Category: இயக்கம்

பெரியாரை இழிவுப்படுத்துபவர்களை அம்பலப்படுத்துவோம்! அப்புறப்படுத்தவோம்!

பெரியாரை இழிவுப்படுத்துபவர்களை அம்பலப்படுத்துவோம்! அப்புறப்படுத்தவோம்!

அனைத்து சனநாயக இயக்கங்கள் சார்பாக பொதுக்கூட்டம் சென்னை மாவட்டம் திருவொற்றியூரில் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், புதுச்சேரி மாநில தலைவர் லோகு அய்யப்பன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, இளைஞரணி மாவட்டச் செயலாளர் ப.அருண், மாவட்ட கழக தோழர்கள் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்துகொண்டனர். கூட்டமைப்பு சார்ந்த பொழிலன், போரசிரியர் செயராமன், வாலாசா வல்லவன், மனிதி செல்வி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். பெரியார் முழக்கம் 13022025 இதழ்

தினேசு-சூர்யா இணையரின் ஜாதி மறுப்புத் திருமண விழா

தினேசு-சூர்யா இணையரின் ஜாதி மறுப்புத் திருமண விழா

திராவிட இயக்கத் தமிழர் பேரவையைச் சேர்ந்த தோழரும், ஊடகவியலாளருமான தினேசு – சூர்யா இணையர்களின் சுயமரியாதைத் திருமணம் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் 02.02.2025 அன்று சென்னையில் ராமாபுரம்‌ பகுதியில் உள்ள பாம்ஷோர் உணவகத்தில் நடைபெற்றது. எவ்வித சடங்கு சம்பிரதாயம் இன்றி எளிமையாக, இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த ஜாதி மறுப்பு இணையேற்பு விழாவை, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்திவைத்தார். காசு நாகராசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், சன் நியூஸ் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் மு.குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஊடகவியலாளர் கீதா தொகுத்து வழங்கினார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ப.அருண் உட்பட கழகத் தோழர்கள் பலர் பங்கேற்றனர்.சன்நியூஸ் தலைமை செய்தியாளர் மு.குணசேகரன் பேசுகையில்,தோழர் தினேஷ் அடக்கமான சிந்தனை,படைப்பூக்கமும் நிறைந்தவர் என்று பாராட்டினார். திராவிடர்...

பேரறிஞர் அண்ணா நினைவுநாள்; கழகம் சார்பில் மரியாதை!

பேரறிஞர் அண்ணா நினைவுநாள்; கழகம் சார்பில் மரியாதை!

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை இராயப்பேட்டை பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன், ஓ.சுந்தரம் (திமுக), கழக இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், மாணவர் கழக அமைப்பாளர் பேரன்பு மற்றும் பகுதி கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். கோவை: பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆவது நினைவு நாளில் கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காந்திபுரம் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு, மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. பெரியார் முழக்கம் 13022025 இதழ்

நிமிர்வோம் வாசகர் வட்ட   26-வது சந்திப்பு!

நிமிர்வோம் வாசகர் வட்ட 26-வது சந்திப்பு!

பேரறிஞர் அண்ணா 56-ஆவது நினைவுநாளை முன்னிட்டு 26-ஆவது சிறப்பு நிமிர்வோம் வாசகர் வட்டம் 02.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிமிர்வோம் வாசகர் வட்டப் பொறுப்பாளர் தோழர் பிரகாசு தொகுத்து வழங்க ,கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார் .மேலும் ஊடகவியலாளர் கரிகாலன், “பார்ப்பனக் கைக்கூலிகள் சீமான், மணியரசன்” என்ற தலைப்பில் உரையாற்றினார் . ஊடகவியலாளர் மில்டன், “பெரியார் அண்ணாவின் தமிழ்த் தொண்டு” என்ற தலைப்பில் அண்ணா செய்த சாதனைகளையும் நிகழ்கால அரசியல் குறித்தும் சிறப்புரையாற்றினார்.கழக தோழர்கள் உட்பட நூற்றுக்கும்‌ மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அன்னூர் விஷ்ணு நன்றி கூறினார்‌. கழக ஏட்டின்‌ வளர்ச்சிக்கு சென்னை அடையாறு பகுதி இரா.வெங்கடேசன் ரூபாய் 7000 -கழக பொதுச் செயலாளரிடம் நிகழ்ச்சியில் வழங்கினார். தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் பேரன்பு 25-முழக்க சந்தாவுக்கான ரூபாய் 7500 தொகையைத் தலைவர் அவர்களிடம் வழங்கினார். நிகழ்வில் பிரவீன்,சுபாஷ்...

பார்ப்பனிய பண்பாட்டை எதிர்த்தவர் மேதகு பிரபாகரன்

பார்ப்பனிய பண்பாட்டை எதிர்த்தவர் மேதகு பிரபாகரன்

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் b&w tamil youtube சேனலுக்கு அளித்த நேர்காணலில், மேதகு பிரபாகரன் பெரியார் கொள்கைகளையே ஈழத்தில் செயல்படுத்தினார் என்பதை விரிவாக விளக்கினார் . கடந்த வார தொடர்ச்சி … போராட்டத்தில் வீரமரணம் எய்திய விடுதலைப்புலிகளின் இறுதி நிகழ்வில் மதச் சடங்குகள் நடப்பதில்லை. பெற்றோர்கள் கூட எந்த வித மதச் சடங்குகள் இல்லாமல் மலர் வளையம் வைத்துத் தான் மரியாதை செய்வார்கள். துயிலும் இடங்களை மக்கள் வாகனங்களில்‌ கடக்கும்‌ போது தலைகுனிந்து ஒரு மரியாதை செலுத்திவிட்டு தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடந்து செல்வார்கள். விடுதலைப்புலிகள் வைப்பகம்(வங்கி) ஒன்றை நடத்தினார்கள்.தமிழேந்தி என்ற போராளி தான் பொறுப்பாளராக இருந்தார். தமிழேந்தி முழுமையான பகுத்தறிவாளர்‌. சித்திரையில் மதவாதிகள் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டு நான் கிளிநொச்சியிஸ் இருந்தேன். சித்திரை மாத தமிழ்ப்புத்தாண்டை விடுதலைப் புலிகள் இயக்கம் ஏற்கவில்லை. தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டு அந்த நாள்...

பறிபோகும் சிறுபான்மையினர் உரிமைகள்!

பறிபோகும் சிறுபான்மையினர் உரிமைகள்!

“சப்கா சாத் சப்கா விகாஸ்” என்ற முழக்கத்தை (எல்லோருக்கும் எல்லாவற்றையும் கிடைக்கச் செய்வோம்) தொடர்ச்சியாக முன்வைக்கிறார் பிரதமர் மோடி. ஆனால் சிறுபான்மையின சமூக மாணவர்களின் கல்வி உரிமைகள் மீது மிக மோசமான தாக்குதல்கள் ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதுதான், அத்துறைக்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதியில் இருந்து தெரிய வருகிறது. சிறுபான்மையினர் சமூக மாணவர்களுக்கு ப்ரீ மெட்ரிக் உதவித்தொகை வழங்க 433 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என 2023-24 நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது. அது 2024-25 நிதியாண்டில் 326.16 கோடி ரூபாயாகக் குறைந்தது. தற்போது நடப்பு நிதியாண்டில் (2025-26) 195.70 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. நிதி அறிவிப்பிலேயே இத்தகைய பாரபட்சத்தை பா.ஜ.க. அரசு நிகழ்த்தியிருக்கிறது என்றால், ஒதுக்கீடு குறித்த விவரங்கள் மேலும் அதிர்ச்சியைத் தருகின்றன. 2023-24 நிதியாண்டில் 95.83 கோடி ரூபாயும், 2024-25 நிதியாண்டில் 90 கோடி ரூபாயும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினர் கல்வி தொடர்பான 6 திட்டங்களுக்கு 2023-24...

