Category: பெரியார் முழக்கம்

எதிர்ப்புகளை புறந்தள்ளி மயிலாடுதுறையில் கழகம் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

எதிர்ப்புகளை புறந்தள்ளி மயிலாடுதுறையில் கழகம் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

மயிலாடுதுறை மாவட்டக் கழகம் சார்பில் “ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள்” என்ற தலைப்பில் பரப்புரைப் பயணமாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. 6 பரப்புரைக் கூட்டங்களை தோழர்கள் நடத்தியுள்ளனர். முதல் நாள்: செப்-2 அன்று மாலை 4.00 மணிக்கு சீர்காழியில் மாவட்டச் செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. தபெதிக மண்டலச் செயலாளர் பெரியார் செல்வம் கலந்து கொண்டு பயணத்தின் நோக்கங்கள் வெற்றி பெற ஆதரித்து பேசினார். மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சியை துரை.தாமோதரன் செய்து காட்டி மக்களிடையே பரப்புரை பயணத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார். தலைமைக் குழு உறுப்பினர் இளையராஜா, மாவட்ட அமைப்பாளர் செந்தில், மாவட்டப் பொருளாளர் விஜயராகவன், தில்லை நாதன், சிதம்பரம் மதன்குமார், பாடாலூர் சுதாகர், மெளனி, வழக்குரைஞர் நன்மாறன், தபெதிக மாவட்டத் தலைவர் பரசுராமன், தமிழர் உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப்பு.மகேசு, தமிழ்மண் தன்னுரிமை இயக்கத்தின் நெறியாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர்...

சென்னையில் வெற்றிநடை போட்ட ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

சென்னையில் வெற்றிநடை போட்ட ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம் என்ற தலைப்பில் கழக இளைஞரணி ஜாதி எதிர்ப்புப் பரப்புரைகளை செய்து வருகிறது. சென்னை, சேலம் மாவட்ட இளைஞரணி தோழர்கள் ஆர்வமுடன் இந்த பரப்புரைகளை நடத்தி வருகிறார்கள். சென்னையில் கடந்த 10 நாட்கள் தொடர் பரப்புரை தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. மிக நேர்த்தியாக சென்னை மாவட்டக் கழக இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ப.அருண் மற்றும் எட்வின் பிரபாகரன் இருவரும் இணைந்து பேச்சாளர்கள் மற்றும் இடங்களை தேர்வு செய்தனர். குறிப்பாக தோழமை இயக்கத் தோழர்கள், ஊடவியலாளர்கள் என பலர் சிறப்புரையாற்றினார்கள். கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள் சிலர் இந்த கூட்டங்களை தலைமையேற்று நடத்தினார்கள். இளைய தலைமுறையினரிடம் வெகுவாக இந்த கூட்டம் கவனிக்கப்பட்டது. அனைத்து தெருமுனைக் கூட்டங்களும் சென்னை மாவட்டக் கழக முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அருவி வலையொலியில் வீடியோ வெளிவந்துள்ளது. 10 நாட்களும் பாடல்கள் வழியாக, அரசியல் நையாண்டி வழியாக, பறை இசை வழியாக பொதுமக்களை கவரும்...

காசாவில் இனப்படுகொலை நிறுத்து சென்னையில் பேரணி

காசாவில் இனப்படுகொலை நிறுத்து சென்னையில் பேரணி

காசா மீதான போரை நிறுத்து என்ற முழக்கத்தோடு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை புதுப்பேட்டையில் பேரணியும் அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் 19.09.2025 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. பேரணியில் பங்கேற்று கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கண்டனவுரையாற்றினார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த இயக்கங்கள் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் திரண்டனர். இளமாறன் (தமிழர் விடியல் கட்சி) ஒருங்கிணைபிபில், திருமாவளவன் (விசிக), கோவை கு. இராமகிருஷ்ணன் (தபெதிக), பேரா.ஜவாஹிருல்லா, திருமுருகன் காந்தி(மே17), நாகை திருவள்ளுவன்(தபுக), மருத்துவர் சாந்தி, மகா (மக்கள் மன்றம்), திரைக்கலைஞர்கள் பிரகாஷ்ராஜ், வெற்றிமாறன், சத்யராஜ், தீனா, அமீர் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனவுரையாற்றினார்கள். பேரணியில் சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 25092025

ஜாதி பேசும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

ஜாதி பேசும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

பள்ளி மாணவர்களிடையே ஜாதிப்பாகுபாடுகளை உருவாக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை கடந்த வாரம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. இது பாராட்டி வரவேற்கத்தக்கதாகும். இத்தகைய ஜாதி உணர்வு கொண்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால், அது பள்ளி வளாகத்தில் கடும் விளைவுகளை உருவாக்கி விடும்;‌ பள்ளிகளின் நம்பகத்தன்மையை சீர்குலைத்து விடும் என்றும் கல்வித்துறையின் சுற்றறிக்கை எச்சரிக்கிறது. சுற்றறிக்கையின் முக்கிய அம்சங்கள்: * பள்ளி நிர்வாகம் மாணவர்களின் ஜாதி அடையாளத்தை ரகசியமாக பாதுகாக்க வேண்டும். * ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையிடமிருந்து கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடாது. * இதுகுறித்து நிர்வாகம் விளக்கம் கேட்க விரும்பினால், மாணவர்களை தனித்தனியாக முதல்வர் அறைக்கு அழைத்துப் பேச வேண்டும். * மாணவர்களிடம் அலைபேசி இருந்தால் அதை பறிமுதல் செய்து பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும்....

அறிவியல் வளர்ச்சியும் பார்ப்பனியமும்!

அறிவியல் வளர்ச்சியும் பார்ப்பனியமும்!

அதிவேகமாக வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சியால் நடுங்கிப் போய் நிற்கிறது வைதீக பார்ப்பனியம். பாரம்பரியம் என்ற பெயரில் தாங்கள் கட்டமைத்த சனாதன மரபுகள் சீர்குலைந்து விடாமல் காப்பாற்றும் முயற்சிகளில் அது இறங்கியிருக்கிறது. அதற்காக அறிவியலை சனாதான பழமைக்குள் தொடர்புபடுத்தும் திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக பள்ளி பாடத்திட்டங்களில் இந்த கருத்துக்களை திணிக்க தொடங்கி இருக்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டாலும் ஒன்றிய ஆட்சி தமிழ்நாடு மீது திணிக்க முயிற்சிக்கிறது. தமிழ்நாடு வந்துள்ள ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிரங்கமாக இந்த கல்வித் திட்டத்தை தமிழ்நாடு ஏற்க வேண்டும் என்று மிரட்டுகிறார். தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உருவாக்கப்படும் பாடத்திட்டங்களில் “பாரதத்தின் பாரம்பரிய அறிவை முன்னிறுத்துதல்” என்ற பெயரில் மிக மோசமான பார்ப்பனிய கருத்துக்களை திணித்து வைத்துள்ளனர். இதற்காக பல்கலைக்கழக நிதி உதவிக்குழு வரைவு பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. குறிப்பாக தேசிய கல்விக் கொள்கையின்...

அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி-ஜாதி அமைப்பே தேசவிரோதி

அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி-ஜாதி அமைப்பே தேசவிரோதி

ஜாதிப் பெருமையை உயர்த்திப் பிடிப்பதுதான் தேச விரோதம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கி இருக்கிறது. கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி காவல்துறை தொடர்பான ஒரு வழக்கில் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பை நீதிபதி வினோத் திவாகர் வழங்கி உள்ளார். தீர்ப்பில் கூறியுள்ளதாவது:  தேச விரோதம் எது என்று கேட்டால் அது ஜாதிப் பெருமையை பேசுவது தான் (Glorifying Caste Anti-National). சமூகத்தில் ஆழமாக புரையோடி உள்ள ஜாதி அமைப்பை முற்போக்கான சட்டங்கள், கடுமையான பாகுபாடு எதிர்ப்பு சட்டங்கள், முற்போக்கு கொள்கைகள் வழியாக சமூகத்தை மாற்றி அமைக்க வேண்டும்.  அரசியல் சட்டத்தின் பார்வையில் இதுதான் உன்னதமான தேசபக்தி என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.  காவல்துறை பதிவு செய்யும் வழக்கு புகார் மனு, சாட்சிப் பதிவுகள்  காவல்துறை அறிவிப்புகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலும் ஜாதி அடையாளங்களை முழுமையாக நீக்க வேண்டும். படிவங்களிலேயே ஜாதி என்ற...

