Category: திவிக

மய்ய பா.ஜ.க. அரசின் மதவெறி அரசியல் எதிர்ப்புக் கருத்தரங்கம் கரூர் 07062017

07062017 புதன்கிழமையன்று மாலை 5-00 மணியளவில் கரூர் திருநீலகண்டர் திருமண மண்டபத்தில், கரூர் மதவெறி அரசியல் எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பாக ‘ மய்ய பா.ஜ.க. அரசின் மதவெறி அரசியல் எதிர்ப்புக் கருத்தரங்கம், ஆசிரியர் மா.இராமசாமி அவ்ர்களின் தலைமையில் நடைபெற்றது. ம.தி.மு.க. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் காமராஜ் வரவேற்புரையாற்றினார். த.பெ.தி.க. மாவட்டத் தலைவர் தனபால், கரூர் வழக்குரைஞர் தமிழ் இராசேந்திரன், காவேரி உரிமைப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் விசுவநாதன் போன்றோரின் உரைகளைத் தொடர்ந்து சுற்றுச் சூழல் போராளி முகிலன், தோழர் கிறிஸ்டினா , கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

சங்கராச்சாரி வழக்கை மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி, புதுவை மாநில ஆர்ப்பாட்டம் 06062017

புதுச்சேரி – சங்கராச்சாரி வழக்கை மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி, புதுவை மாநில திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 06062017 அன்று காலை 11 மணியளவில் மாநிலக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். நிறைவுரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி விசாரணையில் சாட்சியம் அளித்துவிட்டு பிறழ்சாட்சிகளாக மாறியவர்கள் மீது புதுவை அரசு ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும், சங்கராச்சாரியின் ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ பதிவாக உள்ளநிலையிலும், அவரது வாக்குமூலத்தின் வழியாக தெரியவந்து கைது செய்யப்பட்ட காண்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியமும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தும் ஏன் மேல்முறையீட்டுக்கு செல்லவில்லை என்றும், தற்போது சென்னை உயர்நீதிமன்றம் இக்கேள்விகளை எழுப்பியுள்ளநிலையிலேனும் மேல்முறையீட்டுக்கோ, மீள்விசாரணைக்கோ உடனே நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்தில் ஏறத்தாழ 200 பேர் கலந்துகொண்டனர்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு!

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு! 24/25/6/17 தேதிகளில் நடைபெறும் மலேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு  டத்தோசிரி டாக்டர் சுப்ரமணியம்  அவர்கள் மாநாட்டைத் துவக்கிவைப்பார்! இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பேராளர்களாகப் பங்கேற்பு!   ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் பங்பெரும் மாநாட்டில் “திராவிட இனத்தின் மீட்சியே; தமிழ் இனம்! தமிழும் திராவிடமும் ஒன்றே!”யென கருத்தரங்கில் விவாதிக்கப்படும் ! இனத்தால் திராவிடன்,  மொழியால் தமிழன்,  உலகத்தால் மனிதன் என்ற கருப்பொருளால் முன்னெடுக்கப்படும் இம்மாநாட்டு வழி உலகம் தழுவி வாழ்கிற தமிழ் உணர்வாளர்களை ஒரே குடையில் கீழ் கட்டமைக்க முடியுமென்ற சிந்தனையின் வெளிபாடே இம்மாநாட்டுக்குரிய இலக்காகும். அதனால் இம்மாட்டையொட்டி நடைபெறும் இரண்டுநாள் கருத்தரங்கில் பேராசிரியர், சுப வீரபாண்டியன், பேராசிரியர் அ.மார்க்சு, கருத்தாளர் சு.அறிவுக்கரசு, திரைஇயக்குனர் வேலுபிரபாகரன், கருத்தாளர் வே.மதிமாறன், எழுத்தாளர் ஆதவன், கருத்தாளர் தோழி ஓவியா, கருத்தாளர் விடுதலை ராசேந்திரன், கருத்தாளர் இளபுகழேந்தி, எழுத்தாளர் மஞ்சை வசந்தன், கருத்தாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோருடன் கலந்து விவாதிப்பதுடன் அவர்களுக்கு...

ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் 18062017

10 நாட்கள் தொடர் தெருமுனைக் கூட்டங்கள்.. திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் சூரம்பட்டி வலசு பெரியார் JCB பணிமனையில் இன்று மாநில அமைப்புச் செயலாளர் தோழர்.இரத்தினசாமி முன்னிலையில் நடைபெற்றது.. 24.6.17 முதல் 3.7.17 முடிய பத்து நாட்கள் தொடர்ச்சியாக, தினமும் இரண்டு இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 24.6.17 – லோகநாதபுரம்,மோளக்கவுண்டன் பாளையம் 25.6.17 – வைராபாளையம், லட்சுமி தியேட்டர் 26.6.17 – சாஸ்திரி நகர், வாய்க்கால் மேடு 27.6.17 -சூரம்பட்டி வலசு, சூரம்பட்டி போலிஸ் ஸ்டேசன் 28.6.17 – மரப்பாலம், கோணவாய்க்கால் 29.6.17 – பச்சப்பாளி, கொல்லம்பாளையம் 30.6.17 – கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம் 1.7.17 – ஆர்.என் புதூர், சி.எம் நகர் 2.7.17 – சூளை, கனிராவுத்தர் குளம் 3.7.17 – வளையக்கார வீதி, சின்னமாரியம்மன் கோவில்.. பேச்சாளராக தலைமைக் கழகப் பேச்சாளர் தோழர். கோபி வேலுச்சாமி மற்றும் மந்திரமா...

