மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழக சத்தியமங்கலம் நகர அமைப்பாளர் மூர்த்தி – பூங்கொடி இல்லத் திறப்பு விழா  கெம்பநாயக்கன்பாளையம் சத்தியில், 03.11.2019 அன்று காலை 10 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். நிகழ்வில் ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை திருப்பூர் மாவட்டத் தோழர்கள் பெருந்திரளாய் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மண்டல கலந்துரையாடல் கூட்டம் 3.11.2019 அன்று சத்தி கெம்பநாயக்கம் பாளையம் திரு. கிட்டுசாமி தோட்டத் தில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர்  இரத்தினசாமி தலைமை யேற்று நோக்கவுரை ஆற்றினார்.

கழகத்தின் அடுத்த செயல் திட்டமாக மக்கள் சந்திப்பு இயக்கமும், கிராமங்கள் தோறும் பரப்புரைப் பயணமும், மருத்துவ முகாம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் உள்ளிட்டவைகளை நடத்த ஆலோசனை வழங்கினார்.

கழக மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மண்டலம் உள்ளடக்கிய ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை புறநகர், கோவை, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

கழகப் பொருளாளர் துரைசாமி,  மாவட்ட பொறுப்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை நடத்துவது பற்றி விளக்கினார்.

தோழர்களின் கருத்துக்களை செவிமடுத்து இறுதியில் கழக தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார்.

கழகப் பொறுப்பாளர்களுக்கு 3 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்துவதெனவும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவதெனவும் அறிவித்தார். மற்றும் டிசம்பர் இறுதியில் நீலச் சட்டை பேரணி மற்றும் ஜாதி ஒழிப்பு மாநாட்டிற்கு மிகச் சிறப்பாக ஏற்பாடுகளை முன்னெடுக்கவும் அறிவுறுத்தினார்.

பெரியார் முழக்கம் 07112019 இதழ்

You may also like...