களையும், தமிழ்நாடு அரசு 50...

உதயநிதி ஸ்டாலினைப் பாராட்டுகிறோம்!

உதயநிதி ஸ்டாலினைப் பாராட்டுகிறோம்!

டெங்கு, காலராவைப் போல் சனாதனம் ஒரு நோய். அது ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். கடந்த 2023, செப்டம்பரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில், உதயநிதி ஸ்டாலின் பேசிய இந்த கருத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சங்கிகளும் பார்ப்பனர்களும் கொந்தளித்தார்கள். பல்வேறு மாநிலங்களில் உதயநிதி மீது வழக்குகளைத் தொடர்ந்தார்கள். ஒரு பார்ப்பன சாமியார் அவரது தலைக்கு விலை வைத்தார். உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார்கள். ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் சாபமிட்டார். அவரது கட்சியினர் கோயில் வாசலில் உதயநிதி படத்தை மிதியடியாகப் போட்டு காலால் மிதித்தனர். உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், ஒரு அமைச்சரே சனாதனத்தை எதிர்க்கலாமா? கருத்துச் சுதந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு நீதிபதி வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தார். விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் உதயநிதி...

இந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள்!

இந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள்!

‘இந்துக்களே ஒன்றுபடுங்கள்’ என்ற பா.ஜ.க.-வின் பெரும்பான்மைவாதம் வெறும் வாக்கு அரசியலுக்கான உத்தி என்பதை வருணாசிரமவாதிகள் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். “பார்ப்பனர்களே ஒன்றுபடுங்கள், பார்ப்பனர்களே உங்கள் மேலாதிக்கத்தை விட்டுவிடாதீர்கள்” என்பதுதான் அவர்களின் உண்மையான முழக்கம். அந்த முழக்கத்தைக் கர்நாடாகாவிற்கு சென்று எதிரொலித்திருக்கிறார் காஞ்சி காமகோடி பீடத்தின் விஜயேந்திர சரஸ்வதி. சனவரி 19-ஆம் தேதி கர்நாடகாவில் நடைபெற்ற ‘அகில கர்நாடகா பிராமண மகாசபா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியிருக்கும் இவர், “சனாதன தர்மத்தைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றுவது பார்ப்பனர்களே. இந்திய விடுதலைக்குப் பிறகு வேத தர்மத்தைப் பரப்ப பார்ப்பனர்கள் நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள். வைதீக மதம் நிலையாக இருக்கவும், பாரதத்தின் ஆன்மீக மற்றும் கலாசார பெருமைகளைப் பாதுகாக்கவும் பார்ப்பனியத்தின் இருப்பு அவசியம். நிர்வாக மட்டத்தில் பார்ப்பனர்களை அதீத எண்ணிக்கையில் இடம்பெற வேண்டும். அப்போதுதான் சனதான தர்மத்தைப் பரப்ப முடியும். பார்ப்பன சமூகம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார். அவரது பேச்சில் ஒரு இடத்தில் கூட,...

வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர் பெரியார்

வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர் பெரியார்

பெரியார் பற்றி அண்ணா இவ்வாறு கூறினார்; “ஒரு சகாப்தம்; ஒரு திருப்புமுனை; ஒரு காலகட்டம்; நூற்றாண்டு வரலாற்றை ஒரு குடுவைக்குள் அடக்கியவர்.” (Putting Centuries In Capsules) சமூகவியல் பார்வையில் வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர் பெரியார். இந்தியாவில் பார்ப்பனியத்தை எதிர்த்த முதல் புரட்சிக்காரர் புத்தர். வேதம் – யாகம் – சமூகக் கொடுமைகளை எதிர்த்து புத்தர் மக்களைச் சந்தித்து உரையாடினார். அவரின் கொள்கைகளைப் பரப்ப அவரது சீடர்கள் மக்களைச் சந்தித்து புத்தரின் கருத்தியலைப் பரப்பினார்கள். அதே புத்தர் இயக்கத்தை அவரது மறைவுக்குப் பிறகு பார்ப்பனியம் ஊடுருவிச் சிதைத்தது. பார்ப்பனியத்தை எதிர்த்து சார்வாகர்கள், சித்தர்கள், சமணர்கள், வள்ளலார் என்ற சீர்திருத்தவாதிகள் வந்தார்கள். பார்ப்பனியம் அவர்களை ஜீரணித்துவிட்டது. வரலாற்றில் இருந்து பாடம் பெற்ற பெரியார் எந்த இயக்கமும் எந்தப் புரட்சியாளரும் பின்பற்றாத புதிய நடைமுறைகளையும், கருத்துகளையும் தனது இயக்கத்துக்காகக் கட்டமைத்தார். 1. தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி சமுதாய இயக்கமாக்கினார். 2. எதைச் சொன்னால்...

பல்கலைக்கழக உரிமைகளைப் பறிப்பதா?

பல்கலைக்கழக உரிமைகளைப் பறிப்பதா?

பல்கலைக்கழகங்களை தமிழ்நாடு அரசிடம் இருந்து விடுவித்து தனது நேரடிக் கண்காணிப்பில் கொண்டுவரப் போகிறது ஒன்றிய பாஜக ஆட்சி. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் எதிர்ப்போம் என்று அறிவித்துள்ளதைப் பாராட்டி வரவேற்கிறோம். பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுவில் மாநில அரசின் பிரதிநிதிகளுக்கு இடமில்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு ஒரு சட்டத்தைக் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளது. ஆளுநரின் பிரதிநிதி, மானியக் குழுவின் பிரதிநிதி, பல்கலைக்கழகப் பிரதிநிதி என்ற மூவர் மட்டுமே துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுப்பார்களாம். கல்வித்துறை சாராதோரும் துணைவேந்தர்களாகலாம் என்றும் புதிய சட்டம் கூறுகிறது. இதற்கான மசோதா இப்போது வெளியிடப்பட்டுள்ளது. 21 பக்கங்கள் கொண்ட சட்டத்துக்கான வரைவு அறிக்கை ஒன்றை கல்வித்துறை அமைச்சகத்திடம் பல்கலைக்கழக மானியக்குழு அளித்துள்ளது. இந்தப் புதியக் கொள்கையை ஏற்காத பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மாநிலக்குழுவின் வரம்பில் இருந்து நீக்கப்பட்டு நிதி வழங்குவது நிறுத்தப்படும் என்றும் இந்த நிறுவனங்கள் தரும் பட்டங்கள் செல்லாது என்று அறிவிக்கப்படும்...

