திமிர் பேச்சு கண்ணனை கைது செய்: கழகம் ஆர்ப்பாட்டம்

திருவரங்கத்தில் உள்ள பெரியாரின் சிலையை அகற்ற வேண்டும் என பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை கைது செய்யக் கோரி 10.08.2022  அன்று காலை 10.30 மணி அளவில் ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தோழமை அமைப்புகள் பங்குபெற்றன.

கண்டன உரையாற்றியவர்கள்: 1. நாத்திகஜோதி –  ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர். 2. சித்திக்  – த.மு.மு.க; 3. சிந்தனைச் செல்வன் – தமிழ்ப் புலிகள் கட்சி;

  1. வீரகோவிந்தன் – ஆதித் தமிழர் பேரவை; 5. சலீம் – மனிதநேய மக்கள் கட்சி;
  2. வேங்கை பொன்னுசாமி – தமிழ்ப் புலிகள் கட்சி; 7. நிலவன் – நீரோடை;
  3. கண.குறிஞ்சி – ஞருஊடு; 9. திருப்பூர் துரைசாமி – பொருளாளர் தி.வி.க.;
  4. இராம.இளங்கோவன் – வெளியீட்டுச் செயலாளர், தி.வி.க.

இந்தியப் பிரியன் நன்றி கூறினார்.  ஆர்ப்பாடத்தில் கலந்துகொண்ட தி.வி.க. தோழர்கள் திருப்பூர் அய்யப்பன், முத்துப் பாண்டி, பிரகாஷ் பள்ளிபாளையம். வேணுகோபால், வேல்முருகன், கிருஷ்ணமூர்த்தி,வெங்கடேஷ், செல்வராசு, எழிலன், கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணன், பிரபு, குமார், திருமுருகன், சத்தியமூர்த்தி, கணேஷ், விஜயரத்தினம், கதிர், பழனிசாமி,  விக்னேஷ் மற்றும் தோழர்கள். பிரியாணிபாளையம் பாபு அனைவருக்கும் சிற்றுண்டி,தேநீர் வழங்கினார்.

குறிப்பு: கடைசியாக வந்த செய்தியில் புதுச்சேரியில் பதுங்கியிருந்த கண்ணனை காவல்துறை கைது செய்துள்ளது.

 

பெரியார் முழக்கம் 18082022 இதழ்

You may also like...