திராவிட மாடல்தான் பீகாரிகளையும் பாதுகாக்கிறது!
திமுக ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில் பீகாரிகளுக்கு எதிராக திமுகவினரால் துன்புறுத்தல் நடக்கிறது என்ற மோடியின் பேச்சு., அவரது பதவிக்கு உரிய பண்பாடுஅல்ல என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துரைத்துள்ளார். பாஜக ஆட்சியோடு முதல்வருக்கு முரண்பாடுகள் இருந்தாலும் கூட சர்வதேச விளையாட்டு போட்டியானாலும், கலைஞர் நாணய வெளியீட்டு விழாவானாலும் பிரதமரையும் மத்திய அமைச்சரையும் அழைக்க வேண்டிய கடமையை உணர்ந்து தனது முதல்வர் பதவிக்குரிய பண்பை வெளிப்படுத்தியவர் தமிழ்நாடு முதல்வர். தமிழ்நாட்டில் தாங்கள் துன்புறுத்தப்படுவதாக பீகாரிகள் ஏதாவது பிரதமரிடம் முறையிட்டார்களா? பீகார் அரசு குற்றம் சாட்டியதா? பீகாரிகளுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று முதலமைச்சருக்கு மோடி ஏதாவது கடிதம் எழுதினாரா? எதுவுமே இல்லை! பீகாரின் தலை விரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையும் திராவிட மாடல் ஆட்சியை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கிறது. எந்த திமுகவை மோடி குற்றம் சாட்டுகிறாரோ அந்த திமுக ஆட்சியில் தான் பீகாரிகளுக்கு வேலைவாய்ப்பும் பாதுகாப்பும் கிடைக்கிறது. பீகாருக்குக்கும் தமிழ்நாட்டுக்கும் பிரதமராக இருக்கும் ஒருவர்...