தலையங்கம் – நூற்றாண்டு காணும் ஜாதி ஒழிப்புப் போராளி

தலையங்கம் – நூற்றாண்டு காணும் ஜாதி ஒழிப்புப் போராளி

ஜாதி ஒழிப்புக் களத்தில் உயிர்நீத்த மாவீரன் இமானுவேல் சேகரன் நூற்றாண்டு இது. தென் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடிய ஜாதிவெறிக்கு எதிராக மக்களைத் திரட்டி போராடிய மாவீரன். 1924, அக்டோபர் 09ஆம் தேதி முதுகுளத்தூர் அருகே உள்ள செல்லூரில் அவர் பிறந்தார். இராணுவத்தில் சேர்ந்தார். விடுமுறைக் காலங்களில் ஊருக்கு வரும் போது ஒடுக்கப்பட்ட மக்களின் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடினார். மக்களை அணிதிரட்டினார். ஒருகட்டத்தில் இராணுவத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஜாதி ஒழிப்புக் களத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக்கொண்டார். தேவேந்திர குல வேளாளர் என்ற ஜாதிப் பிரிவில் அவர் பிறந்தாலும் சுயஜாதியைக் கடந்து தீண்டாமையால் பாதிக்கப்பட்ட நாடார் உள்ளிட்ட அனைத்து ஜாதிகளையும் அவர் ஒருங்கிணைத்தார். 1953இல் ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தை அவர் தொடங்கினார். ஜாதி ஒழிப்புடன் பெண்ணுரிமைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். கணவனை இழந்தப் பெண்கள் மறுமணம் செய்ய வேண்டும் என்பதை மக்களிடம் நேரடியாகச் சென்று பரப்புரை செய்தார். அன்றைய காலகட்டத்தில் இராஜகோபாலாச்சாரி...

தலையங்கம் – மதச்சார்பின்மையா? மனுதர்மமா?

தலையங்கம் – மதச்சார்பின்மையா? மனுதர்மமா?

மதச்சார்பின்மை ‘சோசலிசம்’ என்ற சொற்கள் 1976ஆம் ஆண்டு அவசர நிலைக் காலத்தில் தான் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதற்கு முன்பு சட்டத்தில் மதச்சார்பின்மை என்பது இல்லவே இல்லை என்று சங்பரிவாரங்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ். பரப்புரைச் செயலாளர் போல் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியும் அண்மையில் இவ்வாறு பேசியிருக்கிறார். அரசியல் சட்டத்தின் கீழ் உறுதி மொழியேற்று – பதவிக்கு வந்தவர் ஆளுநர். அவர் மதச்சார்பின்மை என்ற சொல்லை நீக்கிவிட வேண்டும் என்று சட்ட மறுப்புப் பேசுகிறார். ‘மதச்சார்பின்மை’ என்ற சொல்லை ஏன் அகற்ற வேண்டும்? அகற்றிவிட்டால் ’இந்துக்கள்’ நாடு என்றாகிவிடுமா? அதாவது அரசியல் சட்டக் குழு மதச்சார்பின்மைக் கொள்கையை ஏற்கவில்லை, அதை இந்திரா காந்தி தான் திணித்தார் என்று இவர்கள் வாதாடுகிறார்கள். அரசியல் சட்டத்தின் அடித்தளமே மதச்சார்பின்மை தான். சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் மதப் பாகுபாடு கூடாது; ஜாதிப் பாகுபாடு கூடாது; இனப் பாகுபாடு கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது....

தலையங்கம் – அறிவியலைக் கண்டு ஏன் அஞ்சுகிறீர்கள்?

தலையங்கம் – அறிவியலைக் கண்டு ஏன் அஞ்சுகிறீர்கள்?

அறிவியலைக் கண்டு அஞ்சுகிறது மதவாதம்; உண்மையான விஞ்ஞானிகளை அடையாளப்படுத்தாமல் போலி அறிவியலைப் பரப்புவோருக்கு விஞ்ஞானி என்று மகுடம் சூட்டி விருது வழங்கத் தயாராகிறது ஒன்றிய பாஜக ஆட்சி. இதுவரை ஒன்றிய விஞ்ஞான அமைச்சகம், விஞ்ஞானிகளைத் தேர்வு செய்யும் முறையைத் திடீரென மாற்றியுள்ளது. அறிவியல் இயக்கங்கள் மற்றும் அறிவியலாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் தான் இத்தனை ஆண்டுகாலம் விருதுகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் அறிவியலில் சாதனை புரிந்த விஞ்ஞானிகள் விருதுகளைப் பெற்றுவந்தனர். இவர்கள் பாஜகவின் போலி அறிவியலையும், வரலாற்றுப் புரட்டுகளையும் ஏற்காமல் உண்மைகளை உரத்துப் பேசுகிறார்கள். அந்தக் கருத்துகள் சர்வதேச அளவில் மதவாத மூட நம்பிக்கை கருத்துகளை அம்பலப்படுத்தியது. அதன் காரணமாக விஞ்ஞானிகளைத் தேர்வு செய்யும் பொறுப்பைத் திடீரென மாற்றியமைத்திருக்கிறார்கள். விருதுகள் வழங்கப்படும் விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்படும் முறையிலும் மாற்றம் கொண்டுவந்துள்ளது ஒன்றிய பாஜக ஆட்சி. இனி விஞ்ஞான அமைச்சகத்தின் தனி அதிகாரியான முதன்மை அறிவியல் ஆலோசகர் மட்டுமே இது குறித்த முடிவுகளை எடுப்பார்...

தலையங்கம் – காவிக்கும்பலின் பிடியில் நீதித்துறை?

தலையங்கம் – காவிக்கும்பலின் பிடியில் நீதித்துறை?

உலகெங்கிலும் எல்லா மதங்களும் விழாக்களை கொண்டாட்டமாக மட்டுமே வைத்திருக்கின்றன. ஆனால் இங்கோ இந்து மதம் கலவரத்திற்காகவே ஒரு விழாவை வைத்துக்கொண்டிருக்கிறது, விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை கடப்பது சிறுபான்மை சமூகங்களுக்கு ஆழிப் பேரலையை கடப்பது போன்ற பேரச்சத்தை தந்து கொண்டிருக்கிறது. சென்னை திருவல்லிக்கேணியில் பெரிய மசூதி வழியாக விநாயகர் ஊர்வலம் செல்வோம் என்று இந்து முன்னணி முரண்டு பிடிப்பதும், காவல்துறை தடுத்து அவர்களை கைது செய்வதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் விநாயகர் ஊர்வலத்தின்போது சிறுபான்மை சமூகத்தினரின் கடைகள் குறிவைத்துத் தாக்கப்பட்டு, எரிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. கலவரத்தில் ஈடுபட்ட இந்துத்துவா கும்பலைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் மகோபா மாவட்டத்தில் இசுலாமியர்கள் அதிகமாக வாழும் கோத்வாலி பகுதி வழியாக இந்துத்துவா கும்பல் விநாயகர் சிலையை எடுத்துச் சென்று கலவரத்தை தூண்டி, கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம்...

தலையங்கம் – இது வேத காலம் அல்ல!

தலையங்கம் – இது வேத காலம் அல்ல!

