Category: தலையங்கம்

தலையங்கம் – வீழ்த்த முடியாத கட்சியா பாஜக?

தலையங்கம் – வீழ்த்த முடியாத கட்சியா பாஜக?

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கூட இன்னும் நடக்கவில்லை. ஆனால் மோடி மூன்றாவது முறையாக மோடி பிரதமராகி விட்டார் என்று மட்டும்தான் இன்னும் சில ஊடகங்கள் எழுதவில்லை. ரஷ்யாவை, சீனாவைப் போல ஒற்றைக் கட்சி ஆட்சிமுறைக்கு இந்தியாவும் வந்துவிட்டதோ எனத் தோன்ற வைக்கும் அளவுக்கு சில ஊடகங்கள் பாஜக செய்திகளை அணுகிக் கொண்டிருக்கின்றன. கடைசியாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான திட்டங்களை தயாரிக்குமாறு கேபினட் அமைச்சர்களுக்கு மோடி உத்தரவிட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. இன்னும் சில ஊடகங்களோ ஒரு படி மேலே போய், மீண்டும் மோடி பிரதமராக பதவியேற்கும்போது குறைவான எண்ணிக்கையிலான அமைச்சகங்களே இருக்கும் என்று எழுதியிருக்கின்றன. பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் மோடிதான் வெற்றியாளர் என்று கருத்துக் கணித்துவிட்டன. எதிர்க்கட்சிகளால் நாடு தழுவிய அளவில் இந்தியா கூட்டணி பலமாக அமைக்கப்பட்டுள்ள போதிலும், கண்ணுக்கு எட்டிய வரை மோடிக்கு எதிரியே இல்லை என்று தேசிய ஊடகங்கள்...

தலையங்கம் – வேலைவாய்ப்பு எங்கே?

தலையங்கம் – வேலைவாய்ப்பு எங்கே?

நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக வேலைவாய்ப்பின்மையும் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஆக்கப்பூர்வ முன்னெடுப்பு எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, பக்கோடா விற்று பிழைத்துக்கொள்ளுங்கள் என்று பிரதமரே அறிவுறுத்தியதுதான் மிச்சம். ஒருவாரத்திற்கு முன்பு கூட ஒன்றிய தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் இதுகுறித்து மிக மோசமான கருத்துக்களை உதிர்த்தார். “வேலைவாய்ப்பு போன்ற அனைத்து சமூக மற்றும் பொருளாதார பிரச்னைகளையும் அரசே தீர்க்க முடியாது. முதலீடுகள் அதிகரிக்கும்போது வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்” என்றார். வேலைவாய்ப்பின்மையின் தீவிரமே ஒன்றிய பாஜக அரசுக்கு புரியவில்லை அல்லது புரிய வேண்டும் என்ற அவசியம் அவர்களுக்கு ஏற்படவில்லை என்பதைத்தான் இக்கருத்துகள் உணர்த்துகின்றன. மதத்தின் பெயரால் மக்களைத் திரட்டி வாக்குகளை அறுவடை செய்துவிடலாம், அதற்கு ராமர் கோயில் ஒன்றே போதுமானது என பாஜகவினர் கருதிக் கொண்டிருக்கிறார்கள் போல. India Employment Report 2024...

தலையங்கம் – பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!

தலையங்கம் – பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஆகியோரைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். தேர்தல் சமயத்தில் நடந்திருக்கும் இக்கைது வடமாநிலங்களில் பாஜகவுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரென் கைது செய்யப்பட்டிருக்கிறார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி நிர்வாகிகள் இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளனர். எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாகப் பழிவாங்க இத்தகைய கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற விமர்சனம் இதுவரை இந்திய அளவில் மட்டுமே எதிரொலித்துக் கொண்டிருந்தது. இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கைதால் இது சர்வதேச விவாதமாகியிருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என ஜெர்மனி வெளியுறவு அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் செபாஸ்டியன் பிஷ்ஷரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “இந்த வழக்கை கவனத்தில் எடுத்துள்ளோம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நீதித்துறையின்...

தலையங்கம் – சி.ஏ.ஏ.-வை திரும்பப் பெறு!

தலையங்கம் – சி.ஏ.ஏ.-வை திரும்பப் பெறு!

இந்தியாவின் மதச்சார்பின்மையை சுக்கு நூறாக உடைக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி, அண்டை நாடுகளான வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயினர்கள், பாரசீகர்கள், கிறித்தவர்கள் இந்தியாவுக்கு வந்தால் அவர்கள் குடியுரிமை பெறலாம். ஆனால் இசுலாமியர்கள் வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது. அதேபோல இலங்கையில் இருந்து வரும் தமிழர்களுக்கும், அவர்கள் இந்துக்களாக இருந்தாலும் குடியுரிமை வழங்கப்படாது. ஆக, பாஜகவின் அணுவில் ஊறிப்போன மத வெறுப்பும், தமிழின விரோதப் போக்குமே இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழ், தமிழர் என்றெல்லாம் மோடி பேசுவதெல்லாம் பாஜக மீதான வெறுப்புணர்வை கரைக்கும் முயற்சியே தவிர, உண்மையான பற்றில்லை என்பதற்கு இது ஒன்றே போதுமானது. 2019ஆம் ஆண்டில் இந்த சட்டத்திற்கு எதிராக மிகக் கடுமையான போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தன....

தலையங்கம் – பாஜகவால் யாருக்கு ஆபத்து?

தலையங்கம் – பாஜகவால் யாருக்கு ஆபத்து?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், வட மாநிலங்களில் வேலையின்மை, வறுமை போன்ற வாழ்வாதார சிக்கல்கள் மேலோங்கி இருக்கின்றன. பாஜகவின் வழக்கமான இந்துத்துவ கோஷம் இந்தத் தேர்தலில் எடுபடப் போவதில்லை, இந்தி ஹார்ட்லேண்ட் எனப்படும் இந்தி மொழி பேசும் மக்கள் அடர்த்தியாக வாழும் மாநிலங்களிலேயே பாஜகவுக்கு சறுக்கல் ஏற்படும் என்று அரசியல் வல்லுநர்கள் பலரும் கூறுகின்றனர். அதற்கேற்ப இந்தியா கூட்டணி தலைவர்களும் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு உரிமைகளையே அதிகம் முன் வைக்கின்றனர். பெரும்பான்மை மக்களாகிய பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடி சமூகத்தினரிடம் இதற்கு ஆதரவுகள் பெருகி வருகிறது. குறிப்பாக, பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் 10 நாட்களாக அம்மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மார்ச் 3ஆம் தேதி பாட்னாவில் “ஜன் விஸ்வாஸ்’ பரப்புரையின் நிறைவுக் கூட்டத்தை நடத்தினார். ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில், 15 நேரம் விட்டு விட்டு பெய்த...

தலையங்கம் – முன்னேறுகிறது இந்தியா; சறுக்குகிறது பாஜக

தலையங்கம் – முன்னேறுகிறது இந்தியா; சறுக்குகிறது பாஜக

தேர்தல் காலங்களில் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையங்கள், நீதிமன்றங்கள் என பாஜகவின் கட்டுப்பாட்டில் பல துறைகள் இருப்பதைப் போல ஊடகத் துறையும் ஒன்றாக கலந்துவிட்டன. கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்துருவாக்கத்தை கட்டமைப்பதையே பல ஊடகங்கள் செய்கின்றன. 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வேலையின்மை, விலைவாசி உயர்வு பிரச்னைகள் மக்களை வாட்டி வதைக்கிறது. விளைபொருட்களுக்கு உரிய விலை கேட்டு டெல்லியை நோக்கிச் செல்லும் விவசாயிகள் மீது மும்முனைகளில் இருந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாரதிய ஜனதா அரசு. காவல்துறை லத்திகளால் கடும் காயங்களை சந்தித்திருக்கிறார்கள் விவசாயிகள். கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, காற்றின் வழியாகவும் நிலைகுலையச் செய்திருக்கிறார்கள். டிரோன்களை பறக்கவிட்டு, அதில் இருந்து ரப்பர் குண்டு மழை பொழிந்து விவசாயிகளின் உடல்களை குத்திக் கிழித்திருக்கிறார்கள். இதுவரை 3 விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். உற்பத்தித் துறை, ஏற்றுமதித் துறை, சேவைத்துறை என...

தலையங்கம் – பிரதமர் ராஜினாமா செய்வாரா?

தலையங்கம் – பிரதமர் ராஜினாமா செய்வாரா?

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்காக ‘தேர்தல் பத்திரங்கள்’ என்ற நடைமுறையை 2018-ஆம் ஆண்டில் கொண்டு வந்தது ஒன்றிய பாஜக அரசு. உரிய விவாதம் கூட இல்லாமல் நிதி மசோதாவாக இந்த சட்டம் இயற்றப்பட்டது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் கார்பரேட் நிறுவனங்கள், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இந்த நன்கொடையை வழங்கலாம். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வெளியிடப்படும் பத்திரங்களை பெற்று, அரசியல் கட்சிகளிடம் கொடுத்துவிட்டால், அந்த கட்சிகள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் செலுத்தி பணமாக பெற்றுக்கொள்ளும். இதனை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை, பொதுமக்களுக்கு சொல்ல வேண்டிய தேவையில்லை என்றும் சட்டத்தில் ஏற்படுத்தினார்கள். இச்சட்டம் இயற்றப்பட்டபோது பெருநிறுவனங்கள் தங்களுடைய மூன்று ஆண்டு லாபத்தின் சராசரியில் 7.5% விழுக்காட்டுக்கும் மேல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க முடியாது என்ற வரம்பும் நீக்கப்பட்டது. அதாவது, நிறுவனங்களை மிரட்டிப் பணம் பறிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் சட்டத்தின் வாயிலாகவே ஏற்படுத்தி வைத்தது...

தலையங்கம் – சோதனைக்கூட எலிகளா மக்கள்?

தலையங்கம் – சோதனைக்கூட எலிகளா மக்கள்?

