சைனி-அபிலாஷ் இணையேற்பு விழா

கழகத் தோழர் சைனி – அபிலாஷ் ஆகியோரின் இணையேற்பு விழா 14.12.2022 அன்று காலை 12 மணியளவில் கோவை ஆர்.எஸ்.புரம் புனித அருளானந்தர் தேவாலயத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி தொடக்கமாக நிமிர்வு குழுவினரின் பறை இசை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கழகச் செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

தோழர்கள் புரட்சித் தமிழன், மாதவன் சங்கர், வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சபரிகிரி வரவேற்புரையாற்றினார். கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கிருட்டிணன் நன்றியுரை யாற்றினார். நிகழ்ச்சியை சிவராசு தொகுத்து வழங்கினார்..

கழகத் தோழர்கள் சார்பாக மணமக்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டது.

தோழர்கள் அய்யப்பன், துளசி, ஆனந்த், விவேக், ரேணுகா, மணிகண்டன், ராஜபாளையம் மு.ராம்குமார் ஆகியோர் இணையேற்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பெரியார் முழக்கம் 22122022 இதழ்

You may also like...