Category: சிறப்பு கட்டுரை

சட்டங்களே வேண்டாம்; சாஸ்திரங்களே போதும்! – காஞ்சி சங்கராச்சாரியின் நச்சுக் கருத்துக்கள்(2)

சட்டங்களே வேண்டாம்; சாஸ்திரங்களே போதும்! – காஞ்சி சங்கராச்சாரியின் நச்சுக் கருத்துக்கள்(2)

“பெண்களுக்கு சொத்துரிமை கூடாது” பெண்களுக்கு சொத்துரிமை வழங்கினால் ஸ்த்ரி தர்மமே பாழாகிவிடும்அதற்கு வர இருந்த சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னவர் காஞ்சி சீனியர் சங்கராச்சாரி. நாடாளுமன்றத்தில் நேரு பெண்களுக்கு சொத்துரிமை தரும் மசோதாவை கொண்டு வந்த போது அதை தடுத்து நிறுத்த தீவிர முயற்சிகளில் ஈடுப்பட்டவர்‌ சங்கராச்சாரி. இது குறித்து அக்னி கோத்திரம்” ராமானுஜ தாத்தாச்சாரியார் இந்து மதம் எங்கே போகிறது? நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “இதப்பார்த்தீரா.. ஸ்திரிகளுக்கு சொத்துல பாத்யம் கொடுக்கப் போறாளாம். அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? இஷ்டப்பட்டவா கூட ஸ்த்ரீகள் ஓடிப்போயிடுவா. அபாண்டமா, அபச்சாரமா போயிடும்” -என அந்த பேப்பரை தட்டியபடி வியாக்யானம் தந்து கொண்டிருந்தார் மகாபெரியவர். நான் சிரித்தபடி பதில் சொன்னேன். ‘எனக்கு நல்லதுதான். ஸ்வாமி… என் மாமனாருக்கு நிறைய சொத்துகள் இருக்கு. ஒருவேளை என் ஆத்துக்காரிக்கு பங்கு வந்தால் எனக்கும் நல்லதுதான்! -இந்த பதிலைக் கேட்டதும். “அசட்டுத்தனமா...

காஞ்சி சீனியரின் “நச்சுக் கருத்துக்கள்”-

காஞ்சி சீனியரின் “நச்சுக் கருத்துக்கள்”-

பார்ப்பனர் என்றால் எல்லோரையும் சமமாகப் பார்ப்பவர்கள் என்று கூறும் பார்ப்பனர்களே! பார்ப்பன அடிமைகளே! இதோ காஞ்சி சீனியர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்துக்களை தொகுத்துத் தந்து இருக்கிறோம் இதற்கு என்ன பதில்…. “நான்கு வர்ணம் தேவையே!” சங்கராச்சாரியார் ‘தெய்வத்தின் குரல்’ என்ற நூலிலே வெளிப்படையாகவே சொல்லு கின்றார். “நம் மதத்தில் (இந்துமதம்) ‘பிராமணர்’, ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த “வர்ணங்களை நாம் “ஜாதி” என்கிறோம். வாஸ்தவத்தில் ஜாதி வேறே, வர்ணம் வேறே: வர்ணங்கள் மேலே சொன்ன நான்குதான். இதற்குள்ளேயே ஒவ்வொன்றிலும் பல ஜாதிகள் இருக்கின்றன. “பிராமண” வர்ணத்திலேயே அய்யர், அய்யங்கார், ராவ் என்று பல சாதிகள் இருக்கின்றன. நான்காம் வர்ணம் ஒன்றிலேயே முதலியார், பிள்ளை, ரெட்டி, நாயக்கர், நாயுடு, கவுண்டர், படையாட்சி என்கிற மாதிரி எத்தனையோ ஜாதிகள் இருக்கின்றன. நான்கு ஜாதிகளுக்கும் (அதாவது வர்ண ங்களுக்கும்) சாஸ்திரங்களில் வெவ்வேறு விதமான கர்மாக்களையும் ஆசாரங்களையும் விதித்திருக்கிறது. இதனால் ஒரே...

சோனியா காந்தியின் திராவிட இயக்கக் குரல்-கல்விக் கொள்கையில் மதவாதம் திணிப்பு; மாநில உரிமைகள் பறிப்பு;

சோனியா காந்தியின் திராவிட இயக்கக் குரல்-கல்விக் கொள்கையில் மதவாதம் திணிப்பு; மாநில உரிமைகள் பறிப்பு;

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, “ஒன்றிய ஆட்சி நாட்டின் கல்வி முறையைப் படுகொலை செய்து வருகிறது. மாநிலங்களைக் கலந்து ஆலோசிப்பதில்லை, மானியங்களை நிறுத்துகிறது, மதவாதத்தைத் திணிக்கிறது. பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களுக்கு ஏகபோக அதிகாரங்களை வழங்குகிறது கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்களை ஊடுருவ விட்டுள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார். திராவிட இயக்கத்தின் குரலாக, சோனியாவின் இந்த கருத்து அமைந்துள்ளது. இதுகுறித்து ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (மார்ச் 31)-இல் அவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதன் சுருக்கமான கருத்துக்கள். இந்திய கல்விமுறையை மூன்று “சி”க்கள் வேட்டையாடுகின்றன. அதிகாரக் குவிப்பு (centralisation of power), வணிகமயமாக்கல் (Commercialisation) மற்றும் மதவாதமயமாக்கல் (Communalisation). இதில் மட்டுமே ஒன்றிய அரசு கவனம் செலுத்தி இருக்கிறது. கவர்ச்சிகரமான தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அறிமுகப்படுத்தி நாட்டின் குழந்தைகள் இளைஞர்களின் கல்வியை ஆழமான அரசியல் ஆக்கி வருகிறது. கட்டுப்பாடற்ற அதிகாரக் குவிப்பு கடந்த 11 ஆண்டுகளாக பாஜக அரசின் செயல்பாட்டின் அடையாளமாக இருந்து வருகிறது. இது...

தரிசனத்துக்கு சட்டையை கழற்ற மறுப்பு! கேரளாவில் போராட்டம்

தரிசனத்துக்கு சட்டையை கழற்ற மறுப்பு! கேரளாவில் போராட்டம்

திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அறிவிப்பை மீறி பத்தனம்திட்டா அருகே சம்பவம்! கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள தர்மசாஸ்தா கோயிலில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அறிவிப்பை மீறி சட்டை அணிந்து தரிசனம் செய்த பக்தர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் குருவாயூர் கிருஷ்ணன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் உள்பட பல முக்கிய கோயில்களில் ஆண்கள் சட்டை அணிந்து செல்லக்கூடாது என்ற மரபு கடந்த பல வருடங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் திருவனந்தபுரம் அருகே உள்ள சிவகிரி நாராயண குரு ஆசிரமத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆசிரமத்தின் தலைவர் பேசும் போது கோயில்களில் ஆண்கள் சட்டை அணிந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். சிவகிரி மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இந்த வழக்கம் பின்பற்றப்பட மாட்டாது என்று அவர் மேலும் கூறினார். காலம் மாறும் போது இது போன்ற நம்பிக்கைகள் தேவையில்லாதது என்று முதல்வர்...

மாநாட்டிலிருந்து சில துளிகள்

மாநாட்டிலிருந்து சில துளிகள்

பயணக் குழுவினர் மயிலாடுதுறை கேணிக்கறையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியாக முழக்கங்களுடன் மாநாட்டு மேடைக்கு அணிவகுத்து வந்தனர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனின் திராவிட மாடலா? ஆரிய மாடலா? நூலை (தலையங்கத் தொகுப்பு) கள்ளக்குறிச்சி பயணக்குழு பொறுப்பாளர் இராமர் வெளியிட பயணக்குழுவில் தொடர்ந்து வந்த சென்னை இரண்யா, சேலம் ஆனந்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ரூபாய் 500 மதிப்புள்ள நூல் 400-க்கு விற்கப்பட்டது. அனைத்து பிரதிகளும் மாநாட்டில் விற்றுத் தீர்ந்தன. மயிலாடுதுறை மாவட்டக் கழகம் சார்பில் கழக வளர்ச்சிக்கு ரூ.25,000 கழகப் பொருளார் சு.துரைசாமி அவர்களிடம் வழங்கப்பட்டது. மேடை அருகே அமைக்கப்பட்ட தனித்‌திரையில் பெரியார் பற்றிய குறும்படம் ஒளிப்பரப்பட்டது. குறும்படம் தோழர்கள் இடையே உணர்வலைகளை உருவாக்கியது. .பிரகாஷ் எழுத்தில் கொளத்தூர் கபிலன் ஸ்டுடியோ இந்த குறும்படத்தை உருவாக்கியது. பயணக் குழுவை வழிநடத்திய இரா.உமாபதி, காவை ஈசுவரன்,‌ கள்ளக்குறிச்சி இராமர்,‌‌ கோவை நிர்மல் பயண அனுபவங்களையும்‌, மக்கள் தந்த ஆதரவுகளையும்...

காஞ்சி சங்கராச்சாரி “பிராமண” வெறிப் பேச்சு-நடவடிக்கை எடுக்கக் கோரி கழகம்

காஞ்சி சங்கராச்சாரி “பிராமண” வெறிப் பேச்சு-நடவடிக்கை எடுக்கக் கோரி கழகம்

பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?” “வாருங்கள் வரலாறு பேசுவோம்!!” என்ற‌ தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் மார்ச் 15-ல் தொடங்கி மார்ச் 22- வரை தமிழ்நாடு தழுவிய பரப்புரைப் பயணங்களை நடத்தி நிறைவு விழா மாநாட்டை மயிலாடுதுறையில் மார்ச் 22.03.2025 மாலையில் நடத்தியது. மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசியல் சட்டத்திற்கு எதிராக இனவெறியைத் தூண்டி காஞ்சி சங்கராச்சாரி பேசிய பேச்சுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏப்ரல் 21-இல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மாநாடு முடிவு செய்தது. தீர்மானத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்தார். பலத்த கரவொலி எழுப்பி, தோழர்கள் வரவேற்றனர். கடந்த ஜனவரி 19-ஆம் தேதி பெங்களூரில் “கர்நாடக பிராமண மகாசபையில்” பேசிய‌‌ காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி, அரசியல் சட்டத்திற்கு‌ எதிராக இன‌வெறியை தூண்டிவிட்டிருக்கிறார். வேத மதத்தை காப்பாற்ற “பிராமணர்களால்” மட்டுமே முடியும் எனவே “பிராமணியத்தை” நாம் காப்பாற்றியாக வேண்டும். “பிராமணர்களை” அடையாளப்படுத்தும் சந்திய...

