சித்தோடு கழகம் எடுத்த காமராஜர் பிறந்தநாள் விழா

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக கல்வி வள்ளல் காமராஜரின் 117ஆவது பிறந்தநாள் விழா கூட்டம் சித்தோடு நீலிக்கரட்டில் 17.07.2019 மாலை 6:30 மணியளவில் மாவட்டச் செயலாளர் எழிலன் தலைமையிலும் புரட்சிகர இளைஞர் முன்னணி ரங்கசாமி முன்னிலையிலும் நடைபெற்றது. அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தைப் பற்றி விளக்கி உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து சௌந்தர் உரையாற்றினார். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி, காமராஜரின் கல்வி சாதனைகள் குறித்தும், பெரியாரும் காமராஜரும் இத் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு ஆற்றிய பங்களிப்பைப் பற்றியும் சிறப்புரையாற்றி னார். இறுதியாக அப்பகுதியைச் சார்ந்த வேல்மாறன் நன்றியுரை வழங்கினார். வந்திருந்த கழகத் தோழர்களுக்கு வேல்மாறன் மாட்டிறைச்சி உணவு வழங்கினார்.

பெரியார் முழக்கம் 25072019 இதழ்

You may also like...