புரட்சியாளர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா! பல்வேறு மாவட்டங்களில் கழகம் மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரியாதை செலுத்தப்பட்டு சமத்துவநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அது பின்வருமாறு:-
சென்னை : புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு 14.04.2024 அன்று காலை 9 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன் மற்றும் பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மடிப்பாக்கம் பகுதிக் கழக சார்பில் ஆதம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கழகத் தோழர்கள் – ஆதரவாளர்கள் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ஈரோடு : புரட்சியாளர் அம்பேத்கர் அவரது 134வது பிறந்த நாளை முன்னிட்டு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு ஈரோடு தெற்கு மாவட்டக் கழக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் குமார், திருமுருகன், விருதுநகர் செந்தில், கிருஷ்ணன், பழனிசாமி, சூரம்பட்டி பழனிசாமி, சத்தியமூர்த்தி, பிரபு, சத்தியராஜ், விவேகானந்தர், விஜய் ரத்தினம், ஆசிரியர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திண்டுக்கல் : புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் பழனியில் தந்தை பெரியார் சிலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து முழக்கமிட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாக்சிம் கார்க்கி, பழனி நகர அமைப்பாளர் பெரியார், ஒட்டன்சத்திரம் ஒன்றிய அமைப்பாளர் கபாலி, ஆயக்குடி பேரூர் அமைப்பாளர் சங்கர், தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர் ஆயுதன், மீனாலட்சுமி, தங்கமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.
மதுரை : புரட்சி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மேலூர் திவிக சார்பில் கல்லம்பட்டியில் மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி தலைமையிலும், சிம்மக்கல் அம்பேத்கர் சிலைக்கு மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி தலைமையிலும், தல்லாகுளம் அம்பேத்கர் சிலைக்கு மாவட்டக் கழக காப்பாளர் தளபதி தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முருகேசன், கண்ணன் காமாட்சி, வேங்கை மாறன், காளி, நடராஜன், அழகர், மாவட்டச் செயலாளர் மா.பா.மணி அமுதன் மற்றும் தமிழ் பித்தன் – தபெதிக, குமரன் – புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி உள்ளிட்ட தோழமை அமைப்புத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.
சேலம் கிழக்கு : புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு 14.04.2024 அன்று சேலம் கிழக்கு மாவட்டக் கழக சார்பில் சேலம் (கி) மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் சேலம் மரவனேரி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
உடன் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மாநகர அமைப்பாளர் பாலு, நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை, இளம்பிள்ளை சௌந்தரராஜன், சேலம் மாநகர செயலாளர் ஆனந்தி, சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவபிரகாஷ், மாநகர அமைப்பாளர் தேவராஜ், அருள்பாண்டியன், வெள்ளார் சிவா, சேலம் பரமேஷ், இளம்பிள்ளை மோகன்ராஜ், மூலப்பாதை கவியரசு, கோகுல்ராஜ், ஏற்காடு நான்சி, ஏற்காடு சேகுவேரா, யாழினி, சேலம் குமார் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.
ஆத்தூரில் கழக சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருப்பூர் : ஆத்துப்பாளையம் பகுதிக் கழக சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கோவை : புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகரச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் காந்திபுரம் பெரியார் சிலை முன்பு அம்பேத்கர் படம் வைத்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்திட உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பெங்களூர் : புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் சிலைக்கு பெங்களூர் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சேலம் மேற்கு : புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு மேட்டூர் நகரக் கழக சார்பில் மேட்டூர் அச்சங்காட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் சேலம் மேற்கு மாவட்டக் செயலாளர் சி.கோவிந்தராஜ், தலைமைக் குழு உறுப்பினர் அ.சக்திவேல் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் சேட்டு குமார் மற்றும் மேட்டூர், மேட்டூர் RS பகுதி பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி : புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு சங்கராபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கடுவனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கடுவனூரில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மா.குமார், ரிஷிவந்தியம் ஒன்றிய தலைவர் இரா. கார்மேகம், கா.பசுமதி, ரிஷ்வந்தியம் ஒன்றிய அமைப்பாளர் மு.நாகராஜ், நா.சுலோச்சனா, சே.வெ. ராஜேஷ், இராவணன், கா.எழிலரசி, கா.கயல், கா.இரணியா, கா.பெரியார் ச.சாரதி, ச.சாந்தகுமார், ச.ரித்திகா, கு.சிற்றரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 18.04.2024 இதழ்

You may also like...