அரைகுறையாய் படித்துவிட்டு அவதூறு பரப்புவதா?  பெரியாரை விமர்சிக்கும் அடிமுட்டாள்கள்!-

அரைகுறையாய் படித்துவிட்டு அவதூறு பரப்புவதா? பெரியாரை விமர்சிக்கும் அடிமுட்டாள்கள்!-

(சென்னையில் பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெற்ற நிமிர்வோம் வாசகர் வட்ட நிகழ்ச்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் தொடர்ச்சி) பெரியார் ஆங்கிலம் படிக்கச் சொன்னார்‌. தேவநேயப் பாவணரும், பாவலர் பெருஞ்சித்திரனாரும் சேர்ந்து ஆங்கிலமும் தமிழும் படிக்க வேண்டும் என்று சொன்னவர்கள்தான். ஆராய்ச்சிப் படிப்புகள் வரைக்கும் தமிழில் படிக்க வேண்டும் என்ற குரலும் அப்போதே ஒலிக்கத் தொடங்கியது. “தமிழில் சொற்களே இல்லை, தமிழில் எப்படி ஆராய்ச்சி படிப்புகளை படிக்க முடியும்?” ஆனால் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். தமிழ்வழிக் கல்வி மாநாட்டில் பேசும்போது தொடக்கக் கல்வியை தாய்மொழியில் கற்க வேண்டும் என்று சொல்லுவேன். உடனே மணியரசன் போன்றவர்கள்‌, மணி‌ தமிழர் இல்லை, தமிழருக்கு பெருமிதம் இல்லை என்று வசைபாடுவார்கள். அடுத்தக் கூட்டத்தில் நான் சொன்னேன், “தமிழர்களுக்கு பெருமிதமான வரலாறே இல்லை; அடிமை வரலாறு, சூத்திர வரலாறுதானே நமக்கு எல்லாம். அழகான தமிழ்ப்பெயர் அருண்மொழிவர்மன்‌ என்பதை ராஜராஜ சோழன் என்ற வடமொழி பெயராக...

உண்மைக்குப் புறம்பாக விமர்சிக்கும் கயவர் கூட்டம்! பெரியார் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி- -கொளத்தூர் மணி

உண்மைக்குப் புறம்பாக விமர்சிக்கும் கயவர் கூட்டம்! பெரியார் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி- -கொளத்தூர் மணி

சென்னையில் நிமிர்வோம் வாசகர் வட்ட கூட்டத்தில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி… அண்ணா ஏராளமான நாடகங்களை எழுதியுள்ளார். முதலில் சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம், இந்து ராஜ்ஜியம் என்றால் எப்படி இருக்கும்? அரசனாக இருந்தாலும் என்பதுதான் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம். சந்திர மோகன் என்பவர் பார்ப்பனர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார் சிவாஜியிடம். ஆனாலும் சிவாஜி அவமானப்படுத்தப்படுவார், என்பதை எல்லாம் எழுதி அது எப்படி இந்த இந்து மத சாஸ்திரங்கள் என்ற பெயரால் அரசனைக் கூட கைப்பாவையாக வைத்திருந்தனர் பார்ப்பனர்கள் என்று சொல்வது தான் அந்த நாடகம். அம்பேத்கர் பாகிஸ்தான் பிரிவினை என்ற நூலில் எழுதியுள்ளார். “எப்படியாவது எந்த வழியிலாவது இந்து இராஜ்ஜியம் அமைந்து விடுமேயானால், அதை விட இந்த நாட்டுக்கு பெரும் கேடு எதுவும் இருக்க முடியாது”. இந்து இராஜ்ஜியம் என்றால் என்ன அது அமைந்தால் என்ன நிலை என்பதை அழகாக எடுத்துச் சொன்ன நாடகம்தான் ‘சிவாஜி கண்ட...

பெரியாரை சீண்டும்‌ ஆளுநருக்குப் பதிலடி  ஆரியர்-திராவிடர் கற்பனையா?

பெரியாரை சீண்டும்‌ ஆளுநருக்குப் பதிலடி ஆரியர்-திராவிடர் கற்பனையா?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பிராமண சங்கத்தின் தலைவராக இப்போது “அவதாரம்” எடுத்து நேரடியாகப் பெரியாரைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார். ஆரியரைப் பற்றி தவறான கருத்தை பெரியார் பரப்பினாராம் ஆரியர்-திராவிடர் வெவ்வேறு இனம் என்றும் ஆரியர் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தனர் என்றும் கடந்த 60 ஆண்டுகளாக திராவிட சித்தாந்தம் பேசுவோர் கற்பனைக் கதையை உருவாக்கிப் பரப்புகிறார். ஆரியர் வந்தேறிகள் என்று ஈ.வெ ராமசாமி கருத்துத் திணிப்பு செய்தார் என்றும் வாய்க் கொழுப்புடன் பேசி உள்ளார். இந்த உளறல்களை கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய் விட்டது. பிகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த ஆளுநரே உமக்கு வரலாறு ஏதாவது தெரியுமா? 1. பார்ப்பனர்களே தங்களை ஆரியர்கள் என்று பெருமையுடன் அறிவித்துக் கொண்ட கதை தெரியுமா? அவர்கள் ஆரிய சமாஜம் என்ற‌ அமைப்பை உருவாக்கிக் கொண்டார்களே அது உமக்குத் தெரியுமா? அதன் நிறுவனர் தயானந்த சரசுவதி ஆரியர்களாகிய வேதமும் சமஸ்கிருதமும் இரண்டு கண்கள் என்று...

தமிழ் இலக்கியங்களை அலசி ஆராய்ந்தவர் பெரியார்! -கொளத்தூர் மணி

தமிழ் இலக்கியங்களை அலசி ஆராய்ந்தவர் பெரியார்! -கொளத்தூர் மணி

(பிப்ரவரி 1-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிமிர்வோம் வாசகர் வட்ட 28-வது சந்திப்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை) எப்போதுமே அரசியலிலோ அல்லது மற்றவற்றிலோ படிப்படியாக முன்னேறி செல்வதுதான் அனைவருக்கும் வழக்கம். ஆனால் மணியரசன் அவர்கள் ஒரு பொதுவுடைமைவாதியாக இருந்து, தமிழ் தேசியம் பேசி, இப்போது ஜாதியவாதிகள் பக்கம் வந்து நின்று கொண்டிருக்கிறார். இன்னும் சிறிது நாட்களில் முழுமையாக வெளிப்பட்டு விடுவார். 1956 நவம்பரில் மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது, யாரெல்லாம் தமிழ்நாட்டில் இருந்தார்களோ அவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று முதலில் ஒரு வரையறை வைத்திருந்தார். எந்த அறிவியல் அடிப்படையில் இந்த வரையறையை வைத்தார் என்பது தெரியாது. சீமானுக்கு ஆசானாக சேர்ந்து விட வேண்டும் என்ற‌ ஆசையாக கூட இருக்கலாம். அண்ணா நினைவுநாளையொட்டி இந்த நிமிர்வோம் வாசகர் வட்டம் நடைபெறுகிறது. 1934-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி திருப்பூரில் நடைபெற்ற...

ஏன் இந்த பரப்புரைப் பயணம்?

ஏன் இந்த பரப்புரைப் பயணம்?

தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி சமுதாய இயக்கமாக தமிழர் நலனுக்காக அரை நூற்றாண்டுக்கு மேலாக ஓயாது உழைத்தவர் பெரியார். ஜாதிய ஏற்றத்தாழ்வு இல்லாத, பாலினப் பாகுபாடு இல்லாத ஒரு சமத்துவ சமூகம் மலர வேண்டும் என்று தன் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டு பாடுபட்டவர் பெரியார். மக்கள் ஆதரிப்பதைப் பேசி, அவர்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு மாறாக மக்கள் பின்பற்றிய மூடத்தனங்களை மிகக் கடுமையாக எதிர்த்தவர் பெரியார். தன் மீது கல், முட்டை, செருப்பு போன்றவை வீசப்பட்டபோது கூட ஓடி ஒளிந்து கொள்ளாமல், தனக்கு சரியெனப்பட்டதை வெளிப்படையாகப் பேசியவர் பெரியார். குடலிறக்க வலியோடும், மூத்திரச் சட்டியோடும் வாழ்நாளின் கடைசிவரை தமிழ் மக்களின் தன்மானத்திற்காகப் பேசியவர் பெரியார். கல்வி எட்டாக்கனியாக இருந்த தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி ஒரு நூற்றாண்டில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு உருவாகக் காரணம் பெரியார். எல்லாவற்றுக்கும் மேலாக சுயமரியாதைச் சிந்தனையைத் தமிழர்களுக்குக் கடத்தியவர் தந்தை பெரியார். ஆனால் இன்றைக்குப் பெரியாரைக்...

