முகலாயர்களுக்கு எதிரான இந்துத்துவாவின் பொய் மூட்டைகள்
இந்திய தேசியவாதத்திற்கு இந்து அடித்தளத்தை வழங்கியவர்களில் மிக முக்கியமானவர் அரபிந்தோ கோஷ். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்துக் களுக்கு பொறுப்பு, பதவிகளை வழங்கிய தாலும் இந்துக்களின் மூளையையும், பலத்தையும் பயன்படுத்திக் கொண்ட தாலும் முகலாய ஆட்சி நூற்றாண்டுகளை கடந்தும் நீடித்ததாக அரபிந்தோ கோஷ் கூறுகிறார். 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை மேற்கு பஞ்சாப்பை தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் நிலம் சார்ந்த உயர்ந்த உரிமைகள் அனைத்தும் இந்துக்களிடம் அளிக்கப்பட்டிருந்தன, இராமராஜ்ஜிய கனவோடு மதவெறியை திணித்துவரும் இந்துத்துவா அமைப்புகள், இந்தியாவின் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக, இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பும் அவதூறுகள், நிகழ்த்தும் வன்முறைகள் அளவற்றது. அதில் ஒன்றுதான் முகலாய மன்னர்கள் காலத்தில் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டு, இந்துக்கள் கொல்லப்பட்டு ரத்த ஆறு ஓடியதைப் போல பரப்பப்படும் அவதூறு. அதற்கு மாறாக, வேதகால ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடியதாக வும், அந்த பண்பாடு, கலாசாரத்தை மீட்டெடுக்க வேண்டுமென்றும் பேசி வருகிறார்கள்....