தி.மு.க.வின் பவள விழா பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பார்ப்பன ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அன்று இராஜாஜி இந்தியைத் திணித்தார். இப்போது இருமொழிக் கொள்கையை நீக்க வேண்டுமென்று என்று சொல்லுகிறார்கள். அதே ஜாதிதான் மறைமுகமாக பல காரியங்களைத் தொடர்ந்து செய்கிறது. அண்மையில் ஒன்றிய அரசு இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி எழுதுவதற்காக குழு ஒன்றை அமைத்துள்ளது. அதில் 17 பேர் இடம்பெற்றுள்ளனர். 3பேர் அரசு அதிகாரிகள், மற்ற 14 பேரும் (பிராமணர்கள்) அதில் ஒருவர் கனடா நாட்டில் வாழும் பிராமணச் சங்கத் தலைவர். வெளிநாட்டிலிருந்து ஆட்களைத் தேடிப்பிடித்திருக்கிறார்கள். ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரீகம் திராவிட நாகரீகம்தான். ஆனால் ஆரிய நாகரீகம் அதாவது சரஸ்வதி நாகரீகம் என்று அந்தக் கமிட்டி கூறுகிறது. அந்த இனத்தின் பகை இன்றும் தொடர்கிறது. அது தொடர்ந்தால் திமுக தன் வீரியத்தைக் காட்டும் என்று துரைமுருகன் பேசியுள்ளார். உளம் திறந்து உண்மைகளை வெளிப்படுத்திய அமைச்சர் துரைமுருகன் அவர்களைப் பாராட்ட...

தலையங்கம் – எது ஆன்மீகம்?

தலையங்கம் – எது ஆன்மீகம்?

“பூர்வ ஜென்மப் பாவம்தான் இப்போது ஊனமாகப் பிறப்பதற்குக் காரணம். பாவங்களுக்கு நரகமும் புண்ணியங்களுக்கு மோட்சமும் தான் கிடைக்கும்” என்று பேசுவது தான் ஆன்மீகமா? பள்ளி மாணவர்களிடையே இந்தக் கருத்தை விதைக்கலாமா? சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் கல்வி அதிகாரிகளின் ஒப்புதலோடு மகா விஷ்ணு என்ற ஆன்மீகவாதி இப்படிப் பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. செய்தி வெளிவந்தவுடனேயே தமிழ்நாட்டில் கட்சிகளைக் கடந்து வந்த எதிர்ப்புகளை வரவேற்க வேண்டும். இதனால் தான் தமிழ்நாட்டை “பெரியார் மண்” என்று கூறுகிறோம். இந்தப் பேட்டி ஆன்மீகம் தான் என்ற குரல் தமிழ்நாடு பாஜகவினரிடமிருந்து மட்டுமே கேட்கிறது. உடல் ஊனம் பூர்வ ஜென்மப் பாவமே என்ற வாதத்தை அப்படியே நீட்சியாக்கித் தீண்டாமை எனும் சமூக ஊனம். பூர்வ ஜென்மப் பயன் என்று பேசினாலும் வியப்பதற்கு இல்லை. எந்த முதலீடும் இல்லாமல் விரக்தி, குழப்பம் மற்றும் மூடநம்பிக்கைகளை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஆன்மீக வணிகம் பல கோடிகளில் புரள்கிறது. ஆன்மீகம் என்ற...

தலையங்கம்  – பெரியார் மானுடத்தின் திறவுகோல்

தலையங்கம் – பெரியார் மானுடத்தின் திறவுகோல்

பெரியார் தொடங்கிய குடி அரசுக்கு வயது 100; 1925இல் தொடங்கப்பட்ட இந்தப் பத்திரிக்கை பார்ப்பனரல்லாத சமூகத்தின் புரட்சிகர மாற்றத்திற்கு வித்திட்டது என்பதை மறுத்துவிட முடியாது. பெரியார் முதல் சுயமரியாதை மாநாட்டை 1929இல் நடத்தினார். அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே குடிஅரசு தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது. இது மானத்திற்கான மீட்புக்களம். பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்ற போராட்டக் களத்தை முன்னெடுத்து அதை மக்கள் இயக்கமாக மாற்றிய பெருமை சுயமரியாதை இயக்கத்திற்கும் குடிஅரசு ஏட்டிற்கும் உண்டு. பார்ப்பன ஆதிக்கம் முழு வீச்சில் இருந்த காலகட்டம் அது. அப்போது பார்ப்பனரல்லாத மக்களின் மானத்தையும், அறிவையும் மீட்பதற்காகப் பெரியார் களம் இறங்கினார். மானம் பெறுவதற்கு சூத்திர இழிவிலிருந்து விடுதலைக் கோரினார். அந்த இழிவைக் கடவுள், மதம், சாஸ்திரம், சம்பிரதாயம், பழக்கவழக்கம் என்ற நம்பிக்கைகளின் வழியாகத் திணிக்கப்பட்டதை உறுதியோடும் அச்சமின்றியும் எதிர்த்து நின்றார். அறிவுக்கான மீட்புக் களத்தில் அவர் முன்வைத்த முழக்கம் வகுப்புரிமை எனும் இட ஒதுக்கீடு. நீதிக்கட்சி...

தலையங்கம் – மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டம் வருமா?

தலையங்கம் – மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டம் வருமா?

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ‘தேசிய அறிவியல் மனப்பான்மை’ தினக் கருத்தரங்கம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆகஸ்ட் 26 அன்று நடைபெற்றுள்ளது. எழுத்தாளர் எஸ்.மோசஸ் பிரபு எழுதிய ‘நரேந்திர தபோல்கர் – மூடநம்பிக்கை ஒழிப்புபோராளி’, ஆயிஷா இரா. நடராசன் எழுதிய ‘அறிவியலின் குழந்தைகள்’ ஆகிய 2 நூல்களை வெளியிட்டுப் பேசிய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, “பள்ளி பாடப் புத்தகங்களில் இருக்கும் அறிவியல் பாடத்தை மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள், அறிவியல் மனப்பான்மையை வளர்க்க எதுவுமே செய்வதில்லை. ஆசிரியர்கள் அறிவியல் மனப்பான்மை அற்றவர்களாக இருப்பதே இதற்குக் காரணம். மேம்பட்ட சமுதாயம் அமைய வேண்டுமானால், முதலில் ஆசிரியர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மை வளர்க்கப்பட வேண்டும்” என்ற கருத்தை முன்வைத்துள்ளார். பள்ளிகளில் நடைபெறும் ஜாதிய மோதல்களைத் தடுக்க சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையை அரசிடம் ஏற்கெனவே சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவதுடன், ஆசிரியர்கள் மத்தியிலும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான,...

தலையங்கம் – பதுங்கும் பாஜக!

தலையங்கம் – பதுங்கும் பாஜக!