தோழர்கள் திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழக முதல்வர் வீடு முற்றுகை சென்னை 17062017

தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் பாஜகவின் பினாமியான தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகைப் போராட்டம் 17062017 சனி அன்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அதில் 2000 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழர் விரோத பாஜகவின் அடியாளாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி அரசைக் கண்டித்தும், தமிழக செயல்பாட்டாளர்களை ஒடுக்க குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், UAPA என அடக்குமுறை கருப்பு சட்டங்களை ஏவுவதைக் கண்டித்தும், 4 தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தோழர்கள்...

குமரி மாவட்ட திவிக தோழர் செல்லம் மறைவு, உடல்தானம் 16062017

குமரி மாவட்ட விடுதலைக்காக மார்சல் நேசமணி தலைமையில்  போராடிய மொழிப்போர் போராளியும் தற்போதைய திராவிடர் விடுதலைக் கழக ஆதரவாளருமான தோழர்.செல்லம், அகவை:80, தொடுகுளம், காஞ்சிரகோடு அவர்கள் 16062017 அன்று அதிகாலை மரணமடைந்தார். அவரின் வீரவணக்க நிகழ்வு கழகத் தோழர் அனீஸ் தலைமையில்  நடைப்பெற்றது. தோழர்கள் நீதி அரசர், தமிழ் மதி, மணிமேகலை, மார்த்தாண்டம் மாலை பத்திரிகை ஆசிரியர் தோழர் செபக்குமார், கிறித்துதாஸ் ஆகியோர் உடல் தானம் பற்றிய அறிவியல் செய்திகளை இரங்கல் செய்தியாக பேசினர். தோழர்கள் இளங்கோ, விஸ்ணு, சூசையப்பா, கருணாநிதி, ஜான் மதி, அருள் ராஜ், பிரேமலதா, இராசேந்திரன், கம்யூனிஸ்ட் தோழர் ஜெயன் ஆகியோரின் வீரவணக்க முழக்கங்களுடன், அவரின் இறுதி விருப்பப்படி  ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக மருத்துவ உடற் கூறியல்த் துறைக்கு வழங்கப்பட்டது. அவருக்கு எங்களின் வீரவணக்கங்கள்

மத்திய அரசும் தமிழக மக்களின் உரிமைகளும் – பொதுக்கூட்டம் பவானி 19052017

19/05/2017 வெள்ளி மாலை 6.00 மணிக்கு ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் “மத்திய அரசும் தமிழக மக்களின் உரிமைகளும்” என்ற தலைப்பில் கொடியேற்ற நிகழ்வுடனும் T.K.R பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் துவங்கியது. நிகழ்வுக்கு முன்னதாக பவானி பழைய பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கொடிகம்பத்திலும், அந்தியூர் பிரிவில் உள்ள கொடிக்கம்பத்திலும் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கொடி ஏற்றினார். தொடக்கத்தில் பகுத்தறிவு பறை இசை,  பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டன. தோழர் வேல்முருகன் வரவேற்புரையாற்ற மாவட்ட செயாலாளர் வேணுகோபால் கூட்டத்துக்குத் தலைமையேற்றார். மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி தலைமை கழக பேச்சாளர் வேலுச்சாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் சுந்தரம், மாநில அமைப்புச் செயாலாளர்  இரத்தினசாமி, மாநில வெளியீட்டுச் செயாலாளர் இராம. இளங்கோவன் அவர்களைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமென்றால் பெரியாரியமும், அம்பேத்கரியமும் மட்டுமல்லாமல்...

காவிகள் நுழையா தமிழகம், கலவரம் இல்லா தமிழகம் – சுவரொட்டியில் மதுரை திவிக பதிலடி

மதுரை முழுதும் பாஜகவினர் நூற்றுக்கணக்கான இடங்களில் “கழகங்கள் இல்லா தமிழகம் ” என்ற விளம்பரத்தை செய்துள்ளது. அதற்கு பதிலடியாக காவிகள் நுழையா தமிழகம், கலவரம் இல்லா தமிழகம் – என்ற தலைப்பில் பிரம்மாண்ட சுவரொட்டிகளை தயாரித்து மதுரை மாவட்ட திவிக தோழர்கள் மதுரையெங்கும் ஒட்டியுள்ளார்கள்  

