`தேசீய கீதப் புரளி’
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவைக் கொண்டாட இந்திய நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. அதையொட்டி ‘வந்தே மாதரம்’ பாடல் குறித்து பல்வேறு விவாதங்களும் எழுந்தன. இந்த ‘வந்தே மாதரம்’ தொடர்பாக 1937-இல் குடிஅரசு வெளியிட்ட கருத்துக்கள் இவை. ஆகஸ்டு 31ந் தேதி கூடிய சென்னை அசம்பிளி – கெளன்சில் கூட்டு சம்மேளனத்தில் “வந்தேமாதர” தேசீய கீதம் பாடியபோது இரண்டு முஸ்லீம் மெம்பர்கள் எழுந்து நிற்கவில்லையென்று தெரிய வருகிறது. காங்கரஸ்காரரான ஹிந்துக்கள் வந்தேமாதர கீதத்தை தேசீய கீதமென்றோ தேசீய ஞான சங்கீர்த்தனமென்றோ கூறிக்கொள்ளலாம். ஆனால் இதர கட்சி மெம்பர்களும் இதர சமூக மெம்பர்களும் அதை காங்கரஸ் கீதம் என்றே மதிப்பார்கள். முக்கியமாக முஸ்லீம்கள் வந்தேமாதர கீதத்தை அறவே வெறுக்கிறார்கள். எனவே “வந்தே மாதர” கீதம் பாடியபோது உட்கார்ந்திருந்த அந்த இரண்டு முஸ்லீம்களையும் குறை கூறுவதற்கில்லை. வந்தேமாதர கீதம் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “ஆனந்த மடம்” என்ற நாவலில் முதன்...
