ஈரோடு குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு

23.02.2020 அன்று மாலை 4 மணிக்கு சூஞசு சூசுஊ ஊஹஹ குடியுரிமைச் சட்டங்களை திரும்ப பெறக் கோரி ஈரோட்டில் செல்ல பாட்ஷா வீதியில் (ஈரோடு தினசரி மார்கெட் பின்புறம்) இஸ்லாமிய பெண்கள் பெரும் திரளாக நடத்தும் உரிமை மீட்பு தொடர் முழக்க 3ஆம் நாள் போராட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் கூறினார்.

தனது உரையில் இது அனைத்து மக்களுக்குமான பாதிப்பு என்று உணராமல் பல்வேறு மக்கள் இன்னும் அமைதி காப்பதாகவும் தோழர்கள், குறிப்பாக பெண்கள் முன்னெடுத்து போராடுவது மகிழ்ச்சிக்கும் நன்றிக்கும் உரியது என்றும் தன் நீண்ட உரையில் குறிப்பிட்டார்.

திராவிட முன்னேற்றக் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இந்த சட்டங்களுக்கு எதிராக எப்போதும் போல் திமுக அரணாக நின்று காக்கும் என்று தன் உரையில் குறிப்பிட்டார். 500 பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த சட்டங்களைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி தங்களின் வலுவான எதிர்ப்பினை மத்திய மாநில அரசுகளுக்கு தெரிவித்தனர்.

பெரியார் முழக்கம் 05032020 இதழ்

You may also like...