பெரியாரியல் பயிலரங்கம் உடுமலை 11062017 மற்றும் 12062017

“பயிற்சியாளர்கள் – தலைப்புகள்” பெரியாரியல் பயிலரங்கம் ! ஜூன் 11,12 – உடுமலை. திருப்பூர், கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நாள் : 11.06.2017 ஞாயிறு, 12.06.2017 திங்கள், இரண்டு நாட்கள். நேரம் : காலை முதல் மாலை வரை. இடம்: கிருஷ்ணா விடுதி,படகுத்துறை, திருமூர்த்தி அணை, உடுமலைப்பேட்டை இரண்டு நாள் நடைபெறும் இப் பயிலரங்கில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிலரங்கிற்கு வரும் தோழர்கள் சனிக்கிழமை இரவே பயிலரங்கு நடக்கும் விடுதிக்கு வந்து விடும்படி கேட்டுக் கொள்கிறோம். இரண்டு நாள் பயிற்சிக் கட்டணம் : Rs 200/= (ரூபாய் இருநூறு மட்டும்) முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தோழர்கள் : திருப்பூர் : முகில் இராசு – 9842248174 நீதிராசன் – 9003430432 உடுமலை : மடத்துகுளம் மோகன் – 8883488222 இயல் – 9842933064 பொள்ளாச்சி...

மாடுகள் விற்பனை தடை, மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்திய அரசே ! மாடுகள் விற்பனை தடைச்சட்டத்தை திரும்பபெறு ! தமிழக அரசே, திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை உடனடியாக திரும்ப பெறு ! கைது செய்யப்பட்டுள்ள மீதேன் திட்ட எதிர்ப்புத்தலைவர் பேராசிரியர் செயராமன் உள்ளிட்ட 11 பேரை உடனடியாக விடுதலை செய் ! சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆய்வு மாணவர் சூரஜ் மீது தாக்குதல் தொடுத்த இந்துத்துவ வன்முறையாளர்கள் அனைவரையும் கைது செய் ! என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையம் அருகே 09062017 வெள்ளி அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : மாவட்ட மக்கள் சிவில் உரிமைக்கழகம்,ஈரோடு.

இந்தி அழிப்புப் போராட்டம் சென்னை 05062017

திராவிடர் விடுதலைக் கழகம் 05062017 காலை 10.30 மணியளவில் சாஸ்திரி பவனில் இந்தி அழிப்புப் போராட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் 130 பேர் இவ்வழிப்பு போராட்டத்தில் கலந்து கைதானார்கள். மேலும் செய்திகள் விரைவில்

தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு சென்னை 04062017

மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து – நடராசன் நினைவு அரங்கத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு” 04062017 மாலை திருவான்மியூர் தெப்பக் குளம் அருகில் நடைபெற்றது

அய்.அய்.டி மாணவர் சூரஜ் சந்தித்து கழகத் தலைவர், பொதுச்செயலாளர் ஆறுதல் சென்னை 03062017

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, துணைப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் மதிமாறன், கழக வழக்குறைஞர் அருண், சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஐஐடி மாணவர் சூரஜ்யை 03062017 அன்று இரவு 8.30 மணியளவில் பார்த்துவிட்டு தலைமை அலுவலகம் திரும்பினார்கள். அவரின் உறவினர்கள் ராஜகோபால், வாசுதேவன் தலைவரிடமும் பொதுச் செயலாளரிடமும் ஆர்வமாக தமிழகத்தின் ஆதரவை மற்றும் கேரள முதலமைச்சர், திமுக செயல் தலைவர், தமிழக காங்கிரஸ் தலைவர், மதிமுக பொதுச் செயலாளர் மற்றும் மாணவர்கள் எப்படி இதை பார்க்கிறார்கள் என்பதை விளக்கினர். செய்தி குகன்

மாட்டுக்கறிக்கு எதிரான முற்றுகைப் போர் நாமக்கல் 31052017

மாட்டுக்கறி விற்பனைக்கு தடைவிதித்த பாஜக அரசைக் கண்டித்து, மாவட்ட அமைப்பாளர் வைரவேல் தலைமையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சார்பில் திருச்செங்கோடு ஸ்டேட் பாங்க்கை முற்றுகையிட்டு போராட்டம். 21 பேர் கைது.

மாபெரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தஞ்சாவூர் 01062017

தஞ்சையில் ஜுன் 12ல் காவிரி நீரை பெற்றுத் தந்து மத்திய அரசிடம் வாழ வழி கேட்டு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக மாபெரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர்,பனகல் பில்டிங் அருகில்,ஜூன் 1 முதல் ஜூன் 5 வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த போராட்டத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் தோழர் பழ.நெடுமாறன் அவர்கள் துவங்கி வைத்தார். ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். போராட்டத்தின் துவக்க நாளான நேற்று 01.06.2017 அன்று கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் கு.ராமகிருட்டிணன், S.D.P.I. தலைவர் தோழர் தெஹலான் பாகவி,தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் சி.முருகேசன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் புண்ணியமூர்த்தி, ஒருங்கிணைப்புக்குழு கவுரவ தலைவர்...