செப்-17-ல் சென்னையில் எழுச்சியுடன் நடந்த பொதுக்கூட்டம் ஜாதி எதிர்ப்புக் களம் நோக்கி திரளும் இளைஞர்கள்

செப்-17-ல் சென்னையில் எழுச்சியுடன் நடந்த பொதுக்கூட்டம் ஜாதி எதிர்ப்புக் களம் நோக்கி திரளும் இளைஞர்கள்

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்!” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம், செப்-17 அன்று, மாலை 5 மணிக்கு, திவிக திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு. கோபிநாத் தலைமையில், சென்னை இராயப்பேட்டை வி.எம் தெருவில் நடைபெற்றது. கழக இளைஞரணி மற்றும் திருவல்லிக்கேணி பகுதி கழகத் தோழர்கள் இணைந்து பொதுக்கூட்ட வேலைகளை சிறப்பாக செய்திருந்தனர். பகுத்தறிவுப் பாடல்களை, “புதுவை விடுதலைக் குரல்” தோழர்கள் எழுச்சியுடன் பாடினார்கள். ராப் பாடலை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு பாடினார். திவிக மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி – பொன்ராஜ் ஆகியோரின் சமூக அரசியல் நையாண்டி நிகழ்ச்சி, மக்களின் கவனத்தைப் பெற்றது. உச்சபட்ச ஆதிக்கத்தை செலுத்தும் பார்ப்பனர்களை எதிர்க்காமல் இருப்பதற்காக, பிற்படுத்தப்பட்டவர்களையும் பட்டியலினத்தவரையும் தங்களுக்குள் மோதிக்கொள்ளச் செய்யும் சூழ்ச்சியை அம்பலப்படுத்தும் விதமாக, புராண இதிகாசங்களை மேற்கோள் காட்டி, பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புதுவை தீனா உரையாற்றினார். ஜாதி...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்வுகள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்வுகள்

கவிஞர் ரம்யாதங்கம் அவர்களின் “புதுமையில் புதைந்த புதையல்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா 17.08.2025 அன்று காலை 9 மணி அளவில் லட்சுமி திருமண மண்டபம் கொளத்தூரில் நடைபெற்றது. தலைவர் மேட்டூர் தமிழ் சங்கம் ஆசிரியர் கு. பாரி, சமூக ஆர்வலர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் K. P. N. மகேஷ்வர், செயலர் இந்திய பல் மருத்துவச் சங்கம் மேட்டூர் கிளை மருத்துவர் மோ. சிவசுப்பிரமணியன், அஞ்சல் துறை (ஓய்வு) சஞ்சீவி, பொருளாளர் மேட்டூர் கிளை நூலக வாசகர் வட்டம் எழுத்தாளர் மே. கா. கிட்டு ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். கழகத் தலைவர் நிகழ்ச்சியில் தலைமையேற்று “புதுமையில் புதைந்த புதையல்கள்” கவிதை நூலை வெளியிட்டார். பழனியப்பா சில்க்ஸ் PEP சந்திரசேகரன் அவர்கள் நூலை பெற்றுக் கொண்டார். திருப்பூர் மாவட்டம் கா. ஜோதி மற்றும் உதவி பேராசிரியர் கற்பகம் பொறியியல் கல்லூரி கோவை வி.ஜெயபிரகாஷ் இந்நூலை பற்றி உரையாற்றினர். கிருஷ்ணகிரி மாவட்டம்,...

சேலம் மாவட்டக் கழகத் தோழர்களின்  தொடர் முயற்சியால்  தமிழில் பெயர்ப்பலகை!

சேலம் மாவட்டக் கழகத் தோழர்களின் தொடர் முயற்சியால் தமிழில் பெயர்ப்பலகை!

சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீராஜஸ்தானி உணவகத்தின் பெயர் பலகைகளில் தமிழ்நாட்டு அரசாணைப்படி தமிழில் பெயர்ப் பலகை வைக்க வலியுறுத்தி கழகத்தின் சார்பில் ஓமலூர் காவல் நிலையத்தில் கடந்த 01.08.2025 அன்று புகார் மனு கொடுக்கப்பட்டிருந்தது. புகாரைப் பெற்றுக்கொண்டு (18.08.2025) வரை போதிய மாற்றங்கள் ஏதும் செய்யாத நிலையில், மீண்டும் 19.08.2025 அன்று இரண்டாவது புகார் மனு அளிக்கபட்டிருந்தது. அந்த புகார் மனுவில் செப்டம்பர் 05.09.2025 தேதிக்குள் அந்த பெயர் பலகையை நடவடிக்கை எடுத்து மாற்றாத பட்சத்தில் தமிழ்நாடு அரசின் ஆணையை நிறைவேற்றும் எண்ணத்தோடு நாங்களே அந்த பலகையை அழிக்க வேண்டி இருக்கும் என்பதை புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். அதனடிப்படையில் அந்த உணவகத்தின் பெயர் பலகைகளில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் புகார் மனு எதிரொலியால் தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் இதழ் 18092025

2. அடக்குமுறைகளை எதிர்கொண்ட போராளி கொளத்தூர் மணி – பேரா.அரசு.

2. அடக்குமுறைகளை எதிர்கொண்ட போராளி கொளத்தூர் மணி – பேரா.அரசு.

ஈரோட்டில் செப்-7 அன்று சீர்வாசகர் வட்டம் சார்பில் நிகழ்ந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு விருது வழங்கும் விழாவில் பேராசிரியர் வீ.அரசு ஆற்றிய உரை; கடந்த இதழின் தொடர்ச்சி… ஏறக்குறைய 1983 தொடக்கம் முதல் 2009 வரை உருவான ஈழப் போராட்டம் தமிழ்ச் சமூகத்தில் மிக முக்கியமான போராட்டம். அதில் தோழர் மணி அவர்களுடைய பங்களிப்பு பற்றி நிறைய பேருக்கு தெரியும். இந்தத் தொகுப்பில் ஒரு முன்னுரை மாதிரி எழுதி இருக்கிறார்கள். அதில் கடைசி வரி இப்படி முடிகிறது, ”காவல் அதிகாரி எழுதி இருக்கிற ஒரு அறிக்கையில் இப்படி குறிப்பிட்டு இருக்கிறார். இந்த மணி தனது சொந்தப் பணத்தைக் கொண்டு ஈழ விடுதலைப் போராளிகளுக்கு உதவி செய்து வருகிறார்” என்று அந்த அதிகாரி எழுதி இருக்கிறார். ‘இன்ட்ரஸ்டிங்’ ஆன செய்தி. எனக்கு தனிப்பட்ட முறையில் ஈழத்தில் பல நண்பர்கள் உண்டு, அவர்களுடனான வாழ்க்கை அனுபவங்களும் உண்டு. அப்போதெல்லாம் தோழர் மணி செய்த...

திடீர் நிகழ்வுகளுக்குக் கடவுள் காரணமா?  கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-15

திடீர் நிகழ்வுகளுக்குக் கடவுள் காரணமா? கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-15

கேள்வி: நாம் நினைத்துப் பார்க்காத ஓர் நொடிக்குள் எல்லாம் நடந்து போகிறது. அப்படியாயின், நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்றுதானே பொருள்? அதனை உங்களால் நிராகரிக்க முடியுமா? பதில்: அப்படி ஓர் நொடிக்குள் நடந்து முடிவதாக நாம் கருதுகிறோம். ஆனால் அது மெய்யல்ல. “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்” -என்பார் வள்ளுவர். மென்மையான மயிலிறகுதான் என்றாலும், ஏற்றியுள்ள வண்டி, அம்மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முறிந்து கெடும். அளவு மாறும் போதும் குணம் மாறுகிறது. ஆம் மயிலிறகை ஏற்றிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆயினும் ஒரு கட்டத்தில்தான் அச்சு முறிகிறது. இதன் பொருள், அந்தக் கணத்தில் ஏற்றப்பட்ட ஒற்றை மயிலிறகின் பாரம் தாங்காமலா அச்சு முறிந்தது. இல்லை மயிலிறகு ஏற ஏற அச்சு இற்றுக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் அதன் தாங்கும் சக்தி தகர, அச்சு முறிகிறது. அளவு மாற்றத்தால் ஏற்பட்டது குணமாற்றம். அந்த நொடியில், பாய்ச்சல்...

ஜாதிவெறிக்குப் பலியான இமானுவேல் சேகரன்

ஜாதிவெறிக்குப் பலியான இமானுவேல் சேகரன்

ஜாதி ஒழிப்புக்காக களப்பலியான இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளில் தமிழ்நாடு அரசு அவருக்கு சிலை எழுப்ப இருக்கிறது என அறிவித்துள்ளதைப் பாராட்டி வரவேற்போம். * ராணுவத்தில் தான் வகித்த பதவியை உதறி எறிந்து விட்டு மதுரை ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆதிக்க ஜாதியினர் கட்டவிழ்த்து விட்ட ஒடுக்கு முறைகளுக்கு எதிராக போராடியவர் இம்மானுவேல். * தீண்டப்படாத பட்டியலில் இருந்த பள்ளர் சமூகத்தினருக்கு ஆதிக்க ஜாதியினர் 11 அடிமைக் கட்டளைகளை திணித்திருந்தனர். * கிராமம் கிராமமாக மிதி வண்டிகளில் சென்று அந்த கட்டளைகளை மீறுவதற்கு அழைத்து சுயமரியாதை உணர்வை ஊட்டினார். * கோயில் விழாக்களில் திணிக்கப்பட்ட அடிமைச் சேவகங்களையும் தேநீர் கடைகளில் இருந்த இரட்டைக் குவளைகளையும் எதிர்த்துப் போராடினார். * ஆதிக்க ஜாதி எதிர்ப்பு என்ற எல்லையோடு நின்று விடாமல் ஜாதி எதிர்ப்பையும் பெண்ணுரிமையையும் பேசியவர். * அன்று தீண்டாமை பட்டியலில் இருந்த அருந்ததியினரையும் நாடார் சமூக மக்களையும் நட்பு...