அயோத்தியில் ராமர் கோயிலை கட்டிவிட்டோம், காஷ்மீருக்கான சிறப்பு உரிமையை பறித்து விட்டோம் என்ற மிதப்போடு பொது சிவில் சட்டத்தை திணிக்க துணிந்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அதற்கு முன்னோட்டமாகத்தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். இதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிக்கும் அனைத்து மதத்தினருக்கும் திருமணம், விவகாரத்து சார்ந்த நடைமுறைகளில் இனி ஒரே சட்டம்தான் இருக்கப் போகிறது. அந்தந்த மத வழக்கப்படி திருமணம் செய்யலாம், ஆனால் யார் யாரைத் திருமணம் செய்ய வேண்டுமென்பதற்கு பொது சிவில் சட்டம் பல நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வதற்கும், விவாகரத்து செய்வதற்கும்கூட பொது சிவில் சட்டத்தில் விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இசுலாமியர்களின் திருமண விவகாரங்களில் மூக்கை நுழைப்பதாக நினைத்து பாஜக அரசு உருவாக்கிய இந்த சட்டத்தால் இந்துக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி கிளம்பியிருக்கிறது. யார் யாரை திருமணம் செய்ய வேண்டுமென்று பாஜக அரசு முடிவு செய்யக்கூடாது, இந்த சட்டத்தின் கூறுகள் பெரும்பாலும்...

தலையங்கம் – பெரியாரின் சுற்றுப்பயணம் முடியவில்லை!

தலையங்கம் – பெரியாரின் சுற்றுப்பயணம் முடியவில்லை!

1973-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் தந்தை பெரியாரின் உயிர் பிரிந்தபோது “பெரியார் தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திக்கொண்டார்” என இரங்கற்பா எழுதினார் கலைஞர். பெரியாரின் உடல் மட்டும்தான் அப்போது இயக்கத்தை நிறுத்திக்கொண்டதே தவிர, அவரது சிந்தனைகளும் தத்துவங்களும் இன்னமும் சூறாவளி போலச் சுற்றிக்கொண்டே இருக்கிறது. போர்க்களத்தில் எதிரியிடம் இருந்து தற்காத்துக்கொள்ள கேடயமும், எதிரியைத் திருப்பித் தாக்குவதற்கு வாளும் வைத்திருப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு களம் எதுவானாலும் கேடயமும் பெரியார்தான், வாளும் பெரியார்தான். பெரியாரை முன்னிறுத்தித்தான் தமிழ்நாட்டின் போராட்டக் களங்கள் வடிவமைக்கப்படுகின்றன. பெரியாரைத் துணைகொண்டுதான் தமிழ்நாட்டின் உரிமைக் குரல்கள் எழுப்பப்படுகின்றன. நூறாண்டுகளுக்கு முன் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவிக்கும் போது இங்கு படித்தவர்கள் நூற்றுக்கு 10 பேர் கூட இல்லை. ஆனால் இன்றைக்கு படிக்கச் செல்லாதவர்கள் நூற்றுக்குப் பத்து பேர் கூட இல்லை என்ற தலைகீழ் மாற்றத்தை கண்டிருக்கிறோம். கல்வியில், ஆராய்ச்சியில், கட்டமைப்பு வளர்ச்சியில், பொருளாதார தன்னிறைவில் என ஒவ்வொரு...

தலையங்கம் : தலைதூக்கும் சர்வாதிகாரத்தை ஒட்ட நறுக்குவோம்

தலையங்கம் : தலைதூக்கும் சர்வாதிகாரத்தை ஒட்ட நறுக்குவோம்

தலையங்கம் : தலைதூக்கும் சர்வாதி என்.டி.டி.வி நிறுவனத்தை ஏற்கெனவே முழுமையாக கையகப்படுத்திவிட்ட அதானி குழுமம், இப்போது ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்தின் பங்குகளை 50 விழுக்காடு வாங்கிவிட்டது. ஊடகத் துறையில் அதானி குழுமம் தனது ஆக்டோபஸ் கரங்களை பரப்பிக்கொண்டே இருப்பதன் பின்னணி குறித்த சந்தேகங்கள் வலுத்துக்கொண்டே இருக்கின்றன. இன்னொரு பக்கம் ஒன்றிய அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டாலே, கடும் நெருக்கடிகளை ஊடக நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன. குஜராத் கலவரம் தொடர்பாக முக்கிய ஆவணப் படம் ஒன்றை இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிபிசி நிறுவனம் வெளியிட்டது. அதற்காக, பிப்ரவரி மாதத்தில் வருமான வரித்துறை சோதனையை எதிர்கொண்டது பிபிசி நிறுவனம். அதேபோல “நியூஸ் கிளிக்” ஊடகம் சீனாவில் இருந்து நிதி பெற்றதாகக் கூறி, அதன் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. “நியூஸ் கிளிக்” நிறுவனரான பிரபீர் புர்காயஸ்தா இன்னமும் சிறையில் இருக்கிறார். ஒன்றிய அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டால் இதுதான் நிலைமை என்று பகிரங்கமாக மிரட்டுவதாகவே இச்சம்பவங்கள் இருந்தன....

தலையங்கம் – அயோத்தி அரசியல்

தலையங்கம் – அயோத்தி அரசியல்

அயோத்தி அரசியலை தீவிரமாக முன்னெடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் ‘இராமனை’ ஓட்டு வங்கியாக மாற்றும் நடவடிக்கைகளில் உத்திரபிரதேச மாநில அரசும், ஒன்றிய அரசும் தீவிரம் காட்டி வருகின்றன. வருகிற ஜனவரி 22ல் இராமன் கோயில் திறக்கப்பட இருக்கிறது. இராம ஜென்ம பூமி அறக்கட்டளை ரூ.1800/- கோடி செலவில் பாப்ரி மசூதி இருந்த இடத்தில் இந்த கோயிலை கட்டி முடித்திருக்கிறது. இதனால் அயோத்தியில் வீட்டுமனைகளின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக உத்திரபிரதேச வருவாய்துறை அமைச்சர் கூறுகிறார். சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் ஆண்டுகளில் ரூ.4500/- கோடி செலவில் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் புதிய நகரங்களை உருவாக்க தனியாருக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. விழாவின் கதாநாயகன் பிரமர் மோடி இராமன் சிலையை சுமந்து வந்து கர்ப்ப கிரகத்தில் நிறுவப் போகிறார் என்பதில் இருந்தே இதற்கு பின்னால் உள்ள அரசியலை புரிந்துகொள்ள முடியும் கோயில் கர்ப்பகிரகம் புனிதமானது என்றும் அதில் பிராமணர்கள் மட்டுமே பூஜை செய்ய முடியும்...

தலையங்கம் – தூய்மைப் பணியாளர்களின் அவலம்

தலையங்கம் – தூய்மைப் பணியாளர்களின் அவலம்

2015ம் ஆண்டு வெள்ளத்துக்குப் பிறகு சென்னை மீண்டும் ஒரு வெள்ள அபாயத்தை சந்தித்து அதிலிருந்து மீண்டுவந்திருக்கிறது. 2015ம் ஆண்டில் வந்தது செயற்கை வெள்ளம், இப்போது வந்திருப்பது இயற்கை வெள்ளம் என்று தமிழ்நாடு முதல்வர் கூறியிருக்கிறார். அதற்குக் காரணம் உண்டு. 2015ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியான செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவிப்பின்றி திறந்துவிடப்பட்டதால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது.  இப்போது இயற்கயின் சீற்றம், 2015ல் பெய்த மழையின் அளவை விட இரு மடங்கு அதிகமாக மழையை சென்னை சந்தித்துள்ளது. அப்போது சராசரியாக 25செ.மீ அளவு, இப்போது 47 செ.மீ அளவு. நான்காண்டு காலம் முதல்வராக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியின் மீது குற்றம் சுமத்தி பேரிடரிலும் அரசியல் நடத்த விரும்புவது தான் வேதனைக்குரியது. சென்னையில் ரூ.3000 கோடி செலவில் மழைநீர் தேங்காமல் வடிகால் பணிகளை திமுக ஆட்சி மேற்கொண்டும் ஏன் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது...

தலையங்கம் – கீதையில் இருக்கிறது சனாதனம்!

தலையங்கம் – கீதையில் இருக்கிறது சனாதனம்!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும், அது மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வை விதைக்கிறது என்று அமைச்சர் உதயநிதி கூறியபோது, “இந்துக்களை ஒழிக்க வேண்டும்” என்று பேசுகிறார் என திரிபுவாதம் செய்து தேசிய அளவிலான விவாதப்பொருளாக இந்துத்துவா கும்பல் மாற்றியது. சனாதனத்தில் ஏற்றத்தாழ்வுக்கே இடமில்லை, அது ஒரு வாழ்வியல் நெறி என்றெல்லாம் அவரவருக்கு தோன்றியதை, வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினார்களே ஒழிய, எவரும் சனாதனம் என்றால் இதுதான் என தெளிவாக விளக்கவே இல்லை. பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் ஒருவரே, இப்போது தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறார். அசாம் மாநில முதல்வரான ஹிமந்த பிஸ்வா சர்மா தனது X பக்கத்தில் (டிவிட்டர்) கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள சில வரிகளைப் பதிவிட்டிருந்தார். “பகவத் கீதையின்படி, பிராமணர்கள், சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் ஆகிய மூன்று சாதியினருக்கும் சேவை செய்வது சூத்திரர்களின் இயற்கையான கடமை” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது. பிற்படுத்தப்பட்டோரை பிரதமர் ஆக்கிவிட்டோம், பழங்குடியினரை குடியரசுத் தலைவர் ஆக்கிவிட்டோம், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான எல்.முருகனை ஒன்றிய அமைச்சராக்கிவிட்டோம்,...