இந்தி அழிப்பு போராட்டம் சென்னை 05062017

ஜூன் 5ல் “இந்தி அழிப்பு போராட்டம்” திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்…. மத்திய அரசு அலுவலகங்களில் “இந்தி அழிப்பு போராட்டம்” தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை.! பா.ஜ.க அரசே.! திணிப்புகளை திரும்பப் பெறு.!! நாள் : 05.06.2017, திங்கட்கிழமை காலை 10 மணிக்கு…. இடம் : சாஸ்திரிபவன், நுங்கம்பாக்கம், சென்னை தலைமை : கொளத்தூர்.தா.செ.மணி தலைவர்.திராவிடர் விடுதலைக் கழகம் #இந்தி_திணிப்பை_எதிர்ப்போம்.! #இழந்துவரும்_உரிமைகளை_மீட்போம்.!! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு மாநாடு சென்னை 04062017

04062017 அன்று சென்னையில் “தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு” மாநாடு. இந்தித்திணிப்பை எதிர்ப்போம் ! இழந்துவரும் உரிமைகளை மீட்போம் ! எனும் முழக்கத்தோடு, திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் சார்பில்.. நாள் : 04.06.2017. ஞாயிற்றுக்கிழமை. நேரம் : மாலை 4 மணி இடம் : திருவான்மியூர் தெப்பக்குளம், சென்னை – 41. தலைமை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம். சிறப்புரை : நீதியரசர்.அரிபரந்தாமன், முன்னாள் நீதிபதி,உயர் நீதி மன்றம்,சென்னை. தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம். பேராசிரியர்.சரசுவதி அவர்கள். மற்றும் கழக நிர்வாகிகள்,தோழர்கள் ! காஞ்சி மக்கள் மன்றத்தினரின் பறையிசை, புரட்சிகர கலை நிகழ்ச்சி இடம்பெறும். விழித்தெழுவோம்.! தடுத்து நிறுத்துவோம்.! தமிழர்களே வாரீர்.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

ஃபா கலெக்சன்ஸ் கடை திறப்பு விழா கோவை 31052017

தோழர் பாரூக் அவர்களின் துணைவியார் துவங்கியுள்ள ஃபா (faa) collections எனும் புதிய ஆயத்த ஆடை அங்காடியை இன்று 31.05.2017 அன்று காலை 11 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்தார். உடன் தோழர் பாரூக்கின் குழந்தைகள். Shop address : FAA COLLECTIONS, No:6 60 feet road, North housing unit, OPP TMMK office, Selva puram, Coimbatore – 641026

மத்திய அரசின் மாட்டிறைச்சிக்கான தடையை எதிர்த்து முற்றுகைப் போராட்டம் திருச்செங்கோடு 31052017

.. தடையைத் தகர்க்க ஒன்று கூடுவோம்.. நாள்: 31.05.2017 இடம்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முன்பு, திருச்செங்கோடு. திராவிடர் விடுதலைக் கழகம்

பேரறிவாளனின் தந்தை ஐயா குயில்தாசன் பவள விழா சென்னை 28052017

பேரறிவாளனின் தந்தை ஐயா குயில்தாசன் பவள விழாவில் சென்னையில் நடைபெற்றது. அதில் ஐயாவிற்கு மரியாதை செய்யும் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பெரியாரியல்வாதிகள்

மாட்டிறைச்சி தடைச் சட்டம் – திவிக ஈரோடு தெற்கு கண்டனக் வட்டம் 28052017

பாஜக மோடி பாசிச அரசின், மாடுகளை இறைச்சிக்காக விற்க தடை செய்த சட்டத்தை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக கண்டனக் கூட்டம் 28052017 அன்று, ஈரோடு சேனாதிபதி பாளையத்தில் மாலை 6 மணியளவில் தொடங்கப்பட்டது. தோழர் ரங்கம்பாளையம் கிருஷ்ணன் தலைமையேற்க, கிருஷ்ணமூர்த்தி வரவேற்க..சிவா சடையன் (திருச்செங்கோடு) செல்லப்பன் (மாவட்டத் தலைவர் ஈரோடு தெற்கு) சாமிநாதன் (நாமக்கல் மாவட்டத் தலைவர்) சரவணன் (நாமக்கல் மாவட்டச் செயலாளர்)வெங்கட்,  ப.ரத்தினசாமி (மாநில அமைப்புச் செயலாளர்) ஆகியோர் கண்டன உரையாற்ற வீரா கார்த்திக் (அறிவியல் மன்றம்) நிறைவுரையாற்ற, கமலக்கண்ணன் நன்றியுரையுடன் முடிந்தது. பங்கு பெற்றோர் சித்தோடு பிரபு , பிரபாகரன், யாழ் எழிலன், சென்னிமலை இசைக்கதிர்,  இனியன், பாரதி, சத்தியராஜ், திருமுருகன், மணிமேகலை, புனிதா, பேபி, மோகன் (புலி) பாண்டியன் (சுயமரியாதை சமத்துவக் கழகம்) இளங்கோ, தமிழ்செல்வன், மாதேஷ்,  கவிப்பிரியா, சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.!

