Category: செய்திகள்

0

திருவாரூர் மாவட்டக் கலந்துரையாடல்

12-8-2015 அன்று மாலை 6-00 மணிக்கு கழகத்தின் திருவாரூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், மன்னார்குடி  மதர்சா அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

0

தஞ்சை மாவட்டக் கலந்துரையாடல்

கழகத்தின் தஞ்சை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 12-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு பட்டுக்கோட்டை, அரசு பிளாசா அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

0

தமிழக காவிரி விவசாயிகள் சங்க கொடியை கழக தலைவர் அறிமுகம் செய்தார்

தஞ்சையில் 11.08.2015 திகதி நடைபெற்ற விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்ற திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர், தோழர் கொளத்தூர் மணி,தி.மு.கவின் செய்தி தொடர்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கேஎ.எஸ். இலங்கோவன், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எஸ்.திநாவுகரசர்,தமிழ் மாநில காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர். ரெங்கராஜன், தே.மு.தி.கவின் மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் பால அருட்செல்வன் ஆகியோரும், பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்களும் உரையாற்றினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்களை ஆதரித்தும், விளக்கியும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து, அந்த மாநாட்டின் நெறியாளரும், அந்த இயக்கத்தின் தலைவருமான தோழர் பி.ஆர்.பாண்டியன், அந்த இயக்கத்தின் கொடியினை அறிமுகப்படுத்துகின்ற பொறுப்பினை தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடம் வழங்கினார். அப்போது தோழர் பி.ஆர்.பாண்டியன் , ” விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டிற்கு எல்லா கட்சிகளுடைய தலைவர்களையும் அழைத்திருந்தேன். அவர்களில் பெரும்பாலோர் வந்திருந்தனர். வர இயலாதவர்கள் தங்களின் பிரதிநிதிகளை அனுப்பி பங்கேற்றனர். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு...

0

தொடரும் இனப்படுகொலைக்கு… தமிழீழம் ஒன்றே தீர்வு – இன எழுச்சிக் கருத்தரங்கம்

9-8-2015 ஞாயிறு, மாலை 5-30 மணிக்கு, தமிழீழ விடுதலைக்கான மாணவர்-இளைஞர் கூட்டியக்கத்தின் சார்பாக ” தொடரும் இனப்படுகொலைக்கு …… தமிழீழம் ஒன்றே தீர்வு” எனும் முழக்கத்தை முன்வைத்து, இன எழுச்சிக் கருத்தரங்கம்,சேலம் விஜயராகவாச்சாரி நினைவு அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் இளைஞர் இயக்கத்தின் தலைவர் ஜெகதீஷ் தலைமை ஏற்றார். தமிழ் இளைஞர் மற்றும் மாணவர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வீர.பிரபாகரன் முன்னிலை வகித்தார். நிகழ்வில் பல்வேறு மாணவர் இயக்கங்களின் பிரதிநிதிகள் உரையாற்றினர். சேலம் வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபன், கோவை வழக்கறிஞர் ப.சு. சிவசாமித் தமிழன், நோர்வே முனைவர் விஜய் அசோகன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை. கு. இராமகிருட்டிணன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் ஏராளமான மாணவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

0

சேலம் (கிழக்கு) மாவட்டக் கலந்துரையாடல்

சேலத்தை அடுத்த கருப்பூரில் உள்ள மாவட்டத் தலைவர் தோழர் க. சக்திவேல் அவர்களின் பண்ணை இல்லத்தில் 5-8-2015 பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெற்றது

0

பெரம்பலூர் மாவட்டக் கலந்துரையாடல்

7-8-2015 அன்று, பெரம்பலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் அக்ரி ஆறுமுகம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது

0

நாமக்கல் மாவட்டக் கலந்துரையாடல்

திருச்செங்கோடு, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனக் கட்டிடத்தில் நாமக்கல் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 6-8-15 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது

0

திருச்சி மாவட்டக் கலந்துரையாடல்

திருச்சி, உறையூரில் உள்ள “ Innovators Group of Community College “-இன் கூட்ட அரங்கில் 7-8-2015 அன்று பிற்பகல் 4-00 மணிக்கு நடைபெற்றது.

0

சேலம் (மேற்கு) மாவட்ட கலந்துரையாடல்

சேலம் ( மேற்கு ) மாவட்டக் கலந்துரையாடல், மேட்டூர் தாய்த்தமிழ்ப் பள்ளியில் 05-08-2015 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடை பெற்றது.

0

சிறப்புக் கட்டுரை – அடக்குமுறை சட்டங்களை முறியடிப்போம்!

