ஈரோடு கொடுமுடி கோவில் பகுதியில் கழக நடவடிக்கை

ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் ஊழியர்கள் மீதும், அலுவலகர்களின் மீதும் தொடர்ச்சியாகப் போலியான புகார்களைத் தந்தும்.. பொய்யான குற்றாச்சாட்டுகளை அவர்கள்மேல் சுமத்தியும்..
ஓர் இழிவான அரசியலைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது பாஜக /இந்து மக்கள் கட்சி /இந்து முன்னனி மற்றும் அதன் துணை அமைப்புகள்.

இவர்களின் இந்த இழிவான அரசியலின் தொடர் நிகழ்வாக, நாளை கொடுமுடி மகுடேஷ்வரர் கோவில் நிர்வாகத்தைக் கண்டித்து உண்ணா விரதம் இருக்கப் போவதாக பாஜக கூடாரம் அறிவித்திருக்கிறது.

போலியான குற்றச்சாட்டுகளின் மூலம் கோவில் பணியாளர்களுக்கும், அறநிலையத்துறைக்கும், அப்பகுதியில் வசிக்கிற மக்களுக்கும், வழிபாட்டுக்கு வந்து செல்கிறப் பயணிகளுக்கும் அநாவசியமான தொந்தரவுகளையும், இன்னல்களையும் ஏற்படுத்தும் முகமாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பாஜக கூடாரச் சங்கிகள் அறிவித்திருக்கின்றனர்.
இவர்களின் இந்த தொடர்ச்சியானப் பொய் பிரச்சாரங்களை முறியடிப்பதும்,

கோவில் பணியாளர்களும் அப்பகுதியைச் சார்ந்த மக்களும் ஓர் சுமூகமானச் சூழலுக்குள் வாழ்வதை தொடரச் செய்வதும் பெரியார் தொண்டர்களின் கடமையாகும்.

எனவே,
பாஜக கூடாரத்தின் உண்ணா விரத நாடகத்தை முறியடிக்கும் விதமாக திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் தலைமையிலும் முற்போக்கு கட்சிகள் – அமைப்புகளின் ஆதரவோடும்

நாளை 26 -12- 2021 ஞாயிறு காலை பத்து மணியளவில் கொடுமுடியில் உண்ணும் விரதம் போராட்டம் நடைபெற உள்ளது.

தோழமை அமைப்புகளின் தோழர்களும், முற்போக்குக் கட்சியை சேர்ந்த தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டு ..

பாஜக கூடாரத்தின் பொய் பரப்புரையை.. மிரட்டல்களை முறியடித்திடவும் ,
தமிழ்நாடு என்றென்றும் மத துவேசத்தை ஆதரிக்காத…சகோதர மனப்பான்மை கொண்ட. பெரியார் மண் என்பதை காவிகளுக்கு மீண்டும் காத்திரமாக உணர்த்திடவும் இப்போராட்டத்திற்கு அனைவரும் கரம் கோர்க்குமாறு தோழமையுடன் வேண்டுகிறோம் .!

இவண்.
திராவிடர் விடுதலைக் கழகம்
ஈரோடு தெற்கு மாவட்டம்.

You may also like...