மூன்று வேளாண் சட்டங்களில் ஒரு புள்ளி, கமாவை கூட அழிக்க மாட்டோம் என்று கடந்த காலங்களில் ஆணவமாகப் பேசிய ஒன்றிய பாஜக அரசு, இனி அப்படியெல்லாம் ஆணவமாகப் பேச முடியாது என்று உணரவைக்கத்தக்க சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வக்பு வாரிய திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைத்த கையோடு, ஒன்றிய அரசின் துறைகளில் உயர் பதவிகளுக்கு தனியார் துறை ஆட்களை நியமிக்கும் மோசமான முடிவைக் கைவிட்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் பொறுப்புக்கு 45 பேரை நேரடித் தேர்வு (Lateral entry) செய்யவிருப்பதாகக் கடந்த வாரத்தில் அறிவிப்பு வெளியானது. ஒன்றிய அரசின் உயர் பொறுப்புகள் அனைத்தும் ஏற்கனவே பார்ப்பனமயமாக இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் 2022-இல் அளிக்கப்பட்ட விவரங்களின்படி, ஒன்றிய அரசின் அமைச்சகங்களின் பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் 322 பேரில் 254 பேர் பார்ப்பனர்கள் மற்றும் உயர்ஜாதியினர். நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் இடத்தில் கூட...

தலையங்கம் – அதானிக்கு கடிவாளம் எப்போது?

தலையங்கம் – அதானிக்கு கடிவாளம் எப்போது?

அதானிக் குழுமம் பங்குச்சந்தையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது என அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு குற்றம் சாட்டியிருந்தது. தொட்டதற்கெல்லாம் எதிர்க்கட்சிகள் மீதும், பல்வேறு நிறுவனங்கள் மீதும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை ஏவி விசாரணை நடத்தும் ஒன்றிய அரசு, அதானியிடம் விசாரணை நடத்த மறுத்தது. அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பியவர்களைத் தேசவிரோதிகளாகச் சித்தரித்தது. அதானி குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, மேற்கு வங்கத்தின் மகுவா மொய்த்ராவை தகுதிநீக்கம் செய்து பழி தீர்த்தது. அதையும்தாண்டி உச்சநீதிமன்றத்திற்கு வழக்குகள் சென்றபோது, பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. 3 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் இன்றுவரை முறையான விசாரணை நடைபெறவில்லை. அதற்கான காரணம் என்ன என்பதையும் ஹிண்டன்பர்க் நிறுவனம் இப்போது அம்பலப்படுத்தியுள்ளது. அதானிக் குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரிபுச் மற்றும் அவரது கணவர் தவல்...

தலையங்கம் – பார்ப்பனிய மனநிலை கூடாது!

தலையங்கம் – பார்ப்பனிய மனநிலை கூடாது!

பட்டியல் பிரிவினருக்கு உள்இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு பல்வேறு மட்டங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பட்டியல் ஜாதியினரைக் கூறுபோடலாமா என்பதுதான் அந்த விவாதத்தின் மையப்பொருளாக இருக்கிறது. இந்த வாதம் என்பது இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பார்ப்பனியம் நீண்டகாலமாக முன்வைக்கும் வாதம்தான். இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்து இந்துக்களைக் கூறுபோடலாமா என்ற பார்ப்பனிய சிந்தனைதான், பட்டியல் சமூகத்தினரை கூறுபோடலாமா என்று இப்போது மருவியிருக்கிறது. எல்லா மட்டங்களிலும் சமத்துவம் வேண்டும், பட்டியல் சமூகத்தினருக்குள்ளும் சமத்துவம் வேண்டுமென்பதுதான் உள்இடஒதுக்கீட்டின் நோக்கம். ஆனால் அதை ஏற்காமல், உள்இடஒதுக்கீடு வழங்கப்படக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் அவர்களும் கூறியிருக்கிறார். “பட்டியல் பிரிவினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கக்கூடாது. பட்டியல் பிரிவினருக்கான இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்திலேயே வழங்கப்பட்டுவிட்டது. அதன் அதிகாரம் ஒன்றிய அரசிடம்தான் இருக்க வேண்டும்” என்ற வாதத்தை அவர் முன்வைக்கிறார்....

தலையங்கம் – ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவை?

தலையங்கம் – ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவை?

2011ஆம் ஆண்டிலேயே நடத்தப்பட்டிருக்க வேண்டியது மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வேண்டுமென்றே தாமதித்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. கடந்த 150 ஆண்டுகால வரலாற்றில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தாமதப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. கொரோனாவைக் காரணம்காட்டி தள்ளிப்போடப்பட்டு, அதுவே தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது வெறுமனே மக்கள் தொகையை அறிந்துகொள்வதற்கான கணக்கெடுப்பு அல்ல. சமூக – பொருளாதார தரவுகள் அதற்குள் அடங்கியுள்ளது. அதைவைத்துதான் கொள்கை முடிவுகள், பொருளாதாரத் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படும். அரசு நிர்வாகத்திற்கும் அத்தியாவசியத் தேவை. அதுமட்டுமின்றி, கல்வி- வேலைவாய்ப்பில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய, இடஒதுக்கீட்டைச் செழுமைப்படுத்தவும் ஜாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மிக அவசியமானது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் ஜாதி வாரியான கணக்கெடுப்பு விவரங்களும் எடுக்கப்பட்டபோதிலும் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடஒதுக்கீட்டிற்கான போராட்டங்கள், கோரிக்கைகளும் மிகப்பெரிய அளவில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்குரிய தீர்வுகளைக் காண, ஜாதி...

தலையங்கம் – மதச்சார்பின்மையை ஒழித்துக்கட்ட அனுமதியோம்!

தலையங்கம் – மதச்சார்பின்மையை ஒழித்துக்கட்ட அனுமதியோம்!

அரசியலமைப்பின் முகப்புரையில் இடம்பெற்றிருக்கும் ‘மதச்சார்பின்மை’ என்ற சொல்லுக்கு வேக வேகமாக முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. “இந்த நாடு இந்துக்களின் நாடு! இந்துக்களின் இராஷ்டிரமாக இருக்க வேண்டும்” என்ற சிந்தனையை சித்தாந்தமாக ஏற்றுக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சிகளில் ஒன்றிய அரசு பணியாளர்கள் பங்கேற்கலாம் என அனுமதி வழங்கியிருக்கிறது ஒன்றிய அரசு. காந்தியடிகள் படுகொலையை ஒட்டி விதிக்கப்பட்ட தடையை சுமார் 58 ஆண்டுகளுக்குப் பிறகு நீக்கியிருக்கிறது ஒன்றிய அரசு. சில நாட்களுக்கு முன்பு, ஜார்க்கண்ட் மாநிலம் விஷ்ணுபூரில் தொண்டர்களிடையே பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “சூப்பர் மேன் ஆசையோடு சிலர் நிற்பதில்லை. தேவர்கள், கடவுள்கள் ஆகவும் விரும்புகிறார்கள்” என்று மோடியை மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருந்த நிலையில், அடுத்த சில நாட்களிலேயே ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்கியிருக்கிறார். இந்தத் தடையை நீக்கியதன் பின்னணியில் பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. இந்த நாட்டில் சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி, பாலியல் சமத்துவம்...