அடக்குமுறை சட்டங்களை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தினார். அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்புச் சார்பில் இந்துத்துவ மக்கள் விரோத அரசின் அடக்குமுறைக்கு எதிராகக் கண்டனக் கருத்தரங்கம் கோவை அண்ணா மலை அரங்கில் 30.7.2015. அரங்க. குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகம்) தலைமையில் நடந்தது. கருத்தரங்கில், தமிழகத்தில் காவல் துறை புதிதாகப் பயன்படுத்தத் தொடங்கி யிருக்கும் மற்றொரு அடக்குமுறை சட்டமான ‘சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்துக்கு (Unlaw – ful Activities( Prevention ) Act – UPPA) கடும் எதிர்ப்பு தெரிவித்து தோழர்கள் பலரும் உரையாற்றினர். ‘தடா’, ‘பொடா’ சட்டங்களைப்போல் இதுவும் ஒரு கொடூரமான அடக்குமுறை சட்டமாகும். இந்த சட்டங்கள் முறைகேடாகவே பயன் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பொடா சட்டத்தை நீக்கிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, இந்தச் சட்டத்தில் இடம் பெற்றிருந்த...

0

மாண்டொழிக மரணதண்டனை – பொதுக்கூட்டத்திற்கு திடீர் அனுமதி மறுப்பு

திராவிடர் விடுதலைக்கழக பிரச்சாரப் பொதுக்கூட்டத்திற்கு தடை மன்னார்குடியில் திராவிடர் விடுதலைக் கழக பிரச்சாரப்பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்திய தண்டனை சட்டத்திலிருந்து மரண தண்டனை பிரிவை நீக்க வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடியில் இன்று மாலை பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூடத்தில் திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் காளிதாசு, மதிமுக தலைமை கழக பேச்சாளர் விடுதலை வேந்தன் ஆகியோர் பேசுவதாக இருந்தது. இந்த கூட்டத்திற்கு ஏற்கனவே காவல்துறையில் முறையாக அனுமதி பெற்றதன் அடிப்படையில் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிலையில் திடீரென மன்னார்குடி காவல்துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும் இக்கூட்டம் நடைபெற்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கூறி நேற்று (2ம் தேதி) நள்ளிரவு 11 மணிக்கு அனுமதி மறுத்து கடிதம் கொடுத்தனர். இதுபற்றி திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் காளிதாசு கூறுகையில் மன்னார்குடியில்...

0

தாரமங்கலத்தில் ” உஷாரய்யா, உஷாரு .. “ என்னும் மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் குறுந்தகடு வெளியீடு

1-8-2015 சனிக்கிழமை மாலை 5-00 மணியளவில், சேலம் மாவட்டம், தாரமங்கலம் அங்காள பரமேஸ்வரி சமுதாயக் கூடத்தில், ” உஷாரய்யா, உஷாரு .. “ என்னும் மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் குறும்படத் திரையிடலும், குறுந்தகடு வெளியீடும் நடந்தது. தோழர் கோகுலக்கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். குறும்படத்தை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, தாரமங்கலம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சின்னாமி பெற்றுக் கொண்டார்.கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கவிஞர் அ. முத்துசாமி, மேட்டூர் முல்லைவேந்தன் மற்றும் பல்துறை சான்றோர் பாராட்டுரைக்குப் பின்னர், திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பாராட்டுரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும், கழகத் தோழர்களும் கலந்துகொண்டனர்.

0

தந்தை பெரியார் சிலையை மறைத்து ஜாதிக்கட்சியின் கொடி நட முயற்சி; கழக செயல்வீரர்கள் பதிலடி

  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலையை இழிவுபடுத்தும் நோக்கோடு சிலைக்கு முன்பாக கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி சார்பில் அவர்களின் கொடிமரம் நடுவதற்கு முயற்சிகள் நடந்தது. செய்தியறிந்த நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக செயலாளர் வைரம் தடுக்க முயன்றார். காவல்துறை தலையிட்டு இருதரப்பினரையும் கலைத்தனர். மீண்டும் கழகம் சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட அதை காவல்துறை வாங்க மறுத்தது. பின்பு திவிக தோழர்கள் சதீசு, பிரகாசு, கார்த்தி, நித்தியானந்தம், மாணிக்கம் மற்றும் ஆதித்தமிழர் பேரவையின் மாநில கொள்கைபரப்பு துணைச்செயலாளர் செல்வவிள்ளாலன் அவர்களும், மாவட்ட செயலாளரோடு மதியம் 2.00 மணிக்கு பெரியார் சிலைக்கு முன் திரண்டு ஜாதிவெறியர்களின் கொடிமரத்திற்கான பீடத்தை இடித்து நொறுக்கினார்கள். இச்சம்பவத்தை தொடர்ந்து தோழர்கள் மீது வழக்கு பதிவுசெய்ய வலியுறுத்தி காவல்நிலையம் விரைந்தனர் கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியினர்.