தமிழ்மொழிக்கு மூன்றாவது இடமா?
தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது மிகப்பெரும் அவமானம்! பல்கலைக்கழகத்திற்கு மனோன்மணியம் சுந்தரனார் பெயரை சூட்டியவர் கலைஞர். அவர் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் பாட வைத்தவர் கலைஞர். அந்தப் பாடலுக்கு அரசாணை வழங்கியவர் திராவிட மாடல் ஆட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு தேசிய கீதத்தையும் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்திய போது ஏற்க மறுத்தவர் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின். ஆளுநர் தான் அவையை விட்டு வெளியேறினாரே தவிர தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடம் பெறுவதை வெளியேற்ற முடியவில்லை. விஜய் ஆட்சிக்கு வந்ததும் பதவியேற்பு விழாவிலேயே ‘வந்தே மாதரம்’ முதன்மையிடம் பெற்றுவிட்டது. பேரவையில் ஆளுநர் உரையில் திராவிட மாடல் ஆட்சி தொடக்கத்தில் அனுமதிக்காத தேசிய கீதம் பாடலும் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் ஆளுநர் ரவி விருப்பம் போல் நிறைவேற்றப்பட்டு விட்டது. உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தாத இந்த ஆட்சியின் மவுன மொழி தான் இப்போது...