ஒன்றிய ஆட்சியின் ஆணவம்

ஒன்றிய ஆட்சியின் ஆணவம்

விளிம்பு நிலை மக்களின் கல்வியை வேத காலம் தொடங்கி பார்ப்பனியம் மறுத்தே வருகிறது. “சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று கட்டளை இட்டது”.பாடசாலைகள் என்றாலே வேதம் கற்பிப்பதற்கு மட்டும் தான்.தமிழ் மன்னர்கள் கோவில்களைக் கட்டினார்களே தவிர பள்ளிக்கூடங்களை நிறுவவில்லை. வேத பாடசாலைகளைத் தான்‌ அமைத்தார்கள்.பிரிட்டிஷ் அதிகாரி மெக்காலே தான்‌,முதன்‌ முதலாக ஆங்கில வழியில் பொதுப் பள்ளிகளைக் கொண்டு வந்தார்(1835).அந்த கல்வித் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்களும் பார்ப்பனர்கள்தான். வேதம்‌ படித்தவர்கள் ஆங்கிலம் படித்து பிரிட்டிஷ் ஆட்சியில் உயர் பதவிகளை கைப்பற்றினார்கள். 1916-ம் ஆண்டு பார்ப்பன அல்லாதார் இயக்கம் வரலாற்றுத் தேவையாக வந்த பிறகு பார்ப்பனர் ஆதிக்கம் கேள்விக்கு உள்ளானது. நீதிக்கட்சியின் முதல் ஆட்சியில் 1921-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வகுப்புவாரி உத்தரவு பார்ப்பனர் அதிகார வர்க்கத்தால் முடக்கப்பட்டது.அதற்கு பிறகு 1928 ஆம்‌ ஆண்டில் தான்,ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு,சுப்பராயன்‌ முதல்வராக இருந்த போது அமைச்சர் முத்தையா முதலியார் அவர்களால் வகுப்புவாரி உரிமைச்...

திருப்பரங்குன்றம்! சங்கிகளின்‌ புரட்டு  மதக்கலவரத்தை உருவாக்க சதி

திருப்பரங்குன்றம்! சங்கிகளின்‌ புரட்டு மதக்கலவரத்தை உருவாக்க சதி

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்‌ என்ற‌ முழக்கத்தோடு சங் பரிவாரங்கள்‌ சதித்திட்டம் தீட்டி வருகின்றன. மதவெறி அமைப்புகளை தமிழ்நாட்டு ‌மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும்‌ என்று திமுக,காங்கிரஸ்,மதிமுக,இந்தியகம்யூனிஸ்டு, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளன. மதுரை மாவட்ட காவல்துறையும் நீதித்துறையும் சங்கிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திருப்பரங்குன்றம் மலை முழுவதும்‌ முருகனுக்கே சொந்தம் என்று சங்கிகள் கூறுவது வரலாற்று புரட்டு. உண்மையில் நடப்பது என்ன? மதுரையில் திருப்பரங்குன்றம் போல எண்ணற்ற பெருங்குன்றுகள் உள்ளன. இந்தக் குன்றுகள்அனைத்தும் நாட்டார்வழிபாடு, சமண, புத்த சமயங்கள், வைணவ, சைவமதங்கள், இசுலாமிய, கிறித்தவ சமயங்கள் என அனைத்து வழிபாட்டு தலங்களும் எந்தவித இடர்களும் சிக்கல்களும் இன்றி மக்களால் அமைதியான முறையில் வழிபட்டு வரப்படுகின்றன. இவ்வாறு தான் இசுலாமிய இறை மார்க்கத் தூதர்களின் வழிபாட்டு இடங்களில் ஒன்றான அவுலியா சிக்கந்தர்பாதூஷா அடக்கம் செய்யப்பட்ட தர்கா வழிபாட்டு இடம் திருப்பரங்குன்றம் மலை மீது இருநூறு ஆண்டுகளுக்கு...

புரட்சிப் பெரியார் முழக்கம்

புரட்சிப் பெரியார் முழக்கம்

ஆண்டு சந்தா : ரூ.300/- ஐந்தாண்டு சந்தா : ரூ.1500/- தொடர்புக்கு : 15. தோழமை, வெங்கடேஸ்வரா நகர், பெருங்குடி, சென்னை – 600096. பேச : 63697 76351 முழக்கம் தொடர்பான சந்தேகங்களுக்கு மேற்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல் : newsdvk@gmail.com பெரியார் முழக்கம் 07022025 இதழ்

“தமிழீழமும் – திராவிடர் இயக்கமும்!” கருத்தரங்கம்; கழகத் தலைவர் சிறப்புரை

“தமிழீழமும் – திராவிடர் இயக்கமும்!” கருத்தரங்கம்; கழகத் தலைவர் சிறப்புரை

கோவை மாநகரக் கழக சார்பில் 30.01.25 அன்று “தமிழீழமும் திராவிடர் இயக்கமும்“ சிறப்புக் கருத்தரங்கம் கோவை சிவானந்தா காலனியில் கழகத் தோழர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. மாநகரச் செயலாளர் வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். தோழர்கள் லோகநாயகி, சதீஸ், ஜெகதீஸ், நவீன் முன்னிலை வகித்தனர். இதில் கழகத் தலைவர் கொளத்தூர்மணி, புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த வழக்கறிஞர் மலரவன் ஆகியோர் சிறப்பரையாற்றினர். கருத்தரங்கில் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர்மணி, தமிழ் ஈழத்திற்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும், இன்ன பிற அமைப்புகளுக்கும் திராவிடர் இயக்கங்களும் அதன் தலைவர்கள் – தோழர்கள் மற்றும் தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் – தொண்டர்கள் செய்த தன்னலமற்ற உதவிகளையும், பணிகளையும் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் மற்றும் ஏனைய பொறுப்பாளர்கள், தளபதிகளின் ஆரிய மனுவாத எதிர்ப்பையும், புலிகளின் பகுத்தறிவு சார்ந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார். மேலும் இதில் விசிக மாநகர மாவட்டச் செயலாளர் கோவை குமணன், தி.மு.க....

புதியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் பெரியார் பல்கலைக்கழகம்

புதியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் பெரியார் பல்கலைக்கழகம்

“ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் அறிமுகமா? திராவிடர் விடுதலைக் கழகம் கேள்வி!” இது குறித்து கழகத் தலைவர் தோழர் “கொளத்தூர் மணி” அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : சேலம் பெரியார் பல்கலைக் கழகம் அண்மையில் வெளியிட்ட முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு கையேட்டில் முனைவர் பட்ட படிப்பில் சேர அடிப்படை கல்வி தகுதியாக 10+2+3+2 அல்லது 12+1+3+2 அல்லது 10+2+4 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைப் படி இளநிலைப் பட்டப் படிப்பு மூன்று ஆண்டுகளுக்கு பதிலாக 4 ஆண்டுகளாக மாற்றம் செய்யப் பட்டுள்ளதை சேலம் பெரியார் பல்கலைக் கழகம் தனது முனைவர் பட்ட சேர்க்கை வழிகாட்டியில் சேர்த்துள்ளது. முதுநிலை பட்டப் படிப்பை முனைவர் பட்டத் தகுதியிலிருந்து நீக்கி உள்ளது. இது பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டலில் உள்ளதாகும். அதாவது முதுநிலைப் பட்டப் படிப்பு இல்லாமலும் முனைவர் பட்டப் படிப்பில்...

சோவியத் புரட்சி இங்கேயே நடக்க வேண்டுமென விரும்பினார் பெரியார்! -இனியவன்

சோவியத் புரட்சி இங்கேயே நடக்க வேண்டுமென விரும்பினார் பெரியார்! -இனியவன்

24.12.2024 அன்று கோவையில் நடைபெற்ற புரட்சியாளர்கள் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் தோழர் இனியவன் ஆற்றிய உரை. கடந்த இதழின் தொடர்ச்சி.. சுயமரியாதை முக்கியம்! ஒடுக்கப்பட்டவர்களுக்கு நில உரிமை வேண்டும் என்று போராடிய அம்பேத்கர் அவர்கள் அதே நேரத்தில் மகாராஷ்டிரத்தில் நிலவிய ‘மகர்வர்தான்’ முறையை நீக்க வேண்டி பம்பாய் மாகாணத்தில் கோரிக்கை வைத்தார். மகர்வர்தான் என்பது கிராமங்களில் ஏவல் பணியில் ஈடுபடும் மகர்களுக்கு (ஒடுக்கப்பட்ட ஜாதி) கிராம மக்கள இலவசமாக அளித்திடும் சிறு நிலம் ஆகும். ஆனால் அந்த நிலத்தை பெற்ற காரணத்தாலேயே நேரம் காலம் பார்க்காமல் கிராமத்திற்கான ஏவல் பணிகள் அனைத்தையும் ஓர் மகர் கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும். அந்த மகர் மட்டும் அல்லாமல் அவரின் குடும்ப உறுப்பினர்கள் கூட கிராமத்தினரால் அனைத்து வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டார்கள். உயர்ஜாதியினரின் பணிகளைச் செய்ய ஒரு மகர் மறுத்தால் அவரது நிலம் அவர்களிடமிருந்து பிடுங்கப்படுவதுடன் சமூக விலக்கத்திற்கும் ஆளாக நேரிடும். இத்தகைய...