ஜாதி எதிர்ப்பை இயக்கமாக்குவோம்

ஜாதி எதிர்ப்பை இயக்கமாக்குவோம்

“மனிதம் நமது அடையாளம்! ஜாதி அவமானம்! எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்ற முழக்கத்தை முன்வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ச்சியாக ஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கத்தை நடத்தி வருகிறது. பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் நினைவு நாளான டிசம்பர் 24 வரை இப்பரப்புரை இயக்கத்தை இடைவிடாது தொடர்ந்து முன்னெடுக்க திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு முடிவு எடுத்துள்ளது. ஜாதி ஒழிப்பு என்ற நோக்கத்துக்காகவே தொடங்கப்பட்டது தான் பெரியார் இயக்கம். சுயமரியாதை இயக்கத்தின் ஒரு நூற்றாண்டு கால பயணத்தில் இறுகிப் போய்க் கிடந்த ஜாதிக் கட்டமைப்பை அது அசைத்து இருக்கிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இன்னும் கடக்க வேண்டிய தூரம் வெகுதொலைவில் இருக்கிறது. காலம் எவ்வளவோ மாறிவிட்டது, இப்போது எல்லாம் யார் ஜாதி பார்க்கிறார்கள்? என்று பொது வெளிகளில் பேசிக்கொண்டே சொந்த ஜாதிக்குள் வரன் தேடும் அமைப்புகளில் பதிவு செய்து வருகிறார்கள். நகர்மயமாவதில் தமிழ்நாடு முன்னணியில்...

‘குடிஅரசு’ தொகுப்பில் கழகம் சந்தித்த தடைகள்	 –   விருது வழங்கும் விழாவில் கொளத்தூர் மணி விளக்கம்

‘குடிஅரசு’ தொகுப்பில் கழகம் சந்தித்த தடைகள் – விருது வழங்கும் விழாவில் கொளத்தூர் மணி விளக்கம்

தொகுப்புகளை வெளியிட்ட பதிப்பாசிரியர் கொளத்தூர் மணிக்கு சிறந்த பதிப்பாளர் விருதை சீர் வாசகர் வட்டம் வழங்கியது.விருது ஏற்பு விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை; எனக்கு குடிஅரசு நூல் பதிப்புக்காக இந்த விருதை அளித்திருக்கிறார்கள். அதனால் அதைப் பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டும். பெரியாரின் உதவியாளராக இருந்த புலவர் இமயவரம்பன் அவர்களின் முயற்சியில் தோழர்களால் திரட்டப்பட்டு அப்போது வரை இருந்த குடிஅரசு இதழ்களை படி எடுத்து (ஜெராக்ஸ்) கையால் எழுதி திருச்சி பெரியார் மாளிகையில் பிரதியெடுத்தார்கள். இரண்டு ஆண்டுகள் இந்த பணிகள் நடைபெற்றன. பெரியார் மாளிகையில் புலவர் இமயவரம்பன் அவர்கள் அதற்கென்று தேக்கு மரத்தால் செய்யப்பட்ட தனி அலமாரியில் ஆண்டு வாரியாக தனித்தனி ட்ராயரில் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். என்னை பெரியார் திடலில் 1993-94ல் சந்தித்த போது சொன்னார். “ 25 கிலோ நாப்த்தாலின் குண்டுகளை வாங்கி குடிஅரசு இதழ் அலமாரியில் வைத்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்; இன்னும் வெளியிடவில்லை என்றாலும்...

எல்லைகளைக் கடந்த சிந்தனையாளர் பெரியார்!

எல்லைகளைக் கடந்த சிந்தனையாளர் பெரியார்!

பகுத்­த­றி­வும், அறி­வி­ய­லும் ஒரே நேர்கோட்டில் இருக்­கும். அறிவின் கூர்மைதான் பகுத்­த­றிவு என்று எடுத்துச் சொன்­ன­தால்­தான், ஆக்ஸ்ஃபோர்டு பல்­கலைக்கழ­கம் அவ­ரைப் பற்றி அவர் மறைந்து இத்­தனை ஆண்டுகள் கழித்­தும் விவா­திக்­கி­றது. கேம்பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கம் புத்­த­கம் வெளியிடுகி­றது. சுய­ம­ரி­யாதை இயக்­கத்தை 1925–ஆம் ஆண்டு தொடங்­கி­னா­லும், சுயமரியாதைச் சிந்­த­னை­யா­னது பெரி­யா­ருக்கு இள­மைக் காலத்­தி­லேயே வந்து­விட்­டது. அவர் அப்­போதே அப்­ப­டித்­தான்! அவ­ரு­டைய சுயசரிதையை கொஞ்­சம் பார்த்­தால், அவர் காலத்தை மீறி செய்த புரட்­சி­கள் புரி­யும்! ஆதிக்க ஜாதி­யி­னர் வீட்­டில் தண்­ணீர் குடித்­த­தால் அவ­மா­னப்­படுத்தப்பட்டதும், தாழ்த்­தப்­பட்­டோர் வீட்­டில் தண்­ணீர் குடித்­த­தால் சொந்த வீட்­டில் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­ட­தும் சிறிய வய­தி­லேயே அவர் மன­தில் ஒரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. பெரி­யா­ரின் தங்கை மகள் அம்­மா­யிக்கு 10 வய­தி­லேயே, 13 வயது பையன்கூட திரு­ம­ண­மாகி, மண­மான அறு­ப­தா­வது நாளே மண­மகன் இறந்­து விட்­டார். மறு­ம­ணத்­துக்கு குடும்­பத்­தில் உள்ள எல்­லோ­ரும் எதிர்ப்­புத் தெரி­வித்­தா­லும், அதை­யெல்­லாம் மீறி, அந்­தப் பெண்­ணுக்கு இரண்­டா­வது திரு­ம­ணம் நடத்தி வைத்­தார். மாற்­றுச்...

பெரியார் ஆயுதம் ஏந்தாத புரட்சியாளர்-ஆக்ஸ்போர்டு பல்கலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உணர்ச்சி உரை

பெரியார் ஆயுதம் ஏந்தாத புரட்சியாளர்-ஆக்ஸ்போர்டு பல்கலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உணர்ச்சி உரை

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில்–தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிமிகு உரை! முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் 4.9.2025 அன்று இங்­கி­லாந்து நாட்­டின் ஆக்ஸ்ஃ­போர்டு பல்­க­லைக் கழ­கத்­தில், பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரியார் அவர்­க­ளின் திரு­வு­ரு­வப் படத்­தைத் திறந்துவைத்து உரை­யாற்­று­கை­யில் “தந்தை பெரி­யார்தர­ணி­ம­ய­மாகி விட்­டார்” என்று உணர்ச்சிமேலி­டக் குறிப்­பிட்­டார். முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஆற்றிய உரை வரு­மாறு:– பல நூறு ஆண்­டு­களாக, உல­கின் சிறந்த அறி­வா­ளி­களை உரு­வாக்கும் இந்த ஆக்ஸ்ஃ­போர்டு பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பேசு­வதை நான் பெருமை­யா­கக் கருதுகிறேன். இப்­போது புள­காங்­கித உணர்­வோடு உங்­கள் முன்­னால் நான் நின்று கொண்­டி­ருக்கிறேன். பெரி­யா­ரின் பேரன் என்ற கம்­பீ­ரத்து­டன் நிற்­கி­றேன்! இங்கே நான் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர், தெற்­கா­சிய அர­சி­யலை புரட்­டிப் போட்ட இயக்­க­மான தி.மு.கழ­கத்­தின் தலை­வர் என்ற தகு­தி­யு­டன் மட்­டு­மல்ல; பெரி­யா­ரின் பேரன் என்­கின்ற கம்­பீ­ரத்­து­டன் உங்­கள் முன்­னால் நான்நின்று கொண்­டி­ருக்­கி­றேன். பகுத்­த­றி­வுப் பக­ல­வன் அறி­வா­சான் தந்தை பெரியாரின் படத்தை...

உலக ஆய்வாளர்கள் பங்கேற்ற பெரியார் கருத்தரங்கம்

உலக ஆய்வாளர்கள் பங்கேற்ற பெரியார் கருத்தரங்கம்

தொன்­மை­யான தமிழ் பண்­பாடு உலக சிந்­த­னைக்கு அளித்த எத்­த­னையோ கொடை­க­ளில் இரண்­டினை முதன்­மைப்­படுத்திச் சொல்ல வேண்­டும் என்­றால் அது ஐயன் திரு­வள்­ளு­வ­ரின் திருக்குறளும், பெரியாரின் சிந்­த­னை­க­ளும் என­லாம். திரு­வள்­ளு­வர் தொடர்ந்து மொழி­யாக்­கம் செய்­யப்­பட்டு வந்­தி­ருக்­கி­றார். லண்­டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருக்­கு­றளை 1886-ஆம் ஆண்டே மொழி­யாக்­கம் செய்த ஜி.யு.போப் அவர்­க­ளின் கல்­ல­றைக்கு சென்று மரி­யாதை செலுத்தியுள்ளார். அத­னால் திருக்­கு­றள் உல­கில் பர­வ­லாக அறி­யப்பட்­டது. பெரி­யா­ரைப் பொறுத்­த­வரை அவர் தன் சிந்­தனைகளைத் தொகுத்து நூலாக எழு­த­வில்லை. ஒரு சில பிர­சு­ரங்­கள் அவர் பெய­ரில் வந்துள்ளனவே தவிர, ஒரு விரி­வான அர­சி­யல் தத்­துவ நூலா­கவோ, சித்­தாந்த நூலா­கவோ எழு­த­வில்லை. மாறாக அவர் தொடர்ந்து மக்களி­டையே பிரச்­சா­ரம் செய்து பெரும் சிந்­த­னைப் புரட்­சியை பொது­மன்­றத்­தில் உரு­வாக்­கி­ய­வர். செயல்­முறை தத்­து­வம் (philosophical praxis) என்­பதை மேற்­கொண்­ட­வர். கற்­றோ­ருக்­கான நூல்­களை எழுதுவதைவிட, அனைத்து மக்­க­ளை­யும் சிந்­திக்க வைத்து சுய­ம­ரியா­தையை சுடர் விடச் செய்­வதையே அவர் முக்­கி­யப் பணி­யா­கக் கரு­தி­னார். அவர்...

