மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் கூட்டம்

01.06.2023 காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாவட்ட திவிக சார்பாக மறைந்த கழக தலைமைக் குழு உறுப்பினர் தோழர் மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் நிகழ்வு மடத்து குளம் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் மடத்து குளம் திவிக ஒன்றியத் தலைவர் த.கணக்கன் தலைமையில் நடைபெற்றது. மோகன் குடும்பத்தினர் ஜோதி  – அறிவுமதி முன்னிலை வகித்தனர்.

 

பன்னீர்செல்வம், CITU தாலுகா செயலாளர். வீ.சிவகாமி, தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம். முகில் ராசு, மாவட்ட தலைவர் , திவிக. முருகேசன், வழக்கறிஞர் பிரிவு, திராவிட தமிழர் பேரவை. தங்கவேல், மாவட்ட  அமைப்பாளர், திராவிட தமிழர் கட்சி, ஜின்னா ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.

 

சபரி, சரசுவதி, ஜெயந்தி, சிரிஜா, ரூபா, மாரிமுத்து, தாராபுரம் செல்வம், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் யாழிசை,யாழினி, அறிவுமதி, முத்தமிழ், காரைக்குடி கனல் மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்வினை மடத்துக்குளம் திவிக ஒன்றியச் செயலாளர் சிவானந்தம் ஒருங்கிணைத்தார்.

பெரியார் முழக்கம் 29062023 இதழ்

You may also like...