தோழர் ஃபாரூக் துணைவியார் கடை திறப்பு விழா கோவை 31052017

தோழர் பாரூக் துணைவியார் புதிதாக துவங்கவுள்ள   பா (faa) collection நாளை காலை 10 மணிக்கு  திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துறை அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வருக.. பேச 9677404315

பாஜகவின் மாட்டிறைச்சி தடைச் சட்டம் – கழக தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ! பசுவதை தடைச்சட்டம் இந்தியா முழுமைக்கும் கொண்டுவரப்படவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மோடி ஆட்சிக்கு பிறப்பித்த ஆணையை அப்படியே ஏற்று மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமலேயே மத்திய அரசு சுற்றுச்சூழல் துறை வழியாக சந்தைகளில் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை போட்டு விட்டது. பசு மாடு மட்டுமல்லகாளை,எருமை,கன்றுக்குட்டி, கறைவை ஒட்டகம் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளையும் இறைச்சிக்காக இனி சந்தைகளில் இந்தியா முழுவதும் விற்க்கக்கூடாதாம். சந்தைகளில் கால்நடைகளை விற்றால் விவசாயிகள் இறைச்சிக்காக விற்கவில்லை என்று எழுத்துப்பூர்வமாக உறுதி மொழி தரவேண்டுமாம். வாங்குவோர் விற்போர் இருவரும் நிலத்தின் உரிமைப்பத்திரம்,விவசாயி என்பதற்கான அடையாள சான்றுபௌள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.அப்படி வாங்கிய கால்நடைகளையும் அடுத்த 6 மாதத்திற்கு வேறு எவருக்கும் விற்கக்கூடாதாம்.இப்படி கூறுகிறது மோடி ஆட்சியின் சட்டம். இனி ஒவ்வொரு வீட்டிலும் இறைச்சி சமைத்தால் சமைத்த உணவை கண்காணிப்புக்குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தி சமைக்கப்பட்டது மாட்டிறைச்சி அல்ல என்று உள்ளூர்...

ஆணவ கொலையை கண்டித்து முற்றுகை போராட்டம் மதுரை 23052017

ஆணவ கொலையை கண்டித்து முற்றுகை போராட்டம் மதுரை 23052017

காதல் திருமணம் செய்த சுகன்யாவை பெற்றோர்களே எரித்து கொண்ட, சாதி ஆவண படுகொலையை கண்டித்து மதுரையில் தலைமை தபால் நிலையம் முற்றுகையில், திராவிடர் விடுதலை கழகம்  

மத்திய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டம் ஈரோடு 28052017

மத்திய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டம் ஈரோடு 28052017

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் தெருமுனைக் கூட்டம்…. ஈரோடு சேனாதிபதிபாளையத்தில் 28.05.2017 மாலை 6:30 மணிக்கு மத்திய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டம்.. ஆத்தூர் மகேந்திரனின் மந்திரமல்ல தந்திரமே அறிவியல் நிகழ்ச்சியும், இந்தி திணிப்பு சிறப்புரை தோழர் வீரா கார்த்தி ( தமிழ்நாடு அறிவியல் மன்றம்) தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி….. தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க அழைக்கிறோம்….  

பெரியாரியல் பயிரங்கம் ! திருப்பூர் 1106017 மற்றும் 12062017

பெரியாரியல் பயிரங்கம் ! திருப்பூர் 1106017 மற்றும் 12062017

திருப்பூர், கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், நாள் : 11.06.2017 ஞாயிறு, 12.06.2017 திங்கள், இரண்டு நாட்கள். நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. இடம்: திருமூர்த்தி அணை, உடுமலைப்பேட்டை பல்வேறு தலைப்புகளில் இப் பெரியாரியல் பயிலரங்கம் நடைபெறுகிறது. தலைப்புகள் மற்றும் பயிற்சியாளர்கள் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இரண்டு நாள் நடைபெறும் இப் பயிலரங்கில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாள் பயிற்சிக் கட்டணம் : Rs 300/= (ரூயாய் முன்னூறு மட்டும்) முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தோழர்கள் : திருப்பூர் : முகில் இராசு – 9842248174 நீதிராசன் – 9003430432 உடுமலை : மடத்துகுளம் மோகன் – 8883488222 இயல் – 9842933064 பொள்ளாச்சி : ஆனந்த் – 9842815340 சபரி – 9095015269 கோவை...