தலையங்கம் – தனியார்துறை இடஒதுக்கீடு அவசியம்!

தலையங்கம் – தனியார்துறை இடஒதுக்கீடு அவசியம்!

ஜவகர்லால் நேருவின் ஆட்சிக்காலம் தொடங்கி மன்மோகன் சிங் ஆட்சிக்காலம் வரையில் இந்தியாவில் 188 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் நரேந்திர மோடி பிரதமரான பிறகு ஒரு பொதுத்துறை நிறுவனம் கூட புதிதாக உருவாக்கப்படவில்லை. அதற்கு மாறாக, பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக கூறுபோட்டு விற்கப்பட்டு வருகின்றன. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கை விற்று, 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டுமென்று 2 ஆண்டுகளுக்கு முன்பு இலக்கு நிர்ணயித்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. அதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான் தேசிய பணமாக்கல் திட்டம் (National Monetisation Pipeline). தற்போது மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலம் தொடங்கிய ஒருசில மாதங்களிலேயே தனியார்மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. பாரத் பெட்ரோலியம் தனியார்மயமாக்கப்படவிருப்பதாக அறிவித்திருக்கிறார் ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். 2023-2024ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டும் 19,000 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருக்கிறது பாரத் பெட்ரோலியம். “வணிகம் செய்வது ஆட்சியாளர்களின் வேலையல்ல, அரசை நிர்வகிப்பது...

தலையங்கம் – மது மட்டும்தான் போதையா?

தலையங்கம் – மது மட்டும்தான் போதையா?

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த துயரமான சம்பவம் ஜூன் மாத இறுதியில் நடைபெற்றது. கள்ளச்சாராயம் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தாலும், சட்டத்திற்குப் புறம்பாக காய்ச்சப்படுவதும், அதனால் அவ்வப்போது இதுபோன்ற உயிரிழப்புகள் நிகழ்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையே, சாராய வியாபாரிகளுடன் திரைமறைவு உடன்படிக்கைகளை செய்துகொண்டு வருமானம் ஈட்டும் வேலையில் ஈடுபடுகிறது என்பதுதான் பரவலான குற்றச்சாட்டு. எனவே காவல்துறை நியாயமாக செயல்பட்டாலே கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை பெரும்பாலும் தடுத்துவிட முடியும். ஆனால் அதற்காக ஒட்டுமொத்தமாக மதுவை ஒழிக்க வேண்டுமென்று பேசுவதோ, அதுகுறித்த கோரிக்கைகளை எழுப்புவதோ அவசியமற்றது. இருப்பினும் அரசியலுக்காக இதுபோன்ற கோரிக்கைகள் எழுப்பப்படுவது வாடிக்கையாகி விட்டது. ஒருவேளை மதுவை ஒழிப்பதுதான் கள்ளச்சாராய மரணங்களை தடுப்பதற்கான ஒரே தீர்வு என்று கூறுவார்களேயானால், மது மட்டுமே போதை இல்லை. ஆன்மீகம் அதைவிட மிகப்பெரிய போதையாக இந்த நாட்டில் உருவெடுத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. குறிப்பாக ஜூலை இரண்டாம்...

தலையங்கம் – தனிச்சட்டமே தீர்வு!

தலையங்கம் – தனிச்சட்டமே தீர்வு!

திருநெல்வேலி மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மிக நீண்ட விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். தாக்குதலில் ஈடுபட்ட ஜாதிச் சங்கத்தை சேர்ந்தவர்கள் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அதில் விளக்கியிருக்கிறார். அத்துடன், “சமூகநீதிக் கொள்கையை தனது உயிர் மூச்சாகக் கொண்டு தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், பெண் கல்வி – சமஉரிமை – ஜாதி மறுப்புத் திருமணம் ஆகியவற்றை தனது ஆரம்பகாலம் தொட்டே ஆதரித்து வரக்கூடிய இயக்கமாகும். இதனை இந்த அவையில் உள்ள அனைவரும் அறிவார்கள்” என்று குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஜாதிப்புனிதம் கெட்டுவிடாமல் பாதுகாப்பதில் தான் இந்து மதத்தின் பெருமை அடங்கியிருக்கிறது. அத்தகைய ஜாதிப் புனிதத்தை காக்க வேண்டிய பொறுப்பு முழுமையாக பெண்களிடமே இருக்கிறது என்கிறது மனு சாஸ்திரம். “பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது தகப்பனாரின் கட்டுப்பாட்டிலும் திருமணமான பிறகு கணவனின் கட்டுப்பாட்டிலும் கணவன் இறந்த பிறகு, பிள்ளைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டுமே தவிர, பெண்கள், தாங்கள்...

தலையங்கம் – ஜாதி ஒழிப்புப் பரப்புரையை கூர்மைப்படுத்துவோம்!

தலையங்கம் – ஜாதி ஒழிப்புப் பரப்புரையை கூர்மைப்படுத்துவோம்!

நெல்லை மாவட்டத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்த காதல் தம்பதிக்கு பாதுகாப்பு அளித்ததற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை ‘வெள்ளாளர் முன்னேற்றக் கழகம்’ என்ற ஜாதி வெறி அமைப்பு அடித்து நொறுக்கியுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த பந்தல் சிவா என்பவரின் தலைமையில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. இதனை பெண் வீட்டாரின் வழக்கமான எதிர்ப்பு மனநிலை என்று கருதிவிட முடியாது. பந்தல் சிவா என்பவர் ஜாதியின் பெயரால் ரவுடித்தனமும், கட்டப் பஞ்சாயத்தும் செய்துகொண்டிருக்கும் நபர். “தனது சொந்த செல்வாக்கை உயர்த்திக்கொள்ள வேண்டும், ஜாதித் திமிரை வெளிக்காட்ட வேண்டும்” என்ற உள்நோக்கத்தோடு திட்டமிட்டே இத்தாக்குதலை நடத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் ஆளும் கூட்டணியிலும், அகில இந்திய அளவில் பிரதான எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியிலும் முக்கிய அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இத்தகைய தாக்குதலை துணிச்சலாக நடத்தியிருப்பது பெரும் கண்டனத்திற்குரியது. ஜாதிவெறி அமைப்புகளின் சட்டவிரோத துணிச்சல் போக்கை தொடக்க நிலையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு...

தலையங்கம் – பாஜகவின் கலவரக் கொள்கை!

தலையங்கம் – பாஜகவின் கலவரக் கொள்கை!

