ஈரோடு, ஆத்தூரில் தேர்தல் பரப்புரை

ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனைக்கல் மேடு, மணிக்கூண்டு, உடையம்பட்டி, நரசிங்கபுரம், முல்லைவாடி, ராஜேந்திரா பேக்கரி உள்ளிட்ட ஆறு இடங்களில் பிப்ரவரி 25ஆம் தேதி தொடங்கி மார்ச் 15 வரை நடைபெற்றது.
கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக பெரியார் விழுதுகள் ரிஷிவிந்தன் – அரவிந்தன் ஆகியோரின் பகுத்தறிவுப் பாடல்கள் மற்றும் மகேந்திரன் – கணபதி குழுவின் அரசியல் நையாண்டி நடைபெற்றது.
செல்வராஜ், வெங்கடேஷ், கார்த்திகேயன் ஆகியோர் பரப்புரைக் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஈரோடு : ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியான மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திராவிடர் விடுதலைக் கழகமும் சமூகநீதி கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் 02.04.2024 அன்று தொடங்கியது.
இதற்கு கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமை தாங்கினார். இதில் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாக்சிம் கார்க்கி, திருப்பூர் முத்து, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் திருப்பூர் மகிழவன், சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பழனிச்சாமி, ஆதித்தமிழர் பேரவை மோகன் நெடுமாறன் உள்ளிட்ட உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு மோடி ஆட்சி ஏன் தொடரக் கூடாது? என்பதனை விளக்கி, இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கருத்துரையாற்றினார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை செய்ய விரும்பும் சமூக செயற்பாட்டாளர்கள் கீழ்கண்ட பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.
ஈரோடு இரத்தினசாமி – +919842712444, மாக்சிம் கார்க்கி – 6379575713

பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்

You may also like...