திராவிடர் விடுதலைக் கழக கிளைக் கழக துவக்க விழா

நாமக்கல் மாவட்டம்,  திருச்செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கருவேப்பம்பட்டி, குதிரைப்பள்ளம் பகுதியில் 07.05.2017 ஞாயிற்றுக் கிழமையன்று  மாலை5.00 மணிக்கு கிளைக்கழக துவக்கவிழா நிகழ்வும் பெரியாரின் கொள்கை விளக்க தெருமுனைப் பிரச்சாரமும் நடைபெற்றது. நிகழ்வின் முன்னதாக அப்பகுதியில் கழகத்தின் கொடியை தலைமைக் கழகப் பேச்சாளர் தோழர் கா.சு வேலுச்சாமி ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து பெரியாரின் கொள்கை விளக்க தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் காவை இளவரசனின் “மந்திரமா தந்திரமா” அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தலைமைக் கழகப்  பேச்சாளர்  கா.சு.வேலுச்சாமி, பெரியாரின் கொள்கைகளை விளக்கி சிறப்பான உரை நிகழ்த்தினார். இந்நிகழ்விற்கு கழகத்தோழர் மணி தலைமை தாங்கினார், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல், மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வை அப்பகுதியைச் சார்ந்த தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கொங்கு அமைப்புகளின் ஜாதி ஆதிக்கம் நிறைந்த இப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக...

கழகத் தலைவர் தலைமையில் விழுப்புரம் மாவட்ட கழக கலந்துரையாடல் 21052017

21.05.2017 மாலை 3 மணிக்கு விழுப்புரம் (மா) தி.வி.க மாவட்ட கலந்தாய்வு கூட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் நடைபெற்றது கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். தோழர்கள் க.ராமர், பெரியார் வெங்கட், கா.மதி, ந.வெற்றிவேல், இளையரசன், சி.சாமிதுரை, தீனா( புதுச்சேரி), ந.அய்யனார் (த.செ.கு) உரையாற்றினர். கழகத் தலைவர் சிறப்புரையாற்றினார். மா.குமார் நன்றி உரையாற்றினர். கூட்டத்தில் கழக இதழ்கள் ‘பெரியார் புரட்சி  முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கு சந்தா சேர்த்தல் மற்றும் கழகத்தின் அடுத்தகட்ட செயல் பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் கிழக்கு, மேற்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். விழுப்புரம் கிழக்கு (மா) பொறுப் பாளர்கள்: இளையரசன் (மாவட்டத் தலைவர்), தினேஷ் (மா.செ), ஸ்ரீதர் (மா.அ), அழகு முருகன் (மா.து.த), பெரியார் ஜெயரக்சன் (மா.து.செ), விழுப்புரம் மேற்கு மாவட்டம், க. மதியழகன் (மா.த), க.ராமர் (மா.செ), சி.சாமிதுரை (மா.அ), ம.குப்புசாமி (மா.து.செ), மு.நாகராஜ் (த.அ.ம. மாவட்ட அமைப்பாளர்), வீ.வினோத் (த.மா.க. மாவட்ட அமைப்பாளர்),...

சங்கரன்கோவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முதல் நிகழ்ச்சி 

  திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் நகரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய நூல் அறிமுக விழா கடந்த  மே 14 அன்று  அபர்ணாதேவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு கழக பரப்புரை செயலர் பால்.பிரபாகரன் தலைமை வகித்தார் .நெல்லை மாவட்ட தலைவர் பால் வண்ணம் முன்னிலை ஏற்றார். ஒருங்கிணைப்பு செய்த சங்கரன்கோவில் தோழர் வே.ராமசாமியின் நோக்க உரையுடன்  நிகழ்ச்சி தொடங்கியது .சங்கை பெரியார் தொண்டர் பா.சதாசிவம் வரவேற்புரை நல்கினார்  “.பெரியார் இன்றும் என்றும் “அண்ணல் அம்பேத்கரின் “நான் ஓர்  இந்துவாக சாக மாட்டேன் “கழக மாத இதழான நிமிர்வோம் ஆகிய நூல்கள் அறிமுகப் படுத்தப்பட்டன . .நிமிர்வோம் இதழ்கள் குறித்து மதுரை தோழர் மா.பா மணிஅமுதனும் ..அம்பேத்கரின் நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன் நூல்குறித்து தலித்முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியனும் கழகத்  தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பெரியார் இன்றும் என்றும் நூல் பற்றியும் உரையாற்றினர் .பால்.பிரபாகரன் தலைமை உரை ஆற்றினார் ஆதித்தமிழர் பேரவையின் தென்னரசு ,முள்ளிக்குளம்...

தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு மாநாடு – சென்னை சுவரொழுத்து பணிகள்

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்…. “இந்தி திணிப்பை எதிர்ப்போம் – இழந்து வரும் உரிமைகளை மீட்போம்” “தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு மாநாடு” சென்னை திருவான்மியூர் பகுதியில் “ஜீன் 04″ல் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கான சுவர் விளம்பரம் தென்சென்னை பகுதியை சுற்றிலும் எழுதப்பட்டது…… முந்தைய நாள் தொடர்ச்சியாக 20052017 அன்று இரவும் தோழர்கள் சுவர் விளம்பரத்திற்காக பணிகளை மேற்கொண்ட போது….. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு சென்னை 04062017

வெகுஜன மக்களின் மனதில் இந்தி படிப்பது அறிவென்றும், இந்தியை படித்தால் உயர்வென்றும் திட்டமிட்டு திணிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் இந்தியை மொழியாக வட மாநிலத்தவர்கள் பிழைப்பிற்காக தென் மாநிலங்களில் கூலி வேலைக்கும், கட்டிட வேலைக்கும் என புலம் பெயர்ந்தபடி உள்ளனர். வட மாநிலங்களில் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளவர்கள் கூட, தரமான கல்விக்கு தென் மாநிலங்களை, குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளை தேர்ந்தெடுக்கின்றனர். காரணம் தமிழர்களுக்கு என்று தனித்துவமாக கலாச்சாரம், நாகரிகம் போன்றவையே காரணம். இந்தி படிப்பதில் என்ன தவறு இருக்கிறது? நிச்சயம் இல்லை அந்நிய மொழி அறிதல் அறிவே. ஆனால் அதுவே கட்டாயமாக்கப்பட்டு திணிக்கையில் நிச்சயமாய் எதிர்க்கக் கூடியதே . இந்தி ஏன் திணிக்கப்படுகிறது. பெரிதாய் ஆய்வுகள் தேவையில்லை. தனக்கென நாடில்லா ஆரியம், அகன்ட பாரத கனவிற்கு இந்து மதம் கொண்டு இந்தியாவை வடிவமைப்பது போலவே, அதை மேலும் பலப்படுத்தும் வண்ணம் ஒருமொழி கலாச்சாரத்தை கொண்டுவர முயலும் மொழி திணிப்பே இந்தியை அறிவென்பது. உலகத்தின் ஆதி...

பெரியாரியல் பயிலரங்கம் ! கொளத்தூர் 24052017 மற்றும் 25052017

பெரியாரியல் பயிலரங்கம் ! தலைப்புகள் – பயிற்சியாளர்கள் விவரம். நாள் : 24.05.2017.புதன் கிழமை மற்றும் 25.05.2017 வியாழக்கிழமை. நேரம் : காலை 9.00. மணிமுதல் மாலை 5 மணி வரை. இடம் : உக்கம்பருத்திக்காடு, பெரியார் படிப்பகம்,கொளத்தூர். ஒருங்கிணைப்பு : திராவிடர் விடுதலைக் கழகம், கொளத்தூர் ஒன்றியம்,சேலம் மாவட்டம். தொடர்புக்கு : 7373072737 – 9486127967 – 9994477623

இந்தி எதிர்ப்பு இயக்க பரப்புரை துண்டறிக்கை

திராவிடர் விடுதலைக் கழகத்தலைமை அறிவித்துள்ள ’இந்தி எதிர்ப்பு இயக்க பரப்புரைக்கான துண்டறிக்கை அச்சிட கழகத்தோழர்கள் கீழ் காணும் மாதிரியை பயன்படுத்திக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம் : இந்தித் திணிப்பை எதிர்ப்போம்! இழந்து வரும் உரிமைகளை மீட்போம்! இந்தியாவின் எத்தனையோ மாநிலங்களில் நமது தமிழ்நாட்டுக்குத் தனித்த சிறப்புகள் பல உண்டு. நம்மை வழிநடத்திய தலைவர்கள் நமக்காக போராடிப் பெற்றுத் தந்த உரிமைகள்தான் அதற்குக் காரணம்.ஒரு காலத்தில் நமது நாட்டுக்குப் பெயர் ‘சென்னை மாகாணம்’ என்பதுதான். அண்ணா முதலமைச்சராக வந்த பிறகு நாம் நமது நாட்டை ‘தமிழ்நாடு’ என்று அறிவித்துக் கொண்டோம். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனாலும் நமது தமிழ்நாட்டின் எல்லைக்குள் இந்திக்கு இடமில்லை என்று அறிவித்து, தமிழும் ஆங்கிலமும் எமக்குப் போதும் என்ற இரு மொழிக் கொள்கையை உருவாக்கிக் கொண்டோம். பார்ப்பனிய ஜாதி அமைப்பு, ஒருவனை மேல் ஜாதி; ஒருவனைக் கீழ் ஜாதி என்று பாகுபடுத்தியது. படிக்கவும்,...