தலையங்கம் – ராமர் மண்ணும் ராமசாமி மண்ணும்

தலையங்கம் – ராமர் மண்ணும் ராமசாமி மண்ணும்

மோடி ஆட்சியில் தொழில்துறை மிகப்பெரிய வளர்ச்சி கண்டிருப்பதாக, சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டில் பேசிவிட்டுச்  சென்றிருக்கிறார் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல். ஆனால் மோடி ஆட்சியின் முக்கியத்துவம் எதற்கு என்பதை  “அயோத்தி” வெட்டவெளிச்சமிட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறது. அயோத்தியில் ராமர் கோயிலை திறப்பதற்கு நாள் குறித்துவிட்டார்கள். ஜனவரி 22-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி ராமர் சிலையை தொட்டு நிறுவப் போகிறார். அதைவைத்தே நாடாளுமன்றத் தேர்தலை வென்றுவிடலாம் எனக் கணக்குப் போட்டிருக்கிறது பாஜக. ஆனால் “சூத்திரர்கள் மசூதியை இடித்ததோடும், அந்த இடத்தில் இப்போது கோயிலைக் கட்ட கோடி கோடியாய் பணத்தையும் பொருளையும் கொட்டியதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் சனாதன தர்மம். அதைவிடுத்து ராமர் சிலையை சூத்திரரான மோடி தொட்டு நிறுவ ஆசைப்படலாமா? சமூக ஒழுங்கு என்ன ஆவது?” என்ற தொனியில் குரல்கள் எழுந்திருக்கின்றன. “பிரதமர் மோடி ராமர் சிலையை தொட்டு, நிறுவும்போது சங்கராச்சாரியான நான் அங்கே நின்று கைதட்ட வேண்டுமா? ராமர்...

தலையங்கம் – இப்படியும் ஒரு இந்துயிசம்!

தலையங்கம் – இப்படியும் ஒரு இந்துயிசம்!

பண்பாடு, கலாசாரம் போன்றவை மாறாது, நிலையானது என்பது உலகம் முழுவதும் இருக்கிற பழமைவாதிகளின் கருத்து. ஆனால் அந்தந்த ஊர்களுக்கு ஏற்றவாறு அனைத்து மத கலாச்சாரங்களும் வளைந்து நெளிந்துதான் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் இந்து மதம் சிறு மாற்றங்களுக்குக் கூட இடம்தர முடியாது என இன்னமும் ஜாதியின் பெயரால் ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்தத் துடிக்கிறது. நமக்கு மிக அருகாமையில் இருக்கிற இந்தோனேசியாவில் கூட இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை, அடக்குமுறைகள் இல்லை என்ற செய்திகள் சமீபத்தில் ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்திருக்கிறது. கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூகவியல் கொள்கைத் துறை பேராசிரியர் நீரஜ் கவுசால் சமீபத்தில் இந்தோனேசியாவுக்கு பயணம் செய்து, அங்கு இந்துயிசம் எப்படி இருக்கிறது என்ற ஆச்சரியம் தரக்கூடிய தகவல்களை கொடுத்திருக்கிறார். இந்தோனேசியா இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடு. இந்துக்கள் குறைந்த எண்ணிக்கையில் அங்கு வாழ்கின்றனர். அவர்கள்  கி.பி. ஒன்றாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த வணிகர்கள். இந்தியாவைப் போல அங்கும் இந்துக்களி்டம்...

தலையங்கம் – ராமரை புறக்கணித்த தமிழ்நாடு!

தலையங்கம் – ராமரை புறக்கணித்த தமிழ்நாடு!

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதால் ராமராஜ்ஜியமே அமைத்துவிட்டதைப் போல சங்கிகள் மிதக்கிறார்கள். ராமர் கோயில் குடமுழுக்கு நடந்த நாளில் வீடுகளில் விளக்கேற்றுங்கள், வழிபடுங்கள் என்றெல்லாம் பாஜகவினர் நாடு முழுக்க மக்களிடையே பரப்புரை செய்தார்கள். நாடு முழுக்க ராமரை வைத்து அரங்கேறிய கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நாடு முழுக்க பல இடங்களில் அன்றைய தினம் கோயில்களுக்கு சென்ற பக்தர்களின் கைகளில் ராமர் படங்களையும், அயோத்தி பிரசாதம் என்ற பெயரில் ஒன்றையும் வலிந்து திணித்திருக்கிறார்கள். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் அரைநாள் விடுமுறை அளித்தனர். பாஜக ஆளும் மாநிலங்களில் அன்று அரசு விடுமுறை. உத்தரபிரதேசத்திலும் அதனைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலும் ஜனவரி 22 அன்று, இந்துக்கள் யாராவது இறந்தால் பிணங்களை எரிக்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டது. போர்க்காலங்களில் கூட உலகில் எங்கும் மருத்துவமனைகள் மூடப்படுவதில்லை. ஆனால் ராமர் கோயில் திறப்புக்காக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் அரைநாள் விடுமுறை என அறிவித்து,...

தலையங்கம் – இடஒதுக்கீட்டிற்கு பேராபத்து!

தலையங்கம் – இடஒதுக்கீட்டிற்கு பேராபத்து!

ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இடஒதுக்கீட்டை ஒவ்வொரு கல்லாகப் பெயர்த்தெடுக்கிற முயற்சியை பாஜக மிகக் கவனமாக செய்துகொண்டே இருக்கிறது. 10 ஆண்டுகள் ஆட்சிக்காலம் முடியும் இத்தருவாயில், இடஒதுக்கீட்டை ஒரே அடியாக ஒழித்துக் கட்ட துணிந்திருக்கிறது பாஜக அரசு. உயர்கல்வி நிறுவனங்களில் அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துவதற்கான வரைவு வழிகாட்டுதல் ஒன்றை கடந்த வாரம் பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) வெளியிட்டிருந்தது. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நிரப்ப போதுமான ஆட்கள் இல்லாவிட்டால், அந்த இடங்களை பொதுப்பிரிவுக்கு (ஓ.சி.) மாற்றிக் கொள்ளலாம் என்பது அந்த அறிக்கை. ஒன்றிய அரசு பணியிடங்களில் ஏற்கெனவே, பெரும்பான்மை இடங்களை பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்ஜாதியினரே ஆக்கிரமித்துக் கொள்ளும் போக்குதான் நிலவிக் கொண்டிருக்கிறது. இடஒதுக்கீட்டை அதிகரித்து சமூகத்தை சமத்துவமடையச் செய்ய வேண்டிய தேவைகள் இருக்கையில், இடஒதுக்கீட்டின் நோக்கம் நிறைவேறும் முன்பே அதை ஒட்டுமொத்தமாக குழி தோண்டிப் புதைக்கும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு பல்கலைக்கழக மானியக் குழு...

தலையங்கம் – அமைச்சர் உதயநிதியின் உறுதியை பாராட்டுகிறோம்

தலையங்கம் – அமைச்சர் உதயநிதியின் உறுதியை பாராட்டுகிறோம்

தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆட்சியே போனாலும், சனாதன எதிர்ப்பை கைவிட மாட்டோம், திராவிட இயக்கம் தோன்றியதே சனாதன எதிர்ப்புக்காகத்தான் என்று உறுதியுடன் அறிவித்து விட்டார். இந்த கொள்கை உறுதியை நாம் பாராட்டி வரவேற்கிறோம். தேர்தல் வாக்கு வங்கி அரசியல் என்று வந்துவிட்டால், பல நேரங்களில் கொள்கைகளை பின்வாங்கச் செய்துவிடும். இதுதான் பொதுவான தமிழகத்தின் அரசியல், ஆனால் உதயநிதி என்ற இளைஞர் அதில் மாறுபட்டு தனது கொள்கை அடையாளத்தைப் பற்றி நிற்பது அரசியலில் ஓர் அதிசயம் என்றே கூறுவோம். பத்திரிக்கையாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு  அவர் பதிலளிக்கும் பண்பும், பாங்கும் கூட மிகவும் மாறுபட்டதாகவே இருக்கிறது. போகிறப் போக்கில் ஊதித்தள்ளிவிடுகிறார். இந்தியாவுக்கு பாரத் என்று பெயர் சூட்டிய மோடியின் முயற்சி குறித்த கேள்விக்கு ‘9 ஆண்டுகளில் இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என்றார் மோடி, இதோ மாற்றிவிட்டார்’ என்று பதிலளிக்கிறார். தனது தலைக்கு 5 கோடி விலை...

தலையங்கம் – உதயநிதி பேசியதில் என்ன தவறு

தலையங்கம் – உதயநிதி பேசியதில் என்ன தவறு

டெங்கு, காலரா, மலேரியா நோய்களை போல சனாதனம் என்ற சமூக நோயை ஒழிக்க வேண்டும் என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை, பாஜக திரித்து பொய்களை கலந்து மக்களிடம் விற்பனை செய்யத் தொடங்கியிருப்பது அவர்களின் தரம் தாழ்ந்த பிரச்சாரத்தை வெளிப்படுத்துகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, நிர்மலா, அண்ணாமலை போன்றவர்களே இந்த அற்ப பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். சனாதன தர்மம் தான் இந்து கலாச்சாரம் என்று கூறி இந்துக்களின் எதிர்ப்பை ‘இந்தியா’ கூட்டணிக்கு எதிராக திருப்பி விட முயற்சிக்கிறார் அமித்ஷா. சனாதன ஒழிப்பு என்றால் இந்துக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று சங்கிகள் அவரது ஆதரவு ஊடகங்கள் திரிபுவாதம் செய்கின்றன, திராவிடத்தை ஒழிப்போம், காங்கிரசை ஒழிப்போம், காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாஜக தலைவர்கள் பேசிவருகிறார்களே, அதன் அர்த்தம் அவர்களை எல்லாம் இனப்படுகொலை செய்வது என்பது தானா என்று அமைச்சர்...

தலையங்கம் சிவனின் சக்தியா? அறிவியலின் வளர்ச்சியா?

தலையங்கம் சிவனின் சக்தியா? அறிவியலின் வளர்ச்சியா?

