சமூகநீதிப் போரில் பெரியார் அம்பேத்கர் பயிலரங்கம் மரவபாளையம் ஈரோடு 10032019

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக , மரவபாளையம் CSI தொடக்கப் பள்ளியில் 10.03.2019 ஞாயிறு அன்று சமூகநீதிப் போரில் பெரியாரும் அம்பேத்கரும் என்னும் தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
காலை 11 மணிக்கு வகுப்பு துவங்கியது  தோழர்களின் அறிமுகத்தை தொடர்ந்து , முதல் அமர்வாக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் சமூகநீதிப் போரில் பெரியார் என்னும் தலைப்பில் நெடிய வரலாற்று தரவுகளுடன் வகுப்பெடுத்தார். மதியம் 3 மணிக்கு வளைதளப் பொறுப்பாளர் தோழர் விஜய் கழகத்தின் வளைதளப் பக்கங்களை பற்றியும் Twitter பற்றியும்
வகுப்பெடுத்தார்.
அதைத் தொடர்ந்து , இரண்டாம் அமர்வாக கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி சமூகநீதிப் போரில் அம்பேத்கர் என்ற தலைப்பில் மாலை 7 மணிவரை வகுப்பெடுத்தார். இறுதியாக கழகத்தின் பெயர்ப் பலகையை கழகத்தலைவர் திறந்துவைத்தார்.
இப்பயிற்சி வகுப்பில் 40 தோழர்கள் பங்குபெற்றனர்.  மாநகரத் தலைவர் ப.குமார் , சிவானந்தம் இருவரும் சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்

You may also like...