நாடாளுமன்றத் தேர்தலில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் எழுச்சியோடு தொடங்கியது கழகத்தின் பரப்புரை

பிப்ரவரி 2-ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற கழகத் தலைமைக் குழுவில், “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” என்ற முழக்கத்தோடு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் கழகத்தின் பரப்புரைக் கூட்டங்கள் பொதுமக்களின் வரவேற்போடு எழுச்சியோடு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

சென்னை: சென்னை மாவட்டத்தின் முதல் பரப்புரைக் கூட்டம் 10.02.2024 அன்று வேளச்சேரி காந்தி சாலையில் பொதுக்கூட்டமாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் எட்வின் பிரபாகரன் தலைமை தாங்கினார். இரண்யா வரவேற்புரையாற்றினார். பாடகர் கோவன் பங்கேற்ற ம.க.இ.க கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகளுடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. கழகத் தோழர் பேரன்பு ராப் பாடல்கள் பாடினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் இரா.உமா, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் ஆகியோர் 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் பேராபத்துக்களை மக்களிடம் விளக்கிப் பேசினர்.

திராவிட முன்னேற்றக் கழக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் தடா ஓ.சுந்தரம் உரை அனைவரும் ரசித்துக் கேட்கும் விதமாக அமைந்தது. பிரீத்தி நன்றி கூற பொதுக்கூட்டம் நிறைவடைந்தது. பொதுக்கூட்டத்தின் நிறைவில் மயிலைப் பகுதிக் கழக சார்பில் அஸ்வின் – கார்த்திக் ஆகியோர் பெரியார் முழக்க சந்தா தொகை ரூ.4500-யை கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரனிடமும், கே.கே.நகர் துரைராசு பெரியார் முழக்க சந்தா தொகை ரூ.7500-யை கழகத் தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகரிடமும் வழங்கினார்கள்.

சேலம் : 11.02.2024 அன்று நங்கவள்ளியில் பேருந்து நிலையம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.செ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் பொ.கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். தருமபுரி மாவட்டச் செயலாளர் சந்தோஷ்குமாரின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சியுடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. தொடர்ந்து காவை இளவரசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா! பகுத்தறிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவின் கலை நிகழ்ச்சிகளுக்கு பின்னர் கருத்துரைகள் தொடங்கியது.

கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், திமுக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் வீரமணி ஜெயக்குமார், தலைமைக் கழகப் பேச்சாளர் கோனூர் வைரமணி, சேலம் மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள் ஆகியோர் பரப்புரைக் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்கள். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் ராஜேந்திரன், கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார், சேலம் (கி) மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தினர்.நிறைவாக நங்கவள்ளி நகர செயலாளர் சு.பிரபாகரன் அவர்கள் நன்றி கூறினார்.

திண்டுக்கல் : பழனியில் 10.02.2024 அன்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பரப்புரைக் கூட்டம் தொடங்கப்பட்டது. ரவுண்டானாவில் திமுக மாநில மாணவரணித் துணைச் செயலாளர் வீரமணி ஜெயகுமார், பழனி நகரச் செயலாளர் வேலுமணி பழனி ஒன்றியச் செயலாளர் சௌந்தர பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, திருப்பூர் மகிழவன் ஆகியோரும் பரப்புரையின் நோக்கம் குறித்து மக்களிடம் விளக்கிப் பேசினர்.

பழைய ஆயக்குடி, புது ஆயக்குடி, ஓபுளாபுரம், பாலசமுத்திரம், அழகாபுரி உள்ளிட்ட பகுதிகளிலும் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன. தேனி ராயன், சங்கர், திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர் மருதமூர்த்தி, உஷாராணி, ஆயுதன் ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக அழகாபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் அ.கலையம்புத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் வந்தனா முரளி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

ஈரோடு தெற்கு : 11.2.2024 அன்று நசியனூரில் காலை 10 மணியளவில் பரப்புரைக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, பொருளாளர்  திருப்பூர் துரைசாமி, ஆதித்தமிழர் பேரவை வீரவேந்தன் ஆகியோர் மோடி அரசின் மக்கள் விரோதத் திட்டங்களை பட்டியலிட்டு இந்தியா கூட்டணி ஏன் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விளக்கிப் பேசினார்கள். தொடர்ந்து வில்லரசம்பட்டி நால்ரோடு, திண்டல், காரப்பாளையம் உள்ளிட்டப் பகுதியில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணமூர்த்தி, எழில், செல்வராஜ், செந்தில், திருமுருகன், விக்னேஷ், வல்லரசு, பழனிச்சாமி, பிரபு, கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை : 12.02.2024 அன்று திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெரு, சேப்பாக்கம் சி.என்.கே சாலை உள்ளிட்ட இரண்டு இடங்களில் நடைபெற்றது. உமாபதி – பொன்ராஜ் குழுவின் கலை நிகழ்ச்சிகளுடன் கூட்டம் தொடங்கியது. கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், ஊடகவியலாளர் மாதூர் சத்யா ஆகியோர் மோடி ஆட்சியின் மக்கள் விரோத திட்டங்களை அம்பலப்படுத்தி, இந்தியா கூட்டணி ஏன் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விளக்கிப் பேசினார்கள். பொதுமக்கள் ஏராளமானோர் கூட்டத்தை ஆர்வத்துடன் கவனித்து, பரப்புரை இயக்கத்தின் நோக்கம் வென்றிட தங்களது பங்களிப்பை வழங்கினர். ரூ.1500/- திரட்டப்பட்டது.

பெரியார் முழக்கம் 15.02.2024

You may also like...