வேதமத மரபு திணிப்புகளை முறியடிக்க தமிழ்நாடு அரசின் திட்டங்கள்
திமுக தேர்தல் அறிக்கையில் சமூக நீதி மற்றும் தமிழ் மொழி காத்தல் என்ற இரண்டு தலைப்புகளில் வெளிவந்த கருத்துக்களை சுட்டிக்காட்ட வேண்டும். “சமூக நீதி என்பது உயர்ந்தவர்களை கீழே இறக்கி விடுவது அல்ல; மாறாக பள்ளத்தை சமப்படுத்தி மேடாக்குவது தான்” என்ற பெரியார் விளக்கத்தோடு துவங்குகிறது தேர்தல் அறிக்கை. இரண்டு முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. ஜாதி வாரி கணக்கெடுப்பின் தரவுகள் அடிப்படையில் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும். தனியார் நிறுவனங்களில் ஆண்டுக்கு ரூ.20 இலட்சத்துக்கு மேல் ஊதியம் பெறும் உயர் பதவிகளில், ஆதிதிராவிடர்; பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரை அமர்த்துவதற்கான திட்டமொன்றை தேர்தல் அறிக்கை முன்வைத்திருக்கிறது. அதாவது இப்படி வாய்ப்பு அளிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகளாக அரசே மானியங்களாகமுதலீடு செய்வதோடு ,வேறு பல சலுகைகளையும் வழங்கும் என்று தேர்தல் அறிக்கை கூறுகிறது. தனியார் நிறுவனங்களின் உயர் அதிகார மையங்கள் விளிம்பு நிலை மக்களுக்கு தொடர்ந்து மறுக்கப்படுகின்றன; இதை மாற்றி...
