விநாயகர் சதுர்த்தி அத்துமீறலைத் தடுக்க வேண்டும்! கழகம் சார்பில் காவல்துறைக்குக் கோரிக்கை!
விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல்களைத் தடுக்கக் கோரி கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மனு அளிக்கப்பட்டுவருகிறது. சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் நடக்கும் அத்துமீறல் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கக் கோரியும், சிலைத் தயாரிப்பு – ஒலிப் பெருக்கி பயன்படுத்துதல் உள்ளிட்டு அரசு வகுத்த வழிகாட்டு நெறிகளைச் சரியான முறையில் பின்பற்ற வேண்டும், அதை அரசு கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 20.08.2024 அன்று சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தில் சென்னை மாவட்டக் கழக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை: விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் இந்துத்துவ அமைப்புகள் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைகளைத் துளியும் பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும்...
