திவ்யா – மதன் வாழ்க்கை இணையேற்பு விழா

தோழர்கள் திவ்யா – மதன் வாழ்க்கை இணைப்பு விழா  20.11.2022, ஞாயிறு காலை 11.00 மணியளவில் திருப்பூர், திருமுருகன்பூண்டி,டே மூன் பார்டி ஹாலில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.

ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் ஆக நடைபெற்ற இத்த திருமண விழாவின் முதல் நிகழ்வாக பகுத்தறிவு பாடல்களை யாழினி யாழ் இசை கோவை இசைமதி ஆகியோர் பாடினார்கள்.

ஆத்துப்பாளையம் பகுதி கழகத் தோழர் பரந்தாமன்  வரவேற்புரை யாற்றினார்கள்.

அடுத்து கழகத் தலைவர் தலைமையில் இணையர்கள்  இல்வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியேற்றுக் கொண்டார்கள்.

தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி மணமகனின் நண்பர் மற்றும் கழகத்தின் மாநில பொறுப்பாளர்களும் நிர்வாகிகளும் தோழர்களும் பேசினார்கள்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆ.சந்தோஷ், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, கோவை மாவட்ட கழக தலைவர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன், தலைமை குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம்,திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் முகில் ராசு, மணமகனின் நண்பர் சியாமளா,  உறவினர் மணிகண்ட பிரபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியை கழக மாநகரத் தலைவர்  தனபால்  தொகுத்து வழங்கினார். மாவட்டக் கழக அமைப்பாளர் சங்கீதா அவர்கள் நன்றியுரைடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

இத்திருமண நிகழ்வில் மாநில மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் மணமக்களின் நண்பர்கள் உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

பெரியார் முழக்கம் 01122022 இதழ்

You may also like...