காங்கேயத்தில் நிர்வாண சாமியார்கள்: நடவடிக்கை எடுக்கக் கழகம் கோரிக்கை

காங்கேயம் நகராட்சி அலுவலகத்திற்குள் நிர்வாண சாமி யார்களை அழைத்து வந்து ஆசி வாங்கியது தொடர்பாக ஆணையர், மாநகராட்சி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகளுடன் இணைந்து கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில் மே 13, சனிக்கிழமை அன்று திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல்துறை ஆணையாளர் அவர்கள் விசாரணையின் அடிப்படையில் புகார் மனுவின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் முகில் ராசு, முகநூல் பொறுப்பாளர் பரிமள ராசன், சங்கீதா, இராமசாமி, மாரிமுத்து, ஆதித்தமிழர் பேரவை அவிநாசி மணி, தமிழ்மாறன், து.தலைவர் கு.ஜானகி, புரட்சிகர இளைஞர் முன்னணி தமிழமுதன், வேலு, மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு கார்மேகம் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 18052023 இதழ்

You may also like...