பொதுவுடைமை இயக்கத்திற்கு உதவிய பெரியார் இயக்கம்

பொதுவுடைமை இயக்கத்திற்கு உதவிய பெரியார் இயக்கம்

அடக்குமுறையின் இருண்ட நாட்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒளியேற்றியப் பெருமை திராவிடர் கழகத்தையேச் சாரும். பெரியாரின் ‘விடுதலை’ இதழ் மட்டுமே துணிச்சலுடன் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. 1950 பிப்ரவரி 11-இல் சேலம் சிறையில் 22 கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து ‘விடுதலை’ தீவிரத் தலையங்கம் எழுதியது. “பலிப்பட்ட 22 வீரர்களின் பெயர்கள் கூட வெளியிடப்படவில்லை. மரக்கட்டைகளாகவா கருதுகிறீர்கள்? அவர்களுக்கும் குடும்பம், உறவுகள் உண்டு. விசாரணைக் குழுவில் கம்யூனிஸ்ட் பிரதிநிதி அல்லது தொழிற்சங்கத் தலைவர் சக்கரைச் செட்டியாராவது இருக்க வேண்டும்” என்று துணிச்சலாக எழுதியது. பெரியார் கண்டனக் கூட்டங்கள் நடத்த அறைகூவல் விடுத்தார். 1951-இல் கட்சித் தடை நீக்கப்பட்டபோது, தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது. தலைமறைவில் இருந்த பி.ராமமூர்த்தி பெரியார், குத்தூசி குருசாமியுடன் இரகசியமாக சந்தித்துப் பேசினார். நடிகவேள் எம்.ஆர்.ராதா தமிழ்நாடு முழுவதும் “ரத்தக்கண்ணீர்”, “முருகன்”, “பேப்பர் நியூஸ்” நாடகங்கள் நடத்தி நிதி திரட்டினார். பரமக்குடி, திருப்பூர், பொள்ளாச்சி, மதுரை, சென்னை என...

கல்வி உரிமையைப் பறிக்காதே! யு.ஜி.சி.யைக் கண்டித்துக் கழகம் ஆர்ப்பாட்டம்

கல்வி உரிமையைப் பறிக்காதே! யு.ஜி.சி.யைக் கண்டித்துக் கழகம் ஆர்ப்பாட்டம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவிப்பு! ஒன்றிய அரசே ! கல்வி உரிமையைப் பறிக்காதே ! இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்காதே! ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து நம் மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள், விதிகளில் திருத்தங்களை செய்து அறிவித்து வருகிறது.சமீபத்தில் UGC விதிகளில் திருத்தம் செய்து புதிய விதிகளை ஒன்றிய பாஜக அரசு வெளியிட்டுள்ளது. அது மாநிலக் கல்வி உரிமைகளைப் பறிக்கும் வண்ணம் குறிப்பாக தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பைச் சிதைக்கும் வகையில் உள்ளது. மேலும் இந்த புதிய விதிகளில் உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழிக்கும் திட்டத்துடன் திருத்தங்களை செய்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. “எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே” எனும் சனாதன தர்மத்தை சட்டப்படியே நிறைவேற்ற துடிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் எதிர்வரும் பிப்.13ஆம் தேதி வியாழக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒத்த கருத்துள்ள...

மாநில உரிமையைப் பறிக்கும் உச்சநீதிமன்றம்!

மாநில உரிமையைப் பறிக்கும் உச்சநீதிமன்றம்!

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களில், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்குவது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, 2019-இல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றமும் முதுநிலை படிப்புகளில், வசிப்பிடத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று ஜனவரி 30-ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள இத்தீர்ப்பால் தமிழ்நாடு பின்பற்றி வரும் 69% இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பலமான மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு இத்தீர்ப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மருத்துவ முதுகலை படிப்பில் 2 ஆயிரத்து 294 இடங்கள் இருக்கின்றன. அதில் இடஒதுக்கீட்டின்படி ஒன்றிய அரசு 50 விழுக்காடு இடங்களையும், தமிழ்நாடு அரசு 50...

கழகப் பொதுச்செயலாளருக்குப் பாராட்டு விழா!

கழகப் பொதுச்செயலாளருக்குப் பாராட்டு விழா!

திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளரும், புரட்சிப் பெரியார் முழக்கம் இதழின் ஆசிரியருமான விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ‘பெரியார் விருது’ வழங்கி பெருமை சேர்த்தது. இதற்காக பொதுச்செயலாளரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்திய அலுவலர்கள் அசோசியேசன் சங்க கட்டடத்தில் 26.01.2025 அன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. மாணவர் நகலக உரிமையாளர் செளரிராஜன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், மூத்த வழக்கறிஞர் துரைசாமி, வாலாசா வல்லவன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், மருத்துவர் அமலோற்பவநாதன், வீ.அரசு, பேராசிரியர் கல்யாணி, தடா ஓ.சுந்தரம், பத்திரிகையாளர்கள் சிகாமணி, வீரபாண்டியன், சுகுணா திவாகர், வழக்கறிஞர் அஜிதா, மனநல மருத்துவர் சிவபாலன், மருத்துவர் தாயப்பன், சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் பொதுச்செயலாளர் உடனான தங்களது அனுபவங்கள், பொதுச்செயலாளரின் அர்ப்பணிப்புமிக்க இயக்க – எழுத்துப் பணிகளை பாராட்டிப் பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டனர்....

கும்பமேளாவில் சாமியார்கள் கொட்டம் – இந்தியாவை இந்து நாடாக்க சங்கிகள் முயற்சி

கும்பமேளாவில் சாமியார்கள் கொட்டம் – இந்தியாவை இந்து நாடாக்க சங்கிகள் முயற்சி

உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கப்பட்டு பிப்ரவரி 26-ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. கும்பமேளாவில் கூடும் சாமியார்கள், 2035-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை இந்து நாடாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்து அரசமைப்புச் சட்டம் கும்பமேளா தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள அம்மாநில முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத், “சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம். அதுவே மனிதத்தின் மதம். நமது வழிபாட்டு முறைகளில் வேறுபாடு இருக்கலாம், ஆனால், மதம் ஒன்றுதான். அந்த மதம் சனாதன தர்மம். அந்த சனாதன தர்மத்தின் பிரதிநிதியாக கும்பமேளா விளங்குகிறது. பிரயாக்ராஜில் நடந்து வரும் மாபெரும் மத நிகழ்வான மகா கும்பமேளா, எந்த ஒரு ஜாதி அல்லது மதத்திற்கும் உட்பட்டது அல்ல. இது அனைத்து மதம், கலாசாரம் மற்றும் சமயங்களின் மாபெரும் கலவையாக திகழ்கிறது.’’ என்று கூறியுள்ளார். ஆனால் கும்பமேளாவில் கூடிய சாமியார் கூட்டம் இந்து அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கக் குழு அமைத்துள்ளது....

கழகத் தலைவர் கொளத்தூர் மணி இல்லத்தை திறந்து வைத்து சிறப்புரை-கடுவனூர் நாகராஜ் – சுலோச்சனா இல்லத் திறப்பு விழா

கழகத் தலைவர் கொளத்தூர் மணி இல்லத்தை திறந்து வைத்து சிறப்புரை-கடுவனூர் நாகராஜ் – சுலோச்சனா இல்லத் திறப்பு விழா

கள்ளக்குறிச்சி: கடுவனூர் கழகத் தோழர் மு.நாகராஜ் – நா.சுலோச்சனா ஆகியோரின் புதிய இல்லத் திறப்பு விழா 09.01.2025 அன்று கடுவனூர் கிராமத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி புதிய இல்லத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். திராவிடர் செல்வி பகுத்தறிவுப் பாடலை பாடினார் கீதா அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் சி.சாமிதுரை தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முருகன், ராமச்சந்திரன், ஆசைத்தம்பி ரிஷிவந்தியம் ஒன்றிய அமைப்பாளர் கார்மேகம், ஒன்றியத் தலைவர் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் மதியழகன், மாவட்டத் துணைச் செயலாளர் வெற்றிவேல், விழுப்புரம் மாவட்டத் தலைவர் இளையரசன், கடலூர் மாவட்டத் தலைவர் மதன்குமார், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் இராமர்,  மக்கள் அதிகாரம் ராமலிங்கம், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் நிறைவாக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கதிரவன் நன்றி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூமாலை, த.பெ.தி.க....