சந்திராயன் நிலவில் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் சூட்டியுள்ளார் மோடி. சிவசக்திக்கும் இந்த சந்திராயன் அறிவியலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?. சந்திராயன் என்ற அறிவியலை உருவாக்கி அதற்காக உழைத்து சாதனை படைத்த விஞ்ஞானிகள் இப்படி சிவசக்தி என்று பெயர் சூட்டியதை ஏற்றுக் கொள்கிறார்களா என்ற ஒரு கேள்வி அடிப்படையில் இருக்கிறது. மத நம்பிக்கையற்றவர்கள், பிற மதத்தவர் என பலரும் இந்த விஞ்ஞானிகள் குழுவில் பணியாற்றி உள்ளனர். நிலவில் சந்திராயன் இறங்கிய இடத்திற்கு ஏதோ நிலவில் உள்ள தாசில்தார் அலுவலகம் மோடியின் ஆட்சிக்கு அந்த இடத்தை பட்டா போட்டு கொடுத்துவிட்டதை போல சொந்தம் கொண்டாடி அதற்கு பெயர் சுட்டுவது என்ற எல்லைக்கு போய்விட்டார். அறிவியலும் மூடநம்பிக்கையும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. மூட நம்பிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் இன்றைக்கு அறிவியல் விடை கண்டு வருகிறது. பிரபஞ்சத்தில் பல புதிர்கள் கண்டுபிடிக்கப்படாத போது, கடவுள்களால் உருவாக்கப்பட்டவை என்று சொல்லப்பட்டவை அனைத்திற்கும் இன்றைக்கு அறிவியல் அதற்கான விடைகளை தந்து...

தலையங்கம் சமூகநீதிக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் கொலிஜியம்

தலையங்கம் சமூகநீதிக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் கொலிஜியம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக என். செந்தில்குமார், ஜி.அருள் முருகன் என்ற இரண்டு வழக்கறிஞர்களை உச்சநீதிமன்ற கொலிஜியம் நியமித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை உள்ளடக்கிய கொலிஜியம் எந்த அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதை ஒளிவு மறைவின்றி வெளிப்படைத்தன்மையோடு அறிவித்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கதாகும். வழக்கறிஞர் என்.செந்தில்குமார் பட்டியலினப் பிரிவை சார்ந்தவர், விளிம்பு நிலை சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடும், கடந்த காலங்களில் அரசியல் சட்டம் மற்றும் கிரிமினல் சட்டங்கள் தொடர்பான வழக்குகளில் திறமையாக வாதாடியதற்கான சான்றுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. அதேபோல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ஜி.அருள் முருகன் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர், இந்த சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்துடனும், சிவில், கிரிமினல் மற்றும் ரிட் மனுக்கள் மீதான வழக்குகளில் அனுபவம் மிக்கவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற கொலிஜியம் செய்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம்...

தலையங்கம் கோயில் நுழைவு உரிமைக்கு வெடிக்கும் போராட்டங்கள்

தலையங்கம் கோயில் நுழைவு உரிமைக்கு வெடிக்கும் போராட்டங்கள்

தமிழ்நாட்டில் தீண்டப்படாத மக்கள் கோயில்களில் நுழைய இன்றும் அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்து ஆங்காங்கே உரிமைப் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பி இருக்கின்றன,  இது வரவேற்கத்தக்க ஒரு நல்ல திருப்பமாகும்.  விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலில்  ஒரு சாதிக்காரர்கள் கோயில் எங்களுக்குத் தான் சொந்தம் என்று கூறி தலித் மக்களை உள்ளே விட மறுத்தார்கள்.  இதை எதிர்த்து போராட்டம் நடத்தியும், அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தை நடத்தியும், சாதிக்காரர்கள் இதை ஏற்க மறுத்த காரணத்தினால் அதிகாரிகள் அந்த கோயிலுக்கு சீல் வைத்து விட்டனர்.   கோயிலுக்கு எப்படி சீல் வைக்கலாம்? தலித் மக்களையும்  உள்ளே அழைத்துச் சென்றிருக்க வேண்டாமா?  என்று சிலர் சில கருத்துக்களை முன் வைக்கிறார்கள். ஜாதித் தீண்டாமை ஒழிப்பு போராட்டம் என்பது  ஒரு நீண்டப் போராட்டம்,  அது  பல  மைல்கற்களை தாண்டி தாண்டித்தான் செல்ல வேண்டி இருக்கிறது.  கோயில்களில் வழிபாட்டு சடங்குகள் நிறுத்தப்பட்டு இருக்கிறது, எனவே புனிதம் கெட்டுவிட்டது...

தலையங்கம் தீட்சிதர்களின் அடாவடி

தலையங்கம் தீட்சிதர்களின் அடாவடி

தில்லை தீட்சிதர்கள் அறநிலயத்துறைக்கு சவால் விட்டு வருகிறார்கள், கோயிலில் ’ஆதி திருமஞ்சனம் உற்சவம்’ நடக்கும் போது சிற்றம்பல மேடையில் நாங்கள் மட்டுமே ஏற முடியும் ஏனைய பக்தர்களுக்கு அந்த உரிமை இல்லையென்று அறிவிப்பு பலகை ஒன்றை எழுதி மாட்டினார்கள். அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த பலகையை அகற்றி சிற்றம்பல மேடையில் ஏறி தரிசனம் செய்ததோடு பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. வன்முறையில் இறங்கிய தீட்சிதர்கள் இப்போது நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். சிற்றம்பல மேடை கோயில் கற்பகிரமல்ல, இங்கு பக்தர்கள் குறிப்பிட்ட திருவிழா காலங்களில் சாமி தரிசனம் செய்யக்கூடாது என்பது தீண்டாமைக் குற்றமாகும். ஏனைய காலங்களில் வழிபடும் உரிமை இருக்கும் போது திருவிழாவின் போது மட்டும் அனுமதி மறுப்பது ஏன்? இந்துமத ‘பார்ப்பன அகராதியில் பழக்கவழக்கம் என்ற சொல் மதத் தீண்டாமையை நியாயப்படுத்த’ பயன்படுத்தப்படுகிறது, இதற்கு அரசியல் சட்டமும் ஏற்பு வழங்கியுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவர துடிக்கும் ஒன்றிய ஆட்சி இந்துமத்திற்க்கு உள்ளேயே அனைவருக்குமான பொது...

தலையங்கம் பட்டியல் தயாரிப்புப் பணியைத் தொடங்கி விட்டீர்களா?

தலையங்கம் பட்டியல் தயாரிப்புப் பணியைத் தொடங்கி விட்டீர்களா?

கழக செயல் வீரர்களே கிராமங்களில் நிலவும் தீண்டாமை சக மனிதர்களின் சுயமரியாதையை பறித்து இழிவுபடுத்தும் அவலங்களை கணக்கெடுக்கும் பட்டியல் தயாரிக்கும் பணியை தொடங்கி விட்டீர்களா?   சேலம் மாநாட்டில் நாம் உருவாக்கிய செயல்திட்டத்தை நாம் விரைவு படுத்த வேண்டும் வேறு எந்த அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் செய்ய முன்வராத இந்த எதிர்நீச்சல் போடும் சமுதாயக் கடமையை நாம் சுமந்து களம் இறங்கி உள்ளோம்.   கிராமங்களில் அரசியல் சட்டங்கள் ஆட்சி செய்யவில்லை, மாறாக உள்ளூர் சாதி ஆதிக்கவாதிகள் தங்களின் சாதிவெறியை பழக்கவழக்கம், பண்பாடு என்ற பெயரில் விளிம்பு நிலை மக்கள் மீது திணிக்கிறார்கள். பார்ப்பனியத்தின் அடிமைகளாகி ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து கோரத் தாண்டவம் ஆடுகிறார்கள்.   கோயிலுக்குள் தீண்டாமை, பொது வீதிகளில் நடப்பதற்கு தடை, தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை, முடி வெட்டும் கடைகளில் தீண்டாமை, திருவிழாக்களில் பங்கேற்பதற்கு தடை, சுடுகாட்டில் சடலங்களை புதைக்கவும் தடை, மரணத்திற்குப் பிறகும்...

தலையங்கம்    தொடர்வண்டித் துறையில் ’நவீனத் தீண்டாமை’

தலையங்கம் தொடர்வண்டித் துறையில் ’நவீனத் தீண்டாமை’

ஒடிசா இரயில் விபத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. மிகக் கொடூரமான இரயில் விபத்தாக இது அமைந்துவிட்டது.  300க்கும் மேற்பட்ட உயிர்கள் இதுவரை பலியாகி விட்டன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர்வண்டி சமூகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. சமூகத்தினுடைய மக்களின் அசைவியக்கங்களை அது துரிதப்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் சாதி, மத, வர்ணாசிரம பேதம் இல்லாமல் அனைத்து சாதியினரையும் அனைத்து மதத்தினரையும் சுமந்து செல்கின்ற ஒரு வாகனமாக அது மாறியது. பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய தொடர் வண்டி மற்றும் நவீன தொழிற்சாலைகள் காரணமாக இந்தியாவில் தேக்கமுற்றுக் கிடந்த சமுதாயம் உடையத் தொடங்கியது என்றார் காரல் மார்க்ஸ். தேக்கமுற்ற சமுதாயம் என்பதை விளக்க வேண்டுமானால் பார்ப்பன அதிகார கட்டமைப்பு சமுதாயம் உடையத் தொடங்கியது என்பதே ஆகும். இந்த பார்ப்பன அதிகார கட்டமைப்பு சமுதாயத்தினால் உலகில் ஏனைய நாடுகளில் நிகழ்ந்ததைப் போல இங்கே நில உடமை முதலாளித்துவ சமூகங்கள் உருவாகவில்லை. மார்க்சிய மொழியில் கூற வேண்டுமானால்...

தலையங்கம் தோழர்களே, தயாராவீர்!

தலையங்கம் தோழர்களே, தயாராவீர்!