கொளத்தூர் மணியின் மிகச்சிறந்த ஆய்வுகளின் தொகுப்பு – பேரா.வீ.அரசு

கொளத்தூர் மணியின் மிகச்சிறந்த ஆய்வுகளின் தொகுப்பு – பேரா.வீ.அரசு

எதிர்நீச்சல் போட்டு குடிஅரசு தொகுப்பை வெளியிட்டு பதிப்புத் துறையில் சாதனை புரிந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களுக்கு சீர் வாசகர் வட்டம் சிறந்த பதிப்பாளர் விருது வழங்கி ஒரு லட்சம் பணம் முடிப்பையும் வழங்கியது. விருது வழங்கி சிறப்புரையாற்றினார் பேராசிரியர், சென்னை பல்கலைக்கழக மேனாள் தமிழ் இலக்கியத்துறை தலைவர் வீ.அரசு. அவரது உரையில் இருந்து…. சீர்வாசகர் வட்டம் தோழர் மணி அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான இந்த விருதை வழங்குகிறது. தோழர் மணி என்ன செய்திருக்கிறார்? நாங்கள் எல்லாம் 19-ஆம் நூற்றாண்டில் உருவான மார்க்ஸ், எங்கல்ஸ் உலகத்துக்கு தந்த ஒரு மிகப்பெரிய தத்துவ மரபின் மீது ஈடுபாடு கொண்டு அதை வாசித்தவர்கள், அதோடு வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள். அது உலகம் முழுவதும் என்னென்ன வடிவத்தில் எப்படி எப்படி எல்லாம் மாற்றிக்கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறது என்பது பற்றி மிகுந்த அக்கறை உடையவர்கள். லத்தின் அமெரிக்க நாடுகளிலே அது...

கடவுளுக்கு மாநாடு எதற்கு?

கடவுளுக்கு மாநாடு எதற்கு?

அர்ச்சனை, வழிபாடு, சடங்குகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்த இந்து கடவுள்களுக்கு, இப்போது சர்வதேச மாநாடுகள் நடக்க தொடங்கிவிட்டன. இதற்கு வழிகாட்டியதே தமிழ்நாடு இந்து அறநிலையத்துறைதான்! முருகனுக்கு சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வழியாக அதை தொடங்கி வைத்தார். இப்போது திருவாங்கூர் தேவசம் போர்டின் பவள விழாவை முன்னிட்டு, சர்வதேச அய்யப்பன் மாநாடு, பம்பையில் வரும் செப் 20-ம் நடக்க இருக்கிறது. ஏழு மாநில முதல்வர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள், தமிழ்நாடு அரசு சார்பில் இரண்டு அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். 10 வயதில் இருந்து 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனுமதிக்கப்படுவது இல்லை.உச்ச நீதிமன்றம் இது “மதத் தீண்டாமை “என்று அறிவித்த பிறகும், தீர்ப்பு அங்கே அமலாகவில்லை. தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் நேற்று அளித்த பேட்டியில், அய்யப்பன் பக்தர்களாக நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இந்த மாநாட்டில் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியிருக்கிறார். இக்கூற்றின்படி பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்பது தெரியவில்லை....

பாஜக பிடியில் திணறும் அஇஅதிமுக

பாஜக பிடியில் திணறும் அஇஅதிமுக

பார்ப்பனிய பாரதிய ஜனதா கட்சியின் பிடியில் அஇஅதிமுக சிக்கி சீர்குலைந்து வருவதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்து வருகிறார்கள். எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பட்ட அஇஅதிமுக, திமுகவுக்கு மாற்று அரசியல் சக்தியாக உருவெடுத்து தமிழ்நாட்டு அரசியலில் வலிமையான சக்தியாக பரிணமித்தது. இந்தி எதிர்ப்பு, மாநில உரிமை, இட ஒதுக்கீடு கொள்கைகளின் வழியாக மட்டுமே திராவிட இயக்கத்தின் அடையாளத்தைப் பேணியது. அதே நேரத்தில் இந்து மத அடையாளத்தை தீவிரமாக ஏற்றுக் கொண்டது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் பார்ப்பனியத்தின் ஆதரவாளரானார். அறநிலையத்துறை வழியாக பார்ப்பனியக் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடித்தார். காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதி வடநாடு யாத்திரையை முடித்து தமிழ்நாடு திரும்பிய போது, வேலூர் அருகே தமிழ்நாட்டின் எல்லையில் அவரை தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்றார். சங்கராச்சாரியை கை ரிக்க்ஷாவில் அமர வைத்து அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் இழுத்து வந்து தனது பார்ப்பனிய அடிமைத்தனத்தை பெருமையுடன் பறை சாற்றினார். பார்ப்பனர்- பார்ப்பனர்...

உணர்வலைகளில் மூழ்கிய சீர் விருது வழங்கும் விழா

உணர்வலைகளில் மூழ்கிய சீர் விருது வழங்கும் விழா

❖ சீர் விருது வழங்கும் விழா ஈரோடு மல்லிகை அரங்கில் 07-09-2025 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. ❖ விழா அரங்கத்திற்கு 100 மீட்டர் தூரத்திலிருந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணியை தோழர்கள் கொள்கை முழக்கத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். ❖ விழா சரியாக மாலை 5 மணிக்கு தொடங்கி 9 மணிக்கு நிறைவடைந்தது. ❖ ஜாதி, மத எதிர்ப்பு இசைப் பாடல்கள் பாடி அரங்கத்தை சூடேற்றினர். உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தியது. “போராடடா” என்ற பாடலில் பார்வையாளர்களும் மேடைக்கு வந்து நடனமாடிய காட்சி உணர்ச்சி அலைகளைத் தட்டி எழுப்பியது. ❖ திருநங்கை நேகா குழுவினரின் QUEER நாடகம் அரங்கேறியது. பால்புதுமையினர் (LGBTQ) பற்றிய புரிதலை ஏற்படுத்தும் விதமாக நாடகம் அமைந்தது. ❖ வழக்கறிஞர் ப.பா மோகன் நாடகக் குழுவினரைப் பாரட்டி நினைவுப் பரிசினை வழங்கினார். கழகத் தலைவரைப் பாராட்டி வாழ்த்துரை ஆற்றினார். ❖ கழகத் தலைவர் கொளத்தூர் மணி பற்றிய...

செப்-17 முதல் டிசம்-24 வரை ஜாதி எதிர்ப்பு தீவிர பரப்புரை இயக்கம் –  தலைமைக் குழுவின் முடிவுகள்

செப்-17 முதல் டிசம்-24 வரை ஜாதி எதிர்ப்பு தீவிர பரப்புரை இயக்கம் – தலைமைக் குழுவின் முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் ஈரோட்டில் 07.09.25. ஞாயிறு காலை 10.30 மணிக்கு கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. தலைமை குழுக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்ற கழக தலைமைக் குழு உறுப்பினர்கள் கழகத்தின் அடுத்த கட்ட செயல்திட்டங்கள், பரப்புரைப் பயணங்கள், போராட்டங்கள், புரட்சிப் பெரியார் முழக்கம் குறித்த ஆவணமாக வெளியிடுவது பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். 1) முன்னதாக கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் கிராம மற்றும் நகரப் பகுதிகளில் கடைபிடிக்கப்படும் ஜாதி தீண்டாமை குறித்து (முடி திருத்தகங்கள், இடுகாடு,குடிநீர் குழாய்கள்,பேருந்து போன்ற இடங்கள்) கழகத் தோழர்கள் கள ஆய்வு செய்து அது குறித்து ஆதாரப்பூர்வமான தகவல்களை திரட்டி கழகத் தலைமைக்கு அனுப்பி வைக்க கேட்கப்பட்டு பல்வேறு இடங்களில் தீண்டாமை குறித்த ஆதாரப்பூர்வமான தகவல்கள் திரட்டப்பட்டு பெறப்பட்டது. அப்படி பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஜாதி தீண்டாமை...

.    சமத்துவபுரமாகிய நரசிம்மன்நகர் (14)

. சமத்துவபுரமாகிய நரசிம்மன்நகர் (14)

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை ‘முரசொலியில்’ ர.பிரகாசு எழுதி வருகிறார். `நரசிம்மன் நகர்’ கடந்த இதழின் தொடர்ச்சி இது. ஆனைமலை ஆற்றங்கரையை அடுத்து, நரசிம்மனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று இருந்தது. மக்கள் போக்குவரத்து நிறைந்த பகுதி. அங்குள்ள நெடுஞ்சாலையை யொட்டி திராவிடர் கழகக் கட்டடமும் அதில் பகுத்தறிவுப் படிப்பகமும் அமைக்கப் பட்டிருந்தன. அங்குள்ள நாயக்கர் தெருவில்தான் நரசிம்மனின் வீடு இருந்தது. அந்த வீட்டிற்குள் பெரியாரின் வேன் வந்து செல்வதற்காகவே நுழைவாயிலில் தனிவழி அமைத்திருந்தார். வீட்டின் புல்தரையில் பெரியாருடன் அமர்ந்து பேசிய வரலாறும் உண்டு. இத்தகைய பேச்சுக்களின் ஊடாக, நரசிம்மனுக்கு மூன்று முக்கிய ஆலோசனைகளை வழங்கியிருந்தார் பெரியார். 1) தன்னிடம் இருக்கும் நிலத்திலோ அல்லது புதிதாக வாங்கியோ தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்றாக இருக்கும் வகையில் பகிர்ந்தளிக்க வேண்டும். 2) தனது செல்வாக்கைப்...