மேட்டூரில் கலந்துரையாடல் கூட்டம்; கழகத் தலைவர் பங்கேற்பு

மேட்டூரில் கலந்துரையாடல் கூட்டம்; கழகத் தலைவர் பங்கேற்பு

சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 19.01.2025 அன்று மேட்டூர் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், சேலம் மாவட்டப் பொருளாளர் சம்பத், மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின், மாவட்ட அமைப்பாளர்கள் டைகர் பாலன், நங்கவள்ளி அன்பு, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுதா மற்றும் பொறுப்பாளர்களும், தோழர்களும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். 2025ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும் இயக்க வளர்ச்சி குறித்தும் தோழர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். புரட்சிப் பெரியார் முழக்க சந்தா தொகையை வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் தலைமைக்கு ஒப்படைப்பது குறித்தும், சேலம் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நங்கவள்ளி கிருஷ்ணன், நங்கவள்ளி ஒன்றியச் செயலாளராக இராஜேந்திரன்,...

பார்ப்பனிய புனித பிம்பங்களை உடைத்த அண்ணல் அம்பேத்கரின் புரட்சிகர எழுத்துக்கள்

பார்ப்பனிய புனித பிம்பங்களை உடைத்த அண்ணல் அம்பேத்கரின் புரட்சிகர எழுத்துக்கள்

24.12.2024 அன்று கோவையில் நடைபெற்ற புரட்சியாளர்கள் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் தோழர் இனியவன் ஆற்றிய உரை. கடந்த இதழின் தொடர்ச்சி.. இந்திய அரசியல் களத்தில் ஜாதி குறித்தான விவாதங்கள் அண்ணல் அம்பேத்கருக்கு முன்பாகவே வெகுவாக தொடங்கிவிட்டது. 1917இல் மாண்டேகு – செம்ஸ்போர்ட் குழு உருவாக்கப்பட்டது. முதல் உலகப்போர் முடிவில் பிரிட்டிஷ் இந்தியாவின் அரசு அதிகாரத்துவத்தில் இந்தியர்களுக்கு குறைந்தபட்ச பிரதிநிதித்துவமாவது வழங்கப்பட்ட வேண்டும் என்கிற அடிப்படையில் உருவாக்கப்பட்ட இக்குழுவினை பல்வேறு தரப்பினர் சென்று சந்தித்து தங்கள் கருத்தை முன் வைத்தனர். அதில் மதராஸ் மாகாணத்தின் ‘பஞ்சமர் கல்வி அபிவிருத்தி அபிமான சங்கம்’, ‘மதராஸ் ஆதி திராவிட சங்கம்’, வங்காள மாகாணத்திலிருந்து குரு சந்த் தாக்கூர் உருவாக்கிய அமைப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்த அமைப்புகள் “சமூகத்தில் நீடித்து வரும் ஜாதி அமைப்பு முறையை ஒழிக்காமல் உயர் ஜாதி இந்துக்கள் கையில் அளிக்கப்படும் எவ்விதமான அதிகார பகிர்வு அல்லது அதிகார மாற்றம் மிகவும்...

சென்னை – திருப்பூரில் பொங்கல் விழா

சென்னை – திருப்பூரில் பொங்கல் விழா

சென்னை : திருவல்லிக்கேணி பகுதி சார்பில் 25ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா 12.01.2025 அன்று இராயப்பேட்டையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமை தாங்கினார். கோபிநாத் வரவேற்புரை நிகழ்த்தினார். இராஜேசு – தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, கழகத் தலைமை நிலையச் தபசி குமரன், தி.மு.க. மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, மாமன்ற உறுப்பினர் கமலா செழியன், வட்டச் செயலாளர் க.வே.மோகன், வி.சி.க. எஸ்.எஸ்.பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து அதிர்வு கலைக்குழுவின் தமிழர் மண் சார்ந்த கலை நிகழ்ச்சிகள், பகுதி மாணவிகளின் மாறுவேடப் போட்டி, பட்டுக்கோட்டை அபிராமியின் கிராமியப் பாடல்கள் மற்றும் பூவையார், கானா பிரபா, மெர்லின் ஆகியோரின் கானா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 2024ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார்...

இந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள்!

இந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள்!

‘இந்துக்களே ஒன்றுபடுங்கள்’ என்ற பா.ஜ.க.-வின் பெரும்பான்மைவாதம் வெறும் வாக்கு அரசியலுக்கான உத்தி என்பதை வருணாசிரமவாதிகள் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். “பார்ப்பனர்களே ஒன்றுபடுங்கள், பார்ப்பனர்களே உங்கள் மேலாதிக்கத்தை விட்டுவிடாதீர்கள்” என்பதுதான் அவர்களின் உண்மையான முழக்கம். அந்த முழக்கத்தைக் கர்நாடாகாவிற்கு சென்று எதிரொலித்திருக்கிறார் காஞ்சி காமகோடி பீடத்தின் விஜயேந்திர சரஸ்வதி. சனவரி 19-ஆம் தேதி கர்நாடகாவில் நடைபெற்ற ‘அகில கர்நாடகா பிராமண மகாசபா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியிருக்கும் இவர், “சனாதன தர்மத்தைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றுவது பார்ப்பனர்களே. இந்திய விடுதலைக்குப் பிறகு வேத தர்மத்தைப் பரப்ப பார்ப்பனர்கள் நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள். வைதீக மதம் நிலையாக இருக்கவும், பாரதத்தின் ஆன்மீக மற்றும் கலாசார பெருமைகளைப் பாதுகாக்கவும் பார்ப்பனியத்தின் இருப்பு அவசியம். நிர்வாக மட்டத்தில் பார்ப்பனர்களை அதீத எண்ணிக்கையில் இடம்பெற வேண்டும். அப்போதுதான் சனதான தர்மத்தைப் பரப்ப முடியும். பார்ப்பன சமூகம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார். அவரது பேச்சில் ஒரு இடத்தில் கூட,...

பெருந்திரளாகப் பங்கேற்ற கழகம்

பெருந்திரளாகப் பங்கேற்ற கழகம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, தென்சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அருண், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ரவிபாரதி, விழுப்புரம் மாவட்டத் தலைவர் பெரியார் சாக்ரடீஸ், கடலூர் சிவா, பெங்களூரு சித்தார்த்தன், திண்டுக்கல் மாக்சிம் கார்கி உட்பட சென்னை, திருச்சி, சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். நீலாங்கரை பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி சீமான் வீடு அருகில் உள்ள ரிலையன்ஸ் மார்க்கெட்...

வீட்டுக்குள் பதுங்கிய சீமான்!

வீட்டுக்குள் பதுங்கிய சீமான்!

ஆர்ப்பாட்டம் நடைபெறும் வரை காவல்துறை பாதுகாப்போடு சீமான் வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டிருந்தார். ஆர்ப்பாட்டக்காரர்களைக் காவல்துறை கைது செய்து முடித்தவுடன், வெளியே வந்து ஊடகங்களுக்கு வீராவேசமாக பேட்டி அளித்த அவர், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏன் வீட்டை நெருங்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். “காவல்துறை பாதுகாப்பு எனக்கு வேண்டாம், ஆர்ப்பாட்டக்காரர்களை அனுமதியுங்கள்” என முன்பே சொல்ல சீமானுக்கு தைரியம் இல்லாமல் போனது ஏன் என அந்த பேட்டியைப் பார்த்து பொதுமக்களே கேள்வி எழுப்புகின்றனர். மீண்டும் மீண்டும் பெரியார் குறித்து சீமான் வைக்கும் விமர்சனங்களால் பெரியாரின் புகழ் மென்மேலும் பரவிக் கொண்டிருக்கிறது. எதிரிகள்தான் தனக்கு விளம்பரமே என வாழ்ந்த காலத்திலேயே கூறியவர் பெரியார். இப்போது மறைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் அந்த கூற்று நிரூபணமாகிக்கொண்டிருக்கிறது. சீமானின் விமர்சனங்களால் பெரியார் தமிழ் குறித்தும், பெண்கள் குறித்தும் உண்மையில் என்ன கூறினார் என்று தேடித்தேடி இளைஞர்கள் படிக்கிற ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. இதனால் இதுவரை சென்று சேராத தரப்பினரிடமும் பெரியாரின்...

