கோவை, சேலம், சென்னை வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

ஈரோடு : இந்தியா கூட்டணியின் ஈரோடு நாடாளு மன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கே.இ.பிரகாஷ் 22.03.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
கோவை : எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை 26.03.2024 அன்று கோவை மாநகர மாவட்டக் கழக நிர்வாகிகள் சந்தித்து தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
கோவை மாவட்டக் கழகச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பாளர் புரட்சித் தமிழன், மாநகரத் தலைவர் நிர்மல் குமார், மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன், மாதவன், சதீஷ், பொங்கலூர் கார்த்தி, வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
சேலம் : சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை 27.03.2024 அன்று சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் தலைமையில் கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். தான் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பணிகளை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், உங்களது பணிகள் மிகச்சிறப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உடன் நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் (கி) மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை, சேலம் மாநகர செயலாளர் ஆனந்தி, சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், இளம்பிள்ளை நகர தலைவர் ரமேஷ், கோபி, அசோக், மூலப்பாதை கவியரசு, கே.ஆர்.தோப்பூர் அஜித்குமார், அருள்பாண்டியன், நங்கவள்ளி நகர செயலாளர் பிரபாகரன் ஆகியோர்.
சென்னை : எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் பணிமனையை திறந்து வைக்க வருகை புரிந்த திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை 27.03.2024 அன்று சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி சந்தித்து வாழ்த்து தெரிவித்து கழக வெளியீடுகளை வழங்கினார்.

பெரியார் முழக்கம் 28032024 இதழ்

You may also like...