சேலம் மாவட்டக் கழகம் தொடர் பரப்புரை                                          ஜாதிப் பெருமை பேசாதீர்!

சேலம் மாவட்டக் கழகம் தொடர் பரப்புரை ஜாதிப் பெருமை பேசாதீர்!

ஜாதிப் பெருமை அல்ல அது அவமானம் ஜாதிப் பெருமை பேசாதீர் அது மீண்டும் நம்மை அடிமையாக்கிவிடும் என்றும் மக்களிடம் திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாடு முழுதும் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை செய்து வருகிறது. உலகம் முழுதும் மனிதர்கள் பிறக்கிறார்கள் இந்த நாட்டில் மட்டும் தான் மனிதப் பிறவியோடு ஜாதி அடையாளமும் சேர்ந்து பிறக்கிறது. அந்த ஜாதியே சமூகத்தைப் பாகுப்படுத்துகிறது. ஜாதி அமைப்புக்குள் நாம் மூழ்கிக் கிடந்தால் பார்ப்பனியத்தின் அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறோம் என்று அதன் பொருள். கடந்த தலைமுறைகளில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஜாதியைப் படிக்க விடவில்லை. ஜாதித் தொழிலை கட்டாயப்படுத்தினார்கள். இதிலிருந்து மீண்டு படித்து, ஜாதித் தொழிலில் இருந்து விடைபெற்ற பிறகு நாம் ஜாதிப் பெருமையை பேசிக் கொண்டிருக்கலாமா? வெவ்வேறு ஜாதிகளுக்கிடையே மனம் விரும்பி திருமணம் செய்தால் அதை தடுக்கலாமா? கழகத் தோழர்கள் அடுக்கடுக்கான கேள்வியை மக்கள் மன்றத்தில் எழுப்பி வருகிறார்கள். சேலம் இளைஞர் அணியின் சார்பில் “மனிதம் நமது...

புத்தர் பேசிய கடவுள் மறுப்பு              கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-14

புத்தர் பேசிய கடவுள் மறுப்பு கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-14

பேராசிரியர் அருணன் எழுதிய ‘கடவுளின் கதை’ மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. முதல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரையிலுருந்து சில செய்திகள்… உலக வரலாற்றிலேயே ஒரு மதத்தின் நிறுவனர் வலுவான கடவுள் எதிர்ப்பு வாதங்களை முதன்முதலாக முன்வைத்தார் என்றால் அவர் புத்தர்தான். கடவுள் எதிர்ப்போடு ஒரு புதிய சமூக ஒழுங்குமுறையை, சிந்தனை கட்டமைப்பை நடைமுறைப்படுத்த முயன்ற மகா புதுமையான முயற்சி புத்தருடையது. அவருக்குப் பிறகு இத்தகைய முயற்சியில் ஈடுபட்ட வேறு மத நிறுவனர் உலகில் தோன்றவும் இல்லை. இவரே முதலும் முடிவும் ஆனவர். புத்தரின் வாக்கு என்று பலராலும் ஒப்புக்கொள்ளப்படுகிற ஓர் உரையாடல் ‘தீவிக்க சுத்தம்’ எனும் நூலில் உள்ளது. அதில் ”பிரம்மா” எனத் தாங்கள் கூறுகிற ஒன்றை பார்ப்பனர்களில் எவராவது நேருக்கு நேர் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்களா எனும் கேள்வியை எழுப்பினார் புத்தர். அப்படிச் சொல்லவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார், ஆனால், “தாங்கள் எதை அறியவில்லையோ, எதைப் பார்க்கவில்லையோ அதனோடு ஒன்றுபடுகிற மார்க்கத்தை மட்டும்...

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றுக;                       கடலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றுக; கடலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

“மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பில் ஜாதி ஆணவப் படுகொலை தொடர்ந்து செய்து வரும் ஜாதி வெறியர்களை கண்டித்தும் கடுமையான சிறப்பு சட்டம் இயற்றிட தமிழ்நாடு அரசையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் பெரியார் சிவா தலைமையில் ஆகஸ்டு-16 அன்று கடலூர் மஞ்சகுப்பம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), தொடக்கவுரையாற்றினார். இள.புகழேந்தி (வழக்குரைஞர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க), திருமூர்த்தி (வழக்குரைஞர் சென்னை உயர்நீதி மன்றம்), லோகு.அய்யப்பன்(தலைவர் புதுச்சேரி திவிக), லூசியா (வழக்குரைஞர் ஆற்றல் மாநில ஒருங்கிணைப்பாளர்), தி.ச திருமார்யன் ( வழக்குரைஞர் விசிக மாநில அமைப்புச் செயலாளர்), எழிலேந்தி (மாவட்ட செயலாளர் தி.க), கார்ல் மார்க்ஸ் (வழக்குரைஞர் பாலா பேரவை), புதுவை பிரகாஷ் (தலைவர் தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்), ராஜா (ஒருங்கிணைப்பாளர் தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்), பாலு (மாநில தலைமை குழு உறுப்பினர் மக்கள் அதிகாரம்),...

அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் கோவை கெம்பனூர் கிராமத்தில் தொடரும் பேருந்து தீண்டாமை

அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் கோவை கெம்பனூர் கிராமத்தில் தொடரும் பேருந்து தீண்டாமை

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் ஓரளவு பெரிய கிராமம். இந்த கிராமத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நிகராக தாழ்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கையில் உள்ளனர். பிற்படுத்தப்பட்டவர்கள் வாழும் பகுதியின் மத்தியில் பள்ளிக்கூடம் உள்ள இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தம், அடுத்து 500 மீட்டர் தொலைவில் இந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் மக்கள் வாழும் பகுதி அண்ணா நகர் என்று அழைக்கப்படும் அந்த இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளது. கெம்பனூருக்கு 21, 21b இரண்டு பேருந்துகள்தான். ஆனால் தற்போது 64D,1C, பேருந்துகள் செல்கின்றன, இடைப்பட்ட காலத்தில் 94 பேருந்து சென்றது. கொரானோ காலத்துக்குப் பிறகு செல்வது இல்லை. பொதுவாக மேலோட்டமாக பார்க்கும் போது அண்ணா நகருக்கு 21B காலை 8:30க்கு ஒரு முறையும் 1C ஒரு முறையும் 64D மூன்று முறையும் தானே செல்கிறது பிறகு என்ன பிரச்சனை என்று நினைக்கத் தோன்றும். ஆனால் உண்மை நிலை 21 காலை...

உலகமயமாகிறார் பெரியார்

உலகமயமாகிறார் பெரியார்

நான் ஒரு சுதந்திர மனிதன்; எனக்குச் சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக்கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கின்றேன். -பெரியார் வரலாற்றுப் பெருமை கொண்ட இலண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவும் பெரியார் படத்திறப்பும் நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் வரலாற்றுப் பெருமை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்துள்ளது. உலகில் உள்ள மற்ற சமுதாயத்தைப் போல் மானமும் அறிவும் கொண்ட சமுதாயமாக மாற்றி அமைப்பதே தனது ஒரே குறிக்கோள் என்றார் பெரியார். அவரது சமுதாயப் பார்வை உலக சமுதாயத்தின் வளர்ச்சி பாதையை நோக்கி இருந்தது. ஐரோப்பிய நாடுகளிலும் சோவியத் ரஷ்யாவிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்தார் பெரியார், பார்ப்பனிய வர்ணாசிரம ஒடுக்குமுறை அந்த...

பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணிநீக்கம் கழகம் வரவேற்பு

பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணிநீக்கம் கழகம் வரவேற்பு

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நிலவி வந்த ஜாதிய மேலாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசுக்கும் துணைவேந்தர் நிர்வாகக் குழுவிற்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள அறிக்கை: “சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் பெரியசாமி போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாகக் குற்றச்சாட்டு மர்மமான முறையில் நீடித்து வருகிறது.பதிப்புத் துறையின் இயக்குநராக இருந்தபோது பல்கலைக்கழக மானியக் குழு ஒதுக்கிய நிதியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரித்த சேலம் இலஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் இவர் பட்டியலின ஆராய்ச்சி மாணவர்களை ஜாதியைச் சொல்லி திட்டுவதாக புகார்கள் அளித்தனர். ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் வெளியான பேராசிரியரின் பட்டியலின ஜாதி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு குறித்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு தேசிய பட்டியலின ஆணைய உத்தரவின்படி மாவட்ட நிர்வாகத்தின் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கல்வியியல் துறை...

பெரியாரின் இங்கிலாந்து பயணத்தில் நடந்தது என்ன?

பெரியாரின் இங்கிலாந்து பயணத்தில் நடந்தது என்ன?

