கழகத்தின் தேர்தல் பரப்புரைகள் தீவிரம் பாஜகவுக்கு எதிரான பரப்புரைகளுக்கு அமோக ஆதரவு!

சேலம் : மேட்டூர் நகரக் கழக சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” பொதுக்கூட்டம் 06.04.2024 அன்று மேட்டூர் சின்ன பார்க் திடலில் நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு மேட்டூர் நகரத் தலைவர் செ. மார்ட்டின் தலைமை தாங்கினார், கீ.கோ.தேன்மொழி வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக பாடகர் கோவன் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் செல்வேந்திரனின் இயக்கத்தில் “கலகக்காரன்” நையாண்டி தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.
கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராஜ், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, ம.க.இ.க பாடகர் கோவன் ஆகியோர் மோடி ஆட்சி தொடரலாமா? என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்கள்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.
மேட்டூர் நகர தி.வி.க.செயலாளர் சு.குமரப்பா நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கழகத் தோழர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகர திராவிட இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்தியா கூட்டணியின் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் ஏப்ரல் 07,08 ஆகிய தேதிகளில் பொள்ளாச்சி காந்தி சிலை, ஆனைமலை, பொள்ளாச்சி புதியப் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பொள்ளாச்சி நகர்மன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், திராவிட முன்னேற்றக் கழக பொள்ளாச்சி நகரக் கழகச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஆனைமலை பேரூராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வி, சாந்தலிங்கம், ஆனைமலை ஒன்றியச் செயலாளர் டாக்டர் செந்தில்குமார், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் கா.சு.நாகராசன், கழக நிர்வாகிகள் பொள்ளாச்சி யாழ்.வெள்ளிங்கிரி, சபரிகிரி, ஆனந்த், அரிதாசு மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சென்னை : சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு ஏப்ரல் 19 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தென் சென்னை மக்களவைத் தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் மார்ச் 06, 08 ஆகிய தேதிகளில் வேளச்சேரி நேதாஜி சாலை மற்றும் மடிப்பாக்கம் மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
மோடியின் பத்தாண்டு கால சர்வாதிகார ஆட்சியை தோலுரிக்கும் அரசியல் நையாண்டி கலை நிகழ்ச்சியை உமாபதி – பொன்ராஜ் – கார்மேகம் குழு பொதுமக்களின் பேராதரவுடன் நடத்தியது.
அதனைத் தொடர்ந்து “இந்தியா கூட்டணி என்பது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; அது இந்தியாவின் எதிர்காலத்தை காப்பாற்றும் கூட்டணி” என்பதை வலியுறுத்தி கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், இமானுவேல் துரை, அறிவுமதி, திராவிடர் கழக சோழிங்கநல்லூர் மாவட்டப் பொறுப்பாளர் பாண்டு, ஆகியோர் உரையாற்றினார்கள்..
இக்கூட்டத்தை மடிப்பாக்கம் பகுதிக் கழகச் செயலாளர் எட்வின் பிரபாகரன் மற்றும் இரண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். கழகத் தோழர்கள் – பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
ஈரோடு : இந்தியா கூட்டணியின் ஈரோடு மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.இ.பிரகாசுக்கு ஆதரவாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வெங்கம் பாளையம், காசி பாளையம், ஊஞ்சலூர், கொலாநெல்லி, கருமாண்டம்பாளையம், கீரமடை, கலத்து மின்னம்பாளையம், கொம்பனை புதூர், கருக்கம்பாளையம் காலனி, நடுப்பாளையம், மின்னப்பாளையம், குல விளக்கு, இச்சிப்பாளையம், வளந்தான் கோட்டை, நல்லசெட்டி பாளையம், ஜீவா தெரு, மாரப்பாளையம், சிவகிரி வாரச் சந்தை, அம்மன் கோயில் கைகாட்டி, ஆயக்காடு, அண்ணா நகர், கருக்கம்பாளையம், கொக்கிரிப்பட்டி, விளக்கேத்தி கருக்கம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றது..
கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, திண்டுக்கல் மாக்சிம் கார்க்கி, தேனி ராயன் ஆகியோர் பங்கேற்று இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக உரையாற்றினார்கள்.
இதில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரதராஜன், திராவிடர் கழக ஈரோடு மாவட்டக் காப்பாளர் S.V. சண்முகம், சிவகிரி இரத்தினசாமி, கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்க நிர்வாகி சண்முகம், திண்டுக்கல் மாவட்டத் தோழர்கள் கபாலி, பெரியார், தங்கமுத்து, அருண் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெரியார் முழக்கம் 11.04.2024 இதழ்

You may also like...