சீமான் வீட்டை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள்-பெரியார் கொள்கைகள் வேகமாகப் பரவுகிறது!

சீமான் வீட்டை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள்-பெரியார் கொள்கைகள் வேகமாகப் பரவுகிறது!

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வருகிறார். பெரியார் குறித்து அவர் வைக்கும் விமர்சனங்களுக்கு ஆதாரம் கேட்டால், அவரின் சங்கி நண்பர்களான அண்ணாமலையும், ஹெச்.ராஜாவும், தமிழிசை செளந்தரராஜனும், துக்ளக் குருமூர்த்தி போன்ற ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களும் ஆதாரத்தைத் தருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் இதுவரை சீமானும் ஆதாரத்தைத் தரவில்லை, அவருடைய சங்கி நண்பர்களும் ஆதாரத்தைத் தரவில்லை. சீமானின் இத்தகைய அவதூறுப் பேச்சு பெரியாரிய உணர்வாளர்கள் மத்தியிலும், பொதுமக்களிடத்திலும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அவதூறுப் பேச்சுக்களை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று பல்வேறு தரப்பில் இருந்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சீமானோ மீண்டும் மீண்டும் சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதனால் சனவரி 22-ஆம் தேதி பனையூரில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடப்போவதாக ‘பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு’ அறிவித்திருந்தது. சீமானின் அருவருப்புப் பேச்சுகளால் ஆத்திரமடைந்த பெரியாரியத் தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதிலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து தலைநகர்...

கோவையில் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்!

கோவையில் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்!

கோவை மாநகர மாவட்டக் கழக சார்பில் புரட்சியாளர்கள் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம் 24.12.2024 அன்று சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தம் அருகில் கோவை மாநகரச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். முன்னதாக நிகர் கலைக்குழுவின் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் “தற்கால அரசியலும் அம்பேத்கரும்” என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், “ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் “ என்ற தலைப்பில் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனும், “மார்க்சிய பார்வையில் பெரியாரும் – அம்பேத்கரும்” என்ற தலைப்பில் சிபிஐ (மாலெ) ரெட் ஸ்டார் மத்தியக்குழு உறுப்பினர்  மு. இனியவனும்  சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தமிழ்ப்புலிகள் கட்சி பொதுச்செயலாளர் இளவேனில், தலைமை செயற்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர் செல்வம், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, கோவை மாநகரத் தலைவர் நிர்மல்...

ஜாதி அமைப்பு முறையைத் தகர்க்காமல் உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடாது!

ஜாதி அமைப்பு முறையைத் தகர்க்காமல் உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடாது!

தற்போது இந்தியாவில் நிலவுகிற பாசிச காவி கார்ப்ரேட் இந்துத்துவ அரசியல் சூழலில் கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த அரசியல் மாநாட்டிற்கு (24.12.2024) நான் சார்ந்திருக்கும் சிபிஐ (மா லெ) ரெட் ஸ்டார் சார்பாக புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மார்க்சிய பார்வையில் பெரியார், அம்பேத்கார் என்கிற தலைப்பு எனக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கரை மார்க்சிய பார்வையில் அணுகுவது என்னளவில் சற்று கடினமான பணி என்பதால் தோழர்களின் ஒப்புதலோடு அதனை சற்று மாற்றத்திற்கு உட்படுத்தி “கம்யூனிஸ்ட் பார்வையில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்” என்கிற தலைப்பினில் எனது உரையை முன்வைக்கிறேன். ஏனென்றால், மார்க்சியம் என்பது சமூக அரசியல் பொருளாதாரக் கோட்பாட்டு அடிப்படையிலான தத்துவம். பொதுவாக கோட்பாட்டளவில் ஓர் மார்க்சிஸ்ட்டாக வாழ்வது என்பது மிகவும் கடினமான காரியம். ஆனால் கம்யூனிஸ்ட் என்பது மார்க்சிய அடிப்படையிலான கட்சி, கொள்கை அரசியல் முன்னெடுப்பு சார்ந்தது என்பதனால்...

வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர் பெரியார்

வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர் பெரியார்

பெரியார் பற்றி அண்ணா இவ்வாறு கூறினார்; “ஒரு சகாப்தம்; ஒரு திருப்புமுனை; ஒரு காலகட்டம்; நூற்றாண்டு வரலாற்றை ஒரு குடுவைக்குள் அடக்கியவர்.” (Putting Centuries In Capsules) சமூகவியல் பார்வையில் வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர் பெரியார். இந்தியாவில் பார்ப்பனியத்தை எதிர்த்த முதல் புரட்சிக்காரர் புத்தர். வேதம் – யாகம் – சமூகக் கொடுமைகளை எதிர்த்து புத்தர் மக்களைச் சந்தித்து உரையாடினார். அவரின் கொள்கைகளைப் பரப்ப அவரது சீடர்கள் மக்களைச் சந்தித்து புத்தரின் கருத்தியலைப் பரப்பினார்கள். அதே புத்தர் இயக்கத்தை அவரது மறைவுக்குப் பிறகு பார்ப்பனியம் ஊடுருவிச் சிதைத்தது. பார்ப்பனியத்தை எதிர்த்து சார்வாகர்கள், சித்தர்கள், சமணர்கள், வள்ளலார் என்ற சீர்திருத்தவாதிகள் வந்தார்கள். பார்ப்பனியம் அவர்களை ஜீரணித்துவிட்டது. வரலாற்றில் இருந்து பாடம் பெற்ற பெரியார் எந்த இயக்கமும் எந்தப் புரட்சியாளரும் பின்பற்றாத புதிய நடைமுறைகளையும், கருத்துகளையும் தனது இயக்கத்துக்காகக் கட்டமைத்தார். 1. தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி சமுதாய இயக்கமாக்கினார். 2. எதைச் சொன்னால்...

முதலமைச்சரின் தகுதியுரை

முதலமைச்சரின் தகுதியுரை

தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்பிவரும் பத்திரிக்கையாளரும் எழுத்தாள ருமான திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள், 1969ல் மயிலாடுதுறையில் திராவிடர் கழகத்தின் இளைஞரணியில் இணைந்து பெரியாரியம் தொடர்பாக பொதுக்கூட்டங்கள் மற்றும் பல பகுத்தறிவு நிகழ்ச்சிகளை நடத்தி பெரியாரின் கொள்கைகளைப் பேசவும் எழுதவும் தொடங்கியவர். தந்தை பெரியாரை அழைத்து மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடத்தியவர். பெரியாரின் இயக்க ஏடுகளில் 25 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றியதோடு பெரியார் பேசிய கூட்டங்களில் அவரது உரையைக் குறிப்பெடுத்து பதிவு செய்தவர். இவர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தந்தை பெரியாரின் சமூகநீதி, ஜாதி ஒழிப்பு மற்றும் பெண்ணுரிமைத் தளங்களில் கடந்த 58 வருடங்களாகத் தொண்டாற்றி வருகிறார். பெரியார் கண்ட கனவான ஜாதி மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும், விளிம்புநிலை மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகவும் மக்களை அணிதிரட்டிப் போராடி வருபவர். மக்களை விழிப்படையச் செய்யும் வகையில்...

கொள்கைகளைப் பரப்ப உற்சாகம் அதிகரித்துவிட்டது!

கொள்கைகளைப் பரப்ப உற்சாகம் அதிகரித்துவிட்டது!