வைக்கம் போராட்டத்திற்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில் “வைக்கம் போர் முடியவில்லை” எனும் தலைப்பில் ஜாதித் தீண்டாமைக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுக்க திராவிடர் விடுதலைக் கழகம் முடிவு செய்து இருக்கிறது. தமிழ்நாட்டில் சாக்கடை மலகுழிகளை சுத்தம் செய்யும் ஆபத்தான இழிவு வேலைகளுக்கு மனிதர்களைப் பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது. நச்சுக் காற்றில் சிக்கி பல தலித் தோழர்கள் உயிரிழக்கிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தி செயல்பட முன் வந்திருப்பதை நாம் பாராட்டி வரவேற்கிறோம். மனித கழிவுகளை மனிதர்கள் எடுப்பது சட்டப்படி தடை செய்யப்பட்ட நிலையில் இந்த அவலம் தமிழகத்தில் அதிகம் நடப்பதை முதல்வர் நேர்மையோடு ஒப்புக்கொண்டு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். முதல் கட்டமாக நகர பகுதிகளில் நவீன இயந்திரங்களை அடுத்த நான்கு மாத காலத்துக்குள் முழுமையாக செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இனிவரும் காலங்களில் மனிதர்கள் செய்யும்...

தலையங்கம் எல்லை மீறாதீர், ஆளுநரே!

தலையங்கம் எல்லை மீறாதீர், ஆளுநரே!

மே 4 ஆம் தேதி வெளிவந்த கூiஅநள டிக ஐனேயை நாளிதழுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். வழக்கமான உளறல்கள் தான் இந்த பேட்டியிலும் இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்நாட்டை சீண்டி பார்த்திருக்கிறார். திராவிட மாடல் என்ற ஒன்று கிடையாது. அது காலாவதியான தத்துவம், விரக்தியான மனநிலையில் இருக்கிறவர்கள் அது நீடிக்க வேண்டும் என்பதற்காக தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நாம் “ஒரே பாரதம் ஒரே இந்தியா” என்ற கொள்கையின் கீழ் வாழ்கிறவர்கள், இதற்கு எதிரானது தான் திராவிட மாடல். அது காலாவதியாகிவிட்டது என்று அவர் பேசியிருக்கிறார். திராவிட மாடலுக்கு எதிராக உருவான சனாதன தர்மத்தைத் தான் தனது கொள்கை என்று இந்த பேட்டியில் உயர்த்துப் பிடிக்கிறார் ஆளுநர் ரவி. ஆக திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது, ஆரிய மாடலான சனாதனம் தான் நமக்கான அடையாளம் என்று பச்சையாக ஆரியப் பெருமை பேசுகிறார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “காலாவதியானது...

தலையங்கம் வடநாட்டுத் தொழிலாளர் பிரச்சினையில் பா.ஜ.க.வின் அற்ப அரசியல்

தலையங்கம் வடநாட்டுத் தொழிலாளர் பிரச்சினையில் பா.ஜ.க.வின் அற்ப அரசியல்

தமிழ்நாட்டில் வேலை தேடி வரும் வடமாநிலத்தவர்கள் படுகொலைக்கு உள்ளாகிறார்கள்; திட்டமிட்டு தாக்கப்படுகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பினார்கள். இதனால் அச்சமடைந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கினர். வதந்தியைத் திட்டமிட்டு பரப்பியவர்கள் பா.ஜ.க.வினர். தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் பேசி தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட நிலை ஏதும் இல்லை என்று விளக்கி வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்புகளை வழங்கி வருகிறது என்று விளக்கியுள்ளார். வதந்தியைப் பரப்பிய பா.ஜ.க.வைச் சார்ந்த பிரசாந்த் உமாரோ, சுபம் சுக்ளா, யுவராஜ் சிங்ராஜ்புட் ஆகியோர் மீதும் வடமாநில இந்தி பத்திரிகையான ‘தைனிக்’ ஆசிரியர் பாஸ்கர் மற்றும் ‘தன்வீர் போஸ்ட்’ பத்திரிகை ஆசிரியரான முகம்மது தன்வீர் ஆகியோர் மீதும் தமிழ்நாடு காவல்துறை வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இவர்களைக் கைது செய்ய வடமாநிலங்களுக்கு தமிழகக் காவல்துறை தனிப் பிரிவு விரைந்துள்ளது. தமிழ்நாட்டில் நீண்டகாலமாக வடநாட்டு தொழிலாளர்கள் மீது தி.மு.க. வெறுப்பை விதைத்து வருகிறது என்று...

தலையங்கம் மனு சாஸ்திரத்துக்கு சியாட்டில்  தந்த மரண அடி

தலையங்கம் மனு சாஸ்திரத்துக்கு சியாட்டில் தந்த மரண அடி

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சென்ற இந்து சனாதனவாதிகள் தங்களின் ஜாதியையும் உடன் சுமந்து போய் ஜாதியமைப்பே இல்லாத நாட்டில் ஜாதியத்தையும் அதன் பாகுபாடுகளையும் திணித்து விட்டார்கள். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மேலை நாட்டுக் கலாச்சாரம் – நமது சனாதன கலாசாரத்தை சீரழித்து விட்டது என்கிறார். உண்மையில் சனாதன கலாச்சாரம் தான் மேலை நாடுகளின் சமத்துவப் பண்பாட்டை சீர்குலைத்து வருகிறது. அதன் எதிரொலிதான் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள சியாட்டில் நகராட்சி ஜாதிப் பாகுபாடுகளைத் தடை செய்து தீர்மானம் நிறைவேற்றியதாகும். அமெரிக்காவுக்குக் குடியேறிய அந்நாட்டு குடிமக்களாகிய தெற்கு ஆசியர்களிடையே ‘இந்து சனாதனம்’ திணித்த ஜாதியப் பாகுபாடுகளால் பணியிடங்களிலும் குடியேறிய மக்களிடமும் பாகுபாடுகளைக் கொண்ட ‘மனுவாதம்’ தலைவிரித்தாடத் தொடங்கியது. நவீன தொழில்நுட்பங்களுடன் இயங்கும் தொழில் நிறுவனங்களிலும் அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில் நுட்பப் பூங்கா இயங்கும் சிலிகான் பள்ளத்தாக்கிலும் பணியிடங்களில் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. இந்தப் பூங்காவில் மிகப் பெரிய தொழிலதிபராகக் கருதப்படும் சிஸ்கோ என்பவர், தொழிலாளர்கள்...

தலையங்கம் நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் வரவேண்டும்

தலையங்கம் நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் வரவேண்டும்

மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதியாக இருக்கிற ஜி.ஆர். சாமிநாதன் அரசியல் சட்டத்தை எதிர்த்தும், மதவாதக் கொள்கையை ஆதரித்தும் பகிரங்கமாக பேசத் தொடங்கி இருக்கிறார். மகர சடகோபன் என்பவர் எழுதிய “திருப்பாவையில் நிர்வாக மேலாண்மை” என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்திருக்கிறது. அந்த மேடையில் எச்.ராஜா, ரங்கராஜ் பாண்டே ஆகியோரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு மேடையை பகிர்ந்து கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் ஆர்.எஸ்.எஸ். கருத்தை அப்படியே எதிரொலித்திருக்கிறார். இந்தியா இந்துக்கள் நாடாக இருக்கும் வரைத்தான் இங்கு மதச்சார்பின்மை நீடிக்க முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. ஜி.ஆர்.சாமிநாதன் இதே கருத்தை பாரதிய சம்பிரதாயத்தை நாம் காப்பாற்றுகிற வரையில் தான் அரசியல் சட்டமே இங்கு இருக்கும் என்று கூறுகிறார். பாரதிய சம்பிரதாயம் என்றால் என்ன? அது பார்ப்பனிய சம்பிரதாயம். இந்திய சம்பிரதாயம் என்ற வார்த்தையைக் கூட அவர்கள் பயன்படுத்த தயாராக இல்லை. ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்தும் ‘பாரதிய’ என்ற சொற்றொடரைத் தான் இவரும் பயன்படுத்துகிறார்....

தலையங்கம் பிரபாகரன்?

தலையங்கம் பிரபாகரன்?

தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று உலகத் தமிழர்களின் பிரதிநிதி என்ற நிலையில் தன்னை நிறுத்திக்கொண்டு பழ. நெடுமாறன் அவர்கள் அறிவித்திருப்பது கடும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. பழ. நெடுமாறன் அவர்கள் இதை அறிவித்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாட்டில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் களமாடிய முன்னோடி தலைவர்கள் எவரும் அவருடன் இல்லை. இந்த அறிவிப்பிலிருந்து அவர்கள் விலகி நிற்க முடிவு செய்துவிட்டனர். அவ்வப்போது பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறி வந்த பழ. நெடுமாறன் அவர்கள், அண்மைக்காலமாக இதில் அமைதி காத்து வந்த நிலையில், இப்போது இதை அறிவிக்க வேண்டிய தேவை – அவசியம் ஏன் வந்தது? மோடி தலைமையிலான ஒன்றிய ஆட்சி, ஈழத் தமிழர்களுக்கு 13ஆவது சட்டத் திருத்தத்தின்படி உரிமைகளை வழங்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறது. இந்த முயற்சியை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சர்வதேச சூழல்  என்று கருதும் பழ. நெடுமாறன், அதைச்...

தலையங்கம் ஆளுநரே! பதில் கூறுங்கள்!

தலையங்கம் ஆளுநரே! பதில் கூறுங்கள்!

சனாதனப் பெருமைப் பேசி வந்த தமிழக ஆளுநர் ரவி இப்போது திடீரென்று தமிழ்நாட்டில் தலித் மக்கள் உரிமைகளுக்காக கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கிறார். இது தான் ‘திராவிட மாடல் ஆட்சியா?’ என்று மேடைப் பேச்சாளர் போல் நக்கலடித்தும் இருக்கிறார். ஆளுநர் ரவி புரோகித – வைதீக வட்டாரங்களிலும் ஆகமக் கோயில்கள் சடங்குகளிலும் பங்கேற்கும் சனாதனவாதியாகவே செயல்பட்டு வரும் நிலையில் இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்து நிற்கிறது. ஆளுநர் முதலில் சில அடிப்படையான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆளுநர் பேசும் சனாதனம் என்ற ‘வர்ணாஸ்ரமம்’ தான் ஜாதிக்கும் தீண்டாமைக்கும் ஆணிவேர் என்பதை ஆளுநர் மறுக்க முடியுமா? சனாதனத்தைப் போற்றிக் கொண்டு தீண்டாமைக்கு எதிராகப் பேசுவது இரட்டை வேடமல்லவா? இந்து மதம் – இந்து தர்மம் என்பவை இந்தியா தோன்றுவதற்கு முன்பே வந்து விட்டது என்று பேசிய ஆளுநர் அவர்களே! அதே ‘இந்து தர்மம்’ தானே மனிதர்களுக்குள் ஜாதியையும் தீண்டாமையையும்...