தமிழ்தேசிய முப்பாட்டன் பெருமையும்  சிங்கள இனவெறியும் ஒன்றுதான்!-விடுதலை இராசேந்திரன்

தமிழ்தேசிய முப்பாட்டன் பெருமையும் சிங்கள இனவெறியும் ஒன்றுதான்!-விடுதலை இராசேந்திரன்

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் b&w tamil youtube சேனலுக்கு அளித்த நேர்காணலில், மேதகு பிரபாகரன் பெரியார் கொள்கைகளையே ஈழத்தில் செயல்படுத்தினார் என்பதை விரிவாக விளக்கினார் . கடந்த வார தொடர்ச்சி… நெறியாளர்: ஈழத்தில் பிரபாகரன் நடத்திய விடுதலைப் போராட்டத்துக்கும் இங்கே தமிழ்தேசிய போரட்டத்துக்கும்‌ வேறுபாடு இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா? பொதுச்செயலாளர்: அடிப்படையில் ஒரு தேசத்தின் விடுதலை என்பது மக்களின் சமத்துவத்தையும், உரிமையும் அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். இதற்கு நேர்மாறாக மக்களிடையே பிளவுகளையும், பாகுபாடுகளையும் அடையாளப்படுத்தும் கொள்கைகளைக் கொண்ட தேசியம் என்பது விடுதலைக்கு நேர் முறணானது. பிரபாகரன் போராடிய ஈழ விடுதலை என்பது ஐக்கிய‌ நாட்டு சபை அங்கீகரித்த தேசிய‌ சுய‌நிர்ணய உரிமையை வலியுறுத்தி நடத்திய போராட்டமாகும்‌. இந்தியாவை இந்து நாடாக மாற்றி அமைப்பதற்கு இப்போது இங்கே முயற்சிகள் நடைபெற்றுக்‌ கொண்டு இருக்கினறன.இந்தியா என்ற‌ சொல்லுக்கு முசுலிம்களும், கிருத்தவர்களும் உள்ளடக்கிய‌ நாடு என்று பொருள்படுகிறது, எனவே இந்தியா என்ற...

பார்ப்பனிய பண்பாட்டை எதிர்த்தவர் மேதகு பிரபாகரன்

பார்ப்பனிய பண்பாட்டை எதிர்த்தவர் மேதகு பிரபாகரன்

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் b&w tamil youtube சேனலுக்கு அளித்த நேர்காணலில், மேதகு பிரபாகரன் பெரியார் கொள்கைகளையே ஈழத்தில் செயல்படுத்தினார் என்பதை விரிவாக விளக்கினார் . கடந்த வார தொடர்ச்சி … போராட்டத்தில் வீரமரணம் எய்திய விடுதலைப்புலிகளின் இறுதி நிகழ்வில் மதச் சடங்குகள் நடப்பதில்லை. பெற்றோர்கள் கூட எந்த வித மதச் சடங்குகள் இல்லாமல் மலர் வளையம் வைத்துத் தான் மரியாதை செய்வார்கள். துயிலும் இடங்களை மக்கள் வாகனங்களில்‌ கடக்கும்‌ போது தலைகுனிந்து ஒரு மரியாதை செலுத்திவிட்டு தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடந்து செல்வார்கள். விடுதலைப்புலிகள் வைப்பகம்(வங்கி) ஒன்றை நடத்தினார்கள்.தமிழேந்தி என்ற போராளி தான் பொறுப்பாளராக இருந்தார். தமிழேந்தி முழுமையான பகுத்தறிவாளர்‌. சித்திரையில் மதவாதிகள் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டு நான் கிளிநொச்சியிஸ் இருந்தேன். சித்திரை மாத தமிழ்ப்புத்தாண்டை விடுதலைப் புலிகள் இயக்கம் ஏற்கவில்லை. தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டு அந்த நாள்...

திருப்பரங்குன்றம்! சங்கிகளின்‌ புரட்டு  மதக்கலவரத்தை உருவாக்க சதி

திருப்பரங்குன்றம்! சங்கிகளின்‌ புரட்டு மதக்கலவரத்தை உருவாக்க சதி

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்‌ என்ற‌ முழக்கத்தோடு சங் பரிவாரங்கள்‌ சதித்திட்டம் தீட்டி வருகின்றன. மதவெறி அமைப்புகளை தமிழ்நாட்டு ‌மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும்‌ என்று திமுக,காங்கிரஸ்,மதிமுக,இந்தியகம்யூனிஸ்டு, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளன. மதுரை மாவட்ட காவல்துறையும் நீதித்துறையும் சங்கிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திருப்பரங்குன்றம் மலை முழுவதும்‌ முருகனுக்கே சொந்தம் என்று சங்கிகள் கூறுவது வரலாற்று புரட்டு. உண்மையில் நடப்பது என்ன? மதுரையில் திருப்பரங்குன்றம் போல எண்ணற்ற பெருங்குன்றுகள் உள்ளன. இந்தக் குன்றுகள்அனைத்தும் நாட்டார்வழிபாடு, சமண, புத்த சமயங்கள், வைணவ, சைவமதங்கள், இசுலாமிய, கிறித்தவ சமயங்கள் என அனைத்து வழிபாட்டு தலங்களும் எந்தவித இடர்களும் சிக்கல்களும் இன்றி மக்களால் அமைதியான முறையில் வழிபட்டு வரப்படுகின்றன. இவ்வாறு தான் இசுலாமிய இறை மார்க்கத் தூதர்களின் வழிபாட்டு இடங்களில் ஒன்றான அவுலியா சிக்கந்தர்பாதூஷா அடக்கம் செய்யப்பட்ட தர்கா வழிபாட்டு இடம் திருப்பரங்குன்றம் மலை மீது இருநூறு ஆண்டுகளுக்கு...

ஈழத்தில் பிரபாகரன் நடத்திய பெரியார் ஆட்சி!

ஈழத்தில் பிரபாகரன் நடத்திய பெரியார் ஆட்சி!

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் b&w tamil youtube சேனலுக்கு அளித்த நேர்காணலில், மேதகு பிரபாகரன் பெரியார் கொள்கைகளையே ஈழத்தில் செயல்படுத்தினார் என்பதை விரிவாக விளக்கினார் . நெறியாளர் : 2006-இல் ஈழத்துக்கு ஒரு மாதம்‌ சென்று வந்தீர்களே, அந்த நட்பு எப்படி உருவானது‌? பொதுச்செயலாளர்: 2006-க்கு முன்பு தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு இணைந்து பல்வேறு களப்பணிகள், அரசியல் பணிகள் செய்திருக்கிறோம். அதன்காரணமாக அவர்களோடு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. குறிப்பாக 1982,1983 ஆண்டுகாலத்தில் ‘விடுதலை’ பத்திரிகையில் நான் பொறுப்பில் இருந்தேன். தமிழீழ விடுதலைப்புலிகள் ஆதரவு தேடி தமிழ்நாடு வந்த காலகட்டம் அது. அப்போது அவர்கள் எங்களோடு நெருக்கமாக இருந்தார்கள். பல்வேறு குழுக்கள் தமிழ்நாட்டிற்கு வந்தார்கள். அதில் விடுதலைப் புலிகள் இயக்கம் தான்‌ சரியான‌ இயக்கம் என்று நாங்கள் தேர்ந்தெடுத்து அந்த இயக்கத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, அப்போது திராவிடர் கழகத்தில் இருந்த தோழர்கள் கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன், நான்...

ஆமைக்கறி சீமான் அம்பலமானார்!

ஆமைக்கறி சீமான் அம்பலமானார்!

2008-ஆம் ஆண்டு இறுதிப்போருக்கு முன்பாக திரைப்படக் குழுவினருடன் ஈழத்திற்கு சென்ற சீமான், கடந்த 15 ஆண்டுகளாக அந்தப் பயணம் தொடர்பாக எண்ணற்றக் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டுள்ளார். மனநோயாளியைப் போல சீமான் கூறிவந்த அந்தப் பொய்களை, தமிழ்நாட்டு மக்கள் வேடிக்கையுடன் கடந்து சென்றனர். ஆனால் இப்போது பெரியார் மீது அவர் வைத்திருக்கும் அருவருப்பான அவதூறுகளால் தமிழ்நாட்டு மக்கள் கொந்தளித்துள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி, சர்வதேச அளவில் சீமானின் இந்த புளுகு மூட்டைகளை அம்பலப்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆரிய இழிவில் இருந்து தமிழர்களை விடுவிக்க வாழ்நாளெல்லாம் உழைத்தத் தந்தை பெரியாரையும், ஈழத்தில் தேசிய இன விடுதலைக்காகப் பெரும்படை கட்டிப் போரிட்ட மேதகு பிரபாகரனையும் நேரெதிர் எதிரிகளாகச் சித்தரிக்க முயன்ற சீமானின் சூழ்ச்சியை விடுதலைப் புலிகளும், அவர்களோடு அணுக்கமாக இருந்தவர்களும் உடனடியாக கண்டித்து அறிக்கை வெளியிட்டு, சீமானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர். குறிப்பாக பிரபாகரன் அவர்களின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த...

திராவிட மாடல் அரசின் சாதனைகள்

திராவிட மாடல் அரசின் சாதனைகள்

திராவிட மாடல் ஆட்சி முன்னெடுத்த நடவடிக்கைகளாலும், மக்கள் நலத் திட்டங்களாலும் தமிழ்நாடு முக்கியமான 10 சாதனைகளை 3 ஆண்டுகளில் செய்துள்ளது. 1. இந்தியாவின் பொருளாதாரத்தில் தமிழ்நாடு 9% பங்கை வகிக்கிறது. 2. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 3. ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 7.24% இருக்கும்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சியானது 8.19% உயர்ந்துள்ளது. 4. இந்திய அளவில் பணவீக்கமானது 6.65% இருக்கும்போது, தமிழ்நாட்டில் அது 5.97% குறைந்து உள்ளது. 5. ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 6. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. 7. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 3-வது இடத்துக்கு திராவிட மாடல் ஆட்சியில் முன்னேறி உள்ளது. 8. கல்வியில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. 9. புத்தாக்கத் தொழில்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது....

கழகப் பொதுச்செயலாளருக்குப் பாராட்டு விழா!

கழகப் பொதுச்செயலாளருக்குப் பாராட்டு விழா!

திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளரும், புரட்சிப் பெரியார் முழக்கம் இதழின் ஆசிரியருமான விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ‘பெரியார் விருது’ வழங்கி பெருமை சேர்த்தது. இதற்காக பொதுச்செயலாளரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்திய அலுவலர்கள் அசோசியேசன் சங்க கட்டடத்தில் 26.01.2025 அன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. மாணவர் நகலக உரிமையாளர் செளரிராஜன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், மூத்த வழக்கறிஞர் துரைசாமி, வாலாசா வல்லவன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், மருத்துவர் அமலோற்பவநாதன், வீ.அரசு, பேராசிரியர் கல்யாணி, தடா ஓ.சுந்தரம், பத்திரிகையாளர்கள் சிகாமணி, வீரபாண்டியன், சுகுணா திவாகர், வழக்கறிஞர் அஜிதா, மனநல மருத்துவர் சிவபாலன், மருத்துவர் தாயப்பன், சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் பொதுச்செயலாளர் உடனான தங்களது அனுபவங்கள், பொதுச்செயலாளரின் அர்ப்பணிப்புமிக்க இயக்க – எழுத்துப் பணிகளை பாராட்டிப் பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டனர்....

கும்பமேளாவில் சாமியார்கள் கொட்டம் – இந்தியாவை இந்து நாடாக்க சங்கிகள் முயற்சி

கும்பமேளாவில் சாமியார்கள் கொட்டம் – இந்தியாவை இந்து நாடாக்க சங்கிகள் முயற்சி

உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கப்பட்டு பிப்ரவரி 26-ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. கும்பமேளாவில் கூடும் சாமியார்கள், 2035-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை இந்து நாடாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்து அரசமைப்புச் சட்டம் கும்பமேளா தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள அம்மாநில முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத், “சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம். அதுவே மனிதத்தின் மதம். நமது வழிபாட்டு முறைகளில் வேறுபாடு இருக்கலாம், ஆனால், மதம் ஒன்றுதான். அந்த மதம் சனாதன தர்மம். அந்த சனாதன தர்மத்தின் பிரதிநிதியாக கும்பமேளா விளங்குகிறது. பிரயாக்ராஜில் நடந்து வரும் மாபெரும் மத நிகழ்வான மகா கும்பமேளா, எந்த ஒரு ஜாதி அல்லது மதத்திற்கும் உட்பட்டது அல்ல. இது அனைத்து மதம், கலாசாரம் மற்றும் சமயங்களின் மாபெரும் கலவையாக திகழ்கிறது.’’ என்று கூறியுள்ளார். ஆனால் கும்பமேளாவில் கூடிய சாமியார் கூட்டம் இந்து அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கக் குழு அமைத்துள்ளது....

முதலமைச்சரின் தகுதியுரை

முதலமைச்சரின் தகுதியுரை

தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்பிவரும் பத்திரிக்கையாளரும் எழுத்தாள ருமான திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள், 1969ல் மயிலாடுதுறையில் திராவிடர் கழகத்தின் இளைஞரணியில் இணைந்து பெரியாரியம் தொடர்பாக பொதுக்கூட்டங்கள் மற்றும் பல பகுத்தறிவு நிகழ்ச்சிகளை நடத்தி பெரியாரின் கொள்கைகளைப் பேசவும் எழுதவும் தொடங்கியவர். தந்தை பெரியாரை அழைத்து மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடத்தியவர். பெரியாரின் இயக்க ஏடுகளில் 25 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றியதோடு பெரியார் பேசிய கூட்டங்களில் அவரது உரையைக் குறிப்பெடுத்து பதிவு செய்தவர். இவர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தந்தை பெரியாரின் சமூகநீதி, ஜாதி ஒழிப்பு மற்றும் பெண்ணுரிமைத் தளங்களில் கடந்த 58 வருடங்களாகத் தொண்டாற்றி வருகிறார். பெரியார் கண்ட கனவான ஜாதி மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும், விளிம்புநிலை மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகவும் மக்களை அணிதிரட்டிப் போராடி வருபவர். மக்களை விழிப்படையச் செய்யும் வகையில்...

சிறுபான்மையினர் நலன்

சிறுபான்மையினர் நலன்

ளுக்கான நிரந்தரச் சான்றுகளை இணைய வழியில் எளிமையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சிறுபான்மை சமூகங்களின் வழிபாட்டுத் தலங்களை புனரமைத்து பாதுகாக்கும் வகையில் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழடி அருங்காட்சியகம் பெரும் வரவேற்பு பெற்றதையடுத்து, ஆதிச்ச நல்லூர், சிவகளை மற்றும் கொற்கை போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களைக் கொண்டு திருநெல்வேலியில் உலகத்தரம் வாய்ந்த பொருநை அருங்காட்சியகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் ராஜேந்திர சோழனின் கடல் கடந்த வெற்றிப் பயணம், அயல்நாட்டு வணிகத் தொடர்புகளை நினைவுகூரும் வகையில், கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலைையையும் இணைக்கும் வகையில் நாட்டில் முதன் முதலாக அமைக்கப்பட்ட கண்ணாடி இழைப் பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பெரியார் முழக்கம் 09012025 இதழ்

பெரியாரை நோக்கி திரளும் இளைஞர்கள் புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூல்கள் அமோக விற்பனை!

பெரியாரை நோக்கி திரளும் இளைஞர்கள் புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூல்கள் அமோக விற்பனை!

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூல்கள் இளைஞர்களைக் கவர்ந்து நிற்கின்றது என்று “டைம்ஸ் ஆஃப் இந்தியா” ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. 18லிருந்து 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் கூட்டம் பெரியார் நூல் விற்பனைக் கடைகளில் அலைமோதுகிறது. அதே நேரத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பக்தி, ஆன்மீக நூலை வாங்குகிறார்கள் என்றும் அந்த ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. பெரியாரிய – கடவுள் மறுப்புக் கொள்கையில் இளம் வயது முதல் ஈர்க்கப்பட்டேன் என்று தனியார் கல்லூரியில் பணியாற்றும் 27 வயது இளைஞர் சவுமியா நாராயணசாமி கூறுகிறார். மதத்தோடு ஜாதி பிணைந்திருக்கிறது என்று அந்த நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். கடந்த காலத்தில் சமூகம், ஜாதி, மதம், பெண்ணடிமை கருத்துகளில் மூழ்கிக் கிடந்தது. “தமிழ்நாட்டு வரலாற்றில் சமூகத்தை வர்ணாஸ்ரமும், ஜாதியும் ஊடுறுவி சிதைத்தது. இப்போது மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். மாற்றம் தொடங்கிவிட்டது” என்கிறார் 19 வயது இளைஞர் கருணாகரன். தமிழ் இலக்கியப் பட்டப் படிப்பில்...

தமிழ்நாடு அரசை நிதிக் குழுப் பாராட்டுகிறது.

தமிழ்நாடு அரசை நிதிக் குழுப் பாராட்டுகிறது.

டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையில் 16வது நிதிக்குழு தமிழ்நாடு வந்தபோது நமது கோரிக்கைகள் அனைத்தும் முன்வைக்கப்பட்டன. அவற்றில் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை 50 சதவீமாக அதிகரித்தல், நிதிப் பகிர்வுக்கு முற்போக்கான கணக்கீட்டு முறையை பின்பற்றுதல், மாநிலங்களின் செயல்திறனுக்கு உரிய நிதிப் பகிர்வு அளித்தல் போன்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டன. தமிழ்நாட்டின் அறிக்கை குறித்து ஆணையம் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. பெரியார் முழக்கம் 09012025 இதழ்

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

ன்னேடுகளில் பொறிக்கச் செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தற்போது கிராமப்புறங்களில் உள்ள 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக, தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 34,987 தொடக்கப் பள்ளிகளில் 17.53 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. தனிச் செயலி உருவாக்கப்பட்டு ஆன்லைன் வழியாக திட்டத்தை அன்றாடம் கண்காணித்து, எந்தக் குறையும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் கவனத்துடன் செயல்படுகிறது அரசு. பெரியார் முழக்கம் 09012025 இதழ்

கல்விக்கு நிதி மறுக்கும் ஒன்றிய ஆட்சி

கல்விக்கு நிதி மறுக்கும் ஒன்றிய ஆட்சி

தரமான கல்வியை வழங்குவதில் உறுதியுடன் செயல்படும் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டில் எந்தவொரு நிதியையும் ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதி மற்றும் போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட மொத்த கல்விச் செலவினையும் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. கல்வியாண்டுகளில், கடந்த 4 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் ரூ. 1,165 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 35,530 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். புதுமைப் பெண் திட்டம் எனும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு அவர்களின் இளங்கலைக் கல்விக் காலம் முழுவதும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதனைதொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் 6 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி பயிலும் காலத்தில் மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான தமிழ்ப் புதல்வன் திட்டத்தையும் கடந்த ஆண்டு...

வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு!

வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக் குறித்து சட்ட சபையில் ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கியத் தகவல்களின் தொகுப்பு இது. ஆளுநர் உரையைப் படிக்க மறுத்ததால் பேரவைத் தலைவர் உரையைப் படித்தார். பொருளாதாரத்தில் தமிழ்நாடு முன்னோடி நாட்டின் 2வது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இன்று திகழ்கிறது. வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. முந்தைய ஆண்டுகளில் தேசிய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவிகிதமாக இருந்த தமிழ்நாட்டின் பங்கு, கடந்த 4 ஆண்டுகளில் 9.21 சதவிகிதமாக உயர்ந்துள்ளதே திராவிட இயக்க கொள்கைக்குக் கிடைத்த வெற்றி. இதனை முன்னேற்றிடும் வகையில் எதிர்வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதை தமிழ்நாடு தனது இலக்காக கொண்டுள்ளது. மருத்துவம், கல்வி மற்றும் சமூகநலனையும் மேம்படுத்துவதிலும் நாட்டிற்கே முன்னோடியாகத் தமிழ்நாடு விளங்குகிறது. தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களின் வழியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்கால தலைமுறைகளின் வாழ்வை செம்மையாக வடிவமைத்திடுவதற்காக பல முன்னோடி திட்டங்களை அறிமுகப்படித்தியுள்ளார். சிறந்த திட்டங்களின் ஒன்றான...