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜகவே மீண்டும் உருவெடுத்திருந்தாலும், அந்த கட்சி பெற்றிருக்கிற பின்னடைவு மிகப்பெரியது. பாஜகவின் இந்த பின்னடைவு குறித்து ‘ஆர்கனைசர்’ இதழில் சுட்டிக் காட்டியிருக்கும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ரத்தன் சாரதா, “400 தொகுதிகளில் வெல்வோம் என்று கூறிக்கொண்டிருந்த பாஜக தலைவர்கள் – தொண்டர்களுக்கு கள உண்மை என்ன என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது தேர்தல் முடிவுகள். எதிர்க்கட்சிகளின் தைரியத்தை பாஜகவினர் உணராமல், கருத்துக்கணிப்பு மாயையில் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். மோடியின் புகழை மட்டும் ரசித்துக்கொண்டு, களத்தில் ஒலிக்கும் குரல்களை காது கொடுத்துக் கேட்காமல் விட்டுவிட்டனர். கூட்டணி விவகாரங்களில் எடுத்த தவறான முடிவால், பாஜகவின் மதிப்பு குறைந்துவிட்டது” என்று கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறார். ராமர் கோயிலை முன்வைத்து 30 ஆண்டு காலமாக பாஜக முன்னெடுத்து வந்த கலவர அரசியல் காலாவதியாகிவிட்டது. மோடி பிம்பமும் மக்களிடம் எடுபடவில்லை என்ற நிலையில், பாஜகவின் கட்டமைப்பிலேயே மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்பதே...

தலையங்கம் – மண்ணைக் கவ்வியது மதவாதம்!

தலையங்கம் – மண்ணைக் கவ்வியது மதவாதம்!

நடைபெற்று முடிந்திருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் பாரதிய ஜனதா கட்சியின் ஆணவத்தையும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்துராஷ்டிரக் கனவையும் அடித்து நொறுக்கியிருக்கிறது. “கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளே இல்லை, மோடி கடவுளின் அவதாரம், கடவுளுக்கு தோல்வி ஏது” என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த இந்துத்துவவாதிகளை, ஆட்சியமைக்க அல்லல்படும் நிலைக்கு மக்கள் தள்ளியிருக்கிறார்கள். நானுறு தொகுதிகளுக்கு மேல் மிக எளிதாக வென்று விடலாம் என்று கூறியதோடு மட்டுமில்லாமல், அதுதான் மக்களின் தீர்ப்பு என்பதைப் போல பெரும்பாலான ஊடகங்களையும் பேச வைத்தது பாஜக. ஆனால் பாஜக வென்றிருப்பதோ வெறும் 240 தொகுதிகளில் மட்டுமே. சிறுபான்மை மக்களுக்கு எதிரான மதவாத வெறுப்புப் பேச்சை நீக்கிவிட்டால் மோடியின் பரப்புரையில் வேறெதுவுமே இருக்கவில்லை. இதன்மூலம் பெரும்பான்மை இந்துக்களை அணிதிரட்டி, அவர்களின் வாக்குகளை அறுவடை செய்துவிடலாம் என்பது பாஜகவின் கனவு. ஆனால் மக்கள் அந்த கனவில் மண்ணைத் தூவி பாஜகவை பெரும்பான்மை இல்லாமல் செய்துவிட்டார்கள். மாநிலக் கட்சிகளை ஒழித்துக் கட்டுவது என்ற சபதமெடுத்தது போல செயல்பட்டவர்கள், இப்போது பெரும்பான்மைக்கு...

தலையங்கம் – பள்ளிக்கல்வித்துறையின் பணிகள் தொடரட்டும்!

தலையங்கம் – பள்ளிக்கல்வித்துறையின் பணிகள் தொடரட்டும்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி டென்மார்க், சுவீடன், நார்வே ஆகிய மேற்கத்திய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாடுகளின் கல்வி வளர்ச்சி, கற்றல் திறன் ஆகியவற்றை நேரில் ஆய்வுசெய்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகளையும் அவர்களிடம் எடுத்துரைத்துள்ளார். குறிப்பாக நார்வே நாட்டில், பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக (The New Western Norway University) நூலகத்தைப் பார்வையிட்டு, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் தலைமை நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். நார்வே நாட்டு ஆசிரியப் பெருமக்களை நமது தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தும், நமது ஆசிரியர்களை அந்நாட்டிற்கு அனுப்பியும் அறிவுசார் பரிமாற்றம் மேற்கொள்வதற்கான வரைவுத் திட்டம் ஒன்றையும் முன்வைத்துள்ளார். ஒன்றிய பாஜக ஆட்சியில் வரலாற்றைத் திரித்து, புராண இதிகாச குப்பைகளைப் பாடத்திட்டங்களில் சேர்க்கும் மோசடியான செயல்கள் சில வடமாநிலங்களில் அரங்கேறும் சூழலில், கல்வி வளர்ச்சியில் உச்சத்தில் இருக்கும் நார்வே நாட்டுடன் தமிழ்நாடு அரசு அறிவுசார் பரிமாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது பெரும் பாராட்டுதலுக்குரியது. உலகின் மிகச்சிறந்த கல்வி கட்டமைப்புகளைக் கொண்ட...

தலையங்கம் – உழைக்கும் பெண்களை இழிவுபடுத்தும் மோடி!

தலையங்கம் – உழைக்கும் பெண்களை இழிவுபடுத்தும் மோடி!

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மிகுந்த பதற்றத்தோடு காணப்படுகிறார் நரேந்திர மோடி. மீண்டும் ஆட்சிக்கு வருவோமா? இல்லையா? என்ற பதற்றத்தில், அவர் உதிர்க்கும் வார்த்தைகள் யாவும் உச்சபட்ச வெறுப்புணர்வை வெளிக்காட்டுகின்றன. இசுலாமியர்கள் குறித்து நாடெங்கும் அவதூறாகப் பேசிவிட்டு, கடைசியில் இல்லை என்று மழுப்பிவிட்டார். காங்கிரஸ் – திமுக – ஆம் ஆத்மி – திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குறித்து மோடியும் பாஜகவினரும் பேசும் பேச்சுக்கள் அநாகரீகத்தின் உச்சமாய் இருக்கின்றன. வாக்கு அரசியலுக்காக இவ்வாறு பேசுகிறார் என்று வைத்துக்கொண்டால் கூட, வாக்களிக்கும் மக்களையே தரம் தாழ்த்திப் பேசும் அளவுக்கு தற்போது எல்லை மீறிச் சென்றுவிட்டார் மோடி. சில மாநிலங்களில் மகளிருக்கு கட்டணமில்லாமல் பேருந்துப் பயணம் வழங்கப்படுவதால், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது என்று மோடி கூறியிருக்கிறார். மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் அமல்படுத்தப்பட்டது. பொருளாதார ரீதியாக இந்தத் திட்டம் ஏற்படுத்தியிருக்கிற...

தலையங்கம் – தேர்தல் ஆணையத்தை காணவில்லை!

தலையங்கம் – தேர்தல் ஆணையத்தை காணவில்லை!

நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. முதல்கட்ட தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்த நரேந்திர மோடி, ராமர் கோயில் குறித்தோ இசுலாமியர்கள் குறித்தோ ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. திமுகவை மட்டுமே குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருந்தார். ஆனால் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரையை தொடங்கிய நாளில் இருந்தே மத வெறுப்பை மட்டுமே உமிழ்ந்து கொண்டிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய மோடி, “நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தையும், சொத்துக்களையும் ஊடுருவல்காரர்களுக்கு, அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு கொடுக்க காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. தாய்மார்களே, சகோதரிகளே உங்கள் மங்கள சூத்திரத்தைக் கூட அவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள்” என்றும், “இறந்த பிறகும் ஒருவருக்கு வரி விதிக்க காங்கிரஸ் கட்சியிடம் திட்டம் உள்ளது” என்றும் பேசினார். கர்நாடக மாநிலம் கலபுர்கியில் பேசும்போது, “ராமர் கோயில் நிறுவப்பட்ட நிகழ்ச்சியில் கூட பங்குகொள்ளாத காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்” என்றார். நவாப்களின்...

தலையங்கம் – ஆலயத் தீண்டாமையை அகற்றுவோம்!

தலையங்கம் – ஆலயத் தீண்டாமையை அகற்றுவோம்!

சேலம் மாவட்டம் காடையம்பட்டிக்கு அருகில் இருக்கிறது தீவட்டிப்பட்டி கிராமம். இப்பகுதியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த சுமார் 500 குடும்பங்களும், அருகே இருக்கிற நாச்சினம்பட்டியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 200 குடும்பங்களும் வசிக்கின்றன. இரு கிராமங்களுக்கும் நடுவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் திருவிழாவை ஒட்டி, மே 1-ஆம் தேதி இரவு உள்ளே சென்று வழிபடச் சென்ற பட்டியல் சமூகத்தினரை ஆதிக்க ஜாதியினர் தடுத்திருக்கிறார்கள். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மே 2-ஆம் தேதி வருவாய்த்துறையினர் மற்றும் அறநிலையத்துறையினர் இருதரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையில் எந்த சமரசமும் எட்டப்படாத நிலையில், சாலையில் நின்று கொண்டிருந்த பட்டியல் சமூகத்தினர் மீது சிலர் கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் அருகில் இருந்த கடைகளுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. இருதரப்பிலும் காவல்துறை சிலரைக் கைது செய்திருக்கிறது. தீவட்டிப்பட்டி பகுதியில் இருக்கும்...

தலையங்கம் – ‘குடிஅரசு’க்கு வயது 100

தலையங்கம் – ‘குடிஅரசு’க்கு வயது 100

உலக வரலாற்றில் அடக்குமுறைகளுக்கு எதிரான இயக்கங்கள், போராட்டங்கள் ஏராளம் உண்டு. நாட்டை மீட்க, எல்லையை மீட்க அல்லது நாட்டை பிரிக்க என மண் சார்ந்த போராட்டங்களே அவற்றில் பெரிதினும் பெரிதாக உள்ளன. அமெரிக்காவில் கருப்பர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள் அல்லாதவர்களை அரசியல் மற்றும் பொருளாதார சமத்துவத்தில் இருந்து விலக்கி வைத்த நிறவெறிக்கொள்கைக்கு எதிரான போராட்டம் போன்ற நிறத்தின் அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டங்களும் உலக வரலாற்றில் உண்டு. ஆனால் இவை பேசப்பட்ட அளவுக்கு, உலக வரலாற்றில் பேசப்படாத மற்றொரு போராட்டம் உண்டென்றால் அது பெரியார் நடத்திய சுயமரியாதைப் போராட்டமே. பிறப்பின் அடிப்படையிலான இன இழிவை நீக்க பெரியார் ‘சுயமரியாதை இயக்கம் கண்டதன் நூற்றாண்டு இவ்வாண்டு நவம்பரில் தொடங்கவிருக்கிறது. சுயமரியாதை இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்பே பெரியார் சுயமரியாதை மீட்புக்கான போராட்டத்தை தொடங்கிவிட்டார். காங்கிரஸ் கட்சியின் 1920 நெல்லை மாநாடு, 1921 தஞ்சை மண்டல மாநாடு, திருப்பூர் மாகாண மாநாடு,...

தலையங்கம் – ஆரிய மாடலும், திராவிட மாடலும்!

தலையங்கம் – ஆரிய மாடலும், திராவிட மாடலும்!

2023ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் நாள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்துவைத்து பிரதமர் மோடி, உள்ளே செங்கோலை நிறுவினார். அரசியலமைப்புச் சட்டப்படி செயல்படும் நாட்டில் செங்கோல் வைப்பது ஏன் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, திறப்பு விழாவில் இந்த நாட்டின் முதல் குடிமகளே நிராகரிக்கப்பட்ட பேரவலம் நடந்தது. பாலிவுட் நடிகைகள் கூட நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு மட்டும் அழைப்பு இல்லை. காரணம் அவர் ஒரு பழங்குடிப் பெண், அதை விட மிக முக்கியமாகக் கணவரை இழந்த பெண். ஒரு விதவையை நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு அழைக்கக்கூடாது என்ற சனாதன சிந்தனையே அதற்குப் பின்னால் ஒளிந்திருந்தது. அதுதான் ஆரிய சனாதன மாடல். இப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு நியமன விவகாரத்திலும் சனாதன தர்மம் என்றால் என்ன என்று சங்கிகள் மிக அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத் துறை...

தலையங்கம் – பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?

தலையங்கம் – பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?

ஆரிய – திராவிட யுத்தமாகவே களத்தை இரண்டாகப் பிரித்திருக்கிறது நாடாளுமன்றத் தேர்தல். மீண்டும் ஒருமுறை பாஜக அரசு அமைந்தால், அது எத்தகைய பேராபத்தை விளைவிக்கும் என்பதை, பாஜகவினர் பரப்புரையில் உதிர்க்கும் வார்த்தைகளே நமக்கு எச்சரிக்கையூட்டுகின்றன. வடசென்னை தொகுதிக்குட்பட்ட திருவிக நகர் பகுதியில், திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து ஏப்ரல் 1-ஆம் தேதி பரப்புரையில் ஈடுபட்ட, திமுக நிர்வாகி தமிழ்வேந்தன், “மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாம ஆட்டுக்கறியும் சாப்பிட முடியாது, மாட்டுக்கறியும் சாப்பிட முடியாது. கோழிக்கறியும் சாப்பிட முடியாது. தயிர் சாதம், புளி சாதம்,, சாம்பார் சாதம் மட்டும் தான் சாப்பிட முடியும்” என்று மக்கள் மத்தியில் பேசினார். தேர்தல் வெற்றிக்காக தரைமட்ட அளவுக்கு திமுக விமர்சனங்களை வைப்பதாக இந்த காணொளியை பகிர்ந்து பாஜகவினர் வசைபாடினர். ஆனால் அதுதான் நடக்கப்போகிறது என்பதை பிரதமர் மோடியே நேரடியாக எச்சரித்துவிட்டார். ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர்கள் லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வியுடன் இணைந்து...

