சட்டங்களே வேண்டாம்; சாஸ்திரங்களே போதும்! – காஞ்சி சங்கராச்சாரியின் நச்சுக் கருத்துக்கள்(2)
“பெண்களுக்கு சொத்துரிமை கூடாது” பெண்களுக்கு சொத்துரிமை வழங்கினால் ஸ்த்ரி தர்மமே பாழாகிவிடும்அதற்கு வர இருந்த சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னவர் காஞ்சி சீனியர் சங்கராச்சாரி. நாடாளுமன்றத்தில் நேரு பெண்களுக்கு சொத்துரிமை தரும் மசோதாவை கொண்டு வந்த போது அதை தடுத்து நிறுத்த தீவிர முயற்சிகளில் ஈடுப்பட்டவர் சங்கராச்சாரி. இது குறித்து அக்னி கோத்திரம்” ராமானுஜ தாத்தாச்சாரியார் இந்து மதம் எங்கே போகிறது? நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “இதப்பார்த்தீரா.. ஸ்திரிகளுக்கு சொத்துல பாத்யம் கொடுக்கப் போறாளாம். அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? இஷ்டப்பட்டவா கூட ஸ்த்ரீகள் ஓடிப்போயிடுவா. அபாண்டமா, அபச்சாரமா போயிடும்” -என அந்த பேப்பரை தட்டியபடி வியாக்யானம் தந்து கொண்டிருந்தார் மகாபெரியவர். நான் சிரித்தபடி பதில் சொன்னேன். ‘எனக்கு நல்லதுதான். ஸ்வாமி… என் மாமனாருக்கு நிறைய சொத்துகள் இருக்கு. ஒருவேளை என் ஆத்துக்காரிக்கு பங்கு வந்தால் எனக்கும் நல்லதுதான்! -இந்த பதிலைக் கேட்டதும். “அசட்டுத்தனமா...