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் படத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். பெரியார் உலகமயமாகி வருகிறார் என்று பெருமிதத்துடன் முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பெரியார் 16. 6 .1932 தேதியிலிருந்து 6.7.1932 வரை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தார். பயணத்திற்கு உடன் இருந்து உதவியவர் கம்யூனிஸ்ட் தலைவர் சக்லத்வாலா. இவருடன் தொடர்பு கொள்ள அறிமுக கடிதம் கொடுத்தவர்; பெர்லின் நகரில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் புரட்சியாளர் டெட். இங்கிலாந்து பயண விவரங்களை பெரியார் தனது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். அதில் 28 .6.1932 தேதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்துள்ளார். அமெரிக்காவில் ஸ்கார்பியோவில் 9 கருப்பின இளைஞர்கள் மீது “ரேப்” குற்றம் சாட்டி தூக்குத் தண்டனை விதித்தது அமெரிக்க அரசு. உலகம் முழுதும் தூக்குத் தண்டனைக்கு எதிராக கண்டனங்கள் வெடித்தன. இங்கிலாந்தில் நடந்த இந்த கண்டனக் கூட்டத்தில் பெரியாரும் கலந்து கொண்டார். தூக்குத் தண்டனைக்கு உள்ளான இரண்டு...

பெரியார் மீதான அவதூறுகளை மறுக்கும் ஆங்கில நூல் வெளியீடு – சிந்தனையாளர்களால் அரங்கு நிரம்பி வழிந்தது

பெரியார் மீதான அவதூறுகளை மறுக்கும் ஆங்கில நூல் வெளியீடு – சிந்தனையாளர்களால் அரங்கு நிரம்பி வழிந்தது

People’s literature பதிப்பகம் வெளியிட்டுள்ள “Periyar: Caste, Nation and Socialism” நூலின் அறிமுக விழா, (24.8.25), சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று நடத்தினார். பெரியார் மீது எழும் கேள்விகள் அல்லது குற்றச்சாட்டுகள், அல்லது மனதறிந்து பேசுகிற பொய்கள் எல்லாவற்றையும் விளக்கும் நோக்கத்தோடு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கரின் பார்வைகள், புத்தம் குறித்த பெரியார், அம்பேத்கர் கருத்துக்கள் ஆகியவற்றை முதன்மை தலைப்பாக பதிவு செய்துள்ளார். ரங்கூன் மாநாட்டில் பெரியார், அம்பேத்கர் கலந்து கொண்ட செய்திகளையும், வன்முறைக்கு எதிராக பெரியார் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். நிகழ்வை தொகுத்து வழங்கினார். கோவி. கனக விநாயகம் (துணைப் போராசிரியர், எஸ்.ஆர்.எம் சட்டக் கல்லூரி , சென்னை) பேசுகையில், எளிய மொழிநடையில், கேள்வி பதிலாக தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல். 21ம் நூற்றாண்டில் திராவிடர் இயக்கத்துக்கு கிடைத்த ஆவணம் இந்த நூல் என்று வாழ்த்துரை வழங்கினார்....

77 வயது  ‘பயனாளி’ ஐந்து மாத பயனாளியுடன்..

77 வயது ‘பயனாளி’ ஐந்து மாத பயனாளியுடன்..

உடல் உறுப்பு கொடையில் தமிழ்நாடு தேசிய சராசரியை விட ஏழு மடங்கு கூடுதலாக இருக்கிறது என்று பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் எம்.ஜி.எம் மருத்துவமனை நடத்திய உறுப்பு கொடையாளர் பாராட்டு விழாவில் குறிப்பிட்டார். கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை 9 மணி அளவில் எம்.ஜி.எம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் உரையாற்ற மருத்துவமனை நிர்வாகம் விடுதலை ராசேந்திரனை அழைத்து இருந்தது. மருத்துவமனையிலேயே மிக அதிக வயதில் (அதாவது 77 வயதில்) கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞர் என்று, அறுவை சிகிச்சை செய்த குழுவின் தலைவர் மருத்துவர் டாக்டர் தியாகராஜன் விடுதலை இராசேந்திரனை அறிமுகப்படுத்தினார். மிகக்குறைந்த வயதுள்ள ஐந்து மாத குழந்தைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு இதே மருத்துவமனை வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்தி சாதனை புரிந்தது. தாயும் குழந்தையும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். விடுதலை ராசேந்திரன் தனது உரையில் குறிப்பிட்டதாவது: “எனக்கு உறுப்பை கொடையாக...

சேலம் மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம்!

சேலம் மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம்!

16.08.2025 மாலை 6.00 மணிக்கு நங்கவள்ளியில் கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) இல்லத்தில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) தலைமை வகித்தார். கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) முன்னிலை வகித்தார். கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கிய கலந்துரையடால் தொடங்கியது. கூட்டத்தில் எடுக்கபட்ட தீர்மானங்கள்: 1). மேச்சேரியில் 03.08.2025 அன்று சேலம் மாவட்ட இளைஞர் அணி சார்பில் நடைபெற்று முடிந்த “பெரியார் எனும் பெருநெருப்பு” கருத்தரங்கத்திற்கான வரவு, செலவு கணக்கு சார்பார்க்கப்பட்டது. வரவு- 74,500, செலவு- 70,160, மீதி= 4,340 2). சேலம் மாவட்ட இளைஞர் அணி சார்பில் எதிர்வரும் 22.08.2025 வெள்ளி அன்று ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தொடர் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது எனவும் இறுதியாக நிறைவுக் கூட்டம் ஓமலூரில் பொதுக் கூட்டமாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்), பிரபாகரன் (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் ), சிவ சண்முகம்...

களம் இறங்கிறது சென்னை இளைஞரணி!

களம் இறங்கிறது சென்னை இளைஞரணி!

சென்னை மாவட்ட இளைஞர் அணி சார்பாக “மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள் என்ற தலைப்பில் 10 நாட்கள் தொடர் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தவுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, செப்டம்பர்-17 தேதி வரை தொடர் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம், பல்லாவரம், சைதாப்பேட்டை, தியாகராயர் நகர், எம்.ஜி.ஆர் நகர், அம்பத்தூர், அமைந்தகரை, வேளச்சேரி, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. 10 நாட்கள் தினமும் மாலை 5 மணியளவில் தெருமுனைக் கூடட்ங்கள் நடைபெறும். தெருமுனைக் கூட்டங்களில் கழகத் தோழர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் பலர் கருத்துரை ஆற்ற உள்ளனர். செப்-17 நிறைவு பொதுக் கூட்டம் இராயப்பேட்டை பெரியார் படிப்பகம் அருகில் நடைபெறும். இளைஞர்களே ஜாதியை தகர்த்தெறிவோம்! சமத்துவ சமுதாயம் படைப்போம் வாரீர்!

ஊர்-சேரி பாகுபாட்டை ஒழித்த ‘ஆனைமலை’

ஊர்-சேரி பாகுபாட்டை ஒழித்த ‘ஆனைமலை’

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை ‘முரசொலியில்’ ர.பிரகாசு எழுதி வருகிறார். `நரசிம்மன் நகர்’ வரலாறு இது. 1938-ஆம் ஆண்டில் முதல் இந்தி எதிர்ப்புப் போரில்’ பங்கேற்று தந்தை பெரியார் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்ட போது, அவருடன் சிறையில் இருந்தவர்களில் ஒருவர் `ஆனைமலை’ நரசிம்மன். பட்டம் படித்தவர் என்பதால், சிறையில் முதல் வகுப்பை அதிகாரிகள் வழங்க, தன் தோழர்கள் எல்லோரும் சாதாரண வகுப்பில் இருக்க, தனக்கு மட்டும் முதல் வகுப்பு வேண்டாம் என்று மறுத்துவிட்டார் நரசிம்மன். ஆனால், ஆனைமலையில் வசதி படைத்த, செல்வாக்கான குடும்பம் இவருடையது. ராஜாஜி, சத்தியமூர்த்தி அய்யர் என அந்த காலத்தில் இவர் வீட்டில் பல தலைவர்கள் தங்கிச் சென்றுள்ளனர். 1906-ஆம் ஆண்டு நாராயண நாயக்கர்-குஞ்சம்மாள் தம்பதிக்கு கடைசி மகனாகப் பிறந்தவர் நரசிம்மன். சென்னை...

கடவுளை மறுத்த ஆன்மீகவாதி    கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-12  விடுதலை இராசேந்திரன்

கடவுளை மறுத்த ஆன்மீகவாதி கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-12 விடுதலை இராசேந்திரன்

‘மனம்’ என்று ஒன்று இல்லை அது மூளை என்ற ஒரு பொருளின் செயல்பாடு. மனதை ஒருமுகப்படுத்துவது ஆன்மிகம் சார்ந்தது அல்ல! அது ஒரு பயிற்சியே என்ற கட்டுரையை கடந்த இதழில் ‘பெரியார் முழக்கம்’ வெளியிட்டது. கடவுள் வழி நடத்தவில்லை, மனித மூளை தான் உடலை இயக்குகிறது என்பதே அந்த கட்டுரையின் மய்யமான கருத்து. இதற்கு நேர் மாறாக ‘மனமே’ மனிதரை இயக்குகிறது. தனி மனிதரின் ‘மன மாற்றமே’ அனைத்துக்கும் தீர்வு. மனிதருக்கு வெளியே புறத்தில் நிகழும் சமூகப் புரட்சிகள் உயிரற்றவை, நானே என்னை புரிந்து கொள்ளாத வரை வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல், மற்றவர்களை எப்படி புரிந்து கொள்ள முடியும் என்ற சிந்தனையை உலகம் முழுதும் ஒருவர் பரப்பினார். உலகப் புகழ்பெற்ற தத்துவஞானியாக அவர் பேசப்பட்டார், அவரது பெயர் ‘ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி’. பொருளியல் நிகழ்வுகளை விலக்கிவிட்டு ‘மனப்புரட்சி’ பேசிய அவரது பின்னணியை சுருக்கமாக விளக்குவோம். 1875-இல் மதனப்பள்ளியில் பார்ப்பன குடும்பத்தில் அவர்...