சீமான் முகத்திரை கிழிந்தது

சீமான் முகத்திரை கிழிந்தது

தந்தை பெரியாரை அவமதிக்கும் சீமானைக் கண்டித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை 5.1.2025 அன்று மாலை சென்னையில் சைதைத் தேரடி தெருவில் பொதுக்கூட்டம் நடத்தியது. அனைத்துப் பெரியார் இயக்கத் தோழர்களும் பொதுக்கூட்டத்துக்கு திரண்டு வந்திருந்தனர். ஏராளமான இளைஞர்கள் பெரியார் படம் போட்ட டீ சட்டையுடன் உணர்வுபூர்வமாக பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் பேசிய ஒவ்வொருவரின் உரையும் அழுத்தமானதாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது. சீமான் என்ற ஏமாற்றுப் பேர்வழி நாக்கில் நரம்பின்றி சாக்கடை மொழியில் பெரியாரைப் பேசுவதை இனியும் அனுமதிக்க முடியாது என்று எச்சரிப்பதாக இருந்தது இக்கூட்டம். கூட்டம் கருங்கடலில் மூழ்கி இருந்த நிலையில் ‘சீமான் ரசிகர்கள்’ கூட்டத்துக்கு ஆள் வரவில்லை என்று பொய்யாக வெளியிட்ட ‘ட்வீட்’டுகளை மக்கள் மத்தியில் படித்துக்காட்டிய போது கூட்டத்தினர் கைத்தட்டி எள்ளி நகையாடினர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர் உள்ளிட்ட கழகத் தோழர்களும், திராவிடர்...

அடைமழையாகப் பரப்புரைக் கூட்டங்கள் 2024 – கழகத்தின் களப்பணிகள்

அடைமழையாகப் பரப்புரைக் கூட்டங்கள் 2024 – கழகத்தின் களப்பணிகள்

ஜனவரி: சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வட சென்னை, திருப்பூரில் கழக சார்பில் பொங்கல் விழாக்கள் நடந்தன. திருவல்லிக்கேணி விழாவில் சென்னை மேயர் பிரியா சிறப்பு விருந்தினர். திருப்பூர் மாநகர கழக அமைப்பாளர் முத்து – வசந்தி இணையர் குடும்ப விழாவை இந்திய அரசியலும் பார்ப்பனியமும் என்ற கருத்தரங்கமாக நடத்தினர். சிறப்புரை : கொளத்தூர் மணி. பிப்ரவரி: ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் சர்வாதிகாரத்தை எதிர்த்துக் கழகம் தொடர் கூட்டங்களை நடத்தியது. சென்னை, சேலம், திண்டுக்கல், திருச்சி மற்றும் ஈரோடு தெற்கு பகுதிகளில் கூட்டங்கள் நடந்தன. பிப்ரவரி 03: மதுரை மாவட்டக் கழக சார்பில் ஜாதி மறுப்பு இணையர்களுக்குப் பாராட்டு விழா. பிப்ரவரி 15: திண்டுக்கல், திருப்பூர், சென்னை மாவட்டங்களில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” “சமூக ஒற்றுமையைக் காப்போம்” தொடர் பரப்புரைக் கூட்டங்கள் நடந்தன. மேட்டூரில் பரப்புரைக் கூட்டத்துக்கு ஜலகண்டபுரம் காவல்துறை அனுமதி மறுத்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்று கூட்டங்கள் நடந்தன....

கொள்கைகளைக் கொண்டு செல்வதற்கு அடக்குமுறைகளை வரவேற்றார் பெரியார்! ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு (2)

கொள்கைகளைக் கொண்டு செல்வதற்கு அடக்குமுறைகளை வரவேற்றார் பெரியார்! ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு (2)

குடிஅரசு சமூகத்தில் உருவாக்கிய தாக்கத்தையும், மதவாதிகள் மிரண்டு போய் அரசிடம் பாதுகாப்பு கேட்ட வரலாறுகளையும் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சுட்டிக்காட்டினார். சென்னைக் கழகத் தலைமையகத்தில் ஆகஸ்டு 12ஆம் தேதி நடந்த குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகத் திறப்பு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம்.. வள்ளலார் விழா ஒன்றில் பேசிய கலைஞர், வள்ளலார் சாமிகளைப் போல மென்மையானக் கருத்துகளை எல்லாம் சொல்லி இந்த மக்களைத் திருத்த முடியாது. இந்தத் தமிழன் கும்பகர்ணனாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். தூங்கிக் கொண்டிருக்கிற இந்தக் கும்பகர்ணன் விழிப்பதற்குப் பெரியார் என்ற யானை மிதித்தால் தான் நடக்கும் என்று பேசினார். சுயமரியாதைக்காரர்கள் தேவஸ்தானக் கமிட்டியில் இருக்கலாமா? என்ற கேள்விக்குப் பெரியார் இப்படி பதிலளித்தார். சுயமரியாதைக்காரர்கள் தேவஸ்தானக் கமிட்டியில் தாராளமாக இருக்கலாம். கோயில் சொத்துக்களை மக்களுக்கு பயன்படுத்துகிற முயற்சியில் நீங்கள் பங்களிக்கலாம். ஆனால் வெறும் மூடநம்பிக்கைகளையும், வர்ணாசிரமத்தை மட்டும் பரப்புவதற்காக மட்டும் அந்தக் கமிட்டி இருக்கிறது என்று சொன்னால் அதில் இருப்பதற்கான...

கோல்வாக்கர்: இந்தியப் பாசிசத்தின் தந்தை!

கோல்வாக்கர்: இந்தியப் பாசிசத்தின் தந்தை!

இன்றைய இந்தியாவின் மிக முக்கிய அமைப்பு ஆர்.எஸ்.எஸ். இந்திய ஒன்றியத்தை அந்த அமைப்புதான் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. வட இந்தியாவின் பல மாநிலங்களில் அதிகாரத்தில் உள்ளது. அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க மிகவும் சக்திவாய்ந்த, பணக்கார கட்சியாக உருவெடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து முக்கிய நிறுவனங்களும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளன. பல்கலைக் கழகங்கள் முதல் அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கலாச்சாரம் தொடர்பான அனைத்து நிறுவனங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்போது இந்த அமைப்பு உலகின் பிற நாடுகளிலும் பல பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அது ஒரு தனித்த அமைப்பு மட்டுமல்ல, பல நூறு அமைப்புகளுக்கான அமைப்பு என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஒரு நூற்றாண்டில் எப்படி இத்தகைய நிலையை ஆர்.எஸ்.எஸ் அடைந்தது என்பதைத் தெரிந்துகொள்ள கோல்வாக்கரை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான படைப்புதான் “Golwalkar: The Myth Behind the Man, The Man Behind the...

ஒன்றிய ஆட்சியின் ‘மனுதர்மப்’ பார்வை அடிமைச் சின்னத்தின் அடையாளமா திருமணம்? – ர.பிரகாசு

ஒன்றிய ஆட்சியின் ‘மனுதர்மப்’ பார்வை அடிமைச் சின்னத்தின் அடையாளமா திருமணம்? – ர.பிரகாசு

திருமணமான பெண்களின் விருப்பத்துக்கு மாறாக உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது ஒன்றிய ஆட்சி. உலகம் முழுக்கவே பெண்ணுரிமை சார்நது நடைபெறும் விவாதங்களில் திருமணத்திற்குப் பின்பு கணவனால் பெண்கள் எதிர்கொள்ளும் கட்டாய உறவு முக்கியமான ஒன்று. இத்தகைய வல்லுறவை Marital Rape என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். உலகில் மூன்றில் ஒரு பெண் இத்தகைய கொடுமைக்கு உள்ளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே சுமார் 14 விழுக்காடு பெண்கள் இக்கொடுமைக்கு உள்ளாகின்றனர். இந்தியாவில் 18 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்களில் 82 விழுக்காட்டினர் கணவனால் பாலியல் வன்கொடுமையை எதிர்கொள்வதாக 2019-21ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நல சுகாதார ஆய்வு கூறுகிறது. சுமார் 150 நாடுகளில் திருமணத்திற்குப் பிந்தைய கட்டாயப் பாலியல் வன்கொடுமை குற்றமாக்கப்பட்டுள்ளது. எனினும் சட்டத்தையும் மீறி உலகம் முழுவதும் இக்கொடுமையைப் பெண்கள் எதிர்கொண்டே வருகின்றனர். 32 நாடுகளில் மட்டும்தான் இதனைக் குற்றமாகக் கருதுகிற சட்டம் இல்லை....

ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு சனாதனத்தை மிரள வைத்த ‘குடிஅரசு’

ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு சனாதனத்தை மிரள வைத்த ‘குடிஅரசு’

குடிஅரசு சமூகத்தில் உருவாக்கிய தாக்கத்தையும், மதவாதிகள் மிரண்டு போய் அரசிடம் பாதுகாப்பு கேட்ட வரலாறுகளையும் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சுட்டிக்காட்டினார். சென்னைக் கழகத் தலைமையகத்தில் ஆகஸ்டு 12ஆம் தேதி நடந்த குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகத் திறப்பு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம்.. குடிஅரசும் சுயமரியாதை இயக்கமும் தமிழ்நாட்டின் வரலாற்றில் 1925 முதல் 1949 வரை அதன் எழுத்தையும் பேச்சையும் வரலாறாகப் பதிவு செய்யப்பட்டதன் காரணமாகத்தான் இன்றைக்கும் நாம் அதைப் படிக்கவும் பேசவும் முடிகிறது. பெரியார் குடிஅரசு இதழை ஆரம்பித்த போது வெறும் 7 சதவீதம் பேர் தான் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். அந்தக் காலகட்டத்தில் கூட தந்தை பெரியார் “நான் ஒருவனே எழுதி, நான் ஒருவனே அச்சிட்டு, நான் ஒருவனே எழுதிப் படிக்கின்ற நிலை வந்தாலும் குடிஅரசு இதழை நடத்திக் கொண்டு இருப்பேன்”. நவீன அச்சு இயந்திரங்களோ, தொலை தொடர்பு வசதி என எதுவுமே இல்லாத காலம் அது. 1929ஆம்...