தோழர் பாரூக் படுகொலை – மலையாள நாளிதழ் கண்டன கட்டுரை

தோழர் ஃபாரூக் கொலை சம்பவத்தை கண்டித்தும் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி ஆகியோரது படுகொலைகளைப் போன்றே ஃபாரூக் கொலை வழக்கையும் முக்கியத்துவம் கொடுத்து அணுகவேண்டும் எனும் சாரத்தில் இந்திய அரசியலில் இந்து இசுலாமிய மத மோதல்களின் தாக்கத்தையும் ஒப்பாய்வு செய்து கேரளாவில் மூத்த சமூக செயல்பாட்டாளர் எம் என் காரசேரி அவர்கள் எழுதி மாத்ருபூமி நாளிதழில் வெளியான கட்டுரை http://digitalpaper.mathrubhumi.com/m/1210299/Mathrubhumi/17-May-2017#issue/8/1

உணவு உரிமை – கருத்துரிமையை பறிக்காதே! தடையை மீறி மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்: சேலத்தில் கழகத்தினர் கைது

மாட்டுக் கறியை உண்ணத் தடைபோடும் பார்ப்பன மதவாத சக்திகளுக்கு ஆதரவாகவே தமிழக காவல்துறையும் செயல்பட்டு வருகிறது. மாட்டுக்கறி உணவு – உழைக்கின்ற மக்களின் உணவு; புரதச் சத்து மிக்க உணவு; ஆடு மற்றும் கோழிக் கறியைச் சாப்பிடும் உரிமை இருக்கும்போது, உலகம் முழுதும் மக்களால் உண்ணப்படும் மாட்டுக்கறி உண்பதை மதத்தைக் காரணம் காட்டி, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தடை போட்டுள்ளதோடு, கண்காணிப்புக் குழுக்கள் என்ற பெயரில் காலித்தனத்திலும்  இறங்கி வருகிறார்கள். இந்த நிலையில் மே 12ஆம் தேதி சேலம் நகரில் மாட்டுக்கறி அரசியல் கருத்தரங்கம் ஒன்றுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. டேவிட் தலைமையில் மாநகரத் தலைவர் த.பரமேசு முன்னிலையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வழக்கறிஞர் பொ.இரத்தினம் ஆகியோர் உரையாற்ற இருந்தனர். மதியம் ரூ.50 கட்டணத்தில் மாட்டுக்கறி உணவு வழங்க ஏற்பாடாகியிருந்தது. ‘லால் மஜித் மண்டபம்’ என்ற தனியார் அரங்கில் நடந்த...

திருப்பூரில் மே தின விழா, விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சி,பொதுக்கூட்டம் 01052017

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 01052017 அன்று காலை முதல் இரவு வரை முழு நாள் நிகழ்வாக காலை தொடங்கி மாலை வரை விளையாட்டுப் போட்டிகள், மாலை பறை இசை, கலைநிகழ்ச்சி, இரவு  பரிசளிப்பு விழா மற்றும் மே தின விழா பொதுக்கூட்டம் திருப்பூர் இராயபுரம் மேற்கு திருவள்ளுவர் திடலில் மிக சிறப்பாக நடைபெற்றது. கழகத் தலைவர் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். காலை 10 மணிக்கு கழக கொடியினை கழக பொருளாளர் தோழர் சு.துரைசாமி அவர்கள் கழக கொடியினை ஏற்றி இனிப்பு வழங்கி மே தின விழாவை துவங்கி வைத்தார்.  விளையாட்டு போட்டிகளை மாநகர செயலாளர் தோழர் மாதவன் தொடங்கி வைத்தார். விளையாட்டு போட்டிகளில் அப்பகுதி மாணவ, மாணவியர், பொதுமக்கள் ஆகியோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு மேடை நிகழ்வாக தோழர் காவை . இளவரசன் அவர்களின் மந்திரமா,தந்திரமா?அறிவியல் விளக்க நிகழ்வு நடைபெற்றது. மே...

மத்திய அரசும் , தமிழக மக்களின் உரிமைகளும் – கழக பொதுக்கூட்டம் பவானி 19052017

பவானியில், கழகப் பொதுக் கூட்டம் ! “மத்திய அரசும் , தமிழக மக்களின் உரிமைகளும்” எனும் தலைப்பில். நாள் : 19.05. 2017 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.00 மணி. இடம்: பாவடித்தெரு,அந்தியூர் பிரிவு, பவானி. சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக்கழகம். தோழர் ப.பா.மோகன், மூத்த வழக்கறிஞர், இந்திய கம்னியூஸ்டு கட்சி. மேட்டூர் T.K.R. இசைக்குழுவினரின் பகுத்தறிவுப் பாடல்கள் மற்றும் பறையிசை நிகழ்ச்சி நடைபெறும்.

கழக போராட்ட எதிரொலி – பெரம்பலூரில் வட்டாச்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பூஜை நிறுத்தம்

பெரம்பலூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் பார்ப்பனரை அழைத்து பூஜை செய்வது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதை கண்டித்து பெரம்பலூர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்  12.05.2017 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்து துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது. இதை அறிந்த பெரம்பலூர்  வட்டாட்சியர், பெரம்பலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக தலைவர் துரை. தாமோதரனை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இனிமேல் பூஜை நடைபெறாது என்று உத்திரவாதம் அளித்ததை ஒட்டி போரட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது. கடந்த வெள்ளிகிழமை அன்று பூஜை நடைபெறவில்லை.