“Magzter” தளத்தில் பெரியார் முழ்க்கம்

“Magzter” தளத்தில் பெரியார் முழ்க்கம்

வார இதழாக ஏறத்தாழ 25 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ், கழக இணையதளப் பக்கத்திலும் கீற்று இணையதளப் பக்கத்திலும் பதிவேற்றி வரப்பட்டது. சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த கழகத் தோழரும் ஐ.டி. ஊழியருமான நந்தகுமார் முயற்சியில், வருகிற செப்டம்பர் மாதம் முதல் ‘Magzter’ (www.Magzter.com) என்ற இணையதளப் பக்கத்திலும் இனி புரட்சிப் பெரியார் முழக்கம் இதழ் இ-பேப்பர் வடிவில் வெளிவரும். பத்திரிகைகளுக்கு என்று வடிவமைக்கப்பட்ட இந்த இணையதளப் பக்கத்தின் சந்தாதாரர்கள், இனி வாரம்தோறும் புரட்சிப் பெரியார் முழக்கத்தை இலவசமாக வாசிக்கலாம். பெரியார்முழக்கம்இதழ்28082025

குமரி மாவட்டத்தில் கழக கலந்துரையாடல் கூட்டம்

குமரி மாவட்டத்தில் கழக கலந்துரையாடல் கூட்டம்

24.08.2025 அன்று மாலை 04.00 மணியளவில் தக்கலை அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில் குமரி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்கு பின்பு மீண்டும் தி.வி.க.வின் களப்பணியினை தொடங்க வேண்டும் என்ற குமரி மாவட்ட தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நடைபெற்ற கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் மற்றும் இயக்கம் செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கீழ்கண்ட தோழர்கள் மாவட்டத் தலைவர் – ஜா. சூசையப்பா மாவட்டச் செயலாளர் – நீதியரசர், மாவட்ட பொருளாளர் – ரமேஷ்பாபு, செய்தி தொடர்பாளர் – தமிழ்மதி ஆகியோர் பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தோழர்கள் இயக்கத்தில் தொய்வின்றி பணியாற்ற வேண்டும் என்றும் மாத சந்தாவாக ரூ – 100/- வசூலிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. முன்னாள் மாவட்டச் செயலாளர் தமிழ்மதியிடம் கையிருப்பு தொகை ரூ. 4,660 இருப்பதை முறையான வரவு செலவு கணக்கினை கூட்டத்தில்...

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக ஏட்டுக்கு நன்கொடை

ஆசிரியர்கள் சிவகாமி, சிவக்குமார் முன்னெடுப்பில் பெரியார் முழக்க வளர்ச்சிக்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தோழர்களை திரட்டி மாதம் ரூ.500 என்று நன்கொடையை கழக ஏட்டுக்கு திரட்டி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக பெரியார் முழக்க வங்கி கணக்குக்கு அனுப்பி வருகின்றனர். நாளுக்கு நாள் குழுவில் தோழர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, மாதம் மாதம் நன்கொடையும் அதிகரித்து வருகிறது. ஜூலை மாத நன்கொடையாக ரூ.23000 அனுப்பி உள்ளனர். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆசிரியர்). பெரியார்முழக்கம்இதழ்28082025

பெரியாரின் பேத்திக்கு பெரியார் விருது

பெரியாரின் பேத்திக்கு பெரியார் விருது

“பெண் விடுதலைப் போராளி கனிமொழி அவர்களுக்கு திமுக சார்பில் பெரியார் விருது வழங்கப்பட்டு இருப்பது மிகச் சிறப்பானது.பொருத்தமானது.இந்த விருதுக்கு நூற்றுக்கு நூறு தகுதி அவருக்கு உண்டு.இளமைக் காலத்தில் இருந்தே அவர் ஒரு பெரியாரிஸ்ட். “எங்கள் குடும்பத்தில் கனிமொழி ஒரு முழுமையான பெரியாரிஸ்ட்” என்று கலைஞர் பெருமையுடன் கூறினார். பெரியாரை உள்வாங்கியதால் அவரது அரசியல் பயணம் ஆரவாரம் இன்றி சீராக நதி போல் ஓடிக்கொண்டிருக்கிறது.வீண் சர்ச்சைகளுக்கு அவர் இடமளிப்பதில்லை கடுஞ்சொல் பேசாதவர்.எளிமையானவர். அதே நேரத்தில் பெண்களை அவமதிக்கும் கருத்துகள் தலைவர்களிடமிருந்து வரும்போது முதல் எதிர்ப்புக் குரல் அவரிடம் இருந்து தான் வரும்.தனது சொந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும் சமரசம் செய்து கொள்ள மாட்டார். நாடாளுமன்றத்தில் அவரது பேச்சுகள் அதிர வைக்கின்றன. மிகச் சிறந்த கவிஞர். அரசியல் வருகைக்கு பிறகு “கவிஞர் கனிமொழியை” காண முடியவில்லை என்பது வருத்தம்தான். பெரியார் பெண்ணுரிமை கருத்தியலைக் கடந்து பெண் விடுதலையைப் பேசியவர். பெரியாரின் பெண்ணுரிமை நோக்கி இன்று பெண்கள்...

இது  ‘ஜனநாயக திருட்டு’

இது ‘ஜனநாயக திருட்டு’

புதிய சட்டத் திருத்தம் ஒன்றை அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். 5 ஆண்டுகள் தண்டனை வழங்கக்கூடிய குற்றத்தின் கீழ் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தாலே, அவர்கள் பதவி பறிக்கப்படும் என்று கூறுகிறது இந்த மசோதா. நீதிமன்ற விசாரணை, நீதிமன்ற தீர்ப்புகள் இல்லாமலே குற்றவாளிகளை ஒன்றிய பாஜக ஆட்சியே தனது புலனாய்வு, அமலாக்கத்துறை அமைப்புகளை வைத்து முடிவு செய்து விட முடியும். “ஓட்டு திருட்டு செய்தவர்கள் அடுத்து ஜனநாயக திருட்டுக்கு தயாராகிறார்கள்” என்று காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே மிகச்சரியாகவே சுட்டிக்காட்டி உள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எதிர்க்கட்சி ஆட்சிகளை குறுக்கு வழியில் வீழ்த்துவது இந்த சட்டத்தின் நோக்கம். மாநில ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஏற்கனவே 356 என்ற ஒரு சட்டப்பிரிவு இருந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் இந்த பிரிவு செயலற்றதாக்கப்பட்டு விட்ட நிலையில், இப்போது ஒரு புதிய குறுக்கு வழியை கண்டுபிடித்து இருக்கிறது ஒன்றிய ஆட்சி....

பெரியார் எனும் பெருநெருப்பு                    மாநாடு போல் நடந்த கொளத்தூர் கருத்தரங்கு

பெரியார் எனும் பெருநெருப்பு மாநாடு போல் நடந்த கொளத்தூர் கருத்தரங்கு

கொளத்தூரில் நடந்த ‘பெரியார் எனும் பெருநெருப்பு’ கருத்தரங்கம் மாநாடு போல் எழுச்சியுடன் நடந்தது. அரங்கம் நிரம்பி வழிந்த்து. சேலம் மாவட்டம் கொளத்தூரில் ஆகஸ்ட்17-ல் கே.வி.ஆர் மண்டபத்தில் ஈசுவரன் (தலைமைக் குழு உறுப்பினர்) தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழு கோவிந்தராஜ் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் இணைந்து பகுத்தறிவு பாடல்கள் பாடினார்கள். கொளத்தூர் இளைஞரணி தோழர் குமரேசன் வரவேற்புரையாற்றினார், ஆசிரியர் செல்வேந்திரன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். மிதுன் சக்கரவர்த்தி (திமுக மேற்கு மாவட்ட ஒன்றியச் செயலாளர்) கருத்தரங்கத்தில் ஏராளமான தோழர்களுடன் கலந்து கொண்டு கழகத்தின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரையின் அவசியத்தை பாராட்டி பேசினார். மில்டன்: பேரலை வலையொளி மில்டன் தனது உரையில்; பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதை திருமணம் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது என்று குறிப்பிட்டார். ஜாதி கட்டமைப்பையும் பெண் அடிமையையும் சமூகத்தில் அது அசைத்தது. இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு என்பது மொழித் திணிப்பு எதிர்ப்பு மட்டுமல்ல! அது பண்பாட்டுத்...

இரசாயன விநாயகர் சிலைகளுக்குத் தடை கோரி கழகம் மனு

இரசாயன விநாயகர் சிலைகளுக்குத் தடை கோரி கழகம் மனு

திருப்பூர்: 08-08-2025 அன்று திருப்பூர் மாவட்டக் கழகம் சார்பக காலை 10 மணி அளவில் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்று சொல்லக் கூடிய வேதி பொருட்கள், இரசாயன பொருட்கள், சுட்டகளிமண் போன்ற பொருட்களால் விநாயகர் சிலைகளை தயாரிக்க கூடாது. அவ்வாறு இரசாயனம் கலந்து தயரிக்கப்பட்ட சிலைகளை நீரில் கரைத்து நீர்நிலைகளை மாசுபடுத்துவதை தடுக்க வேண்டும் அரசு முறையாக கண்காணித்து நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என வழியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் முகில் ராசு (மாவட்டத் தலைவர்) தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. நிகழ்வில் சு.துரைசாமி (கழகப் பொருளாளர்), மாதவன் (மாநகரச் செயலாளர்), வீ.தனபால் (மாநகரத் தலைவர்), முத்து (மாநகர அமைப்பாளர்), அய்யப்பன் (வடக்கு ஒன்றியச் செயலாளர்) தமிழமுதன் (உளவியலாளர்) மற்றும் தோழர்கள் இனியன் வசந்தி, பெரியார் பிஞ்சு மகிழ்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். சேலம்: மாவட்டக் கழகத்தின் சார்பில் 14.08.2025 அன்று மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில்...

