மதவெறிப் பாடல் குறித்து விவாதிப்பது ஏன்?
மதக் கலவரத்தை தூண்டும் வகையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய ஜி.ஆர்.சுவாமிநாதனின் செயல் குறித்து விவாதிக்க வேண்டுமென்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும், நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அதுகுறித்து விவாதிக்க முன்வரவில்லை. சிறப்புத் தீவிர திருத்தம் குறித்து விவாதமில்லை, மணிப்பூர் குறித்து விவாதமில்லை, இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து விவாதம் இல்லை. முக்கியத்துவம் வாய்ந்த எந்த விவகாரம் குறித்தும் விவாதம் இல்லை. ஆனால் வந்தே மாதரம் பாடல் குறித்து 10 மணி நேர விவாதம் நடத்தியிருக்கிறது பா.ஜ.க. அரசு. இப்பாடல் பாடப்பெற்று 150 ஆண்டுகள் ஆனதையொட்டி, நாடு தழுவிய அளவில் நவம்பர் 2025 தொடங்கி ஓராண்டு முழுவதும் கொண்டாட சென்ற அக்டோபரில் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுகுறித்து, ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறை, அனைத்து மாநில அரசுகளுக்கும், ஒன்றியப் பிரதேசங்களுக்கும் ஓராண்டுத் தொடர் நிகழ்வுகளைக் கொண்டாட விரிவான செயல் திட்டங்களுக்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் நாடாளுமன்றத்தில்...