தலையங்கம் – வீழ்த்த முடியாத கட்சியா பாஜக?

தலையங்கம் – வீழ்த்த முடியாத கட்சியா பாஜக?

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கூட இன்னும் நடக்கவில்லை. ஆனால் மோடி மூன்றாவது முறையாக மோடி பிரதமராகி விட்டார் என்று மட்டும்தான் இன்னும் சில ஊடகங்கள் எழுதவில்லை. ரஷ்யாவை, சீனாவைப் போல ஒற்றைக் கட்சி ஆட்சிமுறைக்கு இந்தியாவும் வந்துவிட்டதோ எனத் தோன்ற வைக்கும் அளவுக்கு சில ஊடகங்கள் பாஜக செய்திகளை அணுகிக் கொண்டிருக்கின்றன. கடைசியாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான திட்டங்களை தயாரிக்குமாறு கேபினட் அமைச்சர்களுக்கு மோடி உத்தரவிட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. இன்னும் சில ஊடகங்களோ ஒரு படி மேலே போய், மீண்டும் மோடி பிரதமராக பதவியேற்கும்போது குறைவான எண்ணிக்கையிலான அமைச்சகங்களே இருக்கும் என்று எழுதியிருக்கின்றன. பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் மோடிதான் வெற்றியாளர் என்று கருத்துக் கணித்துவிட்டன. எதிர்க்கட்சிகளால் நாடு தழுவிய அளவில் இந்தியா கூட்டணி பலமாக அமைக்கப்பட்டுள்ள போதிலும், கண்ணுக்கு எட்டிய வரை மோடிக்கு எதிரியே இல்லை என்று தேசிய ஊடகங்கள்...

தலையங்கம் – வேலைவாய்ப்பு எங்கே?

தலையங்கம் – வேலைவாய்ப்பு எங்கே?

நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக வேலைவாய்ப்பின்மையும் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஆக்கப்பூர்வ முன்னெடுப்பு எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, பக்கோடா விற்று பிழைத்துக்கொள்ளுங்கள் என்று பிரதமரே அறிவுறுத்தியதுதான் மிச்சம். ஒருவாரத்திற்கு முன்பு கூட ஒன்றிய தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் இதுகுறித்து மிக மோசமான கருத்துக்களை உதிர்த்தார். “வேலைவாய்ப்பு போன்ற அனைத்து சமூக மற்றும் பொருளாதார பிரச்னைகளையும் அரசே தீர்க்க முடியாது. முதலீடுகள் அதிகரிக்கும்போது வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்” என்றார். வேலைவாய்ப்பின்மையின் தீவிரமே ஒன்றிய பாஜக அரசுக்கு புரியவில்லை அல்லது புரிய வேண்டும் என்ற அவசியம் அவர்களுக்கு ஏற்படவில்லை என்பதைத்தான் இக்கருத்துகள் உணர்த்துகின்றன. மதத்தின் பெயரால் மக்களைத் திரட்டி வாக்குகளை அறுவடை செய்துவிடலாம், அதற்கு ராமர் கோயில் ஒன்றே போதுமானது என பாஜகவினர் கருதிக் கொண்டிருக்கிறார்கள் போல. India Employment Report 2024...

தலையங்கம் – பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!

தலையங்கம் – பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஆகியோரைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். தேர்தல் சமயத்தில் நடந்திருக்கும் இக்கைது வடமாநிலங்களில் பாஜகவுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரென் கைது செய்யப்பட்டிருக்கிறார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி நிர்வாகிகள் இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளனர். எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாகப் பழிவாங்க இத்தகைய கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற விமர்சனம் இதுவரை இந்திய அளவில் மட்டுமே எதிரொலித்துக் கொண்டிருந்தது. இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கைதால் இது சர்வதேச விவாதமாகியிருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என ஜெர்மனி வெளியுறவு அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் செபாஸ்டியன் பிஷ்ஷரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “இந்த வழக்கை கவனத்தில் எடுத்துள்ளோம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நீதித்துறையின்...

தலையங்கம் – சி.ஏ.ஏ.-வை திரும்பப் பெறு!

தலையங்கம் – சி.ஏ.ஏ.-வை திரும்பப் பெறு!

இந்தியாவின் மதச்சார்பின்மையை சுக்கு நூறாக உடைக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி, அண்டை நாடுகளான வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயினர்கள், பாரசீகர்கள், கிறித்தவர்கள் இந்தியாவுக்கு வந்தால் அவர்கள் குடியுரிமை பெறலாம். ஆனால் இசுலாமியர்கள் வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது. அதேபோல இலங்கையில் இருந்து வரும் தமிழர்களுக்கும், அவர்கள் இந்துக்களாக இருந்தாலும் குடியுரிமை வழங்கப்படாது. ஆக, பாஜகவின் அணுவில் ஊறிப்போன மத வெறுப்பும், தமிழின விரோதப் போக்குமே இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழ், தமிழர் என்றெல்லாம் மோடி பேசுவதெல்லாம் பாஜக மீதான வெறுப்புணர்வை கரைக்கும் முயற்சியே தவிர, உண்மையான பற்றில்லை என்பதற்கு இது ஒன்றே போதுமானது. 2019ஆம் ஆண்டில் இந்த சட்டத்திற்கு எதிராக மிகக் கடுமையான போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தன....

தலையங்கம் – பாஜகவால் யாருக்கு ஆபத்து?

தலையங்கம் – பாஜகவால் யாருக்கு ஆபத்து?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், வட மாநிலங்களில் வேலையின்மை, வறுமை போன்ற வாழ்வாதார சிக்கல்கள் மேலோங்கி இருக்கின்றன. பாஜகவின் வழக்கமான இந்துத்துவ கோஷம் இந்தத் தேர்தலில் எடுபடப் போவதில்லை, இந்தி ஹார்ட்லேண்ட் எனப்படும் இந்தி மொழி பேசும் மக்கள் அடர்த்தியாக வாழும் மாநிலங்களிலேயே பாஜகவுக்கு சறுக்கல் ஏற்படும் என்று அரசியல் வல்லுநர்கள் பலரும் கூறுகின்றனர். அதற்கேற்ப இந்தியா கூட்டணி தலைவர்களும் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு உரிமைகளையே அதிகம் முன் வைக்கின்றனர். பெரும்பான்மை மக்களாகிய பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடி சமூகத்தினரிடம் இதற்கு ஆதரவுகள் பெருகி வருகிறது. குறிப்பாக, பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் 10 நாட்களாக அம்மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மார்ச் 3ஆம் தேதி பாட்னாவில் “ஜன் விஸ்வாஸ்’ பரப்புரையின் நிறைவுக் கூட்டத்தை நடத்தினார். ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில், 15 நேரம் விட்டு விட்டு பெய்த...