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு

சென்னையில் 2 வாரங்களாக நடைபெற்றுவரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தில், (11/8/25), தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), இராவணன் (தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர்), மனோகர், ஜான் மண்டேலா (மகுஇ), மாரிமுத்து (திக) உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். பெரியார்முழக்கம்இதழ்21082025

கல்லூரி மாணவர்களிடம்    உரையாடல்

கல்லூரி மாணவர்களிடம் உரையாடல்

ராணிப்பேட்டை மாவட்டம் கல்லாறில், ஆகஸ்டு 9 அன்று SRED ஒருங்கிணைத்த சமூகப்பகுப்பாய்வுக் கூட்டத்தில், திவிக தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை, “பெரியார்” குறித்து பள்ளி – கல்லூரி மாணவிகளிடம் உரையாடினார். “இறுதி மூச்சு அடங்கும் வரை யாருக்காக உழைத்தார் பெரியார்?” எனும் திவிக நூலையும், “இரகசிய புத்தகம்” எனும் நன்செய் பிரசுர நூலையும், மாணவர்களுக்கு வழங்கினார். பெரியார்முழக்கம்இதழ்21082025

சமூக நீதி எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் நினைவேந்தல்

சமூக நீதி எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் நினைவேந்தல்

சமூக நீதி எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி 09.08.2025 அன்று தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் விஜயபாஸ்கர் ஆவணப்படம் திரையிடப்பட்டது. திமுக இளைஞர் அணி செயலாளர் – தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமூகநீதி எழுத்தாளர் சு. விஜயபாஸ்கர் படத்தைத் திறந்து நினைவேந்தல் உறையாற்றினார்.மேலும் அவர் விஜயபாஸ்கரின் இணையர் காயத்ரி மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து ‘விஜயபாஸ்கர்’ அறக்கட்டளையை தொடங்கி வைத்தார்.அறக்கட்டளைக்கு திமுக சார்பாக ரூ.5,00,000 காசோலை காயத்ரியிடம் வழங்கினார். கீழ்கண்ட 5 ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூல்கள் வெளியிடப்பட்டன. தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள், நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய மொழிப் போராட்டம், முத்துசாமிப் பிள்ளை எழுதிய நீதிக்கட்சி வரலாறு, பேராசிரியர் அன்பழகன் எழுதிய வகுப்புரிமைப் போராட்டம். (முதல் பகுதி மட்டும்), பேராசிரியர் ப.இராசாராம் ஆங்கிலத்தில் எழுதிய நீதிக்கட்சி குறித்த நூலின் ஒருபகுதி The Birth of the Justice Party. நூல்களை...

சவால் விட்ட தேர்தல் ஆணையம் சந்தி சிரிக்கிறது

சவால் விட்ட தேர்தல் ஆணையம் சந்தி சிரிக்கிறது

தேர்தல் ஆணையம் நடத்தியுள்ள ஓட்டுத் திருட்டுகளை ராகுல் காந்தி ஆதாரத்துடன் அம்பலப்படுத்திவிட்டார். தேர்தல் ஆணையத்தின் முகத்திரை மக்கள் மன்றத்தில் கிழிந்து தொங்குகிறது! தலைமை தேர்தல்ஆணையர் ஞானேஷ்குமார் ராகுல் காந்தியை மிரட்டுகிறார். குற்றச்சாட்டுகளை ‘பிரமாண பத்திரத்தின்’ ஆவணமாக கையெழுத்திட்டுத் தர வேண்டும், 7 நாட்களில் சமர்ப்பிக்காவிட்டால் ஆணைத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் சவால் விட்டார். ஆனால் உச்சநீதிமன்றம் ராகுல் காந்தி கேட்ட கேள்வியை தேர்தல் ஆணையத்திடம் கேட்டபோது தேர்தல் ஆணையம் மண்டியிட்டுக் கிடக்கிறது. நீக்கப்பட்ட 65 இலட்சம் வாக்காளர்களுடைய பெயரை வெளியிட முடியாது என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு போட்டது. உச்சநீதிமன்றம் அதை ஏற்க மறுத்து விட்டது. நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஆணையிட்டது. ராகுல் காந்தியை மிரட்டி பார்க்கலாம், ஆனால் உச்சநீதிமன்றத்தை இவர்களால் மிரட்ட முடியுமா? உத்தரவிட்ட 56 மணி நேரத்தில் நீக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை மட்டும் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு முகத்தில்...

கடவுளின் குரலை  “மனம்” பேசுகிறதா?  கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை (11)

கடவுளின் குரலை “மனம்” பேசுகிறதா? கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை (11)

கேள்வி: மனம் ஒரு குரங்கு, மனசை அடக்கு என்று ஆன்மிகவாதிகள் கூறுகிறார்கள். மனமும், சிந்தனையும் ஒன்றா? ‘சிந்தனைசெய் மனமே’ என்று திரைப்படப் பாடல் சொல்கிறதே! மனதும் அறிவும் வெவ்வேறுதானே! அப்படியாயின், மன நிம்மதிக்கு ஆன்மீகம் என்பது சரிதானே? மனசெல்லாம் மத்தாப்பு, மனநிம்மதி, மனநிறைவு, மனசாட்சி இப்படி ஏராளமான சொற்களை அன்றாடம் புழங்கிக்கொண்டிருக்கிறோம். மனம் ஒரு குரங்கு என்று ஆன்மீகவாதிகள் மட்டுமா சொன்னார்கள்? இல்லை. “மனசாட்சி தூங்கும் போது மனக்குரங்கு ஊர்சுற்றக் கிளம்பிவிடுகிறது” என்பது கலைஞர் சினிமா வசனமும் கூட. மார்க்சின் எழுத்துகளில் கூட மனசாட்சி என்ற சொல்லைக் காண முடியும். மனம் என்ற சொல் ஆன்மீகத்துக்கு பட்டாபோட்ட சொல் அல்ல; ஆனால் எது மனம் என்பதை விளக்குவதில்தான் ஆன்மீகவாதிகளும் பகுத்தறிவாளர்களும் மாறுபடுகின்றனர். மனம் என்பது தனித்து சுயம்புவாக இயங்குவதாக ஆன்மீகவாதிகள் சித்தரிப்பர். ஆனால் மனம் என்பது மூளை என்ற உறுப்பின் செயல்பாடென அறிவியலாளர் கூறுவர். மகிழ்ச்சி, கோபம் என பல்வேறு உணர்ச்சிகளை...

கழகம் தொடங்கிய ஆக-12-ல் தோழர்கள் கொடியேற்று விழா

கழகம் தொடங்கிய ஆக-12-ல் தோழர்கள் கொடியேற்று விழா

சென்னை: கழகம் 14-ம் ஆண்டு துவக்க விழா சென்னை மாவட்டக் கழகம் சார்பில் இராயப்பேட்டை பத்ரி நாராயணன் நினைவு படிப்பகத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கொடியோற்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. கழகத் தோழர்கள் தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்),வேழவேந்தன்(மாவட்டத் தலைவர்), இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), ம.கி எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), ப.அருண்( இளைஞரணி அமைப்பாளர்), சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்), தட்சணாமூர்த்தி (வடசென்னை மாவட்ட அமைப்பாளர்), கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), த.நா சூர்யா (திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்) மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் தோழி, குறளரசி மற்றும் கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். சேலம்: மாவட்டக் கழகத்தின் சார்பில் 12.08.2025 மாலை 5.00 மணியளவில் கோனூர் சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து...

பா.ஜ.கவின் வஞ்சக அரசியல்

பா.ஜ.கவின் வஞ்சக அரசியல்

குடியரசு துணைத் தலைவர் பதவி என்ற அரசமைப்பு பதவியை கட்சி அரசியலுக்காக வழமைக்கு மாறாக இடையில் பறித்துவிட்டு, புதிதாக குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துகிறார்கள். தாங்கள் நடத்திய அரசியல் விளையாட்டுக்கு அனைத்து கட்சிகளும் துணைக்கு வர வேண்டும் என்று கேட்பதும் அதுவும் தமிழரை நாங்கள் நிறுத்தி இருக்கிறோம் என்று பேசுவதும் ‘ஏமாற்று அரசியல்’ தான். வேட்பாளர் சிபி. ராதா கிருஷ்ணனுக்காக பாஜக தமிழ்நாட்டு முதலமைச்சரிடம் ஆதரவு கேட்பது எதற்காக? பாஜகவின் தமிழ்நாட்டு வஞ்சிப்புக் கொள்கைக்கு நீங்களும் துணை வரவேண்டும் என்பதற்காகவா? சி .பி.ராதாகிருஷ்ணன் தன்னுடைய அடையாளத்தை தமிழராக ஏற்க வில்லை இந்துவாகத்தான் அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்தியாவை பாரத தேசம் என்று மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அவர் மாநிலங்களவைத் தலைவராக வந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டு மாநிலங்களவை உறுப்பினர்களின் உரிமைக் குரலை அவர் அனுமதிக்கப் போவதும் இல்லை. இதுவரை தமிழ்நாட்டு உரிமைக்கு குரல் கொடுத்ததும் இல்லை. “தமிழர்...