ஆளுநர் பதவியை ஒழித்துக்கட்ட வேண்டும்!
ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் ஆளுநர் ரவி சட்டமன்றத்தின் மரபுகளை மீறுகிறார்; சட்டத்தை அவமதிக்கிறார்; அதற்குப் பதிலாக சரியாக வாங்கி கட்டிக் கொள்கிறார். இந்த ஆண்டும் இதுதான் நடந்து இருக்கிறது. அமைச்சரவை தயாரிக்கும் உரையை சட்டரீதியாக படிக்க வேண்டிய ஒரு ஆளுநர், அதை அதிமுக, பாஜக கூட்டணியின் பிரச்சார உரையாக மாற்ற முயற்சி செய்து இருக்கிறார். அதனால் சட்டமன்றத்துக்குள்ளே உறுப்பினர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பாஜகவின் பிரதிநிதிகளான ஆளுநர்கள் செயல்பாடுகளால் கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் மோதல்கள் வெடித்தன. 2022-ல் தெலுங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இதே போன்று ஆளுநர் தமிழிசையுடன் ஏற்பட்ட மோதலில் ஆளுநர் இல்லாமலே சட்டமன்றத்தைக் கூட்டினார். ஆளுநர் உரை கட்டாயம் அல்ல என்று அறிவித்தார். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ஆளுநர் தமிழிசை பணிந்து அமைச்சரவை உரையை அப்படியே படிக்க முன் வந்தார். இது தொடர்பான வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிமன்றங்கள்...