பெரியார் பேசுபொருளாக மாறியிருக்கிற காலச்சூழலில் திராவிட மாடல் அரசு எனக்கு பெரியார் விருது வழங்கி கவுரவித்திருப்பதை ஒரு மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன். பெரியார் கருத்துக்கள் நாட்டிற்கு மிக மிகத் தேவையான கருத்துக்களாக இருக்கிறது என்பதைச் சமகால சமூக – அரசியல் சூழல்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சனைகள் எல்லாம் பெரியாரியலை மேலும் வலுவாகக் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்புகளாக உள்ளன. இந்த வாய்ப்புகளைப் பெரியாரியத்தின் எதிரிகளே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் காலத்தில் இருந்து அவருடைய கொள்கைகள் வேகமாகப் பரவியது அவருடைய எதிரிகளால் தான் என்று பெரியாரே திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார். எனவே இந்த ஒரு சூழ்நிலையில் பெரியார் விருதை வழங்கி கவுரவித்திருப்பது, பெரியாரியத் தொண்டை மேலும் உற்சாகமாகச் செய்ய வேண்டும் என்று ஊக்கப்படுத்துகிற விருதாகவே நாங்கள் கருதுகிறோம். அதற்காக முதலமைச்சருக்கு எங்களுடைய நன்றி. பெரியாரியலுக்கு எதிராக பரப்பப்படும் தவறான திசைதிருப்பும் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும் என்ற உந்துசக்தியும் அதிகரித்திருக்கிறது. பெரியாரியலை இன்னும் வேகமாக முன்னெடுக்க...

இராயப்பேட்டையில் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு

இராயப்பேட்டையில் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. சனவரி 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கழகப் பொதுச்செயலாளருக்கு பெரியார் விருதுடன், ரூ.5 இலட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம், விருதுக்கான தகுதியுரை வழங்கிக் கவுரவித்தார். ஏற்கெனவே கழகப் பணிகள் மற்றும் பொதுச்செயலாளரின் அரை நூற்றாண்டுக்கும் மேலான எழுத்துப் பணிகளுக்கான அங்கீகாரமாக, 2022-ஆம் ஆண்டில் கழகப் பொதுச்செயலாளரின் நூல்களை நாட்டுடைமையாக்கிப் பெருமை செய்தது திராவிட மாடல் அரசு. தற்போது பெரியார் குறித்த விவாதங்களும், உரையாடல்களும் தீவிரமாக நடந்துவரும் இந்த காலகட்டத்தில் பொதுச்செயலாளருக்கு பெரியார் விருது அளித்திருப்பது கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இராயப்பேட்டையில் உற்சாக வரவேற்பு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் சரஸ்வதி, தலைமை நிலையச் செயலாளர் தபசி...

விடுதலை இராசேந்திரனுக்கு ஆடை போர்த்தி பாராட்டு!

விடுதலை இராசேந்திரனுக்கு ஆடை போர்த்தி பாராட்டு!

தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனை மேடைக்கு அழைத்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார். பெரியார் முழக்கம் 09012025 இதழ்

விடுதலை இராசேந்திரனுக்கு ஆடை போர்த்தி பாராட்டு!

விடுதலை இராசேந்திரனுக்கு ஆடை போர்த்தி பாராட்டு!

தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனை மேடைக்கு அழைத்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.

பேராவூரணியில் பெரியாரியல் பயிலரங்கம்

பேராவூரணியில் பெரியாரியல் பயிலரங்கம்

பேராவூரணி: பெரியாரின் 51ஆவது நினைவுநாளை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் மாணவர்களுக்கான பெரியாரியல் பயிலரங்கம் 25.12.2024 அன்று செங்கை க.கதிர்வேல் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது. முதல் நிகழ்வாக தோழர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் பெரியார் அறிமுகம் என்ற தலைப்பில் உரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் “திராவிட இயக்க வரலாறு” குறித்தும் “பெரியார் கொள்கையின் இன்றைய தேவை” குறித்தும் உரையாற்றினார். மதிய உணவிற்கு பிறகு இட ஒதுக்கீடு வரலாறு குறித்து உரையாற்றினார். நிறைவாக மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 09012025 இதழ்

முடிகொண்டான் சாரங்கபாணி முடிவெய்தினார்.

முடிகொண்டான் சாரங்கபாணி முடிவெய்தினார்.

பெரியாரின் பெரும் தொண்டரும், தமிழ்நாடு அரசின் ‘நல்லாசிரியர்’ விருது பெற்றவரும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்ததற்காக, தனது மகள், மகனுடனும், கழகத் தலைவர், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் ஆகியோருடன் தடா வழக்கில் சிறை சென்றவருமான முடி கொண்டான் சா.சாரங்கபாணி, தனது 93ஆவது வயதில் 03.01.2025 அன்று தனது இல்லத்தில் முடிவெய்தினார். அவருக்கு நமது புகழ் வணக்கங்கள். பெரியார் முழக்கம் 09012025 இதழ்

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு; ஈரோடு செயலவைக் கூட்டத்தில் தீர்மானம்

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு; ஈரோடு செயலவைக் கூட்டத்தில் தீர்மானம்

21.03.2024 வியாழன் அன்று ஈரோடு, கே.கே.எஸ்.கே மகாலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். இந்தியாவில் நடப்பது அரசியல் போராட்டம் அல்ல: ஆரிய திராவிடப் போராட்டம் என்றார் பெரியார். நாடு சுதந்திரம் பெற்றது என்று அறிவிக்கப்பட்ட போது இது சுதந்திரம் அல்ல; பார்ப்பன பனியாவுக்கு அதிகாரத்தை மாற்றும் நாள் என்பதே பெரியாரின் நிலைப்பாடு. பெரியார் எச்சரித்த அந்த போராட்டம் தான் எதிர்வரும் தேர்தல் களத்தில் மைய கருத்தியலாக உருப்பெற்று இருக்கிறது. ஆரியம், சனாதனம் என்ற முகமூடியுடன் களத்திற்கு வந்துள்ளது. திராவிடம் தனது உண்மையான அடையாளத்தோடு சனாதனத்தை எதிர்கொண்டு வருகிறது. திராவிட சனாதன (பார்ப்பனியம்) முரண்பாடுகள் கூர்மை அடைந்து வருகின்றன. கோடான கோடி விளிம்பு நிலை இந்து மக்கள் சனாதனம் சுமத்திய சுரண்டல் அநீதிகளுக்கு பலிகடாவாக்கப்பட்டனர். இதை நேர் செய்வதற்கு சமூக நீதி, அதிகார பங்கீடு, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை,...

எழுச்சியோடு முடிந்த 2023 – கழகம் ஆற்றிய பணிகள்

எழுச்சியோடு முடிந்த 2023 – கழகம் ஆற்றிய பணிகள்

ஜனவரி: பொங்கல் விழா அழைப்பிதழில் “தமிழ்நாடு” என குறிப்பிட மறுத்தது, தமிழ்நாடு அரசின் இலச்சினையை பயன்படுத்த மறுத்தது,  பின்னர் எதிர்ப்புகளுக்கு அடிபணிந்தது என ஆளுநரின் அதிகார மீறல்களோடுதான் 2023 தொடங்கியது. சட்டப்பேரவையில் ஜனவரி 9-ஆம் தேதி ஆளுநர் உரையை வாசித்த ஆர்.என்.ரவி, சில முக்கியப் பகுதிகளை வெட்டியும் ஒட்டியும் திரித்தும் வாசித்தார். திராவிட மாடல், சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம், பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர், காமாராசர் ஆகிய வார்த்தைகளை உச்சரிக்க மறுத்துவிட்டார். ஆனால் அரசு தயாரித்த உரைதான் பதிவேட்டில் இடம்பெறும் என முதலமைச்சர் தீர்மானம் கொண்டுவந்ததால், வேறு வழியின்றி சட்டமன்றத்தை விட்டு ஓட்டம்பிடித்தார் ஆர்.என். ரவி. ஆணவம் பிடித்த ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி மேட்டூர், சேலம், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் கழகத்தின் சார்பில் உடனடியாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஜனவரி 13-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் மாவட்டக் கழகம் சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட...