தலையங்கம் சரணாகதிப் படலம்

தலையங்கம் சரணாகதிப் படலம்

பாரதிய ஜனதாவின் கயிறுகள் அ.இ.அ.தி.மு.க.வின் அணிகள் என்ற பொம்மையை ஆட்டுவித்து பொம்மலாட்டம் நடத்துவதை இனியும் மறைக்க முடியாது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் இது வெளிச்சமாகிவிட்டது. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முதலில் தனது கட்சியே வேட்பாளரை நிறுத்தும் என்றார். தேர்தல் பணிக் குழுவையும் நியமித்தார். எடப்பாடி பழனிச்சாமி, கட்சிக்கு நான் தான் தற்காலிக பொதுச் செயலாளர்; நானே அ.இ.அ.தி.மு.க. – எனவே நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம் என்றார். பா.ஜ.க.விடம் நேரில் சென்று ஆதரவு கேட்டார். நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒரு வேட்பாளரை அறிவித்தார். மற்றொரு அணியான ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தின் பதிவுகளில் தாமே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்றார். தனது கட்சி, பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்தினால், ஆதரிக்கும்; நிறுத்தவில்லை என்றால், தங்கள் கட்சியே வேட்பாளரை நிறுத்தும் என்றார். இரண்டு கட்சிகளும் பா.ஜ.க.வின் முடிவுக்காக விடிய விடிய நாள்கணக்கில் காத்திருந்ததுதான் மிச்சம். பிறகு, ஓ. பன்னீர்செல்வமும் ஒரு வேட்பாளரை நிறுத்தி அவரை வேட்பு...

தலையங்கம் அதானி குழுமம் மோசடி: மோடி ஏன் மவுனம் சாதிக்கிறார்?

தலையங்கம் அதானி குழுமம் மோசடி: மோடி ஏன் மவுனம் சாதிக்கிறார்?

மோடி தனது செல்லப் பிள்ளையாக வளர்த்துவிட்ட அதானி, இப்போது தனது சாம்ராஜ்யம் ஆட்டம் காணும் வகையில் பங்கு வணிக மோசடியில் ஈடுபட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. (மோடி – அதானியை வளர்த்த கதையை வேறு இடத்தில் வெளியிட்டிருக்கிறோம்) 2017ஆம் ஆண்டு கார்ப்பரேட் நிறுவனங்களில் நிகழும் மோசடிகளை ஆய்வு செய்ய உருவான அமெரிக்க நிறுவனமே ஹிண்டன்பர்க். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி குழும நடவடிக்கைகளை ஆய்வு செய்தது; குழுமத்தின் முன்னாள் அதிகாரிகளை நேர்காணல் செய்தது. அதனடிப்படையில் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை பெரும் அதிர்வு அலைகளை உருவாக்கியது. உலக பில்லியனர் இடத்தில் 3ஆவது இடத்தில் இருந்த அதானி (சொத்து மதிப்பு 11 இலட்சம் கோடி), இப்போது 7ஆம் இடத்திற்குத் தள்ளப் பட்டுள்ளார். அதானி குழுமத்தில் அதிவேக வளர்ச்சியில் அதன் நிறுவனப் பங்குகளைப் பெரும் தொகைக் கொடுத்து வாங்கினர். அரசு பொதுத் துறை நிறுவனங்களும் முதலீடு செய்தன. ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.அய்.சி., ரூ.77,000 கோடியை...

தலையங்கம் ராகுல்காந்தி நடத்தும் கருத்தியல் போராட்டம்

தலையங்கம் ராகுல்காந்தி நடத்தும் கருத்தியல் போராட்டம்

தலையங்கம் ராகுல்காந்தி நடத்தும் கருத்தியல் போராட்டம் ஆர்.எஸ்.எஸ்.சின் பார்ப்பனிய சனாதனம் ஒரு அமைப்பு மட்டுமல்ல; அது ஒரு ஆபத்தான சமூகத்திற்கு எதிரான கொடூர கருத்தியல் வடிவம் என்ற தெளிவான புரிதலுக்கு ராகுல்காந்தி வந்துள்ளார். இந்திய அரசியலில் இப்படி ஒரு சித்தாந்தத்தை எதிர்த்து மக்களை அணி திரட்டும் இளம் தலைவர் ஒருவர் புறப்பட்டிருக்கிறார் என்பதே நம்மைப் பொறுத்த வரையில் ஒரு அபூர்வமான நிகழ்வு என்றே கருதுகிறோம். அவருடைய நடைப்பயணம் முழுவதிலும் அவர் கட்சி நலன், தேர்தல் வெற்றி களைக் கடந்து ஆர்.எஸ்.எஸ். கருத்தியல் ஆபத்துகளையே முன் வைத்து, மக்களை அணி திரட்டி வருகிறார். “ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு நான் ஒருபோதும் போக மாட்டேன். நீங்கள் என் கழுத்தை அறுத்தாலும் நான் அங்கு செல்லமாட்டேன். எனது குடும்பத்திற்கு என்று ஒரு கொள்கை உள்ளது. அது ஒரு சிந்தனை அமைப்பைக் கொண்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகள் மீதும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் அழுத்தம் உள்ளது....

தலையங்கம் அது என்ன “பாரதம்”?

தலையங்கம் அது என்ன “பாரதம்”?

ஆளுநர் ரவியின் உளறல் பேச்சுக்கு தமிழ்நாடு இப்போது கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி பேசியிருக்கிறார். சன்தொலைக்காட்சிநடத்திய விவாதம் ஒன்றில் பங்கேற்ற பேராசிரியர் வீ. அரசு தமிழகம் என்றாலே தமிழ்நாடு என்பதுதான் அதற்குப் பொருள் என்று சரியான விளக்கத்தைத் தந்திருக்கிறார். ஆளுநருக்கு சொல்லிக் கொடுத் தவர்கள் இதைக் கூட சொல்லிக் கொடுக்காமல் இருந்திருக்கிறார் களா? என்ற கேள்வியை அவர் எழுப்பி இருக்கிறார். சரி; தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும்,  தமிழ்நாடு என்று  அழைக்கக் கூடாது சொல் லுகிற ஆளுநராக இருந்தாலும் சரி, அவரது சங்பரிவார் கூட்டமாக இருந் தாலும் சரி இந்தியாவை இந்தியா என்று அழைக்காமல் பாரதம், பாரதீயம் என்று அழைப்பது ஏன்? அவர்கள் கட்சிகளுக்கும் துணை அமைப்புகளுக்கும் இந்தியா என்ற பெயரை முழுமையாக தவிர்ப்பது ஏன்?  இதற்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். பாரதம்,  பாரதம் என்றால் என்ன?...

தலையங்கம் கோட்சே பரம்பரை

தலையங்கம் கோட்சே பரம்பரை

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சங் பரிவாரக் கும்பலை “கோட்சே பரம்பரை” என்ற வார்த்தைகளால் வர்ணிக்கிறார். கோட்சே பரம்பரை என்பது திராவிடர் இயக்கத்திற்கு பழகிப்போன ஒரு சொல் தான், காந்தியாரை சுட்டுக் கொல்லப்பட்ட அந்த காலத்தில் திராவிடர் இயக்க மேடைகளிலும் திராவிடர் இயக்க நூல்களிலும் அந்தக் கும்பலை சுட்டிக்காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சொல் தான் கோட்சே பரம்பரை என்பதாகும். காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்டது மாலை 5:12 க்கு, ஆனால் அகில இந்திய வானொலி அவரது மறைவு செய்தியை ஒலிபரப்பியது 6 மணிக்குத்தான். அதற்கு முக்கிய காரணம், ‘காந்தியை ஒரு முஸ்லிம் சுட்டுக் கொன்றுவிட்டார்’ என்ற வதந்தியை இந்த கோட்சே பரம்பரை அப்போதே பரப்பியது. மவுண்ட் பேட்டன், காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை அறிந்து பிர்லா மாளிகை விரைந்த உடன் கூட்டத்திலிருந்த ஒரு சங்கி, ‘காந்தியை ஒரு முஸ்லிம் சுட்டுக்...

தலையங்கம் ‘ஜெய் ராம்’ முழக்கம் கேட்குது! ‘ஜெய் சீதா’ ஏன் கேட்பதில்லை?

தலையங்கம் ‘ஜெய் ராம்’ முழக்கம் கேட்குது! ‘ஜெய் சீதா’ ஏன் கேட்பதில்லை?

பாரத ஒற்றுமைப் பயணத்தில் இருக்கும் இராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ்-அய்ப் பார்த்து, “ஆர்.எஸ்.எஸ். என்றைக்குமே பெண்களை மதிக்காத இயக்கம்” என்று கூறியிருக்கிறார். இது 100ரூ உண்மை. ஆர்.எஸ்.எஸ்.இல் ஒரு ‘சுவயம் சேவக்’காக இதுவரை பெண்கள் சேர்க்கப்படுவதே இல்லை. தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராகக் கூட வர முடியும், ஆனால் ஆர்.எஸ்.எஸ்.இல் சுவயம் சேவக்காக வர முடியாது. வானதி சீனிவாசனுக்கும் அதே நிலைதான். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இன் முன்னணி அமைப்புகளை உருவாக்கி அதில் பெண்களை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் சுவயம் சேவக்காக மட்டும் இன்று வரை அவர்கள் பெண்களை சேர்ப்பது கிடையாது. இராகுல் காந்தி எழுப்பியிருக்கிற முக்கிய கேள்வி, ‘ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தை முன் வைக்கிற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஏன் ஜெய் சீதா என்ற முழக்கத்தை முன் வைக்கவில்லை?’ இது ஒரு நியாயமான கேள்வி. சீதையைப் பொறுத்தவரை இராமனுடைய கட்டளை களை பல இடங்களில் மீறி தன்னுடைய உரிமையை நிலை நாட்டியிருக்கிறார் என்று நம்மால் கூற...

