ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகார வன்முறை
“ஆர்.எஸ்.எஸ். தொடங்கி 100 ஆண்டுகள் கடந்து விட்டன.ஆனால் எந்த சட்டத்தின் கீழும் அந்த அமைப்பு பதிவு செய்யப்படவில்லை.பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.”இந்து மதம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா?” என்ற ஒரு எதிர் கேள்வியை இறுமாப்புடன் அவர் எழுப்புகிறார். கர்நாடக மாநிலத்தில் 20 லட்சம் சேவக்குகளை தங்கள் அமைப்பு வழியாக உருவாக்கி இருப்பதாக அண்மையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்மட்ட பிரிவான பாரதிய பிரதிநிதி சபா அறிவித்ததைத் தொடர்ந்து, கர்நாடக மாநில அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் பிரியங் கார்கே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு அரசு சார்பில் ஒரு கடிதம் எழுதினார்.ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சட்ட பூர்வ நிலை, திரட்டும் நன்கொடைகள் செலுத்தும் வரிகள் குறித்த விவரங்களை அதில் கேட்டிருந்தார். “இதற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் எந்த சட்டத்தின் கீழும் பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை இந்து மதம் என்ன பதிவு...