ஏற்காட்டில் கலந்துரையாடல் கூட்டம்

ஏற்காட்டில் கலந்துரையாடல் கூட்டம்

03.01.2024 புதன் அன்று காலை 11 மணியளவில் சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள் இல்லத்தில், ஏற்காடு ஒன்றியக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவபிரகாஷ் தலைமை தாங்கினார், ஏற்காடு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். புதிதாக பரப்புரை வாகனம் வாங்குவது, பயிற்சி வகுப்புகள் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சுமார் 20 தோழர்கள் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 11012024 இதழ்

பாசிச பாஜகவை அதிகாரத்தில் இருந்து வீழ்த்துவோம் தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் சார்பில் பரப்புரை

பாசிச பாஜகவை அதிகாரத்தில் இருந்து வீழ்த்துவோம் தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் சார்பில் பரப்புரை

கழகத் தலைமைக்குழுக் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சேலத்தில் 02.02.2024 அன்று முகில் நகரில் கழகத் தோழர் சீனிவாசன் இல்லத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் இணைய வழியாக (Skype) கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி:- எதிர்வரும் 2024 – நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கழகம் சார்பில் முன்னெடுக்க வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார். தொடர்ந்து தலைமைக் குழு உறுப்பினர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் முன்னெடுக்கவுள்ள பரப்புரைக்கான செயல் வடிவங்கள், முழக்கங்கள், பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட உள்ள துண்டறிக்கையில் இடம் பெற வேண்டிய கருத்துக்களை முன்வைத்தனர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பரப்புரை இயக்கத்துக்கான துண்டறிக்கையில் இடம்பெற வேண்டிய செய்திகளை தலைமைக்குழு முன் சமர்ப்பித்தார். நிறைவாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” எனும் முழக்கத்தோடு பரப்புரை இயக்கங்கள் வழியாக மக்களை...

சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!

சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!

“சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்!" "சமூக ஒற்றுமையைக் காப்போம்!" 1. பத்தாண்டு மோடி ஆட்சியில் என்ன நடந்தது? சட்டங்கள் சீர்குலைக்கப்பட்டன. மதவெறி தூண்டப்பட்டது. மாநில அடையாளங்கள் அழிக்கப்பட்டன. 2. நீட் தேர்வால் நமது அனிதாக்களை இழந்தோம். ஜி.எஸ்.டி-யால் தமிழ்நாட்டின் வருவாயை இழந்தோம். வரலாறு காணாத மழை வெள்ளத்தை நமது மாநிலம் சந்தித்த போதும் ஈவுஇரக்கமின்றி நிவாரண நிதியே இல்லை போ என்று இறுமாப்புடன் பேசியது ஒன்றிய மோடி ஆட்சி. 3. ஆளுநர் ரவி சனாதனப் பெருமை பேசுகிறார். தமிழ்மறை தந்த வள்ளுவருக்கு காவி சாயம் பூசுகிறார். தலித்மக்களுக்கு பூணூல் அணிவிக்கிறார். தீட்சிதர்கள் நடத்தும் குழந்தைத் திருமணங்களை ஆதரிக்கிறார். தேசத்தந்தை காந்தியை அவமதிக்கிறார். சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமறுக்கிறார். அண்ணா சூட்டிய தமிழ்நாடு என்ற பெயரை ஏற்க முடியாது என்கிறார். ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் தலைமையிடமாக மாற்றிவிட்டார். உச்சநீதிமன்றமே தலையில் குட்டிய பிறகும் பாஜக ஆட்சிதரும் இறுமாப்பில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காலில் போட்டு...

அர்ச்சகர் சட்டம்: மதுரை நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

அர்ச்சகர் சட்டம்: மதுரை நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீரங்கம் குமார வயலூர் கோவிலில் அனைத்து சாதி அர்ச்சகர் சட்டத்தின்படி மூன்று அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் ஒருவர் பார்ப்பனர். ஏனைய இரண்டு பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களின் நியமனம் செல்லாது என்றும், இதற்கு முன்பு பணியில் இருந்த பார்ப்பனர்களுக்கே அர்ச்சகர் பணி கொடுக்கப்பட வேண்டும் என்றும், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் அளித்த தீர்ப்பைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு இவ்விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மார்ச் 9, 2023 மாலை 4 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் இரா. உமாபதி முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் தொடக்கமாக கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, காஞ்சிபுரம் ரவிபாரதி உரையாற்றினார். பின், தோழர் நாத்திகன், இரண்யா, ப்ரீத்தி ஆகியோர் ‘தூங்குறியா நடிக்கிறியா ரங்கநாதா?’ பாடல்களைப் பாடினர். அனைத்து சாதியினர் அர்ச்சகர் பயிற்சி மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன், பணி...

மதுரையில் மணிமேகலை – மா.பா.மணி அமுதன் சுயமரியாதை இணையேற்பு விழா

மதுரையில் மணிமேகலை – மா.பா.மணி அமுதன் சுயமரியாதை இணையேற்பு விழா

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை மாவட்டச் செய லாளர் மா.பா மணியமுதன் – மணிமேகலை ஆகியோரின் சுயமரியாதை இணையேற்பு விழா 26.02.23 ஞாயிறு அன்று மதுரை மேலூர் ரஹ்மா திருமண மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் துவங்கி நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். இணையேற்பு விழாவிற்கு ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதியமான் முன்னிலை வகித்தார். விழாவின் துவக்க நிகழ்வாக வானவில் இன உணர்வுப் பாடலைப் பாடினர். மணமக்களை வாழ்த்தி அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் பசும்பொன் பாண்டியன், தமிழ் தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர்கள் வன்னி அரசு, கனியமுதன், தமிழ்மண் தன்னுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன், கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் பேசினர். தோழர்களின் வாழ்த்துரைகளுக்கு பின்பு கழகத் தலைவர்...

ஜாதி மத மறுப்புத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா?

ஜாதி மத மறுப்புத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா?

¨  மணமுறிவு பெற்றவர்கள் ¨   துணையை இழந்தவர்கள் ¨  மாற்றுத் திறனாளிகள் – ஆகியோரும் Manitham Matrimony இணையதளத்தில் இலவசமாகப் பதிவு செய்து பயன் பெறலாம். இச்சேவையை Google Play  அலைப்பேசி செயலியாகவும் (Mobile Apps) பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம். மனிதம் திருமண தகவல் நிலையம் எண்.5/9, பாலமுத்துகிருஷ்ணா தெரு தர்மாபுரம், தியாகராய நகர், சென்னை – 600 017. அலைபேசி எண். 7604977781 மின்னஞ்சல் : manithammatrimonial@gmail.com web: http//manithammatrimony.com பெரியார் முழக்கம் 16022023 இதழ்

ஆளுநரைக் கண்டித்து கழகம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள்

ஆளுநரைக் கண்டித்து கழகம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள்

ஆளுநரை கண்டித்து பல்வேறு இடங்களில் நடந்த கழகம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள். மேட்டூர் : ஆளுநரே வெளியேறு! ஒன்றிய அரசே, ஆணவம் பிடித்த ஆளுநரைத் திரும்பப் பெறு என்ற முழக்கத்தோடு மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்பு களுடன் 12.01.2023 வியாழன் மாலை 4.30 மணியளவில் மேட்டூர் சின்ன பார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டம் மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா தலைமையில் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்தில் குமரப்பா, ஆளுநரைக் கண்டித்து கண்டன முழக்கமிட அனைவரும் முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப் புலிகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் சி.சதீஷ், சிபிஐ (எம்) மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.இளங்கோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேட்டூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார், ளுனுஞஐ கட்சியின் மேட்டூர் சட்டமன்ற தொகுதி தலைவர் ஃபைரோஸ், திராவிடர் விடுதலைக்கழகத் தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொளத்தூர் ஒன்றிய செயலாளர் சேட்டு...

வள்ளலார் வரலாறு திரும்புகிறது

வள்ளலார் வரலாறு திரும்புகிறது

சிதம்பரத்துக்கு அருகில் உள்ள மருதூர் கிராமத்தில் 1823 அக்டோபரில்  கருணீகர் (கணக்குப் பிள்ளை) மரபில் பிறந்தவர் இராமலிங்கனார். அவர் முதலில் பாடிய ‘பாமாலை’யில் “பெருநெறி பிடித் தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்று எழுதினார். உருவ வழிபாடு, வேதம், ஆகமங்களைக் கடுமையாக எதிர்த்தார். 1872 ஜன. 25இல் வடலூரில் உருவ வழிபாடு இல்லாமல் ஒளியை மட்டுமே வணங்கும் ‘ஞான சபை’யைத் தொடங்கினார். இது எல்லா மதங்களுக்கும் பொதுவானது என்று அறிவித்தார். தில்லை நடராசன் பக்தராக இருந்தவர் தான்; அங்கே வழிபடச் சென்றபோது தீட்சதர்கள் அனுமதிக்கவில்லை. சினமடைந்த அவர், “இந்தக் கோயிலுக்கு எதிராக ஒரு தலத்தை உண்டாக்கி அங்கே நடராசனை அழைத்துக் கொள்ளப் போகிறேன்” என்று அறிவித்தார். (ஆதாரம்: 1904இல் பு. பாலசுந்தர நாயகர் எழுதிய “இராமலிங்க பிள்ளை பாடல்) 50 ஆண்டுகாலம் வாழ்ந்த வள்ளலார், கடைசி 10 ஆண்டு காலத்தில் தனது சைவம், முருகன், ஆகம பக்திகளைத் துறந்தார்....