தலையங்கம் இடஒதுக்கீட்டை குழி பறிக்கும்  அய்.அய்.டி.யின் புதிய கொள்கை

தலையங்கம் இடஒதுக்கீட்டை குழி பறிக்கும் அய்.அய்.டி.யின் புதிய கொள்கை

சென்னை ‘அய்.அய்.டி.’ பார்ப்பனர் கோட்டை யாகவே இருந்து வருகிறது என்பதற்கு மேலும் சான்றுகள் குவிந்து வரு கின்றன. 577 பேராசிரியர் களில் பட்டியல் பிரிவு மற்றும் பழங்குடியைச் சார்ந்தவர்கள் 19 பேர் மட்டுமே (மூன்று சதவீதம்) என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் கூறுகிறது. 2021 மார்ச் 31 நிலவரப் படி திறந்த போட்டிக்கான இடங் களில் 515 பேராசிரியர், இணைப் பேராசிரியர்கள் இருந்தனர். இதில் பிற்படுத்தப் பட்டோர் 62 பேர் மட்டுமே. பட்டியல் மற்றும் பழங்குடிப் பிரிவினர் 16 பேர் தான். ஆய்வுப் பட்டப் படிப்பைப் பொறுத்த வரை 2018-2019, 2019-2020இல் 196பேர் மட்டுமே பெண்கள்; பிற்படுத் தப்பட்டோர் 74; பொருளா தாரப் பின்தங்கிய பிரிவினர் 74; எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர் முறையே 27 மற்றும் 5 பேர் மட்டுமே. பெண்களும் முற்றாக புறக்கணிக்கப்படு கின்றனர். 2021-2022ஆம் ஆண்டு துறைரீதியாக விவரங்களைத் தர, தகவல்...

தலையங்கம் உச்சநீதிமன்றத்தில் மற்றொரு அயோத்தி தீர்ப்பு

தலையங்கம் உச்சநீதிமன்றத்தில் மற்றொரு அயோத்தி தீர்ப்பு

உயர் ஜாதிப் பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்து உச்சநீதி மன்றத்தில் மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித் துள்ளனர். தலைமை நீதிபதி உட்பட 2 நீதிபதிகள், “இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என்றத் தீர்ப்பை வழங்கி யுள்ளனர். “இது சமூகநீதிக்கு பின்னடைவு என்றும் இந்திய ஒன்றியம் முழுவதும் சமூக நீதிக்கு ஆதரவான சக்திகள் ஒருங் கிணைந்து போராட முன் வர வேண்டும்” என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தமிழ் நாட்டின் உணர்வு களைப் பிரதிபலித்து இருக்கிறார். தீர்ப்பை ஆதரித்து வழங்கப்பட்ட கருத்துகள், அரசியல் சட்ட அமைப்பில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது என்பது கடும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு கொள்கை அந்த சமூகத் திற்கான மக்கள் முன்னேற்றமடைய பயன்படவில்லை என்றும் நீதிபதிகள் தங்களது பச்சைப் பார்ப்பனியக் கருத்துகளை தீர்ப்புகளாக எழுதி வைத்துள்ளனர். பிராமணர் சங்க மாநாடுகளில் பேசப்படும் கருத்துக்கள், அரசியல் சட்டம் பாதுகாக்கப்பட...

தலையங்கம் பகுத்தறிவுப் பரப்புரைகளை  ஏன் தடுக்க வேண்டும்?

தலையங்கம் பகுத்தறிவுப் பரப்புரைகளை ஏன் தடுக்க வேண்டும்?

நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் பெரிய இடைவெளி எதுவும் கிடையாது. இரண்டுக்கும் அடிப்படையானது அறிவியல் பகுத்தறிவு சிந்தனை மறுப்பு தான். கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி தரப்பட்ட கொடுமையான செய்தி நாட்டில் பலத்த விவாதங்களை எழுப்பியிருக்கிறது. கேரளாவில் தொடர்ந்து நரபலிக் கொடுமை மாந்திரீக வாதிகளால் நடத்தப்பட்டு வருகிறது என்ற செய்திகள் வருகின்றன. வடமாநிலங்களில் ‘பில்லி சூன்யம்’ என்ற நம்பிக்கையில் பல தலித் பெண்கள் கொல்லப்படுகிறார்கள். குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க ‘மந்திரவாதியை’ நாடிச் செல்கிறார்கள். அங்கே நகைகளையும் பணத்தையும் பறிகொடுத்து ஏமாற்றப்படுகிறார்கள். ‘பேய் பில்லி சூன்யம்’ என்ற நம்பிக்கைகளும் மண்டிக் கிடக்கின்றன. இந்த ஆபத்தான  மூடநம்பிக்கைகள் பற்றி அறிவியல் அடிப்படையில் மக்களுக்கு பகுத்தறிவுப் பரப்புரை செய்யக்கூடிய ஒரே இயக்கம் பெரியார் இயக்கம் தான். கேரளாவில் நரபலிக்குப் பிறகு தான் மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை முடிவு எடுத்துள்ளது. கடவுள் நம்பிக்கை என்பதே அறிவியலுக்கு...

தலையங்கம் ஆர்.எஸ்.எஸ். ‘சரணாகதி’

தலையங்கம் ஆர்.எஸ்.எஸ். ‘சரணாகதி’

1925ஆம் ஆண்டு ஒரு விஜயதசமி அன்று தான் ஆர்.எஸ்.எஸ். நாக்பூரில் துவக்கப்பட்டது. எனவே விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ். மிகப்பெரிய விழாக்களை நடத்துவது வழக்கம். நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய விஜயதசமி பேரணியை தொலைக் காட்சிகள் வெளியிட்டன. அதில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. ‘ஆர்.எஸ்.எஸ் தொடங்கிய காலத்திலிருந்து முதன் முறையாக பேரணியை பார்வையிடுகிற பார்வையாளர்களில் ஒரு பெண் இப்போது தான் அழைக்கப்பட்டு இருக்கிறார்’ என்ற செய்தியை தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழாவில் பங்கெடுப்பதற்கு பார்வையாளராகவே ஒரு பெண் அழைக்கப்பட்டிருப்பது 1925க்குப் பிறகு இதுவே முதல் முறை. ஆர்.எஸ்.எஸ்.சில் பெண்கள் யாரும் உறுப்பினராக முடியாது என்ற தடை அப்படியே இப்போதும் நீடிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். பேரணி அணி வகுப்பையும் தொலைக்காட்சியில் ஒளி பரப்பினார்கள். அதில் ‘சுவயம் சேவக்காக’ ஒரு பெண் கூட வரவில்லை. ஆனால், இங்கே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பெண்களுக்காக ஆர்.எஸ்.எஸ் தனி அமைப்பை நடத்திக் கொண்டிருக்கிறது என்று அதற்கு ஒரு சப்பைக் கட்டுக் கட்டுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்....

தலையங்கம் கருக் கலைப்பு:  உச்சநீமின்றத்தின் புரட்சிகர தீர்ப்பு

தலையங்கம் கருக் கலைப்பு: உச்சநீமின்றத்தின் புரட்சிகர தீர்ப்பு

கருக் கலைப்பை திருமணத்திலிருந்து துண்டித்து அது பெண்ணின் தனித்துவ உரிமை என்ற புரட்சிகரமான தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழங்கியிருக்கிறது. திருமணமான பெண் மட்டுமே கருவை சுமக்க வேண்டும்; இல்லையேல் அவர் ‘கற்பு’ என்ற புனிதத்தை இழந்து விடுவார்; சமூகத்தின் பார்வையில் ஒழுக்கமற்றவர்களாக புறக்கணிக்கப்படுவார்கள் என்ற பார்ப்பனிய மனு சாஸ்திர பழமைவாதங்களுக்கு மரண அடி தரும் தீர்ப்பு இது. டெல்லியைச் சார்ந்த 25 வயது அய்ஸ்வர்யா, திருமணமின்றி தனக்கு மனமொத்தவரிடம் கொண்ட தொடர்பால் உருவான கருவை 23 வாரங்கள் கழித்து கலைக்க விரும்பினார். டெல்லி உயர்நீதிமன்றம் திருமணமாகாதவருக்கு கருக்கலைப்பு உரிமை இல்லை என்று சட்டத்தைக் காட்டி கோரிக்கையை நிராகரித்தது. உச்சநீதி மன்றம் போனார். கருக்கலைப்பு விதிமுறையில் பெண்ணின் உரிமையைப் பறிக்கும் இந்தத் தடையை அகற்ற வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. நியாயத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. “விருப்பமில்லாத கருவைச் சட்டத்தின் பேரால் சுமக்கச் சொல்லி வலியுறுத்துவது அந்தப் பெண்ணின்...

தலையங்கம் காந்தி பிறந்த நாளில் ஆர்.எஸ்.எஸ். பேரணிகளா?

தலையங்கம் காந்தி பிறந்த நாளில் ஆர்.எஸ்.எஸ். பேரணிகளா?

