கழகத்தில் புதிய தோழர்கள் இணைந்தனர்

27-08-2022, சனிக்கிழமை அன்று சிதம்பரம் ஹக்ஷசூ மஹாலில் புதிய தோழர்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தில்  இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட தலைவர் அ.மதன்குமார் வரவேற்பு கூறினார்.

கழகத்தின் தலைமைக்குழு உறுப்பினர் ந. அய்யனார் புதிய தோழர்களை வரவேற்று உரையாற்றினார், அதன்பின் புவனகிரி சதிஷ்குமார் -புவனகிரி, ரஞ்சித்குமார் -அம்பிகாபுரம், வெங்கடேஷ் – கந்தமங்கலம், அன்பரசன் – கோவிலாம்பூண்டி, பிரேம் – பூதவராயன் பேட்டை, சிவா – பூதவராயன் பேட்டை, ஆகாஷ் – கோழிப்பள்ளம், ஆகாஷ் – கருவேப்பிலங்குறிச்சி, இன்பராஜ் – பூதவராயன் பேட்டை, விக்கி – பூதவராயன்பேட்டை, நன்பரசன் – பூதவராயன் பேட்டை, ராஜேஷ் – கணகரப்பட்டு. உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் கழகத் தலைவரின் தலைமையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி  புதிய தோழர்களை வரவேற்று சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் ஆசிரியர் அறிவழகன், கழகத்தின் கடலூர் மாவட்ட துணைத் தலைவர் பிரகாஷ், கடலூர் மாவட்ட செயலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 01092022 இதழ்

You may also like...