திராவிட இயக்கம் பேசுவது இனவெறி அல்ல; இனத்தின் விடுதலை! – மனோ தங்கராஜ்

திராவிட இயக்கம் பேசுவது இனவெறி அல்ல; இனத்தின் விடுதலை! – மனோ தங்கராஜ்

21.09.2024 அன்று சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற “அன்றே எச்சரித்தார் பெரியார் – பறிபோகும் மாநில உரிமைகள்” பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆற்றிய உரையின் தொகுப்பு. பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். காரணம் தந்தை பெரியார் ஏற்படுத்திய சுயமரியாதை உணர்வு. சுயமரியாதையோடு மற்றவர்களையும் மதிக்கும் பண்பு. அதே போன்று நம்மை மானம் இழக்கச் செய்து, நமது உரிமைகளைப் பறித்து நம்மை நிராயுதபாணிகளாக மாற்றி, பல்வேறு மூடநம்பிக்கைகளைக் கற்பித்து அதை நம்ப வைத்து நமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் இருந்து விடுதலைப் பெறுவதற்காகவே, தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர் தந்தை பெரியார். எனக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவருக்கும் நீண்டகாலத் தொடர்பு இருக்கிறது. நான் கடந்துவந்த பாதையை அடிக்கடி நினைத்துப் பார்ப்பது உண்டு. நான் கொளத்தூர் மணி அவர்களைக் கூடங்குளம் அணு உலைக்கு எதிரானப் போராட்டக் களத்தில்தான் முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போது அவரைச் சார்ந்த தோழர்கள் தமிழ்நாடு முழுவதிலும்...

லப்பர் பந்து

லப்பர் பந்து

அண்மைக் காலமாக தமிழ் திரைப்படங்கள் ஜாதிய ஒடுக்குமுறைகளை ஆழமாகப் பேசத் தொடங்கியிருக்கின்றன. சமூக நீதியின் விளைச்சல் களாக அருமையான இளம் படைப்பாளிகளைத் தமிழ் நாடு உருவாக்கியிருக்கிறது. சமூகக் கவலையோடு அவர்கள் படைப்புகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஜாதி எதிர்ப்பை முன்வைத்து வந்துள்ள படங்கள் தீண்டப்படாத மக்களின் துயரங்கள், அவர்களின் மீதான ஒடுக்குமுறைகள், ஜாதித் திமிரின் ஆதிக்கம், அதை எதிர்த்துப் போராடுகிற இளம் போராளிகள், ஜாதி மறுப்புக் காதலர்கள் என்ற கண்ணோட்டத்திலேயே பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் இருந்து ஒரு மாறுபட்ட ஒரு பார்வையில் வந்திருக்கக் கூடிய ஒரு படம் தான் லப்பர் பந்து. ஜாதித் தடைகளைக் கடந்து செல்லும் வாழ்க்கைப் பாதைக்கு ஒளியைக் காட்டுகிறது இந்தத் திரைப்படம். தலித் பெண்ணை மணந்த பிற்படுத்தப்பட்ட ஜாதி இளைஞன். அந்த இணையர்களுக்கு பிறந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் புரிய விரும்பும் தலித் இளைஞர். “மாமனார் – மருமகன்” என இந்த தரப்புகளுக்குமான தன் முனைப்புகளில்...

பெரியாரிஸ்ட் உதயநிதியை வரவேற்கிறோம்!

பெரியாரிஸ்ட் உதயநிதியை வரவேற்கிறோம்!

உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த சில மாதங்களாகவே உதயநிதி துணை முதல்வராவது குறித்தப் பேச்சுக்கள் தான் ஊடகங்களில் பேசு பொருளாக இருந்தது. உதயநிதி ஸ்டாலின் ஒரு மிகச்சிறந்த பெரியாரிஸ்ட் மற்றும் பகுத்தறிவாளர் ஆவார். சுயமரியாதை, சமூகநீதிக் கொள்கைகளில் அழுத்தமான உறுதிக்கொண்டவர். இதை வெளிப்படையாகவே அவர் அறிவித்திருக்கிறார். டெங்கு, மலேரியாவைப் போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியதற்காக உதயநிதி ஸ்டாலின் மீது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சங்பரிவார கும்பல்கள் வழக்குத் தொடுத்தன. ஆனால் இந்த வழக்குகளுக்கு எல்லாம் அவர் அஞ்சி நடுங்கிடவில்லை. உளவியல் ரீதியாக அவரை நிலைகுலையச் செய்துவிடலாம் என்ற எதிரிகளின் கணிப்பைத் தவிடுபொடியாக்கினார். 2023இல் இராயப்பேட்டையில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பொங்கல் விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் “நான் ஒரு கருப்புச்சட்டைகாரன்” என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். மிக எளிமையான தோற்றம், அழுத்தமான கருத்துகளைப் பதிவு செய்பவர். அவருக்கு இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட...

சட்ட விரோத ஈஷா மையம் மூடப்படுவது எப்போது?

சட்ட விரோத ஈஷா மையம் மூடப்படுவது எப்போது?

கோவையில் செயல்பட்டு வரும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தின் மீது எழுந்துள்ள நூற்றுக்கணக்கான புகார்களின் பட்டியலில் புதிதாக ஒன்று இணைந்துள்ளது. கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘‘எனது 2 மகள்கள் கீதா மற்றும் லதா ஆகியோர் ஈஷா யோகா மையத்தில் யோகா கற்றுக்கொள்ளச் சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். எனது மகள்கள் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாகத் தெரிய வருகிறது. அவர்களைச் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஈஷா யோகா மையம் நடத்தும் ஜக்கி வாசுதேவிற்கும் ஒரு மகள் இருக்கிறார். அவர் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்க சாமியார் ஜக்கி வாசுதேவ் அனுமதி தந்துள்ளார். எனது மகள்கள் அங்கிருந்து வெளிவந்தால் அவர்களைத் தொந்தரவு செய்ய மாட்டோம். அவர்களுக்கென தனி இடத்தைக் கொடுத்து அவர்களுடைய தனிமை பாதுகாக்கப்படும். எனவே, இரு மகள்களை மீட்டு நீதிமன்றத்தில்...

வேதப் புரட்டைத் தகர்த்து திராவிட நாகரீகத்தை உறுதிப்படுத்திய ஜான் மார்ஷல்!

வேதப் புரட்டைத் தகர்த்து திராவிட நாகரீகத்தை உறுதிப்படுத்திய ஜான் மார்ஷல்!

19-ம் நூற்றாண்டில் உலகின் பழமையான நாகரீகமாக பார்க்கப்பட்டது எகிப்திய, சுமேரிய, மெசபத்தோமியா நாகரீகங்கள்தான். அதனைத் தொடர்ந்து மாயன் நாகரீகமும், சீன நாகரிகமும் மிகப் பழமையானதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை அதற்கு என தனி நாகரீகம் என்று எதுவும் இருந்ததாக யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக ஆரியர் வருகைக்கு பின்னர்தான் இந்திய நாகரீகம் வளர்ச்சி அடைந்தது என்றும், அதற்கு முன்னர் இங்கு இருந்த மக்கள் நாகரீக வளர்ச்சியின்றி நாடோடி வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பது தான் மேற்கத்திய ஆய்வாளர்களின் கருத்தாக இருந்தது. அவர்களை பொறுத்தவரை இந்தியாவின் முதல் நகரமே பாடலிபுத்திரா என்று அழைக்கப்பட்ட பாட்னாதான். ஆனால், இவைகள் எல்லாம் சிந்துநதிக் கரையில் ஒளிந்துகொண்டிருந்த மிகப்பெரும் பழங்கால நாகரீகத்தின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர்தான். அதாவது 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி இந்தியாவை மட்டுமல்ல, உலகையே புரட்டிப்போட்ட ஒரு ஒரு ஆய்வு முடிவு ‘The Illustrated London News’ இதழின் முகப்புப் பக்கத்தில் வெளிவந்தது....

‘விநாயகன்’ அரசியலுக்கு வந்த வரலாறு

‘விநாயகன்’ அரசியலுக்கு வந்த வரலாறு

நாடு முழுக்க இந்துத்துவா அரசியலை இந்துக்களிடம் கொண்டு சேர்க்கவும், அதன்பேரில் அவர்களை ஒன்று திரட்டவும் அறிவிக்கப்படாத ரத யாத்திரையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடந்து வருகின்றன. உண்மையில் இதன் வரலாறு பால கங்காதர திலகருடனும், கடைசி இந்து அரசன் சிவாஜியுடனும் தொடங்குகிறது. புராண புரட்டு ஒருமுறை சிவன் வெளியே சென்றிருந்த நேரம் பார்வதி நீராடச் சென்றார். அப்போது தனக்குக் காவல் காக்க ஒருவரும் இல்லை என்பதால் தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி அனுக்கிரகத்தால் அதற்கு உயிர் ஊட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளையாகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது எனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி நீராடச் சென்றுவிட்டார். அச்சமயம் அங்கு வந்த சிவனை உள்ளே செல்ல பிள்ளையார் அனுமதிக்கவில்லை. இதனால் கோபம்கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். நீராடி முடிந்ததும் பார்வதி வெளியே வந்து பிள்ளையார் தலை இல்லாமல்...