கருத்துரிமைக்கு தடை போட வேண்டும் என்று வலியுறுத்தக் கூடிய ‘பார்ப்பனிய பாசிஸ்டுகள்’ அல்ல நாம். இந்தியாவை இந்து இராஷ்டிரமாக்க வேண்டும் என்ற ஆபத்தான மக்கள் விரோத அரசியலை கருத்தியல் தளத்திலேயே முறியடிக்க வேண்டும் என்று நம்புகிற பெரியாரிஸ்டுகள்; ஆனால் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். 50 இடங்களில் தனது பேரணியை நடத்துவதற்கு காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதியைத் தேர்ந்தெடுப்பதும் அதற்கு உயர்நிதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதும் கருத்துரிமை என்ற எல்லைகளைத் தகர்க்கக் கூடிய அதிகாரத் திமிரின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும். காந்தி கொலையில் தங்களுக்கு எந்தவித நேரடி தொடர்பும் கிடையாது என்று ஆர்.எஸ்.எஸ். வாதாடலாம். ஆனால் அவர்களின் இந்துராஷ்டிர சித்தாந்தமே காந்தி கொலைக்கு அடிப்படை என்பதை அவர்களால் மறுக்க முடியாது. காந்தி கொலை செய்யப்பட்ட நான்கு நாட்களில் ‘சட்ட விரோத அமைப்பு’ என்று அறிவிக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அன்றைய ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்டது (பிப்.4, 1948). காந்தி படுகொலை நிகழ்ந்த இரண்டு...

தலையங்கம் தென்காசி-தீண்டாமையும் ‘சூத்திர’ இழிவும்

தலையங்கம் தென்காசி-தீண்டாமையும் ‘சூத்திர’ இழிவும்

இந்து மதத்தை தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா புண்படுத்தி விட்டதாக பா.ஜ.க. பார்ப்பனர்கள் – சங் பரிவாரங்கள் கடும் கண்டனங்களை எழுப்பு கிறார்கள். ‘சூத்திரர்’ என்று இந்து மதமான ‘வேதமதம்’ இழிவுபடுத்துவதை ஆ.இராசா சுட்டிக்காட்டிப் பேசியது தான் குற்றமாகிவிட்டது. சூத்திரர் இழிவை எங்கள் மதம் ஏற்காது என்று அறிவிக்க அவர்கள் தயாராக இல்லை. தமிழ்நாட்டுக் கிராமங்களில் தீண்டாமை – ஜாதி வெறியர்களால் இப்போதும் ‘மதத்தின் – கடவுளின்’ கொள்கையாகவே சட்டவிரோதமாகப் பின்பற்றப்படு கிறது. தென்காசி அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியல் இனக் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் விற்பதற்குக்கூட தடை செய்து ஊர்க் கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள். தீண்டாமை வெறியை மறைப்பதற்குக்கூட தயாராக இல்லை. இறுமாப்புடன் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக அய்ந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் இவர்கள் ஊருக்குள் நுழைய நீதிமன்றம் வழியாகத்...

தலையங்கம் ‘பெரியார்’ மண்ணா?  ‘ஆன்மீக’ மண்ணா?

தலையங்கம் ‘பெரியார்’ மண்ணா? ‘ஆன்மீக’ மண்ணா?

பெரியார் தமிழ்நாட்டில் தோற்றுப் போய் விட்டார்; மக்கள் ஆன்மீகம் நோக்கி திரும்பி வருகிறார்கள் என்ற கருத்து தமிழ்நாட்டில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களால் பரப்பப்பட்டு வருகிறது. ‘பெரியார் மண்’, ‘ஆன்மீகம்’ என்பதற்கான மதிப்பீடுகளை எவ்வாறு வரையறுப்பது? இந்த கேள்விகளுக்கான விடையில் தான் தெளிவு பெற முடியும். ஆன்மீகம் என்பது ஒவ்வொரு மனிதரும் தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் ஒரு சிந்தனைப் போக்கு.  அது வழிபாடுகளிலும் சடங்குகளிலும் இல்லை. ஆனால், ‘ஆன்மீகம்’ என்பதை பார்ப்பனியம் தனக்கான முகமூடிக் கவசமாக்கிக் கொண்டு தன்னை உயிர்ப்பிக்கத் துடிக்கிறது. வைதீக வேத மரபில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பார்ப்பனர்கள், யாகங்கள், சடங்குகளை, உயிர்ப் பலிகளைக் கேள்வி கேட்ட திராவிடர்களை அழித்தொழிக்க வரலாறு நெடுக சூழ்ச்சிகளை படுகொலைகளை நடத்தியதோடு அதற்கு அவதாரம், புராணம், இதிகாச கற்பனைகளை உருவாக்கி, வெகுமக்களை நம்ப வைத்தனர். உருவ வழிபாடு வழக்கம் இல்லாத அவர்கள் பிற்காலத்தில் கோயில் களையும் சிலை வழிபாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து...

தலையங்கம் புதுமைப் பெண்களே வருக!

தலையங்கம் புதுமைப் பெண்களே வருக!

“ஆசிரியர் பணிகளுக்கு பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும்; அனைத்து கல்வி வேலை வாய்ப்பிலும் 50 சதவீத இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்; ஒரு வீட்டில் ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை இருந்தால் பெண் கல்விக்கே முன்னுரிமைத் தரப்பட வேண்டும்; பெண்களுக்கு சொத்து – வாரிசுரிமையில் சம பங்கு தர வேண்டும்” – இப்படி பெண்களின் விடுதலைக்ககாகக் குரல் கொடுத்த தலைவர் பெரியார். கலைஞர் முதல்வராக வந்த பிறகு, ஒவ்வொன்றாக செயல்படுத்தினார். இப்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அந்த சாதனை சரித்திரத்தைத் தொடருகிறார். 6ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, கல்லூரிகளில் அடி எடுத்து வைக்கும் பெண்களுக்கு அவர்களின் உயர்க் கல்வி வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘புதுமைப் பெண் திட்டம்’ பெண் விடுதலைக்கான பாதையில் மற்றொரு மைல் கல். தி.மு.க. ஆட்சியின் சாதனை மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரம். நாட்டில்...

தலையங்கம் திருக்குறளுக்குக் ‘காவிச் சாயம்’

தலையங்கம் திருக்குறளுக்குக் ‘காவிச் சாயம்’

தமிழக ஆளுநர் தமிழர் மறையான திருக்குறளையும் பக்தி இலக்கியத்தில் இணைத்து வேதங்களில் உள்ள கருத்துகள் திருக்குறளிலும் இருக்கிறது என்கிறார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு. போப், திருக்குறளின் பக்தி உள்ளடக்கத்தை சீர்குலைத்து விட்டார் என்றும் குற்றம் சாட்டுகிறார். தமிழ் அறிஞர்கள் பலரும் திருக்குறளில் பக்தி உள்ளடக்கத்தைப் பேசியிருப் பதாக தமிழ் அறிஞர்களை தனக்கு ஆதரவாக இழுத்துக் கொள்கிறார். பரிமேலழகர், நாகசாமி, கி.வா. ஜெகநாதன், உ.வே.சா. போன்ற பார்ப்பனர்கள் திருக்குறளில் கூறப்படும் தர்மம் – மனுதர்மம் என்று கூறி, திருக்குறளுக்கு மதச்சாயம் பூச முயன்றனர். மாறாக தேவநேயப் பாவாணர், பாவலர் பெருஞ்சித்திரனார், மறைமலை யடிகள், வள்ளலார் இராமலிங்க அடிகளார், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க., வ.உ.சிதம்பரனார், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர்  போன்று குறளுக்கு உரை எழுதிய ஏராளமான தமிழ் அறிஞர்கள் வைதீகத்துக்கு எதிரானதே ‘குறள்’ என்ற கருத்தையே நிறுவியுள்ளனர். வேதங்கள் எழுத்து வடிவம் பெற்றது மிக மிக பிற் காலத்தில் தான்....

தலையங்கம் ‘ஆகமம்’ மாற்றவே முடியாததா?

தலையங்கம் ‘ஆகமம்’ மாற்றவே முடியாததா?

அனைத்து இந்துக்களும் அர்ச்சகர் ஆக முடியும்; அவர்கள் உரிய பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற சமத்துவக் கொள்கையின் அடிப்படையில் ஓராண்டுக்கு முன் (ஆக. 14, 2021) தமிழக அரசு உரியப் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினர் 27 பேருக்கு அர்ச்சகர் நியமன ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிலான அமர்வு, அர்ச்சகர் பதவிக்கு வயது வரம்பு, உரிய பயிற்சி தேவை என்ற அரசு பிறப்பித்த விதியை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், ஆகம முறை பின்பற்றப்படாத கோயில்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கூறியதோடு ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோயில்களுக்கு அந்தந்த ஆகமம் கூறும் முறையில் தான் வழிபாடு, சடங்குகள் மட்டுமல்ல; அர்ச்சகர்களும் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறிவிட்டது. எந்தெந்த ஆகம கோயில்களில் எந்த வகை ஆகமம் பின்பற்றப்படுகிறது என்பதைக் கண்டறிய 5 பேர் கொண்ட குழுவும் அமைத்து அதில் இருவர் பெயரையும் நீதிமன்றமே பரிந்துரைத் துள்ளது....

தலையங்கம் சுதந்திரத் ‘தீண்டாமை’

தலையங்கம் சுதந்திரத் ‘தீண்டாமை’

ஊராட்சித் தவைர்களாக ‘தலித்’ பஞ்சாத்துகளில் தேர்வு செய்யப்பட்டவர்களை ஜாதி வெறியர்கள் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிப்பதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண் டிருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி அமைப்பான தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இது குறித்து களஆய்வு நடத்தி, அரசிடம் ஒரு அறிக்கை சமர்ப்பித்தது. ‘தலித்’ பஞ்சாயத்துத் தலைவர்கள் மீது திணிக்கப்படும் 40க்கும் மேற்பட்ட தீண்டாமைகள் குறித்து விரிவாக அந்த அறிக்கை பட்டியலிட்டுக் காட்டியது. கடந்த ஆண்டு 20 தலித் பஞ்சாயத்து தலைவர்கள், உள்ளூர் ஜாதி வெறியர்களால் குடியரசு – சுதந்திர நாளில் தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து தமிழக அரசு தலைமைச் செயலாளர், சுதந்திர நாள் அன்று தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சாhபில் கடிதம் எழுதினார். கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களே கும்மிடிப்பூண்டி ஒன்றியம்...