பெண்களையும், சூத்திரர்களையும் அவமதிக்கும் மனுசாஸ்திரம்

பெண்களையும், சூத்திரர்களையும் அவமதிக்கும் மனுசாஸ்திரம்

பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது தகப்பனாரின் கட்டுப்பாட்டிலும் திருமணமான பிறகு கணவனின் கட்டுப்பாட்டிலும் கணவன் இறந்த பிறகு, பிள்ளைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டுமே தவிர, பெண்கள், தாங்கள் விரும்புகிறபடி (சுயமாக சிந்தித்து) ஒரு போதும் இருக்கக் கூடாது.” (மனு சாஸ்திரம் அத்தியாயம் 5, சுலோகம் 148.) கணவன் துராசாரமுள்ளவனாக “(ஒழுக்கக்கேடுகள் உள்ளவனாக) இருந்தாலும் அன்னிய ஸ்திரீலோலனாக (வேறு பெண்களோடு உறவு வைத்துக் கொள்ள துடிப்பவன்) இருந்தாலும், பதிவிரதைகளான பெண் என்பவள், அந்தக் கணவனை தெய்வத்தைப்போல் வணங்க வேண்டும்.” (மனு சாஸ்திரம், அத்.5, சுலோகம் 154) பெண்கள் துரோகிகள் ; பெண்களைக் கொல்லுவது பாவமில்லை. படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.   (அத்தியாயம் 9 ; ஸ்லோகம் 17) பெண்களையும், பிராமணர் அல்லாதவரையும் கொல்லுவது பாவமில்லை. (அத்தியாயம் 11; ஸ்லோகம் 65) சூத்திரர்கள் அனைவரும் பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள். சூத்திரர் என்போர் ஏழு...

பெரியார் பிறந்தநாள்; சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம்!

பெரியார் பிறந்தநாள்; சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம்!

அது என்ன ‘சனாதனம்’? வர்ணாஸ்ரம தர்மத்தின் மற்றொரு பெயர் தான் அது! மனு சாஸ்திரம், இறந்து போன மூத்த சங்கராச்சாரி, இந்துக்களின் புனித நூல்கள் எல்லாம் இதைத் தான் கூறுகின்றன. பிறப்பால் ஒருவன் ‘பிராமணன்’ –  அவனுக்கு அடிமை, பெரும்பான்மை உழைக்கும் மக்களான சூத்திரர்கள், பஞ்சமர்கள்  மற்றும்  பெண்கள். இது பிரம்மாவே கூறியது என்று மனுதர்மம் கூறுகிறது. அந்த சனாதனம், இப்போது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி என்று அதிகார பலத்துடன் தமிழர்களாகிய நம்மீது படை எடுத்து வருகிறது. மொழி, இன அடையாளங்களை ஒழிக்க, மாநிலங்களையே இல்லாது ஆக்க நடக்கும் முயற்சி – சனாதனம். நீட் தேர்வைத் திணிப்பது – சனாதனம். காசியை தலைநகராக்கி, மனுதர்மத்தை அரசியல்  சட்டமாக்கி இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களின் வாக்குரிமையைப் பறிப்போம் என்று சாமியார்கள் கூட்டம் வாரணாசியில் கூடி இந்துராஷ்டிரத்துக்கு புதிய அரசியல் சட்டத்தை அறிவித்திருக்கிறதே – அது சனாதனம். தமிழ்நாட்டிடமிருந்து ஒரு ரூபாயை வாங்கி 35...

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் 29-5-22 அன்று நடைபெற்ற செஞ்சட்டைப் பேரணி- வர்க்க வருண ஒழிப்பு மாநாட்டின் தீர்மானங்கள்…

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் 29-5-22 அன்று நடைபெற்ற செஞ்சட்டைப் பேரணி- வர்க்க வருண ஒழிப்பு மாநாட்டின் தீர்மானங்கள்… 1 பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்பல் செய்யும் கருத்தாளர்களாகவும், பொதுவுடைமைக் கட்சித் தோழர்களாகவும் இருந்து களம் கண்டு எதிரிகளால் அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஈகியர்களுக்கு இம் மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. மொழி உரிமைகளுக்காகவும், இந்தி, சமஸ்கிருத, ஆங்கில மொழித் திணிப்புகளை எதிர்த்து வீரச்சாவு எய்தியவர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. சாதிய வன்கொடுமைகளை எதிர்த்தும், பார்ப்பனிய மற்றும் மதவெறிகளை எதிர்த்தும் களமாடி உயிர் ஈந்த எண்ணற்ற ஈகியர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. மேலும், தமிழீழ மண்ணின் உரிமைகளுக்காகப் போராடி உயிர் ஈந்த இலக்கக் கணக்கானவர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. 2 தமிழ்நாட்டிற்குள் செயல்படுகின்ற காப்பீட்டுக்கழகம்( எல் ஐ சி) உள்ளிட்ட பொதுத் நிறுவனங்களையெல்லாம் அம்பானி, அதானி உதுறைள்(உள்ளிட்டத் தனியார்துறை நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துவரும் இந்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.. தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் எல்ஐ சி, தொடர்வண்டித் துறை...

கழகத் தலைமையகத்தில் நடந்த ஜாதி மறுப்பு – புரட்சிகர மணவிழா

கழகத் தலைமையகத்தில் நடந்த ஜாதி மறுப்பு – புரட்சிகர மணவிழா

கணவனை இழந்த இரண்டு குழந்தைகளுடன் வாழும் சித்ராவிற்கும்- ஹரிகிருஷ்ணனுக்கும் 25.04.22 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. இணையர் கழக வார ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு நன்கொடையாக 1000 ரூபாய் வழங்கினர்.   பெரியார் முழக்கம் 05052022 இதழ்

மாநில உரிமைகளைப் பறிக்காதே! கல்வி உரிமைகளைத் தடுக்காதே!  மத வெறியைத் திணிக்காதே!  நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’

மாநில உரிமைகளைப் பறிக்காதே! கல்வி உரிமைகளைத் தடுக்காதே! மத வெறியைத் திணிக்காதே! நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’

இடஒதுக்கீடு, சமூக நலனுக்கான திட்டங்கள், மாநில சுயாட்சி, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பெண்களை அதிகாரப்படுத்தல், மதவெறி யற்ற – மக்களின் ஒற்றுமை, மூட நம்பிக்கையற்ற அறிவியல் சமுதாயம் – இவை திராவிடர் இயக்கம் தமிழ்நாட்டுக்குத் தந்த அடையாளங்கள். அனைத்துப் பிரிவு மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய திட்டங்களை உருவாக்குவது என்பதே நமது தமிழ்நாட்டின் தனித்துவம். இந்த அடையாளங்கள், இப்போது ஒன்றிய ஆட்சியால் அழிக்கப்படுகின்றன; படிப் படியாக மறுக்கப்படுகின்றன; இதை எதிர்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் போராட்டங்களை நடத்திக் கொண்டு வருகிறார். திட்டங்களை வகுத்து செயல் படுத்துகிறார். அதில் வெற்றி களையும் குவித்து வருகிறார். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டு எடுப்பது ஒரு பக்கம், மற்றொரு பக்கம் வலிமையான தமிழகத்தை கட்டமைப்பதற்கான திட்டங் களை உருவாக்குவது என்று, முதலமைச்சர் ஒரு கையில் வாளும், மற்றொரு கையில் கேடயமும் ஏந்தி நிற்கிறார். இதுதான் நாம் கூறும் “திராவிட மாடல்”. என்ன நடக்கிறது ? பெட்ரோல் டீசல் விலை...