கடவுள் உரிமைகளைப் பறிக்கும் AI தொழில்நுட்பம் – கோ.ஒளிவண்ணன்

கடவுள் உரிமைகளைப் பறிக்கும் AI தொழில்நுட்பம் – கோ.ஒளிவண்ணன்

* மனித குல வரலாற்றில் மாற்றங்கள் இன்றியமையாதவை. மனிதர்களின் கண்டுபிடிப்புகளின் வரிசையில் இன்னுமொரு சிகரம் செயற்கை நுண்ணறிவு. செயற்கை நுண்ணறிவின் வருகை ஒருவித பதற்றத்தையும் அச்சத்தையும் அளிக்கிறது. மனிதர்கள் இதுவரை கண்டுபிடித்தவை, அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. ஒரு துப்பாக்கியோ, அணுகுண்டோ அதற்குரிய விசையை இயக்கினால் மட்டுமே இயங்கும். ஆனால் செயற்கை நுண்ணறிவு, மனிதர்களிடமிருந்து எவ்வளவு விரைவாக, ஆழமாகக் கற்றுக் கொள்ள முடியுமோ கற்றுக் கொண்டு, பன்மடங்கு ஆற்றலுடன் சுயமாக இயங்கக் கூடிய வல்லமையைக் கொண்டுள்ளது. • மாபெரும் மாற்றங்கள், எப்போதாவது ஏற்படுவதைத்தான் உலகம் கண்டுள்ளது. இப்போது ஒரு சில மணி நேரத்திலேயே புதிய கண்டுபிடிப்புகள் ‘பிரேக்கிங் நியூஸ்’ போல வெளிப்படுவதைக் காண்கிறோம். இனி வரும் உலகம் எப்படி இருக்கும் என்பதுதான் உலகெங்கும் எழுந்து கேள்வி. அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கண்டறிவதே நம் முன்னுள்ள சவால். * மரபியலில் நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகளை செயற்கை நுண்ணறிவு உண்டாக்கும் என...

அடக்குமுறைகளைச் சந்தித்த “குடிஅரசு”

அடக்குமுறைகளைச் சந்தித்த “குடிஅரசு”

1922 ஆம் ஆண்டு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, கோவை சிறையில் பெரியார் அடைக்கப்பட்டபோது, அவரும் அவருடன் சிறையில் உடனிருந்த ஈரோடு கருங்கல்பாளையம் வழக்கறிஞர் தங்கப்பெருமாள் பிள்ளையும் இணைந்து சிந்தித்த திட்டத்தின் விளைச்சல்தான் ‘குடிஅரசு.’ சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், 1923 ஆம் ஆண்டிலேயே ‘ குடிஅரசை’ பதிவுசெய்த பெரியார், 02.05.1925 ஈரோட்டில் ஞானியார் அடிகளைக் கொண்டு வெளியிட்டார். ஞாயிறுதோறும் ஓரணா விலையில் வெளிவரத் தொடங்கியது குடி அரசு. முதலில் அட்டையில் பாரதத் தாய், இராட்டை சுற்றும் காந்தியார், நெசவு செய்யும் பெண், உழவு செய்யும் விவசாயி, சுத்தியால் அடிக்கும் தொழிலாளி, மூட்டை சுமக்கும் பாட்டாளி படங்களோடும், ‘எல்லோரும் ஓர்குலம், எல்லோரும் ஓர் இனம்,’ ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதி பாடல்களோடும் குடி அரசு வெளிவரத் தொடங்கியது. தொடக்கக் காலங்களில் வார இதழின் 12 பக்கங்களையும் தாமே எழுதி வந்ததாய்ப் பெரியார் குறிப்பிடுகிறார். ( குடிஅரசு 18.04.1926 ) பின்னர், ம.சிங்காரவேலர், சாமி.சிதம்பரனார்,...

மக்களுக்கான விடுதலையை மந்திரங்கள் தராது – எஸ்.வி.வேணுகோபால்

மக்களுக்கான விடுதலையை மந்திரங்கள் தராது – எஸ்.வி.வேணுகோபால்

மரித்துப்போன 15 வயதுப் பெண்ணை, ‘மீண்டும் உயிரோடு கொண்டுவந்து நிறுத்துவேன்’ என்று சொல்லி, அவரது சடலத்தைத் தனது ஆட்கள் உதவியோடு எடுத்துக்கொண்டு போனவர், காவல் துறையால் அதற்காகக் கைது செய்யப்படுகிறார். ஆனால், அதற்குப் பின்னும் அந்த ஊரே அவரைக் கொண்டாடுகிறது. அப்படியான ஒருவர் குறித்த ‘சாமியார்’ என்னும் பிம்பக் கட்டமைப்பு, ஜூலை 2 அன்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸ் நகரை நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் சவக்கிடங்காக மாற்றிவிட்டது. ஹாத்ரஸ் நகர நெரிசல் நிகழ்வில் குழந்தைகள் உள்ளிட்ட 121 பேர் பலி என்பது அரசு சொல்லும் கணக்கு என்றாலும், ‘முந்நூறு சடலங்களுக்கு மேல் எண்ணிப் பார்த்தேன்’ என உள்ளூர் மனிதர் ஒருவர் கூறியது ‘தி இந்து’ நாளேட்டில் பதிவாகியுள்ளது. ஒரு பேருந்தின் இருக்கைகள் எல்லாம் சடலங்களால் நிரப்பப்பட்டு இருக்கும் கோரமான ஒரு காட்சியை இதற்குமுன் நாளேடுகளில் பார்த்த நினைவில்லை. மூன்று பெண் சடலங்கள் வினோத் என்பவர் தனது குடும்பத்தில் மூன்று தலைமுறையைச் சார்ந்த...

பார்ப்பனர்கள் பாஜகவை கொண்டாடுவது ஏன்? – சாவித்திரி கண்ணன்

பார்ப்பனர்கள் பாஜகவை கொண்டாடுவது ஏன்? – சாவித்திரி கண்ணன்

”சாதியால் தான் நாடு பின்னடைந்துவிட்டது…, சாதியே கிடையாது..” என பாஜக தலைவர்கள் அடிக்கடி பேசுகிறார்கள்! ஆனால், அக் கட்சிக்குள்ளும், ஆட்சி நிர்வாக கட்டமைப்பிலும் பார்ப்பனர்களின் முக்கியத்துவம் பிரமிக்க வைக்கிறது! பார்ப்பனர்கள் ஏன் பாஜகவை கொண்டாடுகிறார்கள்..? எனப் பார்ப்போம்; நமது பிரதமர் மோடியோ, ”நாட்டில் இரண்டே சாதிகள் தான் உள்ளனர். ஒன்று ஏழைகள் மற்றொன்று நாட்டை வறுமையில் இருந்து விடுவிக்க பங்களிப்பவர்கள்” என்கிறார்! அதாவது இரண்டாவது தரப்பினர் வசதியானவர்கள் என்பதைத் தவிர்த்து நாட்டை வறுமையில் இருந்து மீட்க பங்களிப்பவர்கள் என்பதன் மூலம் ஏழைகளை நாட்டிற்கு பங்களிக்காதவர்கள் எனச் சொல்லாமல் சொல்கிறார்! உண்மையில் தங்கள் உழைப்பின் மூலம் நாட்டின் அனைத்து நிர்மாணத் தளங்களையும் அவர்களே கட்டி எழுப்பி அதிகம் பங்களித்த போதிலும், ஏழ்மையில் வைக்கப்பட்டுள்ளனர்! இப்படி எல்லாம் பேசும் பிரதமர் தான், ”நான் மிகவும் பிற்பட்ட சமூகத்தில் இருந்து பிரதமராகி உள்ளேன்” என்றும் சொல்லி உள்ளார். ”தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செல்வாக்கான சாதி...

இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தும் பெண்கள்! மரபை உடைக்கும் கழகப் பெண்களுக்கு பாராட்டு

இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தும் பெண்கள்! மரபை உடைக்கும் கழகப் பெண்களுக்கு பாராட்டு

ஆரம்பத்தில், பெண் தோழர்கள் யாரேனும் இறக்கும் சூழலில், பெண் தோழர்களே அந்தச் சடலத்தை தூக்கிச் செல்வது என்று செயல்படுத்தினோம். இறந்தவருக்கு பெண் பிள்ளை இருந்தால், அவரைக் கொள்ளி வைக்கச் செய்தோம் ‘ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் சம உரிமை பெற, கல்வியே அடிப்படை’ என்று முழங்கிய பெரியார், பாலின பேதம் கடக்க வலியுறுத்திய கொள்கைகள், முன்னெடுப்புகள் பற்பல. அதையடுத்து, ஆணுக்கு இணையாக அனைத்திலும் தங்களின் உரிமைகளைத் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றனர், பெண்கள். என்றாலும், இன்றளவும் அவர்களால் அதிகம் பங்கு இயலாத ஒன்றாக இருந்து வருவது… வாழ்வின் வழியனுப்பலுக்கான இறுதி மரியாதை நிகழ்வுகள்தான். இன்றும் ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் அதில் புழங்குகிறார்கள். பெண்கள் தரப்பிலிருந்து, ‘நாங்களும் செய்தால் என்ன?’ என்ற கேள்வியே உரக்க எழுப்பப்படவில்லை. இத்தகைய சமூகச் சூழலில்தான் அதி முக்கியத்துவம் பெறுகிறது, கொளத்தூரில் பெண்கள் குழு ஒன்று செய்து வரும் இறுதி மரியாதை நிகழ்வுகள் நடைமுறை. சேலம் மாவட்டம், கொளத்தூர் கிராமத்தில், பெரியாரின்...

இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தும் பெண்கள்! மரபை உடைக்கும் கழகப் பெண்களுக்கு பாராட்டு

இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தும் பெண்கள்! மரபை உடைக்கும் கழகப் பெண்களுக்கு பாராட்டு

ஆரம்பத்தில், பெண் தோழர்கள் யாரேனும் இறக்கும் சூழலில், பெண் தோழர்களே அந்தச் சடலத்தை தூக்கிச் செல்வது என்று செயல்படுத்தினோம். இறந்தவருக்கு பெண் பிள்ளை இருந்தால், அவரைக் கொள்ளி வைக்கச் செய்தோம் ‘ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் சம உரிமை பெற, கல்வியே அடிப்படை’ என்று முழங்கிய பெரியார், பாலின பேதம் கடக்க வலியுறுத்திய கொள்கைகள், முன்னெடுப்புகள் பற்பல. அதையடுத்து, ஆணுக்கு இணையாக அனைத்திலும் தங்களின் உரிமைகளைத் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றனர், பெண்கள். என்றாலும், இன்றளவும் அவர்களால் அதிகம் பங்கு இயலாத ஒன்றாக இருந்து வருவது… வாழ்வின் வழியனுப்பலுக்கான இறுதி மரியாதை நிகழ்வுகள்தான். இன்றும் ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் அதில் புழங்குகிறார்கள். பெண்கள் தரப்பிலிருந்து, ‘நாங்களும் செய்தால் என்ன?’ என்ற கேள்வியே உரக்க எழுப்பப்படவில்லை. இத்தகைய சமூகச் சூழலில்தான் அதி முக்கியத்துவம் பெறுகிறது, கொளத்தூரில் பெண்கள் குழு ஒன்று செய்து வரும் இறுதி மரியாதை நிகழ்வுகள் நடைமுறை. சேலம் மாவட்டம், கொளத்தூர் கிராமத்தில், பெரியாரின்...

