கல்வி உரிமையைப் பறிக்காதே! யு.ஜி.சி.யைக் கண்டித்துக் கழகம் ஆர்ப்பாட்டம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவிப்பு!
ஒன்றிய அரசே !
கல்வி உரிமையைப் பறிக்காதே !
இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்காதே!

ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து நம் மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள், விதிகளில் திருத்தங்களை செய்து அறிவித்து வருகிறது.சமீபத்தில் UGC விதிகளில் திருத்தம் செய்து புதிய விதிகளை ஒன்றிய பாஜக அரசு வெளியிட்டுள்ளது. அது மாநிலக் கல்வி உரிமைகளைப் பறிக்கும் வண்ணம் குறிப்பாக தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பைச் சிதைக்கும் வகையில் உள்ளது.

மேலும் இந்த புதிய விதிகளில் உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழிக்கும் திட்டத்துடன் திருத்தங்களை செய்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

“எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே” எனும் சனாதன தர்மத்தை சட்டப்படியே நிறைவேற்ற துடிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் எதிர்வரும் பிப்.13ஆம் தேதி வியாழக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒத்த கருத்துள்ள தோழமை அமைப்புகளை ஒன்றிணைத்துக் கொண்டு நடத்த உள்ளது.

பாஜக அரசின் இந்த கொடும் போக்கை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவும், நமது கண்டனங்களை ஒன்றிய அரசுக்குப் பதிவு செய்யவும் இந்த ஆர்ப்பாட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் நடத்துமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

கொளத்தூர் மணி
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
04.02.25.
பெரியார் முழக்கம் 07022025 இதழ்

You may also like...