வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தளர்த்தாதே! கோவையில் சாலை மறியல்

எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெறக்கோரி கோவை சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்றது. 10.04.2018 அன்று  நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச்செயலாளர் சிவஞானம் தலைமை வகித்தார். திராவிடர் விடுதலைக் கழக மாநகரத் தலைவர் நேருதாஸ், தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஆறுச்சாமி, ஆதித்தமிழர் கட்சி மாநிலத் தலைவர் வெண்மணி, ஆதித் தமிழர் பேரவை மாநில பொதுச் செயலாளர் நாகராஜ், தமிழ்ப் புலிகள் கட்சிப் பொதுச் செயலாளர் இளவேனில், சமூக நீதிக்கட்சி மாநிலத் தலைவர் பன்னீர்செல்வம் உள்பட 90-க்கும் மேற்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை குண்டு கட்டாகத் தூக்கி கைது செய்தனர்.

பெரியார் முழக்கம் 19042018 இதழ்

You may also like...