பெரியாரின் நாத்திகம் தமிழர் நலன் சார்ந்தது அய்யாவுடன் கைகோர்த்த குன்றக்குடி அடிகளார்!

பெரியாரின் நாத்திகம் தமிழர் நலன் சார்ந்தது அய்யாவுடன் கைகோர்த்த குன்றக்குடி அடிகளார்!

பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்திற்கு என்றென்றும் துணைநின்ற தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு ஜூலை 11-ஆம் தேதி தொடங்கியுள்ளது. திராவிட மாடலின் அடித்தளமான ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமத்துவக் கோட்பாட்டில் உறுதியோடு இருந்த குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டை நினைவுகூர்ந்து அவருடைய மானுடப் பணிகளை போற்ற வேண்டியது திராவிட இயக்கத்தின் கடமை. குன்றக்குடி அடிகளார் குறித்து 2018ஆம் ஆண்டு நிமிர்வோம் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையை அவருடைய நூற்றாண்டின் தொடக்கதில் பகிர்கிறது புரட்சிப் பெரியார் பெரியார் முழக்கம். கடவுள் – மத மறுப்புகளைக் கடுமையாகப் பேசிய பெரியார், போராட்ட வடிவங்களிலும் கடுமையான அணுகுமுறைகளையே பின்பற்றினார். பார்ப்பனியத்தில் ஊறிப் போய் நிற்கும் மக்களுக்கு இத்தகைய ‘அறுவை சிகிச்சை’ முறையே தேவை என்று கருதினார் பெரியார். ஆனால், தமிழ்நாட்டில் கொள்கை முரண் பாடுகளுக்கிடையே உரையாடல்களைத் தொடங்கி விவாதங்களுக்கு வழி திறந்து விட்டதுதான் பெரியார் இயக்கம், மாற்றுக் கருத்தாளர்களை எதிரிகளாக்கி வன்முறைக்கு தூபம் போட்டது இல்லை. இன்று எச். ராஜாக்களும்,...

பாபாக்களுக்கு ஆதரவு பெருகுவது ஏன்?

பாபாக்களுக்கு ஆதரவு பெருகுவது ஏன்?

இந்தியாவில் பாபாக்கள், கடவுள் அவதாரங்கள் பெருகி வருவதற்கான காரணம் என்ன? Times Of India நாளேடு (ஜூலை7) ஒரு விரிவான கட்டுரையை எழுதியுள்ளது. பெரும்பாலான பாபாக்கள் சமூகத்தில் விளிம்புநிலையில் இருந்தே வருகிறார்கள். உத்திரப்பிரதேசத்தில் போலே பாபாவின் பேச்சைக் கேட்க வந்தவர்களில் பெரும்பாலும் தலித் மக்கள். அதில் பெண்களே அதிகம். பாபாவோ ஜாதவ் என்ற தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். காவல்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வுப் பெற்று தன்னை கடவுள் அவதாரமாக அறிவித்துக் கொண்டவர். அதே நேரத்தில் பொருளாதாரத்தில் வலுவாக உள்ள மேல்தட்டு மக்களும் அவருக்கு சீடர்களாக இருக்கிறார்கள். தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பாபாக்களை நோக்கி வருவதற்கான காரணம் ஜாதியக் கட்டமைப்பு தான் என்று சமூகவியலாளர்கள் கூறுகிறார்கள். சமூகவியல் பேராசிரியரான கல்யாணி இது குறித்து கூறுகையில்:- ஜாதிய சமூகத்தில் பல்வேறு தடைகளையும், சுமைகளையும் விளிம்புநிலை மக்கள் சுமக்கிறார்கள். பாபாவின் சீடர்களாக மாறும்போது இந்த தடைகளில் இருந்து விலகி நிற்க முடிகிறது. ‘தேவி...

தலையங்கம் – மது மட்டும்தான் போதையா?

தலையங்கம் – மது மட்டும்தான் போதையா?

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த துயரமான சம்பவம் ஜூன் மாத இறுதியில் நடைபெற்றது. கள்ளச்சாராயம் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தாலும், சட்டத்திற்குப் புறம்பாக காய்ச்சப்படுவதும், அதனால் அவ்வப்போது இதுபோன்ற உயிரிழப்புகள் நிகழ்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையே, சாராய வியாபாரிகளுடன் திரைமறைவு உடன்படிக்கைகளை செய்துகொண்டு வருமானம் ஈட்டும் வேலையில் ஈடுபடுகிறது என்பதுதான் பரவலான குற்றச்சாட்டு. எனவே காவல்துறை நியாயமாக செயல்பட்டாலே கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை பெரும்பாலும் தடுத்துவிட முடியும். ஆனால் அதற்காக ஒட்டுமொத்தமாக மதுவை ஒழிக்க வேண்டுமென்று பேசுவதோ, அதுகுறித்த கோரிக்கைகளை எழுப்புவதோ அவசியமற்றது. இருப்பினும் அரசியலுக்காக இதுபோன்ற கோரிக்கைகள் எழுப்பப்படுவது வாடிக்கையாகி விட்டது. ஒருவேளை மதுவை ஒழிப்பதுதான் கள்ளச்சாராய மரணங்களை தடுப்பதற்கான ஒரே தீர்வு என்று கூறுவார்களேயானால், மது மட்டுமே போதை இல்லை. ஆன்மீகம் அதைவிட மிகப்பெரிய போதையாக இந்த நாட்டில் உருவெடுத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. குறிப்பாக ஜூலை இரண்டாம்...

புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் ஒரு நபர் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு!

புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் ஒரு நபர் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு!

ஒன்றிய பாஜக அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற் கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சத்ய நாராயணன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடை முறையில் இருந்து வந்த நிலையில், ஒன்றிய அரசால் அவை ‘பாரதிய நியாய சன்ஹிதா – 2023’, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா – 2023’ மற்றும் ‘பாரதிய சாக்ஷியா சட்டம் – 2023’ என மாற்றப்பட்டு, ஜூலை 1 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. நாடு முழுவதும் வெடித்த போராட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில், முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமலும், அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ள...

“நான் எரிந்து விழுந்த ராக்கெட்”

“நான் எரிந்து விழுந்த ராக்கெட்”

ஜூன் 25, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 94ஆவது பிறந்தநாள். இந்தியாவில் முதல்முறையாக அவருக்கு சிலை அமைத்த மாநிலம் தமிழ்நாடு. திராவிட மாடல் அரசு அவருக்கு முழு உருவச்சிலையை நிறுவி தமிழ்நாடு சமூகநீதி மண் என்பதை இந்திய ஒன்றியத்திற்கே உணர்த்தியது. இந்தியாவில் எந்தவொரு வீதிக்கும் வி.பி.சிங் பெயர் சூட்டியதாக வரலாறு கிடையாது. எந்தவொரு அரசுக் கட்டடத்திற்கும் அவர் பெயரை சூட்டியது இல்லை. தமிழ்நாடு மட்டும் தான் அவருக்கு உரிய மரியாதையை வழங்கியது. வி.பி.சிங், மண்டல் அறிக்கையின் ஒரு பகுதியான அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தது தான் இந்திய அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்போது ராமன் கோயில் பிரச்சனையை கையில் எடுத்து வி.பி.சிங் அரசை கவிழ்த்தது பாஜக. அந்த நிலையில் தமிழ்நாடு முதல்வராக இருந்த கலைஞர், வி.பி.சிங்கை தமிழ்நாட்டிற்கு அழைத்து பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தி, தமிழ்நாடு உங்களின் பின்னால் நிற்கிறது என்பதை வி.பி.சிங்கிற்கு...

புதிய பாய்ச்சலுக்கு தயாராகும் பள்ளிக்கல்வித்துறை

புதிய பாய்ச்சலுக்கு தயாராகும் பள்ளிக்கல்வித்துறை

பிரிட்டன் கூட்டமைப்பின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான ஸ்காட்லாந்து தேசிய நூலகத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அங்கு அமர்ந்து ஒரு நூலினை வாசித்தபோது… குழந்தைகளை மையப்படுத்திய கொண்டாட்டமான கல்வி அளிப்பதில் சிறந்து விளங்கும் சுவீடன், நார்வே, டென்மார்க், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளின் கல்வி அமைப்பைப் பார்வையிட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த வாரம் சென்றிருந்தார். அந்நாடுகளின் பள்ளிக்கூட வகுப்பறை செயல்பாடுகள், நூலகங்கள் உள்ளிட்டவற்றை ஒவ்வொன்றாகக் கவனித்தவர் அது தொடர்பான தகவல்களை சமூக ஊடக பக்கங்களில் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதில், 75 மொழிகள் பேசக்கூடிய மக்கள் வசிக்கும் சுவீடன் நாட்டில் அனைவரின் தாய்மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருவதை வியப்புடன் பகிர்ந்திருந்தார். தமிழ்நாடு அரசு பள்ளிகளை அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது. படிப்புக்குப் பசி ஒருபோதும் தடைக்கல்லாக இருத்தலாகாது என்று அரசு பள்ளிக்கூடத்தில் மதிய உணவுத்திட்டத